Jump to content

உலகின் மிகப்பெரிய இந்து ஆலயம்


Recommended Posts

உலகின் மிகப்பெரிய இந்து ஆலயம்

உலகின் மிகப்பெரிய இந்து ஆலயம்

(பெண்மணி ஜூன் 2010 இதழில் வெளியானது)

உலகிலேயே மிகப் பெரிய இந்து ஆலயமான அங்கோர்வாட் ஆலயம் பண்டைய 'கம்போஜம்' என்றழைக்கப்பட்ட கம்போடியா நாட்டிலுள்ள சியாம்ரீப் நகரில் அமைந்துள்ளது.

அங்கோர்வாட் என்பதற்கு 'புனித நகரம்', 'கடவுளின் நகரம்' என்று பொருள்.

முற்காலத்தில் வியாபாரம் மற்றும் பொருளாதார உயர்வுக்காக கம்போஜ நாட்டுக்குச் சென்ற இந்தியர்கள், தங்கள் கலாசாரம், பண்பாடு, தெய்வ வழிபாடு இவற்றை அங்கு பரப்பினர். அப்போது கம்போஜத்தை ஆண்ட இந்திய வம்சாவளி மன்னர்களான இரண்டாம் ஜெயவர்மன் (கி.பி. 802) முதல் கடைசி அரசரான ஏழாம் ஜெயவர்மன் (கி.பி.1200) வரை ஆண்ட காலகட்டத்தில்தான் கம்போடியாவில் புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் உருவாக்கப்பட்டன.

இவ்வாலயங்களில் பிரதான தெய்வமாக சிவனும், மகாவிஷ்ணுவுமே இருந்திருந்தாலும், இடையில் பெளத்த மதமும் பரவியதன் காரணமாக இடைப்பட்ட மன்னர்களால் அந்த ஆலயங்கள் புத்தவிஹாரங்களாக மாற்றப்பட்டுள்ளன. அடுத்தடுத்து ஆண்ட மன்னர்கள் இரண்டு மதத்தையும் மாறிமாறிப் பின்பற்றியதால் நீண்ட காதுகள், உயர்ந்த கொண்டைகளுடன் கூடிய புத்தரைப் போன்ற தோற்றத்தில் மகாவிஷ்ணு சிலைகள் வித்தியாசமாகக் காணப்படுகின்றன.

பதினான்காம் நூற்றாண்டுக்குப் பின் சயாம், வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகளால் அடிக்கடி தாக்கப்பட்டதால் கம்போடியா சீர்குலைந்து, தம் சிறப்புகளை இழந்து காடுகளுக்குள் மறைந்து போனது. மக்கள் தம்மைக் காத்துக் கொள்ள போராடிக் களைத்து பசியிலும், பட்டினியிலும் வாடி இறந்து போக, இறுதியாக 1989க்குப் பின்பே சீர்பெற ஆரம்பித்தது. பல நூறு ஆண்டுகள் காடுகளுக்குள் காணாமல் போயிருந்த அங்கோர்வாட் ஆலயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பெருமை மேற்கத்தியரான ஹென்றி மோஹாட் என்பவரையே சேரும். 1860ல் அவர் கண்டுபிடித்த பின்பே, அங்கோர்வாட் ஆலயங்கள் சீரமைக்கப்பட்டு சுற்றுலாத் தலமாக மாறியது.

இறுதியாக பெளத்த மதமே பின்பற்றப்பட்டதால் இன்றைய கம்போடிய மக்கள் பெளத்த மதத்தவர்களாக 'க்மேர்' என்ற பெயரில் அழைக்கப் படுகின்றனர்.

கம்போடியா ஏழ்மையான நாடு. இங்கு பெண்களின் எண்ணிக்கை அதிகம். எல்லா இடங்களிலும் பெண்களே அதிக அளவில் வேலை செய்கிறார்கள். அங்கோர்வாட் ஆலயங்களில் 5 வயது குழந்தைகள் முதல் தண்ணீர், குளிர்பானங்கள், அவ்விடம் பற்றிய குறிப்புப் புத்தகங்கள் ஆகியவை விற்பதைக் காணலாம்.

இன்று அங்கு இந்துக்களே இல்லாததால் அவ்வாலயங்களில் இறைவனும் இல்லை; வணங்குவதற்கு மக்களும் இல்லை. அன்றைய நாடு கடந்த இந்துமதத்தின் சான்றாக மட்டுமே இவ்வாலயங்கள் நிற்கின்றன.

அங்கோர்தாம், பேயான், டா ப்ரோம், ப்ரேவிஹார், ப்ரே ரூப், நாம் பேகங், பன்ட்டி ஸ்ரே, பன்ட்டி க்டேய், பபுவான் என்று நம்மை வியக்க வைக்கும் ஆலயங்கள் பல இருந்தாலும் இவற்றுக்கெல்லாம் சிகரமாக விளங்குவது அங்கோர்வாட்தான். ஆகவேதான் சியாம்ரீப்பைச் சுற்றியுள்ள இந்த ஆலயங்கள் அனைத்தையும் மொத்தமாக அங்கோர்வாட் ஆலயங்கள் என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.

'உலகின் எட்டாவது அதிசயம்' எனப் புகழப்படும் அங்கோர்வாட் ஆலயம் உயர்ந்து, நிமிர்ந்து, வானளாவ நின்று நம் இந்துக் கலைக் கட்டிட உயர்வை எடுத்துக் காட்டுகிறது.

இரண்டாம் சூர்ய வர்மனால் உருவாக்கப்பட்ட இவ்வாலயம் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஆலயத்தை வெளியிலிருந்து காணும் போதே அதன் பிரம்மாண்டம் நம்மை வியக்க வைக்கிறது. பெரிய அகழிக்குப் பின்னால் கட்டப்பட்டிருக்கும் இவ்வாலய வெளிச் சுவர் 1300 மீட்டர் நீளமும், 1500 மீட்டர் அகலமும் கொண்டு, ஒரு கிலோ மீட்டர் சதுர பரப்பளவும் கொண்டது. இவ்வாலயத்தை மட்டும் சுற்றிப்பார்க்க குறைந்தது 3 மணி நேரம் ஆகும். மூன்று நிலைகளைக் கொண்ட உயர்ந்த கோபுரமும், அதனைச் சுற்றி அமைந்துள்ள நான்கு கோபுரங்களும் மேருமலையைக் குறிக்கிறது. சூரிய வர்மனின் தலைநகரமாக விளங்கிய 'அங்கோர்வாட்' விஷ்ணுவின் ஆலயமாகும்.

நீண்ட ஐந்து, ஏழு தலை நாகங்களைக் காவலாகக் கொண்டு, நீண்ட பிரகாரங்கள், கருங்கற்களால் உருவாக்கப்பட்ட உயர்ந்த கோபுரங்கள், கல்தூண்களால் கட்டப்பட்ட வரிசையான சன்னல்கள், செங்குத்தான மிகக் குறுகிய படிகள் கொண்ட இவ்வாலயங்களின் அழகு நம்மை வியக்க வைக்கிறது.

ஆலயச் சுவர்களில் 'அப்சரஸ்' எனும் தேவ மங்கையரின் விதவிதமான தோற்றாங்களைக் காணலாம். கோபுர நுழைவு வாயில்களில் ராமாயண, மகாபாரதக் காட்சிகள் காணப்படுகின்றன. இந்தக் கோவிலில் மட்டும் 2000 அப்சரஸ் சிற்பங்கள் உள்ளதாம். கீழ்நிலையின் சுற்றுச் சுவர்களில் குருக்ஷேத்திரப் போர், ராமாயணக் காட்சிகள், சொர்க்கம், நரகம் பற்றிய விளக்கங்கள் மற்றும் தேவாசுரர் பாற்கடல் கடையும் காட்சியும், சூரியவர்மன் எதிரி நாடுகளுடன் போரிட்ட காட்சிகளும் மனம் கவரும் விதத்தில் காட்சியளிக்கின்றன. பல ஆண்டுகள் காடுகளில் மறைந்து கிடந்து பல இடங்களில் சிதைந்திருந்தாலும், இன்றும் சில சிற்பங்கள் உயிரோவியமாகக் காட்சி தருகிறது. மேல்நிலைக் கோபுரம் மிக மோசமாக சிதிலமடைந்துள்ளதால் சீர்திருத்தப் பணிகள் நடைபெறுகின்றன. இவ்வாலயத்தில் மட்டும் 8 கைகள் கூடிய 15 அடி உயர விஷ்ணு சிலை காணப்படுகிறது.

இவ்வாலயத்தின் பக்கவாட்டு பிரகாரங்கள் புத்த விஹாரங்களாக்கப் பட்டுள்ளன. இங்கும் ஒரு புத்தர் சிலை வழிபடப்படுகிறது. பல புத்தர் சிலைகளுக்கு தலை இல்லை. பல ஆவுடைகளில் சிவலிங்கம் இல்லை. இங்குள்ள படிகள் மிகக் குறுகியவை, செங்குத்தானவை. பக்கச் சுவரைப் பிடிததபடி மிகக் கவனமாக ஏற வேண்டும்.

இவ்வாலயம் மேற்கு நோக்கி அமைக்கப் பட்டுள்ளதால் மாலை நேர சூரிய வெளிச்சத்தில் தங்கம் போல தகதகக்கும் காட்சி மனதை சொக்க வைக்கிறது.

இங்கு சிற்பங்களில் மட்டும் அப்சரஸ்கள் அல்ல; உண்மையான அப்சரஸ்களும் ஆங்காங்கே அமர்ந்துள்ளனர். ஆம்! சின்னப் பெண்கள் அப்சரஸ்கள் போல் வண்ண உடை, நகை அணிந்து, வெளிநாட்டுப் பயணிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். நான்கு பக்க நுழைவுவாயில்கள் நகர வீதிகளுடன் இணைக்கப்பட்டு அளவெடுத்தாற்போல் அழகு, உயரம் இவற்றுடன் அமையப்பெற்று காணப்படுகிறது.

மிகப் பெரிய அகழியும், சுவர்களும் கொண்டு ஏழாம் ஜெயவர்மனால் உருவாக்கப்பட்ட சிறந்த அரண்மனையைக் கொண்ட தலநகரம் அங்கோர்தாம். 3 கி.மீட்டர் சுற்றளவுள்ள அங்கோர்தாம் ஐந்து வாயில்களைக் கொண்டது.

இந்த அரசன் புத்த மதத்தைப் பின்பற்றியதால் 'அவலோகிதேஸ்வரா' என்ற நான்கு முகங்களைக் கொண்ட உருவ அமைப்பில் உருவாக்கப்பட்ட புதுமையான கோபுரங்களைக் கொண்ட பேயான் அரசுக்கோவிலாக விளங்கியது. தற்போது அர்ண்மனை முற்றிலும் சிதிலமடைந்து விட்டது.

ம்போடியாவில் மழையினால் அடிக்கடி வெள்ளம் வருவதால், கிராமப்புற வீடுகள் நான்கு மூங்கில் கால்கள் உயரமாக அமைக்கப்பட்டு அதன்மேல் கட்டப்படுகிறது. ம்போடியப் பட்டு மிகப் பிரபலமானது. மேலும் மரத்தால் செய்யப்பட்ட அலங்காரப் பொருட்கள், கலப்பு வெள்ளியால் செய்யப்பட்ட பாத்திரங்கள், சிறுமிருகங்கள் போன்ற பெட்டிகள் விற்கப்படுகின்றன. அங்கோர்வாட்டிலுள்ள 'இரவு நேர சந்தை' அங்கோரின் பிரபலமான பொருட்களை வாங்க சிறந்த இடம் ஆகும்.

இதன் தென்பக்க வாயிலில் ஆறடிக்கு மேல் உயரமுள்ள தேவர்களும், அசுரர்களும் நாகங்களைத் தாங்கியபடி காட்சி தருகிறார்கள். நடு நாயகமாக விளங்கும் பேயான் ஆலயத்தில் நான்குமுக கோபுரங்கள் 54, நான்கு நிலைகளில் காணப்படும் மொத்தம் 216 முகங்களும் புத்தரின் உருவங்கள் எனப்படுகிறது. நான்கு முகங்களும் ஒவ்வொரு முகபாவம் காட்டுவது இதன் சிறப்பு. தற்சமயம் இதில் 37 கோபுரங்களே காணப்படுகின்றன. அங்கோர்வாட் ஆலய பாணியிலிருந்து வித்தியாசமாக அமைக்கப்பட்டவை இந்த பேயான் பாணி கோவில்கள்.

அரண்மனையின் கிழக்கில் 350 மீட்டர் நீளத்தில் பக்கச் சுவர்கள் யானைகள் மற்றும் தேவர்கள் தாங்குவது போல் அமைக்கப்பட்டுள்ளது. மேல்தளம், அரசவை விருந்துகள், வரவேற்புகள் நடைபெறும் இடமாம். மேலும் அரச குடும்பத்தினர் அமர்ந்து நகர வீதிகளில் செல்லும் ஊர்வலங்களையும், விழாக்களையும் காண்பார்களாம்.

இதனை அடுத்துள்ளது வெண்குஷ்டத்தினால் இறந்த யசோவர்மன் என்ற அரசனின் நினைவாகக் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் 'டெர்ரேஸ் ஆப் லேபோர்கிங்' தளம். 6 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இத்தளத்தின் மேல் அமர்ந்த நிலையில் காணப்படும் இந்த அரசனின் சிலை, அங்கங்கு வெண்திட்டுகளுடன் காணப்படுகிறது. இத்தளத்தின் பக்கவாட்டு உள், வெளிச் சுவர்களில் காணப்படும் தேவர்கள், அசுரர்கள், அப்சரஸ்களில் தோற்றங்கள் இன்று செதுக்கியது போல் காணப்படுவதே இதன் சிறப்பு.

'பன்ட்டி ஸ்ரே என்ற' ஆலயம் 'பெண்களின் கோட்டை' எனப் புகழ் பெற்ற சிவாலயம். இங்குள்ள நுழைவுவாயில் சிற்பங்கள் மிகத் துல்லியமாக செதுக்கப்பட்டுள்ளன. கம்ச வதம், காளிய நர்த்தனம், சிவபார்வதி சிற்பங்கள் அழகானவை.

ம்போடியாவில் மன்னர் வம்சம் தொடர்ந்து வருகிறது. இதன் தலைநகரான 'நாம் பென்னில்' அரசரின் மாளிகை உள்ளது. அங்குள்ள 'சில்வர் பகோடா' என்ற புத்தர் ஆலயத்தில் மரகதத்தாலான புத்தரின் சிலை அருமையாகக் காட்சியளிக்கிறது. மற்றும் மறைந்த மன்னர்களுக்கான நினைவு மண்டபங்களும் உள்ளன.

தற்கால மன்னர்கள் வாழும் இல்லமும் அருகிலேயே அமைந்துள்ளது. இங்குள்ள நேஷனல் மியூசியத்தில் கம்போடியாவின் அக்கால நாகரீகம், வாழ்க்கை முறை, க்மேர் மக்களின் பண்பாடு, கலாசாரம் பற்றிய காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கோர்வாட் ஆலயங்களிலிருந்து எடுத்து வரப்பட்ட சிவலிங்கம், விஷ்ணு, புத்தர் சிலைகள் இங்கு பயணிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

'டுக்டுக்' என்ற ரிக் ஷாக்களின் முன் பக்கம் ஸ்கூட்டர்கள் இணைத்து ஓட்டுகிறார்கள். பஞ்சம், பட்டினியால் வாடியபோது கரிய வண்டுகள், எட்டுக்கால் பூச்சிகள், வெட்டுக்கிளிகளை வறுத்துச் சாப்பிட்டார்களாம். இன்றும் சந்தைகளில் இந்த வறுவல்கள் ஏராளமாக விற்கப்படுகின்றன. பார்கும்போதே வயிற்றைக் குமட்டும் இவற்றை கம்போடிய மக்கள் மிக ருசித்து சாப்பிடுகிறார்கள். இங்கு அமெரிக்க டாலரே உபயோகிக்கிறார்கள்

'ப்ரே கான்' என்ற ஆலயம் ஏழாம் ஜெயவர்மன் தன் தந்தைக்கு அர்ப்பணமாக உருவாக்கியது. இது பெளத்த விகாரமாக இருந்து 1000 பெளத்த குருமார்கள் இங்கு பாடம் கற்றுக் கொடுத்ததாக அறியப்படுகிறது.

'ப்ரஸாத் க்ராவன்' என்ற ஆலயம் முதலாம் ஹர்ஷவர்மனால் மகாலட்சுமிக்காக உருவாக்கப்பட்ட ஆலயமாகும். ஐந்து கோபுரங்கள் வரிசையாக அமைந்து ஒரு தாமரை போல் காணப்படும் இவ்வாலயத்தில், இன்னமும் ஓவியங்கள் அழியாமல் காட்சி தருவது இதன் சிறப்பு.

முதலாம் யசோவர்மனால் ஒன்பதாம் நூற்றாண்டில் இந்து எண்கணித அடிப்படையில் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய ஆலயமான 'நாம் பெகங்க்' 65 மீட்டர் உயரமுள்ள ஐந்து நிலை கோபுரத்துடன் அமைந்துள்ளது. சுற்றிலும் 108 சிறிய கோபுரங்கள் வளர்பிறை, தேய்பிறை நாட்களைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. தினமும் பல்லாயிரக் கணக்கான பயணிகள் முதல் மலைக் கோயிலான இங்கு சென்று சூரிய அஸ்தமனத்தைக் கண்டு மகிழ்வதுடன், அந்நேரம் அச்சூரிய ஒளியில் அற்புதமாகக் காட்சி தரும் அங்கோர்வாட்டையும் காண்கிறார்கள். மலைமீது நடந்து ஏறமுடியாதவர்கள் வசதிக்காக யானை சவாரியும் உண்டு.

'பால் ஸ்பீன்' மற்றும் 'நாம் குலேன்' என்ற மலைகளில் ஓடும் நதி ஆயிரம் லிங்க நதி எனப்படுகிறது. பாம்புப் புற்றுகளும், கிரீச்சிடும் பல பூச்சிகளும் நிறைந்த கரடு முரடான மலைப் பாதையில் சுமார் 2 கி. மீட்டர் ஏறிச் சென்றால், தெள்ளத் தெளிவாக ஓடும் நதியின் அடியில் ஒரேவடிவில் ஏகப்பட்ட லிங்க வடிவங்கள். இது தவிர நதியின் இரு பக்கமும் பிரம்மா, விஷ்ணு, சிவன், கணபதி என்று கடவுளர் சிற்பங்கள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. இந்நதி கம்போடியாவின் மிகப் புனித நதியாகக் கருதப்படுகிறது. இம்மலை ஏறிச் செல்வது சற்று கடினம் என்றாலும், இது ஒரு வித்தியாசமான அனுபவம். நாம்குலேனில் ஒரு அழகிய அருவியும், புத்தர் ஆலயமும் உள்ளது. இம்மலையில்தான் இரண்டாம் ஜெயவர்மன் தன்னை 'இறையரசன்' என்று அறிவித்தான்.

ஏழாம் ஜெயவர்மன் தன் தாயாருக்காக 'ப்ரக்ஞபரிமித்ரா' என்ற சிலையுடன் கட்டிய ஆலயம் 'டா ப்ராம்'. 39 கோபுரங்களைக் கொண்ட இவ்வாலயம் நீண்ட பிரகாரங்கள், கலையழகு மிக்க நுழைவு வாயில்களுடன் புத்தரின் வாழ்க்கை வரலாறு, துவாரபாலகர், அப்சரஸ் சிலைகள் என்று இன்னமும் காணப்படுகிறது. செல்வச் செழிப்புடன் விளங்கிய இவ்வாலயம் புத்த விஹாரமாக இருந்ததாம். 3000 கிராமங்களை உள்ளடக்கியதாகவும் பல ஊழியர்கள் பணிபுரிந்த தங்க, வெள்ளி நகைக் கடைகளும் இங்கு இருந்ததாம். இவ்வாலயத்தில் தங்கமும், விலைமதிப்பற்ற முத்து, உயர்ரகக் கற்கள் இருந்ததாகவும் இவ்வாலயச் சுவர்களில் எழுதப்பட்டுள்ளது. காட்டு மரங்களின் வேர்களும் கிளைகளும் ஆலயத்துடன் பின்னிப் பிணைந்து ஒரு அதி அற்புத இயற்கை காட்சியாக இந்த ஆலயம் காணப்படுகிறது.

இவ்வாலய சீர்திருத்தப் பணியில் இந்தியாவும் பங்கு பெற்றுள்ளது. இது போலத்தான் எல்லா ஆலயங்களும் மரத்தினடியில் மறைந்து போய் காட்டுக்குள் இருந்ததை நாம் தத்ரூபமாக உணரும் பொருட்டு இவ்வாலயம் மட்டும் தற்போது காட்டுச் சூழலிலேயே காணப்படுகிறது.

அங்கோர்வாட்டின் அற்புத ஆலயங்களை ஆற அமர ரசிப்பதற்கு மூன்று நாட்கள் தேவை. இந்தியாவிலிருந்து அங்கோர்வாட் கோயில்கள் அமைந்துள்ள சியாம் ரீப்பிற்கு சிங்கப்பூர், மலேசியா வழியாகச் செல்லலாம். அங்கோர்வாட் சுற்றுலா பயணம் நிச்சயம் ஒரு வித்தியாசமான, புதுமையான அனுபவத்தைத் தரும்

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

சரியா தெரியல ...

http://www.touropia.com/largest-temples-in-the-world/

Link to comment
Share on other sites

இந்த கோயிலுக்கு நான் போயிருக்கிறன். பாழடைஞ்சு போய் இருக்கு சூரிய தெய்வத்திற்கான கோயில் மற்றைய இந்து கடவுள் விக்கிரகங்களும் இருக்கு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.