Jump to content

ஏவாளின் தோட்டமருகே புதிய உலகம்


Recommended Posts

1.jpg

Berlepsch's six-wired "lost" bird of paradise - சொர்க்கத்தின் பறவை.

Papua 'Eden' என்ற அழைக்கத்தக்க மனிதர்களின் நடமாட்டத்தைக் கொண்டிராத ஒரு காட்டுப் பிரதேசத்தை அமெரிக்க,அவுஸ்திரேலிய, இந்தோனிசிய விஞ்ஞானிகள் கூட்டாக இணைந்து செய்த ஆய்வின் பின்னர் கண்டறிந்துள்ளனர். வட - மேல் பப்புவா-நியுகினியா (இந்தோனிசியா) பகுதியில் அமைந்துள்ள Foja மலைப்பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதியிலையே அந்த இடம் கண்டறியப்பட்டுள்ளது. மனித தாக்கம் இன்றி இன்றும் இயற்கை வனப்போடு இருக்கும் அந்த வனப்பகுதியில் வாழும் பல புதிய இன பறவை மற்றும் விலங்குகளும் தாவரங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

தகவல் ஆதாரத்துக்கு - http://kuruvikal.blogspot.com/ - படம் பிபிசி.கொம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிதர்களின் நடமாட்டத்தைக் கொண்டிராத

அற்றஸ் தரமுடியுமா..?? புண்ணியமாய்ப்போகும். :wink: :P

Link to comment
Share on other sites

அற்றஸ் தரமுடியுமா..?? புண்ணியமாய்ப்போகும். :wink: :P

அது தரமுடியாதுங்கோ..! மனிசாளை விடவே மாட்டம்..குருவிகள் சங்கம் தீர்மானம் இயற்றிட்டு..! :wink: :lol:

Link to comment
Share on other sites

அது தரமுடியாதுங்கோ..! மனிசாளை விடவே மாட்டம்..குருவிகள் சங்கம் தீர்மானம் இயற்றிட்டு..! :wink: :lol:

இப்ப போய் பார்த்தவர்கள் சும்மாவா இருக்கப்போகினம். அவைட்ட கேட்டா கிடைச்சிடும் அற்றஸ்.

Link to comment
Share on other sites

அற்றஸ் தரமுடியுமா..?? புண்ணியமாய்ப்போகும். :wink: :P

பிள்ளை அற்றஸ் கிடைச்சா என்னையும் கூட்டிக் கொண்டு போங்கோ பிளிஸ்...............

Link to comment
Share on other sites

தகவலுக்கு நன்றிகள் குருவிகள்.

அட இப்ப தானே கண்டுபிடிச்சிருக்கினம். இனி பறவைகளோ விலங்களோ அங்கு இருக்காது

Link to comment
Share on other sites

பிள்ளை அற்றஸ் கிடைச்சா என்னையும் கூட்டிக் கொண்டு போங்கோ பிளிஸ்...............

பொண்ணம்மாக்காட்ட வாங்கிக்கட்டியும் திருந்தல்ல.. காட்டுக்குப் போக.. கூட்டணி யாரோடை என்று...சுத்தம்..! :wink: :lol:

Link to comment
Share on other sites

இப்ப போய் பார்த்தவர்கள் சும்மாவா இருக்கப்போகினம். அவைட்ட கேட்டா கிடைச்சிடும் அற்றஸ்.

அவையே அற்றஸ் தெரியாம...கெலில போய் பாய்ஞ்சிருக்கினம்..! அங்க லேசில மனிசாள விடுறதா இல்லை...! :wink: :P :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகம்ஸ்.. தாராளமாய் கூட்டிப்போகலாம்.. ஆனா நம்ம தோஸ்த் பொன்ஸ் கூட வரணும்.. பிறகு உங்கள எல்லாம் மிருகங்களுக்க எப்படியாம் தேடிறது..?? :wink: :P

பிள்ளை அற்றஸ் கிடைச்சா என்னையும் கூட்டிக் கொண்டு போங்கோ பிளிஸ்...............

Link to comment
Share on other sites

கண்டுபிடிக்கப்பட்டது பூலோக சொர்க்கம் - பெட்டகம்

இந்தோனேஷியாவின் பபுவா பிராந்தியத்திலுள்ள ஒரு ஒதுக்குப்புறமான காட்டில், மனிதர்கள் இதுவரை அறிந்திருக்காத விலங்குகளையும் தாவரங்களையும் டஜன் கணக்கில் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதுவரை எவரும் பார்த்தில்லாத தேன் உண்ணும் பறவை இனம் ஒன்று, இருபது புதிய வகை தவளையினங்கள் என்று கண்டுபிடிப்புகளின் பட்டியல் நீளுகிறது. அழிந்துவிட்டதாக கடந்த நூறு ஆண்டுகளாக கருதப்பட்ட ஒரு பறவையினமும் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகள் ஆய்வு நடத்திய இந்த அடர்வனமாது மிக மிக ஒதுக்குப் புறமான ஒரு இடம். ஒருவர் பின் ஒருவராக ஊர்ந்துதான் எங்கும் செல்ல முடியும் என்பதுபோன்ற காடு அது.

இந்தக் காடு முழுக்கவுமே மனித அரவம் என்பது கொஞ்சமும் இல்லை. ஆகவே மற்ற காடுகளைக் காட்டிலும் விலங்குகளின் விளைநிலங்களாக இந்த இடம் இருக்கிறது.

ஆனால் இப்படி ஒரு இடம் இருப்பது இப்போது தெரியவந்துவிட்டது. ஆட்களும் அதனுள்ளே சென்று பார்த்துவிட்டார்கள். இந்நிலையில் அந்த இடம் தொடர்ந்து அப்படியே இருக்க வாய்ப்பில்லை.

இது பற்றி எமதுசெய்தியாளர் ஸ்டெஃபனீ இர்வின் அனுப்பிய பெட்டகத்தின் தமிழ் வடிவத்தை நேயர்கள் கேட்கலாம்.

பிபிசி-தமிழ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • @goshan_che கேட்ட கேள்விக்கு... நான் பதில் சொல்லி விட்டேன்.  விசுகர், உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். 😂
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 1 / உயிர் எழுத்து வரிசையில் எழுதப்பட்டது]     "அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில் அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!"   "ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!"   "இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில் இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?"   "ஈடணம் விரும்பா சாதாரண மகனே ஈடிகை எடுத்து உன்மனதை வடிப்பவனே ஈமக்கிரியையை எதற்கு எமக்கு தந்தாய் ஈமத்தாடி குடி கொண்ட சுடலையில்?"   "உலகத்தில் பரந்து வாழும் பலரின் உண்மை இல்லா பற்றில் பாசத்தில் உடன்பாட்டிற்கு வர முடியாமல் உணக்கம் தரையில் விதை ஆனாயோ?"   "ஊரார் கதைகளை அப்படியே ஏற்காமல் ஊக்கம் கொண்டு சிந்தித்து செயல்படுவானே ஊறு விளைக்காது நல்லிணக்கம் காப்பவனே ஊனம் கொண்டு இளைத்து போனாயோ?"   "எய்யாமை அகற்றிட விளக்கங்கள் கொடுத்து எழுதுகோல் எடுத்து உலகை காட்டி எள்ளளவு வெறுப்போ ஏற்றத்தாழ்வோ இல்லாமல் என்றும் வாழ்ந்த உன்னை மறப்போமா?"   "ஏழைஎளியவர் என்று பிரித்து பார்க்காமல் ஏகாகாரமாய் எல்லோரையும் உற்று நோக்குபவனே ஏட்டுப் படிப்புடன் அனுபவத்தையும் சொன்னவனே ஏகாந்த உலகிற்கு எதைத்தேடி போனாய்?"   "ஐம்புலனை அறிவோடு தெரிந்து பயன்படுத்தி ஐங்கணைக்கிழவனின் அம்பில் அகப்படாமல் இருந்து ஐவகை ஒழுக்கத்தை இறுதிவரை கடைப்பிடித்தவனே ஐயகோ, எம்மை மறக்க மனம்வந்ததோ?"   "ஒழுக்கமாக பொறியியல் வேலை பார்த்து ஒழிக்காமல் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து ஒள்ளியனாக பலரும் உன்னை போற்ற ஒற்றுமையாக என்றும் வாழ எண்ணியவனே!"   "ஓரமாய் ஒதுங்கி மற்றவர்களுக்கும் வழிவிட்டு ஓடும் உலகுடன் சேர்ந்து பயணித்தவனே ஓங்காரநாதம் போல் உன்ஓசை கேட்டவனை ஓதி உன்நினைவு கூற ஏன்வைத்தாய்?"   "ஔவியம் அற்றவனே சமரசம் பேசுபவனே ஔடதவாதி போல் ஏதாவதை பிதற்றாதவனே ஔரப்பிரகம் போல் பின்னல் செல்லாதவனே ஒளசரம் போல் உன்நடுகல் ஒளிரட்டுமே!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈடணம் - புகழ் ஈடிகை - எழுதுகோல் ஈமத்தாடி - சிவன் உணக்கம் - உலர்ந்ததன்மை ஊறு - இடையூறு ஊனம் - உடல் குறை, இயலாமை எய்யாமை - அறியாமை ஏகாகாரம் - சீரான முறை ஏட்டுப் படிப்பு - புத்தாக படிப்பு ஏகாந்தம் - தனிமை ஐங்கணைக்கிழவன் - மன்மதன். ஐவகை ஒழுக்கம் - கொல்லாமை, களவு செய்யாமை, காமவெறியின்மை, பொய்யாமை, கள்ளுண்ணாமை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன்; மேன்மையானவன் ஓகை - உவகை, மகிழ்ச்சி ஔவியம் - பொறாமை, அழுக்காறு ஔடதவாதி - ஒருமதக்காரன், மூலிகையிலிருந்து ஜீவன் உற்பத்தியாயிற்றென்று கூறுவோன் ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை. ஒளசரம் - கோடாங்கல் / உயரத்தில் இருக்கும் கூர்மையான கல் அல்லது உச்சக்கல்   [my own eulogy / A tribute written by myself to my death]        
    • ஏன் ராசா ஏன்??  ஆனால் கேள்விக்கு பதில் சொல்லாமல் போவது நன்றன்று. இல்லை இல்லை இல்லை 🤣
    • டுபாய் தன்னைப் பற்றி கட்டி வைத்திருந்த பிம்பம் உடைந்து போய்விட்டது இதனால். கடும் புயலும், மழையும் அதனால் வெள்ளமும் வரும் என்பதை ஏற்கனவே வானிலை எதிர்கூறல்கள் எச்சரித்து இருந்தும், அருகே இருக்கும் ஓமானில் இதே நிலை ஏற்பட்டதை கண்டும், எந்தவொரு முன்னேற்பாட்டையும் செய்து இருக்கவில்லை, முக்கியமாக டுபாய் விமான நிலைய நிர்வாகம். ஆயிரக்கணக்கானவர்கள் 30 மணித்தியாலங்களுக்கு மேல் விமான இன்றி தவித்து கிடந்த போதும், தண்ணீர் கூட அவர்களுக்கு விமான நிலைய ஊழியர்களால் வழங்கப்படவில்லை. குழந்தைகளுடன் பயணித்தவர்களுக்கு பால்மா, nappies கூட கொடுக்கப்படவில்லை என்று ஊடகங்கள் கூறுகின்றன. சிலர் 24 மணி நேரத்தும் மேலாக சாப்பாடு இல்லாமல் இருந்துள்ளனர். விமான நிலையத்தில் இருந்த அனைத்து உணவு விடுதிகளும் பூட்டப்பட்டுள்ளதாம். அதே போன்று செக் இன் கவுண்டரிலும் (check in counters), விமான சேவை கவுண்டர்களிலும் ஒரு ஊழியரும் இல்லாமையால், அடுத்தது என்ன என்று தெரியாமல் பலர் பிள்ளைகளுடன், குழந்தைகளுடன் தவித்து போய் விட்டனர்.  பல Mall களில் புயல் வரும் முன் மக்களை உள்ளே அனுமதித்து விட்டு, புயல் தொடங்கிய பின் கடைகளை இழுத்து மூடி, வந்தவர்களை தவிக்க விட்டுள்ளனர். Mall களில் இருந்து தம் தங்குமிடத்திற்கு செல்ல முடியாமல் பல நூறு உல்லாசப் பயணிகள் அல்லாடியிருகின்றனர். இதற்கு எல்லாம் மேலாக, Cloud seeding இனால் தான் இந்த புயல் வந்தது என்று அங்குள்ள சமூக வலைத்தளங்களில் முட்டாள் தனமாக ஒரு கூட்டம் வதந்தியை பரப்பிக் கொண்டு இருக்கு. Cloud seeding இனால், சாதரணமாக சிறு தூறல்களையும், சிறு மழையையும் தான் தருவிக்க முடியும். ஆனால் புயலை அல்ல,
    • ரணில் "தனது  மினி"யை... வழமைபோல் வீட்டின்  பின்பக்கம் தான் பார்க் பண்ணுவார். 😂 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.