Jump to content

இப்படியும் நடக்கிறது.


Recommended Posts

ஜேர்மனியிலே தமிழனுக்கு தமிழனால் நடந்த ஒரு அவலம் உண்மைச்சம்பவம்.

ஜேர்மனியிலே குறிப்பிட்ட ஒரு நகரத்திலே ****** என்ற ஈழத்தமிழன் பல வருடங்களாக வசித்து வருகிறார். அவர் ஜேர்மனியிலே வசித்துவரும் தமிழ் ஈழத்து மக்களுக்கு இதுவரை காலமும் பல வழிகளிலே உதவிகள் செய்து வந்துள்ளார். இவரிடம் ஜேர்மனியில் ஒரு உணவகம் வைத்திருக்கும் ஈழத்தமிழர் ஒருவர் பண உதவியும் பெற்றுள்ளார். பின்னர் இவர் அவரிடம் தனது பணத்தை திருப்பி கேட்ட போது. தான் பட்ட கடனை கழித்துக்கொண்டு மிகுதிப் பணத்தை தந்துவிட்டு தனது உணவகத்தை இவர் பொறுப்பேர்க்கச் சொல்லியிருக்கிறார். இவரும் தான் கொடுத்த கடனை கழித்துக்கொண்டு மிகுதிப்பணத்தை உணவக உரிமையாளரான கடனாளியிடம் கொடுத்துவிட்டு உணவகத்தை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இங்கு புலம் பெயர்ந்த நாடுகளில் தொழில்களோ எதுவோ பெரும்பாலும் உடன் பாடுகளின் (எக்றிமென்ட்) அடிப்படையிலே தான் ஆரம்பிக்க முடியும் அது உங்களுக்கு தெரிந்ததே. இவரும் கடனாளியும் உடன்பாட்டு அடிப்படையிலே கடையினை பெயர் மாற்றம் செய்யவேண்டும் அதற்கு கடனாளி மிகப்பெரிய நாடகம் ஆடினார்.

கடன் கொடுத்தவர் சிறிது மதுப்பழக்கம் உடையவர் அவர் மது போதையில் இருக்கும் நேரம் பார்த்து உடன் பாட்டை செய்யும் நோக்கோடு மது பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்து அந்த பார்ட்டியிலே இவருக்கு அவருக்கும் உடன் பாடு பரிமாறப்பட்டதாம். அந்த உடன் பாட்டிலே கடனாளி முன்னர் கடை சம்பந்தமாக பெற்ற கடன்களுக்கு இவரே பொறுப்பு என குறிப்பிடப்பட்டிருந்தது. இவரும் மது போதையில் நண்பன் தானே என நினைத்து உடன் பாட்டை முழுமையாக வாசிக்காது கையொப்பம் இட்டு விட்டார்.

இன்று நிலமை விபரீதம் ஆகிவிட்டது முன்னர் இருந்த கடை உரிமையாளருக்கு ஒரு இலட்சத்து முப்பது ஆயிரம் யூரோக்கள் (130,000) கடன் இப்பொழுதோ இந்த பாரிய தொகை இவரின் தலையிலே விழுந்துள்ளது. இந்த கடனை கட்ட முடியாமல் இவர் கடையைப் பூட்டி விட்டார். இதுவரை சேர்த்துவைத்த பணமும் போய் இப்பொழுதோ 130,000 ஆயிரம் யூரோக்களுக்கு கடனாளியாகிவிட்டார்.

கவனம் உடன் பிறப்பு என நினைத்து ஏமாராதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதுக்கு தான் சொல்லுறது எதையும் சட்டப்படி செய்யவேண்டும் என்டு. சட்டத்தரணி ஊடாக இந்த கடை மாற்றத்தினை செய்திருந்தால் உப்புடியெல்லாம் நடந்திருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி கூடி இருந்து குழி பறிப்பவர்களை ஆள் வைத்து மறைமுகமாகத்தான் தாக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

[

அந்த உடன் பாட்டிலே கடனாளி முன்னர் கடை சம்பந்தமாக பெற்ற கடன்களுக்கு இவரே பொறுப்பு என குறிப்பிடப்பட்டிருந்தது. இவரும் மது போதையில் நண்பன் தானே என நினைத்து உடன் பாட்டை முழுமையாக வாசிக்காது கையொப்பம் இட்டு விட்டார்.

தகவலிற்கு நன்றி ஊமை.

எந்தவொரு ஒப்பந்தத்தினையும் போடும் போதும் அதனை வாசிக்கவேண்டியது அவசியம். அது ஒப்பந்நத்தில் கையெழுத்திடுபவரின் உரிமையும் கூடவே. அது ஒரு வங்கி ஒப்பந்தமாக இருப்பினும் அல்லது அரச அலுவலகங்களில் பெறப்படும் கையெழுத்துக்களாக இருப்பினும் அனைத்தையும் வாசிக்க வேண்டும். எம் மக்களிடம் அப்பழக்கம் குறைவாக இருப்பதனைக் காணக்கூடியதாக உள்ளது. இதனை அவர்கள் உணர்ந்து திருந்த வேண்டும்.

Link to comment
Share on other sites

இப்படி கூடி இருந்து குழி பறிப்பவர்களை ஆள் வைத்து மறைமுகமாகத்தான் தாக்க வேண்டும்.

துரோகம் என்பது எங்களுடன் ஒன்றி போன ஒன்றாகி விட்டது போல :cry:

Link to comment
Share on other sites

இங்கு சுவிசில் பலர் ஆயுள் காப்புறுதி வைத்தியக் காப்புறுதி ஏஜண்டாக இருந்து எம்மவரை ஏமாற்றியே பிழைப்பு நடாத்துகின்றார்கள். இதற்கு முக்கிய காரணம் நம்மவர் பலரின் அறியாமை அத்துடன் குறிகிய வழியில் நிறையப் பணம் சம்பாதிக்கலாம் என்ற பணத்தாசை. ஆனால் எவரும் எப்படி இப்படி குறுகிய காலத்தில் கூடுதலான பணம் வருவது சாத்தியமா என்று சிந்தித்துப் பார்ப்பதுமில்லை. பலர் ஒப்பந்தப் பத்திரத்தை சரியாக வாசித்துப் புரிந்து கொள்ளாமலே கையெழுத்துப் போடுகின்றார்கள். பின்பு பிரைச்சினைகள் வந்த பின்தான் கவலைப் படுகின்றார்கள். அத்துடன் கூடுதலான ஒப்பத்தங்கள் 5 அல்லது 8 அல்லது 10 வருடங்கள் கொண்ட ஒப்பந்தங்களாகவே இருக்கின்றன. அதனால் உடனடியாக இவ்வொப்பந்தங்களிலிருந்து மீளவும் முடியாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.