Jump to content

இந்தியத் தொலைக்காட்சிகளில் கடைசி முறையாக...


Recommended Posts

இந்தியத் தொலைக்காட்சிகளில் கடைசி முறையாக...

கற்பனை: முகில்

பத்து வருசத்துக்கு மேல ஆச்சுப்பா. நம்ம கேபிள் டீவி சேனலெல்லாம் ஆரம்பிச்சு. இருந்தாலும் பல வருசங்களா ஒரே பாணி நிகழ்ச்சிகள் வந்து நம்ம வீட்டு டீவி ஸ்கீரின்ல விடிஞ்சிக்கிட்டுத்தான் இருக்கு. அப்படி தலைவிதியேன்னு நாம பார்த்துத் தொலைக்கிற நிகழ்ச்சிகளோட டாப் 10 லிஸ்ட்தான் இது. இந்தக் கட்டுரையில் வரும் நிகழ்ச்சிகளின் பெயர்கள் யாவும் கற்பனையே.

பத்தாவது:

இந்தக் கருமம் புடிச்ச நிகழ்ச்சிகள் லிஸ்ட்ல பத்தாவது இடத்துல இருக்குறது, திரைப்படமுங்கோ! "இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக'ன்னோ, "உலகத் தொலைக்காட்சிப் புவியியலில் முதன் முறையாக'ன்னோ ஆரம்பிப்பாய்ங்க. "திரைக்கு வந்து பல மணி நேரங்கள் ஓடிய'ன்னு வேற சேர்த்துக்குவாங்க. ஏகப்பட்ட வெட்டு, கட்டுகளோட அந்தப் படம் நாலு மணி நேரம் ஓடும். படத்தை விட நெறைய நேரம் துட்டுக்காக வெளம்பரம்தான் ஓடும். அப்புறம் அந்தப் படம் "காமெடி திங்கள்', "லவ்வு செவ்வாய்', பாடாவதி புதன்', "அய்யோ அம்மா வியாழன்', "வெங்காய ஹிட் வெள்ளி'ன்னு எல்லா நாளும் ரீலு அந்து போற அளவுக்கு ஓடும். எப்படா இந்தப் படத்தை "இந்தியத் தொலைகாட்சிகளில கடைசி முறையாக'ன்னு ஒளிபரப்புவாய்ங்கன்னு நம்மளை நெனைக்க வைச்சுருவாங்க.

ஒம்பதாவது:

"ஏ வாங்க வாங்க..வாயு பித்தம் கபம் அஜீரணம் எல்லாத்துக்கும் ஒரே மருந்து இந்த வேர்தான் சார். கபடதுபட வேர். கரக் முரக்னு கசக்கிப் பிழிஞ்சு இதோட சாறைக் குடிச்சாப் போதும். கேஸ் எல்லாம் ஈஸியா பாஸ் ஆகும். லைஃப் பீஸ்புல்லா இருக்கும்'னு பிதாமகன் சூர்யா மாதிரி ஆட்கள் ரோட்டோரமா விக்கிற சரக்கை, கோட், சூட், கூலிங்கிளாஸ் சகிதமா குதிரை மேல ஏறி வந்து டீவியில விப்பாங்க சில ஆட்கள். இவங்க கொடுக்குற காசை வைச்சுத்தான் சில டீவி சேனல்களே ஓடுதுன்னா பார்த்துக்கோங்களேன். இவங்களோட கஸின் பிரதர்ஸ் சிலரு இருக்காய்ங்க. அவங்க பண்ணுற புரோகிராம் என்னன்னு தெரியுமா? ஆங், அதேதான். பச்சக்கல், சிவப்புக்கல், கருங்கல், செங்கல், விக்கல், நக்கல் இப்படி எல்லாத்தையும் கலக்கலா காட்டி "கல்லா'வை நிரப்புற வியாபாரிங்க அவங்க. டார்ச்சர்டா சாமி! டெலிமார்கெட்டிங்கும் இதே வகையறாதான்னு தனியா சொல்லணுமா என்ன!

எட்டாவது:

தவில் அடிக்கிற ஆளு, கதை கட்டுற ஆளு, கண்ணீர் சிந்துற மெகா நடிகை, துணிக்கடை அதிபரு -இப்படி பிரபலங்கள் எந்தத் துறையில இருந்தாலும் கூட்டியாந்து கையில கரண்டியைக் கொடுத்துருவாங்க. கேட்டா "சமையல் டைம்'ன்னு தாளிப்பாய்ங்க. குழிக்கரண்டி, கொத்துக்கரண்டி, ஆப்பச்சட்டி, அகண்ட சட்டின்னு விதவிதமாக் காண்பிப்பாங்க. ஆனா அடுப்பப் பத்த வைச்சிருக்காங்களான்னுதான் தெரியாது. "உப்பு ரொம்ப உப்பா இருக்குங்கறதால நீங்க உப்பை லேசா யூஸ் பண்ணுனாப் போதும்'ன்னு கூட உதவிக்கு காம்பியரிங் பண்ண ஒரு தொகுப்பாளினி வேற படுத்தும். கடைசியா பிளேட்ல இருக்குற பதார்த்தத்தைத் தலைவிதியேன்னு தின்னுட்டு, "சூப்பரா இருக்கு'ன்னு ஒரு நடிப்பு நடிக்கும் பாருங்க. சான்úஸ இல்ல!

ஏழாவது:

எல்லாச் சேனலும் விடாம தொரத்தித் தொரத்திப் பண்ணுற சினிமா விமர்சனத்துக்குத்தான் ஏழாவது இடம். குறைப்பார்வை, நிறைப்பார்வை, வேண்டிய பார்வை, வேண்டாத பார்வைன்னு பல தினுசு இதுல உண்டு. சேனல், அது சார்ந்த கட்சி, அது சார்ந்த ஹீரோ, இதைப் பொருத்துதான் விமர்சனமும், கெüன்ட்டெüன் லிஸ்டும் அமையுங்கிறது டீவி ரிமோட்டுக்குத் கூடத் தெரிஞ்ச உண்மை. அதுலயும் பல படங்களுக்கு முதல்நாளே படம் பார்த்துட்டு வெளியே வர்ற விசிலடிச்சான் ரசிகர்கள்கிட்ட மட்டும் கருத்துக் கேப்பாய்ங்க. "தலீவரு

கலக்கிப்புட்டாருல்ல'ன்னு அவிங்களும் அளப்பானுக. அதை நம்பி தியேட்டருக்குப் போனா

நம்ம தலைவிதி "டார் டார்' ஆயிடும். படத்தைவிட, சில நேரம் டைரக்டரைக் கூட்டியாந்து உட்காரவைச்சு கலாய்ப்பாங்க பாருங்க, அதுதான் சூப்பரா இருக்கும்பா!

ஆறாவது:

ஆறாவது இடத்துல இருக்குற நிகழ்ச்சி என்னன்னு தெரியுமா..வந்த்த்த்தோமாதரம்... தாய் மண்ணே வணக்கம். அந்த டைப் நிகழ்ச்சிங்கதான். ஊர் ஊராப் போய் கல்யாண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து, அரங்கத்தைக் கூட்டிருவாய்ங்க. இதுல கலந்துகிட்டுப் பேசணும்னா ஒரே ஒரு தகுதிதான். கரண்ட் கட் ஆகி மைக் ஆஃப் ஆனாலும் மைக் இருக்குற சவுண்டலயே பேசத் தெரியணும். அதுபோக நாலு திருக்குறள், ரெண்டு பாரதியார் கவிதை, முணு குட்டிக்கதை தெரிஞ்சு வைச்சுக்குறது ப்ளஸ் பாயிண்ட். உங்க வாழ்க்கையில சோகமே இல்லாட்டியும், பெரும் சூறாவளியே கடந்து போன மாதிரி ஒரு கதையை நெசம் போலவே சொல்லத் தெரியணும். ஏன்னா அப்பத்தான் புரோகிராம் நடத்துற பெரியப்பா டர்க்கி டவலால வாயைப் பொத்தி அழறதுக்கான சிச்சுவேஷன் கிடைக்குமுங்கோ!

அஞ்சாவது:

"குப்பாப்பட்டி கிராமம். அன்று காலை. வழக்கம்போல அவசரத்துக்கு வயலுக்கு ஒதுங்கப் போன சிவனாண்டியின் சொம்பைக் காணவில்லை. குத்தம். ஓடியது என்ன?' -இப்படித்தான் ஆரம்பிப்பாய்ங்க. "நம்மகிட்ட நாலு சொம்பு இருக்குங்க. அதுல பொத்தல் விழுந்த அந்தச் சொம்பைத்தான் என் பாட்டன் காலத்துல இருந்து குடும்பத்துல மூத்த புள்ளைக உபயோகிக்கிறோம். "அப்படிம்பாரு சிவனாண்டி. அப்படி பத்து நிமிஷம் சொம்பைச் சுத்தி கதை ஓடும். "சொம்பை அடகு வைச்சு சரக்கு அடிக்கலாமுன்னுதான் திருடுனேன்'னு குத்தம் செஞ்ச புலிப்பாண்டி கொஞ்ச நேரங் கழிச்சு பெருந்தன்மையா ஒத்துக்குவாரு. ஆனா இந்த நிகழ்ச்சியில பின்னால வாய்ஸ் கொடுக்கணும்னா நிரந்தரமா தொண்டை கட்டியிருக்கணும்போல. அப்பத்தான் மிரட்டலா இருக்கும்னு நெனைக்கிறாக. இதுல அப்பப்ப நடிகைங்க வீட்டுல நாய் காணாமப் போன சம்பவம் ஸ்பெஷல் எபிசோடா கூத்தடிக்குமுங்கோ!

நாலாவது:

காமெடி புரோகிராமுன்னு சொல்லி வெளம்பரப்படுத்தி அடிக்கடி ஞாபகப்படுத்துவாங்கோ. சரி சிரிக்கலாம்மேன்னு நாமளும் அந்தப் புரோகிராமை நம்பிப் பார்த்தா, எங்கங்க நாம சிரிக்கணும்னு ஞாபகப்படுத்த, நாலு பேர் சிரிக்கிற சவுண்டையும் அவிங்களே அங்கங்க போட்டுக்குவாய்ங்க. பெத்தவங்களைத் திட்டுறது, மத்தவங்களைத் திட்டுறது, செத்தவங்களைத் திட்டுறது, ஊத்திக்கிறது, உளர்றது இதுதான் காமெடின்னு நெனைச்சிக்கிட்டு இவங்க பண்ணுற லொள்ளு இருக்கே, தாங்க முடியலடா சாமி!

மூணாவது:

மெகா சீரியலுக்கு மூணாவது இடமுங்கோ! எல்லா உறவு முறையையும் தலைப்பா வைச்சு சீரியல் வந்துடுச்சு. இனிமே "பக்கத்து வீட்டுப் பெரியம்மா', "எதிர்த்த வீட்டுச் சித்தி'ன்னுதான் தலைப்பு வைக்கணும். "அப்பா'ன்னு ஒரு சீரியலை நீங்க பத்து வயசுல பார்க்க ஆரம்பிச்சீங்கன்னா, நீங்களே "அப்பா' ஆகுற வரைக்கும் அந்த சீரியல் ஓடும். அதோட நிறுத்துவாங்களா, மாட்டாங்க. மிட்நைட் ஒரு மணிக்கு அதே சீரியலை மறு ஒளிபரப்பு வேறே பண்ணுவாய்ங்க! மார்க்கெட் போன கோலிவுட் அக்கா நடிகைங்க எல்லாம் ஆளுக்கொரு சீரியல்ல "நடமாடும் பெண் தெய்வங்களா' திரிஞ்சுக்கினு இருக்காங்க. நம்மளோட அன்றாடப் பிரச்சினைகளோட அபி, செல்வி, காஞ்சனா, கல்கி, சரசுன்னு பல பேரோட பிரச்சினைகளையும் சுமந்துக்கிட்டு வாழுறோமே நாமெல்லாம் டபுள் கிரேட்!

ரெண்டாவது:

லாங் லாங் அகோ ஆரம்பிச்சுது, "சாங்கை டெடிகேட் பண்ணுற' இந்த டைப் நிகழ்ச்சிசங்க. "உதறிட்டுப் போன காதலிக்கு', "உசிரை விட்டுப் போன பாட்டிக்கு'ன்னு போன் பண்ணி பாட்டுக் கேக்குறதையே பல பேர் முழு நேரத் தொழிலா வைச்சிருக்காங்க. "இந்த ஜென்மத்துல உங்க கிட்ட நான் பேசுவேன்னு நெனைச்சுசேப் பார்க்கல', "உங்க லைனுக்காக பொறந்ததுல இருந்தே ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன். "நீங்க ஐஸ்வர்யா ராய் மாதிரியே இளிக்கீங்க'ன்னு ஸ்டாண்டர்டா சில வசனங்கள் ரீப்பீட் ஆகிட்டே இருக்கும். அதுவும் தொகுப்பாளினிங்க பேசுற டமிலைக் கேக்கறப்போ, அவங்க நாக்கை இழுத்து வைச்சு வசம்பை எடுத்து "நறநற'ன்னு தேய்க்கணும்னு வெறி வரும் நமக்கு. கல்லறைல புதைஞ்சு போனவங்கிட்ட கூட இவங்க பேசுறது ஒரே வசனம்தான். "கீப் டிரையிங்கு. கீப் ஆன் டிரைங்யிங்கு!'

மொதலாவது:

எந்த நிகழ்ச்சியாலயும் அடிச்சுக்கவே முடியாத நெம்பர் ஒன் இடத்துல இருக்குற நிகழ்ச்சி ஒண்ணு, ஒண்ணரை, ஏழரை, எட்டு செய்திகள்தான். ஏழரையைக் கேக்குறவன், எட்டைக் கேட்காம வுட்டா அஜீரணக் கோளாறு வந்துடும். ஆனா ரெண்டையும் கேக்குறவன் அரை லூஸô மாறிடுவாங்குறதும் உண்மை. மீதி சேனல் நியூசைக் கேக்கலாமுன்னு பாத்தா அதுல அப்படியொரு நியூசே வராது. எல்லாத்தையும் தாண்டி நடுநிலைமை செய்திகள் தெரிஞ்சுக்கணும்னா ஒரே வழிதாங்க இருக்கு. டீவியை வீட்டுல நடுவுல வைச்சிருங்க. "மியூட்'ல வைச்சிருங்க. டீவிக்கு பின்னாடி நீங்க உட்கார்ந்துக்கோங்க. செய்தி கேளுங்க. இப்ப எப்படி இருக்கு!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.