Jump to content

தமிழர்-முஸ்லிம் நல்லுறவு பேணல் முயற்சிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப் புலிகளுடன் 20 உறுப்பினர்கள் அடங்கிய முஸ்லிம் குழு சந்திப்பு

[சனிக்கிழமை, 28 சனவரி 2006, 21:21 ஈழம்] [ம.சேரமான்]

திருகோணமலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 20 உறுப்பினர்கள் அடங்கிய முஸ்லிம்கள் குழு இன்று சனிக்கிழமை சந்தித்துப் பேசியது.

மூதூரில் விடுதலைப் புலிகளின் அரசியல் செயலகத்தில் போர் நிறுத்த கண்காணிப்புக் குழு முன்னிலையில் இன்று பிற்பகல் இச்சந்திப்பு நடந்தது.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே நல்லுறவை வளர்த்தெடுக்கும் வகையில் இந்தக் கூட்டத்தில் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

மூதூர் பிரதேசத்தில் முஸ்லிம் ஆயுதக் குழுவினரது நடமாட்டம் தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பினர் சுட்டிக்காட்டினர்.

இந்த ஆயுதக் குழுவினரது செயற்பாட்டினால் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையேயான உறவு சீர்குலையும் என்றும் புலிகள் தரப்பு சுட்டிக்காட்டியது.

சிறிலங்கா ஆக்கிரமிப்பு மூதூர் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை இரு தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அரசாங்க ஆக்கிரமிப்புப் பகுதிகளில் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இருதரப்புக் குழுக்கள் அமைக்கவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட சிறப்புத் தளபதி கேணல் சொர்ணம், திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் சி.எழிலன் மற்றும் மூதூர், தோப்பூர், ஜின்னா நகர், ஆசாத் நகர் முஸ்லிம் மதத் தலைவர்களும் பொதுமக்களின் பிரதிநிதிகளும் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.

தகவல் மூலம்-புதினம்.கொம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முஸ்லிம்கள் ஆயுதம் வைத்திருப்பது தமிழ், முஸ்லிம் உறவை பாதிக்கும்! - முஸ்லிம் பிரதிநிதிகளிடம் எழிலன் முறையீடு-

திருமலை முஸ்லிம் இளைஞர்கள் ஊர்காவல் படை என்ற போர்வையில் ஆயுதங்கள் வைத்திருப்பதால் இனமோதல்கள் ஏற்படுவதுடன் அப்பாவித் தமிழ் மக்களும் பலியாகும். சந்தர்ப்பம் ஏற்படுமென திருமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் தெரிவித்தார்.

மூதூர் பகுதி பள்ளி வாயல்களின் தலைவர்களுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்குமிடையி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூன்றரை மாதத்துக்கு பின்னரான முஸ்லிம்கள் - புலிகள் சந்திப்பில் சமூகங்களில் இருந்து முரண்பாட்டாளர்களை புறந்தள்ளுவதாக தீர்மானம்

அம்பாறை மாவட்டத்தில் சுமார் மூன்றரைமாத கால இடைவெளியின் பின்னர் நேற்று தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், முஸ்லிம் பிரதிநிதிகளுக்குமிடையில் முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் அனுசரணையுடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான பாவட்டாவிலுள்ள மாவட்ட அரசியல்துறைப் பணிமனையில் இச்சந்திப்பு இடம் பெற்றது.

இச்சந்திப்பில் விடுதலைப் புலிகளின் சார்பில் அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் ஜெயா, தளபதி ஜனார்த்தனன், மாவட்ட நிருவாகப் பொறுப்பாளர் தொல்காப்பியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முஸ்லிம்கள் சார்பில் அக்கரைப்பற்று பட்டின பள்ளிவாசல் தலைவர் ஏ.ரீ.பாறூக், அக்கரைப்பற்று வர்த்தகர் சங்க முக்கியஸ்த்தர் ஓ.எம்.இஸ் மாயில், சகவாழ்வுமன்ற அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஐ.எம்.இப்றா கீம், முஸ்லிம் சமாதான செயலக தலைவர் யூ.எம்.உவைஸ் மற்றும் முக்கிய பிரமுகர்களான ஏ. எல்.மு கைதீன், எம்.சீ.முகம்மட்ஹாசீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மிக அந்நியோன்னியமாகவும், புரிந்துணர்வுடனும் நடைபெற்ற இச்சந்திப்பு வெற்றிகரமாக இடம் பெற்றதாக இருதரப்பினரும் தெரிவித்தனர்.

இச்சந்திப்பின் இறுதியில் விடுதலைப்புலிகளும், முஸ்லிம் பிரதிநிதிகளும் கூட்டாகவிடுத்த அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் ஒவ்வொரு மாதமும் இருசாராரும் சந்தித்து மக்களின் அன்றாட வாழ்க்கை வசதிகள், பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடி இயல்பு வாழ்க்கையை தொடர்ந்து பேணுவதுடன் தமிழ், முஸ்லிம் உறவுகளைப் பேணிப்பாதுகாப்பது என்றும், தற்போது நிலவும் விவசாயச் செய்கை, மற்றும் வியாபாரத் தற்காலிக தொழில் புரிதல் சம்பந்தமாக இடையூறுகள் அனைத்தும் களையப்பட்டு இன்று முதல் தமிழ், முஸ்லிம் மக்கள் தத்தமது தொழில்களை இயல்பாகச் செய்வதென்றும் முடிவு காணப்பட்டது.

இரு சமூகங்களுக்குமிடையேயிருந்த

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்பாறையில் விடுதலைப் புலிகள்- முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பு

[திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2006, 01:02 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]

அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் பிரதிநிதிகளும், முஸ்லிம் பிரதிநிதிகளும் அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகளின் அரசியல்துறை செயலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பேசினர்.

அதன் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை:

இருசாராரும் இன்று முதல் ஒவ்வொரு மாதமும் சந்தித்து மக்களின் அன்றாட வாழ்க்கை வசதிகள், பிரச்சனைகள் பற்றிக் கலந்துரையாடி இயல்பு வாழ்கையை தொடர்ந்து பேணுவதுடன் தமிழ் - முஸ்லப்ம் உறவுகளை பேணிப் பாதுகாப்பது என்றும்,

தற்போது நிலவும் விவசாயச் செய்கை மற்றும் வியாபார தற்காலிகத் தொழில் புரிதல் சம்பந்தமாக நிலவும் இடையூறுகள் அனைத்தும் களையப்பட்டு இன்று முதல் தமிழ், முஸ்லீம் மக்கள் தத்தமது தொழில்களை இயல்பாக செய்வதென்றும் முடிவு காணப்பட்டது.

இரு சமூகங்களுக்குமிடையிலிருந்த

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் முஸ்லிம் சமரசம்

சுமார் மூன்றரை மாதங்களின் பின்னர் அம்பாறை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், முஸ்லிம் பிரமுகர்களுக்கும் இடையிலான சமரச சந்திப்பு இடம்பெற்றிருக்கின்றது. அம்பாறை மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கையை ஸ்திரப்படுத்தி இரு தரப்பு உறவை வலுவாக்கவும் இந்தச் சந்திப்பில் உறுதி எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றது.

இந்தச் சந்திப்பின் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் முக்கியமான ஒரு விடயம் இடம்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.

""இரு சமூகங்களுக்கும் இடையில் (தமிழர்-முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில்) குறிப்பிட்ட சிலர் முரண்பாட்டாளர்களாகத் தொழில்படுவதை இனங்கண்டு அவர்களை சமூகங்களில் இருந்து புறந்தள்ளும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.''- என்பதும் இந்தச் சந்திப்பில் முடிவு செய்யப்பட்டதாகக் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றத

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.