Jump to content

ஈழத்தில் ஆழம் அறிய முடியாத காலப் பெரு வேர்கள்!


Recommended Posts

இப்போது கார்த்திகை மாதம்!

கரு மேகம் சூழ்ந்து இடி இறக்கி

எம் கண்ணீரில் வறண்டு போன

தேசத்திற்கு மழை பொழிந்து

காலப் பெரு வெளியில்

தமிழர் தம் வாழ்விற்காய்

கல்லறையுள் துயில் கொள்ளும்

ஞாலத்தில் வாழும் தெய்வங்களினை

நினைவு கூர்ந்து

குளிர்விக்கும் நன் நாள் இது!

karthigai-poo.jpg

அடிமைத்தளையுள் சிக்கி

தமிழன் உணர்வை தொலைத்து

வம்சம் தனை இழந்து

வாழ்வை பறி கொடுத்து

வந்தேறு குடி என சிங்களரால்

வழங்கப்படும் நாமத்தை பெற்று

வடக்கிலும் கிழக்கிலும் புதைந்து

உலகறியா இனமாக ஈழத் தமிழன்

உருமாறிச் சிதைந்திடுவான்

என இறுமாப்போடு

எமை அழிக்க வந்தோர்க்கு

தமிழர் தம் வீரம் உணர்த்தி

துயில் கொள்ளும்

குழந்தைகளை

நினைவு கூறும் நன் நாள் இது!

பேசும் தெய்வங்களும்

காவல் தெய்வங்களும்

எங்கே என அடி முடி தேடிய

தமிழர் தலை முறைக்கு

நும் அருகே இருக்கிறார்கள்

காவல் தெய்வங்கள்-

உமை(க்) காக்க வந்த தெய்வங்களாய்

கல்லறையினுள் துயில்கிறார்கள்

என சேதி சொல்லி எமை நிமிர்ந்து

நிற்கச் செய்த மழைக் கால மாவீரர் மாதமிது!

வீழும் தமிழர் இனம்;

தமைக் காக்க வழி தெரியாது

தம் எதிர் கால வாழ்வை

தொலைத்து சாகும் தமிழர் இனம்

என இனவழிப்பு நடனம் ஆடிய

இனவாதப் பேய்களுக்கு

ஆளப் பிறந்தவர்கள் தமிழர்கள் என

உணர்த்த ஒரு தானைத் தலைவனை

தந்ததும் இந்த மாதம் தான்!

கல்லறையை அழித்தோம்;

கருமமே கண் எனவாகி

தமிழர் தம் உணர்வுகளை

நீறாக்கி பொசுக்கி விட்டோம்;

போரில் பின்னடையை வைத்தோம்;

ஊரில் இருந்த உணர்வுள்ள

மனிதர்களையும் உருத் தெரியாதோர்

ஊடாக உருவம் அழித்தோம் - என

இறுமாப்பு கொண்டு நிற்கும்

இனவாத சித்தாந்தப் பேய்களுக்கு

மக்கள் தம் மனதில்

இன்றும் இவர்கள் இருக்கிறார்கள்

எனும் உண்மை தெரியாது போய் விட்டதே!!

Kallarai.jpg

நீங்கள் வாழும் தெய்வங்கள்!

எம் வாசல் வந்த பகையை

அழித்து எமை காத்து நின்ற

நடமாடும் செல்வங்கள்!

கண் முன்னே தரிசித்தோம்!

பகை கண்டு அஞ்சற்க

எனச் சொல்லி நின்றவர்கள்!

என மண் முன்னே நிற்கையிலும்

மன்னவனின் மொழியினை

மனதில் நிறுத்தி

தாயகம் ஒன்றே கனவெனக் கொண்டு - இன்று

வேரென எம்மோடு தொடரும்

பெரு விருட்சங்கள் நீவிர்!

கார்த்திகைப் பூவும்

கதிரவன் ஒளியும்

பார்த்திருக்கப் புலியானோர்

சேதிகளும்

உம் பாதம் தொடர்ந்தனவே!

வார்த்தைகள் கொண்டு உமை

எப்படிப் பாடி

கவிப் பா ஆக்கிடலாம் என

எண்ணினாலும் தமிழில்

ஏதும் சிக்கலையே எம் தேவரீரே!

நும் நினைவுகள்

எம் மனக் கனவுகள்!

கல்லறையை அழித்தோம்

என கூப்பாடு போடுவோர்

மனக் கல்லறையை

திறந்து பார்க்கா

இனத்துவேச மனிதர்களுக்கு

இன்றும் மக்கள் மனங்களில்

வாழ்கிறோம் யாம் என

சேதி உரைத்து நிற்கிறீர்களே!

உங்கள் கனவும் ஒரு நாள் பலிக்கும்

எனும் உணர்வோடு

நாமும் நடக்கிறோம்!

http://www.thamilnattu.com/2011/11/blog-post_03.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிருபன் பகிர்வுக்கு, எங்களை தாங்கிய வேர்கள் அவர்கள், தமிழன் என்ற ஒர் இனம் இருக்கும் வரை காவல் தெய்வங்களின் நினைவுநாள் நினைவு கூரப்படும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகைப் பூக்களின், கவிதை வலிக்கின்றது, நிரூபன்! நன்றிகள்!!!

Link to comment
Share on other sites

நன்றி நிருபன்! உணர்வு பூர்வமான கவி வரிகளுக்கு!

மாவீரர்கள் எங்கள் வீரத்தின் விதைகள்....!

எங்கள் மனத்தினில்தான் அவர்களைச் சுமக்கின்றோம்............ உணர்வுகளுடன்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.