Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புதுச்சப்பாத்து...

(இந்தவார ஒருபேப்பரிற்காக எழுதியது)

தீ,பெருந்தீ,விண்ணைமுட்டும் வேட்கையுடன் கொழுந்துவிட்டெரிந்துகொண்டிருந்தது,மனிதர்களை எரித்துஎரித்து எஞ்சிய கரித்துண்டுகள் குவிந்து அந்த இடம் மேடாகி இருந்தது.அதன் மேல் வைக்கப்பட்டிருக்கும் அந்த சிதையைத்தான் தீ விரைவாகத் தின்றுதீர்த்துவிடவேண்டும் என்ற பெருஞ்சங்கல்ப்பத்துடன் எரித்துக்கொண்டிருந்தது.மாலை நேரத்து மெல்லிருளில் அந்த மயானப் பிரதேசமெங்கினும் அத்தீயின் ஒளியில் கரைந்து செந்நிறமாக உருகிக்கொண்டிருந்தது.சனசந்தடியற்ற அந்தச்சுடலை ஏரியாவில் பினமெரியும் சிதையை சற்றுத்தொலைவில் இருந்து வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் கோபி.தீ எழுந்து வானத்தை தொட்டுவிட எத்தனித்துக்கொண்டிருந்தது.சுடலையை அடுத்திருந்த வயல்வெளியும் வானமும் சந்திக்கும் புள்ளியில் செந்நிற நெருப்புக்கோழமாக கதிரவன் கீழிறங்கிக்கொண்டிருந்தான்.அங்கும் நெருப்பு இங்கும் நெருப்பு.இந்த உலகமே இந்த நெருப்பில்தானே தொடங்கியது.இந்த நெருப்புத்தானே இப்பொழுதும் வாழவைத்துக்கொண்டிருக்கிறது.கடைசியில் அந்த நெருப்பே தின்றுவிடுகிறது. ஆடிக்கொண்டிருக்கும் அந்த தீ நாக்குகளின் இடையே அவன் தன்னைப்பார்த்து நடனமாடுவதைப்போல ஒரு பிரமையாக இருந்தது கோபிக்கு.கண்களை கசக்கிவிட்டு மீண்டும் பார்க்கிறான்.இன்னமும் இன்னமும் வேகமாக அவன் தன்னைப்பார்த்து ஆடுவதுபோல இருந்தது கோபிக்கு.நெஞ்சு வேகமாக அடித்துக்கொண்டது அவனுக்கு.இருள் இன்னமும் வேகமாக இறங்கத்தொடங்கியிருந்தது.யாரும் அற்ற அந்த இடத்தில் அவனும் தானும் மட்டுமே இருப்பதுபோல் இருந்தது கோபிக்கு.மெல்லக்கால்களை பின்னோக்கி எடுத்து வைத்து அந்த இடத்தை விட்டு அகலத்தொடங்கினான்.நினைவுக்குமிழிகள் மெல்லமெல்ல மேலெழுந்து வந்து உடைந்துவழியத்தொடங்கின.

***

பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார்கள்.இறுதித்தவணை,இதைத்தாண்டிவிட்டால் பதினோராம் வகுப்பு.அது முடிந்தால் அவர்கள் பெரியவர்கள்.ஜீன்ஸ் போடத்தொடங்கிவிடுவார்கள்.அதை நினைத்து இப்பொழுதே மனதளவில் அரைவாசி பெரியவர்களாக தங்களைக்கற்பனை செய்துகொண்டு திரிந்தார்கள். அன்று வியாழக்கிழமை.காலைப் பிரார்த்தனை முடிந்ததும் வகுப்புக்கள் ஆரம்பமாகிவிட்டிருந்தன.இந்தத் தவணை கோபி தான் வகுப்புத் தலைவன்.ஒவ்வொரு நாளும் முதல்ப்பாடம் கரும்பலகையின் வலதுபக்க மேல்மூலையில் வகுப்புமாணவர்களின் மொத்த எண்ணிக்கையையும் வரவையும் வகுப்புத்தலைவர் எழுதவேண்டும்.கோபி மாணவர்களை எண்ணி வரவை எழுதிக்கொண்டிருந்தபோது சமூக்கக்கல்வி ஆசிரியர் வகுப்பிற்க்குள் நுழைந்து கொண்டிருந்தார். வியாழக்கிழமைகளில் சமூகக்கல்வி வாத்தியின் பாடம்தான் முதலாவது.இவருக்கு வகுப்பு பொடியள் வைத்த பெயர் "கோல்புறுக் சீர்திருத்தம்".பத்தாம் வகுப்புத்தொடங்கியபோது இவர் ஆரம்பித்த "கோல்புறுக் சீர்திருத்தம்"பற்றிய பாடம்.இப்பொழுது மூன்றாவது தவணை முடிவிலும் தொடர்ந்து கொண்டிருந்தது.இவரின் பாடத்திற்கென்று பிரத்தியேகமாக கோபி ஒரு மைமுடிந்த பேனையையும் நாற்பது ஒற்ரைக்கொப்பி ஒன்றையும் கொண்டுசெல்வான்.அவர் வாசிக்கத்தொடங்கியதும் அவன் மை முடிந்த பேனையால் எழுதிக்கொண்டிருப்பேன்.அன்றும் அப்படித்தான் எழுதுவதுபோல் எழுதாமல் இருந்தபோது வாத்தியார் மேசையில் இருந்த "டஸ்றரை"எடுத்து கோபியை நோக்கி குறிபார்த்துக்கொண்டிருந்தார்.கோபி இருந்தது கடைசிக்கு முதல்மேசை.எந்தவிதத்திலும் அவனின் திருகுதாளத்தை கரும்பலகைக்குப் பக்கத்தில் நிற்கும் வாத்தியார் காண்பதற்க்கு சாத்தியமில்லை.அவனுக்கு குழப்பமாக இருந்தது. வாத்தியார் வீசிய "டஸ்ற்றர்" அவனைத்தாக்கவில்லை.பக்கத்தில் சிவா புத்தகப்பையை மேசையில் வைத்து அதன்மேல் இரு கைகளையும் அணையாக வைத்து பாதி முகத்தை கைகளுக்குள் புதைத்தும் பாதி முகத்தை வெளிக்காட்டியும் சயனத்தில் இருந்தான்.அவன் பாதிமுகம் முழுவதும் சோக்குத்துகள்களால் வெண்ணிறமாக மாறி இருந்தது.அவன் மடியில் வாத்தியார் எறிந்த "டஸ்றர்"கிடந்தது.வகுப்பு ஒருமுறை கொல்லென்று சிரித்து பின்னர் வாத்தியாரின் முறைப்பில் அடங்கியது.சிவா எதுவும் நடக்காததுபோல் முகத்தில் இருந்த சோக்குத்துகள்களை தட்டிவிட்டவாறு எழுந்தான்.அவன் கண்கள் இரண்டும் நித்திரைத்தூக்கத்தில் செங்கட்டிபோல் சிவந்திருந்தன.அவன் சமூகக்கல்வி வாத்தியாரிடம் எறிவாங்குவது இத்துடன் நான்காவது அல்லது ஜந்தாவது தடவையாக இருக்கவேண்டும்.வழமையாக சமூகக்கல்வி வாத்தியாரின் பாடம் என்றால் அவனுக்குத்தூக்கம் வந்துவிடும்.அவரின் வாசிப்பு அவனுக்கு நல்ல தாலாட்டு.அதனால்தான் அன்று முதல்ப்பாடமே அவன் தன்னையறியாமல் தூக்கிப்போய்விட்டிருந்தான்.

***

"நாளைக்குத்தான் கடைசிநாள்,எல்லாருக்கும் ஞாபகமிருக்குத்தான..?"நித்திரை கொண்டதிற்க்கு தண்டனையாக சிவாவை எழுந்து நிற்க்க வைத்துவிட்டு வாசிக்கத்தொடங்கிய வாத்தியார் இடையில் நிறுத்தி எல்லோரையும் பார்த்துக்கேட்டவாறு ஒரு வன்மப்புன்னகையை வீசிவிட்டு தன் "கோல்புறுக் சீர்திருத்தத்தை" தொடர்ந்துகொண்டிருந்தார்.ஒரு கிழமைக்கு முன்னர் கடைசித்திகதியும் கொடுத்து மாணவர்கள் எல்லோரும் சப்பாத்து அணிந்துதான் இனிமேல் வகுப்புக்கு வரவேண்டும் என்று வாத்தியார் அறிவித்திருந்தார்.கோபியும் வீட்டில் சண்டைபிடித்து கறுப்பு நிறத்தில் ஒரு சோடி சப்பாத்துக்களும் அதை பராமரிக்க "பொலிஸிங்கும்" வாங்கியிருந்தான்.மற்றையவர்களும் அப்படித்தான்.வீட்டில் நச்சரிப்புக்கொடுத்து வாங்கிவைத்திருந்தார்கள்.ஒரு சிலர் இப்பொழுதே போடத்தொடங்கியிருந்தார்கள்.சிலர் கடைசித்திகதி முடியட்டும் அதுவரை காத்தோட்டமாகத்திரிவம் என்று செருப்புடன் வந்திருந்தார்கள். பாவம் சிவாமட்டும்தான் இன்னமும் வாங்கியிருக்கவில்லை.அவன் வீட்டில் மிகவும் கஸ்ரம்.தந்தையின் தோட்டத்தை நம்பித்தான் அவர்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது."இன்னும் ஒரு இரண்டு நாள் பொறு,பூசனிக்காய்கள் முற்றிவிடும் வித்துச்சப்பாத்துக்கள் வாங்கித்தருவதாக தந்தைகூறியதாகவும் அதற்கிடையில் வாத்தி சொன்ன காலக்கெடு முடிந்துவிடும் என்ன தண்டனை தரப்போகிறார்களோ தெரியவில்லை என்றும் அன்றுகாலையில்தான் கோபியிடம் சொல்லிக் கவலைப்பட்டுக்கொண்டிருந்தான்.வாத்தியார் திரும்பவும் அதை நினைவூட்டியபோது கவலைக்கோடுகள் படர்ந்து சிவாவின் முகம் வாடிப்போய் விட்டிருந்ததை கோபி அவதானித்திருந்தான்.

***

அடுத்தநாள் வெள்ளிக்கிழமை என்பதால் பிரார்த்தனை மண்டபத்திற்க்குப் போவதற்க்காக அனைவரும் வகுப்பிற்க்கு வெளியே நின்றுகொண்டிருந்தார்கள்.வாத்தியார் ஒன்றன்பின் ஒன்றாக லைனில் நின்ற எல்லோரது கால்களையும் பார்த்தவாறு வந்துகொண்டிருந்தார்.கையில் கோபி நேற்றுமாலை வெட்டிக்காயவைத்து கொண்டுவந்திருந்த பூவரசந்தடிப் பிரம்பு பயமுறுத்திக்கொண்டிருந்தது.புதிய சப்பாத்துக்களைப்போட்டிருந்த மகிழ்ச்சியில் எல்லோரும் மிடுக்காக நின்றுகொண்டிருந்தார்கள்.பாவம் சிவாமட்டும் வரிசையில் கடைசியில் காலில் செருப்புடன் எல்லோருக்கும் பின்னால் மறைந்துமறைந்து பயத்திலும் வெட்க்கத்திலும் நெளிந்துகொண்டிருந்தான்.கோபியின் வகுப்பு மட்டுமன்றி பக்கத்து வகுப்புக்களும் பிரார்த்தனை மண்டபத்திற்க்குப் போவதற்க்காக வெளியில் வந்து வரிசையில் நின்றுகொண்டிருந்தனர்.அத்தனைபேரின் கால்களிலும் புதிய சப்பாத்துக்கள் பளபளத்துக்கொண்டிருந்தன.எல்லோரின் சப்பாத்துக்களும் சிவாவின் செருப்பை ஏளனமாகப் பார்த்துக்கொண்டிருந்தன வாத்தியார் கடைசி வரிசையை நெருங்கநெருங்க எல்லோரின் கண்களும் கேள்விக்குறியுடன் சிவாமேல் நிலைகுத்தியிருந்தன."பள்ளிக்கூட மானத்தை வாங்கிறதுக்கெண்டே வாச்சிருக்குதுவள்,படிப்பறிவும் ஏறாது நித்திரை கொள்ளுறதுக்கெண்டே இஞ்ச வாறதுவள்,உன்னையெல்லாம் ஆர் இந்தப்பள்ளிக்கூடத்திலை சேத்தது..?"வாத்தி கத்திக்கொண்டே சிவாவின் கையைப்பிடித்து தரதரவென்று இழுத்துகொண்டுபோய் மைதானத்தில வைத்து அடிஅடியென்று அடித்துத்துவைத்துக்கொண்டிருந்தார்.பூவரசந்தடி பிய்ந்து தும்பாகிக்கொண்டிருந்தது.பாடசாலை முழுவதும் அவனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.கோபிக்கு தான் கொண்டுவந்திருந்த பூவரசந்தடியால் சிவாவுக்கு விழுந்த ஒவ்வொரு அடியும் தன்மேல் விழுந்து அவன் உடலெங்கும் வலிப்பதுபோலிருந்தது. நடு மைதானத்தில் அவனை நிற்க்கவைத்துவிட்டு மற்றவர்களையெல்லாம் பிராத்தனை மண்டபத்திற்க்கு அனுப்பிவிட்டனர்.அன்று மதிய இடைவேளை வரை அவனை மைதானத்தில் நிற்க்கவைத்துவிட்டு வீட்டுக்குப்போய் சப்பாத்து வாங்கிப்போட்டுக்கொண்டு பாடசாலைக்கு வரும்படி பாதியிலேயே வீட்டிற்க்கு அனுப்பிவிட்டார் வாத்தியார்.கோபிக்கு எந்தப்பாடமும் மனதில் ஏறவில்லை.சிவாவின் சிவந்து வீங்கியிருந்த கால்தழும்புகளும் வெட்கத்திலும் அவமானத்திலும் கூனிப்போயிருந்த அவன் முகமுமே அன்று முழுவதும் அவன் மனத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது.

***

ஞாயிற்றுக்கிழமை சனநடமாட்டம் குறைந்து அந்த பிரதான வீதி வெறித்துப்போயிருந்தது."டேய் ரெடியாகுடா" றோட்டைப் பார்த்துக்கொண்டிருந்த சுஜீவன் கத்தினான்.அந்த வெறுங்காணிக்குள் வளர்ந்திருந்த குட்டைப்பற்றைக்குப் பின்னால் கையில் றிமோல்ட்டுடன் வீதியை அவதானித்துக் கொண்டிருந்த கோபி சுஜிவனின் எச்சரிக்கையுடன் தயார் நிலைக்கு வந்தான்.ஆமியின் துருப்புக்காவி ஒன்று ஆனையிறவுப்பக்கமாக வேகமாக வந்து கொண்டிருந்தது."ஒன்று,இரண்டு,மூன்று" கோபி மனதிற்க்குள் என்னவும் துருப்புக்காவி அவனைக்கடக்கவும் சரியாக இருந்தது.தன் விரல்கள் றிமோல்ட்கொன்றோலின் பட்டன்களை அழுத்திவிட்டன என்பதை கோபியின் மூளை உணர்வதற்க்கிடையில் அவன் பொருத்தியிருந்த கிளைமோர் பெருஞ்சத்தத்துடன் வெடித்தது.மகே அம்மே சத்தங்களுடன் ஜயோ அம்மா என்ற ஒரு சத்தமும் கேட்டது.அப்பொழுதுதான் கிளைவீதியால் மெயின் றோட்டுக்கேறிய யாரோ ஒருத்தரை சைக்கிலுடன் தூக்கி வேலிக்குள் எறிந்துவிட்டிருந்தது கிளைமோர். துருப்புக்காவி எரிந்தபடி றெயில்றோட்டைக் கடந்து தாறுமாறாக ஓடி அந்தப்பக்கம் இருந்த வீட்டு மதில் ஒன்றில் மோதி ஓய்வுக்கு வந்தது.தயாராக நின்ற சுஜிவன் மிதிவண்டியை எடுக்க எதையும் பார்க்க நேரமின்றி திரும்பிப்பார்க்காமல் வேகமாக ஓடிவந்த கோபி மிதிவண்டியின் பின் இருக்கையில் ஏறிக்கொண்டான்.சுஜிவன் மிதிவண்டியை கண்ணண் இருந்த வீட்டுப்பக்கமாக வேகமாகச்செலுத்தினான்.கண்ணண் ஆமிக்கட்டுப்பாட்டுக்குள் செயற்பட்டுக்கொண்டிருந்த இயக்க உறுப்பினன்.அவனுக்கு தானே நேராகக் கொண்டுசென்று குண்டுகளை வைப்பதைவிட நம்பிக்கையான பள்ளிக்கூடப்பொடியளிடம் கொடுத்துவிட்டுச் செய்விப்பது இலகுவானதாக இருந்தது.ஆமியின் சோதனைச் சாவடிகளில் கண்ணண் அகப்படுவதற்க்கு சந்தர்ப்பம் அதிகமிருந்தது.அதனாலேயே கண்ணண் நம்பிக்கையான பள்ளிக்கூடப் பொடியளைக்கொண்டு ஆமிக்கட்டுப்பாட்டுக்குள் பலதாக்குதல்களைச் செய்வித்துக்கொண்டிருந்தான்.பொடியளும் பிஸ்ரல்,குண்டுகளை இடுப்பில கட்டிக்கொண்டுபோய் சகபொடியளையும் பிடிக்காத ஆட்க்களையும் வெருட்டலாம் எண்ட புழுகில கண்ணணின் காலைச்சுற்றிக்கொண்டு திரிந்தார்கள். அப்படிக் கண்ணனிடம் நட்பானவர்கள்தான் கோபியும்,சுஜிவனும்.கண்ணனுக்கு யார் எறிகிறார்கள்,யார் வெடிக்க வெடிக்க வைக்கிறார்கள் என்பதைப்பற்றியெல்லாம் கவலையில்லை.ராணுவத்திற்க்கு இழப்பேற்படவேண்டும் என்பதே அவனது குறிக்கோளாக இருந்தது.ஒவ்வொரு தாக்குதலுக்கும் கண்ணணுக்குத்தான் வன்னியில் றாங் கூடிக்கொண்டிருந்தது.கண்ணணிடம் தாக்குதலைப்பற்றிய தகவலைச் சொல்லிவிட்டு மூச்சிரைக்க வீடுவந்த கோபிக்கு கிளைமோர் அடி எப்படி என்று அறியவேணும் எண்ட ஆவலே மண்டையைக்குடைந்துகொண்டிருந்தது.யாரிடமும் விசாரிக்கப் பயமாக இருந்தது.றேடியோவை முறுக்கிமுறுக்கி எல்லா ஸ்ரேசனையும் பிடித்துப்பார்த்தான்.எதிலுமே சம்பவத்தைப்பற்றி எந்தவித தகவலும் வரவில்லை.சரி விடியட்டும் நியூஸ்பேப்பர் பாத்து அறிவம் என்று நினைத்தபடி தூங்கிப்போனான்.

***

அடுத்தநாள் கோபி பாடசாலை வந்தபோது அந்தச்செய்தி பாடசாலை எங்கும் தீ போல் பரவி இருந்தது.நேற்றைய சம்பவத்தில் அகப்பட்டு இறந்த பொதுமகன் நம்ம சிவாதானாம்.யார் சொன்னதென்று கூடப்பார்க்கவில்லை காதில்க் கேட்டதும் கோபிக்கு தலை விறைத்து கால்கள் தள்ளாடுவதுபோல் இருந்தது.புத்தகப்பையை வகுப்பில் எறிந்துவிட்டு சிவா வீடு நோக்கி விரைந்தான்.ஏற்கனவே வகுப்புப் பொடியளால் சிவா வீடு நிறைந்திருந்தது.அவன் அண்ணண்தான் வாசலில் நின்றுகொண்டிருந்தான்.சிவா நேற்று மதியம் முற்றிப்பழுத்த பூசனிக்காய்களை ஒரு சாக்கில்போட்டுக் கட்டி எடுத்துக்கொண்டு சந்தைக்குப் போயிருந்தானாம்.அந்தச் சீசன் சந்தையில் பூசணிக்காய் நல்ல விலைக்குப் போய்க்கொண்டிருந்தது."இண்டைக்கு நல்ல விலைக்கு பூசணிக்காய்களை வித்துப்போட்டு சப்பாத்தும் வாங்கிக்கொண்டு மிச்சக்காசுக்கு வீட்டுக்குத்தேவையான சாமான்களும் கொஞ்சம் வாங்கிக்கொண்டு வாறன் எண்டு அம்மாவிடம் சொல்லிப்போட்டுப்போனவன் அந்தா கிடக்கிறான் போய்ப்பாராடா என்று அவனைக்கிடத்தியிருந்த பக்கமாக கைகளைக்காட்டி அழுதுகொண்டிருந்தான் அண்ணன்.குளிப்பாட்டி சிவாவைக் கிடத்தியிருந்தார்கள்.சமூகக்கல்வி வாத்தியார் கால்மாட்டில் நின்று குலுங்கிக்குலுங்கி அழுதுகொண்டிருந்தார்.சிவாவின் கால்களில் அவன் வாங்கிவந்திருந்த புதிய சப்பாத்துக்கள் பளபளத்துக்கொண்டிருந்தன.

***

சிவா எரிந்துகொண்டிருந்தான்.நேற்றுவரைக்கும் அவனுடன் பயணம்செய்த பள்ளித்தோழனை சிதை எரித்துக்கொண்டிருந்தது.எரிந்துகொண்டிருக்கும் தீ நாக்குகளிடையே அவன் எழுந்துவந்து தன்சாவிற்க்கு நீதிகேட்பதுபோலிருந்தது கோபிக்கு.தொடர்ந்து அங்கு நிற்க்க முடியாமல் வீடுநோக்கி நடந்தான்."ஆமிக்குச் செம அடியாம்,நல்ல இழப்பாம்,வாகனத்தில் வந்த ஒருத்தரும் மிஞ்சவில்லையாம்"ஊருக்குள் எல்லோரும் மகிழ்ச்சியுடன் நேற்றைய கிளைமோர் அடியைப்பற்றியே பேசிக்கொண்டனர்.சிவாவை எல்லோரும் மறந்துபோய் விட்டிருந்தனர். "சண்டையெண்டால் சனம் சாகிறது சகஜம்தான" தன்னைத்தானே சமாதானம் செய்தபடி வீட்டிற்க்குள் நுழைந்த கோபியை வாசலில் அவன் வாங்கிவைத்திருந்த புதுச்சப்பாத்துக்கள் வரவேற்றன....

Link to comment
Share on other sites

வார்த்தைகள் இல்லை சுபேஸ். மிகவும் நளினமாக இழைத்திருக்கின்றீர்கள் . ஆனால் , சிவா இயக்கத்தில் சேர்ந்ததிற்கான பின்புலத்தை இன்னும் ஆழ இறுக்கியிருக்கலாம் . மிகவும் நேர்த்தியாக இருக்கின்றது . வாழ்த்துக்கள் சுபேஸ் :) :) :) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுபாஸ் நல்தோர் ஆக்கம்.

ஏழ்மை, இயலாமை, அவமானம், போர்ச்சூழலுக்குள்ளான நித்திய வாழ்வு..... இந்தக்கதையைப்போன்று எத்தனையே குடும்பங்களை சின்னாபின்னப்படுத்தியிருக்கும். உள்ளங்கள் மரத்துப்போய் மீள பார்க்கும் வலுவற்று இன்றைய வாழ்வுக்குள்ளாக ஏங்கவேண்டிய யதார்த்தம் கண்முன்னே விரிந்து கிடக்கும்பொழுதுகளில்.... உங்கள் எழுத்துக்கள் மெல்ல கண்களில் கசிவை வரவழைக்கிறது. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் சுபேஸ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு கற்பனைக் கதையல்ல, சுபேஸ் !

ஈழத்தமிழனின் போர்க்கால நாள் காட்டியின் , ஒரு நாளிதழ்!

வாழ்த்துக்கள் உங்களுக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ் அருமையான கதை, ஒரு இடத்தில் கூட நிற்பாட்ட முடியவில்லை, அடுத்தது என்ன என்று தொடர்ந்து வாசிக்க வைத்துவிட்டீர்கள், சிலருக்கு சப்பாத்தைவிட கொப்பி பென்சில் வாங்கவே மிகவும் கஷ்டம்,

நன்றி பகிர்வுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் அண்ணா,சகாரா அக்கா,கிருபன் அண்ணா,புங்கையூரன்,உடையார் நன்றிகள் தங்கள் கருத்துப்பகிர்விற்க்கும் பாராட்டிற்க்கும்..இது ஒரு உண்மைச்சம்பவம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுபேஸ், நெஞ்சை அழுத்துகிறது கதை.

ஆர்மிக்காரன் செத்த சந்தோசத்தை சப்பாத்துக்காக உயிர்விட்டவன் எடுத்துவிட்டான்.

மிகவும் அருமையான கதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுபேஸ்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி குளவி மற்றும் குமார சாமி அண்ணை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பின்னீட்டீங்கள் :)

நன்றி சகீவன் கருத்துப்பகிர்விற்க்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.