Jump to content

இந்தியத் தொலைக்காட்சிகளில் கடைசி முறையாக...


Recommended Posts

இந்தியத் தொலைக்காட்சிகளில் கடைசி முறையாக...

கற்பனை: முகில்

பத்து வருசத்துக்கு மேல ஆச்சுப்பா. நம்ம கேபிள் டீவி சேனலெல்லாம் ஆரம்பிச்சு. இருந்தாலும் பல வருசங்களா ஒரே பாணி நிகழ்ச்சிகள் வந்து நம்ம வீட்டு டீவி ஸ்கீரின்ல விடிஞ்சிக்கிட்டுத்தான் இருக்கு. அப்படி தலைவிதியேன்னு நாம பார்த்துத் தொலைக்கிற நிகழ்ச்சிகளோட டாப் 10 லிஸ்ட்தான் இது. இந்தக் கட்டுரையில் வரும் நிகழ்ச்சிகளின் பெயர்கள் யாவும் கற்பனையே.

பத்தாவது:

இந்தக் கருமம் புடிச்ச நிகழ்ச்சிகள் லிஸ்ட்ல பத்தாவது இடத்துல இருக்குறது, திரைப்படமுங்கோ! "இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக'ன்னோ, "உலகத் தொலைக்காட்சிப் புவியியலில் முதன் முறையாக'ன்னோ ஆரம்பிப்பாய்ங்க. "திரைக்கு வந்து பல மணி நேரங்கள் ஓடிய'ன்னு வேற சேர்த்துக்குவாங்க. ஏகப்பட்ட வெட்டு, கட்டுகளோட அந்தப் படம் நாலு மணி நேரம் ஓடும். படத்தை விட நெறைய நேரம் துட்டுக்காக வெளம்பரம்தான் ஓடும். அப்புறம் அந்தப் படம் "காமெடி திங்கள்', "லவ்வு செவ்வாய்', பாடாவதி புதன்', "அய்யோ அம்மா வியாழன்', "வெங்காய ஹிட் வெள்ளி'ன்னு எல்லா நாளும் ரீலு அந்து போற அளவுக்கு ஓடும். எப்படா இந்தப் படத்தை "இந்தியத் தொலைகாட்சிகளில கடைசி முறையாக'ன்னு ஒளிபரப்புவாய்ங்கன்னு நம்மளை நெனைக்க வைச்சுருவாங்க.

ஒம்பதாவது:

"ஏ வாங்க வாங்க..வாயு பித்தம் கபம் அஜீரணம் எல்லாத்துக்கும் ஒரே மருந்து இந்த வேர்தான் சார். கபடதுபட வேர். கரக் முரக்னு கசக்கிப் பிழிஞ்சு இதோட சாறைக் குடிச்சாப் போதும். கேஸ் எல்லாம் ஈஸியா பாஸ் ஆகும். லைஃப் பீஸ்புல்லா இருக்கும்'னு பிதாமகன் சூர்யா மாதிரி ஆட்கள் ரோட்டோரமா விக்கிற சரக்கை, கோட், சூட், கூலிங்கிளாஸ் சகிதமா குதிரை மேல ஏறி வந்து டீவியில விப்பாங்க சில ஆட்கள். இவங்க கொடுக்குற காசை வைச்சுத்தான் சில டீவி சேனல்களே ஓடுதுன்னா பார்த்துக்கோங்களேன். இவங்களோட கஸின் பிரதர்ஸ் சிலரு இருக்காய்ங்க. அவங்க பண்ணுற புரோகிராம் என்னன்னு தெரியுமா? ஆங், அதேதான். பச்சக்கல், சிவப்புக்கல், கருங்கல், செங்கல், விக்கல், நக்கல் இப்படி எல்லாத்தையும் கலக்கலா காட்டி "கல்லா'வை நிரப்புற வியாபாரிங்க அவங்க. டார்ச்சர்டா சாமி! டெலிமார்கெட்டிங்கும் இதே வகையறாதான்னு தனியா சொல்லணுமா என்ன!

எட்டாவது:

தவில் அடிக்கிற ஆளு, கதை கட்டுற ஆளு, கண்ணீர் சிந்துற மெகா நடிகை, துணிக்கடை அதிபரு -இப்படி பிரபலங்கள் எந்தத் துறையில இருந்தாலும் கூட்டியாந்து கையில கரண்டியைக் கொடுத்துருவாங்க. கேட்டா "சமையல் டைம்'ன்னு தாளிப்பாய்ங்க. குழிக்கரண்டி, கொத்துக்கரண்டி, ஆப்பச்சட்டி, அகண்ட சட்டின்னு விதவிதமாக் காண்பிப்பாங்க. ஆனா அடுப்பப் பத்த வைச்சிருக்காங்களான்னுதான் தெரியாது. "உப்பு ரொம்ப உப்பா இருக்குங்கறதால நீங்க உப்பை லேசா யூஸ் பண்ணுனாப் போதும்'ன்னு கூட உதவிக்கு காம்பியரிங் பண்ண ஒரு தொகுப்பாளினி வேற படுத்தும். கடைசியா பிளேட்ல இருக்குற பதார்த்தத்தைத் தலைவிதியேன்னு தின்னுட்டு, "சூப்பரா இருக்கு'ன்னு ஒரு நடிப்பு நடிக்கும் பாருங்க. சான்úஸ இல்ல!

ஏழாவது:

எல்லாச் சேனலும் விடாம தொரத்தித் தொரத்திப் பண்ணுற சினிமா விமர்சனத்துக்குத்தான் ஏழாவது இடம். குறைப்பார்வை, நிறைப்பார்வை, வேண்டிய பார்வை, வேண்டாத பார்வைன்னு பல தினுசு இதுல உண்டு. சேனல், அது சார்ந்த கட்சி, அது சார்ந்த ஹீரோ, இதைப் பொருத்துதான் விமர்சனமும், கெüன்ட்டெüன் லிஸ்டும் அமையுங்கிறது டீவி ரிமோட்டுக்குத் கூடத் தெரிஞ்ச உண்மை. அதுலயும் பல படங்களுக்கு முதல்நாளே படம் பார்த்துட்டு வெளியே வர்ற விசிலடிச்சான் ரசிகர்கள்கிட்ட மட்டும் கருத்துக் கேப்பாய்ங்க. "தலீவரு

கலக்கிப்புட்டாருல்ல'ன்னு அவிங்களும் அளப்பானுக. அதை நம்பி தியேட்டருக்குப் போனா

நம்ம தலைவிதி "டார் டார்' ஆயிடும். படத்தைவிட, சில நேரம் டைரக்டரைக் கூட்டியாந்து உட்காரவைச்சு கலாய்ப்பாங்க பாருங்க, அதுதான் சூப்பரா இருக்கும்பா!

ஆறாவது:

ஆறாவது இடத்துல இருக்குற நிகழ்ச்சி என்னன்னு தெரியுமா..வந்த்த்த்தோமாதரம்... தாய் மண்ணே வணக்கம். அந்த டைப் நிகழ்ச்சிங்கதான். ஊர் ஊராப் போய் கல்யாண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து, அரங்கத்தைக் கூட்டிருவாய்ங்க. இதுல கலந்துகிட்டுப் பேசணும்னா ஒரே ஒரு தகுதிதான். கரண்ட் கட் ஆகி மைக் ஆஃப் ஆனாலும் மைக் இருக்குற சவுண்டலயே பேசத் தெரியணும். அதுபோக நாலு திருக்குறள், ரெண்டு பாரதியார் கவிதை, முணு குட்டிக்கதை தெரிஞ்சு வைச்சுக்குறது ப்ளஸ் பாயிண்ட். உங்க வாழ்க்கையில சோகமே இல்லாட்டியும், பெரும் சூறாவளியே கடந்து போன மாதிரி ஒரு கதையை நெசம் போலவே சொல்லத் தெரியணும். ஏன்னா அப்பத்தான் புரோகிராம் நடத்துற பெரியப்பா டர்க்கி டவலால வாயைப் பொத்தி அழறதுக்கான சிச்சுவேஷன் கிடைக்குமுங்கோ!

அஞ்சாவது:

"குப்பாப்பட்டி கிராமம். அன்று காலை. வழக்கம்போல அவசரத்துக்கு வயலுக்கு ஒதுங்கப் போன சிவனாண்டியின் சொம்பைக் காணவில்லை. குத்தம். ஓடியது என்ன?' -இப்படித்தான் ஆரம்பிப்பாய்ங்க. "நம்மகிட்ட நாலு சொம்பு இருக்குங்க. அதுல பொத்தல் விழுந்த அந்தச் சொம்பைத்தான் என் பாட்டன் காலத்துல இருந்து குடும்பத்துல மூத்த புள்ளைக உபயோகிக்கிறோம். "அப்படிம்பாரு சிவனாண்டி. அப்படி பத்து நிமிஷம் சொம்பைச் சுத்தி கதை ஓடும். "சொம்பை அடகு வைச்சு சரக்கு அடிக்கலாமுன்னுதான் திருடுனேன்'னு குத்தம் செஞ்ச புலிப்பாண்டி கொஞ்ச நேரங் கழிச்சு பெருந்தன்மையா ஒத்துக்குவாரு. ஆனா இந்த நிகழ்ச்சியில பின்னால வாய்ஸ் கொடுக்கணும்னா நிரந்தரமா தொண்டை கட்டியிருக்கணும்போல. அப்பத்தான் மிரட்டலா இருக்கும்னு நெனைக்கிறாக. இதுல அப்பப்ப நடிகைங்க வீட்டுல நாய் காணாமப் போன சம்பவம் ஸ்பெஷல் எபிசோடா கூத்தடிக்குமுங்கோ!

நாலாவது:

காமெடி புரோகிராமுன்னு சொல்லி வெளம்பரப்படுத்தி அடிக்கடி ஞாபகப்படுத்துவாங்கோ. சரி சிரிக்கலாம்மேன்னு நாமளும் அந்தப் புரோகிராமை நம்பிப் பார்த்தா, எங்கங்க நாம சிரிக்கணும்னு ஞாபகப்படுத்த, நாலு பேர் சிரிக்கிற சவுண்டையும் அவிங்களே அங்கங்க போட்டுக்குவாய்ங்க. பெத்தவங்களைத் திட்டுறது, மத்தவங்களைத் திட்டுறது, செத்தவங்களைத் திட்டுறது, ஊத்திக்கிறது, உளர்றது இதுதான் காமெடின்னு நெனைச்சிக்கிட்டு இவங்க பண்ணுற லொள்ளு இருக்கே, தாங்க முடியலடா சாமி!

மூணாவது:

மெகா சீரியலுக்கு மூணாவது இடமுங்கோ! எல்லா உறவு முறையையும் தலைப்பா வைச்சு சீரியல் வந்துடுச்சு. இனிமே "பக்கத்து வீட்டுப் பெரியம்மா', "எதிர்த்த வீட்டுச் சித்தி'ன்னுதான் தலைப்பு வைக்கணும். "அப்பா'ன்னு ஒரு சீரியலை நீங்க பத்து வயசுல பார்க்க ஆரம்பிச்சீங்கன்னா, நீங்களே "அப்பா' ஆகுற வரைக்கும் அந்த சீரியல் ஓடும். அதோட நிறுத்துவாங்களா, மாட்டாங்க. மிட்நைட் ஒரு மணிக்கு அதே சீரியலை மறு ஒளிபரப்பு வேறே பண்ணுவாய்ங்க! மார்க்கெட் போன கோலிவுட் அக்கா நடிகைங்க எல்லாம் ஆளுக்கொரு சீரியல்ல "நடமாடும் பெண் தெய்வங்களா' திரிஞ்சுக்கினு இருக்காங்க. நம்மளோட அன்றாடப் பிரச்சினைகளோட அபி, செல்வி, காஞ்சனா, கல்கி, சரசுன்னு பல பேரோட பிரச்சினைகளையும் சுமந்துக்கிட்டு வாழுறோமே நாமெல்லாம் டபுள் கிரேட்!

ரெண்டாவது:

லாங் லாங் அகோ ஆரம்பிச்சுது, "சாங்கை டெடிகேட் பண்ணுற' இந்த டைப் நிகழ்ச்சிசங்க. "உதறிட்டுப் போன காதலிக்கு', "உசிரை விட்டுப் போன பாட்டிக்கு'ன்னு போன் பண்ணி பாட்டுக் கேக்குறதையே பல பேர் முழு நேரத் தொழிலா வைச்சிருக்காங்க. "இந்த ஜென்மத்துல உங்க கிட்ட நான் பேசுவேன்னு நெனைச்சுசேப் பார்க்கல', "உங்க லைனுக்காக பொறந்ததுல இருந்தே ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன். "நீங்க ஐஸ்வர்யா ராய் மாதிரியே இளிக்கீங்க'ன்னு ஸ்டாண்டர்டா சில வசனங்கள் ரீப்பீட் ஆகிட்டே இருக்கும். அதுவும் தொகுப்பாளினிங்க பேசுற டமிலைக் கேக்கறப்போ, அவங்க நாக்கை இழுத்து வைச்சு வசம்பை எடுத்து "நறநற'ன்னு தேய்க்கணும்னு வெறி வரும் நமக்கு. கல்லறைல புதைஞ்சு போனவங்கிட்ட கூட இவங்க பேசுறது ஒரே வசனம்தான். "கீப் டிரையிங்கு. கீப் ஆன் டிரைங்யிங்கு!'

மொதலாவது:

எந்த நிகழ்ச்சியாலயும் அடிச்சுக்கவே முடியாத நெம்பர் ஒன் இடத்துல இருக்குற நிகழ்ச்சி ஒண்ணு, ஒண்ணரை, ஏழரை, எட்டு செய்திகள்தான். ஏழரையைக் கேக்குறவன், எட்டைக் கேட்காம வுட்டா அஜீரணக் கோளாறு வந்துடும். ஆனா ரெண்டையும் கேக்குறவன் அரை லூஸô மாறிடுவாங்குறதும் உண்மை. மீதி சேனல் நியூசைக் கேக்கலாமுன்னு பாத்தா அதுல அப்படியொரு நியூசே வராது. எல்லாத்தையும் தாண்டி நடுநிலைமை செய்திகள் தெரிஞ்சுக்கணும்னா ஒரே வழிதாங்க இருக்கு. டீவியை வீட்டுல நடுவுல வைச்சிருங்க. "மியூட்'ல வைச்சிருங்க. டீவிக்கு பின்னாடி நீங்க உட்கார்ந்துக்கோங்க. செய்தி கேளுங்க. இப்ப எப்படி இருக்கு!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.