Jump to content

இரட்டை குழந்தைக்கு தந்தையான 81 வயது தாத்தா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இரட்டை குழந்தைக்கு தந்தையான 81 வயது தாத்தா

மதுரை, நவ. 22-

கொடைக்கானல் அருகே 81 வயது முதியவர் ஒருவர் சோதனைக்குழாய் முறைமூலம் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார். சோர்வுற்று இருந்தவர்களுக்கு சோதனைக்குழாய் கை கொடுத்ததால் மகிழ்ச்சியடைந்துள்ளனர் தம்பதியர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா வெங்கலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்சாமி (81). இவரது முதல் மனைவிக்கு குழந்தை இல்லை. இதனால் 2வதாக ரத்தினம் என்பவரை திருமணம் செய்தார். இவருக்கு வயது 46. 5 ஆண்டுக்குப்பின் பிறந்த ஆண் குழந்தையும் 23 வயதில் விபத்தில் சிக்கி இறந்து விட்டார். இதனால் வாரிசு இன்றி தவித்து வந்த இந்த தம்பதியருக்கு 'IVF' எனப்படும் சோதனைக்குழாய் முறையில், சிகிச்சை அளிக்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் பெருமாள்சாமியின் உயிரணுக்களை எடுத்து, ரத்தினத்துக்கு கருவூட்டப்பட்டது. ஏப்ரல் 5ம் தேதி ரத்தப் பரிசோதனையும், 21ம் தேதி ஸ்கேன் பரிசோதனையும் செய்ததில் கருவுற்றது உறுதிப்படுத்தப்பட்டது. வயது மற்றும் ரத்தக்கொதிப்பு காரணமாக ரத்தினத்துக்கு சிறப்பு மகப்பேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. கடந்த 16ம் தேதி ரத்தினம் இரட்டை ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவர் செந்தாமரைச் செல்வி, குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு செயற்கை முறையில் கருத்தரிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்றார். ஆண்களுக்கு எத்தனை வயதானாலும் அவர்களது உடலில் உயிரணு உற்பத்தி இருக்கும். எனவே, குழந்தை இல்லாத தம்பதிகள் செயற்கை முறை கருத்தரித்தல் மூலம் குழந்தை பெறலாம் என்றும் மருத்துவர் கூறினார்.

நன்றி தமிழ் கூடல்.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்!

எண்பத்தோரு வயதில் ஒரு குழந்தை!

இந்தக் குழந்தை, தகப்பனை அப்பா என்று கூப்பிடுமா அல்லது அப்பு என்று கூப்பிடுமா? :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் கெட்டிக்காரர்கள்தான் :lol:

கலோ கறுப்பு! அங்கை ஏற்கனவே பரிசோதனைக்குழாயாலைதான் கருக்கட்டினது எண்டு போட்டுருக்கல்லே???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில ஆக்கள்.. உடம்புக்குள்ள உள்ள குழாயில கருக்கட்டினா அதை திறமை என்று ஏற்றுக் கொள்ளுவினம்.. அதை றோட்டில போற வாற எல்லா ஜந்துகளும் செய்யும்.. பரிசோதனைக் குழாயில சுத்தமா வைச்சு கருக்கட்ட வைச்சா அதைக் குறை என்று சொல்லுவினம். இவைக்கு முன்னால அறிவியல் தான் வெட்கித் தலை குனிய வேண்டும்.. அவை மாட்டினம்..! :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழாயிலை வைச்சு கலக்கி எடுத்தாலும்....கருக்கட்ட பொண்டுகள்தான் வேணும் எண்டு நினைக்கிறன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழாயிலை வைச்சு கலக்கி எடுத்தாலும்....கருக்கட்ட பொண்டுகள்தான் வேணும் எண்டு நினைக்கிறன். :D

இல்லாமல் பிறந்தவருக்கு இப்போ வயது பதினேழு.

எல்லா நாட்டிலும் தடை போட்டு வைத்துள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லாமல் பிறந்தவருக்கு இப்போ வயது பதினேழு.

எல்லா நாட்டிலும் தடை போட்டு வைத்துள்ளார்கள்.

அந்ததடை ஏன்? என்னத்துக்கு? எண்டு உங்களுக்கு விளங்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழாயிலை வைச்சு கலக்கி எடுத்தாலும்....கருக்கட்ட பொண்டுகள்தான் வேணும் எண்டு நினைக்கிறன். :D

பொண்டுகள் தேவையில்ல கருமுட்டை மட்டும் தான் தேவை. இப்போ.. கோழி முட்டை வாங்கனுன்னா.. கோழியையே வாங்கனுன்னு சொல்ல முடியுமோ..???! அது போலத்தான்.!

இப்ப எல்லாம் பெண்கள் கருப்பையைக் கூட வாடகைக்கு விடுறாங்க. அவங்க எங்கையோ போய்க்கிட்டு இருக்காங்க.. நீங்க சில பேர்.. இன்னும்.. திருந்திறதா இல்ல..!

அதெல்லாம் ஒரு காலம்.. தாய்மையைக் காட்டி பெண்கள் செய்யுற அநியாயங்களை எல்லாம்.. மறைக்கிறது. இப்ப அதெல்லாம் சரிவராது. எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த உலகினை..! :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போது நமது வெளிநாட்டு தமிழ் சுந்தரிகளும் பாவிக்கிறார்கள். முப்பது வயது மட்டும் குழந்தை பெறாமல் ஸ்டைலா இருந்துவிட்டு பின் ஐயோ ஆத்தேரோ கருத்தரிக்கவில்லை என்று ஒவ்வொரு முயற்சிக்கும் பத்தாயிரம் பவுண்ட்ஸ் விடுகிறார்கள்.

கண்டபாட்டுக்கு கருத்தடை மாத்திரைகள் பாவிப்பதுவும் ஒரு காரணி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்சிங்கங்களும் இப்ப வாடகைக்கு போக வெளிக்கிட்டினமாமெல்லே....காசுக்கு காசுமாச்சுது....இயற்கையின் சீற்றத்தை அமைதிக்கு கொண்டுவந்ததுமாச்சு :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்சிங்கங்களும் இப்ப வாடகைக்கு போக வெளிக்கிட்டினமாமெல்லே....காசுக்கு காசுமாச்சுது....இயற்கையின் சீற்றத்தை அமைதிக்கு கொண்டுவந்ததுமாச்சு :lol:

பொண்டுகளுக்கு இரட்டை பிசினஸ்.. கருப்பை வாடகை ஒரு பக்கம்.. முட்டை விக்கிற விலைக்கு.. அதால இன்னொரு வருமானம். அதோட ஒப்பிடேக்க ஆண் சிங்கங்கள்.. பாவங்கள்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.