Jump to content

புலிகளை அழித்த சரத் பொன்சேகாவை கூட்டமைப்பு ஏன் ஆதரித்தது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை அழித்த சரத் பொன்சேகாவை கூட்டமைப்பு ஏன் ஆதரித்தது?

tna18-08-2011-150x150.jpg

சரத்பொன்சேகாவுக்கும் சம்பந்தனுக்கும் இரகசிய ஒப்பந்தம் ஒன்று இருந்ததாக விக்கிலீக்ஸ் புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்ட சரத் பொன்சேகா, ‘தமிழ் மக்களுக்கு அனைத்தையும் கொடுப்பதற்கு சரத்பொன்சேகா இணங்கிவிட்டார். அதற்கான உடன் படிக்கையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் கைச்சாத்திட்டும் விட்டார்” என்பது ஆளும் கட்சியின் தேர்தல் பிரசாரமாக இருந்தது. இதனை எதிர்க்கட்சிகள் மறுத்து வந்த போதிலும், ‘விக்கிலீக்ஸ்” தற்போது வெளியிட்டுள்ள இரகசியத் தகவல்கள் இது உண்மை என்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றது.

2010 ஆம் ஆண்டு ஜனவரியில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் உச்சக் கட்டத்தில் ‘பொன்சேகா சம்பந்தன் இரகசிய உடன்படிக்கை” என்ற பிரச்சாரமே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியி ருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

தேர்தல் கள நிலைமையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் இது அமைந்திருந்தது. இது அரசாங்கத்திற்கு சார்பான பிரச்சாரமாக அமைந்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்குத் தலைமை தாங்கியவர் என்ற முறையில் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிப்பதா? என்ற கேள்விதான் தமிழர்கள் மத்தியில் முதலில் எழுந்திருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இது தொடர்பில் தீர்மானம் எடுப்பதில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டது.

இருந்த போதிலும் இறுதிக்கட்டத்தில் பொன்சேகாவை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை எடுப்பதற்கு இந்த உடன்படிக்கையும் காரணமாக இருந்துள்ளது.

பொன்சேகா கையொப்பமிட்ட இந்த உடன்படிக்கையின் பிரதி ஒன்று சம்பந்தனால் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு அப்போது வழங்கப்பட்டது.

சரத் பொன்சேகாவுடன் தான் பேச்சுக்களை நடத்தியிருப்பது தொடர்பாக சம்பந்தன் அப்போது பொதுக்கூட்டங்களில் தெரிவித்த போதிலும், சரத் பொன்சேகா கைச்சாத்திட்ட உடன்படிக்கை ஒன்று தன்னிடம் தரப்பட்டிருப்பதாக பகிரங்கமாகத் தெரிவிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

சம்பந்தனுடன் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் நடத்திய சந்திப்பு, 2010 ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவை ஆதரிப்பதென சம்பந்தன் அறிவித்த பின்னர் ஏற்பட்டிருந்த அரசியல் கள நிலைமைகள் தொடர்பாக அமெரிக்க தூதரகம் வோஷிங்டனிலுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பிவைத்த இரகசிய கேபிள் தகவலை விக்கிலீக்ஸ் இப்போது அம்பலமாக்கியுள்ளது.

அதிகளவில் அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்வதற்கும் அதற்குத் தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களைச் செய்வதற்கும் சரத் பொன்சேகா இந்த உடன்படிக்கையின் மூலமாக இணக்கம் தெரிவித்திருந்தார்.

இந்த உடன்படிக்கையில் எதிரணிகளின் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்ட சரத் பொன்சேகாவும், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் கைச்சாத்திட்டிருந்தார்கள்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் பேகர் இன மக்களினால் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் நியாயமான அதிகாரப்பரவலாக்கலை வழங்குவதற்கு இந்த உடன்படிக்கையில் உறுதியளிக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கும் பொன்சேகாவுக்கும் இடையில் சிங்கள வாக்குகள் பிளவுபட்டிருக்கும் நிலையில் தமிழர்களுடைய ஆதரவு மிகவும் பெறுமதியுடையதாக இருக்கும் என்ற தனது கருத்தையும் அமெரிக்க தூதுவர் முன்வைத்திருக்கின்றார்.

இவ்வாறான ஒரு தீர்மானத்தை எடுக்கவேண்டியிருந் தமையையிட்டு தான் கவலையடை வதாகவும் அமெரிக்கத் தூதுவரிடம் தெரிவித்த சம்பந்தன், இருந்தபோதிலும் இடம்பெயர்ந்த மக்களை விடுவித்ததைத் தவிர வேறு எதனையும் ராஜபக்ஷ செய்யவில்லை எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

http://www.tamilthai.com/?p=29530

Link to comment
Share on other sites

எதிருக்கு எதிரி நண்பன் என்பது நீண்டகால அரசியல் தத்துவம். அந்தவகையில் சம்பந்தர் செய்தது சரியே.

Link to comment
Share on other sites

முதல் எதிரியின் எதிரியோடு மோதுவதற்க்காக முதல் எதிரியோடு கூட்டுச் சேர்ந்ததுபோன்ற தப்பான நிகழ்வுகள் பல எங்கள் வரலாற்றில் உண்டு. இந்த இராஜதந்திர வரலாற்றுத் தவறுக்கு எல்லா பிரதான இயக்கங்களும் பலியாகி இருக்கின்றன. கூட்டமைப்பு பொன்சேகா தேர்தல் உடன்பாடு இத்தகைய தவறல்ல.

ஒரு இனக்கொலைக்கும் படுதோல்விக்கும் முகம்கொடுத்து எல்லாம் அழிந்த கையறு நிலையில், போராட்டம் தோல்வியில் முடிந்திருந்த நிலையில் இந்தக் கூட்டு அமைந்தது. எதிரிக்கு எதிரான இந்தக்கூட்டில் கிடைத்த ராஜதந்திர நன்மைகள் பல. மகிந்தவை வடகிழக்கு மாகாணத்தில் தோற்க்கடித்ததன் மூலம் தமிழர்கள் வடக்கு கிழக்கென பிழவுபடவில்லை. மகிந்த அரசிடம் சரணாகதி அடையாமல் கூட்டமைப்பின் கொள்கைகளோடு ஓரணியாக நிற்க்கிறார்கள். என்பதை உலகிற்க்கு உணர்த்த முடிந்தது. மேலும் ஒரு இனக்கொலை சூழலில் அரசுக்கு எதிராக நிலைபாடு எடுக்க அவசியமான அரசியல் வெளியையும் இப்படித்தான் உருவாக்க முடிந்தது. அதன் பின்னர்த்தான் புலம் பெயர்ந்த தமிழர்களது நடவடிக்கைகளுக்கு சர்ர்வதேசரீதியான இராசதந்திர அர்த்தம் கிடைத்தது. இதனால்தான் புலம் பெயர்ந்ததமிழர்களது போராட்டத்திற்க்கு பயன் கிடைக்க ஆரம்பித்தது. புலம் பெயர்ந்த தமிழர் போராட்டங்கள் கழத்தில் உருவான அரசியல் வெளியை மேலும் அகலப் படுத்தியது. திருகோணமலையில் சம்பந்தர் தோற்று திருகோணமலை தமிழர்கையைவிட்டு முழுமையாகப் போயிருந்தால் எல்லா இராஜ தந்திர முயற்ச்சிகளுக்கும் பேரிடியாக அமைந்திருக்கும் எனினும் அதிஸ்ட்டவசமாக திருமலையில் எதிரியின் கனவு பலிக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை விக்கி லீக் வெளியிட்டதாலேயே "ரகசிய உடன்படிக்கை என்று அழைக்கிறார்களா? சம்பந்தர் இரண்டு தரப்புகளுடனும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தது ரகசியம் அல்ல. இறுதியில் பொன்ஸை ஆதரிக்குமாறு தமிழர்களைக் கேட்டுக் கொண்டதும் ரகசியம் அல்ல. ஒரு உடன் படிக்கை (அதிலயும் சம்பந்தர் கையெழுத்திட இல்லையாம் என்று நேற்றைய செய்தியில் இருந்தது!) செய்து கொண்ட பிறகு தான் தமிழர்களிடம் பொன்ஸுக்கு வாக்குக் கேட்டார் என்று அப்பவே இந்தத் தமிழ் ஊடகங்களுக்கு விளங்காமல் போனது ஏன்? வாழைப்பழத்தை உரிச்சு வாய்க்குள் வைத்தால் மட்டுமே "சட்டென்று" புரிந்து கொள்கிற கற்பூரக் கணக்கில் தான் எங்கட "வெட்டி ஒட்டும்" தமிழ் இணைய செய்தியாளர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இன்னொரு சான்று இந்த "ரகசிய உடன்படிக்கை" செய்தி!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.