Jump to content

உயிர்வாழ்க்கை ஒரு உன்னதமான சந்தர்ப்பம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்கள் கர்மவினைப் பலனைப் பற்றி கூறுவார்கள். போன பிறப்பிலே என்ன நடைபெற்றது என்று கூறுவதற்கு பலர் உள்ளார்கள். ஆடுத்த பிறப்பிலே என்ன நடைபெறும் என்று கூறுவதற்கும் பலர் உள்ளார்கள். ஆனால் யாரும் இந்த வாழ்வைப் பற்றி, இந்த பிறப்பை பற்றி பெரிதாக பேசுவதில்லை.

நீங்கள் ஓரிடத்திற்கு செல்வதற்கு மூன்று பேரூந்துகளிலே செல்ல வேண்டும் என வைத்துக் கொள்ளுவோம். முதலாவது பேரூந்திலே பிரயாணம் செய்து பேரூந்து நிலையத்திற்கு வந்துவிட்டீர்கள். இன்னமும் இரண்டு பேரூந்துக்கள் எடுக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் அடுத்து எடுக்கவேண்டிய பேரூந்தை பற்றி எண்ணுவீர்களா? அல்லது மூன்றாவதாக எடுக்கவேண்டிய பேரூந்தை பற்றி யோசிப்பீர்களா?

ஏனெனில் எது நடந்து முடிந்துவிட்டதோ, அது முடிந்த காரியம். எது நடக்கப் போகின்றதோ, அது இனிமேல்தான் நடக்க போகின்றது. ஆனால் எது நடந்து கொண்டிருக்கின்றதோ அது மிகவும் முக்கியம். ஏனெனில் அடுத்த பிறப்பிலே என்ன நடைபெறும் என்பதைப் பற்றி இப்பொழுது யோசிப்பதில் பிரயோசனம் இல்லை. இப்பொழுது நீங்கள் உயிருடன் இருக்கும் பொழுது என்ன நடைபெறுகின்றது என்பதுதான் மிகவும் முக்கியமான விடயம்.

இப்பொழுது நாம் செய்யும் கர்மவினையின் பலன், ஆயிரம் வருடங்களின் பின்னர் அல்ல, ஆனால் 5 வினாடிகளிலே நீங்கள் அனுபவிப்பீர்கள். ஆனால் இந்த கணத்தை பற்றி யாருமே அதிகம் பேசுவதில்லை. இந்த கணத்திலே நீங்கள் செய்யக் கூடிய நல்ல செயல் என்ன? உணர்வுடன் இருத்தல்தான் நீங்கள் செய்யக் கூடிய நல்ல செயலாகும். இந்த உள்ளத்திலே நன்றி உணர்வை, ஆனந்தத்தை உணர்வதுதான் நீங்கள் செய்யக் கூடிய அதி உன்னதமான செயலாகும்.

மக்கள் எல்லாவற்றையும் பற்றி யோசிப்பார்கள். ஆனால் உயிருடன் வாழ்வதை உணருவதில்லை. உயிருடன் வாழும் உணர்வு எப்படிப்பட்டது? நேற்று நடைபெற்ற விடயங்களில் இருந்து விடுபட்டு, நாளை நடைபெற உள்ள விடயங்களில் இருந்து விடுபட்டு, இன்று, இந்த கணத்திலே ஆனந்தத்தை, நன்றியை உணர்வது எவ்வாறு இருக்கும்?

இந்த உயிர்வாழ்க்கை உங்களிடம் உள்ளது. இந்த உலகத்திலே நீங்கள் பல விடயங்களை செய்யலாம். ஆனால் நிச்சயமாக உங்கள் உள்ளத்தின் தாகத்தை தணிக்க முடியும்.

போன பிறப்பிலே தாம் யாராக இருந்தார்கள் என அறிய மக்கள் விரும்புகிறார்கள். தொலைக்காட்சியில் ஒரு விவரண சித்திரம் காட்டினார்கள். அதிலே பூசாரி ஒரு மனிதரிடம் “போன பிறப்பிலே நீ ஒரு யானையாக இருந்தாய்” என கூறினார். கேள்வி என்னவென்றால் இந்த தகவலை அறிந்ததாலே உங்களுக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது?

போன பிறப்பிலே நீங்கள் ஒரு யானையாக இருந்தீர்கள் என்ற தகவலினால் உங்களுக்கு, இன்று, என்ன நன்மை கிடைக்கப் போகிறது?

போன பிறப்பிலே நீங்கள் செய்த கர்மவினைப் பலனினாலே இன்று நீங்கள்; கஷ்டப்படுகின்றீர்கள் என கூறுவார்கள். நல்ல விடயங்கள் நடைபெறும் பொழுது போன பிறப்பிலே நீங்கள் செய்த நல்வினைகளின் பலன்தான் இவை என கூறுவார்கள். போன பிறப்பிலே செய்த அந்த நல்ல செயல்கள் என்னவென்று எனக்கு தெரிந்தால், அவ்வாறான செயல்களை நான் மேலும் இந்த பிறப்பிலே செய்யலாம். அப்பொழுது அடுத்த பிறவியிலே மேலும் நன்றாக இருக்க முடியும். ஆனால் அவை என்னவென்று ஒருவருக்கும் தெரியாது. இவைகள் எல்லாம் விளக்கங்களும், வியாக்கியானங்களும் தான். ஆனால் தண்ணீரை அருந்துவது ஒரு விளங்கப்படுத்தும் செயல் அல்ல. பசி எடுக்கும் போது உணவு உண்பது ஒரு விளக்கம் கொடுக்கும் செயல் அல்ல. களைப்பு ஏற்படும் பொழுது நித்திரை கொள்வது ஒரு விளக்கம் கொடுக்க வேண்டிய செயல் அல்ல. விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை.

நமக்கு விழிப்படைய கூடிய சந்தர்ப்பம் உள்ளது. கனவிற்கும், நிஜத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன? கனவிலே நீங்கள் ஒரு அரசனாக இருக்கலாம். ஆனால் விழித்தெழுந்த பின்னர் நீங்கள் யாரோ அவர்தான் நீங்கள். கனவிலே நீங்கள் ஒரு பள்ளத்தை நோக்கி விழுந்துகொண்டிருக்கலாம். ஆனால் கண்ணை விழித்தால் நீங்கள் கட்டிலிலே தான் இருப்பீர்கள். கனவில் நடைபெறும் ஒன்றும் உங்களது நிஜ வாழ்விலே மாற்றத்தை கொண்டு வராது. அவ்வாறாயின் ஏன் இந்த நிஜமான வாழ்விலே நீங்கள் கனவு காண விரும்புகிறீர்கள்? உங்கள் கண் முன்னே உள்ள உண்மையான வாழ்வு மிகவும் அழகானது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இதனை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Quote" உங்கள் கண் முன்னே உள்ள உண்மையான வாழ்வு மிகவும் அழகானது"

அகதி அழகாக சொல்லியுள்ளீர்கள், நன்றி பகிர்வுக்கு, பலர் அறியாமல் கிடைத்த வாழ்கை தாங்களும் நரகமாக்கி மற்றவர்களினதையும் நகரமாக்குகிறார்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.