Jump to content

யாழ்ப்பாணத்தில் நிகழும் கூத்துகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில அவன்தான் பாவம் ஏமாந்திருப்பான் தப்பிட்டான். அவன் 22 வயசில பஸ் ஓட்டி தன்ர குடும்பத்த காப்பாத்த வந்துட்டான். அவன்றை பஸ்ஸில தினமும் ஏறி அவனை நிலைகுலைய வைத்து விழுத்தியது இந்தப்பெண்தான். இப்ப திடீரென அவனைக்கட்ட வேண்டுமென்றால் அவன் குடும்பம் நடுத்தெருவிலா நிக்கிறது. அவன் வாங்கிய கடன் எல்லாம் எப்படிக்கட்டிறது. குடும்பவாழ்கைக்கை போனா கட்டுறது சுலபமில்லை. எல்லாத்துக்கும் சேர்த்துத்தான் அவர்கள் கேட்டு இருக்கிறார்கள். குடு;த்துட்டு சந்தோசமா கல்யாணத்தைக்கட்டுறதுதான் நல்லது.

என்ன அதீபன் அண்ணா

இப்ப சிறுமைத்தனமாகக் கதைக்கின்றியள்! அவன் விருப்பமில்லாமல் தான் அதைச் செய்தமாதிரியும், அந்தப் பெண் தான் வேண்டும் என்று செய்தமாதரியும் கதைக்கின்றியள்?

குடும்பப் பொறுப்பு எண்டு விளங்கும் அளவிற்கு புத்திசாலி என்றால் ஏன் மன்**** ஆக மாறவேண்டும். செய்வது எல்லாம் செய்து போட்டு, இப்ப சீதனம் தந்தால் தான் கட்டுவானோ!! இவனை எல்லாம் நடுறோட்டில் வைத்துச் சுட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • Replies 80
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப எங்கடயள் நல்லா கெட்டுப் போட்டுதுகள்....

போராட்ட சூழ்நிலையால சரியா கஸ்டப்பட்டு வெளித் தொடர்புகள் இல்லாமையால் உலகத்தின் படிப்படியான வளர்ச்சி தெரியாமல், விளங்கிக் கொள்ளாமல் 96ம் ஆண்டிற்குப் பிறகு திட்டமிட்டு சிங்கள அரசினால் திறந்து விட, எங்கடயள் எல்லாத்தையும் எடுத்து பழகிக் கொண்டு இப்ப முழிக்குதுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனண்ணா சுடுறதால உங்களுக்கு என்ன நன்மை????????????? இநஇதளவுக்கு பொங்கி எழுறீங்களே......................... அந்த பெண்ணை (அப்படிப் பெண்களை) நீங்கள் வாழ்க்க துணையா ஏத்துகஇகொள்ளலாமே??????????????????? எல்லாம் சும்மா மற்றவங்கள குறை சொல்ல வந்திடுவினம்.......... சந்தர்ப்பங் கிடைச்சா தூயவங்களும் கெட்டவங்கள் ஆகுவினமண்ணா.............................

Link to comment
Share on other sites

சட்டு புட்டென்று பொட்டில போட்டுட்டா..அடங்கி இருப்பினமில்ல...தூயவை சந்தர்ப்பத்தைத் தேடிக் கெடாம..! இதில அரபு நாடுகளை பாராட்டலாம்...! யார் என்றாலும் பிடிபட்டா...சுதந்திரம் அது இதென்று சுத்துமாத்துக்கு இடமில்லை...போடுதான்..! :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அப்படிச் செய்தால் ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும். அல்லாவிட்டால் என்னைச் சுடுவதில் தப்பில்லை கண்டியளோ!!

மற்றது அந்தப் பிள்ளையுடன் தப்பாக நடந்தவனை நியாயப்படுத்துவதைத் கண்டிக்கின்றேன். அதுவும் கலியாணம் கட்ட 20லட்சம் கேட்பது எல்லாம் எவ்வளவு அயோக்கியத்தனம். மீண்டும் ஒரு பிள்ளையிடம் அப்படி நடக்கமாட்டான் என்று என்ன உத்தரவாதம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏய். ஆரது மரணதண்டனையை நிப்பாட்டச் சொல்லுறது?

சுட்டுச் சுட்டுப் பழகிப்போன எங்கட கையள என்ன பூப்பறிக்கச் சொல்லிறியளோ?

"சூடு தானண்ணை சுரணை கொண்டுவரும்." (இந்தப் பஞ்ச் வசனத்தை வேற ஒருத்தரும் பாவிக்கக்கூடாது.)

மரணதண்டனை ஒழிப்புக் கதையெல்லாம் சபைக்குதவாது. எதுக்கெடுத்தாலும் சுட்டுத்தான் பழக்கம். அதை திடீரெண்டு நிப்பாட்ட ஏலாது.

ஆனா ராசீவ் விசயத்தில எங்கட ஆக்களுக்காக மரணதண்டனை ஒழிப்புக் கோசம் போடுறதையும் இதுகளையும் சேத்து ஆராவது கேள்விகேட்டா,,,

மவனே உங்களுக்குத்தான் முதற்சூடு. கவனம்.

Link to comment
Share on other sites

ஏனண்ணா சுடுறதால உங்களுக்கு என்ன நன்மை????????????? இநஇதளவுக்கு பொங்கி எழுறீங்களே......................... அந்த பெண்ணை (அப்படிப் பெண்களை) நீங்கள் வாழ்க்க துணையா ஏத்துகஇகொள்ளலாமே??????????????????? எல்லாம் சும்மா மற்றவங்கள குறை சொல்ல வந்திடுவினம்.......... சந்தர்ப்பங் கிடைச்சா தூயவங்களும் கெட்டவங்கள் ஆகுவினமண்ணா.............................

சந்தர்ப்பத்தில் தப்பு செய்த அந்த தப்பை மீண்டும் செய்ய கூடாது மீண்டும் மீண்டும் தப்பு செய்தால்? என்ன செய்ய?

நான் சொன்னது முதல் தப்பு அந்த பெண்னுடன் படுத்தது

இரண்டாவது தப்பு 20 லட்சம் தந்தா தான் திருமனம் செய்வேன் எண்டு சொல்வது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன் ஏன் நீங்கள் இப்படி யோசிக்கலாமே...

கலியாணம் கட்ட முன் ஒரு ஆணுடன் தப்பாக நடந்தவள்; மீண்டும் இன்னொரு ஆணுடன் தப்பாக நடக்கமாட்டாள் என்று என்ன உத்தரவாதம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி என்றால் அவனோடு கலியாணப் பேச்சுக்கு போயிருக்கமாட்டாள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த பெண் போனாள் என்று செய்தியில் குறிப்பிடவில்லையே. பெண்ணின் வீட்டார் தான் முழிக்கினம் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன் ஏன் நீங்கள் இப்படி யோசிக்கலாமே...

கலியாணம் கட்ட முன் ஒரு ஆணுடன் தப்பாக நடந்தவள்; மீண்டும் இன்னொரு ஆணுடன் தப்பாக நடக்கமாட்டாள் என்று என்ன உத்தரவாதம் ?

ஓமுங்கோ. உது சரிதான்.

அவள் மட்டும்தான் தப்பா நடந்தவள். அவன் பொடியன் ஒண்டும் செய்யேல. அவருக்கு உந்தக் கேள்வி பொருந்தாது கண்டியளோ. அல்லது திருமணத்துக்குப்பிறகு வேற ஒருத்தியோட தப்பா நடந்தாத்தான் என்ன? அவள் தப்பா நடந்ததுக்கத்தான் 20 இலட்சம் அபராதம் கட்டவேணுமெண்டு பொடியன் சொல்லிறான் போலகிடக்கு. இஞ்ச ஒருத்தர் சொன்ன மாதிரி அந்தக் காசக்குடுத்திட்டு கலியாணம் கட்டி வாழ வேண்டடியதுதான். அதைத்தானே எங்கட தமிழ்ச்சினிமாவிலையும் அம்பது வருசமாக் காட்டுறாங்கள். அப்ப சரியாத்தான் இருக்கும்.

உக்ராச்! (உங்களுக்கு என்ன பேரெண்டு சரியாத் தெரியேல)

உங்களைப்போல "சிந்தனைச் சிற்பியள்" எங்கட தமிழ்ச்சமூகத்தில கிடைக்கிறதுக்கு நாங்கள் என்ன தவம் செய்தோமே தெரியேல.

உங்களைக் கோடம்பாக்கம் அனுப்பினால் உலகத்தரம் வாய்ந்த திரைப்படங்களைத் தருவியளெண்டு நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

தூயவன் ஏன் நீங்கள் இப்படி யோசிக்கலாமே...

கலியாணம் கட்ட முன் ஒரு ஆணுடன் தப்பாக நடந்தவள்; மீண்டும் இன்னொரு ஆணுடன் தப்பாக நடக்கமாட்டாள் என்று என்ன உத்தரவாதம் ?

என்ன அந்த பெண் வேறும் சுகத்துக்காகவா அப்படி செய்து இருக்கும்? அவனில் நம்பிக்கை வச்சு இருக்கலாம் தானே

என்னை திருமனம் செய்ய போறவன் தானே

:idea: :idea: :idea:

தேன் குடிக்க வந்த வண்டு பூ காற்றில் அடினாலும் இருந்து

தேன் குடித்து விட்டு தான் அடுத்த பூக்களிடம் போகும்

Link to comment
Share on other sites

அந்த பெண் போனாள் என்று செய்தியில் குறிப்பிடவில்லையே. பெண்ணின் வீட்டார் தான் முழிக்கினம் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் வடிவா வாசியும் அப்புறம் கருத்து எழுதலாம்

எனி ஒண்டும் செய்யமுடியாது அந்த பையனின் குடும்பத்துக்கு சொல்லி இப்படி நடந்துவிட்டது, எனி ஒண்டும் செய்யமுடியாது, ஆகவே இருவருக்கும் திருமணத்தை செய்து வைப்போம் என்று கூறின பொழுது, பையன் வீட்டார் (அந்த பொறுக்கியும் சேர்ந்து) 20 லட்சம் தந்தால் தன்னால் கற்பமாகி இருக்கும் பெண்ணை திருமணம் செய்வேன் அல்லது இல்லை என்று ஒரே அடியாக சொல்லிவீட்டார்கள்,,
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில என்னுடைய பெயர் (U)உலகநாதன் (K)கிருஸ்ணராஜ் சுருக்கமாக UKRAJ

எனது பதில் கீழ்கண்ட கருத்திற்கே

நான் அப்படிச் செய்தால் ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும். அல்லாவிட்டால் என்னைச் சுடுவதில் தப்பில்லை கண்டியளோ!!

மற்றது அந்தப் பிள்ளையுடன் தப்பாக நடந்தவனை நியாயப்படுத்துவதைத் கண்டிக்கின்றேன். அதுவும் கலியாணம் கட்ட 20லட்சம் கேட்பது எல்லாம் எவ்வளவு அயோக்கியத்தனம். மீண்டும் ஒரு பிள்ளையிடம் அப்படி நடக்கமாட்டான் என்று என்ன உத்தரவாதம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண் வீட்டார் விசாரித்த போது தான் கூறியிருக்கின்றார். திருமணம் செய்வதற்கு வீட்டார்தான் முடிவெடுத்திருக்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கரவெட்டி என்னும் இடத்தில் ஒரு சம்பவம், இதனை வாசித்துவிட்டு உங்களின் கருத்தை சொல்லுங்கள்.

கரவெட்டியை சேர்ந்த ஒரு பாடசாலை மாணவி, வயது 18 அல்லது 19. ஒவ்வொரு நாளும் பாடசாலைக்கு பஸ்ஸில் செல்வார், பஸ்ஸில் நடத்துனராக பணியாற்றிய இளைஞன் கிட்டத்தட்ட 22,23 வயது, ஒவ்வொரு நாளும் பாடசாலைக்கு அந்த பஸ்ஸில் செல்லுவார் இந்த மாணவி. சில காலம் பழக்கத்தின் பின் ஒரு நாள் பாடசாலை செல்லும் பொழுது அந்த நடத்துனர் அந்த மாணவியுடன் தப்பு தண்டா செய்துவிட்டார் (மாணவின் சம்மதத்துடனோ அல்லது வலுக்கட்டாயமாகவோ உறுதிப்படுத்தமுடியவில்லை)இந

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்பிக்கை வைத்தவருடைய கதை இன்று என்ன..? அப்ப சுகத்திற்காகவன்றி நம்பிக்கைக்காக தான் இந்த பெண் இப்படி நடந்துள்ளார்.

என்ன அந்த பெண் வேறும் சுகத்துக்காகவா அப்படி செய்து இருக்கும்? அவனில் நம்பிக்கை வச்சு இருக்கலாம் தானே

என்னை திருமனம் செய்ய போறவன் தானே

:idea: :idea: :idea:

தேன் குடிக்க வந்த வண்டு பூ காற்றில் அடினாலும் இருந்து

தேன் குடித்து விட்டு தான் அடுத்த பூக்களிடம் போகும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வினித் முதலில நீர் ஒழுங்காக வாசியும். பிறகு மற்றவைக்கு சொல்ல வெளிக்கிடும்...

முதல் வடிவா வாசியும் அப்புறம் கருத்து எழுதலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் எல்லாம் மைல்கணக்கில சைக்கில் ஓடி படித்தம். அதுவும் டபிள் ரயர் போட்டு ஓட்டினம்.

இப்ப என்னண்டா எல்லாரும் ஸ்கூட்டியும் கையில மொபைலுமா திரியினம். இது பொருளாதார வளர்ச்சியையா குறிக்கிறது...?

Link to comment
Share on other sites

என்னும் நீங்கள் புரியாம பதில் சொல்கிறிங்கள்

ஒரு பெண்னை அதுவும் அந்த பெண்னின் சம்மததுடன்

கட்டிலுக்கு அழைப்பதுக்கு சுகமான வழிதான் காதல்

ஒரு பெணிடம் போய் வாறியா படுக்க எண்டு கேட்டுபாரும்

வெட்டி அடுப்பில் வைத்து விடுவர்கள், ஆனால் அதே பெண்னிடம் காதல் என்ற வழியில் போய் பாரும்.

ஏன் என்றால் பெண்களுக்கு காதல் மீதும் காதலிப்பவன் மீதும் அதிக நம்பிக்கை என்ன நடந்தாலும் அவன் சமாளிப்பான் என்னை கைவிட மாட்டன் அது தான் உன்மை

சும்ம 18 வயது பெண் 23 வயது ஆனிடம் பஸ்ல் போகும் போது காம உணர்வில் போய் படுத்தாள் என்பது எல்லாம்

ஒரு கதையா?

வேற என்ன அதில் பெண் அப்பா அம்மாவிடம் சொல்ல இல்லை(3 மாதம்) ஆகும் வரை ஆனால் அந்த பெண்னுக்கு கூட 1 மாசம் இல்லை 1 1/2 மாசத்துகு பின் தான் தெரிய வந்து இருக்கும் அதுக்கு பின் எவளவு அந்த பெண்னின் மனதில் போராடங்கள் நடந்து இருக்கும்?????

சும்ம எடுத்தாம் கவுட்டம் எண்டு பதில்

ஏன் திருமனத்துகு பின் யாரும் தப்பு செய்தது இல்லையா?

Link to comment
Share on other sites

நாங்கள் எல்லாம் மைல்கணக்கில சைக்கில் ஓடி படித்தம். அதுவும் டபிள் ரயர் போட்டு ஓட்டினம்.  

இப்ப என்னண்டா எல்லாரும் ஸ்கூட்டியும் கையில மொபைலுமா திரியினம். இது பொருளாதார வளர்ச்சியையா குறிக்கிறது...?

ஏன் அண்ணா இப்படி பொறாமை படுறீங்கள். அது அந்த காலம். அவனவன் கார் அது இது என்று திரியேக்கை நீங்கள் ஸ்கூட்டர் ல போறதுக்கு இப்படி சொல்லுறீங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வினித் நீங்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்... இப்படியான தவறுகள் இன்று நேற்றல்ல பல காலமாக நடைபெற்று வருகின்றன.

ஆனால் இன்று இப்படிப்பட்ட தவறுகள் ஆயிரக்கணக்கில் இடம் பெறுகின்றன. ஆனால் ஒரு சில தான் வெளியில் வருகின்றன.

Link to comment
Share on other sites

நாங்கள் எல்லாம் மைல்கணக்கில சைக்கில் ஓடி படித்தம். அதுவும் டபிள் ரயர் போட்டு ஓட்டினம்.  

இப்ப என்னண்டா எல்லாரும் ஸ்கூட்டியும் கையில மொபைலுமா திரியினம். இது பொருளாதார வளர்ச்சியையா குறிக்கிறது...?

ஒம் இல்லை எண்டு சொல்ல முடியுமா?

90 ஆண்டுக்கு முன்னம் இருந்த யாழ்ப்பாணம்மும் இப்ப

இருக்கும் யாழ்ப்பாணமும் ஒன்றா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் பெறாமைப்படவில்லை. இதன் பின் விளைவுகளை தான் சொல்லவருகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வினித் இன்றய யாழ்ப்பாண பொருளாதாரம் வெளிநாட்டில் வசிக்கும் எம்மவர்களின் கையில் தான் தொங்கி நிற்கிறது. இங்குள்ளவர்கள் ஒரு தடவை பணம் அனுப்பாமல் விட்டால் அவர்களின் வாழ்க்கை தலைகீழ்.

(எதிலும் விதிவிலக்குகள் உள்ளன)

Link to comment
Share on other sites

வினித் நீங்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்... இப்படியான தவறுகள் இன்று நேற்றல்ல பல காலமாக நடைபெற்று வருகின்றன.

ஆனால் இன்று இப்படிப்பட்ட தவறுகள் ஆயிரக்கணக்கில் இடம் பெறுகின்றன. ஆனால் ஒரு சில தான் வெளியில் வருகின்றன.

நீங்கள் சொல்ல்வது சரி ஆனால் வெளியில் வந்தவைக்கு நல்ல தீர்ப்பு கொடுத்தால் அது ஒரு மற்றவைக்கும் நல்லது தானே

ஒருக்கா சுனாமி வந்துவிட்டது தானே அடுத்த முறை வந்த எனன செய்யனும் எண்டு இப்ப எல்லாருக்கும் தெரியும் தானே?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
    • நன்றிகள் அண்ணை  நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது. சிங்கையில் எமது தோலின் கலரை  பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த  வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.    
    • நான் படத்தை பார்த்து 🤪மாறி விளங்கிக் கொண்டேன். அண்ணன் பயன்படுத்தியதை தம்பி பயன்படுத்தி இருக்கிறார் என்று. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.