Jump to content

இலங்கை மாணவி கற்பழிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாண்டிச்சேரி ஜிப்மரில் இலங்கை மாணவி பாலியல் வல்லுறவு

பிப்ரவரி 08, 2006

பாண்டிச்சேரி:

பிரபலமான புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் இலங்கை மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததால் புதுவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த மீனா என்ற மாணவி புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகிறார். அவரும் அவருடன் படிக்கும் அனந்து என்ற மாணவரும், கல்லூரி வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே நின்று பேசிக் கொண்டிருந்தபோது 3 பேர் கொண்ட ஒரு கும்பல் அங்கு வந்துள்ளது.

மாணவர் அனந்துவை அடித்து அங்கிருந்த ஒரு மரத்தில் அக்கும்பல் கட்டிப் போட்டது. பின்னர் அந்த மாணவர் கண் முன்பாகவே, மீனாவை அக்கும்பல் கற்பழித்துள்ளது. பின்னர் அக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

படுகாயம் அடைந்த மாணவர் அனந்து மற்றும் மீனாவை சக மாணவர்கள் அங்கிருந்து மீட்டு கல்லூரி விடுதிக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பாலியல் வல்லுறவு சம்பவத்தில் முக்கியப் பிரமுகர்களின் மகன்கள் அடங்கியுள்ளதால் இந்த கொடூர சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்யத் தயங்குவதாக செய்தி வெளியாகியுள்ளது.

பிரபலமான ஜிப்மர் கல்லூரி வளாகத்திற்குள் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது மருத்துவக் கல்லூரியிலும், புதுவையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தட்ஸ்தமிழிலிருந்து செய்தி

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply

மாணவி மீதான காட்டுமிராண்டித் தனத்தை வன்மையாக கண்டிப்பதோடு இது தொடர்பில் சிறீலங்கா அரசு உயர்மட்ட விசாரணைக்கு இந்திய மத்திய அரசை நிர்ப்பந்திக்க வேண்டும்..!

முன்னரும் தமிழகத்தில் இலங்கை தமிழ் மாணவியர் பாலிய வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்..! அண்மையில் பிரித்தானிய சுற்றுலாப் பயணி ஒருவர் தாய்லாந்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டதுக்கு பிரித்தானிய அரசின் அழுத்தத்தில் தாய்லாந்து உயர்மட்ட விசாரணைகளை முடுக்கி குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த முடிவு செய்தது..! ஆனால் இலங்கை மாணவியருக்கோ இது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு சிறீலங்கா அரசின் மெத்தனப் போக்கும் காரணமாகும்..! காட்டுமிராண்டிகளுக்கு மனித குலத்தில் இடமளிக்கக் கூடாது எனியும்..! :idea: :shock: :idea:

Link to comment
Share on other sites

இலங்கை அரசு நடவடிக்கை எடுக்குமோ இல்லையோ புதுவை அரசு குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும். :oops: :oops:

Link to comment
Share on other sites

என்னையா இவ்வளவு தொடர் நாடகங்கள், படங்களை பார்த்தபின்பும் அவர்களை நடவடிக்கை எடுக்கச் சொல்கிறீர்களே :P :P இதெல்லாம் அங்கு நடக்கிற கதையா :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்ம்ம்.... பாரதமாதாவின் புதல்வர்களின் அற்புதங்களில் இன்னொன்று .....

என்ன இலங்கை அரசு இந்திய அரசை விசாரணைக்கு நிர்ப்பந்திக்க வேண்டுமா????

எந்த யுகத்தில் நாமிருக்கிறோம்???? இலங்கைத்தீவில் சிங்களக் காடையர்கள்/இராணுவங்களினால் எத்தனை கற்பளிப்புகள், எத்தனை கொலைகள் தமிழ்ப் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவிட்டன!! எத்தனை கொலைகளுக்கு, கற்பளிப்புகளுக்கு விசாரனை நடாத்தினார்கள்??? எத்தனைபேர் தண்டிக்கப்பட்டார்கள்???

விடிய விடிய ராமர் கதையாம்!! விடிச்சாப்பின் ராமர் ...... :shock:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகத்தான் நீ சவுதியிலை பாத்திருப்பாய்தானே, உங்க குடுக்கிற தண்டனையினைத்தான் உந்தப்படுபாவிகளுக்குக் கொடுக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

இந்த சம்பவம் பற்றி இன்னமும் முறையான தகவல் வெளியுலகத்துக்கு கிடைக்கவில்லை.... பாதிக்கப்பட்ட பெண்ணின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவரைப் பற்றியச் செய்திகளை காவல்துறை பகிரங்கமாக வெளியிடவில்லை.....

பெண்கள் முடிந்தவரை தனிமையான இடங்களில் காதலர்களையோ, நண்பர்களையோ சந்திப்பதை தவிர்க்க வேண்டும்..... கலாச்சாரத்தை காக்க பெண்களால் மட்டுமே முடியும் என்று கருதுகிறேன்.....

Link to comment
Share on other sites

லக்கிலுக் கின்ர கதையைப்பார்த்தால் பெண் தனியாக எங்கையும் போக ஏலாது , :twisted: எப்பவும் ஒரு பாதுகாவலர் வேணும் என்ற கருத்தை முன்வைக்க நினைக்கிறார் ..........

:evil: :evil: அட இதுதான் அவர் இமயமாக நில்லடா என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார். .... :x :x :?:

Link to comment
Share on other sites

.....

பெண்கள் முடிந்தவரை தனிமையான இடங்களில் காதலர்களையோ, நண்பர்களையோ சந்திப்பதை தவிர்க்க வேண்டும்..... கலாச்சாரத்தை காக்க பெண்களால் மட்டுமே முடியும் என்று கருதுகிறேன்.....

ஒருகை தட்டி ஓசை வராது. இரண்டு கைகளும் சேர்ந்து தட்டப்படவேண்டும். கலாச்சாரத்தை பாதுகாக்கும் பொறுப்பை பெண்களின் தலையில் சுமத்திவிட்டு தப்பிக்கும் எண்ணம் வேண்டாம். கற்பு என்றால் பெண்ணிற்கு மட்டும், கலாச்சாரப் பாதுகாப்பு என்றால் பெண்ணிற்கு மட்டும் ஆனால் சுதந்திரம் ஆண்களிற்குத் தான் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு அனைவரும் பங்கேற்க வேண்டும்.

Link to comment
Share on other sites

அய்யா,

அந்தப் பெண் தனிமையில் அவள் காதலனுடன் 'குரூப் ஸ்டடி' செய்தாளாம்.... இப்படி ஒரு கேவலமான செயல் செய்ததற்காகத்தான் அவளுக்கு இந்த கொடூரம் நேர்ந்திருக்கிறது.....

உடனே பெண் சுதந்திரம் அது இது என்று வேலைக்காகாத கதைகள் வேண்டாம்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதலன் கண்முன் அட்டூழியம், ஜிப்மர் மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்

புதுச்சேரி, பிப். 9- காதலனை கட்டிப் போட்டுவிட்டு மருத்துவக் கல்லூரி மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. காமுகர்களிடம் இருந்து தப்பி நிர்வாணமாக ஓடிவந்த மாணவிக்கு, தன் லுங்கியைக் கொடுத்து காப்பாற்றினார் மருத்துவமனை செக்யூரிட்டி. இந்த சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுவை ஜிப்மர் மருத்துவ கல்லூயில் வெளிநாட்டைச் சேர்ந்த மீனா இறுதி ஆண்டு படித்து வருகிறhர். தன்னுடன் படிக்கும் புதுவையைச் சேர்ந்த சுரேஷை (பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன) காதலிக்கிறார். தேர்வில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம் இருவருக்கும் இருந்தது. இதற்காக, காதல் ஜோடியினர் எந்த நேரமும் புத்தகமும் கையுமாக இருப்பார்கள். ஒருவருக்கொருவர் சந்தேகங்களை கேட்டு தீர்த்துக் கொள்வார்கள். ஜிப்மர் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அருகே உள்ள தண்ணீர் தொட்டி பக்கத்தில் தொந்தரவு அதிகம் இருக்காது என்பதால் அதுதான் இவர்களின் படிப்பகமாக இருந்தது.

கடந்த 2-ம் தேதி ஜிப்மரில் பட்டமளிப்பு விழா நடந்தது. இதனால் மாணவ, மாணவிகள் எல்லாரும் அதில் பிஸியாக இருந்தனர், ஆனால் காதல் ஜோடியான மீனா-சுரேஷ் மட்டும் வழக்கமான இடத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந் தனர். தங்களை மறந்து படித்து கொண்டிருந்த போது மாண விக்கு சோதனை ஏற்பட்டது,அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல் ஒன்று மாணவி மீனா விடம் கலாட்டா செய்து சில் மிஷம் செய்யத் தொடங்கினர். இதை தட்டிக்கேட்ட சுரேஷை அடித்து உதைத்தனர். மயங்கி விழுந்தவாpன் வாயில் துணியை வைத்து மரத்தில் கட்டிப்போட்டனர். காமவெறி கொண்ட அந்த கும்பல், காதலன் சுரேஷ் கண் முன்னாலேயே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். காமுகர்களிடம் இருந்து தப்பிக்க மாணவி எவ்வளவோ முயற்சித்தார், அலறி துடித்து சத்தம் போட்டார். ஆனால் அவரது அலறல், பட்டமளிப்பு விழாவின் சத்ததில் யார் காதிலும் விழவில்லை.

பின்னர் அங்கிருந்து அந்த கும்பல் தப்பி ஓடி விட்டது. மயங்கிக் கிடந்த மீனா, சிறிது நேரம் கழித்து கண் விழித்தார். அப்போது இரவு 11 மணி இருக்கும். தான் முழு நிர்வாண மாக்கப்பட்டு சிதைக்கப்பட்டதை உணர்ந்து கதறினார். பயந்து அலறியபடி மருத்துவக் கல்லூ அவசர சிகிச்சைப் பிரிவு பகுதியை நோக்கி ஓடி வந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த செக்யூரிட்டி ஒருவர், தன் அறையில் வைத்திருந்த லுங்கியை எடுத்து வந்து மாணவியின் உடலில் போர்த்தியுள்ளார். பின்னர், அவரை அவசர சிகிச்சைப் பிhpவில் சேர்த்து உள்ளனர்.

இதுபற்றி ஜிப்மர் டைரக்டர் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு தகவல் தொpவிக்கப்பட்டது. மாணவியிடம் விசாரித்தபோது, எதுவும் புரியாத மனநிலையில் பேசி யுள்ளார். மனநல பெண் மருத்துவர் வரவழைக்கப்பட்டு அந்த மாணவிக்கு சிகிச்சை மற்றும் கவுன்சிலிங் அளித்துள்ளனர்.

கொஞ்சம் தௌp வடைந்ததும் காதலன் சுரேஷை பற்றி மீனா கூறியுள்ளார். அதன்பிறகே மரத்தில் கட்டிப் போடப்பட்டிருந்த சுரேஷை தூக்கி வந்து சிகிச்சை அளித்துள்ளனர். விஷயம் வெளியே தொpய கூடாது கூடாது என்பதற்காக இருவருக்கும் இப்போது ஹாஸ்டலில் வைத்தே சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து ஜிப்மர் தொழிற்சங்க தலைவர் ஒருவர் கூறுகையில், …சம்பவம் நடந்தது உண்மை தான். அந்த செக்யூரிட்டி மனிதநேய மிக்கவர். அந்த பெண்ணின் பரிதாபத்தை பார்த்து தன்னால் முடிந்த உதவியை செய்து மானம் காத்துள்ளார். விஷயம் வெளியே தொpந்தால் அவமானமாகி விடும் என அந்த மாணவி கேட்டுக் கொண்டதால் தான் வெளியே சொல்லவில்லை. மாணவ- மாணவிகளின் பாதுகாப்பு விஷயத்தில் டைரக்டர் தனி கவனம் செலுத்து வேண்டும்† என்றhர்.

ஜிப்மர் மாணவர்கள் சிலரிடம் கேட்ட போது, …மாலை 6 மணிக்குமேல் விடுதியிலும், டாக்டர்கள் குடியிருப்பு பகுதியிலும் யாரும் நுழையக் கூடாது என்ற கட்டுப்பாடு பெயரளவில் மட்டுமே உள்ளது. சமூக விரோதி கள் ஜிப்மர் வளாகத்தில் திரிவது குறித்து டைரக்ட்ரிடம் புகார் அளித்தோம். அதன் பிறகும் நிலைமை மாறவில்லை† என்றனர்.

இச்செய்தி நேற்று தமிழ்முரசில் வெளியான பிறகு ஜpப்மர் மருத்துவ கல்லூரி மாணவர், மாணவியர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அத்துமீறி உள்ளே நுழைந்த சமூக விரோதிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோhp மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இயக்குநரை சந்திந்த்து புகார் மனுவை கொடுத்தனர். இச்சம்பவம் பற்றி சீனியர் சூப்பிரண்டு ஸ்ரீகாந்த் கேட்டதற்கு, என்னிடமோ, கோரிமேடு போலீஸ் சரகத்திற்கோ எந்த விதமான புகார் ஒன்றும் வரவில்லை† என்றார்.

தினகரனிலிருந்து

Link to comment
Share on other sites

அய்யா,

அந்தப் பெண் தனிமையில் அவள் காதலனுடன் 'குரூப் ஸ்டடி' செய்தாளாம்.... இப்படி ஒரு கேவலமான செயல் செய்ததற்காகத்தான் அவளுக்கு இந்த கொடூரம் நேர்ந்திருக்கிறது.....

உடனே பெண் சுதந்திரம் அது இது என்று வேலைக்காகாத கதைகள் வேண்டாம்.....

அவர்கள் காதலர்கள் சேர்ந்து படிச்சதில தப்பில்லை..! அது அவங்கட சுதந்திரம். ஆனா அதை அவங்க கிரிமினல்கள் உலா வரும் ஒரு கல்லூரியில் தவறான இடத்தில் தவறான நேரத்தில இருந்து செய்ததுதான் கிரிமினல்களுக்கு கிறைம் பண்ண வாய்ப்பாயிட்டு..! சிறீலங்காவில் கூட ஒரு இந்தியப் பெண்மணி கணவனின் முன் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்..அதைச் செய்தது சிங்களக் காடையர்கள்..! இந்திய அரசின் அழுத்தத்தின் பெயரில் அதை கண்டித்து சிறீலங்காவில் பெண்கள் ஆர்ப்பாட்டமே செய்தனர்..இந்தியாவில் இது நடக்குமா..??! ஊர் நினைத்தால் காடையர்களின் கொட்டத்தை அடக்கலாம்...! ஊரே காடைத்தனமா இருந்தா...???! எப்படி அடக்கிறது..! :shock: :idea:

Link to comment
Share on other sites

லக்கிலுக் கின்ர கதையைப்பார்த்தால் பெண் தனியாக எங்கையும் போக ஏலாது , :twisted: எப்பவும் ஒரு பாதுகாவலர் வேணும் என்ற கருத்தை முன்வைக்க நினைக்கிறார் ..........

:evil: :evil: அட இதுதான் அவர் இமயமாக நில்லடா என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார். .... :x :x :?:

ஏன் லக்கி அப்படிச் சொல்லறார் எண்டு தெரியுமா அவங்க ஊரில பெண்களுக்கான பாதுகாப்பு அந்தளவு தான் போல :roll: :roll:

அதென்ன பெண்கள்தான் கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும் அப்ப அவங்களை பர்தா போட்டு கிச்சனில சமைக்க சொன்னா பிரச்சனை முடிஞ்சிடுமே :evil:

Link to comment
Share on other sites

அந்தப் பெண் தனிமையில் அவள் காதலனுடன் 'குரூப் ஸ்டடி' செய்தாளாம்.... இப்படி ஒரு கேவலமான செயல் செய்ததற்காகத்தான் அவளுக்கு இந்த கொடூரம் நேர்ந்திருக்கிறது.....

Link to comment
Share on other sites

பெண்களை பொறுத்தவரை அவர்களுக்கு வீட்டில் கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது என்பதே என் வாதம்.... காதலரை சந்திக்க எவ்வளவோ பொது இடங்கள் இருக்கிறது.... அது என்ன தனிமையில் தான் சந்திக்க வேண்டுமா? பிரச்சினை வரும் என்று தெரிந்தே நெருப்போடு விளையாடலாமா? அந்த காதலனின் மனமே கூட தனிமையின் காரணமாக சஞ்சலப்பட வாய்ப்பிருக்கிறதே?

Link to comment
Share on other sites

பெண்களை பொறுத்தவரை அவர்களுக்கு வீட்டில் கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது என்பதே என் வாதம்.... காதலரை சந்திக்க எவ்வளவோ பொது இடங்கள் இருக்கிறது.... அது என்ன தனிமையில் தான் சந்திக்க வேண்டுமா? பிரச்சினை வரும் என்று தெரிந்தே நெருப்போடு விளையாடலாமா? அந்த காதலனின் மனமே கூட தனிமையின் காரணமாக சஞ்சலப்பட வாய்ப்பிருக்கிறதே?

அது ஏன் பெண்களிற்கு மட்டும் கட்டுப்பாடு போட நினைக்கிறீர்கள். அதுதான் புரியாத புதிராக இருக்கிறது. :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

அது ஏன் பெண்களிற்கு மட்டும் கட்டுப்பாடு போட நினைக்கிறீர்கள். அதுதான் புரியாத புதிராக இருக்கிறது. :roll: :roll: :roll:

ஆண்களை யாரும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவது இல்லையே.... அதனால் தான்.....

Link to comment
Share on other sites

பெண்களை பொறுத்தவரை அவர்களுக்கு வீட்டில் கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது என்பதே என் வாதம்.... காதலரை சந்திக்க எவ்வளவோ பொது இடங்கள் இருக்கிறது.... அது என்ன தனிமையில் தான் சந்திக்க வேண்டுமா? பிரச்சினை வரும் என்று தெரிந்தே நெருப்போடு விளையாடலாமா? அந்த காதலனின் மனமே கூட தனிமையின் காரணமாக சஞ்சலப்பட வாய்ப்பிருக்கிறதே?

பெண்களுக்கு யார் சுதந்திரம் கொடுக்க வேண்டும்..அவங்களுக்கு இயல்பா எல்லா சுதந்திரமும் எல்லா மனிதரைப் போலவும் இருக்கு..! அதை தடுக்க முடியாது. ஒழுக்கம் என்பது பெண்களுக்கு மட்டுமல்ல...எல்லோருக்கும் அவசியமானது கட்டாயமானது. அதைப் பெண்கள் மீறினும் சரி ஆண்கள் மீறினும் சரி கண்டிக்க வேண்டும்..! ஆனால் காதலியோடு மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்காமல் தனிமையான இடத்தில் என்ன சொர்க்கத்தில் இருந்தாலும் சஞ்சலப்பட வேண்டிய அவசியமில்லை ஒழுக்கமுள்ள காதலனுக்கு..! காதலியே சஞ்சலப்படாத போது இவர்களுக்கு என்ன சஞ்சலம்..! காதல் என்ற பெயரில் கருமாந்திரம் பண்ண நினைப்பவர்கள் சஞ்சலப்படலாம்..அப்படியானவர்க

Link to comment
Share on other sites

குருவிகள்,

அந்தப் பெண்ணின் நடவடிக்கை சரி இல்லாததால் அவள் இவ்வளவு பெரிய இன்னலுக்கு ஆளாக நேரிட்டது.... பட்டமளிப்பு விழா நடந்து கொண்டிருந்த நேரத்தில் அந்தப் பெண் யாரும் போகத் தயங்கும் இடத்துக்கு சென்றது அந்தப் பெண்ணின் முட்டாள் தனம்.... வேலியில் போற ஓணானை எடுத்து மடியில் விட்டுக்கொண்டு குத்துதே, குடையுதே என்பது முட்டாள்தனம்..... வருமுன் காப்பதே புத்திசாலித்தனம்.....

Link to comment
Share on other sites

குருவிகள்,

அந்தப் பெண்ணின் நடவடிக்கை சரி இல்லாததால் அவள் இவ்வளவு பெரிய இன்னலுக்கு ஆளாக நேரிட்டது.... பட்டமளிப்பு விழா நடந்து கொண்டிருந்த நேரத்தில் அந்தப் பெண் யாரும் போகத் தயங்கும் இடத்துக்கு சென்றது அந்தப் பெண்ணின் முட்டாள் தனம்.... வேலியில் போற ஓணானை எடுத்து மடியில் விட்டுக்கொண்டு குத்துதே, குடையுதே என்பது முட்டாள்தனம்..... வருமுன் காப்பதே புத்திசாலித்தனம்.....

சரி அந்தக் காதலர்களின் நடவடிக்கை அந்த இடத்தில் சரியில்லை என்றால் அவர்களை கண்டித்து சீர்படுத்துவதைச் செய்யாமல் இன்னும் மூன்று பேர் போய் அவளைச் சீரழிப்பதுதான் நியாயமா..???! உண்மையில் அவர்கள் தவறாக நடந்து கொண்டதாக தகவல்கள் இல்லை. பரீட்சைக்கு படித்ததாகத்தான் தகவல்..! எப்படி இருப்பினும் காதலர்களின் தவறுக்கு காடைத்தனமாக தண்டனை கொடுக்க காடையர்களுக்கு உரிமையில்லை..! :idea: :idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.