Jump to content

பொதுவுடைமைவாதமும், பெரியாரியமும் – இர.சாம்ராஜா


Recommended Posts

மதம் பற்றி மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் போன்றவர்கள் வெளிப்படுத்திய கருத்துகள் ‘பொதுவுடைமைவாதம்’ என்றும், தந்தை பெரியார் வெளிப்படுத்திய கருத்துகள் ‘பெரியாரியம்’ என்றும் கொள்ளப்பட்டு, அவைகளுக்கு இடையிலான ஒற்றுமைகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மதம்

karl-marx-hip-300x210.jpgமதம் பற்றி மார்க்ஸோ, எங்கெல்ஸோ தனித்துப் புத்தகங்கள் எதுவும் வெளியிடவில்லை. ஆனால் அவர்களின் படைப்புக்களில் ஆங்காங்கே மதம் பற்றிய கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர். லெனின் மதம் பற்றி அதிகமாகப் பேசியும், எழுதியும் இருப்பதால் ‘மதத்தைப் பற்றி’ எனும் தலைப்பில் தமிழில் நூலாக வெளிவந்துள்ளது. ஆனால், தந்தை பெரியார் மதம் குறித்து பல கட்டுரைகள் எழுதியும், பல மேடைகளில் பேசியும் உள்ளதால், அவைகளெல்லாம் தொகுக்கப்பட்டு பல தொகுதிகளாக வெளிவந்துள்ளன.

மார்க்ஸ் – தந்தை பெரியார்

மார்க்ஸ் மதம் பற்றிச் சுருக்கமாக ‘மதம் மக்களுக்கு அபினைப் போன்றது’ என்று குறிப்பிட்டார். தந்தை பெரியார் ‘மதம் மக்களுக்கு அபினி (மது) என்றார் ஒரு பெரியவர். ஆனால் நான் மதம் மக்களுக்கு விஷம் என்கிறேன்’ என்று 31.5.1936 – நாளிட்ட குடிஅரசில் தம் கருத்தினைத் தெரிவித்தார். அதாவது,மார்க்ஸ் கருத்துப்படி, மதம் என்பது மனிதனின் சிந்தனையைத் தெளிவற்றதாக்குவது. தந்தை பெரியாரின் கருத்துப்படி, மதம் என்பது மனிதனின் உயிரையே போக்குவது என்பதாகும். ஆக, மார்க்ஸை விடத் தந்தை பெரியார் மதத்தினை மிகவும் கொடியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மார்க்ஸ் மதத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது, ‘வெளியில் கூற முடியாத சோகம் மனதில் மண்டிக் கிடக்கும்பொழுது அதை மனிதன் பெருமூச்சு மூலம் வெளிப்படுத்திக் காட்டுகிறான். அத்தகைய ஒரு சாதனமாக மதம் மக்களுக்குப் பயன்படுகிறது. இந்த நிலையில் மதத்தை எதிர்ப்பதைவிட அதை ஆராய்வது நல்லது’ என்கிறார். தந்தை பெரியாரும் ‘மதம் என்னும் விஷயமும் ஆராயத் தகுந்ததேயாகும்’ என்று 21.2.1952இல் விடுதலையில் வெளியிட்ட கருத்தில் தெரிவித்துள்ளார். ஆக, இருவரும் மதத்தினை ஆராய வேண்டும் என்ற நிலையில் ஒத்த கருத்துக்களையே வெளிப்படுத்தியுள்ளனர்.

மதத்தினை ஒழிக்க வேண்டும் என்ற நிலையில், மார்க்ஸ் தம் கருத்தாக ‘மக்கள் உண்மையான மகிழ்ச்சியைக் காணவேண்டும் என்றால் வெறும் பிரமையான மகிழ்ச்சியைத் தரும் சமயத்தை ஒழித்தாக வேண்டும்’ என்று வெளிப்படுத்தியுள்ளார். தந்தை பெரியார் 10.3.1945இல் வெளியிட்ட கருத்தில், ‘மனித பேதம் ஒழிய வேண்டுமானால் மதம் ஒழிய வேண்டும்’ என்று வெளிப்படுத்தியுள்ளார். ஆக, மதம் ஒழிந்தால் தான் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ முடியும் என்பதே இருவரின் ஒருமித்த கருத்தாக வெளிப்பட்டுள்ளது.

பொருள் முதல் வாதத்தினை அடிப்படையாகக் கொண்டு மார்க்ஸ், ‘மனிதன் மதத்தை உருவாக்குகிறான். மதம் மனிதனை உருவாக்கவில்லை’ என்று தம் கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். அதேபோன்று தந்தை பெரியார், ‘மதம் என்பது மனிதனின் உலக வாழ்க்கையின் நடப்பிற்கு ஒரு வழிகாட்டியான கொள்கையைக் கொண்டது. அது நம்மைப்போல ஒரு மனிதனால் ஏற்படுத்தப்பட்டது’ என்றும், ‘மனிதன் பிறந்து வளர்ந்து நினைக்கத் துவங்கிய பிறகுதான் கடவுள் பற்றிய எண்ணம் தோற்றுவிக்கப்பட்டிருக்க வேண்டும். அதை யாரும் மறுக்க முடியாது. இப்போது கூட மக்களுக்குப் பிறர் சொல்லிக் கொடுத்த பிறகு தான் கடவுள் என்கிற பேச்சும் நினைப்பும் ஏற்படுகின்றதே தவிர தானாக ஏற்படுவதில்லை என்றும் தம் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். ஆக இருவரும் மதம் மனிதனால் உருவாக்கப்பட்டது என்ற கருத்தில் ஒருமித்த கருத்துகளையே வெளிப்படுத்தியுள்ளனர்.

எங்கெல்ஸ் – தந்தை பெரியார்

எங்கெல்ஸ். மதத்தினையும் பொருளாதார பேதத்தினையும் குருமார்கள் உருவாக்குகிறார்கள் என்ற நிலையில் தம் கருத்தினைப் பின்வருமாறு வெளிப்படுத்தியுள்ளார்.

‘தொழில் பிரிவுகள் தொழில் திறமையையும் உற்பத்தித் திறமையையும் வளர்த்தன. தொழில் நுணுக்கம் முன்னேற்றம் கண்டது. இதனால் சமூகத்தில் ‘உற்பத்தி செய்பவர்கள்’ உற்பத்தியை அமைப்பவர்கள் என்ற உழைக்கும் பிரிவினரும், தாம் உழைக்காமல், உழைப்பைத் திட்டமிட்டு அமைப்பவர்களும் என்ற பிரிவுகள் தோன்றின. உழைப்பை அமைப்பவர்கள் உழைப்பின் கடுமையில் இருந்து விடுதலை பெற்றனர். இவர்கள் தான் சிந்தனையாளர்களாக, மதகுருமார்களாக, மந்திர தந்திரங்களை நடத்துபவர்களாக பொருளுற்பத்தி உழைப்பில் இருந்து விலகிச் செயல்பட்டனர்.

இக்கருத்தினை அடியொற்றியே தந்தை பெரியாரும் மதமே பொருளாதார பேதத்தினை உருவாக்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது ‘சமுதாய வாழ்வில் மனிதர்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பிக்கிறது மாத்திரமில்லாமல், பொருளாதாரத்தில் உயர்வு தாழ்வு கற்பிப்பதற்கும் மதம் மூலகாரணமாய் இருக்கிறது. உண்மையில் நீங்கள் யோசித்துப் பாருங்கள். உடல் வலிக்கப் பாடுபட ஒரு சாதியும், நோகாமல் உட்கார்ந்து கொண்டு சாப்பிட ஒரு சாதியும் மதம் சிருஷ்டிக்கவில்லையா?’ என்ற கேள்வி கேட்கும் விதமாகத் தம் கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். ஆக, மதமே வர்க்க பேதத்தினை உருவாக்குகிறது என்ற நிலையில் இருவரின் சிந்தனையும் ஒத்துப்போவதை அறிய முடிகிறது.

மதத்தைக் காத்திட மதவாதிகள் எத்தகைய வழியை மேற்கொள்வார்கள் என்பது பற்றி எங்கெல்ஸ் தம் கருத்தாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.

‘கிரேக்க மற்றும் கிரேக்க – உரோமானியக் கூறுகளே கிறித்துவத்தை உலகலாவிய ஒரு மதமாக்கப் பெரிதும் துணைபுரிந்துள்ளன. யூத மதத்திலிருந்து முழுமைபெற்று உருவான கிறித்துவ மதம் பாலஸ்தீனத்தில் துவங்கி, உலகை வென்றது என்ற மாயை புரூனோ பௌருக்குப் பிறகு சாத்தியமில்லாமல் போய்விட்டது. இனிமேல் அத்தகைய மாயை இறையியல் துறையிலும், அறிவியலைத் தியாகம் செய்தாவது, மக்களுக்காக மதத்தைக் காக்க வேண்டும் என விரும்புபவர்களிடமும் மட்டுமே செல்லுபடியாகும்’.

இக்கருத்தினை அடியொற்றியே தந்தை பெரியார் தம் கருத்தினைப் பின்வருமாறு வெளிப்படுத்தியுள்ளார். ‘அறிவு வளர்ச்சியையும், ஆராய்ச்சி சுதந்தரத்தையும், இயற்கைச் சக்தியின் தன்மை உணர்வையும், விஞ்ஞானத்தையும் மக்கள் பெறமுடியாமல் தடுத்தாலொழிய, இனி எப்படிப்பட்ட மகானாலும், கடவுள் பக்தனாலும், கடவுள் காப்பாளனாலும் எந்தக் கடவுளையும் எந்த மதத்தையும் காப்பாற்ற முடியாது’.

ஆக, எங்கெல்ஸ் மற்றும் தந்தை பெரியார் ஆகிய இருவரும் மதத்தைக் காத்திட மதவாதிகள் அறிவியலைத் தடுத்திட முடியாமல் வேறு வழியில்லை என்று ஒத்த நிலையில் தம் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர். அறிவியலின் வளர்ச்சியே மதத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாகும் என்பது இருவர் தம் கருத்தாகும்.

லெனின் – தந்தை பெரியார்

லெனின் மதம் பற்றிய தம் கருத்துக்களில் பின்வரும் இரண்டு கோட்பாடுகளை முன்வைத்துள்ளார். அவைகளாவன :

1. நாஸ்திகம் மார்க்சிசத்தின் பிரிக்க முடியாத ஒரு பகுதி – அதனால் வர்க்க உணர்வு கொண்ட ஒரு மார்க்சியக் கட்சி, நாத்திகத்துக்குச் சாதகமாகப் பிரச்சாரம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

2. …..மத ஸ்தாபனங்களுக்கும், பள்ளிகளுக்கும் இடையே பரிபூரணமாக பிரிவு வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியாக வேண்டும்.

லெனின் குறிப்பிட்ட இந்த இரண்டு கோட்பாடுகளில் முதல் கோட்பாட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் செயல்படுத்தாத நிலையில் தந்தை பெரியார் தம் வாழ்நாள் முழுவதும் மேற்கொண்டுள்ளார்.

இரண்டாவது கோட்பாடான மத ஸ்தாபனங்களுக்கும் பள்ளிகளுக்கும் இடையே பிரிவு வேண்டும் என்ற லெனினது கருத்தினை விரிவாக விளக்கும் நிலையில், தம் கருத்தினைத் தந்தை பெரியார் 27.8.1931 நாளிட்ட குடிஅரசில் பின்வருமாறு வெளிப்படுத்தியுள்ளார்.

‘கல்வி கற்பிப்பதில் மதத்தின் ஆதிக்கம் வந்து புகுந்து அறிவுக்காகக் கல்வி என்பது மாறி முட்டாள்தனமும், விசாரணையற்ற தன்மையும் வருவதற்கே கல்வி பயன்படும் படியாக ஆகிவிடுகின்றது… இதற்குக் காரணம் என்னவென்றால், கல்வியின் பொறுப்பு எல்லாம் மதங்களினுடையவும், மத ஸ்தாபனங்களினுடையவும் ஆதிக்கத்தில் சிக்கி மத போதகர்கள், மதகுருக்கள், மதத் தலைவர்கள் ஆகியவர்களால் நடத்தப்பட்டு வருகின்றவைகளாய் இருப்பதே காரணம்… மதம் கலந்த படிப்பால் இயற்கை அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் இடமில்லாமலே போய்விடுகின்றது.

மத சம்பந்தமான கொள்கைகள், அபிப்பிராயங்கள் முதலியவைகள் எல்லாம் அந்தக் காலத்திய உலகநிலை, அறிவு நிலை, ஆராய்ச்சி சவுகரிய நிலை, கல்வி நிலை ஆகியவைகளுக்கு ஏற்றவைகளாகவே இருக்கும். ஆதலால் அவை இந்தக் கால அறிவு, ஆராய்ச்சி, சவுகரியம் முதலியவைகளுக்கு ஏற்றதாக இருக்க முடியாது. இந்தக் குறைபாடானது உலகத் தோற்றத்தின் – மனித வாழ்க்கையின் ஒவ்வொரு தன்மையிலும் இருக்க வேண்டியதாகிவிட்டது. ஆதலால் கல்வியும் மதமும் கலந்தால் அறிவு சூன்யமாக வேண்டியதைத் தவிர வேறில்லை.

அதாவது, லெனின் குறிப்பிட்ட,“மத ஸ்தாபனங்களையும், பள்ளிகளையும் பிரித்து வைக்க வேண்டும்” என்ற கருத்திற்கான காரணத்தினைத் தந்தை பெரியார் தம் கருத்தாகக் குறிப்பிட்டுள்ளார். இது இருவரின் ஒருமித்த கருத்து வெளிப்பாட்டைப் புலப்படுத்துகிறது. ஆக தந்தை பெரியார், மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோருக்கு இணையாக மதம் பற்றிய தம் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார் என்பது புலனாகிறது.

http://www.periyarthalam.com/2011/08/27/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/#more-562

Link to comment
Share on other sites

உணவு, உடை, உறையுள் - இவை மூன்றும் வாழ அத்தியாவசியமானவை. மற்றைவையெல்லாம் வாழ்வுக்கு மெருகூட்டவே தேவை. ஆனால், அவை வாழ்வில் அதிகம் கலந்தால் பிரச்சனையே, மதமும் கூட.

மதம் அரசியலில் கலக்கும் பொழுது அது மதமாக மாறிவிடுகின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.