Jump to content

ரெண்டாந்தாரமாயெண்டாலும் பறவாயில்லை ஆனால் ஒரு கலியாணம்


Recommended Posts

ரெண்டாந்தாரமாயெண்டாலும் பறவாயில்லை ஆனால் ஒரு கலியாணம்

அன்புள்ள அக்கா, **** அக்காவை அறிஞ்சிருப்பியள். அவாவும் ஒரு எழுத்தாளர். மகளீர் அமைப்பு வெளியிட்ட வெளியீடுகள் ஈழநாதம் புலிகளின் குரலில எல்லாம் அவாடை எழுத்துகள் வந்திருக்கு. தடுப்பிலயிருந்து இப்ப விடுதலையாகி வந்திருக்கிறா. குடும்பம் சரியான கஸ்ரம். பாவம் மேலும் 2தங்கச்சியவை இருக்குதுகள். இவாக்கு 37வயதாகீட்டுது. வெளிநாட்டு மாப்பிளைமார் ஆருக்கேன் கலியாணம் பேசி அவவுக்கு ஒரு வாழ்க்கையை அமைச்சுக் குடுக்க வேணும். ஏதாவது ஒரு வழி செய்யுங்கோக்கா.

அன்புடன்

****

இதென்னடா அநியாயம் விழுந்தது….? நானென்ன கலியாணப் புறோக்கரெண்டு நினைச்சிட்டாங்களோ ? மனிசில சின்னக் கோவமும் வந்தது.

இந்த நாலுவரிக்கடிதத்தை எழுதினவனும் ஒரு காலத்தில ஒரு போராளி. பிறகு எழுத்தாளன். இப்பவும் எழுத்தாளன் தான். ஆனால் எழுதிற எழுத்துக்கெல்லாம் வேண்டுறது திட்டுத்தான். எல்லாரும் திட்டத்திட்ட எழுதிக் கொண்டு தன்னோடை வாழ்ந்த தனக்குத் தெரிஞ்ச முன்னாள் போராளியளுக்கு தன்னாலை முடிஞ்ச உதவியளைச் செய்து கொண்டுதானிருக்கிறான்.

வெளிநாடுகளில தனக்குத் தெரிஞ்சவையளிட்டை கேட்டு உதவிகளை ஒழுங்கு செய்து குடுக்கிறான். இடைக்கிடை இப்படியான கலியாணத்தரகர் வேலையும் (இலவசதரகர்) செய்யிறான்.

அவன் தந்த அந்த நாலுவரி விளக்கத்திற்கு பிறகு மேலும் பெரிய பந்திக்கடிதப் பரிமாற்றம் ஈமெயிலில் நடத்தி அந்தப் பெண்போராளியின்ரை படம் சாதகம் எல்லாம் வந்து சேர்ந்தது ஈமெயில. அந்தப்படம் வந்தாப்பிறகு சரியான கவலையாயிருந்திச்சு.

ஒருகாலம் அவள் தனது சொந்தமென்ற எல்லாத்தையும் நாட்டுக்கெண்டு குடுத்து கிட்டத்தட்ட 20வருசம் போராளியா இருந்தவள். அப்பவே எங்கினையும் ஒரு கலியாணத்தை கட்டி தானும் வெளிநாடு குடும்பம் குழந்தையள் நோகாத அரசியலெண்டு கதைச்சு எழுதிக் கொண்டு இருந்திருக்கலாம். ஆனால் அதையெல்லாத்தையும் விட்டிட்டு இலட்சியமும் கொள்கையும் சுமந்து மே 17 , 2009 வரையும் கொள்கைக்காகவே வாழ்ந்து கடைசியில குப்பி கடிக்கவும் மனமில்லாமல் சரணடைஞ்சாள்.

சரணடைஞ்சு அனுபவிச்ச நரகங்களையும் துயரங்களையும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் கூட கோடிமுறை அழுதிருப்பாள். ஆனால் அதையும் தாண்டி விடுதலையாகி வெளியல வந்தாப்பிறகுதான் அவளுக்கு தான் தனிச்சுப்போனாளெண்டு உணர்வு உறைச்சது.

பெண்போராளிகள் பற்றி உலகத் தமிழினம் கட்டி வைச்சிருந்த கோட்டையில இசைபாடிக்கொண்டிருந்த பெண்போராளிகளின் வாழ்க்கை ஒரு நேரச்சோற்றுக்கே இறைஞ்சுகிற நிலமையில இருக்கிற துயரத்தை அவளும் அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறாள். இப்ப அவளுக்கு அம்மா அப்பா தங்கைச்சிமாரின் கண்ணீரும் வலியும் வலிக்கத் தொடங்கியிருக்கிறது.

போற்றிப்பாடப்பட்ட பெண்போராளிகள் ஒவ்வொருவரும் படுகிற அவலங்களையெல்லாம் சோற்றோடும் சுதந்திரத்தோடு முடிச்சுப் போட்டு கவுரவச்சாவு சாக நிர்ப்பந்திக்கிற அனைவர் மீதும் அவளுக்கு கோபமாய் வந்தது.

அவளைச் சமாதான காலத்தில் சந்தித்த எத்தனையோ புலம்பெயர் கவுரவர்கள் எவரும் தன்னையோ தன்போன்றவர்களை ஏனெண்டும் திரும்பிப்பாக்காமல் விட்டிருப்பது பற்றிச் சரியான கடுப்பு. அதுக்குப்பிறகுதான் முடிவெடுத்தாள் தானும் திருமணம் செய்து கொள்ளுவமெண்டு. இனவிடுதலைக்காக தன்னையே 20வருடங்கள் இரைகொடுத்தவள் இனிமேல் தனக்கும் ஒருதுணை வேணுமெண்டு முடிவெடுத்திருக்கிறாள். தனது விருப்பத்தை அவளுக்கு மாப்பிளை தேடுகிற தனது போராளி நண்பனிடம் தெரிவித்திருக்கிறாள். அவனும் இப்போ அவளுக்காக புறோக்கராகி……..! என்னையும் புறோக்கராக்கி……!

அவன் தந்த அவளது விபரங்களை பரிசிலிருக்கிற ஒரு இலவச புறோக்கரிடம் ஈமெயிலில அனுப்பி 3வாரத்தில் அந்த புறோக்கர் தொடர்பு கொண்டார்.

தங்கைச்சி நீங்கள் தந்த பிள்ளையின்ரை குறிப்புக்கு நல்லதொரு பொருத்தமான பொடியன் கிடைச்சிருக்கிறான். பொடியனுக்கு படமும் பிடிச்சிருக்கு. மேற்கொண்டு விசயங்களை கதைக்க வேணும் என்றார்.

அவளுக்கு வெள்ளி திசையடிச்சுவிட்டது போலத்தானிருந்தது. இலவச புறோக்கர் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையில் அணுகுண்டைப் போட்டார்.

பொடியன் ஏற்கனவே கலியாணம் முடிச்சு 4பிள்ளையள். ஆனா டிவோஸ். வயது 48. ஆனால் வயது தெரியாத தோற்றம். கொஞ்சம் தண்ணிச்சாமி. மற்றது தெரியும்தான இயக்கத்தில இருந்த பெட்டையளெண்டா கனக்க கேள்வியள் கேப்பினம். ஆனால் இவன் அப்பிடியெல்லாம் கேக்கேல்ல. மற்றது பொடியன் வேதம். அதுமட்டும் தான் குறை. ஆனால் பிள்ளை மதம்மாறாமல் கலியாணம் கட்ட அவை தடையில்லையாம்.

அண்ணை அவளைவிட 11வயது ஆளுக்குகூடிப்போச்சு உது சரிவராது நீங்கள் வேறையாரும் சரிவந்தா சொல்லுங்கோ….இந்தப்பதிலை அவர் எதிர்பார்க்கேல்ல போல…..திருப்பிச் சொன்னார்…..தங்கைச்சி வயதென்ன பெரிய பிரச்சனை மனம்தானே முக்கியம்.

வயது போகட்டும் ஏற்கனவே மணமுறிவு மாப்பிளை தண்ணிச்சாமிதான் இடியெண்டதை அம்மாளறிய நான் சொல்லேல்ல. அவர் அந்த மாப்பிளை பற்றி அதிகமாக பில்டப் போட்டுக் கொண்டு போனார். உது சரிவராதண்ணை விடுங்கோ. அவை வேதக்காறரெண்டா சம்மதிக்காயினம்…..கடைசிக் கடத்தலாக மதத்தை காரணம் சொல்லி அவரைத் துண்டித்துக் கொள்கிறேன்.

4கிழமை முடிஞ்ச பிறகு அவளது போராளி நண்பன் முகப்புத்தகத்தில் வந்திருந்தான்.

அக்கா **** விசயம் ஏதும் சரிவந்ததோ ?

தம்பி ஒண்டும் சரிவரேல்ல. ஆனா ஒண்டு வந்தது. ஏற்கனவே கலியாணம் கட்டி பிரிஞ்சிருக்கிறார். வயது11 கூட.

ரெண்டாந்தாரமெண்டாலும் பறவாயில்லையக்கா பாருங்கோ. அவள் எதெண்டாலும் வாழ ஒரு வழி கிடைச்சாப் போதுமெண்ட நிலமையில இருக்கிறாள். வயது வித்தியாசம் , ரண்டாந்தாரம் பெரிய பிரச்சனையில்லையெண்டு நினைக்கிறேன்…..என்றான் அவன்.

அவனுக்கு பதில் எழுதாமல் முகப்புத்தகத்தை விட்டு வெளியேறினேன். எனக்கு உச்சந்தலையில உளியாலை குத்தினமாதிரியிருந்திச்சு. பெண்விடுதலை பெண்களின் மாற்றம் புரட்சியென்று எழுதியவள். களங்களில் கனவுகளோடும் இலட்சியத்தோடும் கனரகத்துப்பாக்கியோடும் திரிந்தவள். இன்று ரண்டாந்தாரமும் பறவாயில்லையென்ற நிலமைக்கு எப்படி வந்தாள்……..?

இதைவிடவும் இவையள் தங்களை முன்னாள் போராளியளெண்டு சொல்லாமலிருக்கலாம்….யாருக்கோ விலபோட்டா….அத்தியடிக் குத்தியரின்ரை ஆளாயிருக்கலாம்…..அல்லது அரச புலனாய்வா இருக்கலாம்…..உவையெல்லாம் பெண்போராளியள்…சீ….தூ….

அவள் பற்றிய கதையைச் சொல்ல நினைக்கிற என்னை நோக்கி….,

புலம்பெயர் தாயக விரும்பிகள் விடுலையுணர்வாளர்கள் புலத்திலிருந்து களம்காணும் புலப்போராளிகள் யாவரும் என் மூஞ்சியில் துப்பிக் கொண்டிருப்பது போல கனவு காணத்தொடங்குகிறேன்.

01.11.2011

000 000 000

Link to comment
Share on other sites

  • Replies 80
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பல பெண்கள் முதல் தார திருமணமே பத்து வயது வித்தியாசத்தில் செய்து இருக்கிறார்கள்.கொஞ்சப் பேர் கஸ்டப்படுகிறார்கள்,கொஞ்சப் பேர் நன்றாக இருக்கிறார்கள் ஆனால் அவர் குடிகாரன் அத்தோடு நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பது தான் உதைக்குது...எது,எப்படியோ அந்தப் பெண்ணுக்கு சீக்கிரம் மணமாகி,சந்தோசமாக வாழ என வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

இரண்டாம் தாரமோ மூன்றாம் தாரமோ, பாதுகாப்பிற்கு ஒரு ஆண் துணை வேண்டும் என்ற கேவலமான நிலையிலேயே அவர்கள் இருக்கிறார்கள். காரணம் ஏனென்று தெரியும்.

எனக்குத் தெரிந்த ஒருத்தர் திருமண முறிவின் பின் தனது பழைய மனைவியிடம் சவால் விட்டு, சிறிலங்கா சென்று ஒரு ஒரு முன்னாள் போராளியை பதிவுத் திருமணம் செய்து விட்டு வந்தார். பலகாலமாகியும் இன்னும் அந்தப் பெண்ணை இங்கு கூப்பிடவில்லை. வழமை போல மப்பும் மந்தாரமுமாக அவர் வாழ்க்கை செல்கிறது.

ரெண்டாந்தாரமாயெண்டாலும் பறவாயில்லை ஆனால் ஒரு கலியாணம்

புலம்பெயர் தாயக விரும்பிகள் விடுலையுணர்வாளர்கள் புலத்திலிருந்து களம்காணும் புலப்போராளிகள் யாவரும் என் மூஞ்சியில் துப்பிக் கொண்டிருப்பது போல கனவு காணத்தொடங்குகிறேன்.

சாந்தி வந்தால் ஒரே டமாஸ்தான். :D

புலம்பெயர் விடுதலை வீரர்களையும் பெண்ணியவாதிகளையும் சும்மா விடுங்கோவன்.

பகல் கனவு, விடுதலையின் பெயரால் சேர்த்து வைத்துள்ள பணத்திற்கு நல்லது.

Link to comment
Share on other sites

இரண்டாம் தாரமோ மூன்றாம் தாரமோ, பாதுகாப்பிற்கு ஒரு ஆண் துணை வேண்டும் என்ற கேவலமான நிலையிலேயே அவர்கள் இருக்கிறார்கள். காரணம் ஏனென்று தெரியும்.

மாற்றங்களையும் மறுமலர்ச்சியையும் விரும்பியவர்கள் தோற்றுப்போய் திரும்பிப் பார்க்கிற நேரம் மாற்றங்களை வழிமொழிந்து வரவேற்றவர்கள் யாரையும் காணாத துயரம் அவர்களை இந்த நிலமைக்கு இட்டுள்ளதாகவே நினைக்கிறேன்.

எனக்குத் தெரிந்த ஒருத்தர் திருமண முறிவின் பின் தனது பழைய மனைவியிடம் சவால் விட்டு, சிறிலங்கா சென்று ஒரு ஒரு முன்னாள் போராளியை பதிவுத் திருமணம் செய்து விட்டு வந்தார். பலகாலமாகியும் இன்னும் அந்தப் பெண்ணை இங்கு கூப்பிடவில்லை. வழமை போல மப்பும் மந்தாரமுமாக அவர் வாழ்க்கை செல்கிறது.

கூப்பிடாமல் விட்ட அந்த நபர்கூட பறவாயில்லை. கூப்பிட்டு வைத்துக் கொண்டு செய்கிற அக்கிரமங்கள் நிறையவே நடந்திருக்கிறது.

களத்தில் நின்றபோது குட்டையாய் வெட்டப்பட்ட தலைமுடியோடு வெளிநாடு வந்து யாரைப்பார்க்க இந்தக் குட்டை முடியென்றும் , வெளியில் போய் வந்தால் உடற்பரிசோதனை செய்கிற சிலரையும் இந்த 2ம் 3ம் தார மணங்கள் மூலம் அறிந்திருக்கிறேன்.

சாந்தி வந்தால் ஒரே டமாஸ்தான். :D

புலம்பெயர் விடுதலை வீரர்களையும் பெண்ணியவாதிகளையும் சும்மா விடுங்கோவன்.

பகல் கனவு, விடுதலையின் பெயரால் சேர்த்து வைத்துள்ள பணத்திற்கு நல்லது.

என்னை வைச்சு காமெடி கீமடி பண்ணலையே ? :lol:

எனக்கு அடிவாங்கித் தாறதெண்ட முடிவோடை நிக்கிறியள். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இவைக்கெல்லாம் ஒரு அன்னை தெராசா இல்லம் கட்டிக் கொடுக்கலாம் என்று யோசிக்கிறன். ஏன் கலியாணம் கட்டினா தானா வாழலாம். அன்னை தெராசா போலவும் வாழலாம். அதற்கான ஏற்பாடுகளைச் செய்தால் நல்லம். பாதுகாப்பான வாழ்வும்.. பிறருக்கு உதவி வாழுதலும் என்ற நிம்மதியாவது கிடைக்கும். இப்படி இரண்டாம் தாரத்துக்கு... மூன்றாம் தாரத்துக்கு என்று ஆசைப்பட்டு.. அவங்களட்ட அடியும் உதையும் ஏச்சும் இழிப்பும் பழிப்பும் வாங்கிச் சாகிறதிலும்.. இது எவ்வளவோ மேல். ஏன் சாந்தியக்கா... இப்படியான வழிமுறைகளைப் பற்றி நீங்க சிந்திக்க மாட்டியளோ..????! பிரச்சனைகளைக் குறைக்கிற வழியைத் தேடாமல்.. கூட்டிற வழியைத் தானே தேடிக் கொடுக்குறீங்க.. முதல் முறையா கலியாணம் கட்டி வெளிநாட்டுக்கு வந்தவையே பலர் நிம்மதியான வாழ்வற்று.. அல்லாடினம்.. இந்த இலட்சணத்தில்....???!

மேலும் இந்தப் பெண் பிள்ளைகளுக்கு அன்னை தெராசா இல்லம் பற்றிய தொடர்புகளை ஏற்படுத்தி அதனை வன்னியில் வடக்குக் கிழக்கில் இயங்க வைப்பதன் மூலம் இவர்களுக்கு சமூகப் பயனுள்ள வாழ்வும்.. சமூகப் பாதுகாப்பும் அளிக்க முடியும் என்று நினைக்கிறன்..! இதற்காக சர்வதேச மகளிர் அமைப்புக்களின் தொடர்புகளையும் ஆலோசனைகளையும் உதவிகளையும் பெற முடியும் என்றும் நினைக்கிறன்.

http://www.motherter...org/layout.html

http://www.motherter...ring/v_cal.html (கொழும்பு முகவரியும் உண்டு.)

அதுமட்டுமன்றி.. நான் யுனில இருக்கிறப்போ.. இடம்பெற்றிருந்த...

http://www.bkwsu.org/

http://www.bkwsu.org..._html/bkhistory (இதன் கிளை.. கொழும்பு.. திருமலை.. கண்டி என்றெல்லாம் உண்டு.)

இந்த அமைப்பும் கொழும்பில பிரமாண்டமாக இருக்குது. அவர்களைத் தொடர்பு கொண்டு.. வன்னியில்.. வடக்குக் கிழக்கில் உள்ள பெண்களின் நிலையை விளக்கினால்.. அவர்கள் சர்வதேச மட்டத்தில் இருந்து உங்களுக்கு வேண்டிய தங்களால் ஆன உதவிகளைச் செய்வார்கள்.

இன்று.. மேரி கியூரியின் பிறந்த தினமும் கூட.

Link to comment
Share on other sites

என்னை பொறுத்தவரை இவர்கள் யார் மூலமென்றாலும் உதவி பெறுவதுதான் ஒரே வழி .

ஆதிலட்சுமி பற்றி ஏதும் விபரம் தெரியுமா சாந்தி?

Link to comment
Share on other sites

ஆதிலட்சுமி பற்றி ஏதும் விபரம் தெரியுமா சாந்தி?

ஆதிலட்சுமி பற்றி தெரியும். தனிமடலில் எழுதுகிறேன் பாருங்கோ அர்யுன்.

Link to comment
Share on other sites

சாந்தி தலைப்பை மட்டும் படிச்சிட்டு கனபேர் விழுந்தடிச்சு உள்ளை ஓடிவரப்போகினம் கவனம். :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

சாந்தி தலைப்பை மட்டும் படிச்சிட்டு கனபேர் லிழுந்தடிச்சு உள்ளை ஓடிவரப்போகினம் கவனம். :lol: :lol: :lol:

அனுபவம் போசுது :lol: :lol:

Link to comment
Share on other sites

அனுபவம் போசுது :lol: :lol:

எனது அனுபவத்தை பாத்தீங்களெண்டால் இரண்டில்லை இருபதை தாண்டும். எதுக்கு அதெல்லாம் மற்றபடி நாங்கள் நல்லவங்கள் எண்டு சும்மா ஒரு இதுதான் :lol: :lol:

Link to comment
Share on other sites

யக்கோவ் ,அந்தப் பெண்ணின் அல்லல் அல்லது வீழ்ச்சி புரியாமல் பேசுகிறீர்கள்.

(

யக்கோவ் என்பது தமிழ் யக்கோவ், அதாவது 'அக்கா;; சிங்கள யக்கோவ் அல்ல :-) )

Link to comment
Share on other sites

< ஒருகாலம் அவள் தனது சொந்தமென்ற எல்லாத்தையும் நாட்டுக்கெண்டு குடுத்து கிட்டத்தட்ட 20வருசம் போராளியா இருந்தவள். அப்பவே எங்கினையும் ஒரு கலியாணத்தை கட்டி தானும் வெளிநாடு குடும்பம் குழந்தையள் நோகாத அரசியலெண்டு கதைச்சு எழுதிக் கொண்டு இருந்திருக்கலாம். ஆனால் அதையெல்லாத்தையும் விட்டிட்டு இலட்சியமும் கொள்கையும் சுமந்து மே 17 , 2009 வரையும் கொள்கைக்காகவே வாழ்ந்து கடைசியில குப்பி கடிக்கவும் மனமில்லாமல் சரணடைஞ்சாள்.>

< அவளைச் சமாதான காலத்தில் சந்தித்த எத்தனையோ புலம்பெயர் கவுரவர்கள் எவரும் தன்னையோ தன்போன்றவர்களை ஏனெண்டும் திரும்பிப்பாக்காமல் விட்டிருப்பது பற்றிச் சரியான கடுப்பு. அதுக்குப்பிறகுதான் முடிவெடுத்தாள் தானும் திருமணம் செய்து கொள்ளுவமெண்டு. இனவிடுதலைக்காக தன்னையே 20வருடங்கள் இரைகொடுத்தவள் இனிமேல் தனக்கும் ஒருதுணை வேணுமெண்டு முடிவெடுத்திருக்கிறாள். தனது விருப்பத்தை அவளுக்கு மாப்பிளை தேடுகிற தனது போராளி நண்பனிடம் தெரிவித்திருக்கிறாள். அவனும் இப்போ அவளுக்காக புறோக்கராகி……..! என்னையும் புறோக்கராக்கி……!>

என்னைப் பொறுத்தவரையில் இந்த இரண்டு பகுதியும் முரண்பாடாக இருக்கின்றது சாந்தி . ஓர் ஆணும் சரி , பெண்ணும் சரி தங்களைப் பொது சேவையில் அர்பணிக்கும் பொழுது , திருமணபந்தம் தங்கள் நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்கின்றது என்ற பொதுவான எண்ணப்பாடு உள்ளது . இதை எமது சமூகவாழ்வில் நாம் கண்கூடாகப் பார்கின்றோம் . அதற்காக அந்தப்பெண் கலியணம் செய்யக்கூடாது என்று நான் சொல்லவில்லை . இவ்வளவு காலமும் கலியாணம் செய்யாதவா , சமூகநற்பணிகளில் ஈடுபடுவது நல்லது என்றே எனக்குப்படுது . ஏனெனில் ஆண்கள் எல்லோருமே புனிதர்கள் இல்லை . அது நிரந்தர சித்திரவதைமுகாமாகவே இருக்கும் :( :( :( .

Link to comment
Share on other sites

  • 1 month later...

நான் இவைக்கெல்லாம் ஒரு அன்னை தெராசா இல்லம் கட்டிக் கொடுக்கலாம் என்று யோசிக்கிறன். ஏன் கலியாணம் கட்டினா தானா வாழலாம். அன்னை தெராசா போலவும் வாழலாம். அதற்கான ஏற்பாடுகளைச் செய்தால் நல்லம். பாதுகாப்பான வாழ்வும்.. பிறருக்கு உதவி வாழுதலும் என்ற நிம்மதியாவது கிடைக்கும். இப்படி இரண்டாம் தாரத்துக்கு... மூன்றாம் தாரத்துக்கு என்று ஆசைப்பட்டு.. அவங்களட்ட அடியும் உதையும் ஏச்சும் இழிப்பும் பழிப்பும் வாங்கிச் சாகிறதிலும்.. இது எவ்வளவோ மேல். ஏன் சாந்தியக்கா... இப்படியான வழிமுறைகளைப் பற்றி நீங்க சிந்திக்க மாட்டியளோ..????! பிரச்சனைகளைக் குறைக்கிற வழியைத் தேடாமல்.. கூட்டிற வழியைத் தானே தேடிக் கொடுக்குறீங்க.. முதல் முறையா கலியாணம் கட்டி வெளிநாட்டுக்கு வந்தவையே பலர் நிம்மதியான வாழ்வற்று.. அல்லாடினம்.. இந்த இலட்சணத்தில்....???!

மேலும் இந்தப் பெண் பிள்ளைகளுக்கு அன்னை தெராசா இல்லம் பற்றிய தொடர்புகளை ஏற்படுத்தி அதனை வன்னியில் வடக்குக் கிழக்கில் இயங்க வைப்பதன் மூலம் இவர்களுக்கு சமூகப் பயனுள்ள வாழ்வும்.. சமூகப் பாதுகாப்பும் அளிக்க முடியும் என்று நினைக்கிறன்..! இதற்காக சர்வதேச மகளிர் அமைப்புக்களின் தொடர்புகளையும் ஆலோசனைகளையும் உதவிகளையும் பெற முடியும் என்றும் நினைக்கிறன்.

http://www.motherter...org/layout.html

http://www.motherter...ring/v_cal.html (கொழும்பு முகவரியும் உண்டு.)

அதுமட்டுமன்றி.. நான் யுனில இருக்கிறப்போ.. இடம்பெற்றிருந்த...

http://www.bkwsu.org/

http://www.bkwsu.org..._html/bkhistory (இதன் கிளை.. கொழும்பு.. திருமலை.. கண்டி என்றெல்லாம் உண்டு.)

இந்த அமைப்பும் கொழும்பில பிரமாண்டமாக இருக்குது. அவர்களைத் தொடர்பு கொண்டு.. வன்னியில்.. வடக்குக் கிழக்கில் உள்ள பெண்களின் நிலையை விளக்கினால்.. அவர்கள் சர்வதேச மட்டத்தில் இருந்து உங்களுக்கு வேண்டிய தங்களால் ஆன உதவிகளைச் செய்வார்கள்.

இன்று.. மேரி கியூரியின் பிறந்த தினமும் கூட.

நெடுக்ஸ் உங்களின் ஆலோசனைகள் அச்சாவாக உள்ளது. இந்தப்பெண் போன்ற பலருக்கு நீங்கள் சொன்னது போல தங்குமிடம் வாழ்வாதாரம் அவசரம் செய்யப்பட வேண்டியுள்ளது. நீங்கள் படித்தவர். பிறமொழியறிவு ஆற்றல் உள்ளவர். மேற்சொன்ன இடங்களில் ஏதேனும் ஒன்றில் கதைத்து பாதிக்கப்பட்ட 10பெண்களுக்கான பாதுகாப்பிடத்தை பெற்றுத்தந்தால் பேருதவியாக இருக்கும்.

அல்லது ஒரு அன்னைதெரேசா இல்லம் அமைத்துக் கொடுத்தாலும் அங்கே வந்து வாழ பலர் தயாராக உள்ளார்கள். நான் சாதாரண ஒரு பெண் என்னால் இப்படியெல்லாம் புரட்சிகரமாக சிந்திக்கத் தெரியவில்லை. ஒரு அன்னைதெரேசா இல்லமோ இல்லது ஏதோ இத்தகைய பெண்களுக்கான ஒரு வழியை இல்லது வாழ்விடத்தை ஏற்படுத்தித் தாருங்கள். என்னிடமுள்ள பாதிக்கப்பட்ட பெண்களின் விபரங்களை உங்களிடம் தந்துவிடுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் உங்களின் ஆலோசனைகள் அச்சாவாக உள்ளது. இந்தப்பெண் போன்ற பலருக்கு நீங்கள் சொன்னது போல தங்குமிடம் வாழ்வாதாரம் அவசரம் செய்யப்பட வேண்டியுள்ளது. நீங்கள் படித்தவர். பிறமொழியறிவு ஆற்றல் உள்ளவர். மேற்சொன்ன இடங்களில் ஏதேனும் ஒன்றில் கதைத்து பாதிக்கப்பட்ட 10 பெண்களுக்கான பாதுகாப்பிடத்தை பெற்றுத்தந்தால் பேருதவியாக இருக்கும்.

அல்லது ஒரு அன்னைதெரேசா இல்லம் அமைத்துக் கொடுத்தாலும் அங்கே வந்து வாழ பலர் தயாராக உள்ளார்கள். நான் சாதாரண ஒரு பெண் என்னால் இப்படியெல்லாம் புரட்சிகரமாக சிந்திக்கத் தெரியவில்லை. ஒரு அன்னைதெரேசா இல்லமோ இல்லது ஏதோ இத்தகைய பெண்களுக்கான ஒரு வழியை இல்லது வாழ்விடத்தை ஏற்படுத்தித் தாருங்கள். என்னிடமுள்ள பாதிக்கப்பட்ட பெண்களின் விபரங்களை உங்களிடம் தந்துவிடுகிறேன்.

தெல்லிப்பழை துர்க்காதேவி பெண்கள் புகலிடம்.. இராமகிருஷ்ண மிசன்.. பிரம்ம குமாரிகள்.. திருமலை.. யாழ் அலுவலகங்கள்.. சிறீல சிறீ ரவிசங்கர் ஆச்சிரமம்.. YMHA.. YMCA இவற்றில் நீங்கள் தமிழிலையே கதைச்சு.. இந்தப் பெண்களின் மறுவாழ்விற்கு உதவக் கேட்கலாம்..!

மேலும்.. எனக்குத் தெரிய புலம்பெயர்ந்துள்ள பலர் இப்படியான பெண்களிற்கான நிதி உதவியை தமது மாதாந்தக் கடமையாகச் செய்து வருகின்றனர். எங்களால் தற்போதைய நிலையில் இந்தப் பெண்களுக்கு உதவி செய்ய முடியாது. அவைக்கு கைகால் நல்லா இருந்தால் வேலைக்குச் சென்று சம்பாதிச்சும் வாழலாம் தானே..! முன்னாள் போராளிகள் என்பதற்காக வீட்டில் வைச்சு சாப்பாடு கொடுக்கனுன்னா..தலைவர் வளர்த்தவர்... இல்லையே..!

உள்ளதை வைச்சு வாழத் தெரியனுமே தவிர இல்லாததற்கு பறக்க வெளிக்கிட்டால்.. வாழ்க்கை கஸ்டமாகத்தான் இருக்கும். இவர்களின் அடிப்படை நிதி உதவியை பூர்த்தி செய்யவும்.. அதில் இருந்து ஒரு நிரந்தர வருமானத்திற்கும் வழிகாட்டி விட்டாலே போதும். அவர்கள் வாழ்ந்து கொள்வார்கள். :):icon_idea:

Link to comment
Share on other sites

அவைக்கு கைகால் நல்லா இருந்தால் வேலைக்குச் சென்று சம்பாதிச்சும் வாழலாம் தானே..! முன்னாள் போராளிகள் என்பதற்காக வீட்டில் வைச்சு சாப்பாடு கொடுக்கனுன்னா..தலைவர் வளர்த்தவர்... இல்லையே..!

அவையள் நெடுக்கண்ணா தங்களை இருக்க வைச்சு சோறு போடுவாரெண்டு நம்பியிருக்கேல்ல. சம்பாதிச்சு சொந்தக்காலில நிக்க விரும்புகினம் ஆனால் நெடுக்கண்ணா நீங்கள் கருணை காட்டி 10பெண்களுக்கு 10தையல் மெசின் வாங்கித்தரச்சொல்லிக் கேட்கினம் (10தையல் மெசினுக்கு 333000ரூபா (2200€)

தலைவர் நல்லாத்தான் வளர்த்துவிட்டவர். தலைவரை உயிருக்கு உயிராய் நேசிக்கிற நெடுக்கண்ணாவிடமிருந்து இப்படியான ஆலோசனைகள் இதுவரையும் கிடைக்காததாலைதான் இப்பிடியான யோசினையள் அவைக்கு வராமல் போட்டுது. இப்ப நெடுக்கண்ணாவின் ஆலோசனை கிடைச்சிட்டுது அதை நடைமுறைப்படுத்த ஆகலும் 2200€ கேட்கினம்.

நீங்களே நேரடியா அவையிட்டை குடுக்கலாம்.

என்னமாதிரி விபரத்தை அனுப்பவோ நெடுக்ஸ் ?

உள்ளதை வைச்சு வாழத் தெரியனுமே தவிர இல்லாததற்கு பறக்க வெளிக்கிட்டால்.. வாழ்க்கை கஸ்டமாகத்தான் இருக்கும்.

இதென்ன கோதாரியாப்போச்சு. நிமிந்து எழும்பி நிக்கிறதுக்கு ஒரு ஊன்றுதடிதான் எதிர்பாக்கினம் பிள்ளைகள். ஆளுக்கொரு ஊன்றுதடி குடுத்தீங்களெண்டா போதும். (இலவச ஆலோசனை கொடுக்க கனபேர் இருக்கினமாம். நீங்கள் கொள்ளையாளர் இலட்சியவாதியி உங்களிட்டை உரிமையோடு ஊன்றுதடி தாங்கோண்டு கேட்கிறம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவையள் நெடுக்கண்ணா தங்களை இருக்க வைச்சு சோறு போடுவாரெண்டு நம்பியிருக்கேல்ல. சம்பாதிச்சு சொந்தக்காலில நிக்க விரும்புகினம் ஆனால் நெடுக்கண்ணா நீங்கள் கருணை காட்டி 10பெண்களுக்கு 10தையல் மெசின் வாங்கித்தரச்சொல்லிக் கேட்கினம் (10தையல் மெசினுக்கு 333000ரூபா (2200€)

தலைவர் நல்லாத்தான் வளர்த்துவிட்டவர். தலைவரை உயிருக்கு உயிராய் நேசிக்கிற நெடுக்கண்ணாவிடமிருந்து இப்படியான ஆலோசனைகள் இதுவரையும் கிடைக்காததாலைதான் இப்பிடியான யோசினையள் அவைக்கு வராமல் போட்டுது. இப்ப நெடுக்கண்ணாவின் ஆலோசனை கிடைச்சிட்டுது அதை நடைமுறைப்படுத்த ஆகலும் 2200€ கேட்கினம்.

நீங்களே நேரடியா அவையிட்டை குடுக்கலாம்.

என்னமாதிரி விபரத்தை அனுப்பவோ நெடுக்ஸ் ?

இதென்ன கோதாரியாப்போச்சு. நிமிந்து எழும்பி நிக்கிறதுக்கு ஒரு ஊன்றுதடிதான் எதிர்பாக்கினம் பிள்ளைகள். ஆளுக்கொரு ஊன்றுதடி குடுத்தீங்களெண்டா போதும். (இலவச ஆலோசனை கொடுக்க கனபேர் இருக்கினமாம். நீங்கள் கொள்ளையாளர் இலட்சியவாதியி உங்களிட்டை உரிமையோடு ஊன்றுதடி தாங்கோண்டு கேட்கிறம்)

முதலில நான் உங்களுக்கு தம்பி... அண்ணன் இல்ல.

இரண்டாவது.. பிரச்சனை சம்பந்தப்பட்ட பெண்களுக்கு சோறு போடுறது யார் என்பதல்ல பிரச்சனை.. சம்பந்தப்பட்ட பெண்களின் மறுவாழ்வை உறுதி செய்வது எப்படி என்பது தான் பிரச்சனை.

சோறு என்றால்.. மகிந்தவோடு சேர்ந்து நின்றாலும் சோறு கிடைக்கும்..! சங்கரி காலில போய் விழுந்தாலும் சோறு கிடைக்கும். அதற்கும் எங்களை தான் எதிர்ப்பார்க்கனுன்னு அவசியம் இல்லயே..!

தலைவரை உயிருக்கு உயிரா நேசிக்கிறம் தான். ஏன்னா அவர் கொள்கைக்காக வாழ்ந்தவர். கொள்கைக்காக இறுதி வரை போராடினவர். கொள்கைக்காக தன்னையே அர்ப்பணித்தவர்.

தையல் மிசின் வாங்கிக் கொடுத்திட்டா மட்டும் சரியான வருமானம் வரும் என்பதற்கு என்ன உத்தரவாதம்..????! ஊரில தையல் மிசின் வைச்சிருந்த பெண்கள்.. குடும்பங்கள் பல.. வறுமைக் கோட்டின் கீழ் தான் வாழ்ந்தன. ஏன் அவர்களால் அந்த தையல் மிசின்களை வைச்சு.. வறுமைக் கோட்டின் மேல் வாழ முடியல்ல..?! இதற்கு தங்கள் பதில் என்ன..??!

வருமானம் இல்லாதவர்களுக்கு வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு ஆக்கிரமிப்பு.. சிறீலங்கா அரசு நிவாரணங்களை வழங்கும் தானே. அது சோறு போடக் காணாதா..???! இது சோறு சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல. பிரச்சனை அவர்களுக்கும் வெளிநாடுகளில் நீங்கள் எல்லோரும் வாழும் வசதியோட வாழ்க்கை அமைச்சுக் கொடுக்கனும் என்பதுதான் என் எதிர்பார்ப்பு. நீங்கள் மட்டும்.. கார் ஓடித் திரியலாம்.. சீசனுக்கு சீசன்.. கொலிடே போய் வரலாம்.. நாட்டுக்காக போராடிய அவங்க.. தையல் மிசினோட மாரடிக்கனும் என்பது என்ன தலை விதியா..???!

ஏன் அவங்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு தேடிக் கொடுக்கக் கூடாது. மேற்கு நாடுகளில்.. மத்திய கிழக்கில்.. சிங்கப்பூர்.. மலேசியாவில்... கனடாவில் இதற்கான வாய்ப்பே இல்லையா. இருக்கு.. ஆனால் ஏன் செய்து கொடுக்கிறீர்கள் இல்லை. அவர்கள் உங்கள் அளவிற்கு வளர்ந்திடுவார்கள் என்ற பயமா..??! அதனால் தான் அவர்களை தையல் மிசினோடும்.. கோழிக்கூட்டோடும் அடைச்சு வைக்கப் பார்க்கிறீங்க..! இப்படின்னும் எங்களால குற்றம் காண முடியும்..!

இவற்றால் என்ன... பயன்..??! இதனால் அவர்களுக்கு மறுவாழ்வு அமைஞ்சிடுமா..????! நான் உதவி செய்யனுன்னா.. அவங்களுக்கு உங்களைப் போல வெளிநாட்டில் வசதியான வாழ்க்கை வாழ.. வெளி நாடுகளில் வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்யுங்க.. நானும் அந்த திட்டத்தில் என்னை இணைத்துக் கொள்ளுறன்..! தையல் மிசின்.. கோழிக்குஞ்சு.. கறவை மாடு.. ஜமுனா பாரி ஆடு.. இதெல்லாம்.. 1000 ரூபா தினமும் ஒரு மனிதனுக்கு செலவுக்கு தேவைப்படும் நாட்டில நிரந்தர வருமானத்துக்கு உருப்படியான ஆரோக்கியமான மறுவாழ்விற்கு உதவப் போறதில்ல. எனக்கு இப்படியான உப்புச்சப்பற்ற பயனற்ற.. சும்மா விளம்பரம் தேடும் திட்டங்களுக்கு உதவும் எண்ணம் ஏதும் இல்லை..! :):icon_idea:

Link to comment
Share on other sites

உந்த உப்புச்சப்பில்லாத ஆய்வு விளக்க அறுவது பக்க அறிக்கையைத்தான் தருவியளெண்டு தெரியும். 10தையல் மெசின் வாங்கிக்குடுங்கோ 10பேருக்கு நீங்கள் சொல்ற வேலைகளுக்கும் மேலால் பிள்ளையள் உழைச்சுக்காட்டுவினம்.

சுயமா ஒண்டைச் செய்ய முடியாத போது சுயவிளம்பரமெண்டு வளமையாக தப்பிக்கிற தியறிதான் உங்கள் பாணி பணி.

நீங்கள்தான் இருக்கிறதை வைச்சு பறக்க ஆசைப்படுகினமெண்டு அழுகிறயிள் பிறகு அமெரிக்கா ஐரோப்பா கொலிடே கார் கனவெண்டு கதைவிடுறியள். கதைவிடுறதில நெடுக்குத் தம்பிக்கு நிகரேது. :icon_idea: 10தையல் மெசின் குடுப்பியளோ ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரச்சனை சம்பந்தப்பட்ட பெண்களுக்கு சோறு போடுறது யார் என்பதல்ல பிரச்சனை.. சம்பந்தப்பட்ட பெண்களின் மறுவாழ்வை உறுதி செய்வது எப்படி என்பது தான் பிரச்சனை.

இதற்கு ஏதாவது தீர்வு இல்லை மாற்றுத்திட்டம் ஏதும் இருந்தால் சொல்லுங்கள் நெடுக்ஸ் அண்ணா மக்கள் நலச்சேவையில் இருப்பவர்களுக்கு உதவியாய் இருக்கும்.

சோறு என்றால்.. மகிந்தவோடு சேர்ந்து நின்றாலும் சோறு கிடைக்கும்..! சங்கரி காலில போய் விழுந்தாலும் சோறு கிடைக்கும். அதற்கும் எங்களை தான் எதிர்ப்பார்க்கனுன்னு அவசியம் இல்லயே..!

இதை தான் அதுகள் செய்தால் தேசியத்தின் தூண்கள் காவலர்களால் துரோகிகளாகவும்,ஈனமா இனமாகவும் சித்தரிக்கிறீர்களே???

தலைவரை உயிருக்கு உயிரா நேசிக்கிறம் தான். ஏன்னா அவர் கொள்கைக்காக வாழ்ந்தவர். கொள்கைக்காக இறுதி வரை போராடினவர். கொள்கைக்காக தன்னையே அர்ப்பணித்தவர்.

இதுக்கும் தலைவரா ?????? பாவம் அவரை விட்டிடுங்கோ..

தையல் மிசின் வாங்கிக் கொடுத்திட்டா மட்டும் சரியான வருமானம் வரும் என்பதற்கு என்ன உத்தரவாதம்..????! ஊரில தையல் மிசின் வைச்சிருந்த பெண்கள்.. குடும்பங்கள் பல.. வறுமைக் கோட்டின் கீழ் தான் வாழ்ந்தன. ஏன் அவர்களால் அந்த தையல் மிசின்களை வைச்சு.. வறுமைக் கோட்டின் மேல் வாழ முடியல்ல..?! இதற்கு தங்கள் பதில் என்ன..??!

எதுவுமே இல்லாமல் இருப்பதை ஏதாவது சொந்தக்காலில் நிற்பது பரவாயில்லை தானே?

ஏன் அவங்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு தேடிக் கொடுக்கக் கூடாது. மேற்கு நாடுகளில்.. மத்திய கிழக்கில்.. சிங்கப்பூர்.. மலேசியாவில்... கனடாவில் இதற்கான வாய்ப்பே இல்லையா. இருக்கு.. ஆனால் ஏன் செய்து கொடுக்கிறீர்கள் இல்லை. அவர்கள் உங்கள் அளவிற்கு வளர்ந்திடுவார்கள் என்ற பயமா..??! அதனால் தான் அவர்களை தையல் மிசினோடும்.. கோழிக்கூட்டோடும் அடைச்சு வைக்கப் பார்க்கிறீங்க..! இப்படின்னும் எங்களால குற்றம் காண முடியும்..!

வெளிநாட்டுக்கு யாரும் சும்மா அனுப்பிறாங்களா?

இவற்றால் என்ன... பயன்..??! இதனால் அவர்களுக்கு மறுவாழ்வு அமைஞ்சிடுமா..????! நான் உதவி செய்யனுன்னா.. அவங்களுக்கு உங்களைப் போல வெளிநாட்டில் வசதியான வாழ்க்கை வாழ.. வெளி நாடுகளில் வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்யுங்க.. நானும் அந்த திட்டத்தில் என்னை இணைத்துக் கொள்ளுறன்..! தையல் மிசின்.. கோழிக்குஞ்சு.. கறவை மாடு.. ஜமுனா பாரி ஆடு.. இதெல்லாம்.. 1000 ரூபா தினமும் ஒரு மனிதனுக்கு செலவுக்கு தேவைப்படும் நாட்டில நிரந்தர வருமானத்துக்கு உருப்படியான ஆரோக்கியமான மறுவாழ்விற்கு உதவப் போறதில்ல. எனக்கு இப்படியான உப்புச்சப்பற்ற பயனற்ற.. சும்மா விளம்பரம் தேடும் திட்டங்களுக்கு உதவும் எண்ணம் ஏதும் இல்லை..! :):icon_idea:

இதுக்கு தான் உங்களுடைய பொன்னான கருத்துக்களை கேட்க ஆவலாய் உள்ளோம்.

Link to comment
Share on other sites

முதலில நான் உங்களுக்கு தம்பி... அண்ணன் இல்ல.

இரண்டாவது.. பிரச்சனை சம்பந்தப்பட்ட பெண்களுக்கு சோறு போடுறது யார் என்பதல்ல பிரச்சனை.. சம்பந்தப்பட்ட பெண்களின் மறுவாழ்வை உறுதி செய்வது எப்படி என்பது தான் பிரச்சனை.

சோறு என்றால்.. மகிந்தவோடு சேர்ந்து நின்றாலும் சோறு கிடைக்கும்..! சங்கரி காலில போய் விழுந்தாலும் சோறு கிடைக்கும். அதற்கும் எங்களை தான் எதிர்ப்பார்க்கனுன்னு அவசியம் இல்லயே..!

தலைவரை உயிருக்கு உயிரா நேசிக்கிறம் தான். ஏன்னா அவர் கொள்கைக்காக வாழ்ந்தவர். கொள்கைக்காக இறுதி வரை போராடினவர். கொள்கைக்காக தன்னையே அர்ப்பணித்தவர்.

தையல் மிசின் வாங்கிக் கொடுத்திட்டா மட்டும் சரியான வருமானம் வரும் என்பதற்கு என்ன உத்தரவாதம்..????! ஊரில தையல் மிசின் வைச்சிருந்த பெண்கள்.. குடும்பங்கள் பல.. வறுமைக் கோட்டின் கீழ் தான் வாழ்ந்தன. ஏன் அவர்களால் அந்த தையல் மிசின்களை வைச்சு.. வறுமைக் கோட்டின் மேல் வாழ முடியல்ல..?! இதற்கு தங்கள் பதில் என்ன..??!

வருமானம் இல்லாதவர்களுக்கு வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு ஆக்கிரமிப்பு.. சிறீலங்கா அரசு நிவாரணங்களை வழங்கும் தானே. அது சோறு போடக் காணாதா..???! இது சோறு சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல. பிரச்சனை அவர்களுக்கும் வெளிநாடுகளில் நீங்கள் எல்லோரும் வாழும் வசதியோட வாழ்க்கை அமைச்சுக் கொடுக்கனும் என்பதுதான் என் எதிர்பார்ப்பு. நீங்கள் மட்டும்.. கார் ஓடித் திரியலாம்.. சீசனுக்கு சீசன்.. கொலிடே போய் வரலாம்.. நாட்டுக்காக போராடிய அவங்க.. தையல் மிசினோட மாரடிக்கனும் என்பது என்ன தலை விதியா..???!

ஏன் அவங்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு தேடிக் கொடுக்கக் கூடாது. மேற்கு நாடுகளில்.. மத்திய கிழக்கில்.. சிங்கப்பூர்.. மலேசியாவில்... கனடாவில் இதற்கான வாய்ப்பே இல்லையா. இருக்கு.. ஆனால் ஏன் செய்து கொடுக்கிறீர்கள் இல்லை. அவர்கள் உங்கள் அளவிற்கு வளர்ந்திடுவார்கள் என்ற பயமா..??! அதனால் தான் அவர்களை தையல் மிசினோடும்.. கோழிக்கூட்டோடும் அடைச்சு வைக்கப் பார்க்கிறீங்க..! இப்படின்னும் எங்களால குற்றம் காண முடியும்..!

இவற்றால் என்ன... பயன்..??! இதனால் அவர்களுக்கு மறுவாழ்வு அமைஞ்சிடுமா..????! நான் உதவி செய்யனுன்னா.. அவங்களுக்கு உங்களைப் போல வெளிநாட்டில் வசதியான வாழ்க்கை வாழ.. வெளி நாடுகளில் வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்யுங்க.. நானும் அந்த திட்டத்தில் என்னை இணைத்துக் கொள்ளுறன்..! தையல் மிசின்.. கோழிக்குஞ்சு.. கறவை மாடு.. ஜமுனா பாரி ஆடு.. இதெல்லாம்.. 1000 ரூபா தினமும் ஒரு மனிதனுக்கு செலவுக்கு தேவைப்படும் நாட்டில நிரந்தர வருமானத்துக்கு உருப்படியான ஆரோக்கியமான மறுவாழ்விற்கு உதவப் போறதில்ல. எனக்கு இப்படியான உப்புச்சப்பற்ற பயனற்ற.. சும்மா விளம்பரம் தேடும் திட்டங்களுக்கு உதவும் எண்ணம் ஏதும் இல்லை..! :):icon_idea:

தையல் மெசின் கேழிகுஞ்சை விடுங்கோ நானே ஒரு பத்து பேருக்கு இங்கை வேiலை ஒழுங்கு செய்து குடுக்கிறன்.கூப்பிட்டு விடுங்கோ அது மட்டும் போதுமானது. அதையும் விட்டால் காதல் கலியாணம் வேண்டாம் போராட்டத்திற்காக போய் 20 வரும் போராடி ஒரு பெண் இருக்கிறார் நீங்கள் கலியாணம் செய்யவேண்டாம் குடும்பம் நடத்தவேண்டாம். ஒரு அழைப்பு (ஸ்பென்சர் )குடுக்க முடியுமா?? ஏன் குப்பி கடிக்கவில்லையென கேட்கவேண்டாம். .. இவைக்கு தேசியம். விடுதலைப்போராட்டம். தலைவர். கலாச்சாரம். உணர்வு . பெண்ணியம். விஞ்ஞானம் . இவை தவிர்ந்த ஒரு பதிலை எதிர் பார்க்கிறேன்.

அண்ணையா தம்பியா எண்டதெல்லாம் பிறகு

Link to comment
Share on other sites

போராட்டத்திற்காக போய் 20 வரும் போராடி ஒரு பெண் இருக்கிறார் நீங்கள் கலியாணம் செய்யவேண்டாம் குடும்பம் நடத்தவேண்டாம். ஒரு அழைப்பு (ஸ்பென்சர் )குடுக்க முடியுமா?? ஏன் குப்பி கடிக்கவில்லையென கேட்கவேண்டாம். .. இவைக்கு தேசியம். விடுதலைப்போராட்டம். தலைவர். கலாச்சாரம். உணர்வு . பெண்ணியம். விஞ்ஞானம் . இவை தவிர்ந்த ஒரு பதிலை எதிர் பார்க்கிறேன்.

எனது நண்பியின் சகோதரி ஒருவரும் (19 வருடம் போராடிய ஒரு பெண் போராளி) உள்ளா, ஒரு போராளிக்கு உதவிக் கரம் கொடுக்க முடியுமா????? மாணவர் விசாவில் உள்ளேன், கூப்பிட முடியாது என்று சொல்ல வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு ஏதாவது தீர்வு இல்லை மாற்றுத்திட்டம் ஏதும் இருந்தால் சொல்லுங்கள் நெடுக்ஸ் அண்ணா மக்கள் நலச்சேவையில் இருப்பவர்களுக்கு உதவியாய் இருக்கும்.

நீங்களும் அதே போராட்ட மண்ணில் வாழ்ந்து விட்டுத் தானே வந்தனீர்கள். நான் ஏலவே எனது திட்டத்தைச் சொல்லிட்டன். அந்த முன்னாள் போராளிகளுக்கு ஆக்கிரமிப்பு சிறீலங்காவில் பாதுகாப்பில்ல. அவங்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களுக்கு இணங்க தகுதி பெற.. ஒரு 3 தொடக்கம் 6 மாத வேலைக்கேற்ற தொழிற்பயிற்சி அளித்து வெளிநாடுகளுக்கு அழைத்து வருவது தான் என்னைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வுக்கும் வாழ்க்கைத் தரம் உயரவும் வழிவகுக்கும். இதை விட வேற எந்தத் திட்டங்களும் அவங்கள் உருப்பட உதவப் போறதில்ல. அந்த வகையில் தையல் மிசின்களை.. கோழிக்குஞ்சுகளை.. ஜமுனா பாரிகளை.. கொடுத்து.. நாங்கள் சொகுசாக வாழ்ந்து கொண்டு.. அவர்களை ஏமாற்றி நாங்கள் விளம்பரம் தேட முனைய மாட்டோம்..!

இதை தான் அதுகள் செய்தால் தேசியத்தின் தூண்கள் காவலர்களால் துரோகிகளாகவும்,ஈனமா இனமாகவும் சித்தரிக்கிறீர்களே???

நான் சொன்னது சோற்றுக்கு வழியில்லை என்றால் காட்டிக் கொடுக்கனும் என்ற அவசியம் இல்லை. அதைச் செய்யாமலே சிறீலங்கா அரசின் உதவியை பெற்றுக் கொள்ள உரிய வழி வகைகளை ஆராயலாம். அதற்காக மகிந்தவின்.. சங்கரியின் காலில் விழுவது என்றாலும் விழந்தான் வேண்டும். அதற்காக பசியிருந்து சாக முடியுமோ..???!

இதுக்கும் தலைவரா ?????? பாவம் அவரை விட்டிடுங்கோ..

அவரை இழுத்து வைச்சு என்னிடம் கேள்வி கேட்டவர்களிடம் போய் இதனைச் சொல்லுங்கள். அதுவே சாலச் சிறந்தது.

எதுவுமே இல்லாமல் இருப்பதை ஏதாவது சொந்தக்காலில் நிற்பது பரவாயில்லை தானே?

இது சொந்தக் காலில் நிற்க உதவிறம் என்ற பெயரில்.. தூசி தட்ட ஒரு மூலையில் பணத்தையும் உழைப்பையும் முடக்கும் செயல். நான் தாயகத்தில் வாழ்ந்த போது கண்ட உண்மைகளில்.. தையல் மிசினை வைச்சு உழைச்சு முன்னேறினவையைக் காட்டிலும்.. வீட்ட வளவை வித்துப் போட்டு.. அடகு வைச்சுப் போட்டு.. இயக்கத்துக்கு தெரியாமலும்.. தெரியவும் பிள்ளைகள.. வெளிநாட்டுக்கு அனுப்பி வைச்சவை தான் இப்ப வசதியா புலம்பெயர்ந்தும்.. தாயகத்திலும் வாழினம். அந்தச் சந்தர்ப்பங்களை போராட்டம் விடுதலை என்று தவற விட்ட இந்த அக்கா தங்கச்சிகளுக்கு அதை பெற்றுக் கொடுக்கனும் என்பதே எனது அவா. சும்மா.. சுய காலில நிற்க விடுறம் என்று.. மாட்டையும் தையல் மிசினையும் தலையில கட்டி பறணில ஏற்றி விடுற ஏமாற்று வேலைகள் தேவையில்ல..!

வெளிநாட்டுக்கு யாரும் சும்மா அனுப்பிறாங்களா?

ஏன் இவ்வளவு இலட்சம் பேர் வெளிநாட்டுக்கு ஓடி வர அதுகள் அங்க போர் செய்யல்லையோ. அந்த வகையில் அத்தனை இலட்சம் பேரும் ஆளுக்கு ஒரு 100 டொலரோ.. பவுனோ கொடுத்தா.. பாதிக்கப்பட்டவையை வடிவா இங்க தொழில் விசாக்கள் எடுத்து கூப்பிடலாம். உந்தச் சிங்களப் பொம்பிளையள் எல்லாம் வருகுதுகள்.. எங்கள் தமிழிச்சிகளுக்குத் தான் தடையோ. அப்படிச் செய்ய உங்களுக்கு மனசில்ல என்று சொல்லுறது..??!

இதுக்கு தான் உங்களுடைய பொன்னான கருத்துக்களை கேட்க ஆவலாய் உள்ளோம்.

நீங்கள் எதிர்பார்த்த என் பொன்னான கருத்துக்களை பதிவிட்டிருக்கிறேன்.. படியுங்கள். உணருங்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த உப்புச்சப்பில்லாத ஆய்வு விளக்க அறுவது பக்க அறிக்கையைத்தான் தருவியளெண்டு தெரியும். 10தையல் மெசின் வாங்கிக்குடுங்கோ 10பேருக்கு நீங்கள் சொல்ற வேலைகளுக்கும் மேலால் பிள்ளையள் உழைச்சுக்காட்டுவினம்.

சுயமா ஒண்டைச் செய்ய முடியாத போது சுயவிளம்பரமெண்டு வளமையாக தப்பிக்கிற தியறிதான் உங்கள் பாணி பணி.

நீங்கள்தான் இருக்கிறதை வைச்சு பறக்க ஆசைப்படுகினமெண்டு அழுகிறயிள் பிறகு அமெரிக்கா ஐரோப்பா கொலிடே கார் கனவெண்டு கதைவிடுறியள். கதைவிடுறதில நெடுக்குத் தம்பிக்கு நிகரேது. :icon_idea: 10தையல் மெசின் குடுப்பியளோ ?

10 தையல் மிசினை வைச்சு.. மாதாந்தம்.. எவ்வளவு வருமானத்தை அந்த பெண் பிள்ளைகள் ஈட்டுவினம்.. அவையிட நாளாந்த தனிநபர் மற்றும் குடும்பச் செலவுகள் என்ன.. அது போக எவ்வளவு மிஞ்சும்.. அப்படி மிஞ்சினால் அதைச் சேமிக்க என்ன திட்டங்களை செயற்படுத்தி இருக்கீங்க.. வங்கிக் கணக்குகளை திறந்து கொடுத்திருக்கீங்களா.. இந்த தையல் மிசின்களை வைச்சு.. அதில் வரும் சேமிப்பில் அவங்களா தாயகத்தை விட்டு வெளிநாடுகளுக்கு நல்ல வேலை பெற்றுச் செல்ல எவ்வளவு காலம் ஆகும்.. இப்படியான விபரங்களை உடனடியாக தாருங்கள். 10 தையல் மிசினுக்கு பங்களிப்பது பற்றி அப்புறம் தீர்மானிக்கிறம்..??!

சும்மா தையல் மிசின் தையல் மிசின் என்று கொண்டு போய் அதை கொடுத்தா அதை வைச்சு.. அதுகள் என்ன செய்யுறது. ஒரு தையல் மிசினை காலால இயக்கவும் சக்தி வேணும். நூல் வேணும்.! இன்னும் தேய்மானங்கள் வந்தால் திருத்த காசு வேணும்.. அப்புறம் தைக்கிற பொருட்களை விற்க.. ஓடர் எடுக்க.. என்று அதுகளை அலையனும்.. சும்மா தையல் மிசினை கொடுத்தமா.. நம்ம கடமை முடிஞ்சுதா.. அதுதான் காசு கொடுத்தமா.. ஏ கே எழும்பி நின்று அடிபடுமாம்.. என்று கனவு கண்டது போல.. உதுகளையும் கனவுத் தொழிற்சாலையில் கொண்டு போய் வைத்துவிட்டு நீங்கள் இணையத்தில படம் போட்டு நிம்மதி ஆகிடுவியள். பாவம் தையல் மிசினை வாங்கினதுகள்.. பாட்சா படத்தில ரஜனி ஒரு பாடல் முடிய முதல் பணக்காரர் ஆன கணக்கா.. கனவு கண்டுவிட்டு கண்ணீரை தொடச்சுக்க வேண்டியது தான்..!

அதிலும்.. உந்தக் காசுகளைச் சேர்த்து.. ஒரு வங்கிக் கணக்கை திறந்து.. அதில இருந்து மாதாந்தம் ஒரு வட்டி வாற வகைக்கு.. (இலங்கை வர்த்த வங்கியில் நல்ல வட்டிவீதம் கொடுக்கினம்) அதில போட்டு வைச்சீங்கன்னா.. அதுகளுக்கு பின்னாடியும் உதவும்.. வேறு தேவைகள் வந்தா அதைப் பயன்படுத்தவும் முடியும்..! தையல் மிசினை வைச்சு என்ன தூசா தட்டுறது..! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தையல் மெசின் கோழிக் குஞ்சை விடுங்கோ நானே ஒரு பத்து பேருக்கு இங்கை வேiலை ஒழுங்கு செய்து குடுக்கிறன்.கூப்பிட்டு விடுங்கோ அது மட்டும் போதுமானது.

அதையும் விட்டால் காதல் கலியாணம் வேண்டாம் போராட்டத்திற்காக போய் 20 வரும் போராடி ஒரு பெண் இருக்கிறார் நீங்கள் கலியாணம் செய்யவேண்டாம் குடும்பம் நடத்தவேண்டாம். ஒரு அழைப்பு (ஸ்பென்சர் )குடுக்க முடியுமா?? ஏன் குப்பி கடிக்கவில்லையென கேட்க வேண்டாம். .. இவைக்கு தேசியம். விடுதலைப்போராட்டம். தலைவர். கலாச்சாரம். உணர்வு . பெண்ணியம். விஞ்ஞானம் . இவை தவிர்ந்த ஒரு பதிலை எதிர் பார்க்கிறேன்.

அண்ணையா தம்பியா எண்டதெல்லாம் பிறகு

அவையள் எங்களுக்காக போராடினதிலும்.. நீங்கள் எல்லாம் அசைலம் அடிக்க அதிகம் போராடி இருக்கினம். அந்த வகையில் அவர்களுக்கு அதிகம் கடமைப்பட்டவர்கள் நீங்கள். நாங்கள் ஏலவே செய்யக் கூடிய உதவிகள் செய்து அடைய வேண்டிய பலாபலன்களையும் எதிரிகள் மூலம் அடைஞ்சிட்டம். இப்ப நாங்களே நிற்கதியாகத் தான் நிற்கிறம்..! அந்த வகையில் அவர்கள் மூலம் அதிக நன்மை அடைந்தவர்கள்.. வெளிநாடுகளில் வளமான வாழ்வை அமைத்துக் கொண்டவர்கள்.. அவர்களை கூப்பிட்டு விடுவதால் ஒன்றும் கெட்டுப் போகப் போறதில்ல.

நாங்கள் அவர்கள் மூலம் எந்த நன்மைகளையும் எங்கள் சொந்த வாழ்வுக்காக செய்து கொள்ளவில்லை. இருந்தாலும்.. எங்களால் ஆன உதவிகளை அவர்களுக்கு தேவையான சந்தர்ப்பங்களில்.. உபயோகமான வழிகளில் செய்கிறோம்.. தொடர்ந்து செய்வோம். (என்ன செய்தோம் என்று சொன்னாலும் சுயதம்படம் எண்டுவியள். அதிலும் போய் சேர வேண்டிய உதவிகள் சம்பந்தப்பட்டவர்களைப் போய் சேர்ந்தாலே போதும் என்று இருப்பது மேல்.) அதுபற்றிய விபரங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் நமக்கில்ல..!

ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.. உங்கள் இந்த எழுத்துப் பூச்சாண்டிகள் நம்கிட்ட வாயாது..! நேசக்கரத்தின் ஆரம்பம் முதல் நாங்களும் நடக்கிறதுகளை அவதானிச்சிக்கிட்டு தான் இருக்கம்..! நேசக்கரத்துக்கு தேவையான புத்திமதிகளும் சொல்லி இருக்கம். கேட்பதும் விடுவதும்.. அவரவர் விருப்பம். சொல்வதைக் கேட்டால்.. நாங்களும் மதிப்பம்.. பங்களிப்பம். இல்லைன்னா.. உதவி செய்ய எத்தனையோ வழி இருக்கு அதால உதவுவம்..! நேசக்கரத்தை தான் நம்பி இருக்கனுன்னு அவசியம் இல்ல. :icon_idea::)

எனது நண்பியின் சகோதரி ஒருவரும் (19 வருடம் போராடிய ஒரு பெண் போராளி) உள்ளா, ஒரு போராளிக்கு உதவிக் கரம் கொடுக்க முடியுமா????? மாணவர் விசாவில் உள்ளேன், கூப்பிட முடியாது என்று சொல்ல வேண்டாம்.

உங்களுக்கு அண்ணா... தம்பி.. மச்சான்.. இப்படி ஒருத்தரும் கனடாவில.. ஐரோப்பாவில.. அவுஸ்திரேலியாவில.. நியூசிலாந்தில.. மத்திய கிழக்கில.. சிங்கப்பூரில.. அமெரிக்காவில இல்லையோ..??! நாங்கள் எடுத்துவிட்டால்.. எடுத்து விடுறவை வேலையும் செய்ய முடியாது திண்டாடவே வேண்டி இருக்கும். ஆனால் அசைலம் அடிச்சவை கூப்பிட்டால்.. அது வேற கதை. அரசாங்கப் பணம் கிடைக்கும்.. அரசாங்க வீடு கொடுப்பினம்.. அரசாங்க வேலை இல்லா ஊதியம் கொடுப்பினம்.. இப்படி.. சும்மா இருந்தே சொகுசாக வாழலாம். அதைச் செய்தீங்கன்னா.. புண்ணியமாப் போகும். எங்களைப் போன்ற பாவப்பட்ட படிக்கிற ஜென்மங்களை நோக்கி.. அந்தப் பாவப்பட்ட ஜென்மங்களை ஒப்படைக்கிறதால.. அதுகளுக்கு இன்னும் இன்னும் துன்பமே தவிர விடிவு வராது. :):icon_idea:

Link to comment
Share on other sites

உங்களுக்கு அண்ணா... தம்பி.. மச்சான்.. இப்படி ஒருத்தரும் கனடாவில.. ஐரோப்பாவில.. அவுஸ்திரேலியாவில.. நியூசிலாந்தில.. மத்திய கிழக்கில.. சிங்கப்பூரில.. அமெரிக்காவில இல்லையோ..??! நாங்கள் எடுத்துவிட்டால்.. எடுத்து விடுறவை வேலையும் செய்ய முடியாது திண்டாடவே வேண்டி இருக்கும். ஆனால் அசைலம் அடிச்சவை கூப்பிட்டால்.. அது வேற கதை. அரசாங்கப் பணம் கிடைக்கும்.. அரசாங்க வீடு கொடுப்பினம்.. அரசாங்க வேலை இல்லா ஊதியம் கொடுப்பினம்.. இப்படி.. சும்மா இருந்தே சொகுசாக வாழலாம். அதைச் செய்தீங்கன்னா.. புண்ணியமாப் போகும். எங்களைப் போன்ற பாவப்பட்ட படிக்கிற ஜென்மங்களை நோக்கி.. அந்தப் பாவப்பட்ட ஜென்மங்களை ஒப்படைக்கிறதால.. அதுகளுக்கு இன்னும் இன்னும் துன்பமே தவிர விடிவு வராது. :):icon_idea:

இருந்தால் ஏன் உங்களிடம் கேட்கின்றோம் :rolleyes: அவர்கள் பாவப்பட்ட ஜென்மங்களல்ல நாட்டுக்காகப் போராடிய பெண் போராளிகள்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.