Jump to content

காதல் அரும்ப தேவை ஜொள்ளா? ஜோக்கா?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமா இவங்க ராணி மங்கம்மாவும் பூலான் தேவியும்  

நெத்தியடி அடிக்க    

பெண்களை பற்றி பெண்கள் தான் குறையும் குற்றமும் சொல்லுவங்கா  

இனி இப்படி சம்மந்தமே இல்லாமல் பேசுவாங்க.. பாருங்க :):lol: :lol:

Link to comment
Share on other sites

  • Replies 138
  • Created
  • Last Reply

பத்து ஆண்களும் ஒன்றாக கூடலாம் ஆனால் இரண்டு பெண்கள் ஒன்றாய் கூடினால் பின் பேரழிவுதான் :P :P . ஆனால் அதற்கு எமது பெண்கள் (யாழ்கள) விதிவிலக்கு :):lol:

Link to comment
Share on other sites

பத்து ஆண்களும் ஒன்றாக கூடலாம் ஆனால் இரண்டு பெண்கள் ஒன்றாய் கூடினால் பின் பேரழிவுதான் :P :P . ஆனால் அதற்கு எமது பெண்கள் (யாழ்கள) விதிவிலக்கு :):lol:

இந்தா உண்மையை சொல்லிப்போட்டு இப்பிடி பெல்டி அடிக்கிறதெண்டால் என்ன தம்பி இது .................

Link to comment
Share on other sites

இனி இப்படி சம்மந்தமே இல்லாமல் பேசுவாங்க.. பாருங்க :):lol: :lol:

நீங்க சொன்னது சரிதான் அக்கா :wink: :wink: :P

Link to comment
Share on other sites

இந்தா உண்மையை சொல்லிப்போட்டு இப்பிடி பெல்டி அடிக்கிறதெண்டால் என்ன தம்பி இது .................

பின்ன பூரிக்கம்பால் வாங்கித்தான் ஆகனும் என்றீங்களா..சரியான சுயநலம் முகத்தார் உங்களுக்கு...நீங்கதான் பொன்னம்மாக்காட்ட வாங்கிறது எண்டதுக்காக எல்லாரும்...ம்ம்ம்..! :wink: :lol::lol:

Link to comment
Share on other sites

நீங்க சொன்னது சரிதான் அக்கா :wink: :wink: :P

தமிழினி அக்கா திருக்குறள் சொல்லிட அதுக்கு :P விளக்கம் சொல்ல நித்தில வந்துட்டா :P

எப்ப தான் உங்களுக்கு ஏதும் புரிச்சு இருக்கு? :wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல் பற்றிய கதை

ட்ராமாவைப் பற்றிக் கதைப்பம் எண்டு வாணி கத்தினபோதும் யாரும் அதைக் கணக்கெடுத்ததாத் தெரியேல்லை. பிரியன் மட்டும் "உனக்கு இப்ப இங்கை என்ன அலுவல்" எண்டு மட்டும் கேட்டுவிட்டு ஒதுங்கிவிட்டான். வாணி இதுகள் திருந்தாதுகள் எண்டது மாதிரி ஒரு பார்வை எல்லாரையும் பாத்தாள்.

"ட்ராமா பற்றி பிறகு கதைப்பம். முதலில பட்டிமன்றம் இருக்கோ இல்லையோ" எண்டு ஆரோ தங்கடை சந்தேகத்தினை தூக்கிப் போட்டினம். வசந்தனுக்கு பட்டிமன்றம் பிடிக்காது. அதை கண்ணிலையும் காட்டக் கூடாது. 'கற்பில் சிறந்தவள் கண்ணகியா மாதவியா எண்ட மருத்துவப் பரிசோதனை நடக்கிற இடம் அது எண்டு அவன் ஆக்களுக்கு சொல்லுவான். எண்டாலும் ஒரு தலைவரா அவன் சிந்திச்சுப் பார்த்தான். வாற சனத்துக்கு ஒரு Entertainment இருக்க வேணும் எண்டதுக்காக பட்டிமன்றத்துக்கு அவனும் ஒத்துக் கொண்டான். ஆரும் கேட்டால் மக்கள் விரும்பிறதைத்தானே குடுக்க வேணும் எண்டோ இல்லாட்டி உலகமயமாக்கலில இதெல்லாம் சகஜம் எண்டோ சொல்லுவம் எண்டும் மனசுக்குள்ளை குறிச்சு வைச்சுக் கொண்டான்.

"உண்மையான காதல் என்பது கல்யாணத்துக்கு முதலிலா இல்லாட்டி பிறகா வருகுது எண்டதை தலைப்பா வைப்பம்" எண்டான் ஒருத்தன்.

வசந்தனுக்கு உண்மையான காதல் எண்டால் என்ன பொய்யான காதல் எண்டால் என்ன எண்டு ஒண்டும் விளங்கேல்லை. மனசும் மனசும் மட்டும் நேசிக்கின்ற, ஆத்மார்த்தமான எண்ட மாதரியான விழல் விளக்கங்களை அவன் நம்பிறதேயில்லை. காதல் ஆரம்பிக்கிறதே வெறும் உடல் ஈர்ப்பாலைதான் எண்டது அவன்ரை நம்பிக்கை. அதுக்குப் பிறகு போகப் போக, பழகப் பழக ரண்டு பேருக்கும் உணர்வு ரீதியான ஒரு ஈர்ப்பும் புரிந்துணர்வும் வருகுது எண்டதை அவன் புரிஞ்சு கொண்டிருந்தாலும் அது சாதாரணமாக அதிக காலம் எவரோடு பழகினாலும் வாற புரிந்துணர்வு தான் எண்டதையும் விசேஷமாக குறித்து சொல்ல அதில எதுவும் இல்லையெண்டதையும் வசந்தன் விளங்கி வைச்சிருந்தான்.

"எடியே நான் ஒண்டு சொல்லட்டே?" எண்டு கேட்டு விட்டு பதிலுக்கு காத்திராமல் சொல்லத் தொடங்கினாள் வாசுகி!

"பதினெட்டு வயசு வரைக்கும் நாங்கள் விரும்பின பொடியளோடை சுத்தவேணும். பதினெட்டில இருந்து இருபத்தினாலு வயசு வரைக்கும் படிப்பில கவனம் செலுத்தி வேலைக்கு போய் காசு சேக்க வேணும். இருபத்தினாலு வயசில வீட்டில அம்மா பாக்கிற மாப்பிளையை கலியாணம் கட்டி சந்தோசமா இருக்க வேணும்" அவள் சொல்லி முடிக்கவும் எல்லா பெட்டையளும் ஓ எண்டு கத்தி அவளுக்கு தார்மீக ஆதரவு குடுத்தாளவை.

"கவனமடி.. உதை வெளியில சொல்லிப்போடாதை.. எல்லாக் கோட்டிலையும் கேஸ் போட்டுவிடுவாங்கள்" எண்டு ஒருத்தன் சொல்லி தனக்கும் உலக நடப்புக்கள் தெரியும் எண்டதை உறுதிப்படுத்திக் கொண்டான்.

வசந்தன் காதலைப்பற்றி கொஞ்சம் யோசிக்கத் தொடங்கினான். காதல் எண்ட பேரில பெடியள் பெட்டையள் பார்க் சினிமா எண்டு சுத்திறதிலை அவனுக்கு எந்தக் கருத்தும் இல்லை. அது சம்மந்தப்பட்ட ரண்டு பேரோடை பிரச்சனை எண்ட அளவில யோசிச்சாலும் காதலில சிலர் செய்யிற திருகுதாளங்கள் அவனுக்கு சிரிப்பைக் கொண்டு வரும்.

நிறையப் பேர் தங்கடை இயல்பை மறைச்சுக் காதலிக்கிறது ஏன் எண்டு அவனுக்கு விளங்கேல்லை. உண்மையான காதல் புனிதமான காதல் எண்டு கதை சொல்லுற சிலரும் தாங்கள் அனுப்பின sms க்கு அடுத்த நிமிசத்தில் பதில் வராட்டி தங்கடை காதல் முறிஞ்சு போச்சுதோ எண்டு பயந்து போகினம். வரச்சொன்ன நேரத்துக்கு அவள் வராட்டி தங்கடை காதல் முறிஞ்சு போச்சுதோ எண்டு பயப்பிடுகினம். போன் பண்ணி வேறேதோ காரணங்களினால் அவள் அதை எடுக்காட்டில் தங்கடை காதல் முறிஞ்சு போச்சுதோ எணடு பயப்பிடுகினம். பயந்து பயந்து சாகிறது எண்டு சொல்லுவினமே அப்படி செத்து செத்து காதலிக்கிற அவையை நினைச்சால் பாவமாயிருக்கும் அவனுக்கு.

என்ரை எல்லாப் பலவீனங்களும் தெரிஞ்சு, என்ரை கோப தாபங்களை உணர்ந்து, நான் சண்டைபிடிக்க அனுமதித்து, என்னோடு எந்தச் சஞ்சலமுமில்லாமல் சண்டைபிடிச்சு காதலிப்பது எத்தனை வித்தியாசமானது என வசந்தன் நினைச்சுக் கொண்டான்.

என்ரை பலவீனங்கள் தெரிஞ்சாலும் இந்தக் காதல் முறிஞ்சு போகாது எண்ட நம்பிக்கை, என்ரை கோபதாபங்களை எப்பிடிக் காட்டினாலும் என்ர காதல் முறிஞ்சு போகாது எண்ட நம்பிக்கை, நான் என்ன சண்டை பிடிச்சாலும் இந்தக் காதல் முறிஞ்சு போகாது எண்ட நம்பிக்கை இருக்கும் ஒரு ஆணும் அதே நம்பிக்கை இருக்கும் ஒரு பெண்ணும் காதலித்தல் எல்லோருக்கும் கிடைக்காத வித்தியாசமான அனுபவம் தான்.

சண்டையின் உச்சக்கட்டத்தில் இனி உனக்கும் எனக்கும் கதை இல்லையெண்டு சொல்லி தொலைபேசிகளை அடித்து வைக்கும் அந்தக் கணத்திலும் அவளை நான் காதலிக்கிறேன் என்றும் அவனை நான் காதலிக்கிறேன் என்றும் அவனும் அவளும் நினைக்கின்ற காதல் எத்தனை பேருக்கு கிடைத்திருக்கும்?

என் இயல்பு எதுவென்று தெரியாத நிலையில் காதலிக்கப்படுவதிலும் பார்க்க என்னை முழுதாய் தெரிந்து இவன் இவ்வளவும் தான் இதை தவிர இவனிடமிருந்து எதையும் எதிர்பார்க்க முடியாது என இயல்பு தெரிந்து காதலிக்கப்படுவதே இன்பம் எண்டு முடிவெடுத்தான் வசந்தன். அதையே அங்கை இருந்த எல்லாருக்கும் சொன்னான்.

"போடா மக்கு! நான் என்ரை கோபத்தில அவனோடை எரிஞ்சு விழுந்தன் எண்டால் போடி எண்டுபோட்டு போயிடுவான்.." எண்டாள் வாசுகி

"போகட்டும் விடு" எண்டான் வசந்தன்.

நன்றி - சாரல் / சயந்தன்

:twisted: :twisted: :twisted: :twisted: :evil:

Link to comment
Share on other sites

அதை விட..வசந்தன்..அது வேற வசந்தன்..நீங்கள் டென்சன் ஆகாதைங்கோ..

.....................

கதை நன்றாக இருக்கு..பட் கதையின் முடிவு எனக்கு சுத்தமா..விளங்கல.. :? :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

ஆமா இவங்க ராணி மங்கம்மாவும் பூலான் தேவியும்

நெத்தியடி அடிக்க :P :P

பெண்களை பற்றி பெண்கள் தான் குறையும் குற்றமும் சொல்லுவங்கா

:P :P

ஐயோ வினீத் அண்ணா..கொமா போட்டுக்கொண்டே போறீங்களே..முற்றுப்புள்ளி வையுங்கோ...!!!!!!!!!

Link to comment
Share on other sites

ஐயோ வினீத் அண்ணா..கொமா போட்டுக்கொண்டே போறீங்களே..முற்றுப்புள்ளி வையுங்கோ...!!!!!!!!!

நீங்கள் சரி எண்ட முற்றுப்புள்ளி வைத்து விடலாம் :P :P

Link to comment
Share on other sites

மதன் நீங்கள் இணைத்த காதலைப்பற்றி கட்டுரை என்னைப்பொறுத்தவரையில் நிஐமானது. காதலுடன் சண்டை பிடித்து தொலைபேசியை அடித்து வைத்துவிட்டு அடுத்த 5 நிமிடங்களில் ஒன்றுமே நடக்காதமாதிரி கதைப்பார்களே அங்கு தான் நிஐ காதலை உணரமுடியும்.

நன்றி இங்கு இணைத்தமைக்கு மதன்.

Link to comment
Share on other sites

. காதலுடன் சண்டை பிடித்து தொலைபேசியை அடித்து வைத்துவிட்டு அடுத்த 5 நிமிடங்களில் ஒன்றுமே நடக்காதமாதிரி கதைப்பார்களே அங்கு தான் நிஐ காதலை உணரமுடியும்..[/quo

ம்ம்ம்ம்ம்..............அனுபவித்து சொல்லேக்கை நாங்கள் கேக்கத்தான் வேணும் ........... வாழ்க.....உங்கள்.....கா......த.....ல்...

Link to comment
Share on other sites

ஆமா..இந்த கதை எனக்கு முடிவு விளங்கவில்லை.இதில் யார் யார் காதலர்கள்..??யாருமே இல்லை எண்டெல்லோ நெச்சன்..கடைசில அந்த கேர்ள் எதுக்கு போகட்டும் விடு எண்டு சொல்லுறா..சத்யமா புரியல.. :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.