Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பகுதியில் விடுதலைப் பாடல் இணைச்சு இருந்தேன்..கீளே ஒரு கேள்வி என்னை சிந்திக்க வைச்சது ஆகவே பாடலை எடுத்து விடுகிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கேட்கிறேன் எனக் கோவிக்க வேண்டாம் எதற்காக "சிரிப்போம்,சிறப்போம்" பகுதியில் மாவீரர் காணெளிகளை இணைக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Hero%20Day%20poster%20Small.jpg

தலைவரின் படத்தை இதற்குள் பார்த்ததும் ஏதோ செய்யுது. சாமி படத்தை எங்கு வைப்பது என்று ஒரு நியதியுண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி யாயினி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேட்கிறேன் எனக் கோவிக்க வேண்டாம் எதற்காக "சிரிப்போம்,சிறப்போம்" பகுதியில் மாவீரர் காணெளிகளை இணைக்கிறீர்கள்?

நியாயமான கேள்வி.. ஆனால் பன்னிரு வேங்கைகள் காணொளியை.. "எவனோ ஒருத்தன் ஒரு பெண்ணோடு.. இருந்தான் தலைப்புக்குள்.. படு கருத்துக்குள்.." இணைத்த போது எந்த உணர்வையும் நீங்கள் வெளிக்காட்டல்லையே அது ஏன் என்பதும் இந்த இடத்தில் வினாவாக வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும்..... அங்கும் இதயத்தின் அடியில் இருந்து எழுந்த வலியை.. நியாயமான வருத்தத்தை தெரிவித்து.. நாங்கள் உணர்த்திக் கொண்டோமே தவிர.. நீங்கள் வருந்த வேண்டும் என்று எதிர்பார்க்க இல்லை. இப்போதாவது அந்த உணர்வு வந்ததை இட்டு திருப்தியே.

நாங்கள்.. பகிடியாக கூட ஆட்சி அமைத்தாலும்.. அங்கும் தலைவரே மன்னன்.. அந்தளவுக்கு அவரும் மாவீரர்களும் எங்கள் உள்ளங்களில் ஆழ வேரூன்றி விட்டுள்ளனர் என்ற அடையாளக் குறியீடாக இதைப் பதிந்தோம். இருந்தாலும்.. உங்கள் கருத்துக்கு மதிப்பளித்து அந்தக் காணொளியை இங்கிருந்து அகற்றிக் கொள்ள விளைகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் உங்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு சாஸ்திரி அவ்விடத்தில் அக் காணொலியைக் கொண்டு வந்து இணைத்ததன் நோக்கம் அக் காணொலியில் உள்ள வார்த்தைகளில்[பாடலில்] எவ்வித குற்றமும் இல்லாமல் ஏற்றுக் கொள்கிறோமோ அதே மாதிரி "ரதி" எழுதின அந்த வசனத்திலும் தப்பில்லை என பொருள் படவே தவிர பொருத்தமில்லாத இடத்தில்,பொருத்தமில்லாத காணொலியை இணைக்கவில்லை[விமர்சிக்கவில்லை] என்பது என் கருத்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுல நல்லா சாப்பிட்டு தூங்குங்கப்பா ... இடம் பொருள் ஏவல் ஏதும் தெரியாது .. ஜிலுக்கு ஜிலுங்குன்னு செறிக்காம இங்கிட்டு வந்துறாங்கா.. ஒரு வீட்டில் பிச்சை எடுத்து பாருங்கப்பா அப்பத்தான் நிலமை தெரியும்...

டிஸ்கி:

(கருவாடு இல்லாம சோறு இறங்காது) வந்த புதிதில் ஈழதோழர்கள் இங்கிட்டும் இதே நிலமையில் தான் இருந்தார்கள் என சொல்லவருகிறேன்.... வீட்டில் போய் பிள்ளை குட்டியளை படிக்கவைக்கிற வழிய பாருங்கப்பா... <_< <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் உங்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு சாஸ்திரி அவ்விடத்தில் அக் காணொலியைக் கொண்டு வந்து இணைத்ததன் நோக்கம் அக் காணொலியில் உள்ள வார்த்தைகளில்[பாடலில்] எவ்வித குற்றமும் இல்லாமல் ஏற்றுக் கொள்கிறோமோ அதே மாதிரி "ரதி" எழுதின அந்த வசனத்திலும் தப்பில்லை என பொருள் படவே தவிர பொருத்தமில்லாத இடத்தில்,பொருத்தமில்லாத காணொலியை இணைக்கவில்லை[விமர்சிக்கவில்லை] என்பது என் கருத்து

ஓ... நீங்கள் எழுதின கருத்து.. வெளிப்படையான ஒன்று. ஒரு ஆணும் பெண்ணும் செய்யுறதை.. கல்லறையில்.. மாவீரர்களின் துயிலலுடன் ஒப்பிட்டு அதற்கு நியாயம் தேடும் கீழ்த்தரமான செயல் அல்லவா அதை நீங்கள் உணராமல்.. அடுத்தவனுக்கு புத்தி சொல்வது தான்..உறுத்துகிறது???!

எத்தனையோ உதாரணங்கள் இருக்க.. மாவீரர்கள் தானா உங்களின் கீழ்த்தரமான படுவுக்கு வியாக்கியானம் காட்டக் கிடைச்சினம்..??! அப்படிப் பார்க்கேக்க.. இந்த காணொளிகள் இங்கு வந்தது.. நான் ஏலவே விளக்கிவிட்டேன்... ஏன் இந்த தலைப்பை இங்கு இட்டேன் என்று.. பறுவாயில்லையே. இதைத் தான் சொல்வது.. நியாயத்திற்கு அப்பாற்பட்ட விதண்டாவாதம் என்று. இந்த உங்களின் வியாக்கியானத்தைப் பார்த்த பின்.. உங்களின் கருத்துக்கு மதிப்பளித்ததே தவறென்று இப்போ உணர்கிறேன்.

Link to comment
Share on other sites

நெடுக்குக்கும் ஒரு பச்சை

ஜஸ்ரினுக்கும் ஒரு பச்சை

கு.சா வுக்கும் ஒரு பச்சை

நல்ல மனதுடன் ஓடி ஓடி பச்சை குத்தும் நிழலிக்கு ஒரு பச்சை.

யாழ்கள பாராளுமன்றத்துக்கு கட்சி அமைக்க...

விசுகு

சாத்திரி

நெல்லையன்

நாரதர்

நெடுக்காலபோவான்

அர்ஜூன்

ரதி

மருதங்கேணி

அறிவிலி

ஆகியோரை அழைக்கின்றேன்.

கட்சித் தலைவர்களின் பெயர்கள் தொடரும்.....

என் வழி தனி அதனால் நான் தனிக்கட்சியை ஆரம்பிக்கும் என்னம் இருக்கு ஆனால் என் கட்சியில் பெண்களுக்கு 70% மும் ஆண்களுக்கு 30% தான் ...

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு அகவணக்கம் செய்யும் பொருட்டு சுயாதீன தேர்தல் திணைக்களம்.. தனது செயற்பாடுகளை தற்காலிகமாக ஒரு வாரத்துக்கு நிறுத்திக் கொள்கிறது. அது மீண்டும்.. இம்மாத இறுதி வாக்கில் தனது சேவையை ஆரம்பிக்கும்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ... நீங்கள் எழுதின கருத்து.. வெளிப்படையான ஒன்று. ஒரு ஆணும் பெண்ணும் செய்யுறதை.. கல்லறையில்.. மாவீரர்களின் துயிலலுடன் ஒப்பிட்டு அதற்கு நியாயம் தேடும் கீழ்த்தரமான செயல் அல்லவா அதை நீங்கள் உணராமல்.. அடுத்தவனுக்கு புத்தி சொல்வது தான்..உறுத்துகிறது???!

எத்தனையோ உதாரணங்கள் இருக்க.. மாவீரர்கள் தானா உங்களின் கீழ்த்தரமான படுவுக்கு வியாக்கியானம் காட்டக் கிடைச்சினம்..??! அப்படிப் பார்க்கேக்க.. இந்த காணொளிகள் இங்கு வந்தது.. நான் ஏலவே விளக்கிவிட்டேன்... ஏன் இந்த தலைப்பை இங்கு இட்டேன் என்று.. பறுவாயில்லையே. இதைத் தான் சொல்வது.. நியாயத்திற்கு அப்பாற்பட்ட விதண்டாவாதம் என்று. இந்த உங்களின் வியாக்கியானத்தைப் பார்த்த பின்.. உங்களின் கருத்துக்கு மதிப்பளித்ததே தவறென்று இப்போ உணர்கிறேன்.

முதலில் நீங்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும் நீங்கள் இந்தப் பகுதியில் இணைத்த காணொலியை நான் சொன்னேன் என்பதற்காக மட்டும் நீங்கள் நீக்கவில்லை அத்தோடு வேறு யார் சொல்லி இருந்தாலும் நீக்கி இருப்பீர்கள் ஏன் என்டால் எது சரி,பிழை என உங்கள் மனச்சாட்சிக்கு தெரியும்.இந்தக் காணொலியை ஏன் இங்கு வந்து இணைத்தீர்கள் என நான் உங்களிடம் விளக்கமோ,வியாக்கியானமோ அல்லது விதண்டவாதமோ செய்யவில்லையே?

மற்றது என்னமோ நான் என்னை நியாயப்படுத்த அந்தக் காணொலியை கொண்டு வந்து இணைத்த மாதிரி என்னோடு சண்டைக்கு வருகிறீர்கள்?...நான் திரும்பவும் எழுதுகிறேன் சாஸ்திரி அந்த காணொலியை இணைத்தன் காரணம் அதில் தமிழ் எப்படி எழுதப்பட்டு இருக்கிறது என்பதை காட்டுவதற்கே தவிர அந்தக் காணொலியையோ,மாவீரர்களையோ அசிங்கப்படுத்துவதற்கு அல்ல அப்படி நிர்வாகம் நினைக்குமாய் இருந்தால் அந்தக் காணொலியை எப்போதே தூக்கி இருக்கும்.

நான் உங்களுக்கு புத்திமதி சொல்லவும் வர‌வில்லை அப்படி நான் சொல்லி நீங்கள் கேட்கிற அளவிற்கு நீங்கள் சின்னப் பிள்ளையும் இல்லை...உங்களுக்கு இந்தப் பகுதியில் மாவீர‌ர் காணொலியை கொண்டு வந்து இணைக்க விருப்பம் என்டால் இணையுங்கள் அது உங்கள் விருப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றது என்னமோ நான் என்னை நியாயப்படுத்த அந்தக் காணொலியை கொண்டு வந்து இணைத்த மாதிரி என்னோடு சண்டைக்கு வருகிறீர்கள்?...நான் திரும்பவும் எழுதுகிறேன் சாஸ்திரி அந்த காணொலியை இணைத்தன் காரணம் அதில் தமிழ் எப்படி எழுதப்பட்டு இருக்கிறது என்பதை காட்டுவதற்கே தவிர அந்தக் காணொலியையோ,மாவீரர்களையோ அசிங்கப்படுத்துவதற்கு அல்ல அப்படி நிர்வாகம் நினைக்குமாய் இருந்தால் அந்தக் காணொலியை எப்போதே தூக்கி இருக்கும்.

அந்தக் காணொளியை குறித்த தலைப்பில் இணைத்தவருக்கும் தெரியும்.. உங்களுக்கும் தெரியும்.. நீங்கள் என்ன படுவை அங்கு எழுதினீர்கள் என்று. நிர்வாகத்திற்கும் தெரியும். நிர்வாகத்தின் எல்லா செயற்பாடுகளிலும் 100% perfection இருப்பதாக நாம் கருத முடியாது. அங்கு அவர்களின் நிலைப்பாட்டை உங்களுக்கு சாதமாக்கிக் கொள்வதும்.. மாவீரர்களை ஒரு கீழ்த்தரமான சொல்லாடலை நிலை நாட்ட உதாரணமாக்குவதும் தான் வேதனை அளிக்கிறது. அந்த வேதனையை நிர்வாகத்தில் உள்ளவங்க உணரவில்லை என்பது அவங்க பிரச்சனை. அதற்காக அதனை உணர்பவர்கள் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது தானே. அந்தக் கடமையையே நான் செய்தேன்.

நான் குறித்த காணொளியை.. நாம் இணையவனின் கருத்தோடு.. எடுத்த நிலைப்பாட்டை வழியுறுத்தவே இணைத்தேன். ஆனால் அதனை புரிந்து கொள்ளாத நிலையில் கருத்துக்கள் பகரப்பட்டதும்.. அது தவறான அர்த்தப்படுத்தலுக்கு இட்டுச் செல்லும் என்பதால்.. அந்தக் காணொளியை. நீக்கிக் கொண்டேன். அந்தளவில் தான்.. தங்கள் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டிய சூழலும் எழுந்தது. அவ்வளவே..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் காணொளியை குறித்த தலைப்பில் இணைத்தவருக்கும் தெரியும்.. உங்களுக்கும் தெரியும்.. நீங்கள் என்ன படுவை அங்கு எழுதினீர்கள் என்று. நிர்வாகத்திற்கும் தெரியும். நிர்வாகத்தின் எல்லா செயற்பாடுகளிலும் 100% perfection இருப்பதாக நாம் கருத முடியாது. அங்கு அவர்களின் நிலைப்பாட்டை உங்களுக்கு சாதமாக்கிக் கொள்வதும்.. மாவீரர்களை ஒரு கீழ்த்தரமான சொல்லாடலை நிலை நாட்ட உதாரணமாக்குவதும் தான் வேதனை அளிக்கிறது. அந்த வேதனையை நிர்வாகத்தில் உள்ளவங்க உணரவில்லை என்பது அவங்க பிரச்சனை. அதற்காக அதனை உணர்பவர்கள் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது தானே. அந்தக் கடமையையே நான் செய்தேன்.

நான் குறித்த காணொளியை.. நாம் இணையவனின் கருத்தோடு.. எடுத்த நிலைப்பாட்டை வழியுறுத்தவே இணைத்தேன். ஆனால் அதனை புரிந்து கொள்ளாத நிலையில் கருத்துக்கள் பகரப்பட்டதும்.. அது தவறான அர்த்தப்படுத்தலுக்கு இட்டுச் செல்லும் என்பதால்.. அந்தக் காணொளியை. நீக்கிக் கொண்டேன். அந்தளவில் தான்.. தங்கள் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டிய சூழலும் எழுந்தது. அவ்வளவே..! :icon_idea:

நான் அந்த "படு" என்ட சொல்லை அந்த திரியில் பொதுப்படையாக ஒரு தரம் தான் எழுதினேன்.சக உறவு அது பிழை என சுட்டிக் காட்ட மன்னிப்பும் கேட்டு விட்டேன் ஆனால் நீங்கள் திரும்ப,திரும்ப அந்த சொல்லை பல தடவை சொல்லுவதன் மூலம் அந்த சொல்லின் மீது உங்களுக்கு தான் அதிக விருப்பம் என இதிலிருந்து தெரிகிறது...அந்த திரியில் விவாதம் செய்ய முடியாமல் அத் திரியை பூட்ட வைத்து பிறகு எதற்கு இதில் வந்து விதண்டவாதம் செய்கிறீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அந்த "படு" என்ட சொல்லை அந்த திரியில் பொதுப்படையாக ஒரு தரம் தான் எழுதினேன்.சக உறவு அது பிழை என சுட்டிக் காட்ட மன்னிப்பும் கேட்டு விட்டேன் ஆனால் நீங்கள் திரும்ப,திரும்ப அந்த சொல்லை பல தடவை சொல்லுவதன் மூலம் அந்த சொல்லின் மீது உங்களுக்கு தான் அதிக விருப்பம் என இதிலிருந்து தெரிகிறது...அந்த திரியில் விவாதம் செய்ய முடியாமல் அத் திரியை பூட்ட வைத்து பிறகு எதற்கு இதில் வந்து விதண்டவாதம் செய்கிறீர்கள்

இதில் நான் உங்களோடு அந்தக் குறிப்பிட்ட விடயம் தொடர்பாக விவாதம் செய்யவில்லை. அதற்கான அவசியமும் எனக்கு இல்லை. இங்கு உணரும் அம்சத்தை..அங்கு நீங்கள் தவற விட்டத்தை.. உணரத் தலைப்பட கேட்டுக் கொண்டிருக்கிறேன்.. அதைத் தான் குறிப்பிட்டுள்ளேன். அந்தத் திரியை பூட்டியது ஏன் என்பது பற்றி நிர்வாகத்திடம் கேளுங்கோ. விளக்கம் சொல்லுவினம். நான் அதற்கு விளக்கம் சொல்ல வெளிக்கிட்டா அப்புறம்.. இந்தத் திரியும் அங்க விட்ட படுவை நோக்கி திசைமாறிடும்.. அல்லது மாற்றிடுவீங்க..!

நன்றி வணக்கம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோசையை பக்கம் மாற்றி மாற்றி சுட்டால்தான் வேகும் என்பது.............. அம்மா ஊரில் தோசை சுடும்போது பார்த்து தெரிந்தது.

இங்கே அதே தியோரியை எப்படியெல்லாம் பவிக்கிறான்கள்!

இப்பிடி சுட்டும் வேகாதது கவலைக்குரியது!

படுத்தலுக்கு பல அர்த்தம் தமிழில் உண்டென்பதை மாவீரரின் பாடலை விவச்சார விடுதியில்போட்டுதான் தமிழ் கற்பிக்க வேண்டும் என்ற மட்டத்தில் உள்ளவர்களோடு உரையாடுவது என்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அதனால்தான் அந்த பகுதியில் நான் எதையும் எழுதவில்லை. அப்படி எழுதியிருந்தாலும் ..............................

ஸ்க்ய்பில வா போன் நம்பருக்கு வா வீட்டு விலாசத்துக்கு வா என்ற பதில்கள் வரலாம் என்ற எண்ணம் இருந்தது. இங்கே எமக்கு சரியென படுவதை எழுதுகிறோம்................... அது தவறெனில் அதில் என்ன தவறு உள்ளது என்பதை சுட்டி எழுதவேண்டும்.

மற்றும்படி வீட்டு விலாசத்துக்கு போறவர்கள் என்றால் ஏன் இங்கிருந்து எழுதுகிறோம்?

குரங்கு தனமான வேலைகள் முன் பின் யோசிக்காது செய்யலாம் ................... அதை மற்றவர் சுட்டி காட்டும்போதாவது கொஞ்சம் புரிந்து கொள்வது அவர்களுக்கே அழகு.

Link to comment
Share on other sites

எதுக்கு ,, எப்போ பாரு நெடுக்கு & ரதி .... சண்டை?

ஆனா ஒண்ணு ,, ரெண்டுபேரும் சண்டை புடிக்குற அழகை,,,

கொய்யால , சேவ்டி கிளாஸ் ,,

கண்ணுக்கு போட்டுகிட்டுதான் ,, வாசிக்கணும்!

ஏன்னா ... தம்பி ,அக்கான்னு ........... ஆரம்பிக்குற செண்டிமெண்ட் ...எப்போ சிக்கி சின்னாபின்னமாகும்னு ...

எவனுக்கு தெரியும்? பட் இட்ஸ் ஆவ்சம்! :)

Link to comment
Share on other sites

தோசையை பக்கம் மாற்றி மாற்றி சுட்டால்தான் வேகும் என்பது.............. அம்மா ஊரில் தோசை சுடும்போது பார்த்து தெரிந்தது.

இங்கே அதே தியோரியை எப்படியெல்லாம் பவிக்கிறான்கள்!

இப்பிடி சுட்டும் வேகாதது கவலைக்குரியது!

படுத்தலுக்கு பல அர்த்தம் தமிழில் உண்டென்பதை மாவீரரின் பாடலை விவச்சார விடுதியில்போட்டுதான் தமிழ் கற்பிக்க வேண்டும் என்ற மட்டத்தில் உள்ளவர்களோடு உரையாடுவது என்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அதனால்தான் அந்த பகுதியில் நான் எதையும் எழுதவில்லை. அப்படி எழுதியிருந்தாலும் ..............................

ஸ்க்ய்பில வா போன் நம்பருக்கு வா வீட்டு விலாசத்துக்கு வா என்ற பதில்கள் வரலாம் என்ற எண்ணம் இருந்தது. இங்கே எமக்கு சரியென படுவதை எழுதுகிறோம்................... அது தவறெனில் அதில் என்ன தவறு உள்ளது என்பதை சுட்டி எழுதவேண்டும்.

மற்றும்படி வீட்டு விலாசத்துக்கு போறவர்கள் என்றால் ஏன் இங்கிருந்து எழுதுகிறோம்?

குரங்கு தனமான வேலைகள் முன் பின் யோசிக்காது செய்யலாம் ................... அதை மற்றவர் சுட்டி காட்டும்போதாவது கொஞ்சம் புரிந்து கொள்வது அவர்களுக்கே அழகு.

விபச்சார விடுதி என்பது ரதிதொடங்கிய திரியை குறிக்கின்றதா?? அல்லது யாழ் களத்தை குறிக்கின்றதா??

மற்றும்படி விவாதங்கள் அளவிற்கதிகமாகி வேறு திசைகளில் மாறிப் போகும் தருணத்திலும். எனக்கு பக்கம் பக்கமாக இங்கு எழுதி விவாதிக்க நேரம் இல்லாத காலத்திலும். அதே நேரம் பல்லாயிரம் பேர் பார்க்கின்ற திரிகளில் வீண் சண்டையை மட்டும் பிரயோசனம் இல்லாமல் எழுதுவதில் எனக்கு விருப்பம் இல்லாததாலும்தான் . விவாதத்தை நேரடியாகவே விவாதித்து முடிவுக்கு கொண்டு வரலாம் என்கிற காரணத்திற்காகத்தான் ஸ்கைப்பில் வரச்சொல்லி விவாதிப்பவர்களிற்கு எழுதியிருக்கிறேன். ஸ்கைப்பில் கதைக்கத்தான் வேண்டும் என்கிற அவசியம் இல்லையே (பயந்தால்)அங்கும் எழுத்தில் விவாதிக்கலாம். தன்னுடைய கருத்தை சரியென நிருபிப்பதற்காக நேரடியாகவும் பலர் என்னுடன் கதைத்திருக்கிறார்கள். விரும்பினால் நீங்களும் எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம் 24 மணிநேர சேவை gowripal sri. :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மாவீரர் வாரம். மாவீரர் தினம் முடியும்வரை கட்சி செயற்பாடுகளை ஒரு வாரத்திற்கு இடைநிறுத்துமாறு அன்புடன் வேண்டுகிறேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வல்லவை அக்காவின் கட்சியில் இணைந்து கட்சி பணிகளை பலமாக முன்னெடுக்க முடிவு செய்து உள்ளேன்!

ப.மே.க. கட்சியில் இணைந்து கொண்ட புலிக்குரல் அவர்களுக்கு, செங்கம்பளம் விரித்து வரவேற்கின்றோம்.red-carpet-emoticon.gif

இன்றிலிருந்து புலிக்குரல் அவர்கள், ப.மே.க. வின் ஊடகத்துறை அமைச்சராகredcarpet.gif கட்சித் தலைவி சஹாரா நியமித்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் எதிர்கட்சினருக்கு அறியத் தருகின்றோம். இவருக்கு கிடைத்த பதவியை பார்த்து... மாற்றுக்கட்சினருக்கு வயித்தில் புளியை கரைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

எமது கட்சியின்கொடி -

purple_flag.jpg

எமது கட்சியின் சின்னம் - snake3[1].gif

Link to comment
Share on other sites

இந்த திரி நகைச்சுவைக்கான பகுதியில் ஆரம்பிக்கப்பட்டதால் கடும் வேலைப்பளு, வாழ்க்கை பளு என்பனவற்றுக்கு இடையில் கொஞ்ச நேரமாவது சிரித்து மகிழலாம் என்ற நோக்கில் தான் நானும் ஒரு கட்சியை ஆரம்பித்தேன். மாவீரர் வாரம் வந்தவுடன் மாவீரர்களுக்கு மதிப்பு கொடுப்பதற்காக இந்த திரியில் பதிவுகளை நிறுத்த ஒரு நல்ல முடிவு எடுக்கப்பட்டவுடன் நானும் ஏனையோரும் பதிவுகள் இடுவதை நிறுத்தினனோம். ஆனால் நெடுக்காலபோவான் + ரதி இடையிலான சண்டை எந்த நோக்கத்துக்காக திரியில் இணைந்தேனோ அந்த நோக்கத்தை இல்லாமல் ஆக்கிவிட்டது. அதுவும் மாவீரர் வாரத்தில் அமைதியாக இருக்க சொல்லி சொன்னபின்னும் பூட்டப்பட்ட இன்னொரு திரியில் பிடித்த கருத்துச் சண்டையின் தொடர்ச்சியை இங்கும் நீட்டிய நெடுக்கின் செயலுடன் என்னால் உடன்பட முடியவில்லை. மாவீரர் வாரத்தில் கூட அமைதியாக இருக்காத செயலினை கண்டிக்கும் முகமாக வாழ்க்கை வாழ்வதற்கே கட்சியையும் கலைத்து விட்டு இந்த திரியில் இருந்து விலகுகின்றேன்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் சில சபை குழப்பிகளை அறியாமல்.. சபையில் உள்ளவங்க எப்படிப்பட்டவங்க என்று அறியாமல் இந்தத் தலைப்பை இங்கு திறந்தது தவறோ என்று நினைக்கிறேன். இருந்தாலும்.. இந்தத் தலைப்பில் இருந்து என்னையும் விடுவித்துக் கொள்ளும் அதேவேளை.. மற்ற உறவுகள் விரும்பினால் தொடரலாம். மாவீரர்களுக்கு என்னுடைய தலைப்பில் வைத்து மரியாதை செய்ய கேட்கிற அதே நேரம் நான் சுட்டிக்காட்டிய பின்னும் அவர்களுக்கு மரியாதை செய்யாத மனிதர்களையும் நான் இங்கும் பார்க்கிறேன். அது மிகவும் என் மனதை பாதித்தது. அதில் இருந்து விலகி இந்தத் தலைப்பை முன்னையது போல சகஜமாக கொண்டு செல்ல முடியுமோ என்று தெரியல்ல. அந்த வகையில் என்னை இதில் இருந்து விடுவித்துக் கொள்கிறேன்.

நிழலியின் ஒரு குற்றச்சாட்டை மட்டும் நிராகரிக்கிறேன். நான் இங்கு யாரோடும் சண்டை போடவில்லை. நாங்கள் இந்தத் தலைப்பு மாவீரர் நினைவுகளோடு இருக்கட்டும் என்பதற்காக இணைத்த காணொளி தொடர்பில் வந்த கருத்துக்களுக்கு பதில் சொல்ல வேண்டியவன் ஆகியதால் தான் பதில் எழுதினேன். நாங்கள் மாவீரர்களை மதிக்கவில்லை என்பது போன்றான கருத்துக்காட்டல்களுக்கு அவசியம் இல்லை என்று சொல்லவே அதைச் செய்தோம் என்பதையும் தெளிவுறுத்த விரும்புகின்றேன். மற்றும்படி மாவீரர்கள் தொடர்பான எமது நிலைப்பாடுகளில் இருந்தும் நாம் விலகி இருக்கவில்லை..! :icon_idea::(

மேலும் யாழ் இணையத்தில் எனி மேல்.. இப்படியான.. எந்த விதமான தலைப்புக்களையும் நான் திறக்கவும் மாட்டேன்..! எங்கள் நேரத்தை விரையமாக்கி உங்களிடம் திட்டு வாங்க நாங்கள் ஒன்றும் பைத்தியக் காரர்கள் கிடையாது..!

நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது வாத்தியார் தொட்டால் முத்திரைப்புடையன் பாம்பே விஷம் கக்கி இறக்கும்.

இங்கே தலீவர் வாத்தியார் சின்னவயதில் சும்மா முத்தத்தில் குட்டி பாம்புடன் விளையாடும் படம்.

Anaconda+sri+lanka+Anuradapura+3.jpg

தோழர் தமிழ்சிறீ எங்கிருந்தாலும் இந்தத்திடலுக்கு வரவும்...

எங்கள் பிரதான் பாம்புக்குட்டியைத் தூங்க வைத்துவிட்டார்கள் :o முதலில் அதற்குக் கொடுக்கப்பட்ட மயக்கத்தை தெளிய வைப்பதற்கான உத்திகளை தருக தோழரே...: :huh:

எமது கட்சி சின்னமான பாம்பை மயக்கிய வாத்தியாரின் கட்சியினர் இசைக்கலைஞன், இடையாலைபோவான், குளவி,சுவி, சித்தன் ஆகியோர் மன்னர் சபையை விட்டு ஓட்டமெடுக்கும் காட்சி...

மயங்கி விழுபவர் தான் கட்சித் தலைவர் வாத்தியார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி ஒரு திரி நகைச்சுவையாக போய் கொண்டு இருக்கும் போது அதைக் குழப்பும் விதமாக இடையில் விட்டுட்டு போறது தப்பு திரும்ப வந்து பதவியைப் பொறுப்பெடுக்கவும் :) ...நெடுக்சும் அதே மாதிரி வந்து திரியை நகைச்சுவையாக முன் எடுத்து செல்லவும் :) ...இருவரும் சின்னப் பிள்ளை மாதிரி நடந்து கொள்ளாதீங்கோ :):icon_idea::D

பி;கு நெடுக்ஸ் இந்த அக்காவின் கட்சி வர வேண்டும் என்பதற்காக ஒரு மாதிரி நிழலியின் கட்சியை கலைத்து விட்டு ஆளையும் துரத்தி விட்டார் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி உங்களுக்கு நகைச்சுவை????அல்லது உங்கள் உரையாடல்கள் நகைச்சுவை?இத்தலைப்பு இடம்பெற்ற இடம்தான் சிரிப்போம்சிறப்போம் பகுதி...ஆனால் அவ்வளவும் விசமம்.????

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
    • அப்படியெல்லாம் லேசில விடமுடியாது பையா ....... எப்படியும் உங்களுக்கு சந்தர்ப்பம் தராத பெரியப்பாவுக்கு கொஞ்சம் மேல நின்றால்தான் மனம் ஆறும்.......!  😂
    • மீண்டும் மீண்டும் இந்த 5% வந்து கிலியைக் கிளப்புகிறதே😂?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.