Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

200px-Elder.jpg

கால்கள் போகும் திசையில் நடக்கின்றேன்.

கால வெய்யிலில் காய்ந்து விட்ட உடலோடு!

கால்கள் மூன்றாகி நடக்கையில்,

மனம் மட்டும், அங்கும் இங்குமாய்,

மரம் விட்டு மரம் தாவும் குரங்காகின்றது!

காலம் தான் எவ்வளவு குறுகியது!

கிளித்தட்டு மறித்த கோவில் வீதிகளில்,

யாரோ பந்து விளையாடுகின்றார்கள்!

களிப்போடு அவர்கள் எழுப்பும் குரல்கள்,

காதுக்கு இனிமையாய் இருக்கின்றன!

கிட்டப் போய் விளையாட ஆசை வருகின்றது!

அப்பு என்று யாரோ அழைப்பது கேட்கையில்,

ஆசை முளையிலேயே உயிர் விடுகின்றது!

முதுமை என்பது, முந்திய அனுபவங்களின்

இரை மீட்புக் காலம் போலும்!

பழைய அனுபவங்கள் படமாக ஓடுகின்றன!

இழந்து போன சந்தர்ப்பங்கள்,

எக்காளமிட்டுச் சிரிப்பது போல பிரமை!

இமை வெட்டும் நேரத்திற்குள்

வாழ்வு முடிந்து போய் விடுகின்றது!

விளக்கோடு விளையாடும், விட்டில் பூச்சிகள்,

வாழும் காலத்தைக் கணக்கெடுப்பதில்லை !

இளமை இருக்கும் போதே வினாடிகளை,

வீணாக்காது வாழ்ந்து விட வேண்டும்!

வரட்டுக் கவுரவங்களின் பிடியில்,

வாழ்க்கை நசுங்கிப் போய் விடுகின்றது!

இளமையின் முறுக்கு ஏற்றிய துடிப்பில்,

எடுத்தெறிந்தவர்களை நினைக்கின்றேன்,

இனிமையான ஒரு வாழ்வைத் தேடி,

இணையத் துடித்தவர்களை நினைக்கின்றேன்!

உளுத்துப் போன ஒரு சமுதாயத்தின்.

அழுங்குப் பிடியான நம்பிக்கைகளால்,

அழகான வாழ்வுகள் அழிந்து போகின்றன!

இருக்கும் போதே வாழ்வதை விட்டு,

எதிர்காலச் சோதிடம் பார்க்கும் ஏமாளியாய்,

சூனிய வெளியை வெறித்தபடி பார்க்கும்,

வேதனை மட்டும் முதுமையாகின்றது!

இளமையெனும் நதியில் மிதக்கும் படகாகி,

காலமெனும் தரையில் உருண்டோடி,

கடற்கரையில் கடலுடன் சங்கமமாகும்,

நதியொன்றின் நிலையில், மிடுக்கிழந்து.

மெல்லிய ஒரு கீற்றாகி ஓடுகிறது, வாழ்வு!

விடியும் பொழுதுகள், வேதனை தருகின்றன!

வெந்து போன நெருப்புக்குள், தணலாக,

வேதனைகள் உள்ளேயே குமுறுகின்றன!

இளமைக் காலத்தின் வெறித்திமிரில்

உலகம் கூட சிறிதாகத் தெரிந்தது!

தேவைகளை மதிக்கும் உலகத்தில்,

தேவையே இல்லாத ஒரு பொருளாகி,

தவிர்க்க முடியாத, அந்த விடுதலைக்காகத்,,

தயாராவது தான் முதுமை போலும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா, புங்கையூரன் முதுமையை பற்றி அருமையா கவி படைத்துள்ளீர்கள், வாழ்த்துகள், நன்றி பகிர்வுக்கு. ஒவ்வொரு வரியும் மனதை தொட்டு செல்கின்றது. கவிதைக்கு ஏற்ற படம், யார் இது?

புங்கை இவர் உங்கள் உறவினர் என்றால், ஏன் காலில் சலங்கை கட்டியுள்ளார் என அறியத் தரமுடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டப் போய் விளையாட ஆசை வருகின்றது!

அப்பு என்று யாரோ அழைப்பது கேட்கையில்

கட்டினதுகளே கிழடு என்று சொல்லுதுகள்...கி...கி...

உளுத்துப் போன ஒரு சமுதாயத்தின்.

அழுங்குப் பிடியான நம்பிக்கைகளால்,

அழகான வாழ்வுகள் அழிந்து போகின்றன!

இருக்கும் போதே வாழ்வதை விட்டு,

எதிர்காலச் சோதிடம் பார்க்கும் ஏமாளியாய்,

சூனிய வெளியை வெறித்தபடி பார்க்கும்,

வேதனை மட்டும் முதுமையாகின்றது

அழகான வரிகள்...தொடரட்டும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் கவிதை!

முதுமையை மற்றவர்கள் சொல்லித்தான் முதியவர்கள் உணர்கின்றார்கள். காலச்சக்கரம் சுழல்வது தெரியாமல் வாழ்வதும் ஒரு வகையில் நன்மைதான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கவிதை புங்கையூரான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா, புங்கையூரன் முதுமையை பற்றி அருமையா கவி படைத்துள்ளீர்கள், வாழ்த்துகள், நன்றி பகிர்வுக்கு. ஒவ்வொரு வரியும் மனதை தொட்டு செல்கின்றது. கவிதைக்கு ஏற்ற படம், யார் இது?

புங்கை இவர் உங்கள் உறவினர் என்றால், ஏன் காலில் சலங்கை கட்டியுள்ளார் என அறியத் தரமுடியுமா?

பதிவுக்கு நன்றிகள், உடையார்!

இந்தப் படத்தில் இருப்பவர் ஒரு ஓய்வு பெற்ற உடையார்!

வயது போய் விட்டதால், இடுப்புச் சங்கிலிக்குத் தேவை இல்லாமல் போய் விட்டது!

அது தான் காலில் கட்டியிருக்கின்றார் போலும்!!! :lol::icon_idea:

உடையார், இந்தப் படத்தைக் கூகிளில் இருந்து சுட்டேன்!

காக்கை வலிப்பு வாற ஆக்கள், பொதுவாக உலோகத்தால் ஆன ஒரு காப்பை அல்லது சங்கிலியை அணிவது வழக்கம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் புங்கை . இது உங்கள் முதற் படைப்பா?

இல்லை, கறுவல்! உங்கள் கருத்துக்கு நன்றிகளநேரம் கிடைக்கும் போது கிறுக்குவதுண்டு!

உங்கள் 'தோசை சுட்ட முதல் அனுபவம்' மிகவும் அருமை!

எனது வலைப் பூ www.punkayooran.com

ஆரம்ப நிலையில் உள்ளது!

தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்!

கட்டினதுகளே கிழடு என்று சொல்லுதுகள்...கி...கி...

அழகான வரிகள்...தொடரட்டும்..

கருத்துக்களுக்கு நன்றிகள், புத்தன்!

இரண்டு பேருக்குமே, கிறுக்கிற வயசு போல் உள்ளது!

Link to comment
Share on other sites

200px-Elder.jpg

கால்கள் போகும் திசையில் நடக்கின்றேன்.

கால வெய்யிலில் காய்ந்து விட்ட உடலோடு!

கால்கள் மூன்றாகி நடக்கையில்,

இந்த மூணுவரியே ,, போதுமே.......

நீங்களும் உங்க படமும் ,, சொல்லுது... கவிதை!

சில இடங்களில் வசனம்போல போகுதே ,, கவனிச்சுகுங்க , புங்கை அண்ணா!

வாழ்த்தினா மட்டும் தானா ,,, நான் உங்க சகோதரம்?

குறைய சுட்டிகாட்டினாலும்தானே! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் கவிதை!

முதுமையை மற்றவர்கள் சொல்லித்தான் முதியவர்கள் உணர்கின்றார்கள். காலச்சக்கரம் சுழல்வது தெரியாமல் வாழ்வதும் ஒரு வகையில் நன்மைதான்!

கருத்துக்கு நன்றிகள், கிருபன்!

வாழ்வின் இரகசியத்தை நன்றாகப் புரிந்து வைத்திருக்கின்றீர்கள் போல!

நல்லதொரு கவிதை புங்கையூரான்

நன்றிகள், ரதி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மூணுவரியே ,, போதுமே.......

நீங்களும் உங்க படமும் ,, சொல்லுது... கவிதை!

சில இடங்களில் வசனம்போல போகுதே ,, கவனிச்சுகுங்க , புங்கை அண்ணா!

வாழ்த்தினா மட்டும் தானா ,,, நான் உங்க சகோதரம்?

குறைய சுட்டிகாட்டினாலும்தானே! :)

நன்றிகள் ! அறிவிலி!

நீங்கள் என்ன கருத்தை எழுதினாலும், நீங்கள் எனக்கு எப்போதுமே சகோதரம் தான்!

வளரும் குழந்தை, வழுக்கி விழும்போது, தாய் தூக்கி விடுகிறாள்!

அதற்காகக் குழந்தை, மீண்டும் நடக்காமலா போய் விடப் போகின்றது?

இது தானே இயற்கையின் நியதி!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் புங்கையூரான்.............நன்றாக வாழ்வின் நிலை களை அலசி ஆராய்ந்து இருக்கிறீர்கள். பொருத்தமான படம் . மொத்ததிலுங்களிடம் திறமை இருக்கிறது, நேரம் ஒதுக்கி வெளிக் கொண்டு வாருங்கள்.

மேலும் தொடர்க........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்தி பூத்தாற்போல் வரும் உங்கள் ஆக்கங்களுக்கிடையில் துள்ளும் தமிழை பலமுறை மனம் விட்டு இரசித்திருக்கிறேன் புங்கையூரான்...அருமையான எழுத்து வளம் உங்களுக்கிருக்கிறது..தொடர்ச்சியாக எழுதுங்கள்...இந்தக் கவிதை இப்பொழுதே எனக்குள் ஒருவித பயத்தை ஏற்படுத்துகிறது முதுமைக்காலத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறேன் என்று...

Link to comment
Share on other sites

உங்கள் கவிவரிகளின் செழுமையில்

என்னையும் ஒரு நாள் தொட்டுச் செல்லக் காத்திருக்கும்...

முதுமையையும் உணர்ந்தேன் முழுமையாக!

ஆழமாக தொட்டுச் சென்ற வரிகள்

விட்டுச் சென்ற எண்ணங்களில்...

முதியவரை கண்ணியத்தோடு தேடுகின்றது,

கடமையுணர்ந்த கண்கள் ... மனத்தின்

தேவையற்ற கட்டுப்பாடுகளையும் மீறி!

இதைவிட ஒரு எழுத்தின் வன்மைக்கு வேறெதுவும் தேவையில்லை!

நன்றி புங்கையூரன்! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

200px-Elder.jpg

கால்கள் போகும் திசையில் நடக்கின்றேன்.

கால வெய்யிலில் காய்ந்து விட்ட உடலோடு!

கால்கள் மூன்றாகி நடக்கையில்,

மனம் மட்டும், அங்கும் இங்குமாய்,

மரம் விட்டு மரம் தாவும் குரங்காகின்றது!

காலம் தான் எவ்வளவு குறுகியது!

கிளித்தட்டு மறித்த கோவில் வீதிகளில்,

யாரோ பந்து விளையாடுகின்றார்கள்!

களிப்போடு அவர்கள் எழுப்பும் குரல்கள்,

காதுக்கு இனிமையாய் இருக்கின்றன!

கிட்டப் போய் விளையாட ஆசை வருகின்றது!

அப்பு என்று யாரோ அழைப்பது கேட்கையில்,

ஆசை முளையிலேயே உயிர் விடுகின்றது!

முதுமை என்பது, முந்திய அனுபவங்களின்

இரை மீட்புக் காலம் போலும்!

பழைய அனுபவங்கள் படமாக ஓடுகின்றன!

இழந்து போன சந்தர்ப்பங்கள்,

எக்காளமிட்டுச் சிரிப்பது போல பிரமை!

இமை வெட்டும் நேரத்திற்குள்

வாழ்வு முடிந்து போய் விடுகின்றது!

விளக்கோடு விளையாடும், விட்டில் பூச்சிகள்,

வாழும் காலத்தைக் கணக்கெடுப்பதில்லை !

இளமை இருக்கும் போதே வினாடிகளை,

வீணாக்காது வாழ்ந்து விட வேண்டும்!

வரட்டுக் கவுரவங்களின் பிடியில்,

வாழ்க்கை நசுங்கிப் போய் விடுகின்றது!

இளமையின் முறுக்கு ஏற்றிய துடிப்பில்,

எடுத்தெறிந்தவர்களை நினைக்கின்றேன்,

இனிமையான ஒரு வாழ்வைத் தேடி,

இணையத் துடித்தவர்களை நினைக்கின்றேன்!

உளுத்துப் போன ஒரு சமுதாயத்தின்.

அழுங்குப் பிடியான நம்பிக்கைகளால்,

அழகான வாழ்வுகள் அழிந்து போகின்றன!

இருக்கும் போதே வாழ்வதை விட்டு,

எதிர்காலச் சோதிடம் பார்க்கும் ஏமாளியாய்,

சூனிய வெளியை வெறித்தபடி பார்க்கும்,

வேதனை மட்டும் முதுமையாகின்றது!

இளமையெனும் நதியில் மிதக்கும் படகாகி,

காலமெனும் தரையில் உருண்டோடி,

கடற்கரையில் கடலுடன் சங்கமமாகும்,

நதியொன்றின் நிலையில், மிடுக்கிழந்து.

மெல்லிய ஒரு கீற்றாகி ஓடுகிறது, வாழ்வு!

விடியும் பொழுதுகள், வேதனை தருகின்றன!

வெந்து போன நெருப்புக்குள், தணலாக,

வேதனைகள் உள்ளேயே குமுறுகின்றன!

இளமைக் காலத்தின் வெறித்திமிரில்

உலகம் கூட சிறிதாகத் தெரிந்தது!

தேவைகளை மதிக்கும் உலகத்தில்,

தேவையே இல்லாத ஒரு பொருளாகி,

தவிர்க்க முடியாத, அந்த விடுதலைக்காகத்,,

தயாராவது தான் முதுமை போலும்!

முதுமையில் தனித்திருக்கும்போதுதான் இவற்றையெல்லாம் மீளப்பார்த்து பரிசீலனை செய்கிறது மனம்.. இளமையில் தோன்றாத பக்குவமும் பண்பும் முழுமையாக ஆட்கொள்ளும் பொழுதில் தத்துவங்கள் தன்னால் பிறக்கும் அவற்றை உதிர்க்கும்போது கேட்பதற்கு எவரும் அருகிருக்க மாட்டார்கள்

நல்லதொரு கவிதை புங்கையூரான்.

Link to comment
Share on other sites

இளமையின் முறுக்கு ஏற்றிய துடிப்பில்,

எடுத்தெறிந்தவர்களை நினைக்கின்றேன்,

இனிமையான ஒரு வாழ்வைத் தேடி,

இணையத் துடித்தவர்களை நினைக்கின்றேன்!

உளுத்துப் போன ஒரு சமுதாயத்தின்.

அழுங்குப் பிடியான நம்பிக்கைகளால்,

அழகான வாழ்வுகள் அழிந்து போகின்றன!

இருக்கும் போதே வாழ்வதை விட்டு,

எதிர்காலச் சோதிடம் பார்க்கும் ஏமாளியாய்,

சூனிய வெளியை வெறித்தபடி பார்க்கும்,

வேதனை மட்டும் முதுமையாகின்றது....அருமை.. :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் புங்கையூரான்.............நன்றாக வாழ்வின் நிலை களை அலசி ஆராய்ந்து இருக்கிறீர்கள். பொருத்தமான படம் . மொத்ததிலுங்களிடம் திறமை இருக்கிறது, நேரம் ஒதுக்கி வெளிக் கொண்டு வாருங்கள்.

மேலும் தொடர்க........

நன்றிகள், நிலாமதி அக்கா!

உதிக்கும் உணர்வுகளையும்,மனதில் ,

பதிந்து விட்ட அனுபவங்களையும்,

பதிவிட முயல்கின்றேன்!

தாய் மொழியை இழந்துவிட்ட,

தவிப்பு மட்டும்,

தாகமாய் மனதை வரட்டுகின்றது!

தடவிப் பார்க்கும் பதிவுகள் தான் இவை!

நன்றிகள், உங்கள் தளராத ஊக்குவிப்புக்கு!

கவி அழகனின் தளம் பார்த்தேன்!

வளரும் தவலைகளுக்குத் தங்கள் வழிகாட்டலைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்!

Link to comment
Share on other sites

கவிதை நன்றாக இருக்கிறது புங்கையூரன்

இளமை இருக்கும் போதே வினாடிகளை,

வீணாக்காது வாழ்ந்து விட வேண்டும்!

வரட்டுக் கவுரவங்களின் பிடியில்,

வாழ்க்கை நசுங்கிப் போய் விடுகின்றது!

அது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்தி பூத்தாற்போல் வரும் உங்கள் ஆக்கங்களுக்கிடையில் துள்ளும் தமிழை பலமுறை மனம் விட்டு இரசித்திருக்கிறேன் புங்கையூரான்...அருமையான எழுத்து வளம் உங்களுக்கிருக்கிறது..தொடர்ச்சியாக எழுதுங்கள்...இந்தக் கவிதை இப்பொழுதே எனக்குள் ஒருவித பயத்தை ஏற்படுத்துகிறது முதுமைக்காலத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறேன் என்று...

நன்றிகள், சுபேஸ்!

குருத்தோலைகள் அழுவதில்லை,

காவோலைகளாகிக் காய்ந்து போனாலும்,

கலகலப்புக் குறைவதில்லை! :D

உங்கள் கவிவரிகளின் செழுமையில்

என்னையும் ஒரு நாள் தொட்டுச் செல்லக் காத்திருக்கும்...

முதுமையையும் உணர்ந்தேன் முழுமையாக!

ஆழமாக தொட்டுச் சென்ற வரிகள்

விட்டுச் சென்ற எண்ணங்களில்...

முதியவரை கண்ணியத்தோடு தேடுகின்றது,

கடமையுணர்ந்த கண்கள் ... மனத்தின்

தேவையற்ற கட்டுப்பாடுகளையும் மீறி!

இதைவிட ஒரு எழுத்தின் வன்மைக்கு வேறெதுவும் தேவையில்லை!

நன்றி புங்கையூரன்! :)

கவிதை!

நீங்களே ஒரு கவிதை!

கிட்டு அண்ணாவின் தளம் பார்த்தேன்!

உங்கள் கவிதையின் அழகைக் கண்டேன்!

நன்றிகளுடன் வாழ்த்துக்கள், உங்களுக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதுமையில் தனித்திருக்கும்போதுதான் இவற்றையெல்லாம் மீளப்பார்த்து பரிசீலனை செய்கிறது மனம்.. இளமையில் தோன்றாத பக்குவமும் பண்பும் முழுமையாக ஆட்கொள்ளும் பொழுதில் தத்துவங்கள் தன்னால் பிறக்கும் அவற்றை உதிர்க்கும்போது கேட்பதற்கு எவரும் அருகிருக்க மாட்டார்கள்

நல்லதொரு கவிதை புங்கையூரான்.

நன்றிகள், சகோதரி!

உங்கள் ஏக்கங்களைத் திண்ணையில் பார்த்தேன்!

உங்களைப் போன்றே, புதுவையை மானசீகமாக மனத்தில் வரித்திருந்தவர்களில் நானும் ஒருவன்!

அவரைப் பற்றிய செய்திகள் எல்லாமே பொய்யாக இருக்கும் என்ற நினைவில் வாழ்ந்திருந்தவன்!

ஆனால் ஜெயபாலன் சொன்ன போது, அங்கே மறு கருத்துக்கு இடமில்லை!

உங்கள் துயரைப் புரிந்து கொண்டேன்!

ஒரே ஒரு ஆறுதல் மட்டும்!

போகும் போதும் அவர் புதுவையாகவே போனார்!

உயிர் வாழ வைக்கும் மருந்துக்காக, வரித்து விட்ட வரித்து விட்ட கொள்கையில் இருந்து கடைசி வரை விலகவேயில்லை!

அது தான் புதுவை!!!

post-8395-0-48635900-1320618106_thumb.gi

Link to comment
Share on other sites

இளமை என்பது யாரை கும்பிட்டாலும்திரும்ப கிடைக்காத அனுபவம் ,முதுமையில் தான் அதன் அருமை விளங்கும் .

கவிதைக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளமையின் முறுக்கு ஏற்றிய துடிப்பில்,

எடுத்தெறிந்தவர்களை நினைக்கின்றேன்,

இனிமையான ஒரு வாழ்வைத் தேடி,

இணையத் துடித்தவர்களை நினைக்கின்றேன்!

உளுத்துப் போன ஒரு சமுதாயத்தின்.

அழுங்குப் பிடியான நம்பிக்கைகளால்,

அழகான வாழ்வுகள் அழிந்து போகின்றன!

இருக்கும் போதே வாழ்வதை விட்டு,

எதிர்காலச் சோதிடம் பார்க்கும் ஏமாளியாய்,

சூனிய வெளியை வெறித்தபடி பார்க்கும்,

வேதனை மட்டும் முதுமையாகின்றது....அருமை.. :)

கருத்துக்கு நன்றிகள், வீணா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்றாக இருக்கிறது புங்கையூரன்

அது

நன்றிகள், தப்பிலி!

இளமை என்பது யாரை கும்பிட்டாலும்திரும்ப கிடைக்காத அனுபவம் ,முதுமையில் தான் அதன் அருமை விளங்கும் .

கவிதைக்கு நன்றி

உண்மை தான், அர்ஜுன்!

கும்பிட்டு இளமை திரும்புமெனில், கோவில்களிலேயே எம்மவர்கள் குடியிருப்பார்!

நன்றிகள், உங்கள் கருத்துக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி புங்கையூரான்.

முதுமை என்பதை முழுமையாகக் கவிதையாக்கியதற்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி புங்கையூரான்.

முதுமை என்பதை முழுமையாகக் கவிதையாக்கியதற்கு

கருத்துக்கு நன்றிகள், வாத்தியார்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாசிபருப்பில் ஒரு இனிப்பான அல்வா .........!  👍
    • நீ வா என்றது உருவம்  நீ போ என்றது நானம் ........!  😍
    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.