Jump to content

ஜொள்ளு பூசாரி கை நீளவே பெண்களே தந்தனர் செருப்படி


SUNDHAL

Recommended Posts

அனுமான் கோயிலில் ஒரு பெண்ணின் கையை பிடித்து தவறாக நடக்க முயன்ற பூசாரியை, கோயில் வெளியே இழுத்துப்போட்டு, பெண்களே செருப்படி தந்தனர்.

ஆந்திர மாநிலம் கரீம்நகர் மாவட்டம் முதாப்பள்ளி என்ற பகுதியில் பிரபலமான அனுமான் கோயில் உள்ளது. அங்கு பூசாரியாக இருப்பவர் சேகர். வயது 35. கோயிலுக்கு முக்கிய விசேஷ நாட்களில், பெண்கள் கூட்டம் அதிகம் இருக்கும்.

உள்ளூரில் பெண்கள் அடிக்கடி கோயிலுக்கு வருவர். அப்படி வந்து கொண்டிருந்தவர் தான் இந்த 25 வயது பெண். அவர் கணவர், சமீபத்தில் தான் துபாயில் வேலை கிடைத்து சென்றுள்ளார். அந்த பெண்ணின் கணவர் பற்றிய விவரம் எல்லாம் அடிக்கடி பூசாரியிடம் சொல்லி, கடவுளிடம் வேண்டிக்கொண்டு கிளம்புவார்.

இப்படி பழக்கத்தை வைத்துக்கொண்ட பூசாரியிடம், திடீர் என்று "ஜொள்ளு' பூதம் கிளம்பிவிட்டது போலும். குங்குமம் தருவது போல, அடிக்கடி கையை பிடிப்பார். அதனால் நெளிந்து போய்விடுவார் பெண். ஏதேச்சையாகத்தான் இப்படி நடக்கிறது என்று நினைத்திருந்தார் பெண். ஆனால், கையை தொட்டும் எதுவும் மறுப்பு சொல்லவில்லையே என்று அந்த பெண்ணின் வீட்டுக்கு செல்ல ஆரம்பித்தார்.

அனுமான் பிரசாதம் என்று சொல்லி அடிக்கடி, வடைகளை கொண்டு கொடுத்துவிட்டு, அந்த பெண்ணிடம் தவறாக நடக்க நேரம் பார்த்தார். ஒரு நாள், குடிக்க தண்ணீர் கேட்டு, திரும்பி வரும் போது, பெண்ணை கட்டிப்பிடித்து விட்டார்.

பெண் கத்தவே, பூசாரி, கமுக்கமாக வெளியில் தப்பிச்சென்று விட்டார். இனியும் சும்மா இருக்கக்கூடாது என்று போலீசில் புகார் செய்தார் பெண். ஆனால், போலீசாரிடம் பூசாரி சரிகட்டவே, அவர்கள் புகாரை எடுக்கவே இல்லை.

இதை அறிந்த பெண், சிலரின் உதவியோடு, உள்ளூர் பெண்கள் அமைப்பான "ஸ்வசக்தி'யிடம் புகார் செய்தார். அவ்வளவு தான், அந்த பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் எல்லாம் திரண்டு, கோயிலில் இருந்து பூசாரியை இழுத்து வந்து விட்டனர். கோயில் வாசலில் நிறுத்தி, ஆளாளுக்கு செருப்படி தந்தனர்.

இந்த சம்பவத்தை பார்த்த ஆண்கள் பலரும் விக்கித்துப் போய்விட்டனர். பூசாரியை அடிப்பதை தடுக்கவில்லை. பெரும் பதட்டம் காணப்படவே போலீசார் விரைந்து வந்தனர். அதற்குள் பூசாரி தப்பி ஒடிவிட்டார்.

அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

Thanks:Dinamalar........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்து கோவில் ஒன்றில் மணி ஜய்யர் என்ற புூசாரி இருக்கின்றார். அவரும் உப்படித் தான் திருநீறு வைக்கின்ற சாட்டில் பெண்களின் கையைக் கிள்ளுவாராம்.

அதனால் பலர் அவரைக் கிள்ளுமணி ஜய்யர் என்று தான் கேலி பண்ணுவார்கள்.

Link to comment
Share on other sites

நீண்ட காலமா பாக்கிறம்.. பெண்கள் செருப்பதைத் தவிர கெவியா ஒன்றாலும் அடிக்கிறாங்க இல்ல..அதாலதான் இப்படி ஆக்களிட ஜொள்ளுக் குறையாம இருக்குது..! :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட காலமா பாக்கிறம்.. பெண்கள் செருப்பதைத் தவிர கெவியா ஒன்றாலும் அடிக்கிறாங்க இல்ல..அதாலதான் இப்படி ஆக்களிட ஜொள்ளுக் குறையாம இருக்குது..! :wink:  :P

இப்ப உறுட்டுக்கட்டையாலும் அடிக்க சிலர் முயற்சி செய்கின்றார்கள்!! :wink:

Link to comment
Share on other sites

யோவ் என்ன அய்டியா கொடுக்கிறிங்களா? :oops: :oops: :twisted: :evil:

Link to comment
Share on other sites

யோவ் என்ன அய்டியா கொடுக்கிறிங்களா?  :oops:  :oops:  :twisted:  :evil:

பின்ன ஜொள்ளுப் பாட்டிக்கு வாளி வைக்கவா சொல்லுறேள்..! :wink: :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பின்ன ஜொள்ளுப் பாட்டிக்கு வாளி வைக்கவா சொல்லுறேள்..! :wink: :)

வாளி காணுமோ? :wink:

Link to comment
Share on other sites

நீண்ட காலமா பாக்கிறம்.. பெண்கள் செருப்பதைத் தவிர கெவியா ஒன்றாலும் அடிக்கிறாங்க இல்ல..அதாலதான் இப்படி ஆக்களிட ஜொள்ளுக் குறையாம இருக்குது..! :wink:  :P

இப்படி செருப்பாலை அடிச்ச நிறையப்பேர் அந்தப் பெடியனைத்தான் லவ் பண்ணி சுத்தித் திரிஞ்சதை கண்டிருக்கிறன் அப்ப அவங்களும் ஒரு ஜடியாவோடைதான் காயம் வராமல் அடிக்கிறாங்கள் போலக் கிடக்கு.............

Link to comment
Share on other sites

இப்படி செருப்பாலை அடிச்ச நிறையப்பேர் அந்தப் பெடியனைத்தான் லவ் பண்ணி சுத்தித் திரிஞ்சதை கண்டிருக்கிறன் அப்ப அவங்களும் ஒரு ஜடியாவோடைதான் காயம் வராமல் அடிக்கிறாங்கள் போலக் கிடக்கு.............

இப்படியும் ஒரு ஐடியா வைச்சிருக்காங்களோ...எல்லாம் தூய்ஸ் சொன்னது போல செ(ரு)ப்படி வித்தை..கண்டியளோ..! :wink: :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகத்தார் வாங்குகின்ற அடிகளுக்கெல்லாம் செருப்பு ஒரு தூசு!!

அடிவாங்காத நாளே கிடையாது!

அடி வாங்கினாலும் ஓடினது கிடையாது!

இல்லையா முகத்தார்!!

Link to comment
Share on other sites

அது என்னவோ உண்மை தான்ப்பா....மோதல்லா தான் காதலே ஆரம்பிச்சு இருக்கு....

Link to comment
Share on other sites

அது என்னவோ உண்மை தான்ப்பா....மோதல்லா தான் காதலே ஆரம்பிச்சு இருக்கு....

முகத்தார் அதுதானே சொல்லுறார்... மோதலில ஆரம்பிச்சு மோதிக்கிட்டே இருக்குன்னு...- முத்தார் லோ..நியூட்டனின் முதலாம் லோ வோட ஒத்துப் போகுது கொஞ்சம்- வாழ்க்கைப்பாடம் கேட்டுப் படிக்கனும்..புத்தகத்திலா எழுதுவாங்க..! :wink: :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகத்தார் அதுதானே சொல்லுறார்... மோதலில ஆரம்பிச்சு மோதிக்கிட்டே இருக்குன்னு...- முத்தார் லோ..நியூட்டனின் முதலாம் லோ வோட ஒத்துப் போகுது கொஞ்சம்- வாழ்க்கைப்பாடம் கேட்டுப் படிக்கனும்..புத்தகத்திலா எழுதுவாங்க..! :wink: :)

தடைகள் அதிகமாச்சு என்றால் மெதுவாக ஓய்விற்கு வந்திடும் என்று சொல்கின்றார்களே! :idea:

Link to comment
Share on other sites

அதான் படிச்சிட்டு இருக்கோம்ல............ :)

தெரிஞ்சுக்கிறமில்ல...சுண்டல் கடல போடேக்கையே..! :wink: :lol:

Link to comment
Share on other sites

முகத்தார் வாங்குகின்ற அடிகளுக்கெல்லாம் செருப்பு ஒரு தூசு!!

அடிவாங்காத நாளே கிடையாது!

அடி வாங்கினாலும் ஓடினது கிடையாது!

இல்லையா முகத்தார்!!

15 வயசிலை முதலிலை வாங்கினது இப்பவும் தொடருது என்ன செய்ய இருந்தாலும் என்ரை அனுபவத்திலை ஒரு ஜடியா கழட்ட முடியாத (சான்டில்ஸ்) செருப்பு போட்டவர்களுடன் பகிடி விட்டிங்க எண்டா செருப்பை கழட்ட முன்னம் ஓடியிடலாம் எல்லோ......... (இப்பிடியான ஜடியாக்கே தனிய காசு வாங்க வேணும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15 வயசிலை முதலிலை வாங்கினது இப்பவும் தொடருது என்ன செய்ய இருந்தாலும் என்ரை அனுபவத்திலை ஒரு ஜடியா கழட்ட முடியாத (சான்டில்ஸ்) செருப்பு போட்டவர்களுடன் பகிடி விட்டிங்க எண்டா செருப்பை கழட்ட முன்னம் ஓடியிடலாம் எல்லோ......... (இப்பிடியான ஜடியாக்கே தனிய காசு வாங்க வேணும்)

அவர்கள் எங்களை வேகமாகத் துரத்தினால்??

Link to comment
Share on other sites

அவர்கள் எங்களை வேகமாகத் துரத்தினால்??

வாழைப்பழத் தோலை..வீசிட்டு ஓடுங்க..! :wink: :)

Link to comment
Share on other sites

வாழைப்பழத் தோலை..வீசிட்டு ஓடுங்க..!

அதுசரி............. இனி வீட்டைவிட்டு வெளிக்கிடேக்கை வாழைப்பழத்தையும் கொண்டு போக வேண்டியதுதான்.....

Link to comment
Share on other sites

புசாரிகள் என்ற பெயரில் இருக்கும் இந்த ஆசாமிகள் எப்ப தான் திருத்தப்போகின்றார்களோ தெரியாது? :roll:

Link to comment
Share on other sites

அதான் கைவசம் நான் எண்ணெய் கொண்டு போறனான் திறத்தினா ஊத்திட்டு ஒட....... :oops: :oops:

Link to comment
Share on other sites

கிருலப்பனையை கலக்கும் "கிறீஸ்" ஆசாமிகள்

மடக்கிப் பிடிக்கும் முயற்சியில் பொது மக்கள்

கொழும்பு கிருலப்பனையில் கிறீஸ் தடவிக் கொண்டு இரவில் நடமாடித் திரியும் மர்மக் கும்பல் ஒன்றினால் பெண்களிடம் பெரும் பீதியேற்பட்டுள்ளது.

இக் கும்பலிடம் மாட்டிக் கொண்டுள்ளவர்களில் ஒரு சிலர் இது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதேவேளை இக்கும்பலை மடக்கி பிடிக்க ஆண்கள் இரவில் காவல்காத்து வருவதாகவும் பொலிஸார் கிறீஸ் ஆசாமிகளை பிடிக்க வலை விரித்துள்ளரெனவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஒரு வாரகாலமாக கிருலப்பனையிலுள்ள பல இடங்களில் நால்வர் அடங்கிய கிறீஸ் ஆசாமிகளிடம் பெண்கள் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மேலும் சிலர் நடந்தவற்றை வெளியே தெரிவிக்க முடியாமலுள்ளனர்.

குறிப்பாக தனிமையில் இருக்கும் பெண்களும் தங்குமிடங்களில் உள்ள பெண்களுமே அதிகளவில் கிறீஸ் ஆசாமிகளின் சேஷ்டைகளுக்கு ஆளாகியுள்ளனர்.

உடம்பு முழுவதும் கிறீஸை பூசிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் நடமாடி வரும் இக் கும்பல் எவரிடமாவது மாட்டிக் கொள்ள நேரிட்டால் தப்பிச் செல்ல கைகளில் கத்தியை வைத்திருப்பதாகவும் அதே கத்தியை காட்டி மாட்டிக் கொள்ளும் பெண்களிடம் தமது சேஷ்டைகளை புரிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பெண்களை பெரும்பாடாய் படுத்தி வரும் இக் கும்பலைச் சேர்ந்த ஆசாமிகளை பிடிப்பதில் கடந்த இரண்டு தினங்களாக கிருலப்பனை பொது மக்கள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டிருந்த போதும் இந்த விடயம் குறித்து தெரிந்து கொண்ட அவர்கள் தலைமறைவாகி இருப்பதாக கிருலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்

தினக்குரல்

அதான் கைவசம் நான் எண்ணெய் கொண்டு போறனான் திறத்தினா ஊத்திட்டு ஒட.......

தம்பி சுண்டல் இப்பிடி ஒரு செய்தி அவுஸ்ரேலியா பேப்பர்களிலை வராமல் பாத்துக்கொள்ளும்.....அப்பு

Link to comment
Share on other sites

கிருலப்பனையை கலக்கும் "கிறீஸ்" ஆசாமிகள்

மடக்கிப் பிடிக்கும் முயற்சியில் பொது மக்கள்

கொழும்பு கிருலப்பனையில் கிறீஸ் தடவிக் கொண்டு இரவில் நடமாடித் திரியும் மர்மக் கும்பல் ஒன்றினால் பெண்களிடம் பெரும் பீதியேற்பட்டுள்ளது.

இக் கும்பலிடம் மாட்டிக் கொண்டுள்ளவர்களில் ஒரு சிலர் இது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதேவேளை இக்கும்பலை மடக்கி பிடிக்க ஆண்கள் இரவில் காவல்காத்து வருவதாகவும் பொலிஸார் கிறீஸ் ஆசாமிகளை பிடிக்க வலை விரித்துள்ளரெனவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஒரு வாரகாலமாக கிருலப்பனையிலுள்ள பல இடங்களில் நால்வர் அடங்கிய கிறீஸ் ஆசாமிகளிடம் பெண்கள் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மேலும் சிலர் நடந்தவற்றை வெளியே தெரிவிக்க முடியாமலுள்ளனர்.

குறிப்பாக தனிமையில் இருக்கும் பெண்களும் தங்குமிடங்களில் உள்ள பெண்களுமே அதிகளவில் கிறீஸ் ஆசாமிகளின் சேஷ்டைகளுக்கு ஆளாகியுள்ளனர்.

உடம்பு முழுவதும் கிறீஸை பூசிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் நடமாடி வரும் இக் கும்பல் எவரிடமாவது மாட்டிக் கொள்ள நேரிட்டால் தப்பிச் செல்ல கைகளில் கத்தியை வைத்திருப்பதாகவும் அதே கத்தியை காட்டி மாட்டிக் கொள்ளும் பெண்களிடம் தமது சேஷ்டைகளை புரிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பெண்களை பெரும்பாடாய் படுத்தி வரும் இக் கும்பலைச் சேர்ந்த ஆசாமிகளை பிடிப்பதில் கடந்த இரண்டு தினங்களாக கிருலப்பனை பொது மக்கள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டிருந்த போதும் இந்த விடயம் குறித்து தெரிந்து கொண்ட அவர்கள் தலைமறைவாகி இருப்பதாக கிருலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்

தினக்குரல்

தம்பி சுண்டல் இப்பிடி ஒரு செய்தி அவுஸ்ரேலியா பேப்பர்களிலை வராமல் பாத்துக்கொள்ளும்.....அப்பு

:lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியாவை கலக்கும் எண்ணை ஆசாமி.......

:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாசிபருப்பில் ஒரு இனிப்பான அல்வா .........!  👍
    • நீ வா என்றது உருவம்  நீ போ என்றது நானம் ........!  😍
    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
    • பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய, உக்ரைன் போரில் பங்குபற்றுகிறார்கள் போலுள்ளது.
    • பையா உங்கள்மீது எனக்கும் பிரியனுக்கும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு அதனால் உங்களைத் தனியே தவிக்க விட மாட்டோம் .......இப்ப நான் வந்திருக்கிறேன் ......இனி அவர் வருவார் கடைசியில் நிற்கும் போட்டிக்கு........யோசிக்க வேண்டாம்.......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.