Jump to content

தமிழ் வலைப்பதிவுகளில் காலம் தள்ளுவது எப்படி?


Recommended Posts

தமிழ் வலைப்பதிவுகளில் காலம் தள்ளுவது எப்படி?

தமிழ்மணத்தில் நிகழும் குடுமிப்பிடி சண்டைகளை பார்த்து மண்டை குழம்பியதாலும் எனக்கும் சமீபத்தில் இப்படி ஒரு அனுபவம் எற்பட்டதாலும் சர்வைவல் டெக்னிக் கொடுக்கச் சொல்லி என் நண்பன் ஆழம் அருமைநாயகத்தை வேண்டினேன். அவன் பல வருடங்களாக தமிழ்வலைப்பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவன்தான்.

.எங்கள் உரையாடலை அப்படியே கொடுத்துள்ளேன்.

"முதல்ல உன்கிட்ட எத்தனை பிளாக்கர் அக்கவுண்ட் இருக்கு?" என்றான்.

"ஏன்? ஒண்ணுதான்" என்றேன்.

"போடா லூசு, குறைஞ்சது நாலு அக்கவுண்டாவது வேண்டும்"

"எதுக்கு?"

"ஒரு மெயின் அக்கவுண்ட் வையி..அதுல ஆழமா அறிவுபூர்வமான கட்டுரைகளை எழுதனும்..படிக்கிறவங்க நீ எவ்ளோ பெரிய அறிவாளின்னு நெனைக்கற அளவிற்கு அதில எழுதனும்"

"ம்"

"அப்புறம் பின்னூட்டம் இடுறதுக்கு தனி அக்கவுண்ட்"

"எதுக்கு, அதே பேர்ல பின்னூட்டம் இடலாமே"

"சேச்சே,சில நேரம் தரம் தாழ்ந்து எழுத வேண்டி இருக்கும்..அதுக்கு அதே பேரை யூஸ் பண்ணா உன் இமேஜ் என்னாவது? "

"ஓ"

"ஆமா,ஆனா இந்த பேரை யூஸ் பண்ணும்போது ஜாக்கிரதையா இருக்கணும்.சில பேரு ஐ.பி. செக் வைப்பான்.அதுக்காக முடிஞ்ச அளவு உங்கள் பதிவுலேயே நீங்களே பின்னூட்டம் இட்டு யாரையாவது கிண்டல் பண்ணலாம்."

"சரி மூன்றாவது அக்கவுண்ட் எதுக்கு"

"ஆழமாகவும் அகலமாகவும் எழுதி போரடிச்சா விஜய் சாரும் நானும், நயன்தாரா என் தங்கம் என்றெல்லாம் எழுதலாம்.பர்சனாலிட்டி கிலாஷ் பிரச்சினையை தவிர்க்கலாம்"

"சரி நாலாவது அக்கவுண்ட்"

"அதை போலி டோண்டு உங்க பேரில வெச்சிருப்பான்.அதை கண்டுக்காதீங்க"

"அட... இதுவெல்லாம் எழுதறவங்களுக்கு...எங்களை மாதிரி ஆட்களுக்கு என்ன ஐடியா?"

"குறும்பும் பண்ணணும்.ஆனா எல்லார்க்கும் நல்ல பிள்ளைன்னு பேர் எடுக்கணுமா?"

"..."

"சென்சிட்டிவ்வான பிரச்சினைகளில் எனக்கு கருத்தே இல்லைனு நம்ப பதிவுல போட்டுட்டு யாராவது குறும்பா கருத்து சொல்லக்கூடியவங்க பதிவுல போய் சூப்பர்,எல்லா கருத்தையும் ஏற்க முடியாவிட்டாலும் உங்கள் பதிவை போற்றுகிறேன் என்றெல்லாம் புகழ வேண்டும்.உடனே நீங்க எந்த கருத்தை ஏற்கறீங்க எதை மறுக்கறீங்கன்னு புரியாமல் மக்கள் குழம்புவாங்கள்ள"

",,,,,"

"இதுல ஒரு வம்பு என்னன்னா உங்க ஆளு எக்கச்சக்கமா மாட்டிட்டார்னா நீங்க அங்க பின்னூட்ட சப்போர்ட் கொடுக்க முடியாது.ஆனா உங்க மறைமுக ஆதரவை தெரிவிக்க நீங்க உங்க பதிவுல கம்பு சுத்தியாகணும்.இது கொஞ்சம் கஷ்டம்.தெறமை வேணும்"

தன் கட்டிலுக்கு அடியில் இருந்து "நெட்ஓர்க்கிங் ஃபண்டமெண்டல்ஸ்", "உள்குத்து மேட் ஈஸீ",ஆகிய புத்தகங்களை எடுத்து கொடுத்தான் அருமைநாயகம். இதற்கே தலைசுத்திபோன நான் அப்புறம் வருகிறேன் என்று கூறி நடையை கட்டினேன்.

நன்றி - முத்து / ஒரு தமிழனின் பார்வை

Link to comment
Share on other sites

வலைப்பதிவொன்றில் இந்த பதிவை படித்த போது சிரிப்பு தாங்க முடியவில்லை. இதில் சில விடயங்கள் கருத்து களத்திற்கும் பொருந்தும் என்பதால் இங்கே இணைத்திருக்கின்றேன். வாசித்து சிரியுங்கள் :)

Link to comment
Share on other sites

இதையேன் நகைச்சுவைக்க போட்டீங்கள்..இதுதான் நடக்குது அங்க...! உண்மையைத்தான் சொல்லினம்..! இன்னும் சங்கதியள் நடக்குது..வேணாம்..நமக்கே ஊர் வம்பை..! :wink: :P :idea:

Link to comment
Share on other sites

வலைப்பதிவொன்றில் இந்த பதிவை படித்த போது சிரிப்பு தாங்க முடியவில்லை. இதில் சில விடயங்கள் கருத்து களத்திற்கும் பொருந்தும் என்பதால் இங்கே இணைத்திருக்கின்றேன். வாசித்து சிரியுங்கள்  :)

நீங்கள் அதைப் பார்த்துச் சிரிக்கிறீங்கள்...இங்கை யாரோ...தமிழ்மணத்தில வாற வலைப்பூக்களில என்னமா புரட்சியா எழுதிறாங்க எண்டு புகழ்பாடினதை நினைச்சு சிரிப்பு அடக்க முடியல்ல..! :wink: :lol:

Link to comment
Share on other sites

வலைப்பதிவுகளை நான் இப்போது படிப்பது குறைவு. முன்பு தொடர்ச்சியாக படித்த காலங்களில் பல நல்ல பதிவுகளை கண்டிருக்கின்றேன். இன்னமும் பல நல்ல பதிவுகள் உண்டென நம்புகின்றேன்.

கருத்துக்களை வெளிப்படுத்தும் ஊடகங்கள் அதிகம் பேரை ஈர்க்கும் போது அதில் பிரச்சனைகளும் மோதல்களும் அதிகமாவது வாடிக்கை தான். ஆரம்பத்தில் அமைதியாக இருந்த கருத்துகளங்கள் ஜனரஞ்கமானவுடன் சண்டை சச்சரவுகள் அதிகரிக்கவில்லையா. அது போல கருத்துக்களத்திற்கு அடுத்து வந்த ஊடகமான வலைப்பதிவுகளுக்குள்ளேயும் சண்டை சச்சரவுகளும் உள்நுழைவது கவலைக்குரிய ஒன்று தான். :)

Link to comment
Share on other sites

வலைப்பதிவுகளை நான் இப்போது படிப்பது குறைவு. முன்பு தொடர்ச்சியாக படித்த காலங்களில் பல நல்ல பதிவுகளை கண்டிருக்கின்றேன். இன்னமும் பல நல்ல பதிவுகள் உண்டென நம்புகின்றேன்.

கருத்துக்களை வெளிப்படுத்தும் ஊடகங்கள் அதிகம் பேரை ஈர்க்கும் போது அதில் பிரச்சனைகளும் மோதல்களும் அதிகமாவது வாடிக்கை தான். ஆரம்பத்தில் அமைதியாக இருந்த கருத்துகளங்கள் ஜனரஞ்கமானவுடன் சண்டை சச்சரவுகள் அதிகரிக்கவில்லையா. அது போல கருத்துக்களத்திற்கு அடுத்து வந்த ஊடகமான வலைப்பதிவுகளுக்குள்ளேயும் சண்டை சச்சரவுகளும் உள்நுழைவது கவலைக்குரிய ஒன்று தான். :)

நாங்களும் அதிகம் படிப்பதில்லை...நீங்கள் எதை நல்லது என்று குறிப்பிடுகிறீர்களோ தெரியாது பருமட்டாக நோக்கின் "கொசிப் ஐரம்" தான் அதிகம்...ஒரு சில 10க்குள் உள்ள வலைப்பதிவுகளின் உரிமையாளர்கள் மட்டுமே ஆக்க பூர்வமா எழுதினம்...! அதுமட்டுமில்லாமல் அங்கும் கூட இருந்து வந்த கருத்துச் சுதந்திரம் தற்போது வலைப்பதிவாளர்களின் அல்லது வலை தேடிகளின் தொந்தரவால் வரையறுக்கப்பட்டுள்ளது..! :P :idea:

Link to comment
Share on other sites

எவை "நல்ல" பதிவுகள் என்று குறிப்பிட விரும்பவில்லை. ஓவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பார்வை தானே. நான் நல்ல பதிவு என குறிப்பிடுவது உங்களுக்கு தவறாக படலாம் அது இன்னொரு விவாதத்திற்கு வழிவகுத்துவிடும்.

சிலரின் ஏடாகூடமான புதிய வலைப்பதிவுகள் மற்றும் பின்னூட்டங்கள் அங்கும் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அது தவிர வலைப்பதிவுகளை தொகுக்கும் தமிழ்மணத்தின் கொள்கைகளும் சுதந்திரத்தை மட்டுப்படுத்துகின்றது. இது கருத்துகளம், வலைப்பதிவு உட்பட அனைத்து இடங்களிலும் நடப்பது தான்.

Link to comment
Share on other sites

எவை "நல்ல" பதிவுகள் என்று குறிப்பிட விரும்பவில்லை. ஓவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பார்வை தானே. நான் நல்ல பதிவு என குறிப்பிடுவது உங்களுக்கு தவறாக படலாம் அது இன்னொரு விவாதத்திற்கு வழிவகுத்துவிடும்.

சிலரின் ஏடாகூடமான புதிய வலைப்பதிவுகள் மற்றும் பின்னூட்டங்கள் அங்கும் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அது தவிர வலைப்பதிவுகளை தொகுக்கும் தமிழ்மணத்தின் கொள்கைகளும் சுதந்திரத்தை மட்டுப்படுத்துகின்றது. இது கருத்துகளம், வலைப்பதிவு உட்பட அனைத்து இடங்களிலும் நடப்பது தான்.

சரி நல்லதை விடுங்கள்..!

தமிழ்மண நிர்வாகத்தை குறை சொல்ல முடியாது..காரணம்..நீங்கள் சொல்லுற பின்னூட்டல்களில் அதிகம் அநாகரிகமாக எழுதுபவர்கள் ஈழத்தமிழர்கள்..! உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமா...???! வேண்டாம்..! இன்னும் சிலர் ஈமெயில் ஐடிகள் மூலம் தங்களுக்குள் அறிமுகம் ஆகிக்கொண்டு.. அறிமுகமானவர்கள்..தங்கள் பதிவுக்கு பின்னூட்டம் விட்டுவிட்டவர்கள் என்று தேடித்தேடி பின்னூட்டம் என்று என்னவோ விடுகினம்..உருப்படியா நடப்பவை நடந்திருந்தா தமிழ்மணமும் ஒத்துழைச்சிருக்கும்..! நிறைய முதிர்ச்சியற்ற தன்மை தமிழில் எழுதுபவர்களிடம் உண்டு...! உதாரணத்துக்கு ஒரு பெண் பெயரில் ஈமெயில் ஐடி வச்சிருந்தால் அதுக்கு வரும் ஈமெயில்களின் எண்ணிக்கை எம் எஸ் என் சட் இணைப்புக்கான உத்தரவாதம் கேட்டு வரும் அழைப்புக்கள் அதிகம்..இது எழுத்தாளர்களுக்கான திறமையை வெளிக்கொணரும் ஆரோக்கியமான சூழலுக்கான நல்ல பண்பாகத் தென்படவில்லை..! :wink: :shock: :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட இப்படியும் ஒன்று இருக்கா? எனக்கு இவ்வளவு நாளும் விசயம் தெரியாம போச்சு. நான் இன்னும் மூன்று அக்கவுண்ட் தொடங்கப்போகிறேன். தகவலுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

தமிழ்மண நிர்வாகத்தை குறை சொல்ல முடியாது..காரணம்..நீங்கள் சொல்லுற பின்னூட்டல்களில் அதிகம் அநாகரிகமாக எழுதுபவர்கள் ஈழத்தமிழர்கள்..! உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமா...???! வேண்டாம்..! இன்னும் சிலர் ஈமெயில் ஐடிகள் மூலம் தங்களுக்குள் அறிமுகம் ஆகிக்கொண்டு.. அறிமுகமானவர்கள்..தங்கள் பதிவுக்கு பின்னூட்டம் விட்டுவிட்டவர்கள் என்று தேடித்தேடி பின்னூட்டம் என்று என்னவோ விடுகினம்..உருப்படியா நடப்பவை நடந்திருந்தா தமிழ்மணமும் ஒத்துழைச்சிருக்கும்..! நிறைய முதிர்ச்சியற்ற தன்மை தமிழில் எழுதுபவர்களிடம் உண்டு...! உதாரணத்துக்கு ஒரு பெண் பெயரில் ஈமெயில் ஐடி வச்சிருந்தால் அதுக்கு வரும் ஈமெயில்களின் எண்ணிக்கை எம் எஸ் என் சட் இணைப்புக்கான உத்தரவாதம் கேட்டு வரும் அழைப்புக்கள் அதிகம்..இது எழுத்தாளர்களுக்கான திறமையை வெளிக்கொணரும் ஆரோக்கியமான சூழலுக்கான நல்ல பண்பாகத் தென்படவில்லை..!  :wink: :shock:  :idea:

தமிழ்மண நிர்வாகத்தை குறை சொல்லவில்லை. அனைத்து இடங்களிலும் அந்தந்த நிர்வாகத்தின் கொள்கைகளுக்கு அமைய சுதந்திரம் மட்டுப்படுத்தப்படுகின்றது என்பதையே குறிப்பிட்டேன். அதை விட்டு விடுங்கள்.

எம்.எஸ்.என் ஐடி கேட்டு வரும் அழைப்புக்கள் என்றால் அதில் பாரபட்சமே இல்லை அது எல்லா இடத்திலையும் தாராளமாக நடக்கின்றது :)

Link to comment
Share on other sites

சரி சரி ஏதோ நடக்கட்டும்.. தமிழின் பெயரால் நல்லது நடத்திச்சினம் எண்டா வரவேற்கலாம்..! :P :)

Link to comment
Share on other sites

நன்றி மதன் அண்ணா :P

நான் தமிழ் மணம் அதிகம் வாசிக்கிறதில்லை நேரமில்லாமை ஒரு காரணம் அடுத்தது சில உளறல்களை வாசிச்சு ஏன் பிரஷரை கூட்டோணும் எண்டுதான் :wink:

பொதுவா எனது ஓய்வு நேரத்தில யாழிற்கு மட்டும் தான் வாறனான் இங்க சண்டை பிடிக்கவே நேரம் காணாம இருக்கு இதுக்க எப்படி வேற இடங்களுக்கு போறது :wink:

உண்மையில உங்கட இணைப்பு நல்ல நகைச்சுவையா இருக்கு அது சரி இப்படி பல அக்கவுன்ட் வைச்சு அதை மெய்ன்டெய்ன் பண்ணவும் கருத்து எழுதவும் எப்படி நேரம் கிடைக்குது :roll:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.