Jump to content

ஓராயிரம் கதை சொல்லும் பள்ளிக்காலம்.(இசையும் கதையும் போல)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அந்தச் சின்னஞ் சிறு கிராமம் ........காலை யில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் ..... பட்டணத்துக்கு போக பஸ் வண்டிக்கு விரைவோர்....காலை,ஆலயமணியின் பக்தி மிகு எழுப்புதல்கள் .. பள்ளிச் சிறார்கள் ..என்று வீதி ...போக்குவரத்தால் நிறைந்து இருக்கும்..

கலைவாணி அந்த ஊரின் பாட்டு வாத்தியார் பொண்ணு ...கல்லூரியின் இறுதி யாண்டு படித்துக் கொண்டிருந்தாள் ......பெணகள் கல்லூரி அது .எந்நேரமும் சிரிப்பொலிக்கு பஞ்சமில்லை .....பெண்கள் என்றாலே மகிழ்ச்சி தானகவே வரும்.

ஆண்டு இறுதிகளில் ...வகுப்பேற்றம் நிகழும்..பன்னிரண்டாம்வகுப்பு, முடிவில் ( பிளஸ் டூ போன்று ) . பல்கலை யின் நுழைவு தேர்வு இருக்கும். பாட்டுவாத்தி யாரின் மகள் என்பதாலோ என்னவோ

கலைவாணிக்கு நன்றாக பாட்டு வந்தது .மேடைகளில் கல்லூரியின் விசேடங்களில் பாடுவாள். .கர்நாடக சங்கீதம் மட்டுமன்றி ...சினிமா பாடல்களையும் வகுப்பு பெண்கள் பாடச் சொல்லி கேட்பார்கள். வாழ்வை சினிமா ஆட்கொண்டிருந்த காலம்.உயர்கல்லூரி மாணவிகளுக்கு வருட முடிவிலே பிரியாவிடை நடைபெறும் .

அயலிலுள்ள சகோதர பாட சாலையும் அழைக்க படுவர்.விழா முடிவில் விருந்துபசாரம் நடக்கும்.ஆசிரியைகள் தலைமை யாசிரியர் தம்பதியர் .சகிதம் .அயல்பாடசாலை அதிபர் குடும்ப ..சகிதம் விழா களை கட்டும். இதற்காகவே உள்ளவற்றில் நல்ல ஆடை உடுத்து ......அன்று பெண்களை சேலையிலும் பையன்கள் கோட் சூட் ஆங்கில உடையிலும் காணப்படுவர் .

கேசவன் அந்த ஊரின் ஆண்கள் கல்லூரி அதிபரின் மகன் .ஒரே ஒருபையன் ..இரு வருடங்களுக்கு முன் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டப் படிப்புக்காக சென்றவன் . தலை நகரில் படித்துக் கொண்டிருந்தான் ....தந்தையின் விருப்புக்காக ...விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தான் ....

கடந்த காலங்களில் ...பள்ளிமாணவி களால் . கலைவாணியோடு இணைத்து பேசப்பட்டவன் . இருவருக்கும் ஈர்ப்பு இருந்தாலும் ........கேசவனின் தந்தையின் கண்டிப்புக் கருதி ......இலை மறை காயாக..இருந்தது.காதல் ...விழாவின் இடையே ....கலை வாணி குழுவினரின் இன்னிசைக் கச்சேரி மேடையில் நிறைவடைந்ததும் ..மேடையில் ஒரே கூச்சல் .கலைவாணியை ...சினிமா பாடல் பாடும் படி ....அன்று கலை வாணி அழகான பொன் மஞ்சள் சேலையில் தேவதையாக காட்சியளித்தாள். கல்லூரியின் இறுதி நாள் சக .மாணவிகளின் அன்புக் கட்டளையை தட்ட முடியவில்லை ...

...என்ன பாடல் பாடுவது என்பது தான் அவளது உள்ளக் குமுறல் ....கரவொலி மத்தியில் ..ஒலி வாங்கியை பிடித்து .....மேடையில் ..பாடினாள் ........

" நீ..........தானே நாள் தோறும் நான் பாடக் காரணம் .".....

....

..

............பாடலையும் கேட்டுப்பாருங்கள் ............

இதன் அர்த்தங்கள் ஆயிரம். இது கேசவனுக்கு சொல்லும் காதலா

.......கேசவனுக்கே புரியும். காலம் கை கூடினால் காதல் கை கூடும். .விழா இனிதே முடிவடைந்தது ...

....கேசவனுக்கு அன்றிரவு நித்திரையே இன்றி புரண்டு கொண்டிருந்தான் .......

பள்ளி நினைவுகள் ஓராயிரம் கதை சொல்லும் . பள்ளிக்காலம் கடந்த பின் நினைவுகள் தரும் சுகமே

தனியானது . பாடலின் சுவைக்காக பதியப்பட்ட் சிறு பதிவு.

உங்கள் நினைவுகளும் பள்ளிக் காலம் சென்றனவா ?

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசையும் கதையும் நன்றாக இருக்கிறது அக்கா..சின்ன,சின்னக் குறைகளையும் சொல்வதில் தப்பில்லைத் தானே.வசனங்களை முறிச்சு,முறிச்சு எழுதுவதை சற்று குறைத்தால் நன்று என்று நினைக்கிறன்..கலை வாணி.இந்தப் பெயரே தொடராக வராமல் இருக்கிறது பாருங்கள்..எழுத்துப் பிழைகள் இப்போ எவ்வளவோ திருத்தி விட்டீர்கள் அதே போல் வசன முறிவுகளையும் கால கிரமத்தில் திருத்திக் கொள்ளவும் என்ற அன்பு வேண்டுதலுடன் முடிக்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் நண்பியின் கருத்துக்கு ,நன்றி :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்..ரமணிசந்திரன் கதைகள் போல வசதி, கல்வி, எதிர்காலம் எல்லாம் ஒருங்கே இணைந்த நாயகனும் நாயகியும். என் பள்ளி நாட்களில் இப்படி எந்தக் கதையும் நடந்ததாக எனக்கு நினைவில்லை. இதனாலேயே இது "யாவும் கற்பனை" என்று இறுதியில் போடப் போகிறீர்கள் என விளங்குது.

Link to comment
Share on other sites

நன்றாக இருக்கு . ஆனால் , சிறு சிறு திருத்தங்கள் தேவைப்படுகின்றது . நன்றாக இருக்கின்றது தொடருங்குள் . வாழ்துக்கள் :) :) :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள் அக்கா...ஒரு சந்தேகம் இது உங்கள் சொந்தக் கதையா :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி அக்கா இந்தக்கதை தொடருமா? தொடரும் என்று போடவில்லை அதுதான் கேட்டேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போர்மல் நடக்கும் போது, மேசைகளுக்கு அடிபடுகின்ற கூட்டம் தான் நினைவுக்கு வருகின்றது!

புறத்தின் அழகை மட்டுமே பார்த்த காலம் அது!

புறமும், அகமும் வேறு வேறு வேறானவை என்றும், அவை இணைந்திருப்பது மிகவும் அருமை என்றும் புரிந்து கொள்ள நீண்ட நாட்கள் எடுத்தது!!!

பழைய நினைவுகளை மீடியமைக்கு நன்றிகள், நிலாமதி அக்கா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அக்கா பகிர்வுக்கு, நன்றாக இருக்கிறது, தொடருங்கள். மறக்க முடியுமா பள்ளி வாழ்கை.........

Link to comment
Share on other sites

நிலா அக்கா! இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்!

அத்தோடு... பல நண்பர்களின் பால்யக் காதல்கள் இப்படியான பாடல்களுடன்தான்.... தொடர்பாடி உறவாடும்! அவற்றை நினைக்கும் போதெல்லாம்... இப்பொழுதும் இனிமையாய் அந்தக் காலத்துக்குள் போய்விடுவேன்!

நன்றி அக்கா! :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.