Jump to content

தயிர் என்ற அருமருந்து


Recommended Posts

தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும்இ புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. கால்சியமும்இ ரிபோஃப்ளேவின் என்ற வைட்டமின் 'பி'யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது. தயிரில் உள்ள புரோட்டீன்இ பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.

பாலை உட்கொண்ட ஒருமணி நேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் அதே நேரத்தில் ஜீரணமாகி விடுகிறது.

பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமியான பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. மேலும் ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியவை உருவாக்குகிறது.

இயற்கையிலேயே ஒருவர் அழகாக இருக்க தயிரைத் தவிர சிறந்த மருந்து வேறெதுவும் இல்லை.

சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும்இ தோல் பகுதிகளையும் தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது.

தயிரில் இருக்கும் பாக்டீரியாஇ தோலை மிருதுவாகவும்இ பளபளப்பாகவும் மெருகு ஏற்ற அருமையான ஒரு மருந்தாகும்.

தயிர் தோலை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது. பழச்சாறு அதற்குத் தேவையான வைட்டமின் 'சி'யை அளிக்கிறது.

மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர்தான் சிறந்த மருந்து. உணவை ஜீரணிக்க தயிர் உதவுவதோடு மட்டுமல்லாமல் வயிற்றின் வாயுத்தொல்லையிலிருந்தும் விடுவிக்கிறது.

ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.

தயிரை நாம் சரியாக உபயோகித்தால் நாளடைவில் எதிர்ப்புச் சக்தி குறைந்துஇ உடம்பில் பரவும் ஒரு விஷத்தன்மையால் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதைக் கூட தடுத்துவிட முடியும் என்று ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

மஞ்சள் காமாலையால் சிலர் 'கோமா'வில் வீழ்ந்து விடும் ஆபத்து கூட இருக்கிறது. காரணம்இ அதிகமாக சுரக்கும் அமோனியா தான். இதைக் கூட தயிரின் உபயோகம் சரி செய்து விடும்.

மஞ்சள் காமலையின் போது தயிரிலோஇ மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.

சில சமயம் மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். தயிரைக் கொண்டும்இ எலுமிச்சை சாறு கொண்டும் இதை எளிதில் குணப்படுத்தலாம்.

சொறி மற்றும் சில தோல் வியாதிகளுக்கு மோர் ஒரு சிறந்த நோய் தீர்க்கும் மருந்தாகும். தோலின் பாதிக்கப்பட்ட பகுதியில் மோரில் நனைத்த துணி ஒன்றை வைத்து நன்றாக கட்ட வேண்டும். தொடர்ந்தோ அல்லது இரவில் மட்டுமோ இந்தக் கட்டுகளை போட்டுக் கொள்ளலாம்.

கட்டை அவிழ்த்தபிறகு தோலை நன்றாக கழுவிவிட வேண்டும். தோல் வீக்கத்திற்கு இது போன்ற கட்டுகள் அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.

இந்தியாவில் உபயோகிக்கப்படும் பால் அளவில் 50 சதவீதம் தயிராக மாற்றப்படுகிறது. தயிரின் பல்வேறு உபயோகங்கள் நம் உணவுப் பழக்க வழக்கங்களில் அதை ஒரு தவிர்க்கப்பட முடியாத உணவுப் பொருளாகச் செய்துவிட்டது.

தயிரை ஏதோ ஒரு வடிவத்தில் நாம் உபயோகிப்போம். இந்த 'அருமருந்தின்' அதிசய குணங்களால் நாம் ஆரோக்கியம் காப்போம்.

Link to comment
Share on other sites

ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.

அப்பிடியே வைச்ச உடன போய் படுக்கணுமா :roll:

Link to comment
Share on other sites

அப்பிடியே வைச்ச உடன போய் படுக்கணுமா :roll:

அட என்ன அறிவுக்கொளுந்து :evil: :P :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள் ஸ்ராவிஜே.. தயிரில் இவ்வளவு இருக்கு என்று தெரியாமல் போச்சே..

Link to comment
Share on other sites

நன்றிகள் ஸ்ராவிஜே.. தயிரில் இவ்வளவு இருக்கு என்று தெரியாமல் போச்சே..

தெரிந்திருந்தால் வேண்டி தலையில் வைத்திருப்பீர்களோ?

நன்றி தகவல்களுக்கு.

Link to comment
Share on other sites

அட என்ன அறிவுக்கொளுந்து :evil: :P :wink:

அட தெரியாத விசயங்கள கேட்டா இப்படிதான் சொல்லித்தருவீங்களா?! :roll: :roll: :evil: :evil:

Link to comment
Share on other sites

அட தெரியாத விசயங்கள கேட்டா இப்படிதான் சொல்லித்தருவீங்களா?! :roll: :roll: :evil: :evil:

இப்ப உமக்கு என்ன தெரியாது? :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

அடடா இனி எல்லோரும் தயிர் சாதம், தயிர்வடை, மோர் குழம்பு, புருட் ஜோக்கட் என்று சாப்பிடுங்கள்.

actimel_varieties_visu9.jpg

காலையில் இந்த யோர்கட் பானத்தை அருந்தினால் உடலுக்கு உற்சாகமும் அவசியமான மூலப்பொருட்களும் கிடைக்குமாம்.

Link to comment
Share on other sites

ஆகா..தயிரில் இவ்ளோ இருக்கா..நன்றி ஸ்டார்விஜய்

அடடா இனி எல்லோரும் தயிர் சாதம், தயிர்வடை, மோர் குழம்பு, புருட் ஜோக்கட் என்று சாப்பிடுங்கள்.

actimel_varieties_visu9.jpg

காலையில் இந்த யோர்கட் பானத்தை அருந்தினால் உடலுக்கு உற்சாகமும் அவசியமான மூலப்பொருட்களும் கிடைக்குமாம்.

ஆகா..இது நம்ம நாட்டிலையும் இருக்கு. இப்போதேல எல்லாரும் இதுவும் கையுமாகத்தான் திரிகிறார்கள்

Link to comment
Share on other sites

தயிரே தெரியாதாம்? :roll: :roll:

சரி..தயிருக்கு அருவியை தெரியுமாமா? :wink: அதை முதல்ல கேட்டு தெரிஞ்சுப்போம்..அப்புறமா விசயத்துக்கு வருவோம்..என்ன ரமாக்கா..அன்ட் ரசி அக்கா.. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடா இனி எல்லோரும் தயிர் சாதம், தயிர்வடை, மோர் குழம்பு, புருட் ஜோக்கட் என்று சாப்பிடுங்கள்.

actimel_varieties_visu9.jpg

காலையில் இந்த யோர்கட் பானத்தை அருந்தினால் உடலுக்கு உற்சாகமும் அவசியமான மூலப்பொருட்களும் கிடைக்குமாம்.

யாழ்களத்தில் ஆதாயம் இன்றி விளம்பரப்படுத்துவதைக் கண்டிக்கின்றேன். :evil: :evil:

Link to comment
Share on other sites

உண்மையாகத்தான் சொல்கிறீர்களா? இல்லை விளையாட்டுக்கா? :roll: எப்படி என்றாலும் .இது ஒரு உதாரணமாக, மேலே சொன்ன டிப்ஸோடு சேர்த்து கொள்ள ஒரு டிப்சாகவே சொல்லப்பட்டது என்று நான் நினைக்கிறேன். :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாகத்தான் சொல்கிறீர்களா? இல்லை விளையாட்டுக்கா? :roll: எப்படி என்றாலும் .இது ஒரு உதாரணமாக சொல்லப்பட்டது என்று தான் நான் நினைக்கிறேன். :roll:

என்ன உண்மை. என்ன விளையாட்டு? நான் என்ன காமடி நடிகரா? சொல்வதில் ஜோக் அடிப்பதற்கு? :evil: :evil:

இப்படி தயிர் சட்டிக்கெல்லாம் விளம்பரம் கொடுத்தால், நானும் பிறகு எம் சங்கத்துக்கு விளம்பரம் கொடுக்க வேண்டி வரும். :wink: :P

Link to comment
Share on other sites

என்ன உண்மை. என்ன விளையாட்டு? நான் என்ன காமடி நடிகரா? சொல்வதில் ஜோக் அடிப்பதற்கு? :evil: :evil:

இப்படி தயிர் சட்டிக்கெல்லாம் விளம்பரம் கொடுத்தால், நானும் பிறகு எம் சங்கத்துக்கு விளம்பரம் கொடுக்க வேண்டி வரும். :wink: :P

நீங்கள் காமெடி நடிகன் என்று நான் சொல்லவில்லை..கோவமாக போட்டிருந்தீர்கள்..ஆகவே விளையாட்டுக்கு கோவமாக போட்டிருக்கிறீர்களா..இல்லை உண்மையாவே தான் கோவமா என்பதை தான் அப்படி கேட்டேன் :roll: :roll: :?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் காமெடி நடிகன் என்று நான் சொல்லவில்லை..கோவமாக போட்டிருந்தீர்கள்..ஆகவே விளையாட்டுக்கு கோவமாக போட்டிருக்கிறீர்களா..இல்லை உண்மையாவே தான் கோவமா என்பதை தான் அப்படி கேட்டேன் :roll: :roll: :?

நான் சும்மா ஜோக்கிற்கு தான். அப்படி தடை ஒன்றும் களத்தில் இருப்பதாகத் தெரியாது. ஆனால் நான் எழுதியது கோபமாகப் போட்டது போலவா தெரிந்தது? :wink: :P

Link to comment
Share on other sites

நான் சும்மா ஜோக்கிற்கு தான். அப்படி தடை ஒன்றும் களத்தில் இருப்பதாகத் தெரியாது. ஆனால் நான் எழுதியது கோபமாகப் போட்டது போலவா தெரிந்தது?

தம்பி இந்த பெம்பிளைகளே இப்பிடித்தான் விடுங்க.......தூயவன்..........விடுங்க...

...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி இந்த பெம்பிளைகளே இப்பிடித்தான் விடுங்க.......தூயவன்..........விடுங்க...

...

எப்ப முகத்தார் நான் உங்களைப் பிடிச்சு கொண்டு நிண்டனான். இப்படி விடுங்கோ என்று கெஞ்சுகின்றீர்கள்? :wink:

Link to comment
Share on other sites

எப்ப முகத்தார் நான் உங்களைப் பிடிச்சு கொண்டு நிண்டனான். இப்படி விடுங்கோ என்று கெஞ்சுகின்றீர்கள்? :wink:

அட....கொக்கா மக்கா ..ஏதோ தனிய நிக்கிறான் பெடியன் எண்டு சொல்லப் போனால் என்னையே பிடிச்ச தள்ளி விட்டுடுவான் போல கிடக்கு..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட....கொக்கா மக்கா ..ஏதோ தனிய நிக்கிறான் பெடியன் எண்டு சொல்லப் போனால் என்னையே பிடிச்ச தள்ளி விட்டுடுவான் போல கிடக்கு..........

நான் ஒருத்தன் ஆயிரம் யானைகளுக்கு சமன் என்று எல்லாம் கதாநாயகர்கள் மாதிரி அறிக்கை விட்டாலும் முகத்தார் போன்றவர்களின் பக்கத் துணையும், அனுவபமும் தான் இங்வளவு காலமும் களத்தில் அரட்டை... சா. கருத்தெழுத முடியுது. :wink: :P

Link to comment
Share on other sites

சரி..தயிருக்கு அருவியை தெரியுமாமா? :wink: அதை முதல்ல கேட்டு தெரிஞ்சுப்போம்..அப்புறமா விசயத்துக்கு வருவோம்..என்ன ரமாக்கா..அன்ட் ரசி அக்கா.. :P

:roll: :roll: :roll:

என்ன கதைக்கிறீங்க இங்க

:roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.