Jump to content

Mr. Bean ஓய்வு பெறுகிறார்!


Recommended Posts

Mr. Bean தொடரில் இருந்து ஓய்வு பெறுகிறார் பிரபல ஹாலிவுட் நடிகர் ரோவன் ஆட்கின்சன் (Rowan Atkinson).

Mr. Bean னைத் தெரியாத குட்டீஸே இருக்க முடியாது. உலகம் முழுவதும் உள்ள குட்டீஸ்களின் விருப்பத் தொடர் எது என்று கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் " மிஸ்டர் பீன்". அந்த நகைச்சுவை தொடரில் மிஸ்டர் பீனாக வந்து நம் வீட்டு குழந்தைகளை குலுங்க, குலுங்கச் சிரிக்க வைப்பவர் ரோவன் ஆட்கின்சன்(56).

இந்த தொடரை 18 மில்லியன் பேர் கண்டு ரசிக்கிறார்கள் என்றார் பாருங்களேன்.

இந்த தொடரின் வெற்றியைப் பார்த்து அதை அடிப்படையாக வைத்து 1997-ம் ஆண்டு பீன்: தி அல்டிமேட் டிசாஸ்டர் மூவி மற்றும் 2007-ம் ஆண்டு மிஸ்டர் பீன்ஸ் ஹாலிடே என்ற இரண்டு படங்கள் வெளியாகின.

இத்தனை பிரபலமான தொடரில் இனி Mr. Bean னாக நடிக்கப்போவதில்லை என்று ரோவன் ஆட்கின்சன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

நான் இனிமேல்Mr. Bean னாக நடிக்க மாட்டேன். எனக்கு வயதாகிவிட்டது. மிஸ்டர் பீன் கதாபாத்திரம் வயதாகாமல் அப்படியே இருப்பது. அதனால் இனியும் நான் மிஸ்டர் பீனாக நடிப்பது சரியல்ல. மிஸ்டர் பீன் எப்பொழுதும் இளமையாக இருந்து தான் நான் பார்த்துள்ளேன். என, வயதாகும் நான் இதில் நடிப்பதில் உகந்தது அல்ல என்றார்.

http://www.cmr.fm/th...il.aspx?ID=9223

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அகூதா இணைப்பிற்கு, எனக்கு மிகவும் பிடித்த காமடி நடிகர், நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள்,

ஆனால் கன பேருக்கு அவருக்கு ஒரு அழகிய மகள் இருப்பது தெரியா!!! :wub:

emmadecaunesmrbeansvaca.jpg

Uploaded with ImageShack.us

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நடிகர்.

மதிப்பு இருக்கும் போதே.... தனது வயதுக்கு, இனி அந்தப் பாத்திரங்களில் நடிப்பது நன்றாக இருக்காது என்று குறிப்பிட்டதை, எமது தமிழ் நடிகர்களும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

நல்ல நடிகர்.

மதிப்பு இருக்கும் போதே.... தனது வயதுக்கு, இனி அந்தப் பாத்திரங்களில் நடிப்பது நன்றாக இருக்காது என்று குறிப்பிட்டதை, எமது தமிழ் நடிகர்களும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

எங்கள் சுப்பர் ஸ்டாரை அவமதித்துள்ளீர்கள் :lol:

பார்க்கிறவன் இருக்கும்வரை நடிக்கிறவன் இருப்பன், இதற்கு வயது எல்லை இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருசில மணிநேரமாவது கவலைகளை மறக்க வைத்தவருக்கு நன்றிகள்.நகைச்சுவைக்கு மொழி இனமத பேதம் இல்லையென நிருபித்து காட்டிய ஒருசிலரில் இவரும் முக்கியமானவர்.சக நடிகநடிகைகளுக்கு அடித்து உதைத்து காமெடி பண்ணும் நடிக பெருந்தகைகள் திருந்துவார்களாக :D

Link to comment
Share on other sites

நல்ல விருப்பம்.

கமலஹாசனின் நடிப்பிலும் Rowan Atkinson இன் பாதிப்பு நிறைய இருக்கும்.

Link to comment
Share on other sites

£100 மில்லியன் சொத்து மதிப்புடைய அட்கின்சன் அவரது கார்களில் விருப்பம் கொள்வதை பொழுதுபோக்காகக் கொண்டிருக்கிறார். தாயாரின் மோர்ரிஸ் மைனரை அவரது குடும்பப் பண்ணையைச் சுற்றி ஓட்டிய போதிருந்து இந்த பொழுதுபோக்கு அவருக்கு தொடங்கியது. 1995 ஆம் ஆண்டில் அவர் பிரிட்டிஷ் இதழ்களான கார், ஆக்டேன், எவோ மற்றும் குறுகிய-கால UK இதழான "சூப்பர்கிளாசிக்ஸ்" ஆகியவற்றில் அவர் மெக்லாரன் F1ஐத் திறனாய்வு செய்திருந்தார்.

அட்கின்சன் UK LGV உரிமத்தையும் (copyrights) வைத்திருக்கிறார் .

நியூகேஸ்டில் பல்கலைக்கழகத்தில் மின்பொறியியல் பயின்றார். பின்னர் த குவின்'ஸ் கல்லூரி, ஆக்ஸ்போர்டில் M.Sc. படித்தார்.

திரைப்பட விவரங்கள்

1979 த சீக்ரெட் போலீஸ்மேன்'ஸ்

1981 பண்டமெண்டல் புரோலிக்ஸ்

1982 த சீக்ரெட் போலீஸ்மேன்'ஸ் அதர்

1983 டெட் ஆன் டைம்

1989 த அப்பாயின்மெண்ட்ஸ் ஆப் டென்னிஸ் ஜென்னிங்ஸ்

1990 த விட்சஸ்

1991 த டிரைவன் மேன்

1993 ஹாட் சாட்ஸ்! பார்ட் டியூக்

1994 போர் வெட்டிங்ஸ் அண்ட் எ புனேரல்

1997 மிஸ்டர் பீன் த அல்டிமேட் டி

2000 மேபீ பேபி

2001 ரேட் ரேஸ்

2002 ஸ்கூபி-டூ

2003 ஜானி இங்கிலீஷ்

2005 கீப்பிங் மம்

2007 மிஸ்டர் பீன்'ஸ் ஹாலிடே

http://ta.wikipedia....%AE%A9%E0%AF%8D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.