Jump to content

உணவுக்குழாய் புற்றுநோய்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வளர்ந்த நாடுகளில் 4.6 மில்லியனும், வளர்ந்து வரும் நாடுகளில் 5.4 மில்லியனும், புற்றுநோயின் தாக்குதலுக்கு உட்படுகின் றனர். பொதுவாக இந்தியாவில் 1 லட்சம் ஜனங்களில் 110 ஆண்களும், 120 பெண்களும் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று மருத்துவ ஆய்வு அறிக்கை கூறுகிறது.

உலகில் அதிகமாகக் காணப்படும் புற்றுநோய்களில், உணவுக்குழாய் புற்றுநோயும் ஒன்று. உணவுக்குழாய் என்பது (Esophagu) தொண்டை முதல் வயிற்றின் மேல்பகுதிவரை (cardia) அமைந்துள்ள ஒரு குழாய். இக்குழாயைத் தாக்கும் புற்றுநோயை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். உணவுக்குழாயின் அடிப்பகுதி, ‘லைன் ஆஃப் கன்ட்ரோல்’ போல் செயல்படுகிறது.

வாயில் சுரக்கும் உமிழ்நீரை (எச்சில்), அல்கலைன் அல்லது காரம் என்று சொல்லலாம். இரைப்பைக்குள் உருவாவது அமிலம் (ஹைட்ரோகுளோரிக் அமிலம்). இந்த அமிலமும் காரமும் உணவுக் குழாயின் கடைசிப் பகுதியில் சண்டையிடுகின்றன.

அதேநேரத்தில், இந்தக் காரத்துக்கும் அமிலத்துக்கும் நடைபெறும் சண்டை விரைவில் தீராது. இந்தச் சண்டையில் அமிலம் ஜெயித்தால், உணவுக்குழாயில், குறிப்பாக `லைன் ஆஃப் கன்ட்ரோலில்’ புண் ஏற்படும். அந்தப் புண்கள், அங்கிருக்கும் செல்க ளால் தானாக `சரி’ செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட திசுக்கள் புத்துயிர் பெறும் வகையில் இயற்கை படைத்திருக்கிறது.

ஒருவேளை அந்தப் புண்கள், ஆறாமல் இருந்துவிட்டால் என்ன ஆகும்? இங்கு பயப்படாதீர்கள் என்று சொல்லமாட்டேன். பயந்துதான் ஆக வேண்டும். அதாவது, ஆறாத புண்களால், புற்று நோய் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. `உலகில் அதிகமாகக் காணப்படும் புற்றுநோய்களில், உணவுக்குழாய் புற்று நோயும் ஒன்று. பொதுவாகப் புற்று நோயால் பெண்களே அதிகமாகப் பாதிக்கப்படுவதாக மருத்துவ அறிக்கைகள் கூறும் அதே வேளையில் உணவுக்குழாய் புற்றுநோய்கள், பொதுவாக ஆண்களுக்குத்தான் அதிகமாக வருகிறது என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

1. ஸ்குவாமஸ் செல் கார்சினோமா (squamous cell carcinoma)

2. அடினோ கார்சினோமா (adenocarcinoma)

உணவுக் குழாயின் எந்த இடத்தில் வேண்டுமானாலும் புற்று நோய் வரலாம். இந்த புற்றுநோய்கள் பெண்களை விட ஆண் களுக்கு அதிகம் வரும்.

இது வருவதற்கான காரணங்கள் சிகரெட், மது பானங் கள் இவை முக்கிய காரணங்கள். மிகச்சூடாக உணவு, பானங்களை எடுத்துக் கொள்ளும் பழக்கமும் புற்று நோயைத் தோற்றுவிக்கும் காரணிகளில் மிகவும் முக்கியமானது.

வைட்டமின் எனப்படும் உயிர்ச்சத்து (vitamin A) குறைபாட்டால் வருகிறது.

அயர்ன் எனப்படும் இரும்புச்சத்து குறைபாட்டால் வருகிறது

ரிபோஃப்லேவின் (Riboflavin) எனப்படும் vitamin B விட்டமின் குறைபாட்டால் வருகிறது.

சரிவிகித உணவு (balanced diet) இல்லாமை யால் வருகிறது.

நெஞ்சு எரிச்சல் போன்ற நோய்களுக்கு பல ஆண்டு களாக சிகிச்சை எடுத்துக் கொள்வதாலும் அதாவது தொடர் சிகிச்சையினாலும் வருகிறது. தொடர்ந்து அகாலாசியா என்ற நிலையில் இருக்கும் போது புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. அகாலாசியா என்பது நீண்ட நாட்களாக வயிறு தொடர்பான, உணவுக்குழாய், ஜீரண உறுப்பு தொடர்பான எந்த நோயையும் கண்டு கொள்ளாமல் இருப்பது. இயற்கையாக நமது உடலில் உள்ள புற்றுகளை மட்டுப்படுத்தும் மரபணுவில் (ஜீ53) ஏற்படும் பிறழ்வுகளால் , புற்று உயிரணுக்கள் பல்கி பெருகுவது ஊக்குவிக்கப்படுகிறது.

அறிகுறிகள்

ஆரம்ப நிலையில் எந்த அறிகுறியும் காண இயலாமல் இருக்கலாம். முற்றிய நிலையில் நெஞ்சு எரிச்சல், நெஞ்சு வலி, அனிமியா, டிஸ்பெப்ஸியா, தீராத முதுகு வலி போன்றவை இருக்கலாம். தொண்டையில் முழுங்க முடியாமல் வலி இருக்கலாம். எடை குறையலாம். இன்னும் சிலருக்கு இப்படிப் பட்ட அறிகுறிகள் எதுவும் தோன்றாமலே கூட இருக்கலாம்.

உறுதிப் படுத்துதல்

இருபது ஆண்டுக்கு முன்பு புற்றுநோய் உள்ளது எனக் கண்டுபிடிப்பது மிகக் கடினம். சாதாரண எக்ஸ்ரே பரிசோதனை மற்றும் பேரியம் எக்ஸ்ரே பரிசோதனைகள் மூலம்தான் ஓரளவு கண்டுபிடிக்க முடிந்தது. இக்காலத்திலும்.

எண்டோஸ்கோபி மூலம் டிஸ்யூ எடுத்து பயாப்ஸி செய்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம். ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோய் மற்றும் முற்றிய நிலையில் உள்ள புற்றுநோய்க்கும் சிகிச்சை அளிப்பதில் எண்டோஸ் கோபி பிரசித்தி பெற்றது. வயிற்றைத் திறந்து சிகிச்சை அளிக்கத் தேவையில்லை. தீவிர மயக்க மருந்து தேவையில்லை. ஓரிரு மாதக் குழந்தை முதல் 100 வயது வரை எல்லா வயதினருக்கும் சிகிச்சை அளிக்கலாம்.

ணி.ஹி.ஷி என்று சொல்லப்படும் எண்டோஸ்கோபி அல்ட்ரா சவுண்ட் மூலம் கண்டறியலாம். இதில் லோ ரிஸ்க் ஆனால் இதற்கு செலவு கூடுதல் ஆகலாம். சி.டி ஸ்கேன் எடுத்து வேறு எங்காவது பரவி உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

மருத்துவம்

இந்தியாவில் ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோயை முழுமையாகக் குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது உண்மைதான்.

இருப்பினும் புற்றுநோய் என்றாலே மரண தண்டனை என்று நினைத்த காலமெல்லாம் மலையேறிவிட்டது.

1. முதன்மையாகப் பரிந்துரை செய்வது அறுவை சிகிச்சைதான்.

அதாவது புற்றுநோயால் பாதிக்கப் பட்ட இடத்தை வெட்டி எடுத்து விட்டு வயிற்றுக்கும் உணவுக்குழாய்க்கும் இணைப்பை உண்டாக்குவது.

2. யாருக்கு எந்த விதமான அறுவை சிகிச்சை என்பதை நோயாளியின் நிலை, நோய் முற்றியுள்ள நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மருத்துவர் தீர்மானிப்பார்.

3. அறுவை சிகிச்சை முடிந்த பிறகும் தேவை ஏற்பட்டால் ரேடியேஷன் தெரபி (Radiation Therapy) அல் லது கீமோ தெரபி (Chemotherapy) ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்று கொடுக்கப்படும்.

ஒரு சிலருக்கு அறுவை செய்ய இயலாது. இதற்கு வயது ஒரு முக்கிய காரணம். அப்படி அறுவை சிகிச்சை செய்ய இயலாதவர்களுக்கு ஹீமோதெரபி கொடுக்கப்படும். அந்நிலையில் ஒரு மெட்டல் ஸ்டெம் (விமீtணீறீ ஷிtமீனீ) பொருத்தி அதன் வழியாக உணவு கொடுக்கப்படும்.

www.thedipaar.com

Link to comment
Share on other sites

மிகவும் யோசிக்க வைக்கும் பதிவு யாயினி . இணைப்புக்கு நன்றிகள் :) :) :) .

Link to comment
Share on other sites

  • 7 years later...

 

உணவுக்குழாய்ப் புற்றுநோய்... சில உண்மைகள்..!

150585.jpg
 

மனிதர்களை அதிகம் பாதிக்கக்கூடிய புற்றுநோய்களில் முதல் ஐந்து இடங்களில் இருக்கிறது உணவுக்குழாய்ப் புற்றுநோய். இந்தியாவிலும் இது மரணத்தை உண்டாக்கக்கூடிய புற்றுநோய் வரிசையில் முன்னிலையில் இருந்துவருகிறது. இந்தியாவிலேயே வடகிழக்கு மாநிலமான மிசோராமில்தான் இந்தப் புற்றுநோயின் தாக்கம் அதிகம். அதற்கு அடுத்த இடத்தில் தமிழகம் வருகிறது.

உப்பால் வரலாம் புற்று

 

உணவுக் குழாய் அழற்சிக்கு (ரிஃப்ளக்ஸ்) அடுத்தபடியாக உணவுக்குழாயில் ஏற்படும் மற்றொரு முக்கியமான பிரச்சினை, உணவுக்குழாய்ப் புற்றுநோய். ‘ரிஃப்ளக்ஸ்’ பிரச்சினையில் வரக்கூடிய பாதிப் பிரச்சினைகள் இதிலும் உள்ளன. இது வம்சாவளியாக வரக்கூடிய பிரச்சினை அல்ல. மிகவும் குறைந்த அளவில்தான் வம்சாவளியாக உணவுக்குழாய்ப் புற்றுநோய் வருகிறது. பிறகு எந்த வகையில் இந்தப் புற்று நோய் ஏற்படுகிறது?

“மனிதனின் பழக்கவழக்க மாற்றங்களால்தாம் இந்தப் புற்றுநோய் அதிகம் வருகிறது. இரைப்பையிலும் உணவுக்குழாயிலும் புற்றுநோய் வருவதற்கு முக்கியக் காரணமே, ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் உணவு வகைகளை உண்பதுதான்.

இது ஆராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மை. அதுமட்டுமல்ல; பழங்களே சாப்பிடாதவர்களுக்கும் உப்பு உணவுகளை அதிகமாகப் பயன்படுத்துபவர்களுக்கும் இந்தப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம் போன்ற உணவுப் பொருட்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

புகைப் பழக்கம், மதுப் பழக்கமும் உணவுக் குழாய்ப் புற்றுநோய்க்கான காரணிகளின் ஒன்று” என்கிறார்  குடல் நோய் சிறப்பு மருத்துவரும் சென்னை மருத்துவக் கல்லூரியின் குடல் நோய் அறுவை சிகிச்சைத் துறையின் முன்னாள் இயக்குநருமான எஸ்.எம். சந்திரமோகன்.

 இந்த உணவுப் பழக்கம் இல்லாதவர்களுக்கும்கூட உணவுக்குழாய்ப் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உண்டு. ஆனால், இந்த உணவு வகைகளைச் சாப்பிடுபவர்களுக்குப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் பல மடங்கு அதிகம். இதுவும் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப் பட்டிருக்கிறது என்கிறார் அவர்.

அலட்சியம்

உணவை விழுங்குவதில் சிரமமா?

‘ரிஃப்ளக்ஸ்’ இருப்பவர்களுக்கு எப்படி நெஞ்செரிச்சல் இருக்கிறதோ அதுபோலவே உணவுக்குழாய்ப் புற்றுநோய் ஒருவருக்கு வந்திருக்கிறது என்பதை உணர்த்துவது விழுங்குதலில் உள்ள பிரச்சினைதான். புற்று வளர்வதால் உணவுக்குழாய் சுருங்கிவிடுகிறது. இந்தப் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்குக் கடின உணவான சப்பாத்தியோ பரோட்டாவையோ சாப்பிடும்போது அது இரைப்பைக்குச் செல்லாது. தண்ணீர் குடித்தால்தான் உள்ளே செல்லும். இல்லையென்றால் அப்படியே உணவுக் குழாயிலேயே தங்கியிருக்கும். இதுபோன்ற ஒரு நிலை ஏற்படும்போது என்ன செய்ய வேண்டும்?

“உணவை விழுங்குவதில் சிரமம் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகிவிட வேண்டும். எண்டாஸ்கோப்பி மூலம் நோயைக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், என்னுடைய அனுபவத்தில் சப்பாத்தி, பரோட்டாவைச் சாப்பிடக் கஷ்டமாக இருந்தால், எளிய உணவான இட்லி, தோசைக்கு மாறிவிடுபவர்கள் ஏராளம். இட்லி, தோசையும் சாப்பிட முடியாமல் போனால், கஞ்சிக்கு மாறிவிடுவார்கள். கஞ்சியும் குடிக்க முடியாமல் போனால், நீராகாரத்துக்கு மாறிவிடுவார்கள். மருத்துவரையே பார்க்காமல் தவிர்த்துவிடுவார்கள். இந்த அறிகுறிகளைத் தொடர்ந்து புறக்கணிக்கும்போது இடைப்பட்ட காலத்தில் புற்று நன்றாக வளர்ந்துவிடும்.

அதனால்தான் நம் ஊரில் ஆரம்ப காலத்திலேயே உணவுக்குழாய்ப் புற்றுநோயைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. உணவு விழுங்கக் கஷ்டப்படத் தொடங்கிய பிறகு நான்கு மாதங்கள் கழித்து மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளே அதிகம். இதையும் ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறோம். இது இரைப்பை, உணவுக் குழாய் இரண்டுக்குமே பொருந்தக்கூடியது தான்” என்கிறார் சந்திரமோகன்.

unavu-2jpgஎஸ்.எம். சந்திரமோகன்

அறிகுறிகள் உஷார்

அலட்சியத்தால் மருத்துவரைச் சந்திக்காமல் தள்ளிப்போடுவதால் புற்று இதர உறுப்புகளுக்கும் பரவிவிடும். புற்றை ஆரம்ப காலத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதால், சிகிச்சை முறையும் சிக்கலாகிவிடுகிறது. எப்போதும் மருத்துவத்தில் புற்றுநோய் வந்தவர்களுக்குக் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வாழ்வதற்கான வழிமுறைகளை மருத்துவர்கள் ஆராய்வது வழக்கம். ஆனால், பரவிய நிலையில் புற்றுநோயைக் கண்டுபிடிக்கும்போது அதற்கான வாய்ப்பு முற்றிலும் குறைந்துவிடுகிறது. ஆரம்ப கட்டத்தில் இருந்தால், எளிய சிகிச்சையின் மூலம் உணவுக்குழாய்ப் புற்றுநோயைக் குணப்படுத்த வழி இருக்கிறது. 

உணவுக்குழாய்ப் புற்றுநோய்க்கு விழுங்குவதில் ஏற்படும் தொந்தரவு மட்டுமே அறிகுறி அல்ல. புளித்த ஏப்பம், பசிக்குறைவு, நெஞ்சில் அடைப்பது போன்ற உணர்வு, அஜீரணம், உடல் எடை குறைதல் போன்ற அறிகுறிகளும் இருக்கும். இந்த அறிகுறிகள் உணவுக்குழாய், இரைப்பைப் புண்ணிலும் காணப்படும் பொதுவான அறிகுறிகள்தாம். எனவே, உடனடியாக மருத்துவரை அணுகும்போதுதான் உணவுக்குழாயில் புற்றுநோய் உள்ளதா அல்லது வேறு பிரச்சினை இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த முடியும்.

பொரித்த உணவு வகைகள், உப்பு அதிகம் கலந்த உணவுப் பொருட்கள், துரித உணவு வகைகள், மது, புகை ஆகியவற்றைக் கைவிட்டால், உணவுக்குழாயில் புற்றுநோய் வராமல் தடுத்துக்கொள்ளலாம்.

குழாய் காப்போம்..!

https://www.hindutamil.in/news/supplements/nalam-vazha/150585-.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.