Jump to content

சீன எச்சரிக்கையை மீறி இந்தியாவுக்கு வியட்நாம் அழைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பைத்தியம் உங்கள் பண்பான ஆக்கமான கருத்துகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், யாருமே தன் தாய்நாடு தாயைவிட மதிக்கிறவன், அதில் நீங்க உயர்ந்து நிக்கிறீங்க, ஆனாலும் எங்கள் வலியை நீங்கள் புரித்து கொள்வீர்கள், இந்தியா எங்களுக்கு செய்த கொடுமை, சொல்ல வார்த்தையில்லை, இந்தியன் ஆமி வந்து போனபின்தான் சிங்கள ஆமி இன்னும் கூட அட்டூழியம் செய்தவன், அவனுக்கு பல உதவிகள் செய்து மக்கள் என்றும் பாரமல் அழித்தொழிக்க சொன்னது இந்தியா, கடைசி நேரத்தில் சோனியா தன் பசிக்கு கேட்டது எத்தனை ஆயிரம் உயிர்களை...?

தமிழ் நாடு என்றுமே எங்கள் தாய் நாடு, இந்திய கொள்கை வகுப்பாளர்கள் & காங்கிரஸ் இவர்கள்தான் எங்களை இந்த நிலைக்கு தள்ளினவர்கள், என்றுமே மனதில் ஆறாத வடுவாக இருக்கு சிங்கள கடையர்கள் செய்த கொடுமை மாதிரி,

Link to comment
Share on other sites

  • Replies 81
  • Created
  • Last Reply

மல்லையூரான்,

பல சமகால நிகழ்வுகளை இணைத்து மிக அருமையாக எழுதியுள்ளீர்கள். நன்றிகள், தொடர்ந்தும் நேரம் கிடைக்கும்பொழுது எழுதுங்கள்.

முன்பு ஒருமுறை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மூன்றாவது யுத்தம் வருவதை அமெரிக்கா தடுத்து, காரணம் 40-60B மேற்பட்ட அமெரிக்க முதலீடு, அதன் அன்றாட வாழ்க்கையில் கூட இந்திய நிறுவனங்கள் பின்னிப்பிணைந்துள்ளன. அதுபோன்று சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் யுத்தம் வந்தால் அது ஒரு விதத்தில் மூன்றாம் உலக யுத்தமாக அமையலாம். அப்படி ஒரு யுத்தம் வருமா என்பது மேற்குலகத்தின் கைகளில் அதிகம் தங்கியுள்ளது.

நன்றி அகுதா. முயற்சிக்கிறேன்.

Link to comment
Share on other sites

நல்ல கருத்துக்கள் தமிழ் பைத்தியம் நீங்கள் ஒரு இந்திய உறவாக இருந்தால்.......இந்த களத்தில் நீடித்து நிலத்திருக்க வாழத்துக்கள்...ஏன்னா பல இந்திய உறவுகள இனைந்து இங்குள்ள கள உறவுகளின் கருத்துக்கள் காரணமான மனம் புண்பட்டு வருவதே இல்லை............

நன்றி நண்பரே உங்களின் கருத்துக்கு . நான் ஒரு நீண்டகால யாழ் கள உறுப்பினர் . நமது இனம் தவறான வழியில் சிந்தித்தால் திட்டி அழுத்தி கொட்டி எப்படியாவது அவர்களை நம் வழிக்கு கொண்டு வருவது ஒவ்வொரு தமிழனின் கடமை . அல்லது பிறரின் கருத்துக்களை ஆழமாக செவிமடுத்து அதில் தனக்கு உகந்தவற்றை ஏற்றுக்கொண்டு ஒரே பாதையில் பயணிப்பதை நான் விரும்புகிறேன் .அதை விடுத்து ஓடிப்போயி தூரத்தே நின்று கொண்டு நம் இனம் மீதே சேறு வாரி தெளிக்கும் அளவுக்கு நான் சுயமரியாதை ( இந்த வார்த்தையே இப்போது கேளிப்போருளாகி விட்டது . தவறு செய்யும் மற்றும் திசை மாறும் பலர் உபயோக படுத்தும் வார்த்தையாகி விட்டது ) உள்ளவன் அல்ல . என் இனத்திற்கு நல்லது நடந்தால் அந்த சுயமரியாதையை கூட இழக்க தயார் .

எனக்கு உள்ள ஒரே வருத்தம் . சரியான தலைமை இன்றி தமிழ் ஈழம் தற்போது தள்ளாடுகிறது . நீண்ட நாள் உறுப்பினர்கள் பலரும் என் எழுத்துக்களை அறிவர் . மான ரோசம் அற்ற மிதவாத எண்ணம் கொண்ட நானே என் தலைவன் பிரபாகரன் என மனதார பல முறை கூறியிருக்கிறேன் .

ஏனெனில் என்னைபோல, உங்களைபோல, ஈழ மகளை போல, ரதியை போல, மல்லையுரானை போல, புங்கையூரன் போல, சாவகசமா தூங்கிட்டு அப்பப்ப முழிச்சிட்டு களத்தை செப்பனிட வரும் நிழலி போல, இடைவிடாது இந்தியாவிற்கு எதிராக கிளிப்பிள்ளை போல கத்தியே சாகும் புரட்சிகர தமிழ் தேசியன் போல, எந்த பக்கம் பெசுகிரார்னே தெரியாமல் பேசும் இசைகளைஞனை போல, அவரை போல, இவரை போல, அதை போல, இதை போல, இன்னும் பல போல ஆட்டு, மாட்டு, கழுதை, புறா, கோழி, பன்றி, காடை, கௌதாரி, பேய், பிசாசு, எல்லா மந்தைகளையும் ஒரே நேர்கோட்டில் அழைத்து வந்து ஈழத்தை பற்றி மற்றும் ஈழ விடுதலையை பற்றி மட்டும் சிந்திக்க வைத்த மாபெரும் தலைவன் அவன் . அவனை எனக்கு பிடிக்கும் . ஏனெனில் அவன் தனக்கு தன் இனத்திற்கு ஒரு வீடு / தேசம் பெற நினைத்தான் . அடுத்தவன் வீட்டையோ / நாட்டையோ கெடுக்க நினைக்க வில்லை

ஒரு நாள் கூட புலிகளுக்கு எதிராக கருத்து எழுதியது இல்லை . இன்னும் சொல்ல போனால் புலிகள் செயல்பாடுகளில் பல, பல இல்லை எதுவுமே அதிகமாக எனக்கு உடன்பாடு கிடையாது . எனினும் ஒன்று மட்டும் அதிக உடன்பாடு . அர்ஜுனனுக்கு புறா மட்டும் தெரிந்தது போல அவர்களுக்கு தமிழ் ஈழம் மட்டுமே தெரிந்தது . அவர்கள் தனது மக்களுக்காக தனது குடும்பத்தை விட்டு சுகங்களை விட்டு அல்லும் பகலும் எதிரிகளிடம் போராடி கடைசியாக சூழ்ச்சியாலும் வஞ்சகத்தாலும் வீழ்த்தபட்டார்கள் . வீரத்தால் அவர்கள் இன்றும் வீரகளே. அவர்கள் போராடியது ஈழத்திற்காக . அவர்கள் நாட்டிற்காக. இந்தியாவிற்கு எதிராக அல்ல .

இங்கு பலர் எதுவுமே ஈழத்திற்கு செய்யாமல் கணினி தட்டி இந்தியாவையே வம்புக்கு இழுத்துக்கொண்டு இருப்பது எனக்கு பிடிக்கவில்லை. இந்தியாவை வம்பு இழுப்பதால் உங்கள் நேரம் தான் வீண் . இந்தியாவிற்கு ஒன்றும் ஆகாது.

இங்கு பலர் இந்தியா சீனாவுக்கு பயப்படுது, இலங்கை கடற்படைக்கு பயப்படுதுன்னு வடிவேலையும் மிஞ்சி உலக மகா பிதற்றல்கள் செய்கிறார்கள். அய்யா சாமிகளா நிறை குடம் தளும்பாது . இந்தியா ஒரு நிறைகுடம் . அது அமைதியாக தான் இருக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழின எதிரிகள் எந்த வகைபட்டவர்கள்?

2lbevkj.jpg

அறிஞர் கொர்ப் கோகனின் உங்களால் முடியும் என்ற நூலின் சில பகுதிகள்..

எதிராளிகளை இரண்டு வகைகளாக பிரிக்கிறார் கோகன் அதில்

1.கருத்து எதிராளிகள்

2.அடிக்குடல் எதிராளிகள்

அதை சற்று விரிவாக பார்ப்போம்..

கருத்து எதிராளிகள்

ஒரு குறிப்பிட்ட விடயம் பற்றி உங்கள் கருத்திற்கு மாற்று கருத்து வைப்பவர் கருத்து எதிராளி.. நீங்கள் நான் இப்படி செய்ய நினைக்கிறேன் என்கிறீர்கள் ..அவரோ ஏன் இதை இப்படி செய்யகூடாது என்கிறார். கருத்து எதிராளிகளை ஓரளவுக்கு சமாளிக்க முடியும்..முதலில் கருத்துகள்.. தகவல்கள்..அனுபவம் ..விட்டு கொடுத்தல் தீர்வு காண பட வேண்டும் என்பதில் ஒற்றுமை ஆகிய காரணிகள் சரியான இறுதி தீர்வை நோக்கி நகர்த்தும்.. இறுதி தீர்வு சரியாக அமையும் பட்சத்தில் நீங்கள் எதிரியாக நினைத்த மாற்று கருத்தாளர் உங்கள் உற்ற நண்பனாக கூட மாற முடியும்.

பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் ஏன் தீர்க்கபடமாலே போகின்றன?

நம்பிக்கையை வளர்ப்பது..தீர்க்கவேண்டிய பிரச்சனையை கவனம் செலுத்துவது ஆகியவற்றை பெரும்பான்மையோர் மதிப்பதில்லை..பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே இழுத்தடிப்புக்ள் கடினமான தங்களின் முடிவையே பிறர் மீது திணித்தல் ..ஏற்று கொள்ளுமாறு எச்சரிக்கை விடுத்தல் என இரு அணிகளும் தங்களுக்குள் எதிரியாக மாறி விடுகிறார்கள் ..அங்கு தீர்க்க பட வேண்டிய பிரச்சனையின் கருத்து குவியம் மாற்ற படுகிறது.. நீயா? நானா? என்ற போட்டி மனப்பான்மையே உண்டாகிறது.. இவ்வறான நிலைமையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு என்று கூடி கூடி பேசி ஏதோ நாங்களும் பேசுகிறோம் என்று பாசாங்கு மட்டுமே உலகத்திற்காக செய்ய முடியும்..ஆனால் தீர்வு என்பது கடைசிவரை எட்டபட முடியாது!!( காசுமீரு.திபெத், காசா)

2.அடிக்குடல் எதிராளிகள்

கருத்து எதிராளிகளை நீங்கள் ஒரளவுக்கு உங்களுக்கு எதிராக செயல்படாமல் சில காலமாவது உங்கள் அறிவு ரீதியாக தடுக்கலாம்..ஆனால் அடிக்குடல் எதிராளிகள் உணர்ச்சி பூர்வமாக எதிர்ப்பவர்கள் உங்கள் தரப்பு கருத்து கள் நியாங்கள் சாதகங்கள் ஆகியவற்றை இவர்கள் மதிப்பதில்லை அடிப்படையில் சக மனிதன் என்ற வகையில் கூட ஏற்பதில்லை..நீங்கள் எடுக்கும் நிலைகளுக்கு தீமையானா கற்பிதங்களை ஏற்படுத்த முற்படுவார்.. நீங்கள் கூக்குரலிடும் எந்த பிரச்ச்னையும் இவர்கள் காதில் விழாது.. இப்படி அடிக்குடல் எதிராளிகள் உருவாகிவிட்டால் அவரை நீங்கள் எப்போதும் மாற்ற முடியாது!

அடிக்குடல் எதிராளிகள் எப்படி உருவாகிறார்கள்?

என்னுடைய முகம் இரண்டு உண்டு ஒன்று உலகிற்கான பொதுமுகம்.. இரண்டு சுய முகம்.. என்னுடைய பொது முகம் இப்படித்தான் உலகிற்கு தெரிய வேண்டும் என விருப்பம் வைத்திருப்போம்.. அதை உலகிற்காக ஓரளவிற்கேணும் அதை நம்பும் படி கட்டி எழுப்பி இருப்போம்..

இரண்டாவது எனக்கான சுய முகம்..

என்னை பற்றி நானே அறிந்து வைத்திருப்பது..என்னுடைய திறமைகள்… அறிவு .. மற்றும் ஆளுமை ஆகியன.. இந்த இரண்டு பிம்பங்களும் ஒன்றுகொன்று சம்பந்தபட்டவை.. மிக நுண்ணியமாக இணைக்கபட்டவை..

இவ்வாறான் இரு பிம்பம்களும் முக்கிய பிரச்சனைகளில் சரிந்து விழ இருக்கும் போது எந்த ஒரு தனி மனிதனும் அவ்வாறு இலகுவில் விடுவதில்லை.. தனக்கு சம்பந்தம் இல்லாத விடயங்களில் கூட தனக்கு அதிகாரம் இருப்பதாக அந்த பிம்பத்தை நிலை நிறுத்த முற்படுவான் .. உலகதிற்கே தனக்கு எதிரானவன் கோமாளி என்றும் தனக்கு கீழே தான் அவன் என்றும் காட்ட முற்படுவான்.. எது எவ்வாறாகினும் ஆதிக்க சக்தியின் மனபாங்கின் ஒரு பகுதியே இது..

அடிக்குடல் எதிரிகளை எப்படி சமாளிப்பது?

அடிக்குடல் எதிராளிகள் நீங்கள் அடிப்படையில் மனிதன் என்கிற ரீதியில் எதிர்பவர் ஆதலால் கீழ் கண்ட இரண்டு வழிமுறைகளே உள்ளன

1.சமமான வலிமையை கொண்டிருத்தல்

2. எதிரியின் முக்கியத்துவத்தை குறைத்தல்

அடிக்குடல் எதிரியாக அறியப்பட்ட நபரோடு குறைந்த பட்சம் நாம் சமமான வலிமையோடு இருக்க வேண்டும்..சம வலிமையோடு கூடிய நீண்ட மவுனமும் அடிக்குடல் எதிராளிக்கு பயத்தினை உருவாக்கும். அடிக்குடல் எதிராளியின் சிறிய விடயங்களிலும் மூக்கை நிழைத்து ஆராய முற்படுவீர்களானால் அது அடிக்குடல் எதிராளியின் உங்களை பற்றிய மதிப்பீடு தவறாக போகும் வாய்ப்பும் உள்ளது.. உங்கள் இலக்கு எது என்று அவர் சுலபமாக ஊகித்து உணர்வார்..

இரண்டாவதான எதிரியின் முக்கியத்துவதை குறைத்தல்.

ஒருவரின் முக்கியத்துவத்தை நாமே தான் தீர்மானம் செய்கிறோம்.. ஒரு வேலைக்காக நாம் ஒருவரை ஒன்றுக்கு மூன்று முறை சந்திப்போமானால் அவரின் முக்கியத்துவம் அதிக மாகிறது.. அமெரிக்க அறிஞர் தாமஸ் ஜெபர்சன் அவரின் கருத்துபடி ஒருவர் உங்கள் இதயத்தில் உங்கள் அனுமதி இன்றி நுழைய முடியாது. அந்த வகையில் அடிக்குடல் எதிராளிகள் இவரால் முடியும் என்று உங்கள் இதயத்தில் நுழைந்துவிட்டல் அதைவிட ஆபத்து வேறு இல்லை.. கூடுமானவரை பிரச்சனைகளை நீங்களே எதிர் கொள்ள பழக வேண்டும்..

மேற்கூறியவை அறிஞர் கொர்ப் கோகனின் உங்களால் முடியும் என்ற நூலின் சில பகுதிகளாகும் இதில நாம் கூறவருவது என்னவென்றால் இந்தி அரசு தமிழர்களுக்கான அடிக்குடல் எதிரி என்பதாகும் .. அவ்வப்போது பேச்சு வார்த்தை கலந்து பேசுங்கள் என்று கூறினாலும் தமிழர்களான நாம் ஆரிய சக்திகளுக்கு அடிக்குடல் எதிரிகளே!

இந்தி அரசின் சுய முகம் பொது முகம் என்பது தெற்காசியவில் தன்னை ஒரு பேட்டை ரவுடியாக நிலை நிறுத்துவதாகும்.. இங்கு நடக்கும் முக்கிய பிரச்சனைகளில் தேவை இல்லாமல் மூக்கை நுழைத்து கொண்டு தன்னுடைய அதிகாரத்தினை நிலை நிறுத்துவதாகும் .. உலகின் அருகருகில் பல வல்லரசு நாடுகள் முளைத்து கொண்டு நிற்க இந்த நாட்டை சுற்றி ஏன் எவரும் வல்லரசு ஆக முடியவில்லை? ஏன் சிங்கபூர் ஆசியாவில் தனக்கான இடத்த்தினை பெறும்போது அருகாமையில் இருக்கும் மாலத்தீவால் முடியாதா? இங்கு இந்த ரவுடியிடம் மீறி பிரச்சனை வேறு ஒருவரிடம் செல்லும் போது இவர்களுடைய முக்கியத்துவம் குறைகிறது.. அகி இம்சை அன்னகாவடி என்று ஊரை ஏமாற்ற போட்ட வேடம் கலைகிறது..அதாவது சுய பிம்பம் பொது பிம்பமும் கழண்டு விழுகிறது.. அதற்கு காரணமான ஈழ தமிழர்களை இப்போது காவு வாங்கியாகிவிட்டது.. இந்த ரவுடி வேடத்தினை நிலை நிறுத்த தினமும் நமது மீனவ சகோதரர்களை இழக்கவேண்டி உள்ளது..

இதை மாற்ற என்ன வழி? அதே அறிஞர் கூறியது போல சம வலிமையை தக்க வைக்க வேண்டும்.. தமிழனுக்கென்று வலிமை மிக்க ராணுவம் இருந்திருந்தால் இந்த இழி நிலை நமக்கு வந்திருக்குமா? என்பதை தமிழக தமிழர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.. நாம் ஏன் தமிழ் தேசிய ராணுவத்தை இங்கு கட்டியமைக்க கூடாது?இன்று நம் மீனவர்களை ஓரினச்சேர்கை செய்து அனுப்பி இருக்கிறான் சிங்களவன் இதை விட கேவலமான நிலை உண்டா? இங்கு இந்த இந்தி யாவில் பொது முகம் சுய பிம்பம் என்பது ஆரியமே உயர்ந்தது என்று கட்டமைக்க பட்டுள்ளது..அவர்கள் அடிக்குடல் எதிராளிகளாக கருதுவது அவர்களுக்கு போட்டியாக இருக்கும் தமிழினமே என்பது உறுதியாகிறது.. இதை மாற்ற நாம் சம வலிமையை தக்க வைக்க வேண்டாமா?

அறிஞர் அவர்களின் கூற்றுபடி இரண்டாவதான அடிக்குடல் எதிராளிகளை சமாளிக்க அவர்களின் முக்கியத்துவதை குறைக்கவேண்டும்.. இங்கு என்ன நடந்தாலும் பஞ்சாயத்து டெல்லிக்கு செல்வதை தடுக்கவேண்டும். அது தந்தியடிப்பது.. உண்ணாவிரதம் இருப்பது. நாமே சுயமாக எதுவும் செய்ய முடியாதா? தமிழ் நாட்டை டில்லிக்காரனிடம் கையேந்த வைக்காமல் சுய தேவைகளுக்காக நம் சொந்த காலில் நிற்க முடியாதா? அவர்கள் அவர்களே நாம் நாமே! நமக்கான தேசியம் சாதி சமய மற்ற சமத்துவ தமிழ்தேசியமே அன்றி ஆரிய தேசியம் அல்ல.. மேற்கண்ட புரிதல் தமிழக தோழர்களுக்கு மிக மிக அவசியம்.. தமிழக விடுதலை குறித்து உலகமெங்கும் பரவி வாழும் ஈழ உறவுகளின் ஆதரவும் இங்கு அவசியமாகிறது.. நாமும் இங்கு அடிமைகளே! சுதந்திரம் நமக்கும் வேண்டும் என புரியவைத்தவர்கள் அவர்களே!

(இங்கு மாற்று கருத்து மாணிக்கங்கள் சாதியை உள் நுழைப்பார்கள் என்று தெரியும்..அவ்வாறனவர்கள் தமிழ் தேசியத்தில் சாதியை ஒழிக்க பலமான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.. அதை விடுத்து அந்த சாதிக்காரன் அப்போது இதை எங்களுக்கு செய்தான்.. இவர்கள் இப்போது செய்கிறார்கள்.. என ஓலமிடுவதை விடவேண்டும்.. ஏன் ஆரிய சக்திகளுக்குள் உள் முரண்பாடு இல்லையா? ஆனால் பொது எதிரி தமிழன் தான் என்று ஒன்றாக கூடி கொக்கரிக்கிறார்களே! நம்மால் ஏன் பொது எதிரி ஆரிய சக்திகள் தான் என்று கொக்கரிக்க முடியாதா? தாழ்த்தபட்ட மக்களுக்காக போராடுகிற தலைவர்கள் எத்தனையோ பேர் இருக்கும் போது இங்கு போராடும் ஒருவரை அவர்கள் தலைவனாக ஏற்று கொண்டுள்ளர்களா? இந்த இந்திய தேசத்தில் இருந்து கொண்டு சாதியை ஒழிக்கிறேன் என்று சொல்லி யாரும் முழுமையாக ஒழித்துவிட முடியாது.. இவர்கள் பிழைப்பு ஓடுவதே.. இத்து போன வருணாசிரம கொள்கைகளை கொண்டுதான்.. தமிழகத்தின் தன்னுரிமைக்கான போராட்டங்கள் எழும் போதெல்லாம் அங்கு ரோக்காரனின் சாதிய விளையாட்டுகள் ஆரம்பிக்கும் .. இதை சற்று கூர்ந்து கவனித்தால் புரிந்து கொள்ளலாம்)

அதை தோழர்கள் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்..

அதற்கான செயல்திட்டதினை வகுத்து செயல்பட தயாராவோம்!

(இங்கு ஆய்வு செய்யபட்டது தமிழின எதிரிகள் தொடர்பாக .. துரோகிகள் குறித்து தனிபதிவு வெளிவரும்)

http://siruthai.wordpress.com/2009/11/20/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88/

வெளியுறவு கொள்கை என்பது உள்ளூர் கொள்கையின் விரிவாக்கமே

வெளியுறவு கொள்கை என்பது உள்ளூர் கொள்கையின் விரிவாக்கமே

இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது ‘இந்தி’ய படைகளை இறக்கி தமிழர்களை சுட்டு கொன்ற இந்தியா அதே போல் காவிரி பிரச்சனையின் போது(1991) களத்தில் இறங்கி தமிழர்களை காத்ததா?எமது பக்கத்து மாநிலமான கருநா(க)டகா காரன் பிழைக்க போன ஒடுக்க பட்ட சிறுபான்மை தமிழ் மக்களை தமிழில் பேசுகிறான்.. தாய்மொழி தமிழ் என்பதற்க்காக வெட்டி காவிரி கரையில் ரத்தமாக விட்டான் தடுப்பதற்கோர் இந்திய தேசம் முன்வரவில்லை மயிரை புடுங்கி கொண்டிருந்தது! அதற்கு காரணமான மான வாட்டாள் நாகராசு இன்னும் அரசியல் வாதியாக மிகபெரிய அவதாரம் எடுத்து சுற்றி கொண்டுதான் உள்ளான்..ஏன் கன்னடக்காரனுக்கு-மராத்திகாரனுக்கும் இன்னும் எல்லை தகாராறு உள்ளது..எங்கே பெங்களூரில் உள்ள அவர்கள் மேல் கைவைக்க சொல்லுங்கள் பார்போம் வாலை ஒட்ட நறுக்குவார்கள்..

இந்த பால்தக்கரேவும் தான் மும்பையில் தமிழரை தாக்கினான் அப்போது என்ன செய்து கொண்டு இருந்தது ‘இந்தி’ய அரசு? இன்றும் பத்திரமாகத்தான் உள்ளான் இவ்வாறானவர்களை சிறையில் தள்ளி முட்டிக்கு முட்டி தட்டி இருந்தால் இந்த இந்திய தேசத்தை பாராட்டலாம்.. இதுவரை தமிழன் எத்தனை மாநிலங்களில் கலவரத்தை தூண்டினான்? காரணமின்றி யாரையாவது அடித்திருக்கிறானா?மலையாளி கண்ணகி கோட்டம் என்னுடையது என்கிறான்.. கொல்டி பாலாற்றின் குறுக்கே அணைகட்டிகிறான்.. என்ன செய்ய முடிகிறது நம்மால்?

இந்த மீனவர்களை எடுத்து கொள்ளுங்கள்..இதுவரை சற்றொப்ப 350 தமிழக மீனவர்களைச் சிங்களக் கடற்படையினர் இந்தியப் பெருங்கடலில் சுட்டுக் கொன்று விட்டனர். இந்தத் தமிழ் இனப்படுகொலை தொடர்கிறது. இந்தியக் கப்பற்படையோ இந்திய அரசோ சிங்களக் கப்பற்படைக்கு எதிராக மறுநடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையே ஏன்?

பாகிஸ்தானுக்கு எதிராக சீறும் ‘இந்தி’யத் தோட்டாக்கள், தமிழகத் தமிழனை சுட்டுக் கொல்லும் சிங்களவனை நோக்கி ஒரு முறையாவது பாய்ந்திருக்கிறதா? ஏன் தமிழாகளிடம் இந்த பாகுபாடு? சாகடிப்போர் இந்திய அரசுக்கு நண்பர்கள். சிங்களர்கள் நண்பர்கள் என்று சொல்வது கூட தவறு. இந்திய ஆளும் வர்க்கத்திற்கு அவர்கள் பங்காளிகள். சிங்களரும் இந்திய ஆளும் வர்க்கத்தினரும் ஆரியர்கள். வரலாற்றுக் காலந்தொட்டு அடுத்தடுத்த தலைமுறைக்குத் தமிழர்க்கெதிரான பகைநஞ்சை ஆரியம் கைமாற்றித் தந்துவருகிறது. ஈழத் தமிழர்கள்பால் இந்திய ஆளும் வர்க்கம் கடைபிடிக்கும் அணுகுமுறையும் பகைமை நஞ்சு சார்ந்ததுதான். சில மாதங்களுக்கு முன்பு லெபனானில் அவதிப்பட்ட இலங்கைச் சிங்களவர்களுக்கு இலவச விமானம் அனுப்பி ஏற்றி இறக்கிய இந்தியா குவைத்தில் அவதிப்படும் தமிழர்களை மட்டும் உணவுக்குக் கூடப் பிச்சை எடுக்க விட்டிருப்பதன் காரணமென்ன, அவர்கள் தமிழர்கள் என்பதாலா?

இந்திராகாந்தி ஆட்சிக் காலமானாலும், அவர் தந்தையார் நேருவின் ஆட்சிக் காலமானாலும், இந்திராவின் மகன், மருமகள், பேரன் ஆட்சிக் காலமானாலும், வாஜ்பாயி ஆட்சிக் காலமானாலும் இந்திய ஆளும் வர்க்கத்தினர் தமிழகத் தமிழர்களை சந்தேகப் பட்டியலில் வைத்துக் கண்காணிப்பதிலும், தமிழர்களைப் பகைவர்களாகக் கருதுவதிலும் மாற்றமில்லை. ஈழத் தமிழர்களையும் அதே அளவுகோல் கொண்டுதான் பார்க்கிறார்கள்

இந்த பாகுபாட்டைத் தான் ‘இந்தி’ய தேசியம் என்கிறோம். தமிழகத் தமிழர்பால் பகைமை அணுகுமுறையையே இந்திய அரசு கொண்டிருக்கிறது. காவிரி நீர்ச் சிக்கலில், கன்னடர் பக்கமும், முல்லைப் பெரியாறு அணைச்சிக்கலில் மலையாளிகள் பக்கமும் இந்திய அரசு இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் தமிழர்களுக்குப் பகைவர்களாக யார் யார் மாறுகிறார்களோ அவர்கள் எல்லாம் இந்திய அரசுக்கு நண்பர்களாகவும் வேண்டியவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். நடுவண் அரசாங்கத்தில் எக்கட்சி அல்லது எக்கூட்டணி ஆட்சி நடத்தினாலும் சாரத்தில் இக்கொள்கையே கடைபிடிக்கப்படுகிறது.

அதாவது ஏனைய பொருளாதார வளங்களுக்கே தமிழரும் தமிழ்நாடும் தேவை படுகிறாரகள்..

அசாமில் பெட்ரோல் எடுக்க அந்த அரசிற்கு உரிமைத் தொகை கொடுத்து வரும் “இந்தி”ய அரசு, தமிழகத்தின் காவிரிப்படுகையிலிருந்தும், நரிமணித்திலிருந்தும் திருடிச் செல்லும் பெட்ரோலுக்கு நம்மிடையே “இறக்குமதி” வரியை விதித்துக் கொள்ளையடிப்பதை என்னசொல்ல?

மார்வாடி, குசராத்தி சேட்டுகள் தமிழகத்தின் பெரு வணிகங்களை கைப்பற்றத் தொடங்கியுள்ளனர். பீகாரிகள் ரயில்வே வேலை, ரோடு வேலை என தமிழகத்திற்குள் நுழைந்து விட்டனர். தமிழத்திலேயே தமிழன் அகதியாக தெருத்தெருவாய் அலையும் நாள் வெகு தொலைவில் இல்லை எனத் தெரிகிறது. அயலவன் வந்து சுரண்ட நமது தமிழ் மண் வேட்டைக்காடு அல்ல. நமது எதிரி உலகமய முதலாளிகள் மட்டுமல்ல தில்லி ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக இங்கு செயல்படும் “இந்தி”யத் தேசியத்தை ஆதரிக்கும் அனைவரும்தான் என உணர வேண்டும்

இதுவரை எனைய தமிழர் நலம் சார்ந்த வெளிவிஷயங்களில் இதுவரை இந்தியா தலையிட்டதிலை அது மலேசிய பிரச்சனையாக இருந்தாலும் சரி ..குவைத் தமிழர்கள் பிரச்சனையாக இருந்தாலும் சரி!

எங்கோ சரந்தீபு சிங்கு தூக்குதண்டனைக்கு தாம் தூம் என்று குதிக்கும் இந்திய அர்சு இதுவரை தமிழக தமிழர்களுக்காக குதிதது உண்டா?சிந்தித்து பாருங்கள்..மராட்டியர்களின் இன உணர்வில் கால் பங்கு கூட இல்லையா தமிழனுக்கு? கொஞ்சம் வராலாற்றை எடுத்து புரட்டி பாருங்கள் அடக்குமுறைக்கு எதிராக போராடிய இனங்களே வாழ்திருக்கின்றன..

ஈழதமிழர்கள் செய்வது ஒன்றும் தவறான விஷயம் அல்ல.. தமிழர்கள் இந்தியாவில் இருந்தாலும் ஈழத்தில் இருந்தாலும் இந்திய ஆளும் வர்க்கம் அவர்களைப் பகைவர்களாகவே கருதுகிறது. விடுதலைப் புலிகள் இந்திய அரசுக்குத் திரும்பத் திரும்ப நேசக்கரம் நீட்டுகிறார்கள். இந்திய அரசு ஒரு பிராந்திய வல்லரசாகச் செயல்படத் துணைபுரிவோம், இந்திய தேசிய இறையாண்மைக்குப் பாதுகாப்பாக இருப்போம் என்று கூட உறுதி தருகிறார்ச்கள். ஆனால் இந்திய ஆட்சியாளர்கள் விடுதலைப் புலிகளை வீழ்த்தவே முனைகிறார்கள். இது தீராத ஆரிய-தமிழ் இனப்பகையின் வெளிப்பாடு.

நமக்காக குரல் கொடுக்க ஒரு நாடு கட்டாயம் வேண்டும்.. நம் குரல் ஐ.நா. சபையில் எழுப்ப படும்..

அப்போதுதான் தமிழர்களுக்கு கொடுமை செய்யும் எனைய நாடுகள் இந்தியா உட்பட தனது கொட்டத்தை அடக்கும்..

Link to comment
Share on other sites

எந்த பக்கம் பெசுகிரார்னே தெரியாமல் பேசும் இசைகளைஞனை போல

:lol: :lol: :lol:

இன்று காலை நல்ல சிரிப்போடை ஆரம்பிச்சிது..! :lol:

அர்ஜுனனுக்கு புறா மட்டும் தெரிந்தது போல அவர்களுக்கு தமிழ் ஈழம் மட்டுமே தெரிந்தது . அவர்கள் தனது மக்களுக்காக தனது குடும்பத்தை விட்டு சுகங்களை விட்டு அல்லும் பகலும் எதிரிகளிடம் போராடி கடைசியாக சூழ்ச்சியாலும் வஞ்சகத்தாலும் வீழ்த்தபட்டார்கள் . வீரத்தால் அவர்கள் இன்றும் வீரகளே. அவர்கள் போராடியது ஈழத்திற்காக . அவர்கள் நாட்டிற்காக. இந்தியாவிற்கு எதிராக அல்ல .

இதுதான் என் கருத்தும்..

அவர்களால ஏதோ முயன்றார்கள்..! சரி தவறுகள் இருக்கலாம்.. ஆனால்...

இப்ப செத்துப் போய்ட்டான்யா.. கொஞ்சம் மரியாதை குடுங்க.. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி இந்த இந்தி நாட்டை அணுகுவது?

சிந்தனை செய்து பாருங்கள்! இந்தியா என்னும் நாடு இந்து என்னும் ஆறிபோன ஆரிய சித்தாந்ததினை அடிப்படையாகவும், இந்தி என்னும் வடமொழியை செயல்திட்டமாக கொண்டு கண்ணுக்குப் புலனாகாத ஒரு பூணூலால் கட்டப் பட்டுள்ளது. பார்ப்பனியம் ஆதிக்கம் செலுத்தும் காங்கிரஸ்,மார்க்சிய கம்யூனிஸ்டு, அ தி மு க, போன்ற மிதவாத அரசியல் அமைப்புகள்; ஆர் எஸ் எஸ் , இந்து முன்னணி, பஜ்ரங் தளம், பாரதிய சனதா, மா லெ குழுக்கள், மக இ க போன்ற தீவிர அரசியல் பேசும் இயக்கங்கள், இந்திய இராணுவத் தலைமை, மையப் புலனாய்வுத் துறை, இந்திய தலைமை செயலகம், நீதித் துறை, வானொலி, தொலைக்காட்சி, பத்திரிக்கை ஆகிய அனைத்தும் இந்தப் பூணூல் கட்டமைப்பின் ஒவ்வொரு இழைகளாகும்.

இந்தக் கட்டமைப்பு மிக நுணுக்கமாக, வஞ்சகமாக பின்னப் பட்டுள்ளதால் தமிழக தமிழர்கள் மிக மிக கவனமாக அணுகப்பட வேண்டும். இல்லையென்றால் நாம் ஒருவருக்கு ஒருவர் அவர்களுடைய வருணா சிரம் தர்மபடி அடித்துகொள்ள நேரிடும் .ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். காசுமீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து ஒடுக்கப் படும் தேசிய இனங்களும் ஒன்று பட்டு விடுதலைகான போராட்டத்தை மேற்கொள்ள முடியும் என்பது, இந்தியா என்கிற பார்ப்பனிய உருவாக்கம் உள்ள வரை சாத்தியமாகக் கூடிய வாய்ப்புகள் மிக மிக குறைவே. ஏன் சாத்தியம் இல்லை என்று கூடக் கூறலாம். இங்குள்ள தேசிய இனங்கள் அடிப்படையிலேயே ஒன்றை ஒன்று முரண்பட்டு நிற்கின்றன. கன்னடன் தமிழனின் தனித்துவ முயற்சி கண்டு மனம் பொறாதவனாய் அவன் தன்னை விட தாழ்ந்தவன் எனக் காட்ட முற்படுகிறான். மலையாளி, இந்தியா என்ற கட்டமைப்புக்குள் அங்கங்கின்னாதபடி நிறைந்து ஒட்டுண்ணியாக வாழ்ந்துகொண்டு, தமிழனின் தனித்துவ வேட்கை தன் அடிப்படை வாழ்வாதாரத்தை பிளந்து விடும் என எண்ணி தமிழனின் மென்னியை திருகுகிறான். பிகாரியையும் ஒரியாக்காரனையும் மதராசியையும் வட நாட்டவன் வெறுக்கிறான், அவமதிக்கிறான். உறங்கும் எரிமலையான பஞ்சாப், எரியும் காசுமீர், அசாம், வட கிழக்கு மானிலங்கள் என எத்தனை முரண்பாடுகள். இத்தனை முரண்பாடுகளிலும் பார்ப்பனியவாதிகளும், பெரு முதலாளிகளும், அரசியல் அற்பர்களும் மட்டுமே ஒருமைப்பாடு, இந்தியா, இந்தியன் என்று அலறிக் கொண்டிருப்பதை கவனியுங்கள். பார்ப்பனியத்தை ஒழிக்க முற்படுங்கள். நீங்கள் புரட்சியெல்லாம் செய்ய வேண்டிய அவசியம் கூட இல்லாமல் இந்தக் இந்தி கட்டமைப்பு தானே உதிர்ந்துவிடும்!!....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நண்பரே உங்களின் கருத்துக்கு . நான் ஒரு நீண்டகால யாழ் கள உறுப்பினர் . நமது இனம் தவறான வழியில் சிந்தித்தால் திட்டி அழுத்தி கொட்டி எப்படியாவது அவர்களை நம் வழிக்கு கொண்டு வருவது ஒவ்வொரு தமிழனின் கடமை . அல்லது பிறரின் கருத்துக்களை ஆழமாக செவிமடுத்து அதில் தனக்கு உகந்தவற்றை ஏற்றுக்கொண்டு ஒரே பாதையில் பயணிப்பதை நான் விரும்புகிறேன் .அதை விடுத்து ஓடிப்போயி தூரத்தே நின்று கொண்டு நம் இனம் மீதே சேறு வாரி தெளிக்கும் அளவுக்கு நான் சுயமரியாதை ( இந்த வார்த்தையே இப்போது கேளிப்போருளாகி விட்டது . தவறு செய்யும் மற்றும் திசை மாறும் பலர் உபயோக படுத்தும் வார்த்தையாகி விட்டது ) உள்ளவன் அல்ல . என் இனத்திற்கு நல்லது நடந்தால் அந்த சுயமரியாதையை கூட இழக்க தயார் .

எனக்கு உள்ள ஒரே வருத்தம் . சரியான தலைமை இன்றி தமிழ் ஈழம் தற்போது தள்ளாடுகிறது . நீண்ட நாள் உறுப்பினர்கள் பலரும் என் எழுத்துக்களை அறிவர் . மான ரோசம் அற்ற மிதவாத எண்ணம் கொண்ட நானே என் தலைவன் பிரபாகரன் என மனதார பல முறை கூறியிருக்கிறேன் .

ஏனெனில் என்னைபோல, உங்களைபோல, ஈழ மகளை போல, ரதியை போல, மல்லையுரானை போல, புங்கையூரன் போல, சாவகசமா தூங்கிட்டு அப்பப்ப முழிச்சிட்டு களத்தை செப்பனிட வரும் நிழலி போல, இடைவிடாது இந்தியாவிற்கு எதிராக கிளிப்பிள்ளை போல கத்தியே சாகும் புரட்சிகர தமிழ் தேசியன் போல, எந்த பக்கம் பெசுகிரார்னே தெரியாமல் பேசும் இசைகளைஞனை போல, அவரை போல, இவரை போல, அதை போல, இதை போல, இன்னும் பல போல ஆட்டு, மாட்டு, கழுதை, புறா, கோழி, பன்றி, காடை, கௌதாரி, பேய், பிசாசு, எல்லா மந்தைகளையும் ஒரே நேர்கோட்டில் அழைத்து வந்து ஈழத்தை பற்றி மற்றும் ஈழ விடுதலையை பற்றி மட்டும் சிந்திக்க வைத்த மாபெரும் தலைவன் அவன் . அவனை எனக்கு பிடிக்கும் . ஏனெனில் அவன் தனக்கு தன் இனத்திற்கு ஒரு வீடு / தேசம் பெற நினைத்தான் . அடுத்தவன் வீட்டையோ / நாட்டையோ கெடுக்க நினைக்க வில்லை

ஒரு நாள் கூட புலிகளுக்கு எதிராக கருத்து எழுதியது இல்லை . இன்னும் சொல்ல போனால் புலிகள் செயல்பாடுகளில் பல, பல இல்லை எதுவுமே அதிகமாக எனக்கு உடன்பாடு கிடையாது . எனினும் ஒன்று மட்டும் அதிக உடன்பாடு . அர்ஜுனனுக்கு புறா மட்டும் தெரிந்தது போல அவர்களுக்கு தமிழ் ஈழம் மட்டுமே தெரிந்தது . அவர்கள் தனது மக்களுக்காக தனது குடும்பத்தை விட்டு சுகங்களை விட்டு அல்லும் பகலும் எதிரிகளிடம் போராடி கடைசியாக சூழ்ச்சியாலும் வஞ்சகத்தாலும் வீழ்த்தபட்டார்கள் . வீரத்தால் அவர்கள் இன்றும் வீரகளே. அவர்கள் போராடியது ஈழத்திற்காக . அவர்கள் நாட்டிற்காக. இந்தியாவிற்கு எதிராக அல்ல .

இங்கு பலர் எதுவுமே ஈழத்திற்கு செய்யாமல் கணினி தட்டி இந்தியாவையே வம்புக்கு இழுத்துக்கொண்டு இருப்பது எனக்கு பிடிக்கவில்லை. இந்தியாவை வம்பு இழுப்பதால் உங்கள் நேரம் தான் வீண் . இந்தியாவிற்கு ஒன்றும் ஆகாது.

இங்கு பலர் இந்தியா சீனாவுக்கு பயப்படுது, இலங்கை கடற்படைக்கு பயப்படுதுன்னு வடிவேலையும் மிஞ்சி உலக மகா பிதற்றல்கள் செய்கிறார்கள். அய்யா சாமிகளா நிறை குடம் தளும்பாது . இந்தியா ஒரு நிறைகுடம் . அது அமைதியாக தான் இருக்கும் .

பாவம் ஈழமகள் களத்திற்கு வாறதே இல்லை அவவை போட்டு தாக்கி இருக்கிறீங்கள்...ஒழுங்காய் ஒரு பெயரில் வந்து கருத்து எழுதத் தெரியல உங்களுக்கு அதில் வேறு பழைய ஆட்களுக்கு உங்களைத் தெரியுமாம்...யார‌து பழைய உறுப்பினர் இருந்தால் யார் இவர் என கண்டு பிடியுங்கள் பார்ப்போம் :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.