Jump to content

வாழ்த்துக்கள்: தமிழீழ தேசியத்தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்களின் 57 வது பிறந்த நாளை வாழ்த்தி வன்னியில் இருந்து கவிஞர் சீராளனின் கவிதை


Recommended Posts

தமிழீழத்தேசியத்தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்களின் 57 வது

பிறந்த நாளை முன்னிட்டு வன்னியில் இருந்து கவிஞர் சீராளனின் வாழ்த்துக் கவிதை

“எமக்கென்றும் நீ வேண்டும்

திரும்ப நீ வரவேண்டும்”

Thalaivar_0.jpg

வல்வையின் வடிவே: தமிழர்

வாசலின் நிமிர்வே ஜயா!

சொல்லிய திசையில் சுடரும்

சூரிய தேவே! தழுவும்

மெல்லிய காற்றே: பாசம்

மேலிடும் ஊற்றே: உன்னை

அள்ளியே அணைக்க ஆசை

ஆவலோடு உள்ளோம் வாராய்!

00

அற்றைத்திங்கள் நீதான்.

அவ்வெண் நிலவும் நீதான்

ஓற்றைக்காற்றும் நீதான்,

ஓண்டமிழ்க் குரலும் நீதான்,

கோற்றவைப் பிள்ளை நீதான்,

கொடியர சாள்வாய் நீதான்,

இற்றைவரைக்கும் நீதான்,

இனியும் இனியும் நீதான்

00

நேற்று நீ இருந்தாய் அழகாய்

நிலவிலும் நீயே வடிவாய்

ஏற்றுமே துதித்தோம்: உன்னில்

எத்தனை கனவை நெய்தோம்

பேற்றிலும் பேறாய் உன்னைப்

பெற்றதே தவமாய் கண்டோம்

போற்றிடும் செல்வப் பேறே

போனநீ வருவாய் எப்போ?

00

நீயிருந்து ஆண்ட வன்னி

நீறுபூத்திருக்கே எண்ணி!

பாய்விரித்து உறங்கா வீரம்

பாய்ந்துமே வருமோர் நேரம்

தாய் முகம் தேடும் கன்றாய்

தாகமாய் உள்ளோம்: இந்தத்

தீயரும் திசை கெட்டோடத்

திரும்பி நீ வருவாய் எப்போ?

00

பின்னிய வலையை வென்றாய்

பீறிடும் தீயில் நின்றாய்

இன்நுயிர் சுமந்து சென்றாய்

இறுதியில் நீயெ வென்றாய்

அன்னியர் கண்ணில் மண்ணை

அண்ணா நீ தூவிச் சென்றாய்

எங்கோ நீ இருப்பாய் இருப்பாய்

இருந்து நீ எழுவாய் நெருப்பாய்!

00

சுற்றியே வளைத்தோம்: ஈழச்

சுதந்திரக்காற்றைக் கைகள்

பற்றியே இழுப்போம் : மிதிப்போம்

பகற்கனா கண்ட; பகைவா;

வெற்றியா(ர்) பெற்றார் கோட்டை

விட்டவ ரானார்: அண்ணன்

காற்றினில் ஏறி எல்லை

கடந்துமே சென்றான்: வருவான்!

00

நீ இல்லா வாழ்வும் வாழ்வா

நிலவில்லா வானும் வானா

நீ இல்லை என்றால் தமிழன்

நிழலதும் மிஞ்சாதிங்கே

நீ இல்லாத் தெய்வம்: உன்னால்

நிமிர்ந்ததிவ் வையம்: நாளை

நீ வரும் திசையை நோக்கி

நெடுந் தவம் செய்வோம் வாராய்!

00

மலைத்தோள் அழகா வாழ்க,

மறப்புலி தலைவா வாழ்க!

வளைந்திடா வீரம் வாழ்க

வணங்கிடா ஓர்மம் வாழ்க

கலைந்திடாக் கனவும் வாழ்க

கனவதும் மெய்பட வாழ்க

நிலையென நீயே வாழ்க

நூறென அகவை காண்க!

00

ஒன்றென ஆவோம் : நாமும்

ஒரு கொடி சேர்வோம்: பாரில்

நன்றென நாங்கள் வாழ

நல்லதோர்; தலைவன் உள்ளான்

நின்று வான் முகிலை உரசும்

நிலைமையில் இருந்தோம் நாங்கள்

இன்றிவ் நிலைக்கேன் ஆனோம்

ஒற்றுமை எமக்குள் வேண்டும்

00

ஆளொரு வழியில் போனால்

ஆவது ஒன்றும் இல்லை

நாளொரு முடிவில் நின்றால்

நாறவே ஓடும் உண்மை!

தோளொடு தோளாய் தமிழர்

தோழர்க ளானால் வெற்றி

ஆளுமோர்; காலம் தன்னை

ஆக்குமெம் தலைவன் வாழ்க!

00

“எமக்கென்றும் நீ வேண்டும்

திரும்ப நீ வரவேண்டும்”

“சீராளன்”

Link to comment
Share on other sites

அழகு தமிழால் அண்ணனுக்கு வாழ்த்து. வாழ்க தலைவா. நானும் வாழ்த்துகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தேசியத்தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்களின் 57 வது

பிறந்த நாளை முன்னிட்டு வன்னியில் இருந்து கவிஞர் சீராளனின் வாழ்த்துக் கவிதை

“எமக்கென்றும் நீ வேண்டும்

திரும்ப நீ வரவேண்டும்”

Thalaivar_0.jpg

அற்றைத்திங்கள் நீதான்.

அவ்வெண் நிலவும் நீதான்

ஓற்றைக்காற்றும் நீதான்,

ஓண்டமிழ்க் குரலும் நீதான்,

கொற்றவைப் பிள்ளை நீதான்,

கொடியர சாள்வாய் நீதான்,

இற்றைவரைக்கும் நீதான்,

இனியும் இனியும் நீதான்

“சீராளன்”

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆளொரு வழியில் போனால்

ஆவது ஒன்றும் இல்லை

நாளொரு முடிவில் நின்றால்

நாறவே ஓடும் உண்மை!

தோளொடு தோளாய் தமிழர்

தோழர்க ளானால் வெற்றி

ஆளுமோர்; காலம் தன்னை

ஆக்குமெம் தலைவன் வாழ்க!

“சீராளன்”

உள்ளத்தை உருக்குகின்றது, கவிதை!

நன்றிகள், உமை!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கென்றும் நீ வேண்டும்

திரும்ப நீ வரவேண்டும்”

அவர், எங்களுக்கு வாழைப்பழத்தை உரித்து... தந்ததும், காணாது... எண்டு,

தீத்தி விடச் சொன்ன மாதிரி இருக்கு.

Link to comment
Share on other sites

சிறி அண்ணே இது வன்னியில் இருந்து ஒருவர் எழுதியது.இவர் தனது சொந்தப்பேரிலேயே கவிதை எழுத முடியாதவராக உள்ளார். உண்மையில் வன்னியில் உள்ள மக்களுக்கு தலைவர் திரும்ப வரவேண்டும் என்றுதானே மன நிலை இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணே இது வன்னியில் இருந்து ஒருவர் எழுதியது.இவர் தனது சொந்தப்பேரிலேயே கவிதை எழுத முடியாதவராக உள்ளார். உண்மையில் வன்னியில் உள்ள மக்களுக்கு தலைவர் திரும்ப வரவேண்டும் என்றுதானே மன நிலை இருக்கும்.

உமை,

எவர், எங்கிருந்து எழுதினாலும்....

தலைவருக்கு 57 வயசு. நாற்பது வருடம் எமக்காக போராடிவிட்டார்.

தலைவரும் பாவம் தானே......

பென்சன் எடுக்கிற தாத்தா, புத்தி மதி சொன்னால்.... கேட்க மாட்டீங்களா... :)

Link to comment
Share on other sites

சிறி அண்ண எனது கருத்தும் அதுதான் அவருக்கு தொல்லைகொடுக்க கூடாது என்பதுதான் ஆனால்....இயலாத் தன்மையில் கடவுளிடம் முறையிடுவது போலதான் இதுவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ண எனது கருத்தும் அதுதான் அவருக்கு தொல்லைகொடுக்க கூடாது என்பதுதான் ஆனால்....இயலாத் தன்மையில் கடவுளிடம் முறையிடுவது போலதான் இதுவும்.

சனத்துக்கு.... குறை சொல்லுறதே... வேலையாய் போச்சுது.

அல்லாவுக்கு குறை சொன்னால்... பாசை விளங்காது எண்டு...

சனம் யோசிக்குது போலை.

அதுக்காக... எங்களை, நெடுக இழுத்தால்... ஒட்ட நறுக்கிப் போடுவன்.

Link to comment
Share on other sites

உலகப் பூப்பந்தில் இருக்கும் ஒவ்வொரு தன்மான தமிழனின் ஒரே தலைவர் என்கிற தகுதி உள்ள தங்களுக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலைத்தோள் அழகா வாழ்க,

மறப்புலி தலைவா வாழ்க!

வளைந்திடா வீரம் வாழ்க

வணங்கிடா ஓர்மம் வாழ்க

கலைந்திடாக் கனவும் வாழ்க

கனவதும் மெய்பட வாழ்க

நிலையென நீயே வாழ்க

நூறென அகவை காண்க!

இணைப்பிற்கு நன்றி உமை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.