Jump to content

அப்பம் தயாரிக்கும் முறை தேவைபடுகிறது


Recommended Posts

அப்பம் தயாரிக்கும் முறை தேவைபடுகிறது. நீங்கள் செய்யும் முறையை தந்து உதவ முடியுமா? ? :lol:

Link to comment
Share on other sites

சட்டியை அடுப்பில் வைத்து நெருப்பை மூட்டி, மாவை ஊத்தினால் அவிந்து வர சரியாக வரும்....!

பாத்துங்கோ மாவைச்சட்டீக்க ஊத்துங்கோ..! :P :P :P

Link to comment
Share on other sites

இப்பதான் உடனடி அப்பமா இருக்கே தூயா அந்த பைக்கட்டிலேயே போட்டிருக்காங்க செய்முறை. அத பார்த்து அப்படியே செய்யவேண்டியதுதான்.:wink::lol:

Link to comment
Share on other sites

ஆப்பம்

……ரெண்டு கப் பச்சாpசி, ஒரு கைப்பிடி உளுந்து, ஒரு டீஸ்பூன் வெந்தயம் _ன்றையும் ஒன்றhக ஒரு மணி நேரம் ஊற வைக் கவும். பிறகு கழுவி விட்டு, ஒரு _டி தேங்காய் துருவலையும் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றhக அரைக்கவும். உப்பு சேர்த்துக் கரைத்து, எட்டு மணி நேரம் புளிக்க விடவும். பிறகு கால் டீஸ்பூன் ஆப்ப சோடா சேர்த்துக் கலந்து ஆப்ப சட்டியில் ஆப்பங்களாக ஊற்றவும். விருப்பப் பட்டால், தேங்காயைத் துருவிப் பால் எடுத்து, தண்ணீர் சேர்க்காமல் வைத்துக் கொண்டு, ஆப்பம் வெந்து கொண்டிருக்கும் போது சிறிய கரண்டி தேங்காய் பாலை நடுவில் விட்டு வேக வைத்து எடுக்கவு :P :P :P

ம்ம்ம்ம் என்க்கு 2 முட்டை அப்பம் அணுப்பணும் சரியா?

Link to comment
Share on other sites

சிங்களவங்கள் தான் இங்கை அப்பம் சுடுரதில கெட்டிக்காரங்கள். ஒரே நேரத்தில 15 அப்பம் சுடுவாங்கள். அவங்களை கேட்டா சொல்லித்தருவாங்கள். முடிஞ்சா நான் கேட்டு எழுதுறன்.

Link to comment
Share on other sites

அப்ப சோடாவை கடைசியாகவா கலப்பார்கள்???

ஆதீபன் உங்களுடைய செய்முறைக்காக காத்து கொண்டிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

அப்ப சோடாவை கடைசியாகவா கலப்பார்கள்???.

பரவாயில்லை முதலில் கலக்க மறந்திட்டீயள் எண்டால் அப்பத்தை சாப்பிட்ட பிறகு ஒரு கிளாசிலை அப்ப சோடாவை கலக்கி குடிச்சுவிடுங்கோ பிரச்சனையில்லை...............

Link to comment
Share on other sites

அப்ப சோடாவை கடைசியாகவா கலப்பார்கள்???

ஆதீபன் உங்களுடைய செய்முறைக்காக காத்து கொண்டிருக்கிறேன்.

அப்ப சோடாவை கடைசில கலந்தால்- அப்பம் வருதோ இல்லையோ- அல்சர் வராதா? :roll:

Link to comment
Share on other sites

களத்தில நிறைய பேர் என்னக்கு அல்சர் வர வைக்க பார்க்கினம்..நான் அண்ணாச்சிட்ட போய் சொல்ல போறன்..

Link to comment
Share on other sites

தூயா இது நம்மக்கு தெரிந்த முறை

பச்சை அரிசி- 2 கப் (உங்க அளவுக்கு எடுங்க)

தேங்காய்,

உப்பு

(தேவைப்பட்டால் ரவை)

பச்சை அரிசியை ஊற வைத்து அரைத்து/இடித்து மா வை எடுங்கள். கொஞ்சம் பெரிய கண்ணுடைய அரிதட்டு பாவிப்பது நல்லது.

அதன் போது வரும் சிறிய குறுணலை புக்கை கஞ்சி காய்ச்ச பாவிக்கலாம். அது முடியா விட்டால்

ரவை ஒரு 100 கிராம் எடுத்து சிறிதளவு கொதிக்கும் நீரில் கலந்து தடிப்பான கூழ் மாதிர் காய்ச்சி கொள்ளுங்கள்.

அரித்து எடுத்த மாவையும், புக்கை கஞ்சிடையும் சேர்த்து தடிப்பாக குழைத்து 8 மணி நேரம் புளிக்க வையுங்கள்

மாவுக்கு போதுமான நீர், உப்பு , அப்ப சோடா சேர்த்து கரைத்துகொள்ளுங்கள். ( முதல் பழகும் போது -நீர் சேர்க்கும் அளவை கண்டு பிடிக்க, சிறிது நீர் சேர்த்து கலந்த பின் சூடான சட்டியில் மாவை வார்த்து பார்க்கலாம். அது சீராக இலகுவாக பரவும் நிலை வரும் வரை நீர் சேர்த்து கலக்குங்கள்.)

பால் அப்பம் தேவை என்றால்

தேங்காய் துருவி அதிகம் நீர்விடாது நல்ல தடிப்பான பாலாக பிழிந்து எடுத்து கொள்ளுங்கள்.

பதமாக கரைத்த மாவை சூடானசட்டியில் வார்த்து , நடுவில் சிறிதளவு பாலை சேர்த்து மூடி வேக வைத்து இறக்கினால் அப்பம் தயார்.

குறிப்பு

பால் விட்டு அப்பம் சாப்பிட ஒத்து வராதவர்கள் நீருக்கு பதிலாக பாலை விட்டு மாவை கரைத்து பாலற்ற அப்பம் சுடலாம்.

பாலுக்கு பதிலாக முட்டை விட்டால் முட்டை அப்பம்

போதுமா தூயா.................. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முக்கியமானதொன்று அப்பச்சோடவுக்குப்பதில் கள்ளு விட்டால் நல்லாயிருக்கும். :!:

Link to comment
Share on other sites

முக்கியமானதொன்று அப்பச்சோடவுக்குப்பதில் கள்ளு விட்டால் நல்லாயிருக்கும். :!:

ஊரிலை சரிவரும், இங்க என்ன செய்ய, அதான் தூயா சொல்லி இருக்கிறா பட்டர்மில்க் விடலாமாம், விட்டு செய்து பாத்திட்டு ஆரும் சொல்லுங்க.

Link to comment
Share on other sites

கள்ளு இங்கு போத்தலில் வருகின்றதே அதை வாங்கி விட வேண்டியது தானே இளைய தளபதி :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளு இங்கு போத்தலில் வருகின்றதே அதை வாங்கி விட வேண்டியது தானே இளைய தளபதி :D

லண்டனில் இப்போது விடிந்து கூட இருக்காது. அப்படியிருந்தும் கள்ளு நினைப்போடு தான் இருக்கின்றியளோ? :oops:

Link to comment
Share on other sites

ஏதோ நாளை ஞாயிறு லீவு லேட்டா எழும்பலாம் தானே அதற்குள் யாழில் பார்க்காத தலைப்புக்களை பார்க்கலாம் என்றால் நம்ம இளைய தளபதி அப்பத்துக்கு விட கள்ளு இல்லையென்று கவலைப்பட்டார் அது தான் சொன்னன்.

Link to comment
Share on other sites

கள்ளு இங்கு போத்தலில் வருகின்றதே அதை வாங்கி விட வேண்டியது தானே இளைய தளபதி :D

மதன் கள்ளு விடுறது புளிக்க/நொதித்தல் தாக்கம் நிகழ. அதுக்கு கொஞ்சம் நுண்ணங்கியள் தேவை.போத்தலில வாற கள்ளிலை நுண்ணங்கிகளை எல்லம் கிருமிநீக்கம்/பாஸ்ராக்கம் செய்து அவற்றின் தொழிற்பாடு இல்லாது இருக்கும். அதை விட்டா அப்ப மா புளிக்காது :P .

ஆமா அதுகேன் இளைய தளபதிய கூப்பிடுறீங்க, அந்தாளுக்கு அப்பம் எண்டா என்னெண்டு தெரியுமோ தெரியா :? சங்கீதா செய்து கொடுத்தா தான் உண்டு

Link to comment
Share on other sites

500 கிராம் வெள்ளைப்பச்சை அரிசிமாவுடன் இளநீர்சேர்க்கவும் அத்துடன் அரை ரிஸ்புூன் ஈஸ்ட்(சிலர் ஈஸ்ட்டுக்கு பதிலாக பாதிகப் பியர் சேர்ப்பதும் உண்டு. ஆனால் எல்லோரும் விரும்பமாட்டார்கள்) சேர்த்து நன்றாக கையால் பிசைந்து சேர்க்கவும். ஓரளவு களிப்பதத்திலே மண் சட்டி அல்லது சில்வர் சட்டியில் வைத்து ஈரதுணியால் மூடிக்கட்டவும். 12 மணிநேரம் கழித்து தேங்காய்ப்பால்(முதல்ப்பால்) சேர்த்து கலக்கவும். அதன்பன் கல்லுச்சட்டியை(சில்வர்சட்டி

Link to comment
Share on other sites

ஆகா..அப்பம் செய்யும் முறை தாராளமா தந்திருக்காங்க.. தூயா..சோ, செய்து பாருங்கள்..சாப்பிடும் போது கொஞ்சமாக சாப்பிடுங்கள்..எரிச்சலில் சொல்லவில்லை.. தேங்காய் பாலில் செய்வதால்..நிறைய சாப்பிட அப்பச்சட்டி முதலில சுழலுலாப்போல இருக்கும்..அப்புறம் அப்பம் சுழலும்..அப்பிடியே தலையை சுத்தும். உண்மையாகவே எனக்கு சுத்தி இருக்கு..சோ, அடுத்த நாளைக்கும் வைத்து சாப்பிடுங்கள்..அதுவும் ருசியாக இருக்கும்.. :P

Link to comment
Share on other sites

தோசை சுடும் போது அல்லது அப்பம் சுடும் போது அவை சட்டியில் ஒட்டாமலிருக்க உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி அதன் பாதித்துண்டின் வெளிப்பக்கத்தில் முள்ளுக்கரண்டியை குத்தி கைபிடியாக வைத்துக் கொண்டு உள் பகுதியால் எண்ணெய்யை தொட்டு சட்டியில் தடவி விட்டு இப்போது சுட்டுப் பாருங்கள் சட்டியில் ஒட்டவே ஒட்டாது.

Link to comment
Share on other sites

ஆகா ரொம்ப நன்றி வசம்பண்ணா..எங்க வீட்டில அடிக்கடி ஒட்டி பிரச்சனை குடுக்குறது. இப்படியே செய்து பார்ப்போம்.. :lol:

Link to comment
Share on other sites

மதன் கள்ளு விடுறது புளிக்க/நொதித்தல் தாக்கம் நிகழ. அதுக்கு கொஞ்சம் நுண்ணங்கியள் தேவை.போத்தலில வாற கள்ளிலை நுண்ணங்கிகளை எல்லம் கிருமிநீக்கம்/பாஸ்ராக்கம் செய்து அவற்றின் தொழிற்பாடு இல்லாது இருக்கும். அதை விட்டா அப்ப மா புளிக்காது :P .

ஆமா அதுகேன் இளைய தளபதிய கூப்பிடுறீங்க, அந்தாளுக்கு அப்பம் எண்டா என்னெண்டு தெரியுமோ தெரியா :? சங்கீதா செய்து கொடுத்தா தான் உண்டு

ஏன் மதுவம் ( மா நொதித்தலில் -புளிக்க வைக்கிறதில் பங்கேற்கும் ஒரு வகை பங்கசு நுண்ணங்கி..!) காற்றில் இருக்காதோ... கள்ளுக்க எப்படி மதுவம் வந்தது..அது காற்றில் உள்ள பங்கசும் தான்...காற்றில இருந்துதான் வந்தது. எனவே அப்பம் மாவை தோசை மாவை காற்றிற்கு எக்ஸ்போஸ் பண்ணினாலும் புளிக்குங்கோ..! பட் ரைம் எடுக்குங்கோ...அதிலும் மதுவம் செறிவாகப்பட்ட மாக்கட்டில விக்கிற "ஈஸ்ட்" போடுங்கோ...கெதிசா புளிச்சிடும்..கள்ளுத் தேவையில்லைங்கோ..! :wink: :lol: :idea:

Link to comment
Share on other sites

அப்பம் தயாரிக்கும் முறை தேவைபடுகிறது. நீங்கள் செய்யும் முறையை தந்து உதவ முடியுமா? ? :lol:

பிள்ளை தமிழ் கடையில பக்கற் வருது வாங்கும் ஒரு கத்தரிக்கோலை எடும் பக்கற் இன் நுனியில லைட்டா ஒரு வெட்டு அப்பிடியே ஒரு சட்டியில போடும் ம் அப்புறம் பக்கற் ஐ பின் பக்கமா திருப்பும் எல்லாம் விலாவாரியா இருக்கும்

வாசியும் செய்யும் பரிமாறும்

உத விட்டுட்டு .....

:P :P :P :P :P :P :P :P

8) 8) 8) 8)

Link to comment
Share on other sites

ஆகா ரொம்ப நன்றி வசம்பண்ணா..எங்க வீட்டில அடிக்கடி ஒட்டி பிரச்சனை குடுக்குறது. இப்படியே செய்து பார்ப்போம்.. :lol:

ஏன் பிள்ளை வீட்டில ஆதி காலத்து சட்டியா இருக்கு :oops: :oops:

இப்பத்தானே ஓட்டாமல் இருக்க சட்டி வருது

:wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

ஏன் பிள்ளை வீட்டில ஆதி காலத்து சட்டியா இருக்கு :oops: :oops:

இப்பத்தானே ஓட்டாமல் இருக்க சட்டி வருது

:wink: :wink: :wink:

இருக்கும் சிறி லங்கா ல இருந்து வரும் போது சட்டியையும் கொண்டு வந்தினமோ? :P :P :P

Link to comment
Share on other sites

அப்பம் தயாரிக்கும் முறை

*********************** - தலைப்பை திசைமாற்றும் கருத்து நீக்கப்படுகிறது - யாழினி

அப்பம் எல்லாம் செய்து சாப்பிட்டும் இருப்பினம் இனி சும்மா நகைசுவையாய் பேசினா தப்பா? :cry:

வாங்கோ யாழ்ப்பாணம் பக்கம் வருவிங்கள் தானே? அப்போ ஈ.பி.டி.பி ட சொல்லி கொடுத்து விடுறன் :twisted:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.