Jump to content

தக்காளி


Recommended Posts

250px-Tomato2.jpg

நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளும் தக்காளிப் பழத்தின் மருத்துவக் குணங்களைப் பற்றி இங்கே அறிந்து கொள்வோம்.

தக்காளியைப் பொதுவாக, சமைக்காமல் பச்சையாகச் சாப்பிடுவதால் இதன் முழுப்பலனையும் பெற முடிகிறது. அப்படிச் சாப்பிடுவது உடலுக்குப் பலம் தருகிறது. இன்னும் சொல்லப்போனால், உடல் பலவீனமாக இருக்கிறவர்களுக்கு அது டானிக் போன்றது.

இதில் வைட்டமின் ஏ- சுமார் 91 மில்லி கிராம் உள்ளது. தவிர வைட்டமின் பி-1, பி-2, 17 மில்லி கிராமும், வைட்டமின் சி- 9 மில்லி கிராமும், சுண்ணாம்புச்சத்து 2 மில்லி கிராமும் அடங்கி உள்ளன.

இவை தவிர, நமது உடலில் ரத்த உற்பத்திக்குப் பயன்படுவதோடு மட்டுமின்றி, ரத்தத்தைச் சுத்திகாரிப்பதற்கும், சீரான ரத்த ஓட்டத்திற்கும் இது பயன்படுகிறது.

தக்காளியை எந்த விதத்தில் சாப்பிட்டாலும் அதன் சத்துக்கள் அனைத்தும் குறையாமல் நமக்குக் கிடைக்கும்.

குறிப்பாக இதை காலையிலும், மாலையிலும் சூப் செய்து சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் வராது என்பதை விட, தோலைப் பளபளப்பாக வைத்திருக்கும் தன்மை இதற்கு உண்டு.

தக்காளியை சாப்பிடும் முன்பு சத்தம் செய்ய மறக்காதீர்கள்.

எனவே அன்றாடம் நமது உணவில் தக்காளியை மறக்காமல் சேர்த்து வந்து அதன் நன்மைகள் அனைத்தையும் பெற்று ஆரோக்கியமாக வாழ்வோம்.

Link to comment
Share on other sites

நன்றி! ஏனைய மரக்கறி வகைகளைப்பற்றியும் அறியத் தாருங்கள்!

Link to comment
Share on other sites

ஆகா தகவலுக்கு நன்றி

சோழி அண்ணா கேட்டுட்டார் போடுங்கோ அவர் ஓடி ஓடி தேய்ஞ்சு போனார் நல்ல சத்துள்ளா சாப்பாடா சொல்லுங்கோ

Link to comment
Share on other sites

இதில்  வைட்டமின் சி- 9 மில்லி கிராமும் சுண்ணாம்புச்சத்து 2 மில்லி கிராமும் அடங்கி உள்ளன

எனக்கொரு சந்தேகம் யுறீனின் கல்லு இருப்பவர்கள் அல்லது அப்பிடியான வருத்தம் ஏற்கனவே வந்தவர்கள் சாப்பிட்டில் தக்காளியை சேர்ப்பது நல்லதல்ல ஏனெனில் இதில் இருக்கும் விட்டமின் சியும் சுண்ணம்பும் யுறீன் குழாயிகளில் படிவுகளை உண்டாக்கும் என ஒரு புத்தகத்தில் படித்த ஞாபகம்

Link to comment
Share on other sites

தக்காளி எனக்கும் பிடித்த ஒரு மரக்கறி. தக்காளி குழம்பு, தக்காளி சட்னி, தக்காளி சோஸ், தக்காளி சம்பல் என்று பல வகைகளில் சாப்பிடுவேன். இடியப்பத்துடன் சொதி சேர்த்து சாப்பிடும் போது அந்த சொதிக்கு கொஞ்சம் பருப்பு மற்றூம் தக்காளி போட்டிருந்தால் இடையிடையே அவற்றை சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

yarltin9ig.jpg

yarltube5em.gif

கோழி மற்றும் ஆட்டு இறைச்சி கறி வைக்கும் போது சாதாரணமாக தக்காளி போடுவது உண்டு என்றாலும் குழம்பு கொஞ்சம் தண்ணியாக வந்துவிட்டால் அதை திக்காக மாற்ற தக்காளி தான் உதவுகின்றது. அதுவும் தக்காளி பேஸ்ட் டின் அல்லது டியூப்பில் கிடைப்பதால் கடைசி நேரத்திலும் கறியில் சேர்த்து திக்காக்கலாம்.

என்ன தக்காளி யாருக்காவது அலேர்ஜி என்றால் அவர்கள் கவனமாக இருக்கணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தக்காளி திருவிழா

tomato.JPG

Link to comment
Share on other sites

தக்காளி பற்றிய தகவல்களுக்கு நன்றி ஸ்டார் விஜய்..ரொம்ப பலனான விடயங்களை அறியத் தருகின்றீர்கள்..

குறிப்பாக இதை காலையிலும், மாலையிலும் சூப் செய்து சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் வராது என்பதை விட, தோலைப் பளபளப்பாக வைத்திருக்கும் தன்மை இதற்கு உண்டு.  

தக்காளி குழம்பு எனக்கு சுத்தமாக பிடிப்பதில்லை..ஆனால்..தக்காளி சோஸ், தக்காளி சூப் என்றால் ரொம்ப பிடிக்கும். :)

Link to comment
Share on other sites

தக்காளி குழம்பு எனக்கு சுத்தமாக பிடிப்பதில்லை

அப்ப உங்கடை தோல் என்ன கண்டிஷனிலை இருக்கும் எண்டு விளங்குது சந்தோஷம்...

Link to comment
Share on other sites

மேற்கோள்: -அருண்

இது தக்காளி திருவிழா

உலகத்திலேயே - தக்காளி திருநாள் பெரியளவில் கொண்டாடப்படுவது ஸ்பெயின் ல என்று கேள்விப்பட்டன்...

அதுவா - இது?

விபரம் அறிந்தவர்கள் சொல்லுங்க -! 8)

Link to comment
Share on other sites

மேற்கோள்: -அருண்

இது தக்காளி திருவிழா

உலகத்திலேயே - தக்காளி திருநாள் பெரியளவில் கொண்டாடப்வது ஸ்பெயின் ல என்று கேள்விப்பட்டன்...

அதுவா - இது?

விபரம் அறிந்தவர்கள் சொல்லுங்க -! 8)

வர்ணன் பல நாடுகளில் பலவிதமாக இந்த தக்காளி திருநாளை கொண்டாடுகிறார்கள்.

மேலதிக விபரங்களுக்கு இந்த இணைப்பில் பாருங்கள்.

http://www2.msstate.edu/~ricks/cstomato/tomfest.html

தகவல்களுக்கு நன்றிகள் ஸ்டார் விஐய் மதன் மற்றும் அருணுக்கு.

Link to comment
Share on other sites

மேற்கோள்:

தக்காளி குழம்பு எனக்கு சுத்தமாக பிடிப்பதில்லை..ஆனால்..தக்காளி சோஸ், தக்காளி சூப் என்றால் ரொம்ப பிடிக்கும்

இதை எங்க போய் சொல்ல....--

சூப் க்கும் குழம்புக்கும் கனக்க வித்யாசம் இருக்கா ப்ரியசகி? :roll: :roll:

Link to comment
Share on other sites

அப்ப உங்கடை தோல் என்ன கண்டிஷனிலை இருக்கும் எண்டு விளங்குது சந்தோஷம்...

ஒரு இடத்திலும் நான் பேர்த்தியை இப்படி நக்கல் அடிக்கும் பேரனை பார்த்ததே இல்லை :evil: :evil: :evil: :evil:

ப்ரியசகி

ஆனால்..தக்காளி சோஸ், தக்காளி சூப் என்றால் ரொம்ப பிடிக்கும்

முழுதாக வாசியுங்கள்..வாசித்து விட்டு கதையுங்கள் மு.அங்கிள்.. :evil: :P :arrow:

Link to comment
Share on other sites

முழுதாக வாசியுங்கள்..வாசித்து விட்டு கதையுங்கள் மு.அங்கிள்

என்ன முட்டாள் அங்கிள் எண்டு சொன்ன அவருக்கு கோவம் வரும் எண்டு தெரியாத?

:P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இடத்திலும் நான் பேர்த்தியை இப்படி நக்கல் அடிக்கும் பேரனை பார்த்ததே இல்லை :evil: :evil: :evil: :evil:

நிறையப் பேர் இந்தக் கேள்வியை முகத்தாரிடம் கேட்டார்கள்! பேத்தியை பேரன் நக்கலடிப்பதை நாங்கள் பார்த்தில்லை என்று. அவர்களின் குறையைத் தீர்க்கத்தான் முகத்தார் நக்கலடித்தார். மற்றும்படி ஒன்றுமில்லை. இல்லையா முகத்தார்!! :idea:

(முகத்தார், காப்பாற்றியதற்கு நன்றி இல்லையா?) :lol:

Link to comment
Share on other sites

நிறையப் பேர் இந்தக் கேள்வியை முகத்தாரிடம் கேட்டார்கள்! பேத்தியை பேரன் நக்கலடிப்பதை நாங்கள் பார்த்தில்லை என்று. அவர்களின் குறையைத் தீர்க்கத்தான் முகத்தார் நக்கலடித்தார். மற்றும்படி ஒன்றுமில்லை. இல்லையா முகத்தார்!! :idea:

(முகத்தார், காப்பாற்றியதற்கு நன்றி இல்லையா?) :lol:

தம்பி எப்பிடியப்பு இப்பிடியெல்லாம் எழுதி என்னை மாட்டிவிட...சா......காப்பாத்த முடியுது உமக்கு எனது நன்றிகளும் வாழ்த்துக்களும் பேத்தி எண்டாபோல உண்மையை சொல்லாமல் இருக்கேலுமோ..............என்ன.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி எப்பிடியப்பு இப்பிடியெல்லாம் எழுதி என்னை மாட்டிவிட...சா......காப்பாத்த முடியுது உமக்கு எனது நன்றிகளும் வாழ்த்துக்களும் பேத்தி எண்டாபோல உண்மையை சொல்லாமல் இருக்கேலுமோ..............என்ன.........

அது சரி முகத்தார். நீங்கள் நினைக்கலாம். பேத்தி என்றால் உண்மையைச் சொல்லாமல் விடலாமோ என்று?

ஆனால் பேத்தி என்ன நினைப்பா பாருங்கோ, பேரன் இப்படிக் கதைத்தால் அவரைச் சும்மா விடலாமோ என்று?

(எப்படி எடுத்துக் கொடுத்திக்கின்றேன் :wink: )

Link to comment
Share on other sites

நல்லாத்தான் இருக்கு தூயவன் அங்கிளை இப்படித்தான் மாட்டி விட வேணும்

எங்க சகி போய்ட்டீங்க

Link to comment
Share on other sites

இங்க தான் இருக்கேன் நித்தி..நீங்களே சொல்லுங்கோ.மு.அங்கிளை..ரொம்ப ஓவரா நக்கல் அடிக்குறப்போல இல்லை..இப்பவும் அவரோட அவாட்டரை பார்த்தால் பாவமா இருக்கே.. :) அதுதான் பேசாமல் இருக்கேன்..அத்தோட எங்கம்மா வளர்த்த வளர்ப்பு அப்படி :wink: :P

இதுக்குள்ள தூயவன் அன்ட் வினீத் அண்ணா..எடுத்து குடுக்கினமா..இல்லை போட்டு குடுக்கினமா? தெரியல..எல்லாம் அவனுக்குத்தான் :idea: :?: :roll:

Link to comment
Share on other sites

நல்லாத்தான் இருக்கு தூயவன் அங்கிளை இப்படித்தான் மாட்டி விட வேணும்

எங்க சகி போய்ட்டீங்க

அட.............என்னை சுத்தி ரசிகர் கூட்டம்தான் இருக்குதெண்டு பாத்தா கனபேர் தள்ளிவிடுகிறதிலைதான் குறியா இருக்கிறாங்ளப்பா....................

மு.அங்கிளை..ரொம்ப ஓவரா நக்கல் அடிக்குறப்போல இல்லை..இப்பவும் அவரோட அவாட்டரை பார்த்தால் பாவமா இருக்கே.

இந்த ஒரு வார்த்தை போதுமம்மா.............மனுசன் வாழுறத்தூக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஒரு வார்த்தை போதுமம்மா.............மனுசன் வாழுறத்தூக்கு

நானும் விக்கிரமாதித்தனன் மாதிரி ஒவ்வொரு முறையும் எங்காவது மாட்டிவிடலாம் என்ற பார்த்தால் மனுசன் இந்த முகத்தை வைத்தே தப்பித் கொள்ளுகின்றாரே! :evil: :evil:

பேசாமல் காலில் விழ வேண்டியது தான்!

Link to comment
Share on other sites

நானும் விக்கிரமாதித்தனன் மாதிரி ஒவ்வொரு முறையும் எங்காவது மாட்டிவிடலாம் என்ற பார்த்தால் மனுசன் இந்த முகத்தை வைத்தே தப்பித் கொள்ளுகின்றாரே! :evil: :evil:

பேசாமல் காலில் விழ வேண்டியது தான்!

அது................................ தம்பி இந்த மூஞ்சையை விட்டுட்டு போக மனமில்லாமல்தான் பொண்ணம்மாவும் என்னோடை குப்பை கொட்டிக் கொண்டு இருக்கிறாள் அப்படியோரு (இழிச்சவாய்) முக லட்சணம்.......... அது பெம்பிளை பிள்ளைகளுக்கு விளங்கின அளவு உமக்கு லேட்டா விளங்கியிருக்கு சந்தோஷம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.