Jump to content

யாழ்ப்பாணத்தில் நிகழும் கூத்துகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில அவன்தான் பாவம் ஏமாந்திருப்பான் தப்பிட்டான். அவன் 22 வயசில பஸ் ஓட்டி தன்ர குடும்பத்த காப்பாத்த வந்துட்டான். அவன்றை பஸ்ஸில தினமும் ஏறி அவனை நிலைகுலைய வைத்து விழுத்தியது இந்தப்பெண்தான். இப்ப திடீரென அவனைக்கட்ட வேண்டுமென்றால் அவன் குடும்பம் நடுத்தெருவிலா நிக்கிறது. அவன் வாங்கிய கடன் எல்லாம் எப்படிக்கட்டிறது. குடும்பவாழ்கைக்கை போனா கட்டுறது சுலபமில்லை. எல்லாத்துக்கும் சேர்த்துத்தான் அவர்கள் கேட்டு இருக்கிறார்கள். குடு;த்துட்டு சந்தோசமா கல்யாணத்தைக்கட்டுறதுதான் நல்லது.

என்ன அதீபன் அண்ணா

இப்ப சிறுமைத்தனமாகக் கதைக்கின்றியள்! அவன் விருப்பமில்லாமல் தான் அதைச் செய்தமாதிரியும், அந்தப் பெண் தான் வேண்டும் என்று செய்தமாதரியும் கதைக்கின்றியள்?

குடும்பப் பொறுப்பு எண்டு விளங்கும் அளவிற்கு புத்திசாலி என்றால் ஏன் மன்**** ஆக மாறவேண்டும். செய்வது எல்லாம் செய்து போட்டு, இப்ப சீதனம் தந்தால் தான் கட்டுவானோ!! இவனை எல்லாம் நடுறோட்டில் வைத்துச் சுட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • Replies 80
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப எங்கடயள் நல்லா கெட்டுப் போட்டுதுகள்....

போராட்ட சூழ்நிலையால சரியா கஸ்டப்பட்டு வெளித் தொடர்புகள் இல்லாமையால் உலகத்தின் படிப்படியான வளர்ச்சி தெரியாமல், விளங்கிக் கொள்ளாமல் 96ம் ஆண்டிற்குப் பிறகு திட்டமிட்டு சிங்கள அரசினால் திறந்து விட, எங்கடயள் எல்லாத்தையும் எடுத்து பழகிக் கொண்டு இப்ப முழிக்குதுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனண்ணா சுடுறதால உங்களுக்கு என்ன நன்மை????????????? இநஇதளவுக்கு பொங்கி எழுறீங்களே......................... அந்த பெண்ணை (அப்படிப் பெண்களை) நீங்கள் வாழ்க்க துணையா ஏத்துகஇகொள்ளலாமே??????????????????? எல்லாம் சும்மா மற்றவங்கள குறை சொல்ல வந்திடுவினம்.......... சந்தர்ப்பங் கிடைச்சா தூயவங்களும் கெட்டவங்கள் ஆகுவினமண்ணா.............................

Link to comment
Share on other sites

சட்டு புட்டென்று பொட்டில போட்டுட்டா..அடங்கி இருப்பினமில்ல...தூயவை சந்தர்ப்பத்தைத் தேடிக் கெடாம..! இதில அரபு நாடுகளை பாராட்டலாம்...! யார் என்றாலும் பிடிபட்டா...சுதந்திரம் அது இதென்று சுத்துமாத்துக்கு இடமில்லை...போடுதான்..! :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அப்படிச் செய்தால் ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும். அல்லாவிட்டால் என்னைச் சுடுவதில் தப்பில்லை கண்டியளோ!!

மற்றது அந்தப் பிள்ளையுடன் தப்பாக நடந்தவனை நியாயப்படுத்துவதைத் கண்டிக்கின்றேன். அதுவும் கலியாணம் கட்ட 20லட்சம் கேட்பது எல்லாம் எவ்வளவு அயோக்கியத்தனம். மீண்டும் ஒரு பிள்ளையிடம் அப்படி நடக்கமாட்டான் என்று என்ன உத்தரவாதம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏய். ஆரது மரணதண்டனையை நிப்பாட்டச் சொல்லுறது?

சுட்டுச் சுட்டுப் பழகிப்போன எங்கட கையள என்ன பூப்பறிக்கச் சொல்லிறியளோ?

"சூடு தானண்ணை சுரணை கொண்டுவரும்." (இந்தப் பஞ்ச் வசனத்தை வேற ஒருத்தரும் பாவிக்கக்கூடாது.)

மரணதண்டனை ஒழிப்புக் கதையெல்லாம் சபைக்குதவாது. எதுக்கெடுத்தாலும் சுட்டுத்தான் பழக்கம். அதை திடீரெண்டு நிப்பாட்ட ஏலாது.

ஆனா ராசீவ் விசயத்தில எங்கட ஆக்களுக்காக மரணதண்டனை ஒழிப்புக் கோசம் போடுறதையும் இதுகளையும் சேத்து ஆராவது கேள்விகேட்டா,,,

மவனே உங்களுக்குத்தான் முதற்சூடு. கவனம்.

Link to comment
Share on other sites

ஏனண்ணா சுடுறதால உங்களுக்கு என்ன நன்மை????????????? இநஇதளவுக்கு பொங்கி எழுறீங்களே......................... அந்த பெண்ணை (அப்படிப் பெண்களை) நீங்கள் வாழ்க்க துணையா ஏத்துகஇகொள்ளலாமே??????????????????? எல்லாம் சும்மா மற்றவங்கள குறை சொல்ல வந்திடுவினம்.......... சந்தர்ப்பங் கிடைச்சா தூயவங்களும் கெட்டவங்கள் ஆகுவினமண்ணா.............................

சந்தர்ப்பத்தில் தப்பு செய்த அந்த தப்பை மீண்டும் செய்ய கூடாது மீண்டும் மீண்டும் தப்பு செய்தால்? என்ன செய்ய?

நான் சொன்னது முதல் தப்பு அந்த பெண்னுடன் படுத்தது

இரண்டாவது தப்பு 20 லட்சம் தந்தா தான் திருமனம் செய்வேன் எண்டு சொல்வது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன் ஏன் நீங்கள் இப்படி யோசிக்கலாமே...

கலியாணம் கட்ட முன் ஒரு ஆணுடன் தப்பாக நடந்தவள்; மீண்டும் இன்னொரு ஆணுடன் தப்பாக நடக்கமாட்டாள் என்று என்ன உத்தரவாதம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி என்றால் அவனோடு கலியாணப் பேச்சுக்கு போயிருக்கமாட்டாள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த பெண் போனாள் என்று செய்தியில் குறிப்பிடவில்லையே. பெண்ணின் வீட்டார் தான் முழிக்கினம் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன் ஏன் நீங்கள் இப்படி யோசிக்கலாமே...

கலியாணம் கட்ட முன் ஒரு ஆணுடன் தப்பாக நடந்தவள்; மீண்டும் இன்னொரு ஆணுடன் தப்பாக நடக்கமாட்டாள் என்று என்ன உத்தரவாதம் ?

ஓமுங்கோ. உது சரிதான்.

அவள் மட்டும்தான் தப்பா நடந்தவள். அவன் பொடியன் ஒண்டும் செய்யேல. அவருக்கு உந்தக் கேள்வி பொருந்தாது கண்டியளோ. அல்லது திருமணத்துக்குப்பிறகு வேற ஒருத்தியோட தப்பா நடந்தாத்தான் என்ன? அவள் தப்பா நடந்ததுக்கத்தான் 20 இலட்சம் அபராதம் கட்டவேணுமெண்டு பொடியன் சொல்லிறான் போலகிடக்கு. இஞ்ச ஒருத்தர் சொன்ன மாதிரி அந்தக் காசக்குடுத்திட்டு கலியாணம் கட்டி வாழ வேண்டடியதுதான். அதைத்தானே எங்கட தமிழ்ச்சினிமாவிலையும் அம்பது வருசமாக் காட்டுறாங்கள். அப்ப சரியாத்தான் இருக்கும்.

உக்ராச்! (உங்களுக்கு என்ன பேரெண்டு சரியாத் தெரியேல)

உங்களைப்போல "சிந்தனைச் சிற்பியள்" எங்கட தமிழ்ச்சமூகத்தில கிடைக்கிறதுக்கு நாங்கள் என்ன தவம் செய்தோமே தெரியேல.

உங்களைக் கோடம்பாக்கம் அனுப்பினால் உலகத்தரம் வாய்ந்த திரைப்படங்களைத் தருவியளெண்டு நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

தூயவன் ஏன் நீங்கள் இப்படி யோசிக்கலாமே...

கலியாணம் கட்ட முன் ஒரு ஆணுடன் தப்பாக நடந்தவள்; மீண்டும் இன்னொரு ஆணுடன் தப்பாக நடக்கமாட்டாள் என்று என்ன உத்தரவாதம் ?

என்ன அந்த பெண் வேறும் சுகத்துக்காகவா அப்படி செய்து இருக்கும்? அவனில் நம்பிக்கை வச்சு இருக்கலாம் தானே

என்னை திருமனம் செய்ய போறவன் தானே

:idea: :idea: :idea:

தேன் குடிக்க வந்த வண்டு பூ காற்றில் அடினாலும் இருந்து

தேன் குடித்து விட்டு தான் அடுத்த பூக்களிடம் போகும்

Link to comment
Share on other sites

அந்த பெண் போனாள் என்று செய்தியில் குறிப்பிடவில்லையே. பெண்ணின் வீட்டார் தான் முழிக்கினம் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் வடிவா வாசியும் அப்புறம் கருத்து எழுதலாம்

எனி ஒண்டும் செய்யமுடியாது அந்த பையனின் குடும்பத்துக்கு சொல்லி இப்படி நடந்துவிட்டது, எனி ஒண்டும் செய்யமுடியாது, ஆகவே இருவருக்கும் திருமணத்தை செய்து வைப்போம் என்று கூறின பொழுது, பையன் வீட்டார் (அந்த பொறுக்கியும் சேர்ந்து) 20 லட்சம் தந்தால் தன்னால் கற்பமாகி இருக்கும் பெண்ணை திருமணம் செய்வேன் அல்லது இல்லை என்று ஒரே அடியாக சொல்லிவீட்டார்கள்,,
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில என்னுடைய பெயர் (U)உலகநாதன் (K)கிருஸ்ணராஜ் சுருக்கமாக UKRAJ

எனது பதில் கீழ்கண்ட கருத்திற்கே

நான் அப்படிச் செய்தால் ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும். அல்லாவிட்டால் என்னைச் சுடுவதில் தப்பில்லை கண்டியளோ!!

மற்றது அந்தப் பிள்ளையுடன் தப்பாக நடந்தவனை நியாயப்படுத்துவதைத் கண்டிக்கின்றேன். அதுவும் கலியாணம் கட்ட 20லட்சம் கேட்பது எல்லாம் எவ்வளவு அயோக்கியத்தனம். மீண்டும் ஒரு பிள்ளையிடம் அப்படி நடக்கமாட்டான் என்று என்ன உத்தரவாதம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண் வீட்டார் விசாரித்த போது தான் கூறியிருக்கின்றார். திருமணம் செய்வதற்கு வீட்டார்தான் முடிவெடுத்திருக்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கரவெட்டி என்னும் இடத்தில் ஒரு சம்பவம், இதனை வாசித்துவிட்டு உங்களின் கருத்தை சொல்லுங்கள்.

கரவெட்டியை சேர்ந்த ஒரு பாடசாலை மாணவி, வயது 18 அல்லது 19. ஒவ்வொரு நாளும் பாடசாலைக்கு பஸ்ஸில் செல்வார், பஸ்ஸில் நடத்துனராக பணியாற்றிய இளைஞன் கிட்டத்தட்ட 22,23 வயது, ஒவ்வொரு நாளும் பாடசாலைக்கு அந்த பஸ்ஸில் செல்லுவார் இந்த மாணவி. சில காலம் பழக்கத்தின் பின் ஒரு நாள் பாடசாலை செல்லும் பொழுது அந்த நடத்துனர் அந்த மாணவியுடன் தப்பு தண்டா செய்துவிட்டார் (மாணவின் சம்மதத்துடனோ அல்லது வலுக்கட்டாயமாகவோ உறுதிப்படுத்தமுடியவில்லை)இந

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்பிக்கை வைத்தவருடைய கதை இன்று என்ன..? அப்ப சுகத்திற்காகவன்றி நம்பிக்கைக்காக தான் இந்த பெண் இப்படி நடந்துள்ளார்.

என்ன அந்த பெண் வேறும் சுகத்துக்காகவா அப்படி செய்து இருக்கும்? அவனில் நம்பிக்கை வச்சு இருக்கலாம் தானே

என்னை திருமனம் செய்ய போறவன் தானே

:idea: :idea: :idea:

தேன் குடிக்க வந்த வண்டு பூ காற்றில் அடினாலும் இருந்து

தேன் குடித்து விட்டு தான் அடுத்த பூக்களிடம் போகும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வினித் முதலில நீர் ஒழுங்காக வாசியும். பிறகு மற்றவைக்கு சொல்ல வெளிக்கிடும்...

முதல் வடிவா வாசியும் அப்புறம் கருத்து எழுதலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் எல்லாம் மைல்கணக்கில சைக்கில் ஓடி படித்தம். அதுவும் டபிள் ரயர் போட்டு ஓட்டினம்.

இப்ப என்னண்டா எல்லாரும் ஸ்கூட்டியும் கையில மொபைலுமா திரியினம். இது பொருளாதார வளர்ச்சியையா குறிக்கிறது...?

Link to comment
Share on other sites

என்னும் நீங்கள் புரியாம பதில் சொல்கிறிங்கள்

ஒரு பெண்னை அதுவும் அந்த பெண்னின் சம்மததுடன்

கட்டிலுக்கு அழைப்பதுக்கு சுகமான வழிதான் காதல்

ஒரு பெணிடம் போய் வாறியா படுக்க எண்டு கேட்டுபாரும்

வெட்டி அடுப்பில் வைத்து விடுவர்கள், ஆனால் அதே பெண்னிடம் காதல் என்ற வழியில் போய் பாரும்.

ஏன் என்றால் பெண்களுக்கு காதல் மீதும் காதலிப்பவன் மீதும் அதிக நம்பிக்கை என்ன நடந்தாலும் அவன் சமாளிப்பான் என்னை கைவிட மாட்டன் அது தான் உன்மை

சும்ம 18 வயது பெண் 23 வயது ஆனிடம் பஸ்ல் போகும் போது காம உணர்வில் போய் படுத்தாள் என்பது எல்லாம்

ஒரு கதையா?

வேற என்ன அதில் பெண் அப்பா அம்மாவிடம் சொல்ல இல்லை(3 மாதம்) ஆகும் வரை ஆனால் அந்த பெண்னுக்கு கூட 1 மாசம் இல்லை 1 1/2 மாசத்துகு பின் தான் தெரிய வந்து இருக்கும் அதுக்கு பின் எவளவு அந்த பெண்னின் மனதில் போராடங்கள் நடந்து இருக்கும்?????

சும்ம எடுத்தாம் கவுட்டம் எண்டு பதில்

ஏன் திருமனத்துகு பின் யாரும் தப்பு செய்தது இல்லையா?

Link to comment
Share on other sites

நாங்கள் எல்லாம் மைல்கணக்கில சைக்கில் ஓடி படித்தம். அதுவும் டபிள் ரயர் போட்டு ஓட்டினம்.  

இப்ப என்னண்டா எல்லாரும் ஸ்கூட்டியும் கையில மொபைலுமா திரியினம். இது பொருளாதார வளர்ச்சியையா குறிக்கிறது...?

ஏன் அண்ணா இப்படி பொறாமை படுறீங்கள். அது அந்த காலம். அவனவன் கார் அது இது என்று திரியேக்கை நீங்கள் ஸ்கூட்டர் ல போறதுக்கு இப்படி சொல்லுறீங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வினித் நீங்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்... இப்படியான தவறுகள் இன்று நேற்றல்ல பல காலமாக நடைபெற்று வருகின்றன.

ஆனால் இன்று இப்படிப்பட்ட தவறுகள் ஆயிரக்கணக்கில் இடம் பெறுகின்றன. ஆனால் ஒரு சில தான் வெளியில் வருகின்றன.

Link to comment
Share on other sites

நாங்கள் எல்லாம் மைல்கணக்கில சைக்கில் ஓடி படித்தம். அதுவும் டபிள் ரயர் போட்டு ஓட்டினம்.  

இப்ப என்னண்டா எல்லாரும் ஸ்கூட்டியும் கையில மொபைலுமா திரியினம். இது பொருளாதார வளர்ச்சியையா குறிக்கிறது...?

ஒம் இல்லை எண்டு சொல்ல முடியுமா?

90 ஆண்டுக்கு முன்னம் இருந்த யாழ்ப்பாணம்மும் இப்ப

இருக்கும் யாழ்ப்பாணமும் ஒன்றா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் பெறாமைப்படவில்லை. இதன் பின் விளைவுகளை தான் சொல்லவருகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வினித் இன்றய யாழ்ப்பாண பொருளாதாரம் வெளிநாட்டில் வசிக்கும் எம்மவர்களின் கையில் தான் தொங்கி நிற்கிறது. இங்குள்ளவர்கள் ஒரு தடவை பணம் அனுப்பாமல் விட்டால் அவர்களின் வாழ்க்கை தலைகீழ்.

(எதிலும் விதிவிலக்குகள் உள்ளன)

Link to comment
Share on other sites

வினித் நீங்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்... இப்படியான தவறுகள் இன்று நேற்றல்ல பல காலமாக நடைபெற்று வருகின்றன.

ஆனால் இன்று இப்படிப்பட்ட தவறுகள் ஆயிரக்கணக்கில் இடம் பெறுகின்றன. ஆனால் ஒரு சில தான் வெளியில் வருகின்றன.

நீங்கள் சொல்ல்வது சரி ஆனால் வெளியில் வந்தவைக்கு நல்ல தீர்ப்பு கொடுத்தால் அது ஒரு மற்றவைக்கும் நல்லது தானே

ஒருக்கா சுனாமி வந்துவிட்டது தானே அடுத்த முறை வந்த எனன செய்யனும் எண்டு இப்ப எல்லாருக்கும் தெரியும் தானே?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.