Jump to content

வேலை இடத்தில் நடந்த சுவரஸ்யான நிகழ்வு


Recommended Posts

என் வேலை இடத்தில் நடந்த சுவரஸ்யான நிகழ்வு இது...

எனக்கு 10மணிக்குதான் எப்போதும் வேலை தொடங்கும்... இரவில் டியூட்டி மாறுவோம் அது நாங்கள் வேலைக்கு போனது வேலையில் நிற்பவர்கள் எல்லாத்தையும் எங்களிடம் கொடுத்து விட்டு சென்று விடுவார்கள்....

இருவாரங்களுக்கு முதலும் அப்படித்தான் நடந்தது வேலைக்கு போனது வேலையில் நின்றவர்கள் போனது கதவுகள் எல்லாவற்றையும் மூடி விடுவோம்... அன்று என்னோட கெட்ட காலமோ தெரியவில்லை நான் கதவை மூடுவன் என்று என்னோட வேலை செய்தவள் நினைத்திருக்கிறாள் நான் அவள் லொக் பண்ணுவாள்தானே என்று இருவருமே கதவுகளை லொக் பண்ணாமல் விட்டுவிட்டோம்...

சாவி ஒன்று தேவைப்படும்போதுதான் நினைத்தோம் இருவரும் முதல் வேலை செய்தவர்களிடம் சாவியை வாங்கவில்லையென்று... போன் பண்ணினோம் எங்களுக்கு முதல் வேலை செய்தவளுக்கு அவளும் அரை மணியத்தியாலத்தில் சாவியை கொண்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டாள்....

போன் பண்ணி பேசியதை இருவரும் மறந்துவிட்டோம் 1மணி இருக்கும் நல்லிரவு ஆகி விட்டது நாங்கள் வேலையில் முழ்கிவிட்டோம் ... ரீ குடிக்கலாம் என்று என்னுடன் இருந்தவள் கேட்டாள் நானும் நீ போ மேக் பண்ணிகொண்டு வா என்றேன் போனவள் கையிலே கொண்டு போன கிளாஸ் உடைந்த சத்தமும் கேட்டது அவள் கத்தியது ஊருக்கு கேட்கும்போல் இருந்தது....

நானும் என்னாச்சு என்று ஓடிப்போய் பார்த்தபோது கத்தினது நின்று திரும்ப மோகினி பிசாசு சிரித்துக்கொண்டு நின்றாள்.... என்ன இவளுக்கு ஆகி விட்டது என்று யோசனையோடு வெளியால பார்த்தேன்.... கதவில் ஒன்று தொங்கிகொண்டு ஆடுது... மரத்தில் ஒன்று 4 5 வெளியால வெள்ளையாக நிற்க்குது ....என்ன கொடுமை இவகள் சொன்னது மாதிரி பேய்தான் வந்துவிட்டது என்று நானும் நினைத்து ஒரே ஒட்டம் அழுதுகொண்டே.... அவர்களும் என்னை விடவில்லை துரத்திக்கொண்டு வந்தார்கள் ... நானும் ஓடிப்போய் ஓபிஸில் இருந்த தொலைபேசி தூக்கிகொண்டு ஓடும்போதுதான் நினைத்தேன்....யாருக்கு போன் பண்ணுறது திருடன் என்றால் 999 போன் பண்ணலாம் இது பேயா எல்லோ இருக்கின்றது

ஓடி எங்கே போக முடியும் வெளியால போனால் காடு அதை தாண்டவும் பயம் ...இப்படியே நான் நினைத்துக்கொண்டு ஓடவே எனக்கு பின்னால் வந்த பேய் எல்லாம் என்னை நெருங்கி விட்டது... எனிமேல் ஒன்றும் பண்ணமுடியாது என்று எண்ணி ஆங்கிலமும் வரவில்லை ஐயோஓஓ நான் ஒன்றும் பண்ணவில்லை என்னை ஒன்றும் செய்து விடாதே என்று பின்னால இருக்கும் பேய்களையே கேட்டன் திரும்பி பார்க்காமலே ... அவர்கள் பார்த்தால் வாட் என்று கேட்டார்கள்... எனக்கு எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருந்தது திரும்பி பார்த்தேன் என்னோட வேலை செய்தவள் அதுக்கு முதல் வேலை செய்தவள் 5பேர் வரும் நின்றார்கள்.. கிளப்பு முடிய சாவியை கொண்டு வந்திருக்கிறார்கள் கதவு முடவில்லை முதலே செட்டப்பண்ணி இருந்து இருக்கிறார்கள் எங்களை பயமுறுத்துவதற்க்காகவே ... விளையாட்டு விபரிதமாக போயிருக்கும் அன்று ஆனால் இருவருக்கும் ஒன்றும் நடக்கவில்லை... இன்று வேலை விட்டு வந்தாலும் அவர்கள் எல்லோரையும் பார்க்கும்போது எல்லோரும் சிரிப்போம் ...

உங்கள் வேலை இடங்களிலும் நடந்திருக்கும் இல்லை படிக்கும் காலங்களிலும் சுவரஸ்யமாக நடந்திருக்கும் ... ஏதாவது இருந்தால் எழுதுங்கள் படிப்போம் சிரிப்போம்...

Link to comment
Share on other sites

உது சுவராஸ்ய சம்பவமா! போம்மா போய் வேலை இருந்தால் பாரும்மா. சும்மா மனுசரை கடுபெத்தேக்கொன்டு.

Link to comment
Share on other sites

உது சுவராஸ்ய சம்பவமா! போம்மா போய் வேலை இருந்தால் பாரும்மா. சும்மா மனுசரை கடுபெத்தேக்கொன்டு.

எனக்கு இது சுவரஸ்யமாகத்தான் இருந்தது... அது எல்லாம் போக உங்களை யாரும் வெத்திலை பாக்கு வைத்து அழைத்தார்களா என் பதிவை பார்க்கச்சொல்லி.... ஒரு பெயரில் வர தைரியம் இல்லாமல் 7 8 பேர்களில் மறைந்து வரும் நீங்கள் எல்லாம் மற்றவன் பதிவைபற்றி கதைக்காதீர்கள்...

Link to comment
Share on other sites

ஒரு பெயரில வாரதோ பல பெயரில வாறதோ இங்க முக்கியமில்லை, சொல்ல வாறதை சொல்ல வரக்கை சுவாரசயமா இருக்கனும், அதைவிட்டுட்டு, நானும் ஏதோ நல்லா இருக்குமோ என்டு நினைச்சு ஏமாந்துட்டன், லைவில 5 நிமிசத்தை வீனா தொலைச்சுட்டன். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேயைக்கண்டால் சுஜியைக்காணோம்.

சுஜியைக்கண்டால் பேயைக்காணோம் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சம்பவம் சுஜிக்கு சுவாரசியமாக பட்டுள்ளது அதை அவர் எழுதி உள்ளார்..ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்ததை,தாங்கள் பார்ப்பவற்றை,தங்கள் அனுபவத்தை தான் எழுதுவார்கள் :)

Link to comment
Share on other sites

இது ஒரு நல்ல தலைப்புத்தான்,,,

ஆளாளுக்கு , ஏதோ ஒரு இடத்துல இளிச்சவாயி ஆயிருப்போம்!!

ஒரு பிறந்தநாள் பார்டிக்காக, நம்மாளுங்க ஹால் ஒண்ண அரேஞ்ச் பண்ணிருந்தோம் நாங்க,,

பகல் நேரம் முழுக்க ஒரே அலைச்சல்...... ...மூவிங்க்!

அலாரம் வைக்கவும் இல்ல, மெயின் டோர லாக் பண்ணவும் இல்ல,,,,

நேரமோ அதிகாலை 2:30 ,,, அசதில எல்லாரும் அங்கங்கயே தூங்கிட்டோம்,,,

இடைல நானு ஏனோ தெரியல எந்திரிச்சேன்..வாஷ் ரூம் பக்கம்போனபோது, ரெண்டு ,,டிப்டாப் ஆசாமிங்க , நின்னுகிட்டு இருந்தாங்க!

“ஸாரி உங்க தூக்கத்தை கெடுத்ததற்க்கு மன்னிக்கவும்”

“பரவாயில்ல”

“நாங்க அலாரம் சத்தமெழுப்பியதால் வந்தோம்”

“ஓ.கே அதையேன் எனக்கு சொல்றாய் எங்கிறமாதிரி பேசாம , போய் படுத்திட்டேன்”

விடியதான் தெரிஞ்சுது,,, எல்லாமே நாசமாவே போச்சு!!!

images4aa.jpgடி.ஜே.மிக்ஸர் ல images5ow.jpgஇருந்து ,கமெரா வரை ஒண்ணையுமே காணம்னு மக்கள் பேசிகிட்டாய்ங்க!

எடுத்துக்கொண்டு ஓடினவன் வெளங்குவான்னு நெனைக்குறீங்களா? என்னாமா ப்ளான் பண்ணுறாங்கடா............. உக்காந்து யோசிப்பாய்ங்களோ?

இத எல்லாருமே தொடரணுமே!

Link to comment
Share on other sites

ஒரு பெயரில வாரதோ பல பெயரில வாறதோ இங்க முக்கியமில்லை, சொல்ல வாறதை சொல்ல வரக்கை சுவாரசயமா இருக்கனும், அதைவிட்டுட்டு, நானும் ஏதோ நல்லா இருக்குமோ என்டு நினைச்சு ஏமாந்துட்டன், லைவில 5 நிமிசத்தை வீனா தொலைச்சுட்டன். :(

ஒருவர் பல பெயரில் வருகிறார் என்றால் அவருக்கு தன் எழுத்தின்மேல் நம்பிக்கை இல்லையென்று அர்த்தம்... பொய் பிராடு பித்தலாட்டம் பண்ணப்போகிறவர்களுக்கு இரண்டு மூன்று அயிடி தேவைப்படும்....யாழில் சிலருக்கு கை வந்த கலை....

பெரிய கலக்டர் உத்தியோகும் பார்க்கிறீர்கள் நீங்கள் இங்கே வந்து 5 நிமிசம் வேஸ்டாப்போச்சு... <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1994 இல் நானும் யாழ் போய்விட்டு களைத்துப்போய் கொழும்பு வந்திறங்கிய போது கை இரண்டிலும் பெரிய பைகள், அதற்குள் ஊர்காரர் அன்பா தந்த பலகாரங்கள் & பொரி அரிசிமா, முட்டை மா,.......etc,

கல்கிசை போக கோட்டையில் நின்ற பஸ்சில் ஏற பின்னுக்கு இருந்து படியில் தள்ளிக்கொண்டு ஒருத்தன், "அடோ பொட்டக்கின்ன" என்று நான் சொல்ல அவன் "ஒகே மாத்தயா, ஒயா யன்ன" என்று அவன் சொல்லிப்போட்டு இறங்கிட்டான்.

உள்ளக்குப் போய் போய் ரிக்கட் எடுக்க பேர்ஸை பார்த்தா, அவன் அடிச்சுப்புட்டானே...

Link to comment
Share on other sites

முன்பு ஒரு வேலையில் ப்ராஜெக்ட் ஒன்றை உரிய நேரத்திற்குள் முடிப்பதற்காக ஒரு வெள்ளிக் கிழமை நள்ளிரவு மட்டும் வேலை செய்ய வேண்டி இருந்தது. அந்த அலுவலகம் குடியிருப்பு மனைகள் அதிகம் உள்ள பகுதியில் இருந்தது. தனியே இருந்ததால் கதவை சாவியால் பூட்டி விட்டே வேலை செய்தேன். அந்தப் பூட்டு கொஞ்சம் பிரச்சனையானது, சில வேளை வெளியில் இருந்து திறந்தால்தான் திறபடும் என்று சொன்னதை களைப்பில் மறந்து விட்டேன்.

இரவு 12 மணியளவில் வீட்டுக்கு போவதற்கு கதவைத் திறந்தால் திறபடவில்லை. அப்பொழுதுதான் பூட்டுப் பிரச்சனை ஞாபகம் வந்தது. சில பெண்கள் குடிபானச் சாலையிலிருந்து அலுவலகத்தின் எதிப்பக்கம் உள்ள நடைபாதையால் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள். ஹெல்ப்..., ஹெல்ப்... என்று கத்தியதும் அவர்களுக்கு கேட்கவில்லை. அவர்களை கதவின் கண்னாடிக்குல்லால் கையைக் காட்டிக் கூப்பிட்டேன். அதற்கு அவர்கள் சிரித்து கையைக் காட்டி விட்டுச் சென்றார்கள். இப்படியே பெண்கள் செல்வது நான் கையைக் காட்டிக் கேஞ்சுவதுமாக நேரம் போய்க் கொண்டிருந்தது ஒருவரும் உதவிக்கு வரவில்லை. துள்ளிக் குதித்தும் கத்திப்பார்த்தேன். ஒரு பிரயோசனமுமில்லை.

அந்த நேரத்தில் இரு பெண்கள் நல்ல நிறை வெறியில் வந்தார்கள். அவர்களுக்கும் கையைக் காட்டினேன். அதற்கு அவர்கள் ஏதோ ஏசி விட்டு, அடிப்பது மாதிரி சைகை காட்டிச் சென்றார்கள். சிறிது நேரத்தில் பார்த்தால் அந்த இரு பெண்களும் ௦ஒரு பத்து பதினைந்து ஆண்களும் பொல்லு தடிகளுடன் அலுவலகத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுதுதான் எனக்கு விஷயம் உறைத்தது. தப்பான நோக்குடன் பெண்களை அழைத்துள்ளேன் என்று நினைத்து விட்டார்கள். வெளியே வா அல்லது கதவை உடைத்து உள்ளே வரப்போவதாக சத்தம் போட்டார்கள். அவர்கள் கும்பலாக போட்ட சத்தத்தில் நான் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. ஒரு பேப்பரில் விஷயத்தை எழுதிக் காட்டிய பின்தான் அவர்களுக்கு விஷயம் விளங்கியது. அதன் பின் திறப்பை தபால் போடும் துவாரத்திற்குள்ளால் வாங்கி கதவைத் திறந்து விட்டு மன்னிப்புக் கேட்டார்கள்.

சுவாரசியம் என்பதை விட பயத்தை ஏற்படுத்திய சம்பவம்.

Link to comment
Share on other sites

இன்று டொரோண்டோ மேயர் ரோப் போட்டிற்க்கு இப்படி ஒரு சம்பவம் நிகழ அவர் போலிசுக்கு அடித்துவிட்டார் .போனவர் சீ.பீ.சீ நிருபர் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.