Jump to content

இது மக்கள் ஆட்சியா ?


Recommended Posts

எழுத்தாளர் சவுக்கு சனிக்கிழமை, 12 நவம்பர் 2011 16:52

WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its citizens: JUSTICE, social, economic and political;LIBERTY of thought, expression, belief, faith and worship; EQUALITY of status and of opportunity; and to promote among them all

FRATERNITY assuring the dignity of the individual and the unity and integrity of the Nation;

இந்திய மக்களாகிய நாம், இந்தியாவை இறையாண்மை கொண்ட சமதர்ம, சமய சார்பற்ற, மக்களாட்சிக் குடியரசாக அமைப்பது என்ற உறுதி ஏற்றுள்ளோம். இதன் மூலம், இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களையும் பாதுகாப்போம் என்று நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் முன்னுரை சொல்கிறது.

கடந்த ஒரு வாரமாக, கிங்பிஷர் ஏர்லைன்ஸின் விமானங்கள் நூற்றுக்கும் மேற்பட்டவை ரத்து செய்யப் பட்டுள்ளன. கிங்பிஷர் விமான நிறுவனம் நொடித்துப் போகும் அளவை எட்டியுள்ளது.

Kingfisher_Airlines.jpg

நேற்று, செய்தியாளர்களிடம் பேசிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் வயலார் ரவி, விஜய் மல்லையா என்னிடம் பேசினார். நான் இது தொடர்பாக நிதி அமைச்சரிடம் பேசி, வங்கிகளிடம் பேசி, கிங்பிஷர் நிறுவனத்திற்கு வழங்கப் பட்டுள்ள கடன்களை மாற்றி அமைத்து, அந்நிறுவனத்தை மாற்றியமைக்க முடியுமா என்று பேசியிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கிங்பிஷர் நிறுவனத்துக்கு தற்போது இருக்கும் மொத்த கடன் 7057 கோடி ரூபாய். கிங்பிஷர் நிறுவனம் தற்போது சந்தித்துள்ள மொத்த நஷ்டம் மார்ச் 31 அன்று உள்ளபடி 4283 கோடி ரூபாய். இந்நிறுவனம் 2005ல் தொடங்கியதிலிருந்து இது வரை ஒரு பைசா கூட லாபமாக சம்பாதிக்கவில்லை. 20011 தொடக்கத்தில், கிங்பிஷர் நிறுவனத்துக்கு கொடுக்கப் பட்ட கடன் திரும்ப வசூல் செய்வதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி, தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளை, கடனுக்கு பதிலாக கிங்பிஷர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கிக் கொள்ளச் சொல்லி பரிந்துரைத்தது.

அந்தப் பரிந்துரையின் அடிப்படையில், தேசியமயமாக்கப் பட்ட 13 வங்கிகள் கிங்பிஷர் நிறுவனத்தின் பங்குகளை ஒரு பங்கு 63 ரூபாய்க்கு (அப்போதைய கிங் பிஷர் பங்கு மதிப்பு ரூ.40) தற்போது கிங்பிஷர் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.19.65. வங்கிகளுக்கு தரவேண்டிய கடன் தொகை போக, கிங்பிஷர் நிறுவனம், தேசிய எண்ணை நிறுவனங்களுக்கு தர வேண்டிய தொகை என்ன தெரியுமா ? இந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) நிறுவனத்துக்கு 600 கோடி. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு 250 கோடி (BPCL) இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு (IOCL) 200 கோடி. எண்ணை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்ற காரணத்தால், வாரத்திற்கு ஒரு முறை பெட்ரோல் விலையை உயர்த்தும் நிதி அமைச்சகமும், பெட்ரோலியத் துறை அமைச்சகமும் மல்லையாவிடம் ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என்பது அவர்கள் மனசாட்சிக்குத் தான் தெரியும்.

kingfisher-flight-attendants.jpg

இந்த மல்லையா யாரென்பது, தெரியுமா ?

3008135618_18ff1928de_b.jpg

மிகப் பெரிய சாராய அதிபர். யுனைட்டட் ப்ரூவரிஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர். 2005ல் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தொடங்குகிறார். இவர் ஒரு சோக்காளி. பணக்காரர்களையும் பெண்களையும் அழைத்து அவ்வப்போது பார்ட்டி கொடுப்பது இவரது பொழுது போக்கு. இவரது பார்ட்டிகளில் கலந்து கொள்ளாத நடிக நடிகைகளே இல்லை எனலாம். ஆண்டுதோறும் கிங்பிஷர் காலண்டர் என்ற பெயரில் மாடல் அழகிகளை வைத்து காலண்டர் தயாரித்து வெளியிடுவார்.

2278167688_9d7c9f06c7_z.jpg

112943-vijay-mallya-and-sameera-reddy-at-kingfisher-calendar-launch-20.jpg

4798993934_61e51091d7_b.jpg

எல்லா தொழிலிலும் இறங்கி விட்டோம். அரசியலிலும் இறங்கலாம் என்று 2000த்தில் ஜனதா கட்சியில் சேர்ந்து கர்நாடகா முழுவதும் வேட்பாளர்களை களத்தில் இறக்கினார். ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல், இவர் கட்சி மண்ணைக் கவ்வியது. ஆனால் பின்னாளில் ராஜ்ய சபா எம்பி தேர்தலில், பணம் கொடுத்து, ஜனதா தளக் கட்சி வேட்பாளரை தோற்கடித்து, சுயேட்சையாக எம்.பி ஆனார்.

பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் என்ற பெயரில் ஐபிஎல் டீமை சொந்தமாக வைத்துள்ளார். எப் 1 பார்முலா ரேசில், போர்ஸ் ஒன் என்ற பெயரில் ஒரு டீம் வைத்துள்ளார்.

தென் ஆப்ரிக்காவில் இந்தியக் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி நடைபெற்ற போது, இந்தியாவில் இருந்து சொந்த விமானத்தில் பல்வேறு எம்பிக்களை அழைத்துச் சென்றார்.

இந்த மல்லையாவுக்குத் தான் தற்போது நெருக்கடி. இவருக்குத் தான் உதவி செய்ய வேண்டும் என்று மத்திய விமானத்துறை அமைச்சர் வயலார் ரவி பரிந்து பேசியுள்ளார்.

இது ஒரு பக்கம். மற்றொரு பக்கம். 1995 முதல் 2010 வரையிலான ஆண்டுகளில் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை மட்டும் 2,56,913. இது வேலை வெட்டி இல்லாத சமூக ஆர்வலர்கள் தொகுத்த கணக்கீடு அல்ல. மத்திய அரசின் தேசிய குற்றவியல் கணக்கிடும் பிரிவு வெளியிட்டுள்ள எண்ணிக்கை இது.

Farm_Suicides__All__820602a_1.jpg

கடன் தொல்லைகள் காரணமாக விவசாயிகள் தற்கொலை என்ற செய்தி வரும்போதெல்லாம் கண் துடைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் மத்திய மாநில அரசுகள், விவசாயிகளின் கடன் பிரச்சினையையும், அவர்கள் தற்கொலையையும் வெறும் எண்ணிக்கையான மட்டுமே பார்க்கின்றன என்பதே வேதனை தரும் விஷயம்.

6103691877_bb5b946617_o.jpg

இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களையும் பாதுகாப்போம் என்று அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் உறுதி மொழி எடுத்துக் கொண்டுள்ள அரசியல்வாதிகள் கண்களுக்கு மல்லையாக்களும், ரத்தன் டாடாக்களும், அம்பானிகளும் மட்டுமே குடிமக்களாகத் தெரிகிறார்கள் என்பதுதான் வேதனை.

இது மக்கள் ஆட்சியாம்.......!!!!!!

http://savukku.net/home1/1359-2011-11-12-11-36-53.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி நாரதர்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தொடர்ச்சியாக ஒரு மாத காலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு குறைவடைந்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. தினசரி இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ நாணயமாற்று விகித அறிவித்தலின் படி, செவ்வாய்க்கிழமை (19) தரவுகளின் பிரகாரம், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் கொள்முதல் பெறுமதி ரூ.299.29 ஆகக் காணப்பட்டது. இந்தப் பெறுமதி ஒரு மாத காலப்பகுதிக்கு முன்னர் சுமார் 322-325 ரூபாய்களுக்கு இடைப்பட்டதாகக் காணப்பட்டது. இவ்வாறு ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் உயர்வடைவது தொடர்பில் போது மக்கள் மத்தியில் தெளிவற்ற ஒரு மனநிலை காணப்படுவது புலனாகின்றது. பொதுவில் சந்தையில் மிகையாகக் காணப்படும் டொலர்களை இலங்கை மத்திய வங்கி கொள்வனவு செய்து, தனது இருப்பை அதிகரித்துக் கொள்ளும். அத்துடன், நாட்டில் இறக்குமதி வீழ்ச்சி ஏற்பட்டு, டொலர்களுக்கான கேள்வி குறைவடைந்திருக்கும். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுவதால், நாட்டினுள் டொலர் வரத்து அதிகரித்திருக்கும் போன்ற பல்வேறு காரணிகள் முன்வைக்கப்படலாம். எவ்வாறாயினும், தேர்தல் தொடர்பில் பரவலாகப் பேசப்படும் நிலையில், அதை இலக்காகக் கொண்டு இந்த ரூபாய் மதிப்பு உயர்வு நடவடிக்கை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றதா என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை. குறிப்பாக, அண்மைய வாரங்களில் பரவலாகப் பேசப்பட்ட, மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான விடயத்தைத் தொடர்ந்து, மத்திய வங்கியின் ஆளுநர் அடங்கலாக, மத்திய வங்கியின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையில் ஒருவிதமான பின்னடைவு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த பிரச்சினையைச் சீர் செய்யும் வகையில், அரசாங்கத்துக்கு அதன் பிரபல்யத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் போது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய ஒரு கட்டாயத்திலுள்ளார். குறிப்பாக தேர்தல் காலம் என்பதால், அடுத்தமாதம் வரவுள்ள பண்டிகைகளை போது மக்கள் கொண்டாடுவதற்கு வழிவகை செய்யும் வகையில், இந்த நகர்வு மேற்கொள்ளப்படுகின்றதா அல்லது இந்த பெறுமதி உயர்வு உண்மையில் நிலைபேறானதா? தேர்தலின் பின்னர் கடந்த காலங்களைப் போன்று, டொலரின் பெறுமதி சடுதியாக 400 ரூபாயை தொட்டுவிடுமா போன்ற கேள்விகளும் இல்லாமல் இல்லை. அத்துடன், வெளிநாட்டுக் கடன்கள் மீளச் செலுத்துவது இன்னமும் ஆரம்பிக்கப்படாத நிலையில், அவற்றை செலுத்த ஆரம்பிக்கையில், இந்தப் பெறுமதிக்கு என்ன நடக்கும் போன்ற தெளிவுபடுத்தல்களை மக்களுக்கு வழங்க வேண்டிய மத்திய வங்கியின் பொறுப்பிலுள்ள அதிகாரிகளின் கடமையாகும். அத்துடன், ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி மீண்டும் அடுத்த மாதம் முதல் 15 வீதமாக குறைக்கப்படவுள்ளமை தொடர்பிலும் அரசாங்க தரப்பிலிருந்து தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இவ்வாறான தீர்மானம் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டியது கட்டாயமானதாகும். தேர்தல் கண்துடைப்பாக இருந்துவிடக்கூடாது, மக்கள் முன்னரை விட தற்போது அதிகம் தெளிந்துள்ளமையை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.     https://www.tamilmirror.lk/ஆசிரியர்-தலையங்கம்/ரபயன-மதபப-வணடமனற-கறககபபடகனறத/385-334940
    • இந்த திரியில் சரியாக ஒரு கிழமைக்கு பின் வந்து கருத்து எழுதுகிறேன்.
    • நான் எழுதுவது அல்லது எழுத போவதாக சொல்வது 4ம் தர சரோஜாதேவி கதைகளோ, படங்களோ அல்லவே அண்ணை? ஆகவே அனுமதி தேவையில்லை. ஊக்குவிப்புக்கு நன்றி🤣 ஓம்….இன்னும் கனக்க இருக்கு….அண்ணனின் டகால்டி வேலைகளை …… விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம்🤣
    • பதவிக்கு வரும் முன்னே இவ்வளவு தில்லாலங்கிடி - இவரை நம்பி ஆற்றையும், மலையையும் கொடுத்தால்? போன தடவை தேர்தல் பத்திரத்தில் எத்தனை குளறுபடி? பதவிக்கு வர முன்னம் கருணாநிதி கூட இப்படித்தான் இருந்தார். இதை மக்கள் புரிந்தபடியால்தான் 2016 இல் இருந்து சத்துணவு முட்டையை மட்டும் கொடுக்கிறார்கள். நீங்கள் இவரை லிஸ்டில் சேர்கிறீர்களோ இல்லையோ அதில் ஒரு பலனுமில்லை. தமிழக மக்கள் இவரை அந்த லிஸ்டில் சேர்த்து கனகாலம். அடுத்த தேர்தலில் விஜை முதுகில் சவாரி செய்ய ஆசைபடுகிறார். பார்ப்போம்.  வட்டுக்கோட்டை!🤣
    • செந்தமிழன் சீமான் அண்ணா இம்முறை போட்டியிட்ட மக்களவைத் தொகுதி எது?  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.