Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வல்வையின் கட்சியில் இணைந்து, அடிமட்ட தொண்டனாக பணியாற்ற நான் வருகின்றேன்.

வல்வையை பிரதமாக்கும் வரை..... எனது கட்சித் தலைமைப் பீடம் இட்ட கட்டளையை நிறைவேற்ற என்னாலான சாம,பேத, தான, தண்ட வேலைகளை செவ்வனே மேற்கொள்வேன் என்பதை இத்தால் அறியத்தருகின்றேன்.

வருங்கால முதல்வர் வல்வை வாழ்க.

தமிழ்சிறீ புல்லரிக்கிறது :lol:

இதுவரை கொள்கை கோட்பாடு எதுவுமே தெரியாமல் கட்சி தொடங்க ஆள் வேண்டுமே என்று கவலைப்பட்டுக்கொண்டிருக்க காமதேனுபோல முதலாவதாக இணைந்தது மட்டுமில்லாமல் சாம, பேத, தான, தண்ட..(ஓய் சிறியர் இது சனநாயகம் இங்கே இதெல்லாம் அடக்கி வாசிக்கோணும்) வேலைகளைச்செய்தாகிலும் என்பதைப்பார்க்கும்போது நம்பி கட்சியை ஆரம்பிக்கலாம் என்று தோன்றுகிறது...

எங்களுடைய கட்சியின் பெயர் "படிக்காத மேதைகள்"

எங்கள் கட்சியின் கொள்கையாவன

இடக்கு மடக்காக கேள்வி கேட்பது :icon_mrgreen:

குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்ந்த கணக்காக சில நேரங்களில் சரியாகச் சுட்டிக்காட்டுவது கவனிக்கவும் சிலநேரங்களில் மட்டுமே.. :icon_mrgreen:

இன்னும் சில கொள்கைப்பிரகடனம் இருக்கு அதை எதிர்வரும் நாட்களில் அறிவிக்கிறோம்

இப்போது படிக்காத மேதைகள் கட்சியைப்பதிவு செய்கிறேன்

இத்தோடு படிக்காத மேதைகள் கட்சியில் இணைய விரும்பும் மகா சனங்களை இங்கு பதிவிடுமாறு வேண்டிக்கொள்கிறோம்...எங்களிடம் தலைவர் பதவியிலிருந்து அனைத்தும் வெற்றிடமாக இருக்கிறது முந்துபவர்களுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதை இத்தால் அறியத் தருகிறோம் :lol:

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை இத்திட்ட முன்மொழிவிற்கு வழங்கப்பட்டுள்ள ஆதரவிற்கும்.. பிற ஆலோசனைகள்.. கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள்.

திட்டம் முன்மொழியப்பட்டு 24 மணி நேரத்துக்குள் எதிர்பார்க்கப்பட்ட அங்கீகாரத்தில் ஒன்றை கள உறவுகள் தந்திருப்பதில் இருந்து.. இதில் அவர்களின் ஈடுபாட்டை உணர முடிவதோடு.. அவற்றிற்கு மதிப்பளித்து வரவேற்கின்றோம்.

கட்சிப் பதிவுகள் மட்டும் கொஞ்சம் தாமதமாகியுள்ளன:

இதுவரை பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரம்: (கட்சிப் பெயரும்.. பிரேரித்தவர்களும்.)

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு)

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா)

இக்கட்சிகளில் இணைந்து கொண்டு பணி செய்ய விரும்புறவங்க.. கட்சிப் பெயர்களை குறிப்பிட்டு.. அங்கு.. உங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம். அதேபோல்.. இன்னும் 3 கட்சிகளை பிரேரித்து.. அதற்கும்.. அங்கத்தவர்களைத் திரட்டிக் கொண்டு விட்டால்.. களமாளுமன்றதுக்கான.. பொதுவிதிகளை சமர்ப்பித்து உங்கள் அபிப்பிராயங்கள் பெறப்பட்டு.. அவற்றின் அடிப்படையில் இறுதி வடிவம் செய்யப்பட்டு.. அதன் பின்.. தேர்தல் நடத்தலாம். தேர்தல் பிரச்சாரங்களுக்கும் வாய்ப்புண்டு.

மேலும்.. சொந்தக் கட்சி விதிகளுக்கு மேலாக.. களமாளுமன்ற விதிகளை.. சமர்ப்பிக்க விரும்பிறவங்க.. அதனை தாராளமாக முன் வையுங்கள். உங்கள் விதிமுறைகள் அதிக கள உறவுகளால் வரவேற்கப்பட்டால்.. அவை களமாளுமன்ற யாப்பில் இடம்பெறும். அந்த வகையில்... ஒரு யாப்பை வகுத்த பெருமையை நீங்கள் தக்க வைத்துக் கொள்வீர்கள். :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நான் "யாழ் கள மன்னர்கள் சபை" என்ற கட்சியைப் பதிவு செய்கின்றேன்.

கொள்கை:

களம் வாழ நாம் உழைப்போம்

கள மக்கள் நலன் காப்போம்

கள மக்கள் மொழியைக் காப்போம்

கள மக்கள் பிழைகள் விட்டால் தட்டிக் கேட்போம்

மொத்தத்தில் களத்திற்காகவும்

கள மக்களுக்காகவுமே இக்கட்சி.

:wub:

அங்கத்தவர்கள் அனைவரும் உடனடியாக இணைந்து கொள்ளவும் :rolleyes:

அங்கத்தவர்கள் மேற்குறிய கொள்கையை ஏற்றுக்கொண்டவராக

இருப்பது அவசியம்.

கொள்கைகள் அங்கத்தவர்களின் ஆலோசனைப்படி மெருகூட்டப்படும்

எந்தக் காரணத்திற்காகவும் கொள்கைகள் கைவிடப்பட மாட்டாது.

அப்படியொரு நிலை வந்தால் யா க ம ச கலைக்கப்படும். :wub:

அங்கத்தவர்கள் உள்வாங்கப்பட்ட பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி

அறியத்தரப்படும்

யா க ம ச யின் 5 பேர் கொண்ட மன்னாதி மன்னர் சபை

ஒன்றை இப்போதே நான் பிரேரிக்கின்றேன்.

குறிப்பு: என்னை மட்டும் விட்டு விடுங்கள்

நான் எப்போதும் தொண்டனாகவே இருக்க விரும்புகின்றேன் :lol:

வாருங்கள்

களம் காப்போம்

கள மக்கள் நலன் காப்போம் :rolleyes:

Link to comment
Share on other sites

ஐந்து கட்சிகளையும் பதிந்தாப்பில எந்தக் கட்சியில சேரலாம் எண்டு யோசிப்பம்..! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஜனநாயகத்தில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. ஏனெனில் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்படும் அமைப்புக்கள்/அரசாங்கங்கள் எல்லாம் சரியான கொள்கைகளைக் கடைப்பிடித்து சாதாரண மக்களில் நல்வாழ்வுக்கு உதவுவதில்லை. உதாரணமாக கிரேக்க, இத்தாலி அரசாங்கள் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், தவறான கொள்கைகளால் நாட்டையும் மக்களையும் அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றுள்ளனர். அழிவுப்பாதையில் இருந்து மீட்க அந்நாடுகள் தற்போது technocrat களைத்தான் நாடியுள்ளது. இவ்வாறான technocrat கள் elite சமூகத்தில் இருந்து வருகின்றார்கள்.

எனவே யாழ்களத்திற்கு ஒரு புதிய பாதையைச் சரியாகச் செப்பனிட்டு நெடுங்காலத்திற்கும் தளைத்தோங்கிச் செழித்து நிற்க தொழில்சார் நிபுணர்கள் அவசியம். இத்தகைய நிபுணர்கள் கொண்ட உயர் குழாம் ஒன்றே போதும் என மிகவும் திடமாக நம்புவதால் "யாழ்கள உயர் குழாம்" என்ற பெயரில் கட்சி ஒன்றைப் பதிவு செய்ய விழைகின்றேன்.

கொள்கைகள்:

1) தேர்தலில் வென்றால் முதல் வேலையாக தேர்தல்முறையில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யும் முறையை இரத்துச் செய்தல்

2) சுழற்சி முறையில் பிரதிநிதிகளைத் தேர்வு செய்து தேக்கம், ஊழல் இல்லாத யாழ் களத்தைக் கொண்டு நடாத்துதல்

3) பிரதிநிதிகள் மாறினாலும், அவர்களைத் தெரிவு செய்யும் உரிமையை யாருடைய ஒப்புதலும் இன்றித் தலைவரே கொண்டிருத்தல்.

4) ஆயுட்காலத் தலைவராக நானே தொடர்ந்தும் இருக்கத் தேவையான வழிவகைகளைச் செய்துகொள்ளுதல்

5) தேர்தல் முறை இல்லாததால் கட்சி அங்கத்தினர் தாமாக பிரிந்து செல்லும் உரிமையைக் கொண்டிருக்கமாட்டார்கள். இருந்தும் தனிப்பட்ட வாழ்விற்காகப் பிரிந்து செல்ல முயல்பவர்கள், வேறு கட்சி அமைக்க அனுமதிக்கப் படமாட்டார்கள்.

மேற்குறித்த கொள்கைகளுடன் ஒத்துப் போவதில் யாழ்களத்தில் உள்ள தொழில்சார் நிபுணர்களுக்கு எதுவித பிரச்சினைகளும் இல்லையென்பதால் அவர்கள் உடனடியாகவே "யாழ்கள உயர் குழாம்" அமைப்பின் ஆயுட்கால அங்கத்தினராக ஆகிவிட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன நெடுக்கரே இருக்கிற பச்சைப்புள்ளிகளை பறிக்கிற பிளானோ? :icon_mrgreen:

மனுசன் ரொம்ப தெளிவா தான் அக்கா இருக்கார்.. :lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்கள காதலர் கட்சி என்று ஒன்றை ஆரம்பிச்சால் என்ன???? :D :D :lol::icon_mrgreen:^_^

யாழ்கள காதலர் கட்சி என்று ஒன்றை ஆரம்பிச்சால் என்ன???? :D :D :lol::icon_mrgreen:^_^

சில கொள்கைப்பிரகடனம் இருக்கு அதை எதிர்வரும் நாட்களில் அறிவிக்கிறோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை யாழ் களமாளுமன்றத்துக்காக பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரங்கள். (எல்லைகளற்ற... எண்ணங்கள் செயற்பட முடியாத.. கட்சி எண்ணிக்கையை தகர்த்து.. அதிக பட்சமாக 5 கட்சிகளும் அவற்றிற்குள் மக்களின் கருத்துக்களுக்கு ஏற்ப கொள்கை வடிமைப்பும்.. என்ற தொனிப் பொருள் இங்கு கையாளப்படுகிறது.). அந்த வகையில் கோரப்பட்ட அதிக பட்சமாக 5 கட்சிகள் என்ற நிலையில்.. இதுவரை 4 கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரே ஒரு கட்சி பதியப்பட இன்னும் வாய்ப்புள்ளது.

பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரம் வருமாறு..

கட்சி + ஸ்தாபகர்.

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.)

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.)

3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.)

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.)

இறுதி கட்சிக்கான பதிவையும்.. கட்சிகளில் உங்கள் அங்கத்துவங்களையும் உறுதி செய்து கொள்ளுங்கள். இத்திட்டம் கோரி நின்ற.. தேவையான அடிப்படை அங்கீகாரம் பெறப்பட்டதும் களமாளுமன்ற விதிமுறைகள் உங்கள் முன் வைக்கப்படும். அதற்கும்.. உங்களின் பங்களிப்பு எதிர்பார்க்கபடுகிறது. விதிமுறைகளில் அடக்க வேண்டிய விடயங்களை விரும்பமுள்ள கள உறவுகள் முன் வைக்கலாம். அவை சரியான வகையில் உள்வாங்கப்படவும்.. சம மதிப்பளிக்கவும் செய்யப்படும்.

கட்சிகளில் இடம்பெறாதவர்கள் எல்லோரும் ஒரே ஒரு சுயேட்சை அமைப்புக்குள் வைத்துக் கருதப்படுவார்கள். அவர்களுக்கு பொதுமக்கள் உரிமை.. வாக்குரிமை.. கருத்துரிமை.. எல்லாம் வழங்கப்படும். ஆனால் களமாளுமன்றில்.. அடிப்படை உரிமைகளைத் தவிர இதர பதவி நிலைகளை அடைய முடியாது. தேர்தலில் தனித்து நிற்க முடியாது. ஆனால் குறித்த பதவிக் காலத்தில் தேர்தல் நடக்க முன்னரே.. தாம் விரும்பும் ஒரே ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம். தேர்தலின் பின் கூட்டணி அமைக்க முடியாது. தேர்தலின் பின் குறித்த பதவிக்காலம் முடியும் வரை.. கூட்டணியில் இருந்து விலகவோ.. கட்சி தாவவோ.. முடியாது.

சுயேட்சைகள்.. கூட்டணியில் இடம்பெற்றாலும் பதவிகளைப் பெற முடியாது. 5 பிரதான கட்சிகளும் தமக்குள்.. கூட்டணி அமைக்க அனுமதியில்லை. இவை அடிப்படை அம்சங்கள். இதற்கு கட்டுப்படுவது அனைவரினதும் கடமை. நடைமுறை சாத்தியங்களையும் கருத்தில் கொண்டு.. முன் வைக்கப்பட்டுள்ள இந்த அடிப்படைகளுக்குள் மாற்றங்கள் அவசியம் என்றால் இப்போதே அதனை தெரிவித்து திருத்திக் கொள்ள எல்லோருக்கும் உரிமை உண்டு. இன்றேல்.. இவை எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கருதப்பட்டு.. அடிப்படை விதிகளுக்குள் அடக்கப்பட்டு விடும். அடைப்படை விதிகளை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும். :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள காதலர் கட்சி என்று ஒன்றை ஆரம்பிச்சால் என்ன???? :D :D :lol::icon_mrgreen:^_^

சில கொள்கைப்பிரகடனம் இருக்கு அதை எதிர்வரும் நாட்களில் அறிவிக்கிறோம்

இன்னும் ஒரே ஒரு கட்சி தான் அமைக்கலாம். முடிவை துரிதமாக எடுங்கோ..! :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து கட்சிகளையும் பதிந்தாப்பில எந்தக் கட்சியில சேரலாம் எண்டு யோசிப்பம்..! :icon_mrgreen:

எலோரும் இன் நாட்டு மன்னர்கள் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட எங்கள் கட்சியில் அங்கத்தவராவதற்கு ஏன் தயக்கம் .மாய வார்த்தைகளையும் உறுதி மொழிகளையும் நம்பி ஏமாறாமல் உடனே எங்கள் கட்சியில் உறுப்பினராகுங்கள் .முதலில் உறுப்பினராகும் 5  பேரைக் கொண்டு எங்கள் மன்னாதி மன்னர்கள்  சபை அமைக்கப்படும்.அதன் பின்னர் சேரும் உறுப்பினர்களின் வேண்டுகோள்கள் ஆராயப்பட்டு தேவையேற்படின் மன்னாதி மன்னர்கள் சபை மீளமைக்கப்படும்   யா க ம ச வில் உறுப்பினர்களே இன்னும் சேரவில்லை அதற்குள் இக்கட்சியின் மீது சிலர் கல்லேறிகின்றனர்.அதற்கெல்லாம் நான் அஞ்சப்போவதில்லை :lol:சீனாவிலிருந்து  ய்ங் மங் சிங் ,சிங் மங் ய்ங் :lol:என்பவர்கள் இக்கட்சியில் சேர விண்ணப்பித்து உள்ளார்கள் அவர்களுக்கு யா க ம ச வில் என்ன வேலை இது எதிரிகளின் சதித் திட்டம். :lol:இவையெல்லாவற்றையும் முறியடிப்போம் . வாருங்கள் களம் காப்போம் கள மக்கள் நலன் காப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் ஒரே ஒரு கட்சி தான் அமைக்கலாம். முடிவை துரிதமாக எடுங்கோ..! :lol::D:icon_idea:

யாழ்கள காதலர் கட்சி

கொள்கைகள்:‍ யாழில் காதலிப்போரை ஊக்கப்படுத்துதல்

(சட்டரீதியான பிரச்சனைகளில் எஸ்கேப் ஆகுதல்)

பெண்களுக்கு ஆதரவாய் குரல் கொடுத்தல்

(அப்படி நடித்தல்)

மன்மதர்களாய் கனவில் பறப்பதற்கான பயிற்சிகள்,ஜடியாக்கள் குடுத்தல்..

திண்ணையில் பெண்களுடன் அரட்டை அடிப்பதை தேசியநோக்கமாய் கருதி அதை சட்ட ரீதியாக பதிவு பண்ணுதல்.

காதல் சம்பந்தப்பட்ட கவிதை,கதைகளை எழுதித்தொலைத்தல்.. :rolleyes:

வாசகர்களை காதல் பித்து பிடிக்க வைத்தல்...

காதலில் ஜெயிப்பது எப்படி என்று புத்தகம் வெளியிட்டு காசு பார்த்தல் <_<

முக்கியமாக பெண்பெயரில் வந்தாவது ஆண்களை கடுப்பேத்துவது..

பி.கு கட்சி பதிவு செய்தால் கட்சி உறுப்பினர்களின் ஆலோசனைப்படி இன்னும் கொள்கைகள் வளரும்.. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

இதோ என்னால் ஆரம்பிக்கப்படும் கட்சி

கட்சி பெயர்: வாழ்க்கை வாழ்வதற்கே

கொள்கை:

வாழ்க்கையில் அழகியல் மிக முக்கியம். எனவே இசையை, காதலை, கலையை எந்தவித கட்டுப்பாடும் இன்றி ஆழ்ந்து அணு அணுவாக ரசிப்பதே வாழ்க்கை. துன்பம் வரும் போகும், ஆனால் அதையெல்லாம் கனக்க மண்டைக்குள் எடுக்காமல் "இந்த நிமிடம் இனி வராது" என்று எப்பவும் மகிழ்ச்சியாக இருக்க நினைக்கும் கொள்கை கொண்டவர்களை கொண்டது இந்தக் கட்சி

"வாழ்க்கை இங்கு கொஞ்ச நேரம்

வந்த தூரம் கொஞ்ச தூரம்

சொந்தமில்லை எந்த ஊரும்

தேவையில்லை ஆரவாரம்

தோளில் உள்ள பாரம் போதும்

நெஞ்சில் ஏன் பாரம் வேண்டு?"

"நேற்று மீண்டும் வருவதில்லை

நாளை என்றோ தெரிவதில்லை

இன்று மட்டும் உங்களின்

கையில் வந்து உள்ளது

வாழ்க்கை வந்து உங்களை

வாழ்ந்து பார்க்கச் சொல்லுது"

இதில் இணைய விரும்புவர்கள் வரிசைகட்டிக் கொண்டு வரவும். முதல் பத்து ஆட்களுக்கு பரிசு உண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள காதலர் கட்சி

கொள்கைகள்:‍ யாழில் காதலிப்போரை ஊக்கப்படுத்துதல்

(சட்டரீதியான பிரச்சனைகளில் எஸ்கேப் ஆகுதல்)

பெண்களுக்கு ஆதரவாய் குரல் கொடுத்தல்

(அப்படி நடித்தல்)

மன்மதர்களாய் கனவில் பறப்பதற்கான பயிற்சிகள்,ஜடியாக்கள் குடுத்தல்..

திண்ணையில் பெண்களுடன் அரட்டை அடிப்பதை தேசியநோக்கமாய் கருதி அதை சட்ட ரீதியாக பதிவு பண்ணுதல்.

காதல் சம்பந்தப்பட்ட கவிதை,கதைகளை எழுதித்தொலைத்தல்.. :rolleyes:

வாசகர்களை காதல் பித்து பிடிக்க வைத்தல்...

காதலில் ஜெயிப்பது எப்படி என்று புத்தகம் வெளியிட்டு காசு பார்த்தல் <_<

முக்கியமாக பெண்பெயரில் வந்தாவது ஆண்களை கடுப்பேத்துவது..

பி.கு கட்சி பதிவு செய்தால் கட்சி உறுப்பினர்களின் ஆலோசனைப்படி இன்னும் கொள்கைகள் வளரும்.. :icon_mrgreen:

இறுதியாக உங்களின் கட்சியினையும் பதிவுச் செய்து கொள்கின்றோம்.

இதுவரை யாழ் களமாளுமன்றத்துக்காக பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரங்கள். (எல்லைகளற்ற... எண்ணங்கள் செயற்பட முடியாத.. கட்சி எண்ணிக்கையை தகர்த்து.. அதிக பட்சமாக 5 கட்சிகளும் அவற்றிற்குள் மக்களின் கருத்துக்களுக்கு ஏற்ப கொள்கை வடிமைப்பும்.. என்ற தொனிப் பொருள் இங்கு கையாளப்படுகிறது.). அந்த வகையில் கோரப்பட்ட அதிக பட்சமாக 5 கட்சிகள் என்ற நிலையில்.. இதுவரை எல்லா கட்சிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருந்தாலும்.. கட்சிக்கு இரண்டு உறுப்பினர்கள் என்ற இலக்கை இக் கட்சிகள் இன்னும் எட்டவில்லை என்பதால்.. அந்த இலக்கு எட்டிய நிலையில்.. பதியப்படும் புதிய கட்சிகள்.. இன்னும் இந்தப் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளது.

பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரம் வருமாறு..

கட்சி + ஸ்தாபகர்.

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.)

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.)

3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.)

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.)

5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா)

கோரப்பட்ட எண்ணிக்கைக்கு ஏற்ப.. கட்சிகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டாயிற்று. இருந்தாலும்.. பிற உறவுகளுக்கும் சம வாய்ப்பளிக்கும் நோக்கில்.. இந்த ஐந்து கட்சிகளும்.. குறைந்தது தலா இரண்டு உறுப்பினர்களை கொண்டிராத போது.. அவற்றின் பதிவு தானாக ரத்தாகும் நிலை இருப்பதால்.. இந்த 5 கட்சிகளையும் விட மேலதிகமாக பதியப்படும் கட்சிகளுக்கு அவற்றின் கொள்கை.. அங்கத்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முன்னுரிமை கொடுக்கப்பட்டு பதிவில் ஏற்றுக் கொள்ளப்படும்.

எனவே உங்களின் எண்ணத்திற்கு ஏற்ப கட்சிக்கு இடமில்லையே என்ற வருத்தம் கொள்ளாது.. தொடர்ந்து கட்சிகளைப் பதிவு செய்ய நாம் இடமளிக்கின்றோம். இன்னும் உங்களின் கட்சிக்கு.. இந்த பிரதான 5 கட்சிகளின் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளது. காரணம் பதியப்பட்டுள்ள கட்சிகளில் ஓரிரு கட்சிகளைத் தவிர இதர.. இன்னும் பதிவை உறுதி செய்து கொள்வதற்கான ஆகக்குறைந்தது கட்சிக்கு இரண்டு உறுப்பினர் என்ற நிலையை இன்னும் பூர்த்தி செய்து கொள்ளவில்லை. :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை யாழ் களமாளுமன்றத்துக்காக பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரங்கள். (எல்லைகளற்ற... எண்ணங்கள் செயற்பட முடியாத.. கட்சி எண்ணிக்கையை தகர்த்து.. அதிக பட்சமாக 5 கட்சிகளும் அவற்றிற்குள் மக்களின் கருத்துக்களுக்கு ஏற்ப கொள்கை வடிமைப்பும்.. என்ற தொனிப் பொருள் இங்கு கையாளப்படுகிறது.). அந்த வகையில் கோரப்பட்ட அதிக பட்சமாக 5 கட்சிகள் என்ற நிலையில்.. இதுவரை எல்லா கட்சிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இருந்தாலும்.. கட்சிக்கு இரண்டு உறுப்பினர்கள் என்ற இலக்கை இக் கட்சிகள் இன்னும் எட்டவில்லை என்பதால்.. அந்த இலக்கு விரைந்து எட்டக் கூடிய நிலையில்.. பதியப்படும் புதிய கட்சிகள்.. இன்னும் இந்தப் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளது.

பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரம் வருமாறு..

கட்சி + ஸ்தாபகர் + ஸ்தாபகர் அல்லாத உறுப்பினர் தொகை ( பதிவை உறுதி செய்ய வேண்டப்படும் குறைந்த தொகை 2)

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.) (1)

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.) (1)

3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.) (0)

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.) (0)

5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா) (0)

----------------------------------------------------------------------------------- (முதலில் பதிந்து கொண்ட 5 கட்சிகள் எல்லைக் கோடு)

6.வாழ்க்கை வாழ்வதற்கே (நிழலி அண்ணர்) (0)

கோரப்பட்ட எண்ணிக்கைக்கு ஏற்ப.. கட்சிகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டாயிற்று. இருந்தாலும்.. பிற உறவுகளுக்கும் சம வாய்ப்பளிக்கும் நோக்கில்.. இந்த ஐந்து கட்சிகளும்.. குறைந்தது தலா இரண்டு உறுப்பினர்களை கொண்டிராத போது.. அவற்றின் பதிவு தானாக ரத்தாகும் நிலை இருப்பதால்.. இந்த 5 கட்சிகளையும் விட மேலதிகமாக பதியப்படும் கட்சிகளுக்கு அவற்றின் கொள்கை.. அங்கத்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முன்னுரிமை கொடுக்கப்பட்டு பதிவில் ஏற்றுக் கொள்ளப்படும்.

எனவே உங்களின் எண்ணத்திற்கு ஏற்ப கட்சிக்கு இடமில்லையே என்ற வருத்தம் கொள்ளாது.. தொடர்ந்து கட்சிகளைப் பதிவு செய்ய நாம் இடமளிக்கின்றோம். இன்னும் உங்களின் கட்சிக்கு.. இந்த பிரதான 5 கட்சிகளின் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளது. காரணம் பதியப்பட்டுள்ள கட்சிகளில் ஓரிரு கட்சிகளைத் தவிர இதர.. இன்னும் பதிவை உறுதி செய்து கொள்வதற்கான ஆகக்குறைந்தது கட்சிக்கு இரண்டு உறுப்பினர் என்ற நிலையை இன்னும் பூர்த்தி செய்து கொள்ளவில்லை. :):lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உயர்குழாம் கட்சியின் விதிகளுக்கு அமைய தொழில் சார் நிபுணர்களாகக் தங்களைக் கருதிக்கொள்ளும் நெடுக்ஸ், நிழலி, இசைக்கலைஞன் இன்னும் பலர் எனது கட்சியில் நிரந்தரமாகவே ஆயுட்கால உறுப்பினராகிவிட்டனர். எனவே கட்சியின் குறைந்தபட்ச அங்கத்தினர்கள் இரண்டு என்ற தகுதி ஏற்கனவே கிடைக்கப்பெற்றாயிற்று. எனினும் கட்சி உறுப்பினர்கள் தமது உறுப்புரிமையை உறுதிப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்படுவதால் அவர்கள் இத்திரியில் உறுப்புரிமையை ஏற்றுக்கொள்வதை பதியுமாறு கேட்டுக்கொள்கின்றேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உயர்குழாம் கட்சியின் விதிகளுக்கு அமைய தொழில் சார் நிபுணர்களாகக் தங்களைக் கருதிக்கொள்ளும் நெடுக்ஸ், நிழலி, இசைக்கலைஞன் இன்னும் பலர் எனது கட்சியில் நிரந்தரமாகவே ஆயுட்கால உறுப்பினராகிவிட்டனர். எனவே கட்சியின் குறைந்தபட்ச அங்கத்தினர்கள் இரண்டு என்ற தகுதி ஏற்கனவே கிடைக்கப்பெற்றாயிற்று. எனினும் கட்சி உறுப்பினர்கள் தமது உறுப்புரிமையை உறுதிப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்படுவதால் அவர்கள் இத்திரியில் உறுப்புரிமையை ஏற்றுக்கொள்வதை பதியுமாறு கேட்டுக்கொள்கின்றேன்!

நான் சுயேட்சையாக பொதுமக்கள் உரிமையோட இருக்கப் போறன்... கிருபண்ணா. நிழலி அண்ணர்.. ஏலவே ஒரு கட்சியை ஸ்தாபித்து விட்டதால்.. அவரை நீங்கள் கட்சிக்குள் சேர்க்க முடியாது. இருந்தாலும்.. நிரந்தரப் பதிவுக்கு முன்னர் நிழலி அண்ணரோ.. எவருமோ.. தங்கள் கட்சியை கலைக்கும் உரிமையைக் கொண்டுள்ளனர். தற்காலிக பதிவில் உள்ள (கட்சி நிபந்தனைகளை இன்னும் பூர்த்தி செய்யாத நிலையில் உள்ள கட்சிகள்) கட்சியைக் கலைத்துவிட்டு இதர கட்சிகளில் சேர அனுமதி உண்டு. ஆனால் நிரந்தரப் பதிவின் பின் அப்படிச் செய்ய இயலாது. :lol::):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை யாழ் களமாளுமன்றத்துக்காக பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரங்கள். (எல்லைகளற்ற... எண்ணங்கள் செயற்பட முடியாத.. கட்சி எண்ணிக்கையை தகர்த்து.. அதிக பட்சமாக 5 கட்சிகளும் அவற்றிற்குள் மக்களின் கருத்துக்களுக்கு ஏற்ப கொள்கை வடிமைப்பும்.. என்ற தொனிப் பொருள் இங்கு கையாளப்படுகிறது.). அந்த வகையில் கோரப்பட்ட அதிக பட்சமாக 5 கட்சிகள் என்ற நிலையில்.. இதுவரை எல்லா கட்சிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இருந்தாலும்.. கட்சிக்கு இரண்டு உறுப்பினர்கள் என்ற இலக்கை இக் கட்சிகள் இன்னும் எட்டவில்லை என்பதால்.. அந்த இலக்கு விரைந்து எட்டக் கூடிய நிலையில்.. பதியப்படும் புதிய கட்சிகள்.. இன்னும் இந்தப் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளது.

பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரம் வருமாறு..

கட்சி + ஸ்தாபகர் + ஸ்தாபகர் அல்லாத உறுப்பினர் தொகை ( பதிவை உறுதி செய்ய வேண்டப்படும் குறைந்த தொகை 2)

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.) (1)

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.) (2)

3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.) (0)

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.) (0)

5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா) (0)

----------------------------------------------------------------------------------- (முதலில் பதிந்து கொண்ட 5 கட்சிகள் எல்லைக் கோடு)

6.வாழ்க்கை வாழ்வதற்கே (நிழலி அண்ணர்) (0)

கோரப்பட்ட எண்ணிக்கைக்கு ஏற்ப.. கட்சிகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டாயிற்று. இருந்தாலும்.. பிற உறவுகளுக்கும் சம வாய்ப்பளிக்கும் நோக்கில்.. இந்த ஐந்து கட்சிகளும்.. குறைந்தது தலா இரண்டு உறுப்பினர்களை கொண்டிராத போது.. அவற்றின் பதிவு தானாக ரத்தாகும் நிலை இருப்பதால்.. இந்த 5 கட்சிகளையும் விட மேலதிகமாக பதியப்படும் கட்சிகளுக்கு அவற்றின் கொள்கை.. அங்கத்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முன்னுரிமை கொடுக்கப்பட்டு பதிவில் ஏற்றுக் கொள்ளப்படும்.

எனவே உங்களின் எண்ணத்திற்கு ஏற்ப கட்சிக்கு இடமில்லையே என்ற வருத்தம் கொள்ளாது.. தொடர்ந்து கட்சிகளைப் பதிவு செய்ய நாம் இடமளிக்கின்றோம். இன்னும் உங்களின் கட்சிக்கு.. இந்த பிரதான 5 கட்சிகளின் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளது. காரணம் பதியப்பட்டுள்ள கட்சிகளில் ஓரிரு கட்சிகளைத் தவிர இதர.. இன்னும் பதிவை உறுதி செய்து கொள்வதற்கான ஆகக்குறைந்தது கட்சிக்கு இரண்டு உறுப்பினர் என்ற நிலையை இன்னும் பூர்த்தி செய்து கொள்ளவில்லை. :):lol::icon_idea:

Link to comment
Share on other sites

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.)

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.)

3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.)

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.)

5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா)

ஸாகிறாவின் இலட்சியமும் என்னுடைய இலட்சியமும் ஒன்றே என்பதால் அவவுடன் தான் சேர வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சுயேட்சையாக பொதுமக்கள் உரிமையோட இருக்கப் போறன்... கிருபண்ணா. நிழலி அண்ணர்.. ஏலவே ஒரு கட்சியை ஸ்தாபித்து விட்டதால்.. அவரை நீங்கள் கட்சிக்குள் சேர்க்க முடியாது. இருந்தாலும்.. நிரந்தரப் பதிவுக்கு முன்னர் நிழலி அண்ணரோ.. எவருமோ.. தங்கள் கட்சியை கலைக்கும் உரிமையைக் கொண்டுள்ளனர். தற்காலிக பதிவில் உள்ள (கட்சி நிபந்தனைகளை இன்னும் பூர்த்தி செய்யாத நிலையில் உள்ள கட்சிகள்) கட்சியைக் கலைத்துவிட்டு இதர கட்சிகளில் சேர அனுமதி உண்டு. ஆனால் நிரந்தரப் பதிவின் பின் அப்படிச் செய்ய இயலாது. :lol::):icon_idea:

யாழ்கள உயர் குழாம் கட்சியின் விதி ஐந்தின்படி தொழில்சார் நிபுணர்களாக உள்ளவர்களும் தொழில்சார் நிபுணர்களாகத் தங்களைக் கருதிக்கொள்பவர்களும் பிரிந்து சென்று இன்னுமொரு கட்சி ஆரம்பிக்க அனுமதி இல்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

பார்க்க விதி 5:

தேர்தல் முறை இல்லாததால் கட்சி அங்கத்தினர் தாமாக பிரிந்து செல்லும் உரிமையைக் கொண்டிருக்கமாட்டார்கள். இருந்தும் தனிப்பட்ட வாழ்விற்காகப் பிரிந்து செல்ல முயல்பவர்கள், வேறு கட்சி அமைக்க அனுமதிக்கப் படமாட்டார்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்சி + ஸ்தாபகர் + ஸ்தாபகர் அல்லாத உறுப்பினர் தொகை ( பதிவை உறுதி செய்ய வேண்டப்படும் குறைந்த தொகை 2)

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.) (2 - சிறி அண்ணர், நீலப் பறவை)

வல்லை அக்காவின் கட்சி வேண்டப்பட்ட ஆகக்குறைந்த தகுதிகளைப் பெற்று முதல் நிரந்தரப் பதிவு செய்யப்பட்ட கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனி அவர்கள் களமாளுமன்றிற்கான அவர்களின் கொள்கைகள்.. தேர்தல்களை சந்தித்ததல் குறித்தும்.. தமது கட்சி அமைப்பு.. விரிவாக்கம் குறித்தும் சிந்திக்கலாம். வாழ்த்துக்கள் சகாரா அக்கா. :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உயர் குழாம் கட்சியின் விதி ஐந்தின்படி தொழில்சார் நிபுணர்களாக உள்ளவர்களும் தொழில்சார் நிபுணர்களாகத் தங்களைக் கருதிக்கொள்பவர்களும் பிரிந்து சென்று இன்னுமொரு கட்சி ஆரம்பிக்க அனுமதி இல்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

பார்க்க விதி 5:

இதென்ன அடாத்தான முறையா இருக்குது கிருபண்ணா. நாங்கள் கட்சி சாராமல் இருக்க விரும்பிற மக்களுக்கு சுயேட்சை அமைப்பு என்ற நிலை வழங்கி இருக்கிறம். சுயேட்சை அமைப்புக்குள் இருந்தாலும்.. தேர்தலுக்கு முந்திய கட்சிகளின் நிலைப்பாடுகள்.. விஞ்ஞாபனங்கள் குறித்து கூட்டணி பற்றி சிந்திப்போம். :lol::D:icon_idea:

கட்சிகளில் இடம்பெறாதவர்கள் எல்லோரும் ஒரே ஒரு சுயேட்சை அமைப்புக்குள் வைத்துக் கருதப்படுவார்கள். அவர்களுக்கு பொதுமக்கள் உரிமை.. வாக்குரிமை.. கருத்துரிமை.. எல்லாம் வழங்கப்படும். ஆனால் களமாளுமன்றில்.. அடிப்படை உரிமைகளைத் தவிர இதர பதவி நிலைகளை அடைய முடியாது. தேர்தலில் தனித்து நிற்க முடியாது. ஆனால் குறித்த பதவிக் காலத்தில் தேர்தல் நடக்க முன்னரே.. தாம் விரும்பும் ஒரே ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம். தேர்தலின் பின் கூட்டணி அமைக்க முடியாது. தேர்தலின் பின் குறித்த பதவிக்காலம் முடியும் வரை.. கூட்டணியில் இருந்து விலகவோ.. கட்சி தாவவோ.. முடியாது.

சுயேட்சைகள்.. கூட்டணியில் இடம்பெற்றாலும் பதவிகளைப் பெற முடியாது. 5 பிரதான கட்சிகளும் தமக்குள்.. கூட்டணி அமைக்க அனுமதியில்லை. இவை அடிப்படை அம்சங்கள். இதற்கு கட்டுப்படுவது அனைவரினதும் கடமை. நடைமுறை சாத்தியங்களையும் கருத்தில் கொண்டு.. முன் வைக்கப்பட்டுள்ள இந்த அடிப்படைகளுக்குள் மாற்றங்கள் அவசியம் என்றால் இப்போதே அதனை தெரிவித்து திருத்திக் கொள்ள எல்லோருக்கும் உரிமை உண்டு. இன்றேல்.. இவை எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கருதப்பட்டு.. அடிப்படை விதிகளுக்குள் அடக்கப்பட்டு விடும். அடைப்படை விதிகளை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது கட்சியின் கொடியை முதன் முதலாக அறிமுகப் படுத்துவதில் ப.மே.க. பெருமையடைகின்றது.

red_and_yellow_flag.jpg

எங்கள் "படிக்காத மேதைகள்" கட்சியே... வரும் தேர்தலில் ஆட்சியமைக்க இருப்பதால்...

கட்சியில் உடனடியாக சேர்பவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும்.

"சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்கள காதலர் கட்சிக்கு அனைத்து செல்லங்களும் வந்து இணையுங்கள் அச்சாப்பிள்ளையள். :rolleyes:

காதலை வாழவைக்க வேண்டியது உங்கள் கடமை

(கொய்யாலை யாரோ ஒருத்தன் குசுகுசுக்கிறது கேட்குது) :icon_mrgreen:

அதனால் உங்கள் கடமையை செய்யுங்கள். பலனை எதிர்பார்க்காதீர்கள். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.)

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.)

3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.)

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.)

5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா)

ஸாகிறாவின் இலட்சியமும் என்னுடைய இலட்சியமும் ஒன்றே என்பதால் அவவுடன் தான் சேர வேண்டும்

எமது கட்சியில் இணைந்து கொண்ட நீலப்பறவையை ஆரத்தழுவி வரவேற்கின்றேன்.smiley_dance04.gif

நீலப்பறவை இணைந்ததன் மூலம், எமது கட்சி பதிவு செய்யப் பட்டு விட்டது.fireworks.gif

வேறு கட்சியில் இருந்து தாவி... ப.மே.க. வுக்கு வருபவர்களுக்கு, ஐந்துநட்சத்திர ஓட்டலில் விசேட விருந்து அளிக்க கட்சி தீர்மானிதுள்ளது.

Link to comment
Share on other sites

உறுப்பினராக விரும்புகிறவர்கள்,

தயவு செய்து

தனிமடலில் தொடர்பு கொள்வதைத் தவிர்த்து, இந்தத் திரியில் பதியவும்.

நேற்றைய ஏக்கங்கள் இன்று கனவுகள் ஆகும்

இன்றைய கனவுகள் நாளைய வெற்றிகள் ஆகும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.