Jump to content

எனது தாயகப் பயணமும் சமரச அரசியல் பற்றிய சிந்தனைகளும்


Recommended Posts

இங்கே என் மீது வைக்கப்படும் கருத்துக்கள், குற்றச்சாட்டுக்களுக்கு என்னுடைய தொடர் மூலமாகவே பதில் சொல்ல விரும்புகிறேன். தனித்தனியாக கருத்துக்கள் எழுது யாருடனும் மோதிக் கொண்டிருக்க விரும்பவில்லை.

ஒரு அன்பு வேண்டுகோள். இங்கே உங்களின் கருத்துக்களை தாராளமாக வையுங்கள். அவைகள் என்னை உற்சாகப்படுத்தும். சித்திக்கத் தூண்டும். உங்கள் கருத்துக்களை உள்வாங்கியபடி என் தொடரைக் கொண்டு போவேன். ஆனால் கட்டுரைகளை தனியான தலைப்பின் கீழ் வையுங்கள். அவைகள் என்னுடைய கருத்துக்களுக்கான பதிலாக இருந்தாலும், நீளமான கட்டுரைகளை இடுவது, தொடரின் ஓட்டத்தை பாதிக்கக் கூடும். இது ஒரு அன்பு வேண்டுகோள்

தொடர் 1

சில வாரங்களுக்கு முன்பு ஜேர்மனியில் மாவீரர் நாள் நடத்துவது பற்றிய கூட்டத்திற்கு என்னையும் அழைத்திருந்தார்கள். விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் அந்தச் சந்திப்பின் பின்னால் இருந்தது.

நான் கடந்த ஆண்டே தலைமைச் செயலகத்திற்கு ஆதரவான நிலையை எடுத்திருந்தேன். விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தை பலப்படுத்துவதன் ஊடாக மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை கட்டியெழுப்ப முடியும் என்பது என்னுடைய நம்பிக்கையாக இருந்தது.

புலம்பெயர் தமிழ் மக்களின் தலைமைப் பொறுப்பை கைப்பற்றுவதற்கு நரிகளும் ஓநாய்களும் செய்கின்ற முயற்சிகளை முறியடித்து அதை புலிகளிடம் கொடுத்து விடுவேண்டும் என்ற சிந்தனை எனக்குள் இருந்தது.

ஆகவே அவர்கள் என்னையும் சந்திப்புக்கு அழைத்திருந்ததில் எந்தத் தவறும் இல்லை. ஜேர்மனியில் தலைமைச் செயலகம் செய்கின்ற மாவீரர் நாளுக்கான ஏற்பாட்டுக் குழுவில் நான் கட்டாயம் முக்கிய பங்கு வகிப்பேன் என்று அவர்கள் நம்பியிருந்தார்கள்.

தலைமைச் செயலகம் சார்பாக ஜேர்மனியில் என்னால் மிகப் பெரிய பரப்புரையை துணிவான முறையில் முன்னெடுக்க முடியும் என்று அவர்கள் கருதியிருந்தார்கள்.

நான் தயங்கியபடி அவர்களிடம் சொன்னேன். 'என்னை உங்கள் குழுவில் சேர்ப்பதில் இரண்டு பிரச்சனைகள் இருக்கின்றன'

என்னைக் கேள்விக்குறியோடு பார்த்தார்கள். நான் தொடர்ந்தேன். 'தலைவர் உயிரோடு இல்லை என்ற கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருபவன் நான். கடந்த ஆண்டு நான் எழுதியிருக்கிறேன். தலைவருக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் அடுத்த ஆண்டு, அதாவது இந்த ஆண்டு தனியாக மாவீரர் நடத்துவார்கள் என்று'...

அவர்கள் சற்று ஆச்சரியத்தோடு என்னைப் பார்த்தார்கள். தலைவர் உயிரோடு இருக்கிறார் என்று நம்புகின்ற ஓரிரு அப்பாவிகளும் அவர்களுக்குள் இருந்தார்கள்.

'அது உங்களின் சொந்தக் கருத்து, அதில் பிரச்சனை ஒன்றும் இல்லை' என்று சொன்னவரை இடைமறித்து...'இல்லை, இதை வைத்துக் கொண்டு எதிரிகள் பெரிய பரப்புரையை மேற்கொள்வார்கள், தலைவருக்கு அஞ்சலி செலுத்தவே மாவீரர் தினத்தை நடத்துவதாக மக்களிடம் சொல்லி குழப்பத்தை ஏற்படுத்துவார்கள், ஆதாரமாக நான் உங்களோடு இருப்பதைக் காட்டுவார்கள், இதை விட இன்னும் ஒரு பிரச்சனை இருக்கிறது' என்றேன்.

'சில மாதங்களுக்கு முன்புதான ஊருக்குப் போய் வந்திருக்கிறேன். இதை வைத்துக் கொண்டும் எதிரிகள் பிரச்சாரம் செய்வார்கள். நான் கேபியை சந்தித்து விட்டு வந்திருக்கிறேன், கோத்தபாயாவை சந்தித்து விட்டு வந்திருக்கிறேன், டக்ளஸ்... சித்தார்த்தன்....ஆனந்தசங்கரி இப்படி எல்லோரையும் சந்தித்து பிசினஸ் பேசி விட்டு வந்திருக்கிறேன் என்று ஆபாண்டமான பொய்ப் பிரச்சாரத்தை செய்வார்கள், இதை வைத்து உங்களை முறியடிக்கப் பார்ப்பார்கள், ஆகவே என்னை உங்கள் ஏற்பாட்டுக் குழுவில் சேர்க்க வேண்டாம்' என்றேன்.

அவர்கள் என்னை பலமாக கருதி இணைக்க விரும்பினார்கள். ஆனால் அவர்களின் பலவீனமாக நான் ஆகி விடுவோனோ என்ற அச்சம் எனக்குள் இருந்தது.

ஆயினும் அவர்கள் ஏற்கவில்லை. 'அண்ணை....அவங்களும் ஒவ்வொரு மாதமும் போய் வாறவங்கள்தான், பேசாமல் வாங்கண்ணை' என்றும் சொல்லி என்னை வற்புறுத்தினார்கள்.

சரியென்று ஒரு நிமிடம் ஜேர்மன் மாவீரர் ஏற்பாட்டுக் குழுவில் ஒருவனாக நின்று ஜீரிவிக்கு ஒரு நிமிடம் கருத்துரையும் வழங்கிவிட்டு வந்து விட்டேன். விரைவில் தொலைக்காட்சி, வானொலி, இணையங்களில் மாவீரர் தினத்திற்கான பரப்புரையை மேற்கொள்கிறேன் என்று வாக்குறுதியும் வழங்கியிருந்தேன்.

ஆனால் நான் குழப்பம் தீராதவனாகவே அந்த இடத்தை விட்டு சென்றிருந்தேன். வாக்குறுதியின்படி பரப்புரைகளை மேற்கொள்ளாது என்னுடைய சொந்த வேலைகளை செய்து கொண்டிருந்தேன். அவர்களுக்கு நான் அகப்படுவதும் கடினமாகிப் போயிருந்தது.

பலத்த முயற்சிக்குப் பின்பு அவர்களில் ஒருவர் என்னை தொலைபேசியில் பிடித்தார். 'உங்களுக்கு என்ன பிரச்சனை? யாருக்காவது பயப்படுகிறீர்களா? எதுவாயினும் வெளிப்படையாகக் கதையுங்கள்!'

நான் என்னுடைய பிரச்சனையை சொல்லத் தொடங்கினேன். ஊர்ப் பயணம் என்னுடைய சிந்தனையில் ஏற்படுத்திய மாற்றங்கள் பற்றி சொல்லத் தொடங்கினேன்.

அந்தப் பயணத்தை நாளைக்குப் பார்ப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அனைத்துலகச் செயலகத்தைத் தவிர்த்து தலைமைச் செயலகத்திற்கு ஆதரவு கொடுக்க முனைந்தீர்கள் என்பதையும் ஒரு சந்தர்ப்பத்தில் தெளிவுபடுத்தினால் நல்லது!

Link to comment
Share on other sites

சபேசன் ...

.... யுத்தநிறுத்தம் 2001ல் ஏற்படுத்தப்பட்டவுடன், இங்கு லண்டனில் இருந்து நாடு சென்ற ஜெயதேவன், இங்கு செயற்படும் சிலரின் தனிப்பட்ட/குடும்ப குரோதங்கள், பதவிப்போட்டியில், அங்கு இருந்து இயக்க முடியாமல் இயங்கிக் கொண்டிருந்த காஸ்ரோவுக்கு பிழையான தகவல்களை கொடுத்து, அங்கு அடைத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பின், இங்கு வந்த ஜெயதேவன் கோபத்தில், மா.க.மாக்கள் தோள் கொடுக்க எழும்பி ஆடத்தொடங்கியபோது, எல்லோரும் ஒழித்து விட்டார்கள், அந்தநேரம் ஜெயதேவன் இங்கு நடைபெற்ற மாவீரர் நாளையே வழக்கு போட்டு நிறுத்த முற்பட்டார். அப்போது இந்த பூனைக்கு மணி கட்டுவது யார்? என்ற கேள்வி எழுந்த போது, ஒரிருவரே முன்னின்றார்கள், அதில் சபேசன் நீரும் ஒருவர். நீர் உம் இணையத்தளத்தில் எழுதிய இரு கட்டுரைக்கு, ஜெயதேவன் பல நாட்களாக வியாக்கியானம், தன் இணையத்தளத்திலோ, ரி.பி.சி இலோ கொடுக்க வேண்டி இருந்தது என்பதை ஞாபகபடுத்திக் கொண்டு ...

... இதே ஜெயதேவன் தலைமையிலான இலங்கை அரசுக்கு வேலை செய்த ஐரோப்பிய தமிழ் குழுவொன்று, இன்னும் உங்கள் பாணியில் சொல்லப்போனால் சமரச அரசியல் குழுவொன்று, யுத்தம் ஆரம்பமாகும் முன் கொழும்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அங்கு சென்றவர்களுக்கு நாம் புலிகளை அழிக்கப்போகிறோம், அதன் பின் தமிழர்களின் பிரட்சனை தீர்க்கப்படும் என்றார்களாம். அப்போ ஜெயதேவனுடன் சென்றவர்களில் ஓரிருவர், இல்லை புலிகளை அழிப்பதற்கு முன் தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்குங்கள், எல்லோரும் உங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்றார்களாம். சிங்களமோ இல்லை இல்லை புலிகளை அழித்துப் போட்டுத்தான் தமிழ் மக்களின் பிரட்சனைக்கு தீர்வு என்றார்களாம். சரி இறுதியாக புலிகளை அழித்துப் போட்டு என்ன தீர்வு வைக்கப் போகிறீர்கள் என்றால், பதில் வந்ததாம், இலங்கை சிறிய நாடு, எல்லா மக்களும் சமன், பொருளாதாரத்தில் எல்லோரையும் முன்னேற்றினால் பிரட்சனைகள் எல்லாம் தீர்ந்து விடும் என்றார்களாம். மற்றுபடி எந்த அதிகார பகிர்வுக்கும் இடமில்லை என்று அழுத்தம் திருத்தமாக கூறப்பட்டதாம். அதில் உறுதியாகவும் இருந்தார்களாம். உங்களைப்போல் சமரச அரசியல் பேசி, சிங்களத்துடன் கூடியாடி உரிமைகளை பெறலாம், அதற்கு மேல் இவ்வலவு காலமும் புலிக்காச்சலில் அலைந்ததற்கு மக்களுக்கு ஓர் காரணத்தை கூறலாம் என்ற கனவுடன் போன கும்பல்களுக்கோ பேய் அறைந்த நிலையாம், பலர் சுதாகரித்துக் கொண்டு, வேறு வழி இல்லாமல் தலை ஆட்டினார்களாம். நம்ம ஜெயதேவனும் போன்றோர் குழம்பிக் கொண்டு வெளியேறினார்களாம்.

இன்னும், ........... மானிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற கோசத்தோடு இணக்க அரசியல் செய்த குத்தியின் கோசத்தையே இன்று பிடுங்கி விட்டதாம் சிங்களம்!

அதற்கு மேல் சொல்படி அரசியல் செய்த சித்தார்த்தன், ஆனந்தசங்கரி, சிறிதரன் போன்றோர்களை தேடியும் கண்டு பிடிக்க முடியாமல் இருக்கிறது!!

... இப்போ உம்முடைய ரேன்?????????????!!!!!!!!!!!!!!!!!!!! ... என்ன சரியான லேட்டு!!!!!!!!!!! நீர் எழுப்பி இருக்கும் கோசத்தை போட்டவர்கள் சாதித்ததை புரட்டிப்பாரும்!!!

....

என்ன ... சிலகாலத்துக்கு முன் சபேசன், இதே யாழில் பதிந்தது ... நீங்கள் உங்களுக்குள் ஓர் உடன்பாட்டுக்கு வராவிட்டால், நான் கொக்கோகோலா உடைத்து குடித்து என் இலங்கை புறக்கணிப்பு விரதத்தை முடிக்க இருக்கிறேன், அதற்கு மேலும் டக்லஸை என் தலைவனாக ஏற்க இருக்கிறேன்!!! ... நன்றிகள் செயல்வீரன் சபேசன்!

Link to comment
Share on other sites

தொடர் 2

தீவிரமான எதிர்ப்பு அரசியல் செய்பவர்களின் புறக்கணிப்புப் பட்டியலில் முக்கியமான இடத்தில் இருக்கும் சிறிலங்கன் எயர் லைன்ஸின் விமானம் என்னையும் என் குடும்பத்தையும் ஏற்றிக் கொண்டு இலங்கைத் தீவை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது.

நானும் என்னைப் போன்ற பலரும் தீவிரமாக முன்னெடுத்த புறக்கணிப்புப் போராட்டங்கள் பற்றி தனியாகவே ஒரு தொடர் எழுதலாம். இலங்கைப் பொருட்களைப் புறக்கணிக்கக் கோரினோம். இலங்கையின் நட்பு நாடுகளின் பொருட்களையும் புறக்கணிக்கக் கோரினோம். கலைஞர், சண் ரீவியையும் புறக்கணிக்கக் கோரினோம். ரஜினிகாந்தை புறக்கணிக்கக் கோரினோம்.

ஆனால் எங்களின் புறக்கணிப்புப் போராட்டங்கள் மக்களால் புறக்கணிக்கப்பட்டன. புறக்கணிக்கும்படி மக்களைக் கேட்டவர்களாலும் சரியான முறையில் புறக்கணிப்பை கடைப்பிடிக்க முடியவில்லை.

இலங்கைப் பொருட்களை புறக்கணிக்கும்படி கோரிக்கைகள் வலுவாக வைக்கப்படுவதற்கு முன்னமேயே நான் அவற்றை முடிந்தவரை கடைப்பிடித்துக் கொண்டு வந்தேன். 90களின் ஆரம்பத்திலேயே நான் விரும்பி அருந்துகின்ற „நெக்றோ' போன்றவற்றை புறக்கணிக்கத் தொடங்கியிருந்தேன்.

இதைப் பற்றி அப்பொழுது நான் தெரிந்தவர்களிடம் சொன்ன பொழுது என்னை ஒரு வினோதமாகப் பார்த்தார்கள்.

பின்பு புறக்கணிப்புக் கோரிக்கைகள் சற்றுப் பலமான அமைப்புக்களாலும் முன் வைக்கப்பட்டன. போர் உச்சக்கட்டத்தில் இருந்து பொழுது, புறக்கணிப்புக் கோசமும் உச்சத்தை அடைந்திருந்தது. போர் முடிவுக்கு வந்த பின்பு இந்தக் கோசமும் அடங்கிப் போனது.

சில மாதங்களுக்கு முன்பு சனல்4 தொலைக்காட்சி வெளியிட்ட இலங்கையின் கொலைக்களத்தை தொடர்ந்து மீண்டும் சில அமைப்புக்கள் இந்தப் புறக்கணிப்புக் கோசத்தை எழுப்பின. இப்பொழுது மீண்டும் அடங்கி விட்டன. கொலைக் களத்தின் இரண்டாம் பாகம் வருகின்ற வரை இனி காத்திருக்க வேண்டியதுதான்.

2009இன் இறுதிப் பகுதியில் பலத்த யோசனைக்குப் பின்பு நான் என் புறக்கணிப்பு விரதத்தை முடித்துக் கொண்டேன்.

போர் முடிந்து விட்டது. போரில் நாங்கள் தோற்றுப் போய் விட்டோம். இனி எதிரியோடு பேச வேண்டிய ஒரு நிலைக்கு வந்து விட்டோம். கதவுகளை மூடி வைக்க முடியாது. இந்தியாவுக்கு என்று ஒரு கதவை சிலர் திறந்தார்கள். மேற்குலகுக்கு என்று ஒரு சிலர் கதவை திறந்தார்கள். சிலர் சிறிலங்காவிற்கு என்றும் கதவைத் திறந்தார்கள்.

சிலர் அனைத்துக் கதவுகளையும் திறந்து வைத்துக் கொண்டு ஒரு வழி கிடைக்காதா என்று தேடத் தொடங்கினார்கள். நானும் கதவுகளை திறந்தேன்.

என்னுடைய பயணத்தில் எந்த அரசியற் தலைவர்களை சந்திக்கும் திட்டமும் இருக்கவில்லை. அது ஒரு தனிப்பட்ட பயணமே. ஆயினும் அது ஒரு அரசியற் பயணம். அரசியல் தலைவர்கள் யாரையும் சந்திக்காத, தெரிந்தவர்களுடனும் அதிகம் அரசியல் பேசாத, ஆனால் உணர்வுபூர்வமாக அனுபவித்த ஒரு அரசியற் பயணம்.

உண்மையில் இலங்கைக்கு போவது பற்றி சிறிது அச்ச உணர்வு எனக்குள் இருக்கத்தான் செய்தது. இலங்கைக்குப் போவதை நான் மிகவும் ரகசியமாகவே வைத்திருந்தேன். மிக நெருங்கிய நண்பர்களுக்கும் இந்தியா போவதாகவே சொல்லியிருந்தேன்.

ஊhவலம் போனவர்களின் படங்களை எல்லாம் சிறிலங்கா புலனாய்வுத்துறை கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்கின்ற கதைகளை நான் நம்பவில்லை.

ஆயினும் யாராவது என்னுடைய எழுத்துக்கள் பற்றி தகவல் கொடுக்கலாம், சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகின்ற கும்பல் பணம் பறிக்கும் நோக்கில் என்னை கடத்தலாம், எதுவும் நடக்கலாம். என்னுடைய இணையத்தளத்தை பொட்டு அம்மானே நடத்துவதாக முன்பு ஒரு சிறிலங்கா ஆய்வாளர் கட்டுரை வேறு எழுதியிருந்தார். அந்த நேரத்தில் பொட்டு அம்மானுக்கு இப்படி ஒரு இணையத்தளம் வெளிவருவதே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆயினும் முன்னெச்சரிக்கையாக இலங்கையில் என்னை யாராவது கைது செய்தால் ஜேர்மன் தூதரகத்திற்கு உடனடியாக அறிவிக்கும்படி என்னுடைய மனைவியிடம் சொல்லியிருந்தேன். அத்துடன் புலம்பெயர் தமிழ் மற்றும் ஜேர்மனிய ஊடகங்களுக்கும் அறிவுக்கும்படியும் கூறினேன். „எழுத்தாளர் சபேசன் கடத்தல்', „ஊடகவியலாளர் சபேசன் கைது' என்று எமது புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் இந்த பிரச்சனையை கொண்டு வந்து விடும் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது.

கைது என்று ஏதாவது நடந்தால் போராடி வெளியே வருவது என்பதே என்னுடைய முதலாவது தெரிவாக இருந்தது. அப்படியான நேரத்தில் கைதை ரகசியமாக வைத்திருந்து உள்ளுக்குள் கதைத்து பணம் கொடுத்து வெளியில் வரக்கூடாது என்று முடிவெடுத்திருந்தேன்.

மனைவியிடம் இதைச் சொன்ன பொழுது அவர். „சிறிலங்காவும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம், பேசாமல் நிற்போம்' என்று புலம்பத் தொடங்கி விட்டார். பின்பு ஒன்றும் நடக்காது என்று அவரை நம்ப வைப்பது எனக்குப் பெரிய பாடாகிப் போய்விட்டது.

எனக்கு இலங்கையில் ஒன்றும் நடக்காது என்றும் நடந்தாலும் சமாளித்து விடலாம் என்று நான் நம்பியதற்கு பல காரணங்கள் இருக்கத்தான் செய்தன. அந்தக் காரணங்கள் மீது இருந்த நம்பிக்கையில் நான் இலங்கைக்கு பறந்து கொண்டிருந்தேன்.

மலையகத்தில் தன்னுடைய ஆட்டத்தை முடித்து விட்டு வடக்கு கிழக்கு நோக்கி கிறீஸ் பூதம் நகர்ந்து கொண்டிருந்த பொழுது, நானும் என் குடும்பமும் கட்டுநாயக்காவில் போய் இறங்கினோம்

தொடரும்..

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் சபேசன் உங்கள் பயணகதைக்கு . ஆரம்பமே அரசியலின் நெடி தூக்குகின்றது. இதுவும் ஓர் போர்களமாகவே உங்களுக்கு இருக்கும் . உங்கள் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன் .இரண்டாவது பச்சைக் காணிக்கை என்னுடையது :) :) :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா திறக்க வேண்டும் என்பதற்காகப் பூட்டிய பல கதவுகளைத் திறக்கமுடியாது. திறப்பதற்கான காரண காரியங்களையும் விளக்கமாகச் சொன்னால் நாங்களும் எங்கள் துருப்பிடித்த ஆமைப் பூட்டுக்களை அசைத்துப் பார்க்கலாம்!

Link to comment
Share on other sites

நீங்கள் செய்தது சரியோ பிழையோ,நல்லதோ கெட்டதோ ஒருபுறம் இருக்கட்டும்.

நன்றாக எழுதுகின்றீர்கள்.தொடருங்கள் .

Link to comment
Share on other sites

தொடர் எழுதும் விதம் நன்றாக இருக்கு.

எடுத்த முடிவுகள் பற்றிக் கதைக்கும் போது, ஏன் அந்த முடிவு எடுக்கப்பட்டது என்பதையும் கொஞ்சம் விளக்கிக் கொண்டு போனால் நல்லது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர் இனிதே முடிவுற வேண்டுமென்றால் எழுதியவர்களுக்குகு பதிலளிக்காமல் தொடரை எழுதி முடியுங்கள்.

இறுதியில் எல்லோருக்கும் பதிலளிக்கலாம்.

தாயக மக்களையும் மாவீரர்களையும் மட்டும் மனதில் வைத்து எழுதுங்கள்.

ஏனெனில் எதை விதைக்கின்றோம் என்பது இவர்களது கனவுகளுக்கு இடைஞ்சலாக இல்லாமல் இருக்ககடவது....

Link to comment
Share on other sites

சபேசன்! விசுகு அண்ணை சொன்னதை நானும் சொல்லோணும் எண்டு நினைச்சனான். எதை எழுதுறதா இருந்தாலும் உங்களுக்கு சரி என்று உங்கள் மனதுக்கு மனச்சாட்சிக்கு படுறதை எழுதுங்கோ! மற்றாக்களின்ரை கருத்துக்களை விமர்சனங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம்!

மற்றவர்களின் எண்ணங்களுக்காக உங்கள் எழுத்துப்போக்கினை மாற்றுவது அவ்வளவு ஆரோக்கியமானதாக இருக்காது! அது ஒரு எழுத்தாளனுக்கு அழகல்ல! அதனால்.... துணிவுடன் தெளிவுடன் எழுதுங்கள்! என் கருத்துக்கள் எண்ணங்களுக்கு எதிர்மாறாக உங்கள் கருத்துக்கள் இருக்குமிடத்தில்.... நானும் எதிரிப்புடனான விமர்சனங்களை முன்வைப்பேன்.

நீங்கள் நீங்களாக எழுதுங்கள் சபேசன்!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இறங்கி இலங்கை மண்ணை தொட்டதும் எனக்கு மெய்சிலிர்ப்பு ஒன்றும் ஏற்படவில்லை. தாய் மண்ணை அடைவதற்கு இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே இருக்கின்றது என்பதும், விமானத்தில் இருந்து இறங்கி விட்டேன் என்பதும் சற்று நிம்மதியைக் கொடுத்தது.

நான் யேர்மனிக்கு வருவதற்காக கொழும்பில் ஒரு மாதம் அளவிலேயே நின்றேன். அந்த மண்ணில் மிகவும் அந்நியமாகவே உணர்ந்தேன். தெகிவளை மிருகக் காட்சிச் சாலைக்கு கூட்டிக் கொண்டு போய் கட்டினார்கள். ஆனால் நான் பேயறைந்தவன் போல்தான் இருந்தேன்.

விக்ரோரியா பூங்கா, கொழும்புக் கடற்கரை என்று பல இடங்களுக்கு அழைத்தும் நான் போகவில்லை. என்னுடைய மொழியைப் பேசாத, என்னுடைய பண்பாட்டைக் கொண்டிருக்காத மக்கள் கூட்டத்தின் மத்தியில் அந்நியனாக நின்று இவைகளை ரசிக்கின்ற மனோபாவம் என்னிடம் இருக்கவில்லை.

அந்த மண்ணோடும் மக்களோடும் என்னால் ஒட்ட முடியவில்லை. பல தமிழர்கள் தங்கியிருந்த அந்த வீட்டுக்குள் இருப்பதும், வீட்டிற்கு பக்கத்தில் இருந்த தமிழர் ஒருவரின் கடைக்கு சென்று பொருட்கள் வாங்குவதுமாகவே என்னுடைய கொழும்பு வாழ்க்கை கழிந்து போனது.

ஆனால் கொழும்பில் மாதக் கணக்கில் நின்று வெளிநாடு வந்த என்னுடைய நண்பர்கள் கொழும்பின்; நாட்கள் „பம்பல்' மிகுந்தவை என்று பேசுகின்ற பொழுது எனக்கு அவர்களை புரிந்து கொள்வது மிகக் கடினமாகவே இருந்தது. கொழும்பில் சில மாதங்கள் வாழ்ந்த என்னுடைய மனைவியும் இப்படித் துரோகத்தனமாக பேசுவது உண்டு.

இப்படியான நான் யேர்மனியில் எப்படி இத்தனை ஆண்டுகள் வாழ்ந்தேன் என்று நினைக்கின்ற பொழுது ஆச்சரியமாக இருக்கின்றது. போர்களுக்கு நடுவிலும் தாயகத்தில் வயல்வெளிகளும், வெட்டை வெளிகளும் சுற்றித் திரிந்த நான் இங்கே ஒரு அறைக்குள் வந்து விழுந்தேன். முற்றத்து வெளி எங்களுடையது அல்ல என்கின்ற வேதனையோடு இன்று வரை வாழ்கிறேன்.

யேர்மனி வந்தவுடன் அடுத்த ஆண்டு திரும்புவேன் என்று ஒவ்வொரு ஆண்டும் சொல்லிச் சொல்லியே ஆண்டுகள் ஓடி குடும்பம் உருவாகி பிள்ளை குட்டிகளோடு இப்பொழுது நிற்கின்றேன்.

ஆனால் இப்பொழுதும் சொல்கிறேன் "அடுத்த ஆண்டு தாயகம் திரும்புவேன்'

கடவுச்சீட்டுக்களை பரிசோதிக்கும் இடத்தை அடைகின்ற பொழுது சற்றுப் பதட்டமாகத்தான் இருந்தது. எமக்கு முன்னால் நின்ற இரண்டு தமிழ் இளைஞர்களை அந்தப் பணிப் பெண் கேள்விகளால் துளைத்துக் கொண்டிருந்தாள். ஒரு முறைப்புடன் அவர்களை அனுப்பி விட்டு எம்மை வரச் சொன்னாள்

ஏற்கனவே சொன்னது போன்று தமிழீழப் போராட்டத்தையும் அதற்காக போராடிய விடுதலைப் புலிகளையும் ஆதரித்து எழுதியதற்காக என்னை கைது செய்து விடுவார்கள் என்ற அச்சம் எனக்கு இருக்கவில்லை.

நிலாந்தன், தீபச்செல்வன் போன்றவர்களின் எழுத்தும் சிறீதரன் போன்றவர்களின் மேடைப் பேச்சுக்களும் இன்றைக்கும் இலங்கையில் அனுமதிக்கப்படுவது எனக்கு ஒரு தைரியத்தை வரவழைத்திருந்தது.

தீபச்செல்வனின் எழுத்துக்களையும் சிறீதரனின் பேச்சுக்களையும் படிக்கின்ற பொழுது சிலர் சொல்வது போன்ற சிறிலங்கா ஒரு ஜனநாயக நாடுதான் போலிருக்கிறதே என்கின்ற சிந்தனை எனக்குள் வந்து போகும். ஆயினும் அவர்கள் சகித்துக் கொள்ளப்படுவதற்கான காரணங்கள் வேறு என்கின்ற யதார்த்தமும் வந்து நிற்கும்

எதுவாயினும் என்னுடைய எழுத்துக்களால் ஆபத்து ஏற்படும் என்கின்ற அச்சம் எனக்குள் இருக்கவில்லை. ஆனால் நான் அஞ்சியது காட்டிக் கொடுப்பதில் வல்லவர்களான எமது தமிழர்களைப் பார்த்துத்தான். அதனாலேயே என்னுடைய பயணம் ரகசியமானதாக இருந்தது.

இலங்கைக்குப் பயணம் செய்பவர்களுக்கு நான் சொல்லக் கூடிய ஆலொசனையும் இதுதான். தாராளமாகப் போய் வாருங்கள். நீங்கள் நாட்டுக்குப் போனதையோ, அங்கு நிற்பதையோ திரும்பி வரும்வரை யாருக்கும் சொல்லாதீர்கள்.

முக்கியமாக இங்கே தேசியம் கதைப்பவர்களிடம் மறந்தும் மூச்சு விட்டு விடாதீர்கள்.

எமக்கான கடவுச்சீட்டுப் பரிசோதனை வெகு சீக்கிரமே முடிந்து விட்டது. நாங்கள் ஒரு குடும்பமாக இருந்தது அதற்கு ஒரு காரணமாக இருக்கக் கூடும்.

இப்பொழுது நாங்கள் வவுனியாவை நோக்கி ஒரு வான் ஒன்றில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். வேகமாகப் பயணிக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்தத் தொடரை அலுப்பில்லாமல் விரைவாகவும் முடிக்கலாம்.

வான் ஓட்டுபவர் எம்மிடம் தேனீர் குடிப்பதாக இருந்தால் சொல்லுங்கள் என்று சொன்னார். நான் சற்று நோய் வாய்ப்பட்டிருந்தேன். அதனால் ஒரு சூடான தேனீர் குடிப்பது நல்லது என்று பட்டது. "இப்பொழுது அவசரம் இல்லை, அடுத்து வருகின்ற ஏதாவது ஒரு கடையில் குடிப்போம்' என்று சொல்லி வைத்தேன்.

வாகனத்தை ஓட்டிய வேகம் எனக்கும் என்னுடைய மனைவிக்கும் அச்சத்தை தருவதாக இருந்தது. இலங்கையின் தெருவில் எண்பது கிலோமீட்டர் வேகத்தில் ஓடுவது மிக மிக வேகமாக ஓடுவது போன்று இருந்தது.

பாதுகாப்பு பட்டிகள் வாகனத்தில் இருக்கவில்லை. பிள்ளைகள் பின் இருக்கையிலேயே அமர்ந்திருந்தது சற்று ஆறுதலைக் கொடுத்தது. அடிக்கடி ஒலி எழுப்பியபடியும் பிரேக் அடித்தபடியும் வாகனம் பறந்து கொண்டிருந்தது. வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தன.

நான் இருந்த காலத்தை விட தெருக்கள் சற்று சிறிதாகத் தெரிந்தன. பல இடங்களில் மகிந்தவினதும் உள்ளுர் அரசியல்வாதிகளின் கட்அவுட்டுக்களும் வைக்கப்பட்டிருந்தன.

நான் வாகனம் நிறுத்தப்படுவதை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன். எனக்கு தேனீர் குடித்தே ஆக வேண்டும் போல் இருந்தது. இப்பொழுது வாய் விட்டுச் சொல்லவும் தொடங்கியிருந்தேன். அடுத்து தேனீர் கடையில் நிறுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டேன். ஆனால் வாகன ஓட்டுனர் நிறுத்தாமல் ஓடிக் கொண்டிருந்தார். எனக்கு சற்று ஆத்திரமாகவும் வந்தது.

குறிப்பிட்ட இடத்தை தாண்டியதும் வாகனம் மெதுவாக ஓடத் தொடங்கியது. காவல்துறையினர் நிற்பார்கள் என்றும் வேகமாக ஓடினால் தண்டம் அறவிடுவார்கள் என்றும் காரணம் சொல்லப்பட்டது. தேனீர்க் கடைதான் வந்தபாடில்லை.

ஏறக்குறைய மூன்று மணித்தியாலங்கள் தாண்டி ஒரு தேனீர்க் கடையில் வாகன ஓட்டுனர் வானை நிறுத்தினார். கொழும்பில் இருந்து அந்தக் கடை வரும்வரை ஒரு பத்தாயிரம் தேனீர்க் கடைகள் வந்திருக்கும். ஆனால் அவர் நிறுத்தவில்லை.

புத்தளத்தில் தமிழர்கள் வாழும் ஒரு பகுதியல் ஒரு தமிழர் நடத்தும் ஒரு கடையில் அவர் வாகனத்தை நிறுத்தினார்.

தொடரும்..

Link to comment
Share on other sites

வணக்கம் நண்பர்களே! பேசி நீண்ட நாட்கள் ஆகி விட்டது. எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னவர்களுக்கு அன்பான நன்றிகள்.

இதிலே என்னுடைய தாயகப் பயணம் பற்றிய அனுபவங்களையும் சமரச அரசியல் நோக்கிய என்னுடைய சிந்தனைகளையும் தொடராக எழுது விரும்புகிறேன்.

சமரச அரசியல் என்பது அடிமை அரசியல் அல்ல. அதே வேளை எதிர்ப்பு அரசியலும் இல்லை. விட்டுக் கொடுப்புக்களை செய்து பெறக்கூடியவற்றை பெற்றுக் கொண்டு தன்னை தக்க வைத்தபடி அடுத்த இலக்கு நோக்கி நகர்வதுதான்.

.

இந்த் தொடரில் தாயகத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், நான் சந்தித்த மக்கள், கண்ட ஊர்கள் என்பவைகளோடு என்னை சமரச அரசியலின் பக்கம் சிந்திக்கச் செய்கின்ற காரணிகள் பற்றியும் பேச இருக்கிறேன்.

கட்டாயம் புலம்பெயர் நாடுகளில் நிலவுகின்ற அரசியல் பற்றியும் பேசுவேன்.

தொடங்குவதற்கு முன்பு உங்களின் கருத்தை கேட்க விரும்புகிறேன். நான் இதை எழுதலாமா? எழுதுவது ஏதாவது பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று கருதுகிறீர்களா?

உங்கள் கருத்துக்களை பார்த்து விட்டு நாளை இரவு வந்து எழுதுகிறேன்

எழுதுங்கள் சபேஸன் . உங்களின் 2 3 கட்டுரையை நான் வாசித்ததில் இருந்து உங்கட அரசியல் அறிவைஇ ஓரளவு தெரிந்து கொண்டேன்.

அதுவும் கீழக்கு மாகனத்தில் புலிகள் ஒவரு இடமாக இழந்து வரும் போது எழுதினிங்களே ஒரு ஆயுவுக் கட்டுரை என்னல முடியலப்பா..

அப்புறம் சோனியா காந்தியின் தலைமையில் காங்கிரஸ் இருப்பதூ நல்லது பி ஜே பியை விட என்று ஒரு கட்டுரை எழுதினீங்களே உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இன்னும் அதன் தாக்கம் என்னை விட்டு போகவில்லை.........

இப்படி பல கல்லு எறிகள் விழும் அதை எல்லாம் தாங்கிக் கொண்டு புலம் பெயர் அரசியலை பற்றி எழுதுங்கள் இல்லை என்றால் ஊருக்கு போய்ட்டு வந்த கதை மாட்டும் எழுதுங்கள் ஆனால் அரசியல் எழுத வேண்டாம்.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சபேசன்

உங்கள் கட்டுரைகளைத் தொடருங்கள். வாசிக்க ஆவலாய் உள்ளோம்.

முன்பு கண்டமேனிக்கு பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதிக் கொண்டு இருந்தவர்களில் நீங்களும் ஒருவர் . இங்கு ஒரு உறவு (குறுக்கர்) இதைப் பற்றிக் கேட்ட பொழுது, போர் நடக்கும் பொழுது புலம் பெயர்ந்தவர்களை உற்சாகமாக வைத்திருக்க வேண்டியது அவசியம் என்று எழுதினீர்கள். முன்பு ஆய்வுகள் செய்யும் பொழுது இந்த 'சமரச அரசியல்' செய்ய வேண்டியதன் அவசியத்தை உணரவில்லையா?

அப்போது அவர் தாயகம் சென்று திரும்பவில்லை KP போன்றோரை சந்திக்கவில்லை இப்போதுதான் பலத்தையும் பார்த்தும் கேட்டும் புரிந்துள்ளார் போலுள்ளது :lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

புத்தளத்திலை இறங்கின சபேசனைக் காணேல . எனக்குப் பயமாய் கிடக்கு , எக்கணம் வெள்ளை வான் கொண்டுபோட்டுதோ ??????????? ஆரும் சபேசனை கண்டனிங்களேப்பா ??? எனக்கு மண்டை காயுது . இவர் புத்தளத்தில நிப்பாட்டி போட்டு எங்கை போனவர் :lol::lol::D:D ?

Link to comment
Share on other sites

  • 1 month later...

நான் எங்கும் போகவில்லை. மிகக் கடுமையான வேலைப் பழு. ஆகவே எழுத முடியவில்லை. என்னை மன்னிக்கவும். அடுத்த வாரத்தில் இருந்து தொடர்கிறேன்.

அதே வேளை எனக்குள் ஒரு அச்சம் இருக்கின்றது. எக் காலத்தில் எந்த நேரத்தில், எந்த நோக்கத்தில், எந்த வகையில் சொல்லப்பட்டவைகள் என்பதை ஆராயாது என் மீது அர்த்தமற்ற குற்றச்சாட்டுக்கள சிலரால் இங்கே வைக்கப்படுகின்றன.

அவைகளை தவிர்த்துக் கொண்டோ, அலட்சியப்படுத்திக் கொண்டோ, இந்த தொடரை எழுத ஒரு புறம் விரும்பினாலும், மறுபுறம் இப்படியானவர்கள் மத்தியில்தான் இதையும் எழுதுகிறேன் என்கின்ற எண்ணம் எனக்குள் ஒரு தயக்கத்தையும் உருவாக்குகின்றது.

குற்றச்சாட்டுகளுக்கு வேறொரு தலைப்பில் பதில் சொல்லியபடி இந்தத் தொடரை எழுதுவதற்கு முயற்சி செய்வது என்று தீர்மானித்திருக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பார்க்கின்றோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பார்க்கின்றோம்

எதை இணக்க அரசியலையோ?வரும்..வராது..தருவான் ...தரமாட்டான்...மகிந்தாவுக்கு கொடுக்க விருப்பம் ஆனால் பிக்குமார் விடமாட்டாங்கள்...ரிஷி யின் அடுத்த கட்டுரை.....தமிழனுக்கு தண்ணி காட்டிய மகிந்தா...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.