Jump to content

காதல் அரும்ப தேவை ஜொள்ளா? ஜோக்கா?


Recommended Posts

ஒருவர் மீது காதல் ஏற்படக் காரணம், அவருடைய "ஜொள்' பேச்சா, "ஜோக்' அடிக்கும் போக்கா?

இதுபற்றி அமெரிக்க நிபுணர்கள் குழு ஆராய்ந்து இரு முடிவுகளை கண்டுபிடித்துள்ளது. மசாசூசட்ஸ் வெஸ்ட்பீல்டு ஸ்டேட் கல்லுõரியை சேர்ந்த எரிக் பிரஸ்லர், ஆன்டோரியோவில் உள்ள மெக்மாஸ்டர் ஹாமில்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பால்ஷைன் ஆகிய நிபுணர்கள், இணைந்து வெப்சைட் மூலம் சர்வேயும், நேரடியாக ஆய்வும் நடத்தினர்.

மொத்தம் இரண்டாயிரம் மாணவ, மாணவிகளிடம் இதுதொடர்பாக சர்வே எடுக்கப்பட்டது. அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள் பெரிதாக ஒன்றுமில்லை. "உங்களை ஜோக் மூலம் சிரிக்க வைக்க வேண்டும் என்று உங்கள் நெருக்கமான நண்பரை எதிர்பார்ப்பீர்களா?' என்று மாணவிகளிடம் கேட்கப்பட்டது. பெரும்பாலோர், "ஆம் ' என்றனர்.

அதுபோல, "உங்கள் தோழி ஜோக் அடித்தால் ரசிப்பீர்களா?' என்று கேட்டதற்கு மாணவர்களில் கணிசமான பேர், "அர்த்தமிருந்தால் ரசிப்போம்' என்றனர்.

"ஆண்கள் ஜோக் அடிப்பது தான் தங்களுக்கு பிடிக்கிறது. "ஜொள்' விட்டு பேசுவதில் எந்த விருப்பமும் இல்லை என்றும் மாணவிகள் கூறினர்.

வெப்சைட்டில், சில மாணவர்கள் படங்களை போட்டு, அவர்கள் அடித்த ஜோக்குகளையும் போட்டிருந்தனர். அதை பார்த்து கருத்து சொல்ல மாணவிகள் கேட்கப்பட்டனர். பலரும் "கடி' ஜோக்ஸ் தான் அனுப்பியிருந்தனர். மாணவிகள் பெரும்பாலோர், அவற்றை நிராகரித்தனர்.

"மாணவிகள், தங்கள் ஜோக்குகளுக்கு சிரிக்க வேண்டும் என்று மாணவர்கள் பலரும் நினைக்கின்றனர். ஆனால், தாங்கள் சிரிக்கும் அளவுக்கு புத்திசாலித்தனமாக ஜோக் அடிக்க வேண்டும் என்று மாணவிகள் விரும்புகின்றனர். மாணவர்களை பொறுத்தவரை, தாங்கள் "ஜொள்ளாக' பேசினாலும், ஜோக் என்று சிரிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து அது கிடைக்காததால் பிடிவாதமாகின்றனர்' என்றும் சர்வேயில் தெரியவந்தது.

Thanks:Dinamalar...

Link to comment
Share on other sites

  • Replies 138
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமாக இத் தகவலைப் படிக்க வேண்டியது சுண்டல் தான். ஆள் ஒன்லைனில் நிற்கும் நேரம் கதைத்தால் ஒரிரு பதில் தான் வரும். அப்படி பிசியாம். :wink:

Link to comment
Share on other sites

முக்கியமாக இத் தகவலைப் படிக்க வேண்டியது சுண்டல் தான். ஆள் ஒன்லைனில் நிற்கும் நேரம் கதைத்தால் ஒரிரு பதில் தான் வரும். அப்படி பிசியாம். :wink:

:oops: :oops: :oops:

Link to comment
Share on other sites

காதல் அரும்ப மட்டுமில்ல..நகைப்பு என்ற ஒரு இயல்பு இல்லை என்றால் மனிதனை சகிக்கவே முடியாமல் இருந்திருக்கும்..! தகவலுக்கு நன்றி சுண்டல்..! :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முக்கியமாக இத் தகவலைப் படிக்க வேண்டியது சுண்டல் தான். ஆள் ஒன்லைனில் நிற்கும் நேரம் கதைத்தால் ஒரிரு பதில் தான் வரும். அப்படி பிசியாம். :wink:

அப்படியா சுன்டல்????? :):lol::)

Link to comment
Share on other sites

ஓஒ அதுதான் வடிவேல், விவேக் பின்னால ஐஸ்வர்யாராஜ் முதல் தேனி குஞ்சரம்மா வரை லோ லோ எண்டு திரினமா?

வந்துட்டாங்கள் சொல்ல.... :evil: :evil: :evil: :evil:

சுண்டல் :evil: :evil:

Link to comment
Share on other sites

மேற்கோள்:

"ஆண்கள் ஜோக் அடிப்பது தான் தங்களுக்கு பிடிக்கிறது. "ஜொள்' விட்டு பேசுவதில் எந்த விருப்பமும் இல்லை என்றும் மாணவிகள் கூறினர்."

அது என்னமோ உண்மைதான் சுண்டல்! :wink:

ஜோக் அடிச்சு பேசுறவங்களை- 2 நாள் காணல எண்டாலும்- மனசுக்கு ஏதோ கஸ்டமா இருக்கும்-!

அது ஆணா இருந்தாலும்- பொண்ணா இருந்தாலும்-!

ஜொள்ளு விடுறவங்கள 2 வருஷம் காணாட்டிலும் ஹூ-கெயார் - பொலிசி-தான் இருக்கும்!

சனியன் போய் தொலைஞ்சுது- இம்சை இல்லை என்னுதானே நினைப்பாங்க!

:roll: 8)

Link to comment
Share on other sites

ஓஒ அதுதான் வடிவேல், விவேக் பின்னால ஐஸ்வர்யாராஜ் முதல் தேனி குஞ்சரம்மா வரை லோ லோ எண்டு திரினமா?  

வந்துட்டாங்கள் சொல்ல.... :evil:  :evil:  :evil:  :evil:  

சுண்டல் :evil:  :evil:

:):lol::lol:

Link to comment
Share on other sites

சுண்டல் போற போக்கு சரியில்லை ;)

Link to comment
Share on other sites

எல்லாவற்றுக்கும் முதல்ல..காதலிக்க ஒரு தகுதி வேண்டும்.. :) :P

பெண்கள் பாசையில் தகுதி என்பது நல்லா செலவழிக்க கூடியா ஒரு இழிச்சவாயன் தானே? :P :P :P :P

Link to comment
Share on other sites

பெண்கள் பாசையில் தகுதி என்பது நல்லா செலவழிக்க கூடியா ஒரு இழிச்சவாயன் தானே? :P :P :P :P

நான் நினைக்குறன் வினித் இதுவரைக்கும் ஒரு பெண்ணையும் சந்திக்கவில்லை என்று அதுதான் இப்படி எல்லாம் பேசுறார் :wink: :P :P :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்குறன் வினித் இதுவரைக்கும் ஒரு பெண்ணையும் சந்திக்கவில்லை என்று அதுதான் இப்படி எல்லாம் பேசுறார் :wink: :P :P :evil:

வினித்து உப்படித் தான் கதைப்பார்.

ஆனால் அண்ணாச்சிக்கு கலியாணம் ஆகி குழந்தை கூட உண்டாமே! எல்லாம் பட்சி சொன்னது தான். :wink: :P

Link to comment
Share on other sites

நான் நினைக்குறன் வினித் இதுவரைக்கும் ஒரு பெண்ணையும் சந்திக்கவில்லை என்று அதுதான் இப்படி எல்லாம் பேசுறார்

ஆனால் அண்ணாச்சிக்கு கலியாணம் ஆகி குழந்தை கூட உண்டாமே! எல்லாம் பட்சி சொன்னது தான். :wink: :P

இது என்ன கூத்தப்பு கலியாணமானா.........காதலிக்க கூடாதா?? அதுக்குப்பிறகுதான் நிறைய வந்து மாட்டும்.........உங்களுக்கெல்லாம

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன கூத்தப்பு கலியாணமானா.........காதலிக்க கூடாதா?? அதுக்குப்பிறகுதான் நிறைய வந்து மாட்டும்.........உங்களுக்கெல்லாம

Link to comment
Share on other sites

நான் சொன்னது வினித் ஒரு பெண்ணையும் சந்திக்கவில்லை என்று சொன்னதற்கு தான். மற்றும்படி அவர் எத்தனை பெண்ணைச் சந்தித்து, வாங்கிக் கட்டினால் நான் என்ன செய்வது?

தம்பி வினித்து.........சாச்சுப்புட்டான

Link to comment
Share on other sites

இது என்ன கூத்தப்பு கலியாணமானா.........காதலிக்க கூடாதா?? அதுக்குப்பிறகுதான் நிறைய வந்து மாட்டும்.........உங்களுக்கெல்லாம
Link to comment
Share on other sites

நான் நினைக்குறன் வினித் இதுவரைக்கும் ஒரு பெண்ணையும் சந்திக்கவில்லை என்று அதுதான் இப்படி எல்லாம் பேசுறார்

ஆனால் அண்ணாச்சிக்கு கலியாணம் ஆகி குழந்தை கூட உண்டாமே! எல்லாம் பட்சி சொன்னது தான். :wink: :P

இது திட்டமிட்ட சதி ரசிகையும் தூயவனும் செய்வது

நான் அடிக்குற மாதிரி அடிக்குறன் நீ அழுற மாதிரி அழு எண்ட மாதிரி ரசிகையும் தூயவனும் பேசுறது இருக்கு

முகத்தார் புரிகிறத? :oops: :oops:

Link to comment
Share on other sites

பெண்கள் பாசையில் தகுதி என்பது நல்லா செலவழிக்க கூடியா ஒரு இழிச்சவாயன் தானே? :P :P :P :P

:evil: வினீத் அண்ணா....நான் அதை சொல்லவில்லை..

காதலிக்க முதல்ல காசிருக்கோ இல்லையோ நல்ல மனசு வேண்டும்..அதைத்தான் தகுதி எண்டேன்.. :twisted: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுபது வயதில் காதல் செய்ய லொல்லா அல்லது நகைச்சுவையா தேவை?. ஆச்சிக்குச் சொல்லவேண்டாம்.

ஆச்சிக்குத்தெரிந்தால் உயிரோடு சங்குதான்

Link to comment
Share on other sites

60 வயசில் காதல் செய்ய லொல்லு தேவையோ இல்லையோ -

கண்டிப்பா பொல்லு தேவையெண்டு நினைக்கிறன் கந்தப்பு ஐயா-

அப்பதானே பிடிச்சுக்கொண்டு நடந்து திரிஞ்சு லவ்ஸ் விடலாம் - :roll: :roll:

Link to comment
Share on other sites

காதலிக்க முதல்ல காசிருக்கோ இல்லையோ நல்ல மனசு வேண்டும்..அதைத்தான் தகுதி எண்டேன்.. :twisted: :roll:

தயவு செய்து பிள்ளை எங்கடை சனத்திட்டை இல்லாத ஒரு பொருளைப் பற்றி பேச..........சா.....தேட வேண்டாம்

Link to comment
Share on other sites

:evil: வினீத் அண்ணா....நான் அதை சொல்லவில்லை..

காதலிக்க முதல்ல காசிருக்கோ இல்லையோ நல்ல மனசு வேண்டும்..அதைத்தான் தகுதி எண்டேன்.. :twisted: :roll:

நல்ல மனசிருந்து என்ன பயன்..! அதைப் புரிஞ்சுக்கிற பக்குவம் வேணுமே...காதலிக்கிற ஜீவங்களுக்கு..! அந்தப் பக்குவம் இருந்திட்டா ஏன் தட்டித்தடுமாறினம்..மனசுகள அலைய விடினம் கண்டதோடும்..! :wink: :P :idea:

Link to comment
Share on other sites

´ñÎõ §Åñ¼¡õ ´Õ BMW ¸¡Õõ ¦¸¡ïº ¸¡ÍõÁ¢Õó¾¡ø À¢û¨ÇÂÙìÌ ¸¡¾ø ¾¡É¡ÅÕõ ¾¡ö§¾ôÀÕõ ¦ÀÕº¡ ¸ñΦ¸¡ûǡ¢Éõ.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.