Jump to content

ஆணாதிக்கவாதிகளால் அவமானப்படுத்தப்படும் பெண் பதிவர்கள்!


Recommended Posts

மெல்லிதாய் மேலெழும்பி

நாள் தோறும் புலர்ந்து மறையும்

வலையுலக நாழிகைகள் நடுவே

தொலைந்து போகின்றன

எங்களின் உணர்வலைகள்!

நிரூபனின் நாற்று

ஆண்கள் மட்டும் தான்

அதிகம் எழுதலாம் என்பதும்

அவர்கள் மட்டும் தான்

தம் உணர்வுகளை

உச்சுக் கொட்டலாம்

என்று கூறுவதும்

யார் இங்கு இயற்றி வைத்த

சட்டமோ தெரியவில்லை!

Women+Slave.jpg

எங்களுக்குள்ளும் சாதாரண

மனிதர்களைப் போன்ற

மன உணர்விருக்கும்,

எம் உணர்வுகளுக்கு

உருவம் கொடுத்து

எழுதிட இணையம்

வாய்ப்புத் தந்தது- ஆனால்

எம் இடையே உள்ள

பச்சோந்திகளும், நரிகளும்

காழ்ப்பில் எம்மைக் கொல்கிறார்கள்;

காம சுகம் தேடும்

மோகத்தில் அலைந்து

காறி உமிழ நினைக்கிறார்கள்!

நாளைய பெண்களின் விடுதலை

நம் உளத்தில் தோன்றும்

இன்றைய வாழ்வின் சிந்தனை

மனதில் எழும் இன்ப

உணர்வுகள் இவை யாவும்

எழுதினாலும்,

எமக்கான பட்டம் வேசை!

சமையல் குறிப்போடு

சங்கதிகள் பல சொல்லின்

எமக்கான பெயர்

சக்களத்தி!

stop-violence.jpg

காதலைப் பற்றி பெண்

கவிதை பாடினால்

அவளைப் பின் தொடர்ந்து வந்து

காமத்திற்காய் சுகம் தேடி

அலைந்து இம்சையை கூட்டுகின்றன

இதயமற்ற நெஞ்சங்கள்!

முதலில் எம்மைப் பின் தொடர்ந்து

அழகிய கருத்துச் சொல்கிறார்கள் சிலர்

மெதுவாய் மை பூசும் வார்த்தை பேசி

எம் மின்னஞ்சல் எடுத்து

அதில் அன்பெனும் களிம்பு தடவி

சகோதரனாய் உறவாடி,

சற்றே நாம் நிலை தளர்ந்து

ஒரு பொதுவான விடயத்தை

வெளியில் பதிவாக்கிச் சொல்லியதும்,

உனக்கும் அனுபவமோ என கேட்டு

காயம் செய்கின்றன காட்டுப் பன்னிகள்!

நிரூபனின் நாற்று

மூன்று நாள் பதிவெழுதவில்லை எனில்

உனக்கு பீரியட்ஸ் வந்தால்

பதிவுலகிற்கும் பீரியட்ஸோ என

பிளிறுகின்றன சிலம்போசை

எழுப்பும் நயவஞ்சகப் புல்லுருவிகள்!

பெண்கள் இத்தகைய வரையறைக்குள்

வாழ வேண்டும் என்பதில்

மட்டும் கருமமே கருத்தாய் உள்ள

சீழ் கட்டிய செத்து விட்ட

உக்கி உலர்ந்த மனங் கொண்ட

கீழ்த் தரமான ஆண்களோ,

வெளி உலகின் பார்வைக்கு

முக்காடு போட்டு நடந்து,

உள் உலகில்

எம் மெயில் பெட்டி தேடி

மின்னஞ்சல் ஊடே அந்தரங்கம்

விசாரித்து அற்ப சுகம் காண்கிறார்கள்!!

Voilnece+Against+Womne.JPG

இன்பமெனும் வார்த்தை

எம் பதிவுகளில் வந்தால்

உனக்கும் அனுபவமோ என

ஆளைக் கொல்லும்

சுனாமியாய் பொங்குகிறார்கள்!

உடலுறவு எனும்

வார்த்தையை கையாண்டால்

உனக்கும் விருப்பம் இருந்தால்

வெளியே சொல்லென

உணர்ச்சி பொங்க(ப்)

பேசுகிறது இந்தச் சமூகம்!

நிரூபனின் நாற்று

நாம் எது எழுதினாலும்

ஒரு அளவீடு கொண்டு

எம் மனங்களை மட்டும்

அளக்கத் துடிக்கும்

ஆணாதிக்கவாதிகளால்

காற்றில் பறந்து தொலைகின்றன

எம் கற்பனைச் சிதறல்கள்!

பெண் ஒரு வரம்பினுள்

வாழ வேண்டும் என(க்)

கூப்பாடு போட்டு

வெளியே சமூக காவலர்களாய்

நடிக்கும் சிறிய மனங்களின்

நரகச் செயல்களால்

நாளாந்தம் அமிழ்ந்து நசிகிறது - எம்

எழுத்துக் கிறுக்கல்கள்!

ஆணாதிக்கம் என்றால்

வெளியே நல்லவர் போல் நடித்து

பெண் பதிப்புக்களை

நல்லவராய் விமர்சித்து

பின் அவள் மெயில் பெட்டியூடே

அந்தரங்கம் கிளறுவது தான் என்பது

என்னைப் போல்

எத்தனை அப்பாவிப் பெண்களுக்குப் புரியுமோ?

Women+Abusing.jpg

எதிர்காலம் தொலைக்கப்பட்டு

எழுத்துச் சுதந்திரம் பறிக்கப்படும்

நாளாந்தம் இங்கே துகிலுரியப்படும்

பெண்களின் உணர்வுகளில்

எத்தனை தான் வெளியுலகிற்கு தெரிகின்றனவோ!

ஐயகோ ஆணாதிக்கமே

காலாச்சாரம் கட்டி(க்)

காக்கத் துணியும்

காவல் போலிசுகளே!

இப்படி எத்தனை பெண்களின்

வாழ்க்கையினை சீரழித்து(ச்)

சுகம் காண்பீர்!!

பண்டைய நாகரிக மரபில் திளைத்து

படித்து பட்டம் பெற்றும்

பெண்ணுக்கான வரம்பு

இது என நிர்ணயம் செய்யும்

இன்றைய ஆணாதிக்கவாதிகள்

இருக்கும் வரை

எம் உணர்வுகள்

வெளித்தெரியாதென்பது மாத்திரம் நிஜம்!!!

பிற் சேர்க்கை: வலையுலகில் இந்த வருடத்தின் நடுப் பகுதியில் காலாச்சார காவலர்களால் விரட்டியடிக்கபட்டு, தற்போது, சைபர் கிரைம் வழக்கினை அக் கலாச்சாரக் காவலர்களுக்கெதிராகத் தொடுத்துச் சென்னையில் தானும் ஒரு புதுமைப் பெண் என்பதை நிரூபிக்கும் முகமாய், வலைப் பதிவு மூலமாக நண்பராகிப் பாலியல் துன்புறுத்தல் செய்த பிரபல பதிவருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்து வெற்றி பெற்ற, முகம் தெரியாத அந்தச் சகோதரிக்கு என் இக் கவிதை சமர்ப்பணம்!

****************************************************************************

http://www.thamilnat...og-post_06.html

Link to comment
Share on other sites

நிரூபன்,

ஏற்கனவே உங்கள்வலைப்பூ பார்த்திருக்கிறேன். ஆனால் உங்கள் தளத்தில் வரும் ஆக்கங்களை (இத் தளத்தில் வரும் பதிவுகளை, அனுமதியின்றி காப்பி பேஸ்ட் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்) என்ற எழுத்தைப் பார்த்துவிட்டு உங்கள் கவிதைகளை இங்கு இணைக்கவில்லை.

நல்ல கவிதைகள். சமகால எழுத்துக்கள் பாராட்டுக்கள். யாழ் களம் ஊடாக உங்கள் எழுத்துக்கள் வருவதில் மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அழகிய, ஆழமாக என்னைப் பாதித்த கவிதை. உங்கள் வலைப் பூவையும் பார்த்தேன்.அழகு!!!

Link to comment
Share on other sites

நல்ல கவிதை நிருபன், வாழ்த்துக்கள்.

உங்களின் புரிந்துணர்விற்கும், பாராட்டிற்கும் நன்றி சகோதரம்,

மிகவும் அழகிய, ஆழமாக என்னைப் பாதித்த கவிதை. உங்கள் வலைப் பூவையும் பார்த்தேன்.அழகு!!!

உங்களின் புரிதலுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா.

நிரூபன்,

ஏற்கனவே உங்கள்வலைப்பூ பார்த்திருக்கிறேன். ஆனால் உங்கள் தளத்தில் வரும் ஆக்கங்களை (இத் தளத்தில் வரும் பதிவுகளை, அனுமதியின்றி காப்பி பேஸ்ட் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்) என்ற எழுத்தைப் பார்த்துவிட்டு உங்கள் கவிதைகளை இங்கு இணைக்கவில்லை.

நல்ல கவிதைகள். சமகால எழுத்துக்கள் பாராட்டுக்கள். யாழ் களம் ஊடாக உங்கள் எழுத்துக்கள் வருவதில் மகிழ்ச்சி.

ஹா...ஹா...அந்த அறிவிப்பு என் பதிவுகளைத் தலைப்பை மாற்றிச் சிலர் தமது இணையத் தளங்களில் வெளியிட்டிருந்தார்கள்.

அதனால் தான் அவ்வாறு ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தேன். நீங்கள் விரும்பின் பகிர்ந்து கொள்ளலாம்.

உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி அக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுகள் நிருபன் கவிதை மிகவும் நன்றாகவும்,யதார்த்தமாகவும் உள்ளது தொடர்ந்தும் உங்கள் கவிதைகளை பகிருங்கள்

Link to comment
Share on other sites

உங்கள் அனைவரின் கருத்துக்களுக்கும் நன்றி நண்பர்களே.,

உங்களின் ஊக்கத்திற்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

நிரூபன்! அருமையானதொரு கவிதை! பல யதார்த்த நிகழ்வுகளை உள்ளடக்கியிருந்தது.

நல்லதொரு எழுத்து நடை! நல்ல எழுத்தாளனுக்கான தைரியம்! பாராட்டுக்கள்!

பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம், பெண்களின் மீதான அடக்குமுறைகள் அனைத்துமே நல்லதொரு மாற்றத்தினை நோக்கி மாறவேண்டியவை! இப்பொழுது எல்லாமே மாறிக்கொண்டுதான் வருகின்றன என்பது சற்று ஆறுதல்.

நடைமுறையில், பெண்களை ஆண்கள் பார்க்கும் பார்வையில் நல்மாற்றங்கள் அவசியம்.

தொடர்ந்து எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!

பி.கு: தங்களின் பதிவுகள் பலவற்றைப் பார்த்திருக்கின்றேன்! பலதும் அருமையானதாக இருக்கும்!

ஆனால் ஈழம் சம்மந்தமான சில ஆக்கங்களில் எனக்கு உடன்பாடு இல்லை(இது எனது தனிப்பட்ட கருத்து)

நான் எதை குறிப்பாகச் சொல்கின்றேன் என்பதை புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிரூபன்! அருமையானதொரு கவிதை! பல யதார்த்த நிகழ்வுகளை உள்ளடக்கியிருந்தது.

நல்லதொரு எழுத்து நடை! நல்ல எழுத்தாளனுக்கான தைரியம்! பாராட்டுக்கள்!

பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம், பெண்களின் மீதான அடக்குமுறைகள் அனைத்துமே நல்லதொரு மாற்றத்தினை நோக்கி மாறவேண்டியவை! இப்பொழுது எல்லாமே மாறிக்கொண்டுதான் வருகின்றன என்பது சற்று ஆறுதல்.

நடைமுறையில், பெண்களை ஆண்கள் பார்க்கும் பார்வையில் நல்மாற்றங்கள் அவசியம்.

தொடர்ந்து எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!

பி.கு: தங்களின் பதிவுகள் பலவற்றைப் பார்த்திருக்கின்றேன்! பலதும் அருமையானதாக இருக்கும்!

ஆனால் ஈழம் சம்மந்தமான சில ஆக்கங்களில் எனக்கு உடன்பாடு இல்லை(இது எனது தனிப்பட்ட கருத்து)

நான் எதை குறிப்பாகச் சொல்கின்றேன் என்பதை புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன்.

இதை சொல்லுறீங்களா?

ஈழ மக்களை நம்ப வைத்து ஏமாற்றிய புலித் தலைவர் பிரபாகரன்!

http://www.thamilnat...-post_3068.html

அரசியலையும் கவிதையையும் பிரித்து பார்க்க பழகிக்கொள்ள வேண்டும். :icon_idea:

Link to comment
Share on other sites

இதை சொல்லுறீங்களா?

ஈழ மக்களை நம்ப வைத்து ஏமாற்றிய புலித் தலைவர் பிரபாகரன்!

http://www.thamilnat...-post_3068.html

அரசியலையும் கவிதையையும் பிரித்து பார்க்க பழகிக்கொள்ள வேண்டும். :icon_idea:

அன்பிற்குரிய உறவுகளே,

வலியும் வேதனையும் அதனை அனுபவித்தவனுக்குத் தான் தெரியும், மேற்படி பதிவுக்கான எனது விளக்கங்களை அந்தப் பதிவின் கீழே கொடுத்திருக்கிறேன்.

தலைவரை நேசித்த- மதிக்கும் பல ஆயிரம் உள்ளங்களுள் நான் ஒரு சிறு தூசு, என் மன உணர்வு அவர் மீதான மதிப்பினைக் கடந்து என் தரப்பு விளக்கத்தினை நான், அங்கு வாழ்ந்த மக்கள் பட்ட துன்பங்களின் உணர்வுகளை மாத்திரம் பேசுவதாகும், இறுதி நேரம் வரை நம்பியிருந்த என்னைப் போன்ற மக்களின் உணர்வுகளை நீங்கள் அனைவரும் புரிந்து கொண்ட பின்னர் இந்தப் பதிவினை எள்ளி நகையாடுதல் சிறப்பானதல்லவா..

நான் இங்கே வந்து விடுதலைப் புலிகள் பற்றி வாழ்த்துப் பாடி, உங்களோடு அரசியல் பேசினால் தான் நீங்கள் மேற்படி பதிவினைச் சுட்டலாம். மீண்டும் மீண்டும் அந்தப் பதிவினை வைத்து நையாண்டி செய்வது தான் எமக்கான வேலையா?

ஆகவே மீண்டும் மீண்டும் ஒரே பதிவினை வைத்து நையாண்டி செய்து குத்திக் காட்டுவ்தை விடுத்து, அங்கே வாழ்ந்த ஏனைய கடை நிலை மக்களின் உணர்வுகளோடு கொஞ்சம் பேசிப் பாருங்கள் நண்பர்களே..

இப்படியான செயல் வேண்டாமே.

நேசமுடன்,

நிரூபன்

Link to comment
Share on other sites

அன்பிற்குரிய உறவுகளே,

வலியும் வேதனையும் அதனை அனுபவித்தவனுக்குத் தான் தெரியும், மேற்படி பதிவுக்கான எனது விளக்கங்களை அந்தப் பதிவின் கீழே கொடுத்திருக்கிறேன்.

தலைவரை நேசித்த- மதிக்கும் பல ஆயிரம் உள்ளங்களுள் நான் ஒரு சிறு தூசு, என் மன உணர்வு அவர் மீதான மதிப்பினைக் கடந்து என் தரப்பு விளக்கத்தினை நான், அங்கு வாழ்ந்த மக்கள் பட்ட துன்பங்களின் உணர்வுகளை மாத்திரம் பேசுவதாகும், இறுதி நேரம் வரை நம்பியிருந்த என்னைப் போன்ற மக்களின் உணர்வுகளை நீங்கள் அனைவரும் புரிந்து கொண்ட பின்னர் இந்தப் பதிவினை எள்ளி நகையாடுதல் சிறப்பானதல்லவா..

நான் இங்கே வந்து விடுதலைப் புலிகள் பற்றி வாழ்த்துப் பாடி, உங்களோடு அரசியல் பேசினால் தான் நீங்கள் மேற்படி பதிவினைச் சுட்டலாம். மீண்டும் மீண்டும் அந்தப் பதிவினை வைத்து நையாண்டி செய்வது தான் எமக்கான வேலையா?

ஆகவே மீண்டும் மீண்டும் ஒரே பதிவினை வைத்து நையாண்டி செய்து குத்திக் காட்டுவ்தை விடுத்து, அங்கே வாழ்ந்த ஏனைய கடை நிலை மக்களின் உணர்வுகளோடு கொஞ்சம் பேசிப் பாருங்கள் நண்பர்களே..

இப்படியான செயல் வேண்டாமே.

நேசமுடன்,

நிரூபன்

நிரூபன்! சித்தன் சரியாகத்தான் சொல்லியிருக்கின்றார்! அரசியலையும் கவிதையையும் பிரித்துப் பார்க்க வேண்டுமென்று! அதுவும் ஒரு வகையில் நியாயம்தான்!

அதற்கான தங்களின் பதிலுக்கு பொறுப்பாளி நானாகத்தான் இருக்கவேண்டும் என எண்ணுகின்றேன்!

அதனாற்தான் இப்பதிலை எழுதுகின்றேன்.....

நிரூபன்!

தமிழினத்துக்கு கிடைத்த அருமையான ஒரேயொரு தலைவர் அவர் மட்டுந்தான்!

அவரின் அருமை பெருமைகளை நான் இங்கு சொல்ல வரவில்லை! ஆனால், சில யதார்த்தங்களைப் பேசும் நாம் பல யதார்த்தங்களை மறந்து விடுகின்றோம்! இப்பொழுது நடக்கின்ற விடயங்களை உற்றுநோக்கிப் பார்த்தாலே, அதைப் புரிந்துகொள்ள முடியும்! என்ன நடக்குது?????????????????

வெற்றிடத்தில் குழம்பிப் போயிருக்கும் தமிழ் தலைமைத்துவத்தில் யாரும் இல்லை!

கேட்க நாதியற்ற அனாதைகளாக நாங்கள்.........!!!!!!

இப்பொழுதும் உறுதியாகச் சொல்கின்றேன் ........... யாரும் யாரையும் ஏமாற்றவில்லை.............!!!!

இதை இறுதிவரைக்கும் அங்கிருந்த பலருடன் பேசியபின்பே கூறுகின்றேன்!

(இது எனது தனிப்பட்ட கருத்து இல்லை)

Link to comment
Share on other sites

நிரூபன் தப்பாக நினைக்கக் கூடாது! நான் ஏதாவது தப்பாக கூறியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்! சொல்லவேண்டுமென்று தோன்றியது! அதுதான் சொன்னேன்! அவை என்னுள் மாற்றம் அடையமுடியாத கருத்துக்கள்!

தங்களின் எழுத்துக்களை புரிந்துகொள்ள முடிகின்றது! ஆனாலும்... அந்தப் பதிவின்மேல் எனக்கு........................................ கொஞ்சம் காட்டம் இருந்தது. உங்களிடம் சொன்னபின் மனப்பாரம் குறைந்ததாய் உணர்கின்றேன்!

உங்களின் மனதில் உள்ளதை எழுதுங்கள்! என்றும் உங்கள் எழுத்துக்களை யாழ்கள உறவுகளாய் வரவேற்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பிற்குரிய உறவுகளே,

p>

ஆகவே மீண்டும் மீண்டும் ஒரே பதிவினை வைத்து நையாண்டி செய்து குத்திக் காட்டுவ்தை விடுத்து, அங்கே வாழ்ந்த ஏனைய கடை நிலை மக்களின் உணர்வுகளோடு கொஞ்சம் பேசிப் பாருங்கள் நண்பர்களே..

இப்படியான செயல் வேண்டாமே.

நேசமுடன்,

நிரூபன்

போராட்டம் வெற்றியடைந்திருந்தால் தெற்காசியாவின் புரட்சி புலி , என எல்லோரும் கவி படைத்திருப்போம்....தோல்வி என்ற படியால் கடைநிலை மக்கள் பற்றி புலம்புகிறோம்....சாருநிவேதிக்கா போல் எல்லா ஆண்களும் இருப்பார்களா என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை...

இக்கவிதை முற்று முழுதாக சாருவிற்காக எழுத்ப்பட்டிருப்பது தெரிகிறது.

Link to comment
Share on other sites

நல்ல கவிதை...

இக்கவிதை முற்று முழுதாக சாருவிற்காக எழுத்ப்பட்டிருப்பது தெரிகிறது.

உங்களின் புரிதலுக்கு நன்றி சகோதரம்,

இக் கவிதை சாருவிற்காக எழுதப்படவில்லை.

சென்னையில் பாதிக்கபட்ட இன்னோர் பெண்ணுக்காக எழுதப்பட்டிருக்கிறது.

Link to comment
Share on other sites

நிரூபன் தப்பாக நினைக்கக் கூடாது! நான் ஏதாவது தப்பாக கூறியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்! சொல்லவேண்டுமென்று தோன்றியது! அதுதான் சொன்னேன்! அவை என்னுள் மாற்றம் அடையமுடியாத கருத்துக்கள்!

தங்களின் எழுத்துக்களை புரிந்துகொள்ள முடிகின்றது! ஆனாலும்... அந்தப் பதிவின்மேல் எனக்கு........................................ கொஞ்சம் காட்டம் இருந்தது. உங்களிடம் சொன்னபின் மனப்பாரம் குறைந்ததாய் உணர்கின்றேன்!

உங்களின் மனதில் உள்ளதை எழுதுங்கள்! என்றும் உங்கள் எழுத்துக்களை யாழ்கள உறவுகளாய் வரவேற்போம்.

//

நான் தப்பாக நினைக்கலை. உங்கள் உணர்வினை நீங்கள் சொல்லியிருக்கிறீங்க.

நன்றி சகோதரம்,

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.