Jump to content

ஈழ போராட்டமும் இரு தலைமுறைகளும்.


Recommended Posts

by Livin Annushyan on Saturday, 05 November 2011 at 13:08

.

தூக்கில் தொங்கும் மனிதன் சரணடையவில்லை.. மக்டாரா உட்ஸ்..(இம்மாத தீராந‌தி யின் இந்திரன் கட்டுரையிலிருந்து)

"போருக்குப் பின்னான இலங்கைச் சூழலும் தமிழ் ஊடகங்களும்" என்னும் தலைப்பில் ஈழத்தில் இருந்து வெளிவரும் தினக்குரல் பத்திர்க்கையின் ஆசிரியர் வீ.தனபாலசிங்கம் அவர்களுடனான உரையாடல் சென்னை இக்சா ஹாலில் அ.மார்க்ஸால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறிய மாற்றங்களுடன் தீராநதியில் இம்மாதம் அவருடைய நேர்காணலும் வந்திருக்கிறது. இங்கு தரவுகளும் நேரடி கலந்துரையாடல்களையும் பதிவு செய்யப் போவதில்லை. ஈழம் பற்றி கணக்கத் தெரிந்தாக சொல்லிக் கொள்ளும் தமிழ் அறிவுஜீவியின் முகமூடி மூலம் அபத்தமாக நடத்தப் பட்ட நாடகத்தை பற்றியே சொல்ல வேண்டும்.

கலந்துரையாடலுக்கு முன்னதாக பத்திரிக்கையாளார்கள் தொலைகாட்சிகளை சந்தித்தார் தனபாலசிங்கம்.வீ.தனபாலசிங்கத்தின் குற்றச்சாட்டு இதுவாகவே இருந்தது. "இங்கு தமிழகத்தில் இயங்கும் ஊடகங்களுக்கு ஈழம் குறித்து எந்த அக்கறையும் இல்லை. போருக்குப் பின்னான சூழலில் எங்கள் மக்கள் சொல்லண்ணாத் துயரத்தில் இருக்கின்றனர். எங்களுடைய மக்கள் பாரிய இழப்புக்குப்பின் உணவு இல்லாமல் நிலங்களை இழந்து வாழ்வாதார‌மற்று போயிருக்கிறார்கள்.ஆனால் இதைப் பற்றி சிறிதும் கவலை இல்லாமல் தமிழக‌ ஊடகங்கள் இன்னொரு ஈழம் போர் வெடிக்கும் என்று எழுதாதீர்கள். அங்கிருக்கும் சிங்கள் ஆட்சியாளர்களை கோபப் படுத்தாதீர்கள். இன்று அவர்களைச் சார்ந்து தான் எங்கள் வாழ்வு இருக்கிறது. தமிழ‌க ஊடகங்களுக்கு இலங்கையில் என்ன நடக்கிறது என்பதே தெரிவதில்லை. அதைப் பற்றி எந்த செய்தியும் இங்கே வெளியிடுவதில்லை. ஆனால் பரமக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி தினக்குரலில் உடனே செய்தி வெளியிட்டிருந்தோம். எந்தவொரு பொறுப்புமில்லாமல் தமிழக ஊடகங்கள் செயல்படுகின்றன". இதையேதான் கலந்துரையாடலுக்கு முன்னான சொற்பொழிவிலும் கூறினார். இதுவரை நடந்தது யாவும் நன்றாகவே நடந்தது.

உரையாட‌லுக‌ளின் ஊடாக‌ வீ.தனபாலசிங்கம் சொன்ன‌ இன்னுமொரு த‌க‌வ‌ல் அவ‌ரின் அர‌சிய‌ல் நிலைப்பாட்டைச் சொல்லிவிடும். ஈழ‌ம் வ‌ந்திருந்த‌ ஹிந்து ராம் "த‌மிழ் தேசியக் கூட்ட‌மைப்பு ந‌ம்ப‌த்த‌குந்த‌ ச‌க்தியாக வளர்ந்து வ‌ருவ‌தாக‌ ச‌ர்டிபிக்கேட் கொடுக்கிறார்" என்றார். ஆக‌ ஹிந்து ராம் ஈழ‌ம் ப‌ற்றி தெளிவாக‌ அறிந்திருக்கிறார். இதே ஹிந்து ராம் தாம் போருக்குப் பின் சிங்க‌ள் அர‌சு த‌மிழ‌ர்க‌ளின் மீள் குடிய‌ம‌ர்வை சிற‌ப்பாக‌ செய்து வ‌ருகிற‌து என்று ஆன‌ந்த‌ விக‌ட‌னுக்கும் பேட்டி கொடுத்தார். ஹிந்து ராமின் அர‌சிய‌லை விர‌ல் ச‌ப்பும் குழ‌ந்தை கூட‌ ந‌ம்பாது. ஆனான‌ப் ப‌ட்ட‌து ஈழ‌ம் என்ற‌ ஒற்றைச் சொல் காணாம‌ல் போக‌வும் நிக‌ழ்கால‌ ம‌ற்றும் வ‌ருங்கால‌ ச‌ந்த‌திக‌ளின் போராட்ட‌ அர‌சிய‌லை ம‌ழுங்க‌டிப்ப‌து ம‌ட்டுமே இன்றைய‌ இவ‌ர்க‌ளின் தேவைக‌ளாக‌ இருப்ப‌து.

க‌லந்துரையாட‌லில் பெரிதும் கேள்விக‌ள் கேட்ப‌து போல் வி.தனபாலசிங்கத்தின் அர‌சியலை விம‌ர்சிக்க‌ அங்கு இருந்த‌வ‌ர்க‌ள் வேறுயாருமில்லை ஈழம் சார்ந்தோர் தான். புல‌ம்பெய‌ர் நாடுக‌ளில் இட‌துசாரி அர‌சிய‌லைத் தன‌தாக‌க் கொண்டு ஈழ‌ப் போராட‌த்தை முன்னெடுக்கும் சேன‌ன். ஈழ‌ப் பிர‌ச்சனை குறித்து "எரியும் நினைவுகள் " திரைப்ப‌ட‌ம் எடுத்த‌ சோமித்ர‌ன். வன்முறையை நாங்களாக தேர்வு செய்யவில்லை ஆனால் தேர்தெடுக்க நிர்பந்திக்கப் படுகிறோம் என்பது சோமித்ரன் கூற்று. புலி சார் அர‌சிய‌ல் என்று த‌ன்னை அறிவித்துக் கொண்டு த‌ன்னைச் சுடுவேன் என்று ராணுவ‌ம் எழுதி ஒட்டிய நோட்டீசுக்கு பிற‌கும் "சுட்டால் சுடுடா" என்கிற‌ தீப‌ச்செல்வ‌ன்.தீப‌ச்செல்வன் இன்று உயிர்மை காலச்சுவடு முதலிய சிற்றிதழ்களில் சமகால ஈழ அரசியில் அவலங்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.

சேனனின் கேள்வியில் இருந்து வீ.தனபாலசிங்கத்தின் முகம் கறுக்கத் தொடங்கியது. சேனன் முன்வைத்த கேள்வி இதுதான் "சிங்கள் அரசுக்கு கோபம் ஏற்படாமல் செயலாற்ற வேண்டும் என்றால் ராஜபக்சேவின் மிரட்டலுக்கு( black mail)பயந்து செல்ல வேண்டும் என்று சொல்கிறீர்களா". இரண்டாவது கேள்வி இது "எந்த முற்போக்கு சக்தியும் இல்லாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருக்கிறதே?" சோமித்ரன் கேள்வி "இந்தியா அளித்திருந்த சலுகைகள் எதுவும் முறையாகத் தமிழர்களுக்கு சென்று சேரவில்லை" என்பது பற்றி இருந்தது. இதற்கு முன்பு அரசியல் பதில் சொல்லிக் கொண்டிருந்த தனபாலசிங்கம் "தான் ஒரு அரசியல்வாதி இல்லை என்றும் தான் ஒரு பத்திரிக்கையாளனாகவே பதில் சொல்ல முடியும்" என்றார். பின் எதற்கு இந்த சால்ஜாப்பு இவ்வளவு நேரத்திற்கும்?. பிறகு பதில் சொல்லி களைத்தவராக இருந்தார் வீ.தனபாலசிங்கம் . அப்படியே அண்ணாந்து மேற்கூரையை பார்க்கத் தொடங்கினார். அவ‌ரை பார்த்து சிரிக்கத் தான் தோன்றியது . தீபச்செல்வன் எந்த கேள்வியும் கேட்கவில்லை.

கலந்துரையாடலுக்குப் பின் தீபச்செல்வன்,சேனன், சோமித்ரனை ஒரு சேர சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இவ்வளவு ஒடுக்கு முறைக்குப் பிற‌கும் அறிவார்ந்த சமூகம் தன்னை எவ்வாறு படிபினைகளுடன் கட்டமைத்துக் கொள்கிறது என்பது புரிந்தது. 'வீ.தனபாலசிங்கம் சொல்வது போல் வருங்கால சந்ததிக்கு தாம் எத்தனை இழந்தோம் பறிகொடுத்தோம் என்பது நினைவில் இருக்காது. தன்னை ஒடுக்கும் சக்திக்கு எதிராக போராட மட்டுமே விளையும். இவர்கள் முன்னிறுத்துவது தோற்றுப் போன‌ முந்தைய தலைமுறையை. எனக்கு இடதுசாரி அரசியல் என்றாலும் தீபச் செல்வனுடன் முரண் பட்டாலும் போராட்டக் களத்தில் நாங்கள் ஒன்றாக இருப்போம். ஆனால் அ.மார்க்ஸ் போன்ற முந்தைய தலைமுறையால் அதை எதிர் கொள்ளமுடியாது. அ.மார்கஸ் தன‌க்குத் தெரிந்த ஈழ அரசியலை முன்னிறுவுவதற்காகவே வீ.தனபாலசிங்கம் முன்னால் நிறுத்தி பின்னால் செயல்படுகிறார்' என்றார் சேனன்.

தீபச்செல்வன் சற்று சிந்தனையில் இருந்தவராக இருந்தார். என்ன யோசனை? என்று கேட்பதற்கு பதில் சொன்னார். 'சேனன் கேள்விகள் கேட்கும் போது தீபச்செல்வன் பெயரை குறிப்பிட்டார். பின்னர் மார்க்ஸ் தனியாக அவன் பெயரை எல்லாம் ஏன் சொல்கிறாய் என்று கடிந்து கொண்டாராம். அ.மார்க்ஸுகு புலிகள் என்றால் பாசிஸ்ட். பாசிஸ்டுகள் கொல்லப் பட தான் வேண்டும் என்று நினக்கிறார். அ.மார்க்ஸ் போன்று அரசியல் தெரிந்தவர்களுக்கு இது வடிவா? எவ்வளவு பிழையான அரசியல் அவருக்கு இருக்கு பாருங்கோ' என்றார்.

கூட்டம் நிறைவு பெறுவதற்கு முன் அ.மார்க்ஸ் சொன்னவைகளே ஞாபகத்திற்கு வந்தது." இங்கு யாருக்கும் இலங்கை பற்றிய முழுமையான புரிதல் இல்லை". எங்களுக்கும் தெரியும் மார்க்ஸ் ஈழம் பற்றிய புரிதல் உங்களுக்கு இல்லை என்பது.

முக நூற் குறிப்பில் இருந்து.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
    • சீமான் பேசுவ‌தை உள‌வுத்துறை தொட்டு ப‌ல‌ர் கேட்ப‌து உண்டு சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை ப‌ற்றி அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று வ‌ழ‌க்கு தொடுக்க‌ வேண்டிய‌து தானே நீங்க‌ள் சொல்லுவ‌து ம‌ட்டும் உண்மை என்று எத‌ன் அடிப்ப‌டையில் ந‌ம்புவ‌து இத‌ற்க்கு உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடியுமா.....................நேர்மையான‌வ‌ர்க‌ள் என்றால் நேர்மையின் ப‌டி தான் ந‌ட‌ப்பின‌ம் 2009க்கு முத‌ல் ஒரு முக‌ம் 2009க்கு பின் இன்னொரு முக‌ம் இதில் சீனானை ப‌ற்றி விம‌ர்சிப்ப‌து வெக்க‌க் கேடு.................... சீமான் ஊட‌க‌த்துக்கு கொடுத்த‌ பேட்டி அப்ப‌டியே இருக்கு அதை ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்த்து இருக்கின‌ம் தேர்த‌ல் ஆணைய‌த்துக்கு சீமான் பேசின‌து தெரியாம‌ போகுமா அல்ல‌து உள‌வுத்துறை இப்ப‌டியான‌ விடைய‌த்தில் தூங்கி கொண்டு இருக்குமா ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் தேர்த‌ல் ஆணைய‌த்தை சீமான் தேவை இல்லாம‌ அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று சீமானை கைது செய்து இருக்க‌லாமே அல்ல‌து சீமான் பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது என்று த‌டை விதித்து இருக்க‌லாமே தேர்த‌ல் ஆனைய‌ம்........................பொல்லை கொடுத்து அடி வேண்ட‌ வேண்டாம்😁........................
    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே? வாங்கோ என்னை வசைபாட எனவே வாழும் அகலிகை….சாரி யாழுக்கு வரும் கல்யாண். நான் கஜேஸ் கட்டுகாசு இழப்பார் என கூறவில்லை. நான் வெல்லமாட்டார்கள் என கூறிய அத்தனை தேர்தல்களிலும் அவர்கள் வெல்லவில்லை. கடந்த முறை சொன்னது போலவே யாழில் ஒரு சீட்டை எடுத்தார் பொன்னர். அம்பாறை மக்களை ஏமாற்றி அடுத்த சீட்டை 100 வாக்கு வித்தியாசத்தில் எடுத்தார் குதிரை கஜே.   நேற்று வைரவர் பூசை பலமோ?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
    • உங்களுக்கு மேலே இருப்பது என் பதில். இப்போ யார் கோமாளி🤣 இதுவும் சீமான் ப்ரோ விட்டா இன்னொரு அவிட்டா. இல்லை என்றால் இப்படி தேர்தல் ஆணையம் சொன்ன ஆதாரம் எங்கே? அண்ணன் சொல்வதை எல்லாம் மொக்கு தம்பிகள் நம்பலாம். எல்லாரும் நம்ப தேவையில்லை. நீங்கள் ஏலவே என்னை 200 உபி என பல இடங்களில் எழுதிவிட்டீர்களே. எனக்கு ஒரு நற்பெயர் மீதும் ஆர்வம் இல்லை. அப்படி புற இருக்கோ இல்லையோ இ டோண்ட் கேர். இருந்தாலும் - சீமான் முகத்திரையை கிழிக்காமல் அந்த பெயரை தக்கவைப்பதிலும் பார்க்க கெட்ட பெயரே மேல்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.