Jump to content

யாழ் விருதுகள் விழா 2011 - நேரடி ஒளிபரப்பு


Recommended Posts

காதல் கவிதையால் மேடையேறியிருக்கும் கவிதை நெடுக்கிற்காக ஒரு பாடல் தருகிறார் இதோ....

சாந்தியக்கா அக்கா ... !!! நெடுக்ஸ் அண்ணைக்கு இந்தக் காதல் பாட்டெல்லாம் பிடிக்காது! :icon_idea:

நிற்பதுவே நடப்பதுவே... பாட்டுப் போடுங்கோ! :lol:

Link to comment
Share on other sites

  • Replies 464
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியனின் ஒட்டகத்தை பிரியாணிபோட்டு சாப்பிட்டதை வெளியில் யாரிடமும் சொல்லவேண்டாம் என்று நடுவர்கள் பந்தியில் காதோடு காது பேசிக்கொண்டார்கள்......குமாராசாமி அண்ணையின் வண்டி ஸ்ராற் பண்ணாததால் இன்னமும் மண்டபத்தடியிலேயே நானும் சாத்திரியரும் நிற்கிறோம்..கோமகன் திட்டியபடி கு.சாவின் வண்டியைத்தள்ளிக்கொண்டிருக்கிறார்..வண்டி மக்கர் பண்ணுகிறது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிரிச்ச சிரிப்பில முழுக்க முறிஞ்சுபோச்சு :rolleyes::lol: :lol: இசை சகாரா மற்றும் சாத்து பின்னீட்டிங்கள் :)

Link to comment
Share on other sites

youngwomenonthestreetso.jpg

இன்று மத்திய லண்டனில் நடந்த தமிழர்களின் வைபவமொன்றின் பின் 'Soho' பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய சில தமிழ் இளைஞர்களை கைது செய்துள்ளதாக லண்டன் போலிஸ் கமிசனர் 'பெர்னார்ட் கோகன் கவ்' தெரிவித்துள்ளார்.

சாட்ரீ, கும்சாமி, நெளியன் ஆகியோரை, வரும் புதன்கிழமை மட்டும் காவல்நிலையப் பாதுகாப்பில் வைத்திருக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

எதிர் வரும் புதன் மட்டும் அங்கு கடமையாற்றும் மகளிர் போலீசாரை கட்டாய லீவில் இருக்கும்படியும் கமிசனர் உத்தரவிட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

april-o-patchen-winning-entry.jpg

யாழ் விருது பெற்ற பெரு மகிழ்ச்சியில்.. கையில் விருதோடு.. அந்தரத்தில் பறக்கும்.. நான்.. படம் நாசாவின் கமராவுக்குள் சிக்கிக் கொண்டு விட்டதால்.. இன்ரபோல் தேடுவோர் பட்டியலில் போட்டிருக்காங்க. :icon_idea::o

பல இதயங்களை இடுப்புப் பட்டியில் கட்டிக் கொண்டு, விருதையும் கையில் வாங்கிக் கொண்டு, இன்னும் பல இதயங்கள் துரத்த, நாசாவின் கமாரவுக்குள் சிக்கிய நெடுக்ஸ்... :lol: :lol:

----

அளவு கணக்கில்லாமல் குடிச்சவை...

drunk-man.jpg

drunk-man.jpg

drunk_man_in_pool.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு விருது தராமல் நான் இந்த மண்டபத்தை விட்டுப் போக மாட்டேன் <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனுசி:என்னப்பா..நான் உங்களை போறவாற இடங்கள்ளைகுடிக்காதேங்கோ எண்டு சொன்னனான் எல்லே?

நான்:?

மனுசி:இஞ்சையப்பா...வேட்டி ஒருபக்கத்தாலை வழுக்கி இழுபடுது...அதை தூக்கி சொருகுங்கோப்பா

நான்:?

மனுசி:அதுசரி.....அவளை ஏன் அடிக்கடி திரும்பிப்பாத்துகொண்டுருந்தளியள்?

நான்:?

மனுசி:உங்களுக்கு புடிச்ச கடலைவடை குவிச்சு வைச்சிருந்துது....அங்காலை சுடுதண்ணி(சிவாஸ்)வரிசைக்கு அடுக்கி கிடந்துது.....அதைவிட நல்ல கூட்டுகள்...

நான்:?

மனுசி:மேடையிலை மைக்கோடை நிண்ட பிள்ளையின்ரை சாறி நல்லாயிருந்துதப்பா...ஆனா மைக்கோடைநிண்ட தம்பிக்கு வேட்டி ஒழுங்காய்கட்டத்தெரியாது போலை இருக்கு....ஏதோ மழைவெள்ளத்துக்கு தூக்கி கட்டினமாதிரி......ஏனப்பா நீங்களெண்டாலும் வேட்டிகட்ட காட்டிக்குடுத்திருக்கலாமே?நீங்கள்தானே இஞ்சை கனபேருக்கு வேட்டிகட்ட பழக்கினனீங்கள்!

நான்:?

இன்னும் வரும்.....

Link to comment
Share on other sites

கு.சா அண்ணை.. அது மைக் செற் பண்ணுற பெடியனல்லோ வேட்டி கட்டியிருந்தது.. :icon_mrgreen: நான் லோங்ஸ் தானே போட்டிருந்தது..! :lol:

Link to comment
Share on other sites

.." :huh:

"இருக்கலாம்தான்.. ஆனால் பிளவுஸ் ஜன்னல் எப்பிடி எண்டு தெரியாததால விட்டிட்டன்.." :unsure:

"ஓ.. சரி.. சரி.." :(

( இருவரும் விளக்கேற்றுகிறார்கள்..!) :lol:

ஓய் இசை பழையா வீடுகளுக்கு யன்னால் பின்னுக்கு இருந்தா என்ன முன்னுக்கு இருந்தால் என்ன? நிகழ்ச்சியை சரியாக தொகுத்து வழங்கவும்.

Link to comment
Share on other sites

ஓய் இசை பழையா வீடுகளுக்கு யன்னால் பின்னுக்கு இருந்தா என்ன முன்னுக்கு இருந்தால் என்ன? நிகழ்ச்சியை சரியாக தொகுத்து வழங்கவும்.

:o:(:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா அண்ணை.. அது மைக் செற் பண்ணுற பெடியனல்லோ வேட்டி கட்டியிருந்தது.. :icon_mrgreen: நான் லோங்ஸ் தானே போட்டிருந்தது..! :lol:

நான்:?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது நாங்கள் வந்த கார் குமாரசாமியர் எவ்வளவு கஸ்ரப் பட்டு பார்க் பண்ணியிருப்பார்.

car4.jpg

ஓய் இடமில்லாட்டி மேலை ஏத்தி நிப்பாட்டு எண்டு சொன்னது ஆர்?நல்லகாலம்...சரிஞ்சு நிக்கிற கார் கறுப்பியின்ரை எண்டவடியாலை பெரிய பிரச்சனை ஒண்டுமில்லை.

Link to comment
Share on other sites

ரதி,அப்பிடியெண்டால் நீங்கள் நான் இருக்கும் பக்கத்திற்கு வாங்கோ.... :icon_idea:

தமிழிச்சி உங்களுக்கு இடத்து பக்கம் இருக்கும் நான் என் இடத்தை ரதிக்கு விட்டுக் கொடுக்க மாட்டேன்,

Link to comment
Share on other sites

ரதியக்காவை நான் இருக்கும் பகுதிக்குத்தான் வரச் சொன்னனான். நான் முதலே சொல்லி வைச்சனான். என்ர மேசையிலை வேற பெண்கள் இருக்கக்கூடாது என்று. அதாலை ரதியக்காவிற்கு என்ர மேசையிலை இடமிருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழாவில் எல்லாம் பச்சை தண்ணி சாப்பாடு, தண்ணி என்று தந்தது கசிப்பு, படு மோசடி செய்துவிட்டார்கள் கோமகன், தமிழ் சிறி, இசை & வல்வை சகாரா. விழாவிற்கு என சுருட்டிய பணத்துடன் நால்வரும் கம்பி நீட்டிவிட்டார்கள், இதை தட்டிக் கேட்கு யாரும் இல்லையா.

விழிவிற்கு வந்த கறுப்பி & சிவப்பி கிட்ட உள்ள தங்குவிடுதிக்கு நடந்து போய்க் கொண்டிருந்தனர், தீடிரென அவர்கள் முன் கீறிஸ் பூதம், அதைக் கண்ட பயத்தில் கறுப்பி ஓட்டத்தில் மாவட்டதில் முதலாவதாக வந்ததை தன் விடுதிவரை ஓடி வந்து நிருபித்துவிட்டுதான் யோசித்தார் சிவப்பியைதான் கைவிட்டுவிட்டு வந்ததை,

சிவப்பியின் நிலையோ பரிதாபமாக இருந்தது, அன்று கறுப்பி பஞ்சாபி போட செல்லியும் தான் சாறியில் வந்ததை எண்ணி கலங்கினால், இந்த எண்ணங்கள் எதுவும் தெரியாத கீறிஸ் பூதம் தன் காவி பற்கள் 32 உம் தெரிய இவளை நெருங்கி வந்தது, ஒன்றுமே செய்ய முடியாத நிலை சிவப்பிக்கு, என்ன செய்ய குனிந்து தன் சாறியை உயர்த்தினால், இதை கண்ட கீறிஸ் பூதம் தன் ஜீன்ஸை கழட்டியது..........................

கறுப்பியோ தான் தப்பிய சந்தோஷத்தில் வாசலில் சிவப்பி வருகிறாளா என்று விடுப்பு பார்த்துக் கொண்டிருந்தா, கண்ணுக்கு எட்டிய தூரத்தில் சிவப்பி தலை தெறிக்க ஓடிவருவது தெரிந்தது, கறுப்பிக்கு சிவப்பியிடம் முகம் கொடுத்து கதைக்க முடியாமல் இருக்கு,

அப்ப கறுப்பி தன் யாழ்கள உறவுகளிடம் கேட்கிறாள் தன் நண்பிக்கு என்ன நடத்திருக்கும் என்று..............

"கீழிறக்கிய ஜீன்ஸுடன் ஓடமுடியாமல் பூதம் விழுத்திருக்கும்"

Link to comment
Share on other sites

மனம் விட்டு சிரிக்க உதவிய அனைவருக்கும் நன்றிகள். இசையின் எழுத்து பாணியில் இருக்கும் நகைச்சுவை அருமை.

சாகராவின் இன்னொரு முகம் வெளிப்படுகின்றது. இந்த மனிசிக்குள்ள எவ்வளவு நகைச்சுவை உணர்வு இருக்கு என்று ஏற்கனவே எனக்கு தெரிந்தாலும் இன்று மற்ற உறவுகளுக்கும் புரிந்து இருக்கும்

அட, பாருடா...தமிழச்சி கூட சிரிப்புடன் பதிவு இடுவதை

Link to comment
Share on other sites

இசையோட ஒரே கடி(சிரிப்பு) + அதுக்கு சாத்திரி இணைச்சபடங்கள் வெடி சிரிப்பு!..........

இந்த சூப்பர் காமெடி திரில...(திறில்ல) சாத்திரி ...ஓவர்டேக் பண்ணிட்டார் இசையை..ன்னுதான் சொல்லுவேன்!

எது என்னமோ....... இப்டியான கலக்கல் வேணும் தினமும்...அப்போதானே ,

யாழ்வந்துபோக ,,ஹாப்பியா இருக்கும் எல்லாருக்கும் ! :)

Link to comment
Share on other sites

அது எல்லாதுக்கு முன்னம்... இந்த விழாவில.. வாழுறவங்களுக்கு மட்டும்தானா விருது?

வசம்புவை மறந்துட்டீங்களே! ...... ஒரு நிமிட மெளனம் செலுத்தி இருக்கலாம்!

யாழ் வசம்பு- நினைவு சின்னம்!

அவர் கருத்தை பிடிக்கல்லைனாலும்... அவரை பிடிக்கும் ரொம்பபேருக்கு.!..அதுல நானும் ஒண்ணு!

Link to comment
Share on other sites

அது எல்லாதுக்கு முன்னம்... இந்த விழாவில.. வாழுறவங்களுக்கு மட்டும்தானா விருது?

வசம்புவை மறந்துட்டீங்களே! ...... ஒரு நிமிட மெளனம் செலுத்தி இருக்கலாம்!

யாழ் வசம்பு- நினைவு சின்னம்!

அவர் கருத்தை பிடிக்கல்லைனாலும்... அவரை பிடிக்கும் ரொம்பபேருக்கு.!..அதுல நானும் ஒண்ணு!

இப்படிச் சொல்லும் நீங்கள் கொஞ்ச நாள் முதல் போட்ட ஒரு பதிவு இது

ஒரு கள உறுப்பினர் என்பதற்காக அவருக்கு........துயர்பகுதியில்அஞ்சலி செலுததி கொடுக்கப்பட்ட கெளரவத்தையும் மீறி..

தன் வாழ்நாள்முழுக்க புலிகளுக்கெதிராக...........யாழின் உள்ளும் வெளியும் ஊடகப்போர் நடாத்தி அமரரான.. வசம்புவுக்கு ..என்றைக்கு யாழ்...தன் முகப்பில் அஞ்சலி செலுத்திச்சோ ...

அன்னில இருந்தே..

யாழ் ..............மாவீரருக்கான தனி தலைப்ப்பு ஆரம்பிக்கும் தகுதியை இழந்திருச்சு!

பாவம்பா............மாவீரர்கள்! அவர்களை விட்டிடுங்க!

யாழ்களம் தன்னோட ...தற்கால நடு நிலமையை தொடர்வதே புத்திசாலித்தனம்!

அது தவிர்க்க முடியாததும் கூட...!

(இது என் தனிப்பட்ட கருத்துதான்!)

வாழ்க !!

Link to comment
Share on other sites

இப்படிச் சொல்லும் நீங்கள் கொஞ்ச நாள் முதல் போட்ட ஒரு பதிவு இது

வாழ்க !!

ஒரு கள உறுப்பினர் என்பதற்காக அவருக்கு........துயர்பகுதியில்அஞ்சலி செலுததி கொடுக்கப்பட்ட கெளரவத்தையும் மீறி..

தன் வாழ்நாள்முழுக்க புலிகளுக்கெதிராக...........யாழின் உள்ளும் வெளியும் ஊடகப்போர் நடாத்தி அமரரான.. வசம்புவுக்கு ..என்றைக்கு யாழ்...தன் முகப்பில் அஞ்சலி செலுத்திச்சோ ...

அன்னில இருந்தே..

யாழ் ..............மாவீரருக்கான தனி தலைப்ப்பு ஆரம்பிக்கும் தகுதியை இழந்திருச்சு!

என்னத்த சொல்ல ,, சுத்த கிறுக்கு பயலுவளா இருக்கிங்களே .. !

ஹைலைட் பண்ணினத - திரும்ப வாசியுங்க .. எங்கயும் மாறல நானு!

கள உறுப்பினர் எங்கிறதுக்காக அவருக்குரிய கெளரவம் கொடுக்கலாம்னு அப்போ சொல்லி இருக்கேன்... ,, இப்பவும் சொல்றன் ......

முகப்பில கண்ணீர் அஞ்சலி அவருக்கு செலுத்த சொல்ல இல்ல ...!

அப்பிடி செலுத்தணும் என்னா... இனிமே மாவீரர்களுக்கு அஞ்சலி செய்ய முகப்பில இடம் கொடாதீங்க! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்லாவுக்கு பகிடியும் விளங்களை.............

விழாவை ஓழுங்கு செய்த சுண்டல்???

அட same blood

Link to comment
Share on other sites

ம்ம்ம்.....என்னத்தை சொல்வது..

எதுவுமே சொல்லாதீங்க ,,, நீங்க யாயினி !

ஏன்னா ,,கண்ணை மூ டிகிட்டு எதையும் சரியா வாசிக்காம , கருத்து எழுதுனா... சுத்த வேஸ்ட்! :unsure:

Link to comment
Share on other sites

நேற்றைய விருது வழங்கும் விழாவில மப்பில இருந்த உறவுகள் உளறியவைகளில் சில விழா மண்டபத்திலும் அவர்கள் தங்கி இருந்த இடம்களிலும் நடந்தவை அவர்களுக்கே தெரியாமல் ஒலிபதிவு செய்ய பட்டது

என்னப்பா உங்க ஊரில பாத்ரூம் கதவு தொறந்தா தானா லைட் எல்லாம் எரியுது # குட்டி அண்ணா வீட்ல ப்ரிட்ஜ் திறந்து கொண்டு சாத்ஸ் அங்கிள் #விழா முடிஞ்சு வீடுக்கு போனால் பிறகு

கலைஞர் கைல காசு இல்லாமல் இருந்தப்ப எங்க பெரியப்பா தான் உதவி செய்தவர் அந்தாள் அதை எல்லாம் மறந்திடுச்சு #ராஜா வன்னியன் அண்ணா தமிழ் ஸ்ரீ அண்ணாவிடம்

நீ என்ன புதுசா வேலை ௦r businuss ஏதும் செய்கிற பிளானோ ? இப்ப செய்கிற வேலையே நல்லது தானே நாடு கடந்த அரசுக்கு அர்ச்சனை செய்கிற வேலையை சொன்னன் #நெல்லையன் அண்ணாவுக்கு இணையவன் அண்ணா

நீங்க எழுதினதிலேயே எனக்கு பிடிச்சது கோழி சாம்பார் பற்றி எழுதின தான் # ரதி அக்கா கிட்ட சாந்தி அக்கா..

இதோ பத்து நிமிஷத்துல வன்துடுவேன்டா.குடிக்கவேயில்லடா # குட்டி அண்ணா போனில் மனைவியிடம்

அனுபவத்துல சொல்றேன்.. கேட்டுக்கோ.. இந்தப் பொண்ணுங்களையே நம்பாத மச்சி# நெடுக்ஸ் கறுப்பிகிட்ட சொன்னது..

கவிதை அண்ணா பக்கத்திலிருந்தவரை பார்த்து பேர் தெரியல அவரிண்ட

ஒரு கவிதை எழுதி வெச்சிருக்கேன் பிரதர். சொல்லட்டா? “நீ நடந்த பாதை

தப்பிலி அண்ணா குட்டி அண்ணா கிட்ட மச்சி என் வாழ்க்கைல இந்தமாதிரி நிறைய நண்பர்களோட குடிச்சதில்ல மச்சி. இன்னொரு கிளாசு ஊத்தேன்

அவ உன்ன லவ் பன்றா டா இல்லன்னா இப்டி சொல்லி இருப்பாளா?#சயந்தன் அணாவுக்கு சுபேஸ் அண்ணா

தண்ணியடிக்கிறது மட்டுமே ஏன் ஆளுக்குத் தெரிஞ்சுது...அவ்ளோதான் #உடையார் அண்ணா பக்கதிலிருந்தவரிடம்

எம் பொண்டாட்டி ஒரு தக்காளி சட்னி வைப்பா பாரேன். சூப்பரா இருக்கும் மச்சி#அர்ஜுன் அண்ணா பக்கத்தில் இருந்தவரிடம்..

இணையவன் அண்ணா நிழலி அண்ணாவிடம் மச்சி எனக்கு போதை ஏறிடிச்சுன்னு தண்ணீய ஜாஸ்தியா ஊத்துறியா???

கு.சா தாத்தா தவண்டு கொண்டு பரிமளம் அடியே பரிமளம் இனிமேல் குடிக்க மாட்டன் சத்தியமா..... ..யாரும் பரிமளத்தை கண்டீங்களோ..

சகாரா விண்ட சாறி நல்லா இருக்குது எல்லோ நிலா மதி அக்கா சாந்தி அக்காவிடம்..

விசுகு அண்ணா சுண்டல் கிட்ட

முணு விரல காட்டி.. இது என்னன்னு சொல்லு..நீ போதைல இருக்கியா இல்லயான்னு நாங்க சொல்றோம்..

கிருபன் அண்ணா நெடுக்சிடம்

மச்சி அவ என்ன அண்ணானு சொல்லிட்டாடா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழாவை சிறப்பித்தவர்களை நாமும் பாராட்டியபடியே............... வெள்ளனை நித்தா வந்துட்டுது படுக்க போயிட்டன். இப்போதான் ஒவ்வொன்றா படித்தபடியே.......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.