Jump to content

ஜெகதீஸ்வரனுக்காக உதவிய உறவுகளே உங்களுக்காக கண்ணீரோடு சில வரிகள்


Recommended Posts

play-button.gif?w=28&h=30கடந்த சில மாதங்களாக தனது உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிற ஜெகதீஸ்வரனெண்ட ஒரு முன்னாள் போராளியை விடுவிக்கிறதுக்கும் அவருக்கான சிகிச்சையை செய்யிறதுக்கும் மனிதநேயப்பணியாளர்களும் அவருடைய குடும்பமும் பெரும் பிரயாசைப்பட்டு உழைச்சதிற்கான பயன் இண்டைக்கு எட்டியிருக்கு.

ஜெகதீஸ்வரனுக்கான சிசிச்சையை மேற்கொள்ள பிணை கிடைச்சிருக்கு அது பற்றி அவருடன் இருந்த கைதிகள் அவருடைய அக்கா புலம்பெயர்ந்த உறவுகளுக்கு சொல்ல வருகிறதை இந்த ஒலிப்பதிவிலை கேப்பம்…

ஒலிப்பதிவினை கேட்க இணைப்பில் அழுத்துங்கள்.

ஜெகதீஸ்வரனுக்கு மேலதிக உதவிகளை வழங்க தொடர்பு கொள்ள :-

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

Shanthy Germany – 0049 6781 70723

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

Vereinsregister:

AZ- VR 20302

Amtsgericht 55543 Bad Kreuznach

Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

Donation

Bank information

Germany:

NESAKKARAM e.V.

55743 Idar-Oberstein

Konto-Nr. 0404446706

BLZ 60010070

Postbank Stuttgart

Other countrys:

NESAKKARAM E.V

A/C 0404446706

Bank code – 60010070

IBAN DE31 6001 0070 0404 4467 06

Swift code – PBNKDEFF

Postbank Stuttgart

Germany

Link to comment
Share on other sites

திருக்கேதீஸ்வரம் மன்னாரைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் (வயது-32) என்பவர் 2009 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந் நிலையில் அவரின் இரு சிறுநீரகங்களும் பாதிப்படைய கடந்த சில மாதங்களாகத் தனது உயிருக்காகப் போராடி வருகின்றார் ஜெகதீஸ்வரன். இவரின் மருத்துவத் தேவையின் நிமிர்த்தம் ஏற்படும் செலவுகளை ஈடுசெய்ய புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் உதவியும் பெறப்பட்டு, அதுவும் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில்,

மருத்துவத் தேவையைப் பெறும் பொருட்டு அவரைப் பிணையில் விடுதலை செய்யுமாறு குடும்பத்தினரால் இலங்கை அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஜெகதீஸ்வரனின் தற்போதைய உடல் நிலையைக் கருத்தில் கொண்டு விடுக்கப்பட்ட இவ் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டது இலங்கை அரசு.

அதன்படி சட்டமா அதிபரின் பணிப்பின் பேரில் ஜெகதீஸ்வரன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் சார்பில் வாதாடின சட்டத்தரணி அறிவித்துள்ளார். எனவே ஜெகதீஸ்வரன் விடயம் தொடர்பில் மனிதநேயத்திற்கு மதிப்பளித்து, மனிதாபிமான முறையில் நடந்து கொண்டுள்ளது இலங்கை அரசு.

அத்துடன் எத்தனையோ ஜெகதீஸ்வரன்கள் சிறையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழும், அவசர காலச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டு வாடி வதங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவர் வைத்தியசாலையில் சங்கிலியுடன் கட்டி மருத்துவ சேவை பெற்ற புகைப்படமே இப் பிணைக்குக் காரணம் எனலாம்.

ஏனெனில் வெறும் வார்த்தைகளால் மட்டும் அவரின் துன்ப, துயங்களை எடுத்துரைக்கும் பட்சத்தில் அது அனைவரினதும் மனங்களைப் பாரியளவில் பாதிப்படையச் செய்திருக்காது, மாறாக புகைப்படத்துடன் அவரின் நிலைமையினை எடுத்துக் கூறியவுடன் அனைவரினதும் உள்ளங்களும் கனிந்து தற்போது பிணை கிடைத்துள்ளது ஜெகதீஸ்வரனுக்கு.

http://www.youtube.com/watch?v=6M0gN4r_IXY&feature=player_embedded

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் நல்ல விடயம். நேசக்கரத்தின் சேவை நம்மவர்க்கு இன்னும் தேவை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.