Jump to content

புலிகள்- உலக நிதி நிறுவனங்கள் சந்திப்பு ஒத்திவைப்பு


Recommended Posts

புலிகளுடனான சந்திப்பை உலக நிதி நிறுவனங்கள் ஒத்திப்போட்டன

சுனாமி மற்றும் மோதலுக்கு பின்னரான மீள்கட்டமைப்புப் பணிகள் எதிர்நோக்கும் தடைகள் குறித்து மறுபரிசீலனை செய்யுமுகமாக, கிளிநொச்சியில் விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சு.ப. தமிழ்செல்வனுடன் தாம் நடத்தவிருந்த பேச்சுவார்த்தையை சர்வதேச நிதி நிறுவனங்களான உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியன ஒத்திப்போட்டுள்ளன.

அரசாங்கம் மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பு ஆகியவற்றுடனான கலந்தாலோசனையை அடுத்து கிளிநொச்சிக்கான இந்த சர்வதேச நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளின் பயணம் ஒத்திப்போடப்பட்டுள்ளது.

இந்த மாதம் பிற்பகுதியில் ஜெனிவாவில் நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், இந்த சந்திப்பு மீண்டும் தீர்மானிக்கப்படும் என்று உலக வங்கியின் வெளியுறவு அலுவலகம் இன்று கொழும்பில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

ஜெனிவா பேச்சுவார்த்தைக்கு முன்னதாக விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஒரு போலியான அங்கீகாரத்தை கொடுக்கும் நோக்கில் சர்வதேச அமைப்புகளுடனான புலிகளின் இந்த சந்திப்பு பிரபலப்படுத்தப்படலாம் என்று கூறி, இலங்கை ஆளும் கட்சியின் ஆதரவு கடும்போக்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த சூழ்நிலையில் இந்த அறிக்கை வந்துள்ளது.

சுனாமிக்குப் பின்னரான எந்தவிதமான புனர்வாழ்வுத் திட்டம் குறித்தும் இந்த சர்வதேச அமைப்புகள் ஜனாதிபதியுடன் பேசவேண்டுமே தவிர, அவை புலிகள் அமைப்புடன் பேசக்கூடாது என்று கூறி, இந்த சர்வதேச நிறுவன பிரதிநிதிகளின் வன்னிக்கான விஜயம் தடுத்து நிறுத்தப்படவேண்டுமென்று ஆளுங்கட்சியின் ஆதரவு கடும்போக்கு அமைப்புகள் கோரியிருந்ததாகக் கூறப்படுகிறது.

ஜெனிவா பேச்சுவார்த்தைகளின் வெற்றியிலேயே அதிக எதிர்பார்ப்புகள் தங்கியுள்ளதாகவும், பாதகமான விளைவுகள் எதனையும் ஏற்படுத்தக் கூடிய நடவடிக்கைகள் எதனையும் தமது நிறுவனம் எடுக்காது என்றும் உலகவங்கியின் அறிக்கை கூறுகிறது.

ஆயினும் சுனாமி மறுகட்டமைப்பு நடவடிக்கைகளின் அமுலாக்கம் குறித்து ஆராய தமது அமைப்புகளின் தொழில்நுட்பக் குழுக்கள் கிளிநொச்சிக்கு செல்லும் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

இலங்கையில் வறுமை ஒழிப்புக்கு அங்கு சமாதானம் உருவாவது மிகவும் முக்கியம் என்ற வகையில், இலங்கை சமாதான முயற்சிகளுக்கு தாம் செய்யக்கூடிய பொருத்தமான பங்களிப்பை இந்த நிதிநிறுவனங்கள் வழங்கும் என்றும் அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

குறிப்பாக இலங்கையில் மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனித வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கும், மனித நேய உதவிகளுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வங்கி ஆகியன தமது பங்கை செய்யும் என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

BBC தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிளிநொச்சி பயணம் இரத்து அல்ல- ஒத்திவைப்புதான்: உலக வங்கி வதிவிடப் பிரதிநிதி

கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளுடன் தாங்கள் நடத்த இருந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதே தவிர இரத்துச் செய்யப்படவில்லை என்று உலக வங்கி வதிவிடப் பிரதிநிதி பீற்றர் ஹெரால்ட் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டின்போது பீற்றர் ஹெரால்ட் இதைத் தெரிவித்தார்.

ஜே.வி.பி. மட்டுமல்லாது மேலும் சிலர் தங்களின் கிளிநொச்சி பயணம் குறித்து அதிருப்தி எழுப்பியதால் இந்தப் பயணத்தை ஒத்திவைத்ததாக அவர் கூறினார்.

திட்டமிட்டபடி கிளிநொச்சிக்கான பயணம் மேற்கொள்ளப்பட்டிருந்தால் சாதகமான நிலை ஏற்பட்டிருக்குமல்லவா என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த உலக வங்கி வதிவிடப் பிரதிநிதி,

நாங்கள் அங்கு சென்று பேச்சுவார்த்தைகளை நடத்தியவுடன் இவர்கள் பேச்சுவார்த்தைக்கு இணங்கி வருவார்கள் எனக் கூறமுடியாது என்றும் அப்படி அங்கு பயணம் செய்து உடனடியாக அவர்களை பேச்சுவார்த்தைக்குக் கொண்டு வரும் வகையில் நாங்கள் மந்திரவாதிகள் அல்ல என்றும் கூறினார்.

கிளிநொச்சிக்குப் பயணம் செய்யாததால் சாதகமான நிலையோ பாதகமான நிலையோ ஏற்பட்டதாகக் கூற முடியாது என்றும் கொழும்பில் வெளியாகியுள்ள ஆங்கில பத்திரிகையொன்றில் தாங்கள் ஜெனீவா பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளவுள்ளதாக விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளரான தயா மாஸ்டர் தெரிவித்திருப்பதாகவும் அது மகிழ்ச்சியளிக்கும் விடயம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளுடனான சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதேயன்ற

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.