Jump to content

அமெரிக்கா தலைமையில்: ஜெனிவாவில் வைக்கப்படும் பொறி : பொறியில் சிக்கவைக்க மேற்குலகம்! ” கலக்கத்தில் சிறீ லங்கா”


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

  • பிரசுரித்தவர்: admin September 7, 2011

“…………………………………தம்மைப் பொறியில் சிக்கவைக்க மேற்குலகம் முனைகிறது என்பது அரசுக்கு வெளிச்சமாகி விட்டது. இந்தநிலையில் தான், சீனா, ரஸ்யாவின் துணையுடன் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளை வளைத்துப் போடும் காரியத்தில் இறங்கியுள்ளது. ஆறு நாடுகளுக்கான பயணத்தை தொடங்கியுள்ளார் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ். இன்னொரு பக்கத்தில் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா- நான்கு தென் அமெரிக்க நாடுகளுக்குப் பறக்கிறார். அதுமட்டுமன்றி வழக்கத்தை விட வலுவானதொரு அணியை ஜெனிவாவுக்கு இந்த முறை அனுப்பப் போகிறது அரசாங்கம். இதற்கு முன்னர் அதிகாரிகளை நம்பிக் களமிறங்கிய அரசாங்கம், இந்த முறை அமைச்சர்களையே முற்றுமுழுதாக களமிறக்கத் தீர்மானித்துள்ளது. மகிந்த சமரசிங்க தலைமையிலான இந்தக் குழுவில், நிமால் சிறிபால டி சில்வா, அனுர பிரியதர்சன யாப்பா, ஜி.எல் பீரிஸ் மற்றும் சஜின் வாஸ் குணவர்த்தன ஆகியோரைக் கொண்ட பலமான அணியொன்று களமிறக்கப்படவுள்ளது. இது சர்வதேசத்தின் எத்தகைய நகர்வையும் எதிர்கொள்வதற்காக வியூகம் என்றும், எதற்கும் தாம் தயாராக இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார் அமைச்சர் மகிந்த சமரசிங்க. மொத்தத்தில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள கூட்டத்தொடரை அரசாங்கம் கலக்கத்துடன் தான் எதிர்கொள்ளப் போகிறது. எப்படியாவது இந்தக் கூட்டத்தொடரை சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கை அரசுக்கு இருந்தாலும் அடுத்த கூட்டத்தொடர் மிகப்பெரிய நெருக்கடியாக இருக்கும். ஆனால் எதிர்பாராத விதமாக இலங்கை அரசு இந்தமுறை நெருக்கடிகளை எதிர்கொண்டாலும் ஆச்சரியம் இல்லை…………………..”

ஜெனிவாவில் வைக்கப்படும் பொறி தப்பிக் கொள்ளுமா இலங்கை அரசு?

ஜெனிவாவில் எதிர்வரும் 12ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 18வது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானங்கள் ஏதும் கொண்டு வரப்படலாம் என்ற முன்னேற்பாட்டுடன் காய்களை நகர்த்தி வருகிறது அரசாங்கம்.

போர் முடிவுக்கு வந்த பின்னர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் தொடங்கப் போகிறது என்றாலே இலங்கை அரசுக்கு ஒருவித பதற்றம் தொற்றிக் கொள்கிறது.2009இல் இலங்கையில் போரின் போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்ற பிரேரணை முன்வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்தியா, சீனா போன்ற நாடுகள் துணை நின்றதால் அப்போது இலங்கை அரசு சுலபமாகத் தப்பிக் கொண்டது.இப்போது நிலைமை அப்படியில்லை. கடந்த சில கூட்டத்தொடர்களில் இலங்கை அரசு பெரும் பிரயத்தனங்களைச் செய்தே தப்பி வந்துள்ளது.

கடந்த முறையும், அதற்கு முந்திய முறையும் அரசாங்கம் பெரும் நெருக்கடிளுக்கு மத்தியில் தான் ஜெனிவா கூட்டத்தொடரை சமாளித்தது. அதற்காக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நாடு நாடாகப் பறந்து பிரசாரம் செய்தார்.கூட்டத்தொடர் ஆரம்பமாக முன்னரே ஜெனிவாவில் போய் இறங்கிய அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான குழு, பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தியது.

எல்லாவிதமான பிரசாரங்களின் முடிவிலும் கூட அரசாங்கம் ஒரு வாக்குறுதியைக் கொடுத்துத் தான் சமாளிக்க முடிந்தது.நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வரும் வரை பொறுத்திருங்கள். அதன் பின்னர் தவறுகள் இருந்தால் பேசலாம் என்று கூறியே அரசாங்கம் தப்பித்துக் கொண்டது.

போனால் போகட்டும் சில மாதங்களில் அந்த அறிக்கை வந்து விடும் என்ற நம்பிக்கையில், பல்வேறு நாடுகளும் அழுத்தம் கொடுக்காமல் விட்டுப் பிடிக்க முடிவு செய்தன.நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை எப்படியாவது நவம்பர் 15ம் திகதிக்குள் சமர்ப்பிக்கப்பட்டாக வேண்டும்.ஏற்கனவே அது மேலதிக காலஅவகாசங்களைப் பெற்று விட்டது என்பதால், இன்னொரு கால அவகாசம் கோருவதற்கு வாய்ப்பில்லை. அப்படி வாய்ப்புக் கோரப்பட்டாலும் அதை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை.

இதற்கிடையில் நவம்பர் 15ம் திகதி வெளியாக வேண்டிய அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இந்தக் கூட்டத்தொடரில் சமர்ப்பித்து விட்டு, அடுத்த கூட்டத் தொடரில் அது பற்றிய விவாதம் ஒன்றை நடத்தலாம் என்று அமெரிக்கா ஆலோசனை கூறியிருந்தது.

அதனை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்த போதும், அமெரிக்கா அதனை விடுவதாகத் தெரியவில்லை.இந்தக் கட்டத்தில் தான் கடந்தவாரம் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச்செயலர் றொபேட் ஓ பிளேக் கொழும்பு வரவிருந்தார். கடந்த மே மாதம் கொழும்பு வந்த அவரை சந்திக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நேரம் ஒதுக்கிக் கொடுக்கவில்லை.

அமெரிக்கா போர்க்குற்ற விசாரணைக்கு கடும் அழுத்தங்கள் கொடுத்து வந்ததற்கு, இராஜதந்திர ரீதியில் பதிலடி கொடுக்க நினைத்திருந்தார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ.ஆனால் இந்தமுறை அவர் பிளேக்கிற்கு அலரி மாளிகையில் காலை உணவுடன் சந்திப்பு ஒன்றை ஒழுங்கு செய்திருந்தார். கடைசி நேரத்தில் அமெரிக்காவில் வீசிய ஐரின் புயல் பிளேக்கின் பயணத்தையும் அடித்துப் போய்விட்டது. ஒரு வகையில் இது இலங்கை அரசுக்கு நிம்மதியாக அமைந்தது. ஏனென்றால் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டம் தொடங்க இன்னும் ஒரு சில நாட்களே இருக்கிறது. அதற்கிடையில் பிளேக் வந்து அழுத்தம் கொடுப்பதற்கு வாய்ப்புகள் குறைவு என்பதே அதற்குக் காரணம்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஜெனிவா மேசைக்கு கொண்டு போவது பற்றிப் பேசுவதற்கு பிளேக் திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இப்படியான நிலையில் அவரது பயணம் தள்ளிப் போடப்பட்டதால், ஜெனிவா பற்றிய அச்சம் அரசுக்கு கொஞ்சம் குறைந்துள்ளது.

ஆனாலும் பிளேக் எந்த நேரத்திலும் வந்து விடுவாரோ என்ற கலக்கம் அடுத்த ஓரிரு வாரங்களுக்கு நீடிக்கவே செய்யும். அதேவேளை, இந்தக் கூட்டத்தொடரில தமக்கெதிரான நடவடிக்கையில் இறங்கமாட்டாது என்று அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளை முற்றுமுழுதாக நம்புகின்ற நிலையில் இலங்கை அரசாங்கம் இல்லை. தமக்கெதிராக ஏதாவதொரு பிரேரணையைக் கொண்டு வர மேற்குலகம் திட்டமிடலாம் என்ற அச்சம் அதற்கு இருந்து கொண்டே இருக்கிறது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை வைத்து ஐ.நா நிபுணர் குழு அறிக்கையை ஜெனிவா மேசைக்குக் கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்ட பின்னர், இலங்கை அரசு உசாரடைந்துள்ளது. * எப்படியாவது தம்மைப் பொறியில் சிக்கவைக்க மேற்குலகம் முனைகிறது என்பது அரசுக்கு வெளிச்சமாகி விட்டது.

* சிறிலங்காவுக்கு நெருக்கடி கொடுக்கும் 69 பக்க அறிக்கை – அனைத்துலக மன்னிப்புச்சபை வெளியிட்டது

இந்தநிலையில் தான், சீனா, ரஸ்யாவின் துணையுடன் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளை வளைத்துப் போடும் காரியத்தில் இறங்கியுள்ளது.

ஆறு நாடுகளுக்கான பயணத்தை தொடங்கியுள்ளார் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ். இன்னொரு பக்கத்தில் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா- நான்கு தென் அமெரிக்க நாடுகளுக்குப் பறக்கிறார்.

அதுமட்டுமன்றி வழக்கத்தை விட வலுவானதொரு அணியை ஜெனிவாவுக்கு இந்த முறை அனுப்பப் போகிறது அரசாங்கம். இதற்கு முன்னர் அதிகாரிகளை நம்பிக் களமிறங்கிய அரசாங்கம், இந்த முறை அமைச்சர்களையே முற்றுமுழுதாக களமிறக்கத் தீர்மானித்துள்ளது.

மகிந்த சமரசிங்க தலைமையிலான இந்தக் குழுவில், நிமால் சிறிபால டி சில்வா, அனுர பிரியதர்சன யாப்பா, ஜி.எல் பீரிஸ் மற்றும் சஜின் வாஸ் குணவர்த்தன ஆகியோரைக் கொண்ட பலமான அணியொன்று களமிறக்கப்படவுள்ளது.

இது சர்வதேசத்தின் எத்தகைய நகர்வையும் எதிர்கொள்வதற்காக வியூகம் என்றும், எதற்கும் தாம் தயாராக இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார் அமைச்சர் மகிந்த சமரசிங்க.

* மொத்தத்தில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள கூட்டத்தொடரை அரசாங்கம் கலக்கத்துடன் தான் எதிர்கொள்ளப் போகிறது.

*மருத்துமனை மீதான தாக்குதலில் தொடர்புபட்டது 53வது டிவிசனே – உளறிக் கொட்டினார் சவீந்திர சில்வா

*பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை ஒப்புக்கொண்டார் பசில் – விக்கிலீக்ஸ்

எப்படியாவது இந்தக் கூட்டத்தொடரை சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கை அரசுக்கு இருந்தாலும் அடுத்த கூட்டத்தொடர் மிகப்பெரிய நெருக்கடியாக இருக்கும். ஆனால் எதிர்பாராத விதமாக இலங்கை அரசு இந்தமுறை நெருக்கடிகளை எதிர்கொண்டாலும் ஆச்சரியம் இல்லை.

கட்டுரையாளர் கபில்

http://mykathiravan....a-news/?p=14388

Link to comment
Share on other sites

இங்கே பரகசியமாகத்தான் பொறி வைக்கப்படுகின்றது.

மேற்குலகம் சர்வதேச விசாரணை பொறிமுறையை வைப்பது பற்றி கொழும்பில் பல கட்சிகளை சந்தித்து அவர்களின் அபிப்பிராயத்தை பெறுகின்றது. இதுவே இவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை கூறி நிற்கின்றன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.