Jump to content

சீன எச்சரிக்கையை மீறி இந்தியாவுக்கு வியட்நாம் அழைப்பு


Recommended Posts

ஹனோய்:அக்டோபர் 09,2011,19:55 IST

"வியட்நாம் எல்லைக்கு உட்பட்ட கடல் பகுதிகளில் இந்தியா மற்றும் பிற வெளிநாடுகள், எண்ணெய் மற்றும் வாயு வளத்தைக் கண்டறிய வியட்நாம் அரசு அழைக்கிறது' என, அந்நாட்டு அதிபர் கூறியுள்ளார்.

வியட்நாம் எல்லைக்குட்பட்ட தென் சீனக் கடலில், இந்தியா, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளத்தைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

ஏற்கனவே, தென் சீனக் கடல் முழுவதையும் சொந்தம் கொண்டாடி வரும் சீனா, இந்தியா தனது பணிகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரித்தது. ஆனால், இந்தியாவும், வியட்நாமும், சீனாவின் எச்சரிக்கையை புறக்கணித்து விட்டன.

இந்நிலையில், நாளை மறுநாள் முதன் முறையாக இந்தியா வர உள்ள வியட்நாம் அதிபர் ட்ரூவாங் டன் சங், இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்படும் விதத்தில் நடவடிக்கைகள் எடுக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், "வியட்நாம் கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில், இந்தியா மற்றும் வெளிநாடுகள், எண்ணெய் வளத்தைக் கண்டறிய வர வேண்டும். இது வியட்நாமின் இறையாண்மைக்கு உட்பட்டது. மேலும், 1982ம் ஆண்டு ஐ.நா., கடல் சட்டத்தின்படி இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது' என்றார்.வியட்நாம் அதிபரின் இந்தியப் பயணத்தின் போது இருதரப்பு பொருளாதாரம், வர்த்தகம், கலாசாரம் மேம்படும் வகையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=328388

Link to comment
Share on other sites

  • Replies 81
  • Created
  • Last Reply

சபாஷ்.. சரியான போட்டி..! :wub:

Link to comment
Share on other sites

சபாஷ்.. சரியான போட்டி..! :wub:

சமாந்தரமாக நீண்ட காலம் பயணிக்க முடியுமா:

வியட்னாம் அருகே உள்ள சீனாவையும் தாண்டி இந்தியாவை அழைக்கின்றார்கள்;

சிங்களம் அருகே உள்ள இந்தியாவை தாண்டி சீனாவை அழைக்கின்றார்கள்;

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானை மீறி அந்த நாடு இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம்;

ஆபிரிக்காவில் சீனாவுடன் ஒப்பிடமுடியாவிட்டாலும் இந்தியா இந்த வருடம் 5B USD முதலீடு;

Link to comment
Share on other sites

நல்ல நிலையில் உள்ள குதிரையான சீனாவுடன் நொண்டிக்குதிரையான இந்தியாவும் தாண்டி தாண்டி ஓட வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. :)

Link to comment
Share on other sites

நொண்டிக்குதிரை ?????????????????????? இந்த வருடத்தின் மிகப்பெரிய சிரிப்பு

சீனாவை மீறி இந்தியாவிற்கு அழைப்பு. அழைத்தது எங்கேயோ இருக்கும் நாடு . இந்தியா நொண்டி குதிரை என்பது வியட்நாம் நாட்டுக்கே தெரியாது . ஆனா யாழ் களத்தில் இருக்கும் நம்மவர்களுக்கு தெரிந்து இருக்கிறது .

இந்திய விரோத போக்கு இன்னும் இருப்பது ஈழ விடுதலைக்கு இழப்பு. ஈழ விடுதலை பற்றி பேசி நாலு காசு பார்க்கலாம் என்று இருப்பவர் மட்டுமே இந்திய எதிப்பு பற்றி கூறுவார்கள் .

ஒரே வார்த்தை . சூரியனை பார்த்து எதோ குறைத்தால் எதற்கு நட்டம் ?????

இப்போது தமிழ் நாட்டை ஆளும் அம்மணி இந்திய விரோத போக்கை முற்றிலும் விரும்பாதவர் . இப்படியே நீங்கள் இருந்தால் நாளை அம்மா அபௌட் டர்ன் அடித்து விடுவார் . ஜாக்கிரதை .

ஈழத்திற்காக ஈழ தமிழர் போராடி மாண்டனர் . இந்திய தமிழர் தீக்குளித்து மாண்டனர் . இங்கே சிலர் இந்திய வெறுப்பை சொல்லியே காலம் ஓட்டுகின்றனர் .

இந்தியாவை பற்றி சொல்லிகிட்டே இருங்கள் . இந்தியாவும் உயர்ந்து கொண்டே இருக்கும் . அப்புறம் நீங்கள் நினைத்தாலும் பிடிக்க முடியாத உயரத்தில் இந்தியா சென்று விடும் . இந்தியா என்றால் தமிழ் நாடும் அதில் அடங்கும் . அப்புறம் ஈழத்திற்கு குரல் கொடுக்க இந்தியாவில் யாரும் தயாராக மாட்டார்கள் . இப்போதே இந்தியாவுடன் நகருங்கள் . அதுதான் உங்களுக்கும் நல்லது .

மேலும் ஒரு வார்த்தை . இந்தியா மீது சேறு இறைக்கும் போது உங்களுக்கு தெரியாமல் தமிழன் மீதும் சேறு படுகிறது என்பதை நினைவில் நிறுத்தவும்

சிகப்பு புள்ளிகள் கிடைத்து ரொம்ப நாளாகி விட்டது . தயவு செய்து எவ்வளவு சிகப்பு குத்த முடியுமோ அவ்வளவு குத்தவும் . ஏனெனில் நான் மீன் போன்றவன் . நீரை சுத்தபடுத்துவது போல உங்களிடம் உள்ள குறைகளை சுத்த படுத்தும் பொறுப்பு தமிழனாகிய எனக்கும் உண்டு .

Link to comment
Share on other sites

இந்தியா மீது இவ்வளவு நடந்த பின்னரும் இது வரை புலிகள் கூட வெறுப்பு நிலை எடுக்கவில்லை. முள்ளி வாய்க்கால் வரை சென்ற பிறகும் இந்தியா எங்களின் தொப்புள் கோடி என அறிக்கை வந்தது . அவர்தான் உண்மையான தமிழர்கள் தமிழ் ஈழ வீர்கள் . எதுவுமே செய்யாமல் கணினியை வைத்து கொண்டு இந்தியா மீது வெறுப்பை உமிலுபவர்கள் ஒன்றும் உண்மையான தமிழர்கள் அல்ல . எதிரி ராஜபக்ஷே கூட எள்ளி நகையாடும் நிலையில் தமிழினத்தை தள்ளியது கணினி வீரர்களே. ( புலம்பெயர் தமிழருக்கு தமிழே தெரியாது - ராஜபக்ஷே )

Link to comment
Share on other sites

உணர்வால் இந்தியா இன்றும் என்றும் ஒன்று தான் . இன்று அரசியல் சூழ்நிலை சரியில்லை என்பதை அமோதிக்கிறேன் . ஆளானப்பட்ட இந்திரா காந்தி அம்மையாரையே மண்ணை கவ்வ வைத்தவர்கள் நாங்கள் . சோனியாவோ சூநியாவோ அது யாராக இருந்தாலும் சரி இந்தியா மக்கள் மன்றத்தில் வெகு காலம் இருக்க நிறைய தேவை . இலங்கை மாதிரி இங்கு இல்லை . தெற்கு பக்கம் தமிழர் விரோதம் இருந்தால் வெல்லலாம் . வடக்கு பக்கம் சிங்கள விரோதம் இருந்தால் வெல்லலாம் என்பது போல இங்கு இல்லை . ஒரு நாள் காலம் வரும் . ஈழ பிரச்சினையை அவர்கள் கையாண்ட தவறான அணுகுமுறை மற்றும் ஈழ படுகொலைகள் இந்தியா மக்களுக்கு தெளிவாக தெரியும் . அப்போது இந்திய மக்கள் நியாயம் கேட்பார்கள் . அப்போது பிறக்கும் தமிழீழம் . தடுப்பவன் தவிடு போடி ஆவான் . ஏனெனில் அது நூறு கோடி மக்களின் சக்தியாக மாறி இருக்கும் .

வங்க தேசத்தின் தாய் இந்தியா . அதே போல ஈழத்தின் தாயும் இந்தியாவே . இப்போது சிலர் நெஞ்சில் ( தமிழர்கள் ) வளர்ந்து கொண்டு இருக்கும் ஈழம் எனும் சிசு இந்தியா தாயின் வளர்ந்து இந்திய தாய் பிரசவிக்கும் போது அந்த ஈழத்திற்கு முப்பத்தி இரண்டு உடன்பிறப்புகள் ( இந்தியா மாநிலங்கள் ) இருப்பார்கள் . அதுவரை பொறுமை வேண்டும் . இல்லையேல் கருவே களையும் அபாயம் உள்ளது .

Link to comment
Share on other sites

தமிழ் பைத்தியத்துக்கு ஒரு பச்சை போடு

Link to comment
Share on other sites

தமிழ்ப்பைத்தியம் சார்.. நீங்க தப்பா புரிஞ்சிண்டேள்..! :(

இங்கே யாரும் இந்தியாவுக்கு எதிரி அல்லர்..! இந்திய ஏகாதிபத்தியத்துக்கு எதிரிகளே இங்கே உள்ளார்கள்..! :huh: அதுவும் எங்களுக்குள்ளேதான் பேசிக் கொள்வோம்..! :(

டிஸ்கி: ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கே எதிரி சிங்களவன்..! அவனுக்கு இந்திய ஏகாதிபத்தியம் பல்லக்குத் தூக்கலையா? ஏன் எங்களை மட்டும் மன்னிக்க மாட்டேங்கிறேள்? :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு சண்டியன் ஒரு ஊருக்குள் இருக்கமுடியாது

இந்துமா சமுத்திரத்தில் இரண்டு வல்லரசுகள் இருக்கமுடியாது ஆகவே !?

Link to comment
Share on other sites

தமிழ்ப்பைத்தியம் சார்.. நீங்க தப்பா புரிஞ்சிண்டேள்..! :(

இங்கே யாரும் இந்தியாவுக்கு எதிரி அல்லர்..! இந்திய ஏகாதிபத்தியத்துக்கு எதிரிகளே இங்கே உள்ளார்கள்..! :huh: அதுவும் எங்களுக்குள்ளேதான் பேசிக் கொள்வோம்..! :(

டிஸ்கி: ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கே எதிரி சிங்களவன்..! அவனுக்கு இந்திய ஏகாதிபத்தியம் பல்லக்குத் தூக்கலையா? ஏன் எங்களை மட்டும் மன்னிக்க மாட்டேங்கிறேள்? :wub:

நீங்கள் தான் திரும்ப திரும்ப இந்திய ஏகாதிபத்யம் என கூறிக்கொண்டே போகிறீர் . ஏதோ ஒரு குடும்ப ஏகதிபத்யம் இந்தியாவில் மேலோங்கி இருப்பதால் அவர்கள் செய்வதை எல்லாம் நீங்கள் அதை இந்திய ஏகதிபத்யம் என எப்படி கூறுவீர்கள் ???

அது சரி ஏதோ என்னையும் அவாள் கணக்குல சேர்த்து விட்டாப்ல தெரியுதூன்னா உங்க பாஷைய பார்த்தா ??? பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கே இந்த பிள்ளையாண்டான் மனசுல பட்டத சொல்லனும்னு தோணிடுத்து அதுக்கு இவ்ளோவ் பெரிய பணிஷ்மேண்டுன்னா என்னால தாங்க முடியளையன்னா உங்க பேச்சை . நான் சொல்றது நோக்கு புரியளையோன்னோ

சரி பரவாயில்ல இப்ப அவாள்தான் தமிழீழத்திற்கு எதிரானவர்களுக்கு ஆப்பு வைக்க கிளம்பியிருக்கா . ஏற்கனவே தமிழ் நாடுல வச்சி முடிச்சிட்டாள் ( சோ ) இப்ப இந்திய அளவில ஆப்பு வைக்க ஒருத்தர் ட்ரை பண்ணிண்டு இருக்கா ( சு சாமி ). ஏதோ எதிரிக்கு எதிரி நண்பன் கணக்குல இவருக்கும் ஏதோ ஒரு பட்டம் கொடுத்துட்டா நம்ம வேலை ஈசியா முடிஞ்சிடும் ( அதான் ஏற்கனவே அம்மாவுக்கு யாரோ ஏதோ பட்டம் கொடுத்தது போல இருக்கு ???)

இரண்டு சண்டியன் ஒரு ஊருக்குள் இருக்கமுடியாது

இந்துமா சமுத்திரத்தில் இரண்டு வல்லரசுகள் இருக்கமுடியாது ஆகவே !?

ஆகவே நம்மால் நட்பு பாராட்டவே முடியாத வெகு தூரத்தில் உள்ள சீனாவை கை கழுவிட்டு இந்தியாவுக்கு பல்லக்கு தூக்குவதே உத்தமம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தான் திரும்ப திரும்ப இந்திய ஏகாதிபத்யம் என கூறிக்கொண்டே போகிறீர் . ஏதோ ஒரு குடும்ப ஏகதிபத்யம் இந்தியாவில் மேலோங்கி இருப்பதால் அவர்கள் செய்வதை எல்லாம் நீங்கள் அதை இந்திய ஏகதிபத்யம் என எப்படி கூறுவீர்கள் ???

அது சரி ஏதோ என்னையும் அவாள் கணக்குல சேர்த்து விட்டாப்ல தெரியுதூன்னா உங்க பாஷைய பார்த்தா ??? பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கே இந்த பிள்ளையாண்டான் மனசுல பட்டத சொல்லனும்னு தோணிடுத்து அதுக்கு இவ்ளோவ் பெரிய பணிஷ்மேண்டுன்னா என்னால தாங்க முடியளையன்னா உங்க பேச்சை . நான் சொல்றது நோக்கு புரியளையோன்னோ

சரி பரவாயில்ல இப்ப அவாள்தான் தமிழீழத்திற்கு எதிரானவர்களுக்கு ஆப்பு வைக்க கிளம்பியிருக்கா . ஏற்கனவே தமிழ் நாடுல வச்சி முடிச்சிட்டாள் ( சோ ) இப்ப இந்திய அளவில ஆப்பு வைக்க ஒருத்தர் ட்ரை பண்ணிண்டு இருக்கா ( சு சாமி ). ஏதோ எதிரிக்கு எதிரி நண்பன் கணக்குல இவருக்கும் ஏதோ ஒரு பட்டம் கொடுத்துட்டா நம்ம வேலை ஈசியா முடிஞ்சிடும் ( அதான் ஏற்கனவே அம்மாவுக்கு யாரோ ஏதோ பட்டம் கொடுத்தது போல இருக்கு ???)

ஆகவே நம்மால் நட்பு பாராட்டவே முடியாத வெகு தூரத்தில் உள்ள சீனாவை கை கழுவிட்டு இந்தியாவுக்கு பல்லக்கு தூக்குவதே உத்தமம்.

ஏன் .......... இந்தியா எங்களுக்காக என்ன செய்தது மொத்தத்தில் எமது இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்ச்சி கொடுத்து ஒருவருடன் ஒருவரை மோதவிட்டு எமது இனம் அழிவதற்கு காரணமாக இருந்தற்கா அல்லது அமைதி படை என்ற பேரில் வந்து எமது மக்களை கொன்று பாலியல் வதை செய்தற்கா அல்லது முள்ளிவாக்காளில் எமது இனத்தை சிங்களவனுடன் சேந்து கொத்து கொத்தாக குழந்தைகள் பெரியவர் பெண்கள் என்ற பாகுபாடின்றி அழித்ததற்கா நாம் பல்லாக்கு தூக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

பல படைகளை தலைமை கொண்டு பலரை சீரழித்து படு பாதக செயல்களை செய்த சரத் பொன்சேகாவுக்கு இறந்த மக்களின் குருதி ஈரம் காயும் முன்னரே எப்படி ஜனாதிபதி தேர்தலில் எப்படி எதை வைத்து நீங்களும் நீங்கள் நம்பும் தமிழ் ஈழ கட்சிகளும் பல்லக்கு தூக்கியதோ அதே மாதிரி தூக்குங்கள் .

அமைதி பேச்சு என கூறி புலிகளை நம்ப வைத்து பின் வாசல் வழியாக ரணில் ஆயுதம் கொள்முதல் செய்ததற்கு உதவி செய்த மேற்குலகிற்கு எப்படி பல்லக்கு தூக்குகிறீர்களோ அப்படி தூக்குங்கள்

வெளி நாடு செல்வதற்கு தான் வாழ்ந்த இனத்தையே பிடிக்காதது போல நடித்து சிங்களனுக்கு பல்லக்கு தூக்கி வெளி நாடு செல்வீர்களோ அப்படி தூக்குங்கள்.

இன்னும் நிறைய சொல்வேன் . ஆனால் உள்ளுக்குள் சண்டையை ஆரம்பித்து குளிர் காய நினைக்கும் மனிதன் நானல்ல

Link to comment
Share on other sites

ஆகவே நம்மால் நட்பு பாராட்டவே முடியாத வெகு தூரத்தில் உள்ள சீனாவை கை கழுவிட்டு இந்தியாவுக்கு பல்லக்கு தூக்குவதே உத்தமம்.

2009/5 க்குப்பிறகு எம்மை பிரதிநிதித்துவம் செய்யும் கூட்டமைப்பு வெளிப்படையாக புது டெல்லியை பாராட்டி அதற்கு அமைய பல்லக்கு தூக்கியே நடந்துவருகின்றது. ஆனால் உள்ளூர கூட்டமைப்பு வேதனை அடைந்துவருகின்றது. காரணம்:

- தொடரும் குடியேற்றம்
-மறுக்கப்படும் கடல் வாழ்வியல்
-அழிக்கப்பட்டும் கலாச்சாரம்

என நீண்ட பட்டியல்.

இத்தனை மனக்கசப்புக்களுக்கும் தோல்விகளுக்கும் மத்தியில் எல்லோரையும் பல்லக்கு தூக்கு என்று கேட்பது கடினமானது. விரைவில் ஏதோ ஒரு அரசியல் தீர்வை பெறாவிட்டால் அங்கே தமிழர்களும், கூட்டமைப்பும் இந்திய செல்வாக்கும் கூட அருகிப்போகலாம்.

எனவே பல்லக்கு தூக்கும் கூட்டமைப்பு அதை உணரும் புதுடெல்லி சில முக்கிய தீர்மானங்களை எடுக்கும் நேரம் இன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வந்துட்டாருப்பா வாஜ்பாயி ..கோணவாய்கால் பாளையத்திற்கு நேர் வழி காட்டுவார் இவரதான்.. ஒரே டமாஸ்தான்... :lol: :lol:

Link to comment
Share on other sites

சபாஷ்.. சரியான போட்டி..! :wub:

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே வாங்கி கொடுக்க வைப்பீர்களா?

சீனா அடிக்க வந்தால் வியட்டனாம் காலில் விழுந்து தப்பிவிடுவார்கள் ஆனால் வாங்க போறது இந்தியா எல்லோ?

Link to comment
Share on other sites

உணர்வால் இந்தியா இன்றும் என்றும் ஒன்று தான் . இன்று அரசியல் சூழ்நிலை சரியில்லை என்பதை அமோதிக்கிறேன் . ஆளானப்பட்ட இந்திரா காந்தி அம்மையாரையே மண்ணை கவ்வ வைத்தவர்கள் நாங்கள் . சோனியாவோ சூநியாவோ அது யாராக இருந்தாலும் சரி இந்தியா மக்கள் மன்றத்தில் வெகு காலம் இருக்க நிறைய தேவை . இலங்கை மாதிரி இங்கு இல்லை . தெற்கு பக்கம் தமிழர் விரோதம் இருந்தால் வெல்லலாம் . வடக்கு பக்கம் சிங்கள விரோதம் இருந்தால் வெல்லலாம் என்பது போல இங்கு இல்லை . ஒரு நாள் காலம் வரும் . ஈழ பிரச்சினையை அவர்கள் கையாண்ட தவறான அணுகுமுறை மற்றும் ஈழ படுகொலைகள் இந்தியா மக்களுக்கு தெளிவாக தெரியும் . அப்போது இந்திய மக்கள் நியாயம் கேட்பார்கள் . அப்போது பிறக்கும் தமிழீழம் . தடுப்பவன் தவிடு போடி ஆவான் . ஏனெனில் அது நூறு கோடி மக்களின் சக்தியாக மாறி இருக்கும் .

வங்க தேசத்தின் தாய் இந்தியா . அதே போல ஈழத்தின் தாயும் இந்தியாவே . இப்போது சிலர் நெஞ்சில் ( தமிழர்கள் ) வளர்ந்து கொண்டு இருக்கும் ஈழம் எனும் சிசு இந்தியா தாயின் வளர்ந்து இந்திய தாய் பிரசவிக்கும் போது அந்த ஈழத்திற்கு முப்பத்தி இரண்டு உடன்பிறப்புகள் ( இந்தியா மாநிலங்கள் ) இருப்பார்கள் . அதுவரை பொறுமை வேண்டும் . இல்லையேல் கருவே களையும் அபாயம் உள்ளது .

வந்துட்டாரு பீட்டர் பழைய மேட்டர தூக்கி கொண்டு..

இந்தியாவுக்கு எல்லாம் தெரியுமாம் இந்தியா சனத்துக்கு எல்லாம் தெரியுதாம்.....

என்ன சிங்களவன் திறந்து காட்டினவனோ? அவன் இந்தியாவுக்கு வாலையும் சீனாவுக்கு தலையையும் காட்டி காலத்தை கொண்டு போறான் இவை ஆமையும் இல்லை முயலும் இல்லாத ஒரு அதிசய ஓட்டம் ஓடினம்.............

Link to comment
Share on other sites

தமிழரின் கொலைகளுக்கு காரணமாக இருவருமே இருந்துள்ளார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ சிக்கல் இல்லை உள்ளூர் ஏரியில் மீன் பிடிக்கும் மீனவர்களை தாக்கும் வல்லரசு (கிலங்கை) மீது புல்லரசு(கிந்தியா) என்ன நடவடிக்கை எடுத்தது என தெரியபடுத்தவேணும்.. ஏண்டா எங்க இன்ன அரிப்பெடுத்து பெத்து போட்டு விட்டார்களா(மீன்வர்கள்) அல்லது வேண்டா வெறுப்பா பெத்து போட்டுட்டார்களா? ஒரு குடும்ப ஆட்சி என்றால் அவா என்ன ரெட்ட கோலுக்கு பெத்து போட்டாலா? கடைசி வரைக்கும் 40 எம்பி சீட்டை வைத்து கொண்டு சொறிந்து சோப்பு போட வேண்டுமா? அவாளுக்கும் மட்டும் தங்கத்துல செய்திருக்கா ?நம்மவருக்கு தகரத்துல செய்து இருக்கா?

டிஸ்கி:

வடக்கான் குஜாராத்தில் யாரோ உதவி செய்து போட்டார்கள் என்பதற்காக இங்க வந்து கிந்தியா கிந்தியா சவுண்டு கொடுக்க படாது ...கிளைமேக்ஸ் வந்தால்தான் இருக்கு.. :) :)

Link to comment
Share on other sites

ஆஹா ரூம் போட்டு யோசிச்சு வந்து வம்பிழுக்கிறார் போல இருக்கு . ஆனால் ஏற்கனவே இதுபோல ஒருமுறை நாம் இங்கே எழுதியபோது ஒரு ஈழ உறவு எங்களின் துன்பம் உங்களுக்கு எல்லாம் பட்டிமன்றம் போல ஆயிற்றா என எழுதியிருந்தார் . அன்றுடன் கொஞ்சம் மனம் வேதனையோடு இங்கே எழுதுவதை குறைத்து கொண்டேன் . ஏனெனில் எதுவாயினும் பிறர் மனம் வலிக்கும் என்றால் அந்த செயலை செய்யாதிருப்பதே மேல் .

எனினும்...... எனினும்...... நல்ல பேரை வைத்து கொண்டு தொடர்ந்து மக்களை திசை திருப்பி மீண்டும் மீண்டும் உசுப்பேற்றி விட்டு படுகுழியில் தள்ள நினைக்கும் உங்களை போன்றவர்கள் எமது உறவுகளை கொண்டு போய் மீண்டும் ஒரு பேராபத்தில் தள்ளி விடுவார்களோ என்ற பயம் என்னை மீண்டும் ஆட்கொண்டு விட்டதால் மீண்டும் எழுத ஆரம்பிக்கிறேன் .

ஆரம்பிக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஒன்றையும் காணோமே என முழிக்க வேண்டாம் . வருகிறேன் .

டிஸ்கி

நாங்களும் ரூம் போட்டு யோசிப்போம்ல

Link to comment
Share on other sites

ஈழ சிக்கல் இல்லை உள்ளூர் ஏரியில் மீன் பிடிக்கும் மீனவர்களை தாக்கும் வல்லரசு (கிலங்கை) மீது புல்லரசு(கிந்தியா) என்ன நடவடிக்கை எடுத்தது என தெரியபடுத்தவேணும்.. ஏண்டா எங்க இன்ன அரிப்பெடுத்து பெத்து போட்டு விட்டார்களா(மீன்வர்கள்) அல்லது வேண்டா வெறுப்பா பெத்து போட்டுட்டார்களா? ஒரு குடும்ப ஆட்சி என்றால் அவா என்ன ரெட்ட கோலுக்கு பெத்து போட்டாலா? கடைசி வரைக்கும் 40 எம்பி சீட்டை வைத்து கொண்டு சொறிந்து சோப்பு போட வேண்டுமா? அவாளுக்கும் மட்டும் தங்கத்துல செய்திருக்கா ?நம்மவருக்கு தகரத்துல செய்து இருக்கா?

டிஸ்கி:

வடக்கான் குஜாராத்தில் யாரோ உதவி செய்து போட்டார்கள் என்பதற்காக இங்க வந்து கிந்தியா கிந்தியா சவுண்டு கொடுக்க படாது ...கிளைமேக்ஸ் வந்தால்தான் இருக்கு.. :) :)

வடக்கன் என்று இல்லை பிற இன / மொழி மக்கள் செய்த பல உதவிகளையும் மதிக்காமல் வசதியாய் மறந்து விட்டு நன்றி கெட்ட பிறவிகளாய் நாம் மாறிக்கொண்டு இருப்பதால் தான் நமக்கு இந்த சோதனை . உலகில் பிறந்த அனைவருக்கும் சுய மரியாதை, உணர்வுகள், தன மொழி பற்றி மேலோங்கி தனம் இருக்கும் . சும்மா குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டாம மொழி மதம் இனம் அனைத்தையும் தூர தூக்கி வீசி விட்டு நியாயத்தை மதி, நல்லவர்களுக்கு ஆதரவு கொடு, நன்றி மறவாதே, நாம் தன்னால் முன்னேறுவோம் . நமது பிரச்சினைகள் தானாக தீரும்.

தம்பி பு க த தே. உங்கள் எழுத்துகளை பார்த்தால் தமிழின வரலாறு படித்த / தெரிஞ்ச ஆளு போல தெரியலையே . ஏதோ கூட்டதில கோவிந்தா போடற ஆளு மாதிரியில்ல தெரியுது ??? கொஞ்சம் கூர்மையா குறைந்த பட்சம் கடைசி ஐநூறு வருட வரலாறு மட்டுமாவது படிங்க சார் .

உணர்வை வெளிப்படுத்த வரலாறு தெரிந்து இருக்க தேவை இல்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து . எனினும் அப்பப்ப வரலாறும் தேவைப்படும் . ஏனெனில் தமிழனை தலை நிமிர செய்ததில் மிகப்பெரிய பங்கு மற்றும் தமிழனுக்கு உதவியதில் மாபெரும் பங்கு பிற மொழி / இன மக்களுக்கும் இருக்கிறது . சும்மா தமிழ் தமிழ்னு கூவி இரண்டு லட்சம் பேரை அநியாயமா பறிகொடுத்தும் இன்னும் நமக்கு அறிவு வரலைன்னா நம்மள விட அறிவிலிகள் உலகில் யாரும் இருக்க முடியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா எமது அயல்நாடு என்று கேட்கும்போது , இதயம் பெருமிதத்தால் விம்முகின்றது!

அவர்கள் நடத்திக் காட்டிய பொதுநலவாய நாட்டு விளையாட்டுப் போட்டிகளைக் கண்ட கண்கள் இன்னம் இமைக்க மறுக்கின்றன! அவர்கள் கணக்கை முடித்த விதம இருக்கின்றதே! இந்தியனைத் தவிர எவனாலுமே அதைச் செய்ய முடியாது என்பது மட்டும் உண்மை! நாற்பதினாயிரம் தமிழர்களைக் கொன்று புதைத்து விட்டு, இந்தப் பூனையும் பால் குடிக்குமா, என்ற மாதிரி இருக்க யாரால் முடியும்! ஐக்கிய நாடுகள் சபை கூட, நம்பியாரின் திறமை கண்டு வாயடைத்துப் போய் இருக்கின்றது! சுவிஸ் வங்கிகள் இந்திய அரசியல் வாதிகளின் பணத்தால் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கின்றன! அவுஸ்திரேலியாவில், டாக்டர் பட்டேல் குடித்த பதினைந்து உயிர்களின் உறவினர்களும், அவரது பெருமையைத் தினமும் பாடுகின்றார்கள்!இந்திடாவில் மட்டும், ஆகக் குறைந்தது ஆயிரம் பெண் குழந்தைகள் ஒரு வாரத்தில் பிறந்தவுடன் கொலை செய்யப் படுகின்றன! மாடுகளை வழிபடும் நாட்டில், பொலித்தீன் பைகளைச் சாப்பிட்டு மாடுகள் மரணமடைகின்றன.காசியில், கங்கையில் நீராடும் போது,தண்ணீருக்குள் மூழ்கி வெளியே வரும்போது, தலையில் தட்டுகின்றது, பாதி மட்டும் எரிந்த மனித உடல்! சீதனம் தர முடியாத பெண்களின் எரி வாயு அடுப்புக்கள் மட்டுமே வெடித்துச் சிதறுகின்றன!

Link to comment
Share on other sites

யாழ் களத்தில் உள்ள மிகபெரிய பிரச்சினைகளில் இதுவும் ஒன்று . திரி ஆரம்பமாகும் போது ஒரு விஷயத்திற்காக ஆரம்பிக்க பட்டிருக்கும் . ஆனால் போக போக தாறு மாறாகி எங்கெங்கோ திரி சென்று திரியின் ஆரம்ப கருத்தையே ஒன்றும் இல்லாது ஆக்கி விடும் .

மேலும் கேட்கும் கேள்விகளில் ஒன்று இரண்டிற்கு ஒழுங்காக நேராக பதில் கூறினால் அந்த பதிலுக்கு நேர் எதிர் கேள்வி யாருமே எழுப்ப மாட்டார்கள் . தேவையின்றி எங்கெங்கோ எதை எதையோ இழுப்பார்கள் . இதோ இந்த திரியை முழுதும் படித்தால் விளங்கும்

தனி மனித தூற்றல் கூடாது என்பது கள விதிகளில் ஒன்று . என்னிடம் தனி மடலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நட்பு பாராட்டி நான் அளித்த பதிலையே எனக்கு எதிராக எழுதியுள்ளார் ஒரு நண்பர் . கள விதி முறைகள் ?????????????????????????????????????????

Link to comment
Share on other sites

ஈழ சிக்கல் இல்லை உள்ளூர் ஏரியில் மீன் பிடிக்கும் மீனவர்களை தாக்கும் வல்லரசு (கிலங்கை) மீது புல்லரசு(கிந்தியா) என்ன நடவடிக்கை எடுத்தது என தெரியபடுத்தவேணும்.. ஏண்டா எங்க இன்ன அரிப்பெடுத்து பெத்து போட்டு விட்டார்களா(மீன்வர்கள்) அல்லது வேண்டா வெறுப்பா பெத்து போட்டுட்டார்களா? ஒரு குடும்ப ஆட்சி என்றால் அவா என்ன ரெட்ட கோலுக்கு பெத்து போட்டாலா? கடைசி வரைக்கும் 40 எம்பி சீட்டை வைத்து கொண்டு சொறிந்து சோப்பு போட வேண்டுமா? அவாளுக்கும் மட்டும் தங்கத்துல செய்திருக்கா ?நம்மவருக்கு தகரத்துல செய்து இருக்கா?

டிஸ்கி:

கருத்துகளில் நாகரீகம் வேண்டும் மற்றும் ஆபாசம் கூடாது எனவும் கள விதி முறைகள் கூறுகிறது . ( இளைப்பாறும் களம் தவிர்த்து )

ஆனால் மேற்கூறிய கருத்துகளை கூர்ந்து கவனியுங்கள் . எப்பேர்பட்ட கீழ்த்தரமான ஆபாசம் உள்ளது என்று ???? இந்த களம் தனியார் நடத்தும் களம் என்பது தெரிந்ததே .கள விதிகள் என்பது சிலருக்கு மட்டுமே வகுக்கப்பட்டு இருக்கிறதா ???????????????????????

Link to comment
Share on other sites

யாழ் களத்தில் உள்ள மிகபெரிய பிரச்சினைகளில் இதுவும் ஒன்று . திரி ஆரம்பமாகும் போது ஒரு விஷயத்திற்காக ஆரம்பிக்க பட்டிருக்கும் . ஆனால் போக போக தாறு மாறாகி எங்கெங்கோ திரி சென்று திரியின் ஆரம்ப கருத்தையே ஒன்றும் இல்லாது ஆக்கி விடும் .

இதெல்லாம் கருத்து உரிமையில் சகஜம்.

என்னசெய்வது நாம் தான் ஓடுகிற மாட்டை நாணக்கயிறால் இழுத்து விடவேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.