Jump to content

இலண்டனில், நெல்லியடி ம.ம.வி பழைய மாணவர்களின் ஒன்றுகூடல்


Recommended Posts

யாழிலுள்ள பிரபல பாடசாலைகளில் ஒன்றான நெல்லியடி மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் வரும் சனிக்கிழமை மாலை "Croydon" பகுதியிலுள்ள "Lanfrank School" மண்டபத்தில் நடைபெற உள்ளது.

ஒரு காலத்தில் யாழிலுள்ள பாடசாலைகளில் அழகிய கட்டடங்கள், பாரிய மண்டபங்கள், பாரிய விவசாய/கால்நடை பீடம், விளையாட்டு ஸ்ரேடியம் என்று எல்லாவாற்றையும் ஒருங்கே கொண்டிருந்த கல்லூரியாகும். பின் இலங்கைப்படைகளின் முகாமாக்கப்பட்டு சிதைவுற்ற இக்கல்லூரி, கப்ரன் மில்லரின் வரலாற்றுடன் மீட்டெடுக்கப்பட்டதும், இன்று அரச உதவிகள் பாரியளவில் இல்லாதிருந்தும் மீண்டும் எழ முற்படுகிறது.

வடமராட்சிப் பகுதியிலுள்ள ஏனைய பிரபல பாடசாலைகளான "காட்லிக் கல்லூரி, மெதடிஸ் பெண்கள் கல்லூரி, சிதம்பராக் கல்லூரி" போன்றன இராணுவ முகாங்களுக்குள் முடங்கிய நிலையில் இன்று, அப்பிரதேசத்தினது கல்வித்தாகத்தினை நெல்லியடி மத்திய மகா வித்தியாலயமே பூர்த்தி செய்வது இங்கு குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் சிறப்புற நடக்க வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

நேற்று லண்டன் குறைடன் பகுதியிலுள்ள "Lanfrank School" மண்டபத்தில் நடைபெற்ற நெல்லியடி மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர்களின் ஒன்று கூடலுக்குச் சென்றிருந்தேன்! அப்பாடசாலையில் படிக்காதனாயினும், அம்மண்ணில் பிறந்தவனென்றபடியாலும், ஒரு பெரும் சரித்திரத்தை எழுதிய பாடசாலையென்ற படியாலும் சென்றிருந்தேன். மிக நேர்த்தியாக ஒருங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சிகளின் ஊடே நடைபெற்ற ஒன்றுகூடல்! மண்டபம் நிறைந்த பார்வையாளர்களினூடே நடைபெற்ற நிகழ்ச்சிகளில், ஆரம்பம் முதல் இறுதிவரை ஆசனங்களிலிருந்து அகராமல் இரசித்தது நிகழ்ச்சிகளின் தரத்தை உணர்த்துவதாக இருந்தது.

லண்டன் பகுதிகளிலுள்ள பல பிரபல வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் இக்கல்லூரியின் பழைய மாணவர்களாக இருப்பது, அக்கல்லூரியின் வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருக்கப்போவது நேற்று கண் கூடாகத் தெரிந்தது. இப்பாடசாலை மண்டபத்தை பொறுப்பெடுத்து, அதனை சர்வதேச தரத்திற்கு நிகராக பாரிய அளவில் அமைப்பதற்கு இங்கு உறுதியளிக்கப்பட்டது.

இனிதே நிறைவுற்ற இந்நிகழ்ச்சிகளில் சிங்கள வெறியர்களினால் சிதைக்கப்பட்ட இப்பாடசாலையின் வளர்ச்சிக்கு சில உரமூட்டக்கூடிய செயற்பாட்டுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் இதேவேளை அந்நிகழ்ச்சிக்கு வந்த மக்களிடையே சில ஆதங்கங்களும் வெளிப்பட்டதையும் கவனிக்கக்கூடியதாக இருந்தது. குறிப்பாக இப்பாடசாலையின் இணையத்தளங்கள், அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் பகுதியை தளமாகக் கொண்டியங்கும், இப்பாடசாலைக்கே தொடர்பற்ற, எம்மினத்தில் விலைபோன கூலிகள் சிலரிடம் சிக்கித் தவிப்பதையும், அதனை விடுவிப்பது அல்லது மாற்றீடுகளைச் செய்ய வேண்டிய தேவைகளையும் வலியுறுத்தியதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

ஆகா..நம்ம மத்திய மகா வித்தியாலயமா? ம்ம்..நிகழ்வு நன்றாக நடை பெற என்னுடைய வாழ்த்துக்களும்

Link to comment
Share on other sites

நிகழ்வு நடைபெற்று முடிந்ததாகவும் அதற்கு போனதாகவும் கனொன் எழுதியிருக்காரே :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ப்ரியசகி

வாழ்த்துக்கள் சரி, ஆனால் நீங்கள் கிட்டத்தட்ட 15 நாட்கள்தான் தாமதம்.

Link to comment
Share on other sites

நிகழ்வு நடைபெற்று முடிந்ததாகவும் அதற்கு போனதாகவும் கனொன் எழுதியிருக்காரே :P

:? :? :lol: நான் மேல் விடயத்தை மட்டும் வாசித்து விட்டு நம்ம மத்திய மகா வித்தியாலயம் ஆச்சே என்று ஒரு வாழ்த்து சொன்னேன்..கீழே மற்ற்வர்கள் எழுதியதை அப்போது கவனிக்கவில்லை.. :?

மன்னியுங்கள்.. :?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.