Jump to content

பரப்புரை செய்யிறார் சின்னத்துரை: சவர்மா கடையில


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊர் கோவில் விரதம் என்று ஐக்கிய இராச்சியத்தில் சின்னத்துரை வீட்டில் பறக்கும், நீந்தும், நாலு காலில் ஓடும் உயிர் இனங்களை பொரித்து, வறுத்து, அவித்து உண்ண தடை.

வேலையால் திரும்பிய சின்னத்துரையரை சவர்மா கடை வாசலடியில் வந்த வாசம் நிறுத்தி, அவரது வயிற்றிற்கும் மூளைக்கும் போரை தொடக்கி வைத்தது. அந்த போரில் அவரது தொந்தி வயிறு உடன் வெற்றி பெற்றது.

சின்னா: ஒரு கோழி சவர்மா. நல்ல உறைப்பா போடுங்கோ.

சவர்மா: நல்ல உறைப்பாவாகவா?

சின்னா: ஓம். நாங்கள் நல்ல உறைப்பு சாப்பிடுவம்.

சவர்மா: நீ ஸ்ரீ லங்கனா?

சின்னா: இல்லை, ஸ்ரீ லங்காவில் இருந்து தப்பி வந்த ஒரு ஈழ தமிழன். நீ எந்த நாடு?

சவர்மா: லெபனான். ஸ்ரீ லங்கா பிரச்சினையை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். ஏன் உங்களை கொல்கிறார்கள்?

சின்னா: அவர்கள் இனவெறியர். அவர்களுக்கு ஒரு மொழி, ஒரு மத, ஒரு இன நாடு தேவை.

சவர்மா: அப்படியா? எனது ஸ்ரீ லங்கன் வாடிக்கையாளன் அங்கு இசுலாமியர் எல்லாம் சுகமாக வாழ்வதாக சொன்னானே?

சின்னா: அவன் ஒரு ஸ்ரீ "லை" ங்கன். அங்கு இசுலாமியர்களும், இந்துக்களும் வேட்டை ஆடப்படுகிறார்கள். இப்போதும் ஒரு பழைமை வாய்ந்த மசூதியை இடித்து தள்ளி விட்டார்கள். பல வளரும் இசுலாமிய இளையோரை என்கவுண்டரில் போட்டு தள்ளுகிறார்கள்.

சவர்மா கடைக்காரரின் முகம் கறுத்தது. அவரும் வறுத்த கோழியை ஊண்டி கத்தியால் சடார், சடார் என்று வெட்டி கொண்டே...

சவர்மா: அப்படியா?

சின்னா: ஆமாம். ஸ்ரீ லங்காவின் கொடியிலே அதை அவர்கள் தெளிவாக காட்டி உள்ளார்கள்.

சின்னா தனது கருப்பு பழத்தை(பிளக் பெரி) எடுத்து ஸ்ரீ லங்கா கொடியை கூகிளில் கொண்டு வந்தார்.

சின்னா: பச்சை கலர் இசுலாமியர்களையும், ஆரஞ்சு கலர் தமிழரையும் குறிக்கும். அந்த இரண்டு குறியீட்டையும் எதிர்த்து ஒரு கோபமான சிங்கம் வாளோடு நிற்கிறது. அந்த சிங்கத்தை புத்த மத இலைகள் காக்கிறது.

சவர்மா: ஆமாம். ஆமாம். இந்த கொடி ஒரு இன விரோத கொடி. புத்தர்களுக்கு ஏன் வாள்? ஏன் மூர்க்கம்?

சின்னா பெரு மூச்சு விட்டார்.

சின்னா: உனக்கு விளங்கியிருக்கிறது. பல தமிழர்களும், இசுலாமியரும் இந்த கொடியால் தம்மை போர்த்தியும், உயர்த்தி பிடித்து ஆட்டியும் திரிகிறார்கள்.

சவர்மா: ஏன் அப்படி செய்கிறார்கள்? அவர்கள் லூசா?

சின்னா: அவர்கள் லூசிலும் பார்க்க மோசமானவர்கள். தம்மை பற்றி ஒன்றும் தெரியாத ஆட்டு மந்தைகள்.

சவர்மா: அந்த ஸ்ரீ லங்கா கார வாடிக்கையாளனிடம் இதை பற்றி கேட்க போகிறேன்.

சின்னா: தாரளமாக நாக்கை பிடுங்குவதை போல் கேள்.

சின்னா உணவை பெற்றுக்கொண்டு. தமிழர் பிரச்சினையை ஆர்வத்தோடு கேட்டதற்காக ஒரு ஐந்து பவுன் டிப்சும் வைத்து சென்றார்.

அவருக்குள் இன்னொரு ஈழ ஆதரவாளரை உருவாக்கியதில் மகிழ்ச்சி.

வீடு செல்வதற்குள் பறப்பனவை பர பரப்பாக வாய்க்குள் செலுத்த தொடங்கினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளவி நன்றி பகிர்வுக்கு, கதையின் ஊடாக நல்ல கருத்தை சொல்லியிருக்கின்றீர்கள், நானும் பல வேற்று இன நண்பர்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளேன்,

YouTube இணைப்புகள், ஆங்கில செய்திகள், இப்படி பல...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குளவி நன்றி பகிர்வுக்கு, கதையின் ஊடாக நல்ல கருத்தை சொல்லியிருக்கின்றீர்கள், நானும் பல வேற்று இன நண்பர்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளேன்,

YouTube இணைப்புகள், ஆங்கில செய்திகள், இப்படி பல...........

நன்றி உடையார். தமிழரில் இன்னும் பலர் பரப்புரை செய்யவேண்டும் என்பதே எனது ஆசை. அதை தூண்ட இந்த முயற்சி. இது மூன்றாவது தொடர்.

உங்களது பரப்புரை சேவை தொடர வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி குளவி, கிரிகெட் விளையாட்டை வைத்துதான் கூட பரப்புரை செய்யக் கூடியதாக இருக்கும, வெள்ளையள் கேட்பார்கள் ஏன் இலங்கைக்கு ஆதரவு இல்லை என்று, அப்ப ஒரு பிடி பிடித்தால் சரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி குளவி, கிரிகெட் விளையாட்டை வைத்துதான் கூட பரப்புரை செய்யக் கூடியதாக இருக்கும, வெள்ளையள் கேட்பார்கள் ஏன் இலங்கைக்கு ஆதரவு இல்லை என்று, அப்ப ஒரு பிடி பிடித்தால் சரி

எனக்கு ஈழத்து ஆதரவளார்கள் என்று கூறிவிட்டு ஸ்ரீ லங்கா கொடியை ஆட்டிக்கொண்டு கிரிக்கெட் பார்க்க போகும் தமிழரை கண்டால் பொத்திக்கொண்டு வரும். சிங்களவனே தன்னை பிரிடிஷ் அரச பரம்பரை போல் காட்டிக்கொள்ள பிரிட்டிஷ் கொடியுடன் வாருவான் ஆனால் எங்கடையள திருத்த முடியாது.

அந்த ஆதங்கமும் கதையில் வெளிப்பட்டிருக்கிறது.

Link to comment
Share on other sites

குளவி.. என்ன கனநாளா காணேல்ல? :rolleyes:

நல்ல கதையோட வந்திருக்கிறீர்கள்.. இணைப்புக்கு நன்றிகள்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளவியார் கதை கூவுது.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை அருமை குருவி

எங்கேயப்பா அடிக்கடி காணாமல் போகின்றீர்கள்?

நானும் இப்படித்தான் 5 நிமிடம் எங்காவது கோப்பி குடிக்க உட்கார்ந்தாலும் நாடுபற்றி ஏதாவது பேசப்பார்ப்பேன்.

ஆனால் இயற்கையில் அதிகம் பேசுவது எனக்கு பிடிக்காது.

Link to comment
Share on other sites

அவருக்குள் இன்னொரு ஈழ ஆதரவாளரை உருவாக்கியதில் மகிழ்ச்சி.

கடைசியாக நியூயோக் பிரயாணம் பற்றி ஒன்று என நினைக்கிறேன், அருமையாக எழுதினீர்கள், இப்பொழுது இது. நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குளவி.. என்ன கனநாளா காணேல்ல? :rolleyes:

நல்ல கதையோட வந்திருக்கிறீர்கள்.. இணைப்புக்கு நன்றிகள்..! :)

சமூக கள வேலைகள் நிறைய இருந்த படியால் நேரம் மட்டு மட்டாகிவிட்டது. ஆனால் ஒவ்வொரு நாளும் யாழை இரு முறையாவது கருப்பு பழத்தில் பார்த்துவிடுவேன். :D

குளவியார் கதை கூவுது.....

நன்றி புத்தர்.

அருமை அருமை குருவி

எங்கேயப்பா அடிக்கடி காணாமல் போகின்றீர்கள்?

நானும் இப்படித்தான் 5 நிமிடம் எங்காவது கோப்பி குடிக்க உட்கார்ந்தாலும் நாடுபற்றி ஏதாவது பேசப்பார்ப்பேன்.

ஆனால் இயற்கையில் அதிகம் பேசுவது எனக்கு பிடிக்காது.

நன்றி அண்ணா. எனக்கும் ஒவ்வொரு நாளும் வந்து யாழ் வாசகர்களை அறுக்க ஆசை தான் ஆனால் நேரத்திற்கு பஞ்சம்.

இனி கொஞ்சம் திடமாக வட்டமிட்டு திரிய முனைகிறேன்.

கடைசியாக நியூயோக் பிரயாணம் பற்றி ஒன்று என நினைக்கிறேன், அருமையாக எழுதினீர்கள், இப்பொழுது இது. நன்றிகள்.

அகூதா, உங்களுடைய ஞாபக சக்தி அருமை. ஆமாம் நியூ யோர்கில யூதர் ஒருவருக்கு பரப்புரை செய்தவர் சின்னதுரை.

மற்றும் சளைக்காமல் இந்த தளத்திற்கு நீங்கள் அளிக்கும் செய்திகள், கட்டுரைகள் அருமை. உங்களது தமிழ் சேவை தொடரட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் பல தனிப்பட்டவர்கள் இனப்பற்றுடன் நிறையச்செய்கிறார்கள்..அவர்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள்..அமைப்புக்கள் தமிழர்களுக்கு தலைமைதாங்குவதைப் பற்றி சண்டை செய்து கொண்டிருக்கிறார்கள்... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குளவி அருமையாக இருக்கிறது.தொடரட்டும் தங்கள் முயற்சி.

நன்றி புலவர்.

இப்படித்தான் பல தனிப்பட்டவர்கள் இனப்பற்றுடன் நிறையச்செய்கிறார்கள்..அவர்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள்..அமைப்புக்கள் தமிழர்களுக்கு தலைமைதாங்குவதைப் பற்றி சண்டை செய்து கொண்டிருக்கிறார்கள்... :(

உண்மை சுபேஸ். தலைமை, தலைமை என்று எமது தலை மையை வெளிற வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.  
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.