Jump to content

ஆணாதிக்கவாதிகளால் அவமானப்படுத்தப்படும் பெண் பதிவர்கள்!


Recommended Posts

மெல்லிதாய் மேலெழும்பி

நாள் தோறும் புலர்ந்து மறையும்

வலையுலக நாழிகைகள் நடுவே

தொலைந்து போகின்றன

எங்களின் உணர்வலைகள்!

நிரூபனின் நாற்று

ஆண்கள் மட்டும் தான்

அதிகம் எழுதலாம் என்பதும்

அவர்கள் மட்டும் தான்

தம் உணர்வுகளை

உச்சுக் கொட்டலாம்

என்று கூறுவதும்

யார் இங்கு இயற்றி வைத்த

சட்டமோ தெரியவில்லை!

Women+Slave.jpg

எங்களுக்குள்ளும் சாதாரண

மனிதர்களைப் போன்ற

மன உணர்விருக்கும்,

எம் உணர்வுகளுக்கு

உருவம் கொடுத்து

எழுதிட இணையம்

வாய்ப்புத் தந்தது- ஆனால்

எம் இடையே உள்ள

பச்சோந்திகளும், நரிகளும்

காழ்ப்பில் எம்மைக் கொல்கிறார்கள்;

காம சுகம் தேடும்

மோகத்தில் அலைந்து

காறி உமிழ நினைக்கிறார்கள்!

நாளைய பெண்களின் விடுதலை

நம் உளத்தில் தோன்றும்

இன்றைய வாழ்வின் சிந்தனை

மனதில் எழும் இன்ப

உணர்வுகள் இவை யாவும்

எழுதினாலும்,

எமக்கான பட்டம் வேசை!

சமையல் குறிப்போடு

சங்கதிகள் பல சொல்லின்

எமக்கான பெயர்

சக்களத்தி!

stop-violence.jpg

காதலைப் பற்றி பெண்

கவிதை பாடினால்

அவளைப் பின் தொடர்ந்து வந்து

காமத்திற்காய் சுகம் தேடி

அலைந்து இம்சையை கூட்டுகின்றன

இதயமற்ற நெஞ்சங்கள்!

முதலில் எம்மைப் பின் தொடர்ந்து

அழகிய கருத்துச் சொல்கிறார்கள் சிலர்

மெதுவாய் மை பூசும் வார்த்தை பேசி

எம் மின்னஞ்சல் எடுத்து

அதில் அன்பெனும் களிம்பு தடவி

சகோதரனாய் உறவாடி,

சற்றே நாம் நிலை தளர்ந்து

ஒரு பொதுவான விடயத்தை

வெளியில் பதிவாக்கிச் சொல்லியதும்,

உனக்கும் அனுபவமோ என கேட்டு

காயம் செய்கின்றன காட்டுப் பன்னிகள்!

நிரூபனின் நாற்று

மூன்று நாள் பதிவெழுதவில்லை எனில்

உனக்கு பீரியட்ஸ் வந்தால்

பதிவுலகிற்கும் பீரியட்ஸோ என

பிளிறுகின்றன சிலம்போசை

எழுப்பும் நயவஞ்சகப் புல்லுருவிகள்!

பெண்கள் இத்தகைய வரையறைக்குள்

வாழ வேண்டும் என்பதில்

மட்டும் கருமமே கருத்தாய் உள்ள

சீழ் கட்டிய செத்து விட்ட

உக்கி உலர்ந்த மனங் கொண்ட

கீழ்த் தரமான ஆண்களோ,

வெளி உலகின் பார்வைக்கு

முக்காடு போட்டு நடந்து,

உள் உலகில்

எம் மெயில் பெட்டி தேடி

மின்னஞ்சல் ஊடே அந்தரங்கம்

விசாரித்து அற்ப சுகம் காண்கிறார்கள்!!

Voilnece+Against+Womne.JPG

இன்பமெனும் வார்த்தை

எம் பதிவுகளில் வந்தால்

உனக்கும் அனுபவமோ என

ஆளைக் கொல்லும்

சுனாமியாய் பொங்குகிறார்கள்!

உடலுறவு எனும்

வார்த்தையை கையாண்டால்

உனக்கும் விருப்பம் இருந்தால்

வெளியே சொல்லென

உணர்ச்சி பொங்க(ப்)

பேசுகிறது இந்தச் சமூகம்!

நிரூபனின் நாற்று

நாம் எது எழுதினாலும்

ஒரு அளவீடு கொண்டு

எம் மனங்களை மட்டும்

அளக்கத் துடிக்கும்

ஆணாதிக்கவாதிகளால்

காற்றில் பறந்து தொலைகின்றன

எம் கற்பனைச் சிதறல்கள்!

பெண் ஒரு வரம்பினுள்

வாழ வேண்டும் என(க்)

கூப்பாடு போட்டு

வெளியே சமூக காவலர்களாய்

நடிக்கும் சிறிய மனங்களின்

நரகச் செயல்களால்

நாளாந்தம் அமிழ்ந்து நசிகிறது - எம்

எழுத்துக் கிறுக்கல்கள்!

ஆணாதிக்கம் என்றால்

வெளியே நல்லவர் போல் நடித்து

பெண் பதிப்புக்களை

நல்லவராய் விமர்சித்து

பின் அவள் மெயில் பெட்டியூடே

அந்தரங்கம் கிளறுவது தான் என்பது

என்னைப் போல்

எத்தனை அப்பாவிப் பெண்களுக்குப் புரியுமோ?

Women+Abusing.jpg

எதிர்காலம் தொலைக்கப்பட்டு

எழுத்துச் சுதந்திரம் பறிக்கப்படும்

நாளாந்தம் இங்கே துகிலுரியப்படும்

பெண்களின் உணர்வுகளில்

எத்தனை தான் வெளியுலகிற்கு தெரிகின்றனவோ!

ஐயகோ ஆணாதிக்கமே

காலாச்சாரம் கட்டி(க்)

காக்கத் துணியும்

காவல் போலிசுகளே!

இப்படி எத்தனை பெண்களின்

வாழ்க்கையினை சீரழித்து(ச்)

சுகம் காண்பீர்!!

பண்டைய நாகரிக மரபில் திளைத்து

படித்து பட்டம் பெற்றும்

பெண்ணுக்கான வரம்பு

இது என நிர்ணயம் செய்யும்

இன்றைய ஆணாதிக்கவாதிகள்

இருக்கும் வரை

எம் உணர்வுகள்

வெளித்தெரியாதென்பது மாத்திரம் நிஜம்!!!

பிற் சேர்க்கை: வலையுலகில் இந்த வருடத்தின் நடுப் பகுதியில் காலாச்சார காவலர்களால் விரட்டியடிக்கபட்டு, தற்போது, சைபர் கிரைம் வழக்கினை அக் கலாச்சாரக் காவலர்களுக்கெதிராகத் தொடுத்துச் சென்னையில் தானும் ஒரு புதுமைப் பெண் என்பதை நிரூபிக்கும் முகமாய், வலைப் பதிவு மூலமாக நண்பராகிப் பாலியல் துன்புறுத்தல் செய்த பிரபல பதிவருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்து வெற்றி பெற்ற, முகம் தெரியாத அந்தச் சகோதரிக்கு என் இக் கவிதை சமர்ப்பணம்!

****************************************************************************

http://www.thamilnat...og-post_06.html

Link to comment
Share on other sites

நிரூபன்,

ஏற்கனவே உங்கள்வலைப்பூ பார்த்திருக்கிறேன். ஆனால் உங்கள் தளத்தில் வரும் ஆக்கங்களை (இத் தளத்தில் வரும் பதிவுகளை, அனுமதியின்றி காப்பி பேஸ்ட் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்) என்ற எழுத்தைப் பார்த்துவிட்டு உங்கள் கவிதைகளை இங்கு இணைக்கவில்லை.

நல்ல கவிதைகள். சமகால எழுத்துக்கள் பாராட்டுக்கள். யாழ் களம் ஊடாக உங்கள் எழுத்துக்கள் வருவதில் மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அழகிய, ஆழமாக என்னைப் பாதித்த கவிதை. உங்கள் வலைப் பூவையும் பார்த்தேன்.அழகு!!!

Link to comment
Share on other sites

நல்ல கவிதை நிருபன், வாழ்த்துக்கள்.

உங்களின் புரிந்துணர்விற்கும், பாராட்டிற்கும் நன்றி சகோதரம்,

மிகவும் அழகிய, ஆழமாக என்னைப் பாதித்த கவிதை. உங்கள் வலைப் பூவையும் பார்த்தேன்.அழகு!!!

உங்களின் புரிதலுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா.

நிரூபன்,

ஏற்கனவே உங்கள்வலைப்பூ பார்த்திருக்கிறேன். ஆனால் உங்கள் தளத்தில் வரும் ஆக்கங்களை (இத் தளத்தில் வரும் பதிவுகளை, அனுமதியின்றி காப்பி பேஸ்ட் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்) என்ற எழுத்தைப் பார்த்துவிட்டு உங்கள் கவிதைகளை இங்கு இணைக்கவில்லை.

நல்ல கவிதைகள். சமகால எழுத்துக்கள் பாராட்டுக்கள். யாழ் களம் ஊடாக உங்கள் எழுத்துக்கள் வருவதில் மகிழ்ச்சி.

ஹா...ஹா...அந்த அறிவிப்பு என் பதிவுகளைத் தலைப்பை மாற்றிச் சிலர் தமது இணையத் தளங்களில் வெளியிட்டிருந்தார்கள்.

அதனால் தான் அவ்வாறு ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தேன். நீங்கள் விரும்பின் பகிர்ந்து கொள்ளலாம்.

உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி அக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுகள் நிருபன் கவிதை மிகவும் நன்றாகவும்,யதார்த்தமாகவும் உள்ளது தொடர்ந்தும் உங்கள் கவிதைகளை பகிருங்கள்

Link to comment
Share on other sites

உங்கள் அனைவரின் கருத்துக்களுக்கும் நன்றி நண்பர்களே.,

உங்களின் ஊக்கத்திற்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

நிரூபன்! அருமையானதொரு கவிதை! பல யதார்த்த நிகழ்வுகளை உள்ளடக்கியிருந்தது.

நல்லதொரு எழுத்து நடை! நல்ல எழுத்தாளனுக்கான தைரியம்! பாராட்டுக்கள்!

பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம், பெண்களின் மீதான அடக்குமுறைகள் அனைத்துமே நல்லதொரு மாற்றத்தினை நோக்கி மாறவேண்டியவை! இப்பொழுது எல்லாமே மாறிக்கொண்டுதான் வருகின்றன என்பது சற்று ஆறுதல்.

நடைமுறையில், பெண்களை ஆண்கள் பார்க்கும் பார்வையில் நல்மாற்றங்கள் அவசியம்.

தொடர்ந்து எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!

பி.கு: தங்களின் பதிவுகள் பலவற்றைப் பார்த்திருக்கின்றேன்! பலதும் அருமையானதாக இருக்கும்!

ஆனால் ஈழம் சம்மந்தமான சில ஆக்கங்களில் எனக்கு உடன்பாடு இல்லை(இது எனது தனிப்பட்ட கருத்து)

நான் எதை குறிப்பாகச் சொல்கின்றேன் என்பதை புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிரூபன்! அருமையானதொரு கவிதை! பல யதார்த்த நிகழ்வுகளை உள்ளடக்கியிருந்தது.

நல்லதொரு எழுத்து நடை! நல்ல எழுத்தாளனுக்கான தைரியம்! பாராட்டுக்கள்!

பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம், பெண்களின் மீதான அடக்குமுறைகள் அனைத்துமே நல்லதொரு மாற்றத்தினை நோக்கி மாறவேண்டியவை! இப்பொழுது எல்லாமே மாறிக்கொண்டுதான் வருகின்றன என்பது சற்று ஆறுதல்.

நடைமுறையில், பெண்களை ஆண்கள் பார்க்கும் பார்வையில் நல்மாற்றங்கள் அவசியம்.

தொடர்ந்து எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!

பி.கு: தங்களின் பதிவுகள் பலவற்றைப் பார்த்திருக்கின்றேன்! பலதும் அருமையானதாக இருக்கும்!

ஆனால் ஈழம் சம்மந்தமான சில ஆக்கங்களில் எனக்கு உடன்பாடு இல்லை(இது எனது தனிப்பட்ட கருத்து)

நான் எதை குறிப்பாகச் சொல்கின்றேன் என்பதை புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன்.

இதை சொல்லுறீங்களா?

ஈழ மக்களை நம்ப வைத்து ஏமாற்றிய புலித் தலைவர் பிரபாகரன்!

http://www.thamilnat...-post_3068.html

அரசியலையும் கவிதையையும் பிரித்து பார்க்க பழகிக்கொள்ள வேண்டும். :icon_idea:

Link to comment
Share on other sites

இதை சொல்லுறீங்களா?

ஈழ மக்களை நம்ப வைத்து ஏமாற்றிய புலித் தலைவர் பிரபாகரன்!

http://www.thamilnat...-post_3068.html

அரசியலையும் கவிதையையும் பிரித்து பார்க்க பழகிக்கொள்ள வேண்டும். :icon_idea:

அன்பிற்குரிய உறவுகளே,

வலியும் வேதனையும் அதனை அனுபவித்தவனுக்குத் தான் தெரியும், மேற்படி பதிவுக்கான எனது விளக்கங்களை அந்தப் பதிவின் கீழே கொடுத்திருக்கிறேன்.

தலைவரை நேசித்த- மதிக்கும் பல ஆயிரம் உள்ளங்களுள் நான் ஒரு சிறு தூசு, என் மன உணர்வு அவர் மீதான மதிப்பினைக் கடந்து என் தரப்பு விளக்கத்தினை நான், அங்கு வாழ்ந்த மக்கள் பட்ட துன்பங்களின் உணர்வுகளை மாத்திரம் பேசுவதாகும், இறுதி நேரம் வரை நம்பியிருந்த என்னைப் போன்ற மக்களின் உணர்வுகளை நீங்கள் அனைவரும் புரிந்து கொண்ட பின்னர் இந்தப் பதிவினை எள்ளி நகையாடுதல் சிறப்பானதல்லவா..

நான் இங்கே வந்து விடுதலைப் புலிகள் பற்றி வாழ்த்துப் பாடி, உங்களோடு அரசியல் பேசினால் தான் நீங்கள் மேற்படி பதிவினைச் சுட்டலாம். மீண்டும் மீண்டும் அந்தப் பதிவினை வைத்து நையாண்டி செய்வது தான் எமக்கான வேலையா?

ஆகவே மீண்டும் மீண்டும் ஒரே பதிவினை வைத்து நையாண்டி செய்து குத்திக் காட்டுவ்தை விடுத்து, அங்கே வாழ்ந்த ஏனைய கடை நிலை மக்களின் உணர்வுகளோடு கொஞ்சம் பேசிப் பாருங்கள் நண்பர்களே..

இப்படியான செயல் வேண்டாமே.

நேசமுடன்,

நிரூபன்

Link to comment
Share on other sites

அன்பிற்குரிய உறவுகளே,

வலியும் வேதனையும் அதனை அனுபவித்தவனுக்குத் தான் தெரியும், மேற்படி பதிவுக்கான எனது விளக்கங்களை அந்தப் பதிவின் கீழே கொடுத்திருக்கிறேன்.

தலைவரை நேசித்த- மதிக்கும் பல ஆயிரம் உள்ளங்களுள் நான் ஒரு சிறு தூசு, என் மன உணர்வு அவர் மீதான மதிப்பினைக் கடந்து என் தரப்பு விளக்கத்தினை நான், அங்கு வாழ்ந்த மக்கள் பட்ட துன்பங்களின் உணர்வுகளை மாத்திரம் பேசுவதாகும், இறுதி நேரம் வரை நம்பியிருந்த என்னைப் போன்ற மக்களின் உணர்வுகளை நீங்கள் அனைவரும் புரிந்து கொண்ட பின்னர் இந்தப் பதிவினை எள்ளி நகையாடுதல் சிறப்பானதல்லவா..

நான் இங்கே வந்து விடுதலைப் புலிகள் பற்றி வாழ்த்துப் பாடி, உங்களோடு அரசியல் பேசினால் தான் நீங்கள் மேற்படி பதிவினைச் சுட்டலாம். மீண்டும் மீண்டும் அந்தப் பதிவினை வைத்து நையாண்டி செய்வது தான் எமக்கான வேலையா?

ஆகவே மீண்டும் மீண்டும் ஒரே பதிவினை வைத்து நையாண்டி செய்து குத்திக் காட்டுவ்தை விடுத்து, அங்கே வாழ்ந்த ஏனைய கடை நிலை மக்களின் உணர்வுகளோடு கொஞ்சம் பேசிப் பாருங்கள் நண்பர்களே..

இப்படியான செயல் வேண்டாமே.

நேசமுடன்,

நிரூபன்

நிரூபன்! சித்தன் சரியாகத்தான் சொல்லியிருக்கின்றார்! அரசியலையும் கவிதையையும் பிரித்துப் பார்க்க வேண்டுமென்று! அதுவும் ஒரு வகையில் நியாயம்தான்!

அதற்கான தங்களின் பதிலுக்கு பொறுப்பாளி நானாகத்தான் இருக்கவேண்டும் என எண்ணுகின்றேன்!

அதனாற்தான் இப்பதிலை எழுதுகின்றேன்.....

நிரூபன்!

தமிழினத்துக்கு கிடைத்த அருமையான ஒரேயொரு தலைவர் அவர் மட்டுந்தான்!

அவரின் அருமை பெருமைகளை நான் இங்கு சொல்ல வரவில்லை! ஆனால், சில யதார்த்தங்களைப் பேசும் நாம் பல யதார்த்தங்களை மறந்து விடுகின்றோம்! இப்பொழுது நடக்கின்ற விடயங்களை உற்றுநோக்கிப் பார்த்தாலே, அதைப் புரிந்துகொள்ள முடியும்! என்ன நடக்குது?????????????????

வெற்றிடத்தில் குழம்பிப் போயிருக்கும் தமிழ் தலைமைத்துவத்தில் யாரும் இல்லை!

கேட்க நாதியற்ற அனாதைகளாக நாங்கள்.........!!!!!!

இப்பொழுதும் உறுதியாகச் சொல்கின்றேன் ........... யாரும் யாரையும் ஏமாற்றவில்லை.............!!!!

இதை இறுதிவரைக்கும் அங்கிருந்த பலருடன் பேசியபின்பே கூறுகின்றேன்!

(இது எனது தனிப்பட்ட கருத்து இல்லை)

Link to comment
Share on other sites

நிரூபன் தப்பாக நினைக்கக் கூடாது! நான் ஏதாவது தப்பாக கூறியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்! சொல்லவேண்டுமென்று தோன்றியது! அதுதான் சொன்னேன்! அவை என்னுள் மாற்றம் அடையமுடியாத கருத்துக்கள்!

தங்களின் எழுத்துக்களை புரிந்துகொள்ள முடிகின்றது! ஆனாலும்... அந்தப் பதிவின்மேல் எனக்கு........................................ கொஞ்சம் காட்டம் இருந்தது. உங்களிடம் சொன்னபின் மனப்பாரம் குறைந்ததாய் உணர்கின்றேன்!

உங்களின் மனதில் உள்ளதை எழுதுங்கள்! என்றும் உங்கள் எழுத்துக்களை யாழ்கள உறவுகளாய் வரவேற்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பிற்குரிய உறவுகளே,

p>

ஆகவே மீண்டும் மீண்டும் ஒரே பதிவினை வைத்து நையாண்டி செய்து குத்திக் காட்டுவ்தை விடுத்து, அங்கே வாழ்ந்த ஏனைய கடை நிலை மக்களின் உணர்வுகளோடு கொஞ்சம் பேசிப் பாருங்கள் நண்பர்களே..

இப்படியான செயல் வேண்டாமே.

நேசமுடன்,

நிரூபன்

போராட்டம் வெற்றியடைந்திருந்தால் தெற்காசியாவின் புரட்சி புலி , என எல்லோரும் கவி படைத்திருப்போம்....தோல்வி என்ற படியால் கடைநிலை மக்கள் பற்றி புலம்புகிறோம்....சாருநிவேதிக்கா போல் எல்லா ஆண்களும் இருப்பார்களா என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை...

இக்கவிதை முற்று முழுதாக சாருவிற்காக எழுத்ப்பட்டிருப்பது தெரிகிறது.

Link to comment
Share on other sites

நல்ல கவிதை...

இக்கவிதை முற்று முழுதாக சாருவிற்காக எழுத்ப்பட்டிருப்பது தெரிகிறது.

உங்களின் புரிதலுக்கு நன்றி சகோதரம்,

இக் கவிதை சாருவிற்காக எழுதப்படவில்லை.

சென்னையில் பாதிக்கபட்ட இன்னோர் பெண்ணுக்காக எழுதப்பட்டிருக்கிறது.

Link to comment
Share on other sites

நிரூபன் தப்பாக நினைக்கக் கூடாது! நான் ஏதாவது தப்பாக கூறியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்! சொல்லவேண்டுமென்று தோன்றியது! அதுதான் சொன்னேன்! அவை என்னுள் மாற்றம் அடையமுடியாத கருத்துக்கள்!

தங்களின் எழுத்துக்களை புரிந்துகொள்ள முடிகின்றது! ஆனாலும்... அந்தப் பதிவின்மேல் எனக்கு........................................ கொஞ்சம் காட்டம் இருந்தது. உங்களிடம் சொன்னபின் மனப்பாரம் குறைந்ததாய் உணர்கின்றேன்!

உங்களின் மனதில் உள்ளதை எழுதுங்கள்! என்றும் உங்கள் எழுத்துக்களை யாழ்கள உறவுகளாய் வரவேற்போம்.

//

நான் தப்பாக நினைக்கலை. உங்கள் உணர்வினை நீங்கள் சொல்லியிருக்கிறீங்க.

நன்றி சகோதரம்,

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.