Jump to content

உடையாரின் மகனுக்கு இன்று 6வது பிறந்தநாள்


Recommended Posts

கள உறவு உடையாரின் மகன் இன்று தனது ஆறாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அந்தக் குழந்தையை நேசக்கரம் சார்பாகவும் எனது குடும்பம் சார்பாகவும் இதயம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

உடையாரின் மகனின் பிறந்தநாளை இங்கு தெரிவிப்பதன் நோக்கம் தனது மகனின் பிறந்தநாளில் ஒரு குடும்பத்திற்கு சுயதொழிலொன்றிற்கு விளக்கேற்றி தங்கள் உதவியை வழங்கியிருக்கிறார்கள். உடையாரின் உதவியைப் பெற்றுள்ள குடும்பம் ஒரு ஊனமுற்ற முன்னாள் போராளியும் அவனது நோயுற்ற மனைவியும் 3 குழந்தைகளும்.

சிறுவயதிலிருந்தே மனிதர்களை நேசிக்கவும் வாழ வழியற்றவர்களுக்கு உதவும் மனப்பாங்கை வளர்க்க உடையார் தனது மகனுக்கு நமது நாடு பற்றிச் சொல்லி வளர்க்கிறார். அந்த நல்ல மனப்பாங்கை இவ்வழி எல்லோரும் வாழ்த்தும்படி குழந்தை வாழ வாழ்த்துக்கள்.

gluecklich-geburstag-festlicher_~k2121220.jpg

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply

உடையாரின் மகனிற்கு இனிய பிறந்த தினம்

பிள்ளையின் பிறந்த தினத்துக்கு மிகச் சிறந்த ஒரு உதவியை நல்கிய உடையாருக்கும் அவர் குடும்பத்துக்கும் அன்பான பாராட்டுகள். எனக்கும் மற்ற பலருக்கும் இது ஒரு முன்னுதாரணமாக இருக்கப் போகின்றது

Link to comment
Share on other sites

உயர்ந்துநிற்கும் உடையார் குடும்பம், உங்கள் வழி நாம் தொடர்வோம்.

சிறுவயதிலிருந்தே மனிதர்களை நேசிக்கவும் வாழ வழியற்றவர்களுக்கு உதவும் மனப்பாங்கை வளர்க்க உடையார் தனது மகனுக்கு நமது நாடு பற்றிச் சொல்லி வளர்க்கிறார். அந்த நல்ல மனப்பாங்கை இவ்வழி எல்லோரும் வாழ்த்தும்படி குழந்தை வாழ வாழ்த்துக்கள்.

இதன் மூலம் அடுத்த புலம்பெயர் தலைமுறை தாயகத்திற்கு பலமாக இருக்கும்!!

Link to comment
Share on other sites

உடையாரின் மகனிற்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.

இன்றைய நன்னாளில் ஒரு குடும்பத்தின் வாழ்விற்கு உதவியதற்கு நன்றிகளும் பாராட்டுக்களும்.

எல்லாம் வல்ல இறைவன் மகனை ஆசீர்வதித்துக் காக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையாரின் குழந்தைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.அந்தக் குழந்தை பல கலைகளும் கற்று நீடுழி வாழ வேண்டும்.அதே நேரம் இந்தப் பெற்ரோரைப் போல் ஒவ்வொரு பெற்றோரும் தங்களால் முடிந்த உதவியை தாயகத்தில் உள்ள உறவுகளுக்கு செய்வதற்கு முன்வரவேண்டும் என்பது எனது அவா.நன்றி.

Link to comment
Share on other sites

உடையாரின் மகனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்....! உங்களைப் போல் ஒவ்வொரு பெற்றோரும் இருந்தால் எம்மக்களின் வாழ்வை வளமாக்கலாம். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளின் பிறந்ததின கொண்டாட்டத்திற்கு செலவழிக்கும் பணத்தில் ஒரு தொகையை இவ்வாறு தாயக மக்களுக்கு உதவ முன்வரவேண்டும். நன்றிகள் உடையார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உடையார்

முதலில் உங்கள் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அடுத்து

சும்மா சொல்லக் கூடாது நெஞ்சை நக்கீட்டீங்க போங்க.

ரொம்ப பெருமையாக இருக்கு.

பலரும் உடையாரைப் பின் பற்ற வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

beaver_6th_birthday_cards369.jpgB6.jpgமகனின், 6 வது பிறந்த நாளுக்கு ஒரு குடும்பத்திற்கு உதவியதன் மூலம் உடையார் உயர்ந்து நிற்கிறார்.

மண்டபம் எடுத்து, சும்மா... ஊரிலை உள்ள விசர் சனங்களை கூப்பிட்டு, கேக் வெட்டுவதை விட.. இது எவ்வளவோ மேல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையாரின் ம கனுக்கு என் பிறந்த நாள்வாழ்த்துக்கள்.

உடையாரின் செயல் மற்றவர்களுக்கு முன்னோடியாக (வழிகாட்டியாக )அமையட்டும். பாராட்டுக்கள் உடையார் .

Link to comment
Share on other sites

உடையார் கடந்தமாதம் தங்களது திருமணநாள் நிறைவாகவும் இருகால்களையும் இழந்த ஒரு முன்னாள் பெண் போராளிக்கும் உதவியிருந்தார். ஆனால் தனது பங்களிப்பினை யாழில் போட வேண்டாம் தனக்கு கோவிலில் போய் கொண்டாடுவதையும் விட ஒரு குடும்பம் மனதால் வாழ்த்தினால் போதுமென உதவியிருந்தார்.

உடையார் மன்னித்துக் கொள்ளுங்கள். உங்கள் அனுமதியின்றி தெரிவித்தமைக்கு. வெளியில் தெரியப்படுத்தாமல் உங்கள் உதவி செல்ல வேண்டுமென நினைத்து நீங்கள் செய்கிற உதவிகள் மற்றவர்களுக்கும் உதாரணமாக இருக்கட்டுமென்றே யாழில் போட்டுள்ளேன்.

கடந்த 2வருடமாக பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கும் 2உயர்தரம் கற்கும் மாணவிகளுக்கும் கல்வியை வழங்கியிருந்தார். இவ்வருடம் இரண்டு நெஞ்சின் கீழ் உணர்வற்ற முன்னாள் போராளிகள் இருவருக்கு மாதாந்த உதவியை வழங்கி வருகிறார். அத்தோடு திருமணநாள், பிள்ளையின் பிறந்தநாளிற்கு செலவாகும் பணத்தை வாழ வழியற்றிருந்த இரண்டு குடும்பத்திற்கு வழங்கியுள்ளார்.

கடந்த 2மாதங்களாக மேலதிகமா வேலைசெய்தே இந்த உதவிகளை வழங்கிவருகிறார். எத்தனையோ விமர்சனங்கள் சேறடிப்புகள் நடுவில் நேசக்கரமும் மண்ணாங்கட்டியுமென்று பலதரம் வெறுத்த நேரங்களில் உடையாரின் மின்னஞ்சல்களும் உதவியும் உடையார் போன்று முகம் அறியாத பலரே திரும்பவும் நேசக்கரத்தை போட்டுவிட்டு ஒளிக்காமல் உயிர்க்க வைத்துக் கொண்டிருக்கிறது.

உடையார் உங்கள் பணிகளுக்கு ஆதரவு தருகிற உங்கள் துணைவிக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் மிக்க நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் நல்லாயிருக்கவேண்டும்...இது கண்ணீருடன் வாழ்த்தும் உதவி பெற்ற அந்தக்குடும்பங்களின் வாழ்த்து உடையார் அண்ணா....

உங்கள் மகனுக்கு எனது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்...இது நாட்டைவிட்டு ஓடி வந்த எனது வாழ்த்துக்கள் அண்ணா...

முன்னைய வாழ்த்துக்குப் பெறுமதிகள் இல்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையாரின் குழந்தைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு..... உடையார் குடும்பம் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எழுத்துக்களில் விளையாடும் ' மனிதம்'. உங்கள் செயல்களிலும் விளையாடுகின்றது!

ஆயிரம் கோவில்கள் அமைப்பதில் பார்க்க, ஆங்கோர் ஏழைக்கு வாழ்வு கொடுத்தல் என்பதையே மனிதம்' என நான் குறிப்பிடுவது!

தாங்களும், தங்கள் குழந்தைகளும் நீடுழி வாழ வாழ்த்துகின்றேன்!

Link to comment
Share on other sites

உடையாரின் மகனுக்கு எமது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

உடையார் ஆயிரம் டொலர்கள் உதவியிருந்ததை நேசக்கர அறிக்கையில் பார்த்தேன்..! பற்பல உதவிகளை மேற்கொண்டு வரும் உடையார் நீங்கள் மிக உயர்ந்த மனிதன்..!!

Link to comment
Share on other sites

உடையார் உங்கள் மகன் சீரோடும் சிறப்போடும் வாழவேண்டும். ஒருவர் மனதார நல்லாயிருக்கவேண்டும் என்கிற வாழ்த்தே வாழ்ககையில் போதுமானது. தாய் தந்தையர் செய்கின்ற பாவ புண்ணியங்கள் தான் பிள்ளைகளை சேரும் என்று ஊரில் சொல்வார்கள். எனது இளவாயது காலத்தில் பலதடைவைகள் அருந்தப்பில் உயிர் தப்பியிருக்கிறேன். இன்று நினைத்துப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. அம்மா அப்பா செய்த புண்ணியம்தான் என்னை வாழவைத்திருக்கின்றது என நினைத்துக்கொள்வேன். அதே போல நீங்கள் செய்கின்ற புண்ணிய காரியங்கள் நிச்சயம் உங்கள் பிள்ளைகளை வாழவைக்கும்.

Link to comment
Share on other sites

உடையாரின் மகனிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.உங்கள் குடும்பம் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

Link to comment
Share on other sites

உடையாரின் மகனிற்கு வாழ்த்துகள். உடையார் குடுமபம் நல்லாய் இருக்க எனது இறைவனை வேண்டிக்கொள்கிறேன். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்று வாழ்கிறார் உடையார்.

உடையார் அவையடக்கமாக இவற்றை ஒழித்து வைத்திருந்தார். ஆனாலும் நீங்கள் எங்களுடன் பகிர்ந்ததிற்கு உங்களுக்கும் நன்றி சாந்தி அக்கா.

சிறுவயதிலிருந்தே மனிதர்களை நேசிக்கவும் வாழ வழியற்றவர்களுக்கு உதவும் மனப்பாங்கை வளர்க்க உடையார் தனது மகனுக்கு நமது நாடு பற்றிச் சொல்லி வளர்க்கிறார்.

புலிக்கு பிறந்தது பூனையாகுமா? கற்றுக்கொடுக்காமல் இந்த மீன் குஞ்சு நீந்தும் என்று நான் கரன்ரி பண்ணுகிறேன்.

வாழ்க உடையார் குடும்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையாரின் மகனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரியை ஆரம்பித்த சாந்தி அக்கா, மற்றும் வாழ்த்து தெரிவித்த நிழலி, அகூதா, தப்பிலி, யாயினி, தமிழினி, ஈழபிரியன், தமிழ் சிறி, நிலாமதி அக்கா, கோமகன், சுபேஸ், இணையவன், கறுப்பி, சிறி, புங்கையூரன், இசைக்கலைஞன், சாத்திரியண்ணா, நுணாவிலன், வாத்தியார், மல்லையூரான் & குமாரசாமி அனைத்து உறவுகளுக்கும் எனதும் என் குடும்பத்தினதும் நன்றிகள். மனதை நெகிழ வைத்துவிட்டீர்கள் அனைத்து உறவுகளும்.

மகனிற்கு அறியும் வயதல்ல உதவுவதை பற்றி என்றாலும் அவன் விளங்க கூடிய வகையில் விளங்கப்படுத்துவேன், அவனிற்கும் மற்ற நண்பர்களை போல் கொண்டாட வேண்டும் என்று ஆசை இருக்கும், அதனால் ஞாயிறு அவனின் பிறந்த நாளை அவனின் & குடும்ப நண்பர்களுடன் கொண்டாடினோம்.

நன்றிகள் மீண்டும் வாழ்த்திய அனைத்து உறவுகளிற்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையார் உங்களுடைய மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

மகனிற்கு அறியும் வயதல்ல உதவுவதை பற்றி என்றாலும் அவன் விளங்க கூடிய வகையில் விளங்கப்படுத்துவேன், அவனிற்கும் மற்ற நண்பர்களை போல் கொண்டாட வேண்டும் என்று ஆசை இருக்கும், அதனால் ஞாயிறு அவனின் பிறந்த நாளை அவனின் & குடும்ப நண்பர்களுடன் கொண்டாடினோம்.

உடையார்,

இன்று இதைப் பற்றி மனைவியுடன் ஆலோசிக்கும் போது பிள்ளைகளுக்கு பிறந்த தினம் கொண்டாடுவதில் இருக்கும் ஆவலை முக்கிய விடயமாக பார்த்தோம். அவர்களுக்கு விளங்க வைக்க முன் அவர்கள் சார்பாக செய்வது சரியல்ல கண்டு அவர்களுக்கு நாமே முன்னுதாரணமாக இருப்போம் என முடிவெடுத்துள்ளோம். இனிவரும் காலங்களில் எனது மனைவியினது பிறந்த தினங்களை நீங்கள் செய்தது போன்று செய்தால் அதைப் பார்த்து வளரும் பிள்ளைகளுக்கு அதே உதாரணமாகி பின் விளங்கப்டுத்துவது இலகுவாக இருக்கும் என்று நம்புகின்றோம்.

நீங்கள் செய்த நல்ல விடயம் ஒன்று பலருக்கு உதவுகின்றது

நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.