Jump to content

யாழ்ப்பாணத்தில் நிகழும் கூத்துகள்


Recommended Posts

ம்ம்ம் படிக்கிற காலத்தில் அது ஒன்றும் அவசியமான தேவை இல்லைத்தான். எனக்கு எனது ஆசிரியர் ஒரே சொல்லுறது ஞாபகம் வருது. கொம்பட்டபலா இருந்து ஒரு நாளும் படிக்க கூடாது என்பார். அப்படி இருந்து படித்தால் நமக்கு படிப்பு ஏறாதாம் கஷ்டப்பட்டு படிக்கணும் என்று சொல்லுவார்.

Link to comment
Share on other sites

  • Replies 80
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை வினித்.... நீங்கள் யாழ்பாணத்திற்கு கடைசியாக எப்பொழுது போனீர்கள்...?

Link to comment
Share on other sites

ஏய். ஆரது மரணதண்டனையை நிப்பாட்டச் சொல்லுறது?

சுட்டுச் சுட்டுப் பழகிப்போன எங்கட கையள என்ன பூப்பறிக்கச் சொல்லிறியளோ?  

"சூடு தானண்ணை சுரணை கொண்டுவரும்." (இந்தப் பஞ்ச் வசனத்தை வேற ஒருத்தரும் பாவிக்கக்கூடாது.)

மரணதண்டனை ஒழிப்புக் கதையெல்லாம் சபைக்குதவாது. எதுக்கெடுத்தாலும் சுட்டுத்தான் பழக்கம். அதை திடீரெண்டு நிப்பாட்ட ஏலாது.

ஆனா ராசீவ் விசயத்தில எங்கட ஆக்களுக்காக மரணதண்டனை ஒழிப்புக் கோசம் போடுறதையும் இதுகளையும் சேத்து ஆராவது கேள்விகேட்டா,,,

மவனே உங்களுக்குத்தான் முதற்சூடு. கவனம்.

நல்லவன்.. இந்திய இராணுவத்தால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழரைப் பொறுத்த வரை ராஜீவ் ஒரு மரண தண்டனைக் கைதிதான்.. அவர் ஈழத்தில் இந்திய இராணுவத்தை ஏவிக் கொன்ற 9000 பொதுமக்களும் என்ன குற்றவாளிகளா..???! அதுக்கு என்ன தண்டனை..! மிலோசவிச் போல சதாம் போல ஏன் ராஜீவுக்கு தண்டனை கொடுக்கல்ல உலகம்..??! அதைச் செய்திருந்தா...சில சம்பவங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும்..!

எங்கும் கடும் சமூகக் குற்றங்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படுகிறது. சிறீலங்காவில் மீண்டும் மரண தண்டனை கொண்டு வரப்பட்டாயிற்று. மனித உரிமைகள் காப்புக்காக யுத்தம் செய்வதாகச் சொல்லும் அமெரிக்காவில் மரண தண்டனை நடைமுறையில் உள்ளது. ஈழத்தில் எச்சரிக்கைகளின் பின்னும் திருந்தாதுகளுக்கே மரண தண்டனை வழங்கப்படுகிறது. எச்சரிக்கை வழங்கிய பின் குற்றங்களை உணர்ந்து தவிர்த்தவர்களும் இருக்கிறார்கள் தானே..! ஒரு சில சந்தர்ப்பங்களில் சட்டத்தின் கடுமையான அமுலாக்கமில்லையேல் மனித விலங்குகளை கட்டுப்படுத்துவது கடினம்..! அதை செயற்பாட்டு ரீதியில் தான் உணரலாம். வார்த்தைகளால் சும்மா எழுதிட்டுப் போறது போல அல்ல சமூகமும் அதன் அங்கத்தவர்களும்..! அதற்காக நாங்கள் மரண தண்டனையை ஆதரிக்கின்றோம் என்பதல்ல அர்த்தம். தேவைக்கு கட்டாயத்தின் பெயரில் பாவிக்க வேண்டி இருக்கிறது. ஒரு அறிவுபூர்வமான ஒழுக்கம் கட்டுக்கோப்புள்ள ஒரு சமூகத்தில் அதன் தேவை இருக்க வாய்ப்பில்லை..என்றே சொல்லலாம்..! :wink: :P :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

96ம் ஆண்டிற்கு முன்னர் பெண்களுடன் வம்பு பண்ணும் ஆண்களை தான் அதிகம் பார்த்திருக்கின்றேன்.

(யாழ் பல்கலைக்கழகத்தில் முதலாம் வருடம் நுளையும் போது பெண் மாணவிகளால் நடந்ததை வெளியில சொல்லேலாது)

ஆனால் இப்போ யாழ் பெண்களால் சீரழிக்கப்பட்டு வருகிறது.

சினிமாவில் வரும் அடிதடி நாயகர்கள போல் பாவனை அசய்பவர்களுடனும், பொதுமக்களால் வித்தியாசமாக பார்க்கப்படும் இளைஞர்களுடனும் தான் திரிகின்றார்கள்.

யாழில் RIO குளிர்களி நிலையத்திற்கு போனால் தெரியும்.

Link to comment
Share on other sites

தூயவன் ஏன் நீங்கள் இப்படி யோசிக்கலாமே...

கலியாணம் கட்ட முன் ஒரு ஆணுடன் தப்பாக நடந்தவள்; மீண்டும் இன்னொரு ஆணுடன் தப்பாக நடக்கமாட்டாள் என்று என்ன உத்தரவாதம் ?

ம் இதுவும் நியாயம் தானே..! பெண் என்பதற்காக மன்னிப்பது பாவம் பார்ப்பது எமது சமூக வழமை...அதை தற்போது பெண்கள் தவறாக பாவிக்க முற்பட அனுமதிக்க கூடாது. சுதந்திரம் எல்லா மனிதருக்கும் உண்டு. பெண்கள் சுதந்திரம் என்ற போர்வையில் ஆண்களோடு இணைந்து அவர்களுக்கு இணையாக ஒழுக்கத்தை இழக்கக் கூடாது. அப்படி செய்தால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வழங்கப்படும் தண்டனை அவர்களின் குற்றங்கள் தொடர்பில் நோக்கப்படும் நோக்கு ஒரே இயல்பினதாக இருக்க வேண்டும். இருப்பினும் எந்த மனிதனும் கெட்டவனல்ல. சந்தர்ப்பம் சூழ்நிலை அவனைக் கெட்டவனாக்கிறது.தப்புக்கு தூண்டுகிறது. எனவே எல்லோருக்கும் போதிய அளவு திருந்த வழிகாட்டலும் சந்தர்ப்பமும் அளிக்க வேண்டும். தண்டனைகளை நிறை வேற்ற முன் அவை பல தடவை பரிசீலிக்கப்படவும் வேண்டும். எந்த மனிதனின் வாழ்வுரிமையையும் நினைத்த மாதிரிக்குப் பறிக்க முடியாது. அவனால் பலரின் வாழ்வுரிமை சமூகத்தின் ஒழுக்கம் பாதிக்கப்படும் என்றால் குற்றத்துக்கு தண்டனை வழங்கத்தான் வேண்டும்..அவன் திருந்தாத பட்சத்தில்..! :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்களுக்கு சில சலுகைகளை செய்வதாலேயே அவர்கள் ஆண்களுக்கு தடி விட்டுக்கொண்டிருக்கிறார்கள

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த சம்பவத்திலும் ஒரு ஆணும் பெண்ணும் ஈடு;பட்டிருந்தால் அங்கு பெண்ணை ஒரு விதமாகவும் ஆணை ஒரு விதமாகவுமே கையாளுவார்கள். அந்த சம்பவத்தின் தோற்றப்பாடுக்கு அவர்களின் பங்களிப்பு வீதம் எப்போதுமே உற்று நோக்கப்படுவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதிலை பெரிய குற்றம் 20லட்சம் கேட்கும் ஆட்களுடையது... உது அந்த காலத்தில் இருந்து நடந்துகிட்டு வாற விசயம் தானே.... மேல் மட்டத்தாகளின்ரையும் கீழ் மட்டதாகளின்ரை விசயமாக வெளி வந்து கொண்டிருந்தது....நடுத்தர ஆக்களின்ரை விசயங்கள் இப்ப சர்வசாதரணமாய் மெல்ல மெல்ல வெளிவந்து கொண்டிருக்கு.போல..... இந்தகாலம் ஆணும் பெண்ணும் புத்திசாலிகளென்று பார்த்தால் .......... ஏதோன்று தப்பிச்சு வெளியிலைவந்திட்டுது....யாழ்ப்

Link to comment
Share on other sites

முதலாவது சம்பவத்தில் பெண்ணுக்கு 3 மாதம் வரும் வரை தாய் என்ன செய்து கொண்டிருந்தார். இனியும் காலம் தாமதிக்காது இரு சாராரும் கதைத்து ஒரு முடிவிற்கு வரலாம். இந்த மாணவி எப்படி அவனை திருமணத்திற்கு முந்திய உறவில் அனுமதிக்கலாம். இவருடைய அனுமதியின்றி நடைபெற்றிருந்தால் ஏன் 3 மாதம் வரை பொறுந்திருந்தார்.

மற்றும் இந்த பிரச்சனைக்கு அவர்களை கூப்பிட்டு ஏன் அவர்களுக்கு வீண்சிரமங்களை கொடுக்கிறீர்கள். உங்கள் பெண்ணின் தவறால் ஏற்பட்டதை நீங்களே சீர்செய்யுங்கள்.

நல்லா இருக்கு உங்கள் கதைஉங்கள் பெண்ணால் ஏற்பட்டதை நீங்களே தீர்க்கச் சொல்கிறீர்கள் ஏதோ தப்பு செய்த ஆண் தப்பே செய்யாத மாதிரி. ஏனண்ணா ஒரு பஸ்ஸில போற பெண் நான் இண்டைக்கு கெட்டுப்போகணும் என்ன கெடுத்திடு எண்டு கேட்டு கெட்டுப்போன மாதிரி அல்லவா உங்கட கருத்து இருக்கு. திருமணத்துக்கு முன் எப்படி ஒர பெண் உறவில் ஈடுபடலாம் என்று கேட்கிறீர்கள் ஏன் அப்படி அவ்வாணைப்பற்றி கேட்கவில்லை. அல்லது நீங்களும் ஒரு ஆணாக இருப்பதால் அதிலிருந்து தப்ப பார்க்கிறீர்களா. கற்பு என்பது ஆண்,பெண் இருவருக்கும் சம்பந்தப்பட்டது. அதனை ஏன் பெண்ணுடன் மட்டும் நிறுத்திப் பார்க்கிறீர்கள். உங்களின் இப்படியான பார்வைகளே இப்படியான ஆண்களை தப்பு செய்ய தூண்டுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எது எப்படியோ இப்போது பாதிக்கப்பட்டுள்ளது பெண்தானே..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆணோ பெண்ணோ அது பெற்றேருடைய வளர்ப்பில் தான் இருக்கிறது.

இன்று தங்கள் பெண்ணின் நிலை கண்டு பெற்றோர் அந்த ஆணை மட்டும் குறைசொல்வது பிழை.

கற்பு என்பது இரு பாலாருக்கும் பொதுவானது தான். ஆனால் ஆணின் கற்பை பற்றி அதிகம் அக்கறை காட்டாத பெண்கள் பெண்ணின் கற்பு பற்றி அதிக கவனம் எடுப்பது தவறானது.

இன்று இதில் சம்பந்தப்பட்ட ஆணை திருமணம் செய்ய எத்தனையோ பெண்கள் முன்வருவார்கள். இந்த பெண்ணை திருமணம் செய்ய எத்தனை ஆண்கள் முன்வருவார்கள்?

Link to comment
Share on other sites

"சூடு தானண்ணை சுரணை கொண்டுவரும்."  

அப்ப அந்தப்பெடியனுக்கும் சூடுவைப்பம் :lol::lol:

Link to comment
Share on other sites

என்னத்தைச் சொல்ல யாழ்ப்பாணம் இப்போ நவீனம் ஆகிறது. சொன்னால் நம்பமாட்டீர்கள். யாழ் பஸ் நிலய வளாகத்தில் செல்லிடப்பேசியும் சொண்டு சுழிப்புமாக எத்தனை சிறுமிகள் / இளம் பெண்கள் அலைகிறார்கள். எனது வாழ்நாளில் எமது மண்ணில் நான் இப்படிப்பட்ட கேவலங்களை முன் ஒரு போதும் கண்டதில்லை. இது அப்பட்டமான ஒரு விபச்சார நடவடிக்கை. அதுபோக யாழ் கச்சேரிக்கு அருகில் இருக்கும் ஒழுங்கையொன்று இப்பொழுது லவ் லேன் என பலராலும் அழைக்கப்படுகிறது. அங்கு சமாதான காலத்தில் எமது இளசுகள் பட்ட பாடு :oops: :oops: :oops: ஐரோப்பிய கலாச்சாரம் பிச்சை வாங்கவேண்டும். ஆணும் பெண்ணும் முடிஞ்சா பிரிச்சு பார் என பந்தயம் கட்டுமாற்போல் இறுக அணைத்தபடி இருப்பார்கள். இவற்றுக்கு ஈடாக காரைநகர் கசூர்னா கடற்கரை, வவுனியா நகரசபை பூங்கா. என்பன திகழ்ந்தன ஐயோ கலாச்சாரத்தை பேணும் பிரிவு தலைகீழாக நின்றும் அவற்றை தடுக்க முடியவில்லை. இப்பொழுதோ பொங்கியெழும் மக்கள் படை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள். எங்கு பார்த்தாலும் இராணுவ மயம் அதுகும் வவுனியா நகர சபை பூங்காவை கனவுல கூட நினைச்சே இளசுகள் பார்க்கமாட்டார்கள் ஏனெனில் அதற்கு அருகில் தான் STF எனும் விசேட அதிரடிப்படையினரின் முகாம் அமைந்துள்ளது. இவற்றை விட ஊருக்குள் காதல் கசமுசாக்கள் தலைவிரித்தாடுகின்றன. முன்னர் கடித்தத்தில் நடந்த காதல்கள் எல்லாம் இப்பொழுது செல்லிடப்பேசியிலிம், மின்னஞ்சல் ஊடாகவும் மிகவும் வேகமாகவும் இரகசியமாகவும் நடை பெறுகின்றன. என்ன SMS எனும் குறுந்தகவல் அனுப்ப ஆக 2 ரூபாய்கள் தான் பின்ன யார் விடுவான் அதை ? :wink: :wink: ஏதோ எல்லாத்துக்கும் ஒரு முடிவு வராமல் விடவா போகுது. சரி சுவிஸ் பயணம் முடியட்டன் பாப்பம் :lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

ஏய். ஆரது மரணதண்டனையை நிப்பாட்டச் சொல்லுறது?

சுட்டுச் சுட்டுப் பழகிப்போன எங்கட கையள என்ன பூப்பறிக்கச் சொல்லிறியளோ?  

"சூடு தானண்ணை சுரணை கொண்டுவரும்." (இந்தப் பஞ்ச் வசனத்தை வேற ஒருத்தரும் பாவிக்கக்கூடாது.)

மரணதண்டனை ஒழிப்புக் கதையெல்லாம் சபைக்குதவாது. எதுக்கெடுத்தாலும் சுட்டுத்தான் பழக்கம். அதை திடீரெண்டு நிப்பாட்ட ஏலாது.

ஆனா ராசீவ் விசயத்தில எங்கட ஆக்களுக்காக மரணதண்டனை ஒழிப்புக் கோசம் போடுறதையும் இதுகளையும் சேத்து ஆராவது கேள்விகேட்டா,,,

மவனே உங்களுக்குத்தான் முதற்சூடு. கவனம்.

சரியாத்தான் கஸ்ரப்படுகிறீங்கள்.... ! அது சரி..! அரைச்ச மாவை எவ்வளவுகாலம் அரைப்பீங்கள்... மாவை மாத்தும் ஓய்... :wink:

Link to comment
Share on other sites

சரியாத்தான் கஸ்ரப்படுகிறீங்கள்.... ! அது சரி..! அரைச்ச மாவை எவ்வளவுகாலம் அரைப்பீங்கள்... மாவை மாத்தும் ஓய்...

மாத்த மாட்டினம் மா புளிக்கும் வரையாம் :P :P

எப்பவும் இரண்டு அர்த்ததில தான் பேசிவினம் :P :P

Link to comment
Share on other sites

மாத்த மாட்டினம்  மா புளிக்கும் வரையாம் :P  :P  

எப்பவும் இரண்டு அர்த்ததில தான் பேசிவினம் :P  :P

அந்தக்கதையைச் சிங்கப்பூரில சொல்லவேணும்... அவை சொல்லுவினம் நல்லபதில்.... எப்படி அந்த நாட்டை இவ்வளவு கட்க்கோப்பாக வைத்திருக்கினம் எண்று...! :wink:

Link to comment
Share on other sites

குருவிகள் சொன்னது:

"நல்லவன்.. இந்திய இராணுவத்தால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழரைப் பொறுத்த வரை ராஜீவ் ஒரு மரண தண்டனைக் கைதிதான்.. அவர் ஈழத்தில் இந்திய இராணுவத்தை ஏவிக் கொன்ற 9000 பொதுமக்களும் என்ன குற்றவாளிகளா..???! அதுக்கு என்ன தண்டனை..! மிலோசவிச் போல சதாம் போல ஏன் ராஜீவுக்கு தண்டனை கொடுக்கல்ல உலகம்..??! அதைச் செய்திருந்தா...சில சம்பவங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும்..! "

அருமையான கேள்வி குருவிகள்- இதுக்கு பதில் சொல்ல -அவர்களுக்கு உள்ள ஒரேவழி- வழமைபோல சம்பந்தம் இல்லாமல் ஏதும் பேசுவதுதான்! 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏய். ஆரது மரணதண்டனையை நிப்பாட்டச் சொல்லுறது?

சுட்டுச் சுட்டுப் பழகிப்போன எங்கட கையள என்ன பூப்பறிக்கச் சொல்லிறியளோ?  

"சூடு தானண்ணை சுரணை கொண்டுவரும்." (இந்தப் பஞ்ச் வசனத்தை வேற ஒருத்தரும் பாவிக்கக்கூடாது.)

மரணதண்டனை ஒழிப்புக் கதையெல்லாம் சபைக்குதவாது. எதுக்கெடுத்தாலும் சுட்டுத்தான் பழக்கம். அதை திடீரெண்டு நிப்பாட்ட ஏலாது.

ஆனா ராசீவ் விசயத்தில எங்கட ஆக்களுக்காக மரணதண்டனை ஒழிப்புக் கோசம் போடுறதையும் இதுகளையும் சேத்து ஆராவது கேள்விகேட்டா,,,

மவனே உங்களுக்குத்தான் முதற்சூடு. கவனம்.

ஓமோம் நல்லவன். ஆனால் என்னுமொரு பழக்கத்தையும் விட்டுவிட்டீர்களே எங்கள் வீட்டு ஆக்கள் செத்தால் எமக்கு கண்ணீர் வராது என்ற விடயத்தை.

மற்றது இதுக்குள்ள ஏன் சம்பந்தமில்லாமல் கதைக்கின்றீர்கள். அது தான் பழக்காமாகப் போச்சோ!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம் இதுவும் நியாயம் தானே..! பெண் என்பதற்காக மன்னிப்பது பாவம் பார்ப்பது எமது சமூக வழமை...அதை தற்போது பெண்கள் தவறாக பாவிக்க முற்பட அனுமதிக்க கூடாது. சுதந்திரம் எல்லா மனிதருக்கும் உண்டு. பெண்கள் சுதந்திரம் என்ற போர்வையில் ஆண்களோடு இணைந்து அவர்களுக்கு இணையாக ஒழுக்கத்தை இழக்கக் கூடாது. அப்படி செய்தால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வழங்கப்படும் தண்டனை அவர்களின் குற்றங்கள் தொடர்பில் நோக்கப்படும் நோக்கு ஒரே இயல்பினதாக இருக்க வேண்டும். இருப்பினும் எந்த மனிதனும் கெட்டவனல்ல. சந்தர்ப்பம் சூழ்நிலை அவனைக் கெட்டவனாக்கிறது.தப்புக்கு தூண்டுகிறது. எனவே எல்லோருக்கும் போதிய அளவு திருந்த வழிகாட்டலும் சந்தர்ப்பமும் அளிக்க வேண்டும். தண்டனைகளை நிறை வேற்ற முன் அவை பல தடவை பரிசீலிக்கப்படவும் வேண்டும். எந்த மனிதனின் வாழ்வுரிமையையும் நினைத்த மாதிரிக்குப் பறிக்க முடியாது. அவனால் பலரின் வாழ்வுரிமை சமூகத்தின் ஒழுக்கம் பாதிக்கப்படும் என்றால் குற்றத்துக்கு தண்டனை வழங்கத்தான் வேண்டும்..அவன் திருந்தாத பட்சத்தில்..!   :idea:

என்ன இது பெண்கள் மட்டும் ஒழுக்கத்தை இழக்க கூடாது என்ற மாதிரிக் கதைக்கின்றீர்கள். யார் செய்தாலும் குற்றவாளி தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே றோட்டில் நின்று பெண்களைக் கேலி செய்வதோ, அல்லது உடலை வர்ணனை செய்வது எல்லாம் ஆண்களுக்கு வழங்கப்பட்ட சம உரிமைகள் என்றும் சொல்லுங்கோ! அப்ப தான் ஜனநாயகத்தை காப்பாற்றிய மாதிரி இருக்கும்.

Link to comment
Share on other sites

ஐயோ அப்படி அர்த்தத்தில சொல்லேல்ல.. (ஒழுக்கம் எல்லோருக்கும் பொது..கற்புக் கூட ஒரு வாழ்வியல் ஒழுக்கம் தான்..என்பது எங்கள் நோக்கு..!) பெண்களும் ஆண்களுக்கு இணையா ஒழுக்கத்தை இழக்க முற்பட்டால்..ஆண்களைப் போலவே தண்டனையையும் செய்த குற்றத்துக்கான நோக்கலையும் சந்திக்க வேண்டும் என்றுதான் சொல்லிருக்கம்..! :P :idea:

Link to comment
Share on other sites

பெண்களும் ஆண்களுக்கு இணையா ஒழுக்கத்தை இழக்க முற்பட்டால்..ஆண்களைப் போலவே தண்டனையையும் செய்த குற்றத்துக்கான நோக்கலையும் சந்திக்க வேண்டும்

இது நடைமுறைக்கு சாத்தியமானதா..........? சமுதாயத்தால் பெண்கள் இன்னும் பரிதாபத்துக்குரியவர்களாகவு

Link to comment
Share on other sites

இது நடைமுறைக்கு சாத்தியமானதா..........? சமுதாயத்தால் பெண்கள் இன்னும் பரிதாபத்துக்குரியவர்களாகவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது நடைமுறைக்கு சாத்தியமானதா..........? சமுதாயத்தால் பெண்கள் இன்னும் பரிதாபத்துக்குரியவர்களாகவு

Link to comment
Share on other sites

மேற்கோள்:

ஏன் முகத்தார். ஆண்கள் தப்புச் செய்தால் வயசுக் கோளாறு என்றும், பெண்கள் தப்புச் செய்தால் பிரச்சனையாகக் கிளப்புவதையும் பார்க்கின்றோமே.

இதில் ஆண்களைக் குற்றவாளியாக்க சமுதாயம் மறுப்பதேன்? அவர்களைக் குற்றவாளியாகக் கணி;த்தாக வேண்டும்.

எல்லா உணர்வுகளும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமனாகதான் இருக்கு. ஆனால்- கலாச்சாரம் என்ற கட்டுப்பாட்டின் மேலுள்ள போர்வையின் நுனியை ஆண் எப்போதும் தன் பிடியிலேயே வைச்சுக்கொண்டு எல்லாம் செய்கிறான்.

எக்குத்தப்பா மாட்டுப்படவேண்டிவந்தால்-

இழுத்து தன்னை போர்த்திக்கொண்டு சமூகத்தின் பார்வயிலிருந்து ஒளிந்து கொள்கிறான் -துணைபோன பெண்ணை மட்டும் அம்போன்னு நடுத்தெருவில் விட்டு-சமூகத்தின் வசைபாடலுக்கு உள்ளாக்கி-தானும் அவர்களுடன் சேர்ந்து அவளை திட்டிதீர்த்துவிடுகிறான் -!

இதை சுருக்கமா யோசிச்சா-ஆணாதிக்கம்-பெண்ணடிமைத்தனம்!

இந்த இடத்தில் கொஞ்ச நாளைக்கு முன் பரபரப்பா விவாதிக்கப்பட்ட - குஷ்புவின் கருத்துதான் ஞாபகத்துக்கு வருகிறது! -மாற்றத்துக்கு இன்னும் உட்படாத எங்கட வாழ்வியல் முறைக்கு- குஷ்புவின் கருத்து-சமூகசீர்கேட்டை ஊக்குவிக்கும்தான்.... - என் நோக்கம் -அந்த கருத்துக்கு வக்காலத்து வாங்க வருவதில்லை-!

காதலால்- தன்னிலை மறந்து -உடற்சேர்க்கையில் ஈடுபடுபவர்களை தடுக்க என்ன சட்டமா போடமுடியும்-?ஆனால்- அந்த அவசரங்களின் பின்விளைவுகளால்-சமூகத்தில் அவமானங்களை எதிர்கொண்டு-இணையதளங்கள் வரை இப்பிடி விமர்சனபொருளாய் ஆகிவிடும் பெண்களுக்கு- குஷ்புவின் கருத்தில் ஏதோ ஒரு செய்தி இருப்பதாகவே உணர்கிறேன் -!

இதன்மூலம்-தப்புக்கு வழிசொல்லுறன் எண்டு அர்த்தம் இல்ல-தப்பு செய்தே ஆவேன் என்று அடம்பிடிப்பவர்கள்-ஆககுறைந்தது-முன்னெச்சரிக்கையாக ஆவது இருக்கலாம்-! :roll: 8)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.