Jump to content

ஈழ இனப்படுகொலைக்கு விசாரணை கோரி 'அமெரிக்க வெள்ளை மாளிகையின் இணையத்தளத்திலேயே' ஒரு விண்ணப்பம் தொடங்கப்பட்டிருக்கிறது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"நம்பிக்கையே வாழ்க்கை"யென யாரோ சமீபத்தில் இலங்கையில் சொன்ன ஞாபகம்..

அதனால் மீண்டும் முயற்சிக்கு..

http://wh.gov/4oa

.

Link to comment
Share on other sites

  • Replies 83
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதற்காக பல தடவைகள் முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை இலகுவாக கை நாட்டு போடவழி தெரிந்தவர்கள் உதவினால் பேருதவியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

இதற்காக பல தடவைகள் முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை இலகுவாக கை நாட்டு போடவழி தெரிந்தவர்கள் உதவினால் பேருதவியாக இருக்கும்.

உங்களுக்கு பிரச்சனை கொடுக்கும் பகுதியை "Ctrl + Prt Scr" Keyகளை சேர்த்து அமர்த்தி screen saving செய்து, Paint ன் மூலம் இங்கே வெட்டி ஒட்ட முடியும். அல்லது முடிந்தவரை விவரம் எழுத்த பாருங்கள்

சிலவழிகள்:

1. உங்கள் கணனிகளை மீள ஆரம்பியுங்கள்.

2. வேறு நேரத்தில் கை நாட்டு இட பாருங்கள்.( காலை, மாலை)

3. வேறு பிறவுஸ்சரை உபயோகியுங்கள். (i.e, firefox, safari, chrome)

4. வேறு வகை கணனிகளுக்கு சென்று செய்ய பாருங்கள். (Apple, IBM)

5.வேறு இடத்து கணனிகளை உபயோகப்படுத்த பாருங்கள( காரியாலயம், வீடு, வாசிகசாலை, நண்பர் வீடு)

6.சில மென் பொருள்களை இடைநிறுத்திப் பாருங்கள். (Firewall)

Link to comment
Share on other sites

இதற்காக பல தடவைகள் முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை இலகுவாக கை நாட்டு போடவழி தெரிந்தவர்கள் உதவினால் பேருதவியாக இருக்கும்.

மல்லையூரான் தந்த பதிலுடன்:

1. கணக்கு ஒன்றை திறப்பதில் பிரச்சனையா? இல்லை

2. திறந்த கணக்கை பின்னர் உங்கள் மின்னஞ்சல் ஊடாக இயக்கவைப்பதில் பிரச்சனையா? இல்லை

3. இயங்கும் கணக்கை அந்த தளத்தில் வைத்து உங்கள் பெயரை பதிவதில் பிரச்சனையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியோ கண்டுபிடிச்சு 2118உதவியவர்களுக்கு நன்றி குறிப்பாக மல்லையூரான் மற்றும் அகூதா இருவருக்கும் மீண்டும் நன்றி.

Link to comment
Share on other sites

நான் 2186 கையெழுத்து போட்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

உங்களுக்குத் தெரிந்தவர்கள் நண்பர்களிடமும் கையெழுத்திடும்படி கேழுங்கள். ஒன்றையும் இழக்கப் போவதில்லை. முயற்சிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பங்கிற்கு 5 பேரைவிட்டு வாக்களித்துள்ளேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய மெயில் விலாசம் ஏற்கனவே பதியப்பட்டிருப்பதாகவும் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா

என்றும் மீண்டும் மீண்டும் வருகின்றது.

எனக்கு எங்கிருந்தும் கடவுச்சொல் கிடைக்கவில்லை

அதை எப்படிப் பெற்றுக்கொள்வது?

Link to comment
Share on other sites

என்னுடைய மெயில் விலாசம் ஏற்கனவே பதியப்பட்டிருப்பதாகவும் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா

என்றும் மீண்டும் மீண்டும் வருகின்றது.

எனக்கு எங்கிருந்தும் கடவுச்சொல் கிடைக்கவில்லை

அதை எப்படிப் பெற்றுக்கொள்வது?

post-8566-0-72919700-1317945794_thumb.jpg

நீங்கள் முதலில் உங்கள் கணனியை அல்லது Internet Explorer யை மூடி, திரும்ப தொடக்குங்கள். பின்னர் தரப்பட்ட இணைப்பில் சொடுக்கி வெள்ளை மாளிகை தளத்திற்கு செல்லுங்கள் அந்த பக்கத்தில் உள்ள “SIGN IN” பொத்தானை அமுக்குங்கள்.

post-8566-0-63274400-1317945796_thumb.jpg

அந்த பக்கத்தில் உள்ள “Forgot Your Password” இணப்பை அமுக்கி உங்கள் மின்னல் அஞ்சல் விலாசத்தை பதிவு செய்துவிடுங்கள். அவர்கள் உங்கள் கடவு சொல்லை திரும்ப அமைத்து உங்கள் மின்னல் அஞ்சலுக்கு அனுப்பிவிடுவார்கள்.

Link to comment
Share on other sites

இணப்பு சிலசமயம் நேரே தேவையான Petitionநிற்கு செல்வதில்லை.

இங்கே சொடுக்குங்கள்.

https://wwws.whiteho...-lanka/h0bvBbSg

(நேற்று இந்த இணப்பும் தொழில் படாது இருந்திருக்கிறது. இன்று திருத்தியுள்ளேன். முயற்சித்து பார்க்கவும்.)

கிடைக்காவிட்டால் Pettions இன் உள்ளே போய் support an international investigation அல்லது Sri Lank என்று தேடுங்கள்.

Page cannot be found என்று வந்தாலும் பொது Petitions பக்கத்தில் உள்ள தேடு பொத்தானை உபயோகித்து தேடுங்கள்.

இப்போது தேவைப்படுவது 2330.

தமிழ் நாட்டு உறவுகள் அக்கறைகாட்டுமளவிற்கு தன்னும் புலம் உறவுகள் அக்கறை காட்ட வேண்டும். பிரத்தியேக நன்றி தமிழ்நாட்டு உறவுகளுக்கு. 5000 மட்டும் எங்கள் குறிக்கோளாக இருக்க படாது. வெள்ளை மாளிகையை விளிக்க வைக்கதக்க அளவு கையொப்பங்கள் தேவை.

Link to comment
Share on other sites

தமிழ் நாட்டு உறவுகள் அக்கறைகாட்டுமளவிற்கு தன்னும் புலம் உறவுகள் அக்கறை காட்ட வேண்டும். பிரத்தியேக நன்றி தமிழ்நாட்டு உறவுகளுக்கு.

எல்லா உறவுகளுக்கும் நன்றிகள்.

5000 மட்டும் எங்கள் குறிக்கோளாக இருக்க படாது. வெள்ளை மாளிகையை விளிக்க வைக்கதக்க அளவு கையொப்பங்கள் தேவை.
முற்றிலும் உண்மை மல்லையூரான்.
Link to comment
Share on other sites

வாக்களித்தோருக்கு நன்றி.

நிறைய தமிழரல்லாதாரும் வாக்களித்திருக்கிறாகள்.

தன் கையயே தனக்குதவி. தமிழர்கள், நாம் முன்னின்று நமக்கு தீங்கு விளைத்த ராசபக்சாவை கூண்டில் ஏற்ற உழைக்க வேண்டும்.

இன்னமும் 2079 கையெழுத்துகள் தேவைப்படுகிறது. நீங்கள் நேரே போகமுடியவில்லையாயின் இந்த இணைப்பை சொடுக்குங்கள்.

https://wwws.whiteho...-lanka/h0bvBbSg

இல்லாவிடில் "Open Petition" என்பதை சொடுக்கி உள்ளே சென்று International Investigation அல்லது Sri Lanka என்ற பதங்களை உபயோகித்து Petition நை தேடுங்கள். Petition தெரிய தொடங்கியவுட்ன் Find More Information என்ற பொத்தானை அமத்தி உள்சென்று கைநாட்டு இட முடியும்.

Link to comment
Share on other sites

3000 மேலும் 2000 இன்னும் 20 நாட்கள் உள்ளன. நான் முகநூலில் இணத்துளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இதுவரை ஆறு கையொப்பங்களை உறுதி செய்துள்ளேன். இன்னும் நண்பர்களை இழுக்க வேண்டும், கடக்க வேண்டிய தூரம் சிறிதளவே.

Link to comment
Share on other sites

கையெழுத்துகள் தேவைப்படுவது 1860.

மணித்தியாலத்திற்கு 10 கையெழுத்துகள்.

தினம் 250 கையெழுத்துகள்.

நாங்கு நாட்களில் 1000 கையெழுத்துகள் என்றால்

இன்னும் எட்டு, பத்து நாட்களில் குறைந்த பட்ச இலக்கை அடைந்துவிடலாம்.

ஆனால் அது போதுமா எமக்கு.

500,000 தமிழீத்தமிழர்களுக்கு மேல் புலத்திலிருக்கிறார்கள்.இவர்களில் 50%மேல்(250,000) கணனி ஒன்றை எட்டத்தக்கவர்களாக இருக்க வேண்டும். இவர்களில் 20% தாயகத்தின் மீது கரிசனை காட்டி வக்களித்தால் 50,000 கையொப்பம் புலம் பெயர் தமிழர்களிடம் இருந்து மட்டும் வரலாம்.

Link to comment
Share on other sites

வேண்டிய வாக்குகள் 1459

கடந்த இண்டரை வருடகாலத்திலும் பார்க்க, கடந்த ஓரிருமாதங்களின் நடப்புகள் போர்குற்ற விசாரணையை அவசியமாக்கி விட்டுவிட்டன. ஆர் குத்தியோ சில அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இவை போர்குற்ற விசாரணையின் அவசியத்தை மட்டுமின்றி அவசரத்தையும் மிகைப்படுத்தியுள்ளன.

கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து போன்ற நாடுகள் தமது இலங்கைக்கான நிபந்தணையற்ற ஆதரவை ரத்து செய்து விட்ட.ன. இவை இலங்கை அரசு தமிழர்களுக்கு ஒரு தீர்வு காட்ட அழுத்தத்தை கொடுத்து நிர்பந்திக்க தொடங்கியிருக்கின்றன. அமெரிக்க அரசு, ஏமாற்று அதிகாரிகளின் கையில் மட்டும் விட்டு விடாமல் ராசாங்க அமைச்சும் இலங்கை விடயத்தில் தனது நேரடி பார்வையை செலுத்த தொடங்கியிருக்கிறது. இந்த அழுத்தங்களினால் இலங்கை அரசு அவசரமவசரமாக இன்னோரு சோல்பரி (பலனில்லாத, ஆனால் பார்வைக்கு நியாமானது போல்த்தோன்றும்) அரசியல் அமைப்பொன்றை தமிழர்கள் மீது திணித்து தன்னை விடுவிக்க முயலலாம். இந்த ஆபத்து நமக்கு இந்தியாவின் பக்கத்திலிருந்து வரதக்க சந்தர்ப்பம், மற்றைய நாடுகளையும் விட இன்னும் அதிகமாக இருக்கிறது. பழய மும்மூர்த்திகள் இல்லாததும், புதிய வெளிவிவகார அதிகாரி இன்னமும் இலங்கை ஊழல்களால் வாங்கப்பட்டு முடியாமையும் இலங்கைக்கும் பெரிய பந்தையமாக மாறியிருக்கிறது. இந்தியா தனது பக்கத்தில் உணரும் நெருக்கடிகள்

1. இந்தியாவிற்கு இலங்கையிலிருந்து சீனாவை மற்றைய எல்லா நாடுகளிலும் பார்க்க அதிக ஆர்வத்துடன் வெளியேற்றியாக வேண்டும்.

2. அதை அமெரிக்காவோ அல்லது வேறு எந்தவொரு மேற்கு நாட்டின் தலையீடோ இல்லாது செய்து முடிக்க வேண்டும்.

3. இதை செய்யும் போது மேற்கு நாடுகளை கோபபடுத்தாமல் செய்ய வேண்டும்.

4. இலங்கை சம்பந்தமாக தனது போர்குற்ற ஒத்தாசை உதவிகளை, சேர்பாடுகளை நேரத்திற்கு மூடிமறைத்து விட வேண்டும். இல்லையேல் ஐ.நா நிரந்தர அங்கத்தவர் ஆசை முன் செல்லாது.

5. தமிழ்நாட்டுத் தோல்வி, தமிழ்நாட்டு காங்கிரஸ் அலகையே இல்லாமல் செய்து விட்டது. அந்த தோல்வியை இனியும் மறுக்காமல் தமிழ் நாட்டில் கிடைக்கதக்க வாக்குகளை தமிழர்களிடம் இரந்து வேண்ட வேண்டிய தேவை காங்கிரசுக்கு மற்றைய மானிலங்களில் இருந்து எழும்ப ஆரம்பித்திருக்கிறது.

இதன் காரணமாக இந்தியா ஈழத்தினர் மீதும், இலங்கை மீதும் தான் விரும்பும் ஒரு அரசியல் அமைப்பை திணிக்க முயன்றால் அது ஆச்சரியபடுவத்கில்லை.

இப்படியான ஒரு அரைவேக்காட்டு தீர்வு உலக நாடுகளால் தமிழர்கள் மீது திணிக்க படுவது தடுக்க படவேண்டுமாயின் தமிழர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு துரும்பு போர்க்குற்ற விசாரணை.

ஆற்றுக்குள் விழுந்து தத்தளிப்பவனுக்கு அருகில் மிதக்கும் துரும்பை எட்டிபிடிக்க முயல்வதும் ஆபத்து போலத்தான் படும். ஆனால் வெளியில் நின்று அவனுக்கு உதவ முயலும் உறவுக்கு விழுந்தவன் அந்த துரும்பை பற்றிவிட்டானாயின் அவனை மீட்பது சுலபம் என்பது தெரியும். அதனால்த்தான் தாயக மக்களோ அல்லது அரசியல் கட்சிகளோ ஆதரவு அளிக்கவிட்டாலும் புலம்பெயர் மக்கள் அதன் அவசியத்தையும், அவசரத்தையும் உணர்ந்து செயலாற்ற வேண்டியவர்களாக இருக்கிறது. எனவே பிரட்டப்படாத கல்லென்று ஒன்றில்லாமல் எல்லோரும் சேர்ந்து உழைத்து இந்த போர்குற்ற விசாரணையை நிஜமாக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

புலம் பெயர் மக்கள் போராடத்தை ஊக்குவிப்பவர்கள் என்று பெயர் எடுத்தவர்கள். இவர்களின் ஊக்குவிப்புக்களாலோ அல்லது வேறு எதனாலோ தாமே முன்வந்து உயிரையே கொடுத்து போராடிய இழைஞர் திலகங்கள் மட்டும் 50,000 தை எட்டும்.

இதில் கொல்லப்பட்ட அப்பாவிகளின் கணக்கு வேறு. அது 150,000தை தாண்டும். ஆனால் 5,000 பேர் முன்வந்து விசாரணைக்கு ஒப்புதல் கொடுத்தால் இதில் ஒரு விசாரணை தொடங்கி நீதி கிடைக்க சந்தர்பம் இருக்கு.

நம் உறவுகள் கொலை செய்யபட்டு இறந்துவிட்டார்கள். விசாரணை ஒன்று நடந்து அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். நாம் அதற்கு ஒப்புதல் கொடுத்து, முன்னின்று நியாயம் கேட்டு, விசாரணையை தொடக்கி வைக்க வேண்டாமா? எப்படி நாம் எமக்கேன் இந்த வம்பு; நாமுண்டு; நமது குடும்பம் உண்டு; நளைக்காலை எமது தொழில் உண்டு என்று ஒதுங்க முடியும். இழக்க இதில்(அகுத மேலே ஓரிடத்தில் கூறியிருப்பது போல்) ஒரு ஐந்து நிமிட பொழுதை தவிர வேறு எதைத்தான் கற்பனை தன்னும் பண்ணி பார்க்க முடியும்?

நீங்கள் கொடுக்கும் ஒரு ஒப்புதலில் 30 பேருடை கொலைக்கு ஒரு விசாரணை ஆரம்பமாகச் சந்தர்ப்பமிருக்கு. எத்தகைய வலு வீதம் இது?. நம் உறவுகள் 50,000 ஏற்கனவே முன்வத்து இந்த விடுதலைக்கு உயிரைக்கொடுத்து உதாரணம் காட்டியிருகிறார்கள். இப்போ நாம் 5000 பேர் முன்வந்து இந்த ஒப்புதலிற்கு கைநாட்டு இட்டு இறந்த வீரர்களோடு இறந்து விடாமலிருக்க எமது தமிழீழ விடுதலை கனவுக்கு உயிர் கொடுக்க மாட்டோமா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.