Jump to content

தனது தாலிக்கொடியை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்காக அன்பளிப்புச் செய்த தமிழ்த்தாய்


Recommended Posts

ரதி, வீட்டிலை இருந்து கழட்டிக் கொடுத்தால்... ஆர் சாட்சி?

நாலு பேருக்கு, முன்னாலை... நடு மண்டபத்திலை கழட்டிக் கொடுத்தால் தானே... நாலு பேர் சாட்சியாக இருப்பார்கள்.

நாளைக்கு... இந்த தாலிப் பணம் எதுக்கு செலவழிக்கப் பட்டது என்ற, கேள்வி வரும் என்று...தாலியைப் பெற்றுக் கொண்டவர்களும் தகுந்த கவனமாக இருப்பார்கள்

தாயை கொல்லும் பஞ்சத்தை தடுக்க முயற்சி எடார்

வாய் திறந்து சும்மா கிளியே.......

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தாயை கொல்லும் பஞ்சத்தை தடுக்க முயற்சி எடார்

வாய் திறந்து சும்மா கிளியே.......

உண்மைகளை திருக்குறள்போல் இப்படி இரண்டு வரியில் எழுதுவது..............

வள்ளுவனுக்கும் உங்களுக்கும் மட்டுமே சாத்தியமானது.

Link to comment
Share on other sites

எனக்கு பட்டதையும் ,பட்டுத் தெளிந்தவற்றையும் தான் எனக்கு எழுதமுடியும்.தாலிக்கொடி சென்டிமென்ட் எல்லாம் ரொம்ப ஓவர்.காசை வாங்கினீர்களா? ரிசிட்கொடுகொடுத்தீர்களா? என்ன செய்யப்பபோகின்ரீர்கள் என்று சொன்னாலே காணும்.சீன் காட்டுவது நல்லதிக்கில்லை என்பது என் அபிப்பிராயம்.இங்கு இருப்பவர்கள் பலர் புலம் பெயர் புலியிலும் இருந்தவர்கள்.உவர் பொன்.பாலராஜனிடம் சேர்த்த காசுகள் பற்றி கதைக்க வாங்கியவர்களிடம் போய் கேளுங்கள் என்று பதில் சொன்னவர்.

இதுவரை வன்னியில் முகாம்களில் இருப்பவர்களுக்கு என்ன செய்தார்கள்.தமிழ் தேசியகூட்டமைப்புடன்அல்லது நாட்டில் உள்ள மக்களுடனான தொடர்புகள் எது பற்றியும் மூச்சு இல்லை.

தலைவரை பற்றிய கேள்விக்கே பதில் சொல்ல வக்கில்லாத ஒருவர் தமிழர்களுக்கு விடுதலை எடுத்து தரப்போகின்றார்.நீங்களும் தாலிக்கொடியை கழட்டிக்கொடுங்கள்.

கோவிலிலும்,குளத்திலும்,காண்டத்திலும்,சாத்திரத்திலும் காசை கொண்டுபோய் கொட்டுவது பொல தான் எனக்கு உதுவும்.உங்களை நான் தடுக்கவில்லை எனக்கு சிரிப்பாக இருக்கு.

மேற்குலக நாடுகளின் பாராளுமன்ற பிரதிநிதிகள் போன்று இவரும் மக்கள் முன்னால் நின்று தெரிவுசெய்யப்பட்டவர். அப்பொழுதும் இவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அதையும் மீறு இவருக்கு இருந்த மக்கள் ஆதரவு காரணமாக தெரிவு செய்யப்பட்டவர்.

அவர் சொன்னார் - இவர் சொன்னார் என்ற குற்றங்கள் ஆதாரத்துடன் முன்வைக்கப்படல்வேண்டும். இல்லை இந்த குற்றச்சாட்டு அகற்றப்படல் வேண்டும், இந்த கருத்தும் அகற்றப்படல் வேண்டும்.

Link to comment
Share on other sites

தெரியாமல் தான் கேட்கிறேன் தாலியை கழட்டி கொடுக்கும் அளவிற்கு என்ன பிரச்சனை?...அன்று ஒருவரும் காசு கொண்டு போகவில்லையா?...இப்படி உசுப்பேற்றி காசு,நகைகள் பறிக்கும் வேலைகள் இன்னும் மக்களிடம் எடுபடுதா என்ன?

இதே களத்தில் எனது மகனின் இல்லை மகளின் பிறந்தநாளை எளிமையாகி கொண்டாடி, 'நேசக்கரம்' ஊடாக பல நல்லுறவுகள் உதவிகளை செய்கிறோம், அதையும் அநேகமானோர் பாராட்டுகிறோம்.

அதுவும் உசுப்பேற்றும் அணுகுமுறை என்று சொல்லலாம், தவறில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

83 இல் அர்ஜுன் வெளிநாட்டில் இருந்து இயக்கம் ஒன்றில் இணைய இந்தியா போகின்றார். விசுகு அண்ணா அதே காலத்தில் பிரான்ஸ் வருகின்றார்.. அப்படியானால் தகுதி என்பது புலிகளின் ஆதரவாளர் என்பது மட்டுமா? தமிழ் மக்களின் விடியலின் மீதான நம்பிக்கை தகுதியாக இருக்காதா?

தமிழ் மக்களின் விடியலை 25 - 30 வருடங்களாக பல வழிகளிலும் வீச்சுடன் முன்னெடுத்த புலிகளின் அத்தியாயம் முள்ளிவாய்க்காலில் துக்ககரமாக முடிந்துவிட்டது. எனினும் தமிழ் மக்களின் விடியலின் தேவை முன்னரை விட அதிமுக்கியமாக இருக்கின்றது.

தமிழ் மக்களின் மிகமுக்கியமான விடயங்களில் அக்கறை காட்டாமல், ஒப்பு சாப்புக்கு அதைச் செய்கின்றோம், இதைச் செய்கின்றோம் என்று சொல்லிக் கொண்டு தமக்குள் கூறுபட்டு அதிகாரத்திற்காகவும் பதவிக்காகவும் குடுமிபிடிச் சண்டைகளும், குழிபறிப்புக்களையும் மேற்கொள்வோரினது மீதான நம்பகத்தன்மை அறவே ஒழிந்துவிட்டது.

ஆனால் இந்த அவமானகரமான அமைப்புக்களை இன்னமும் நம்பி தமிழ் மக்கள் விடியலைக் காணலாம் என்று இங்கு வரும் கருத்துக்களைப் பார்க்கும்போது வரலாறுகளில் இருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ள விரும்பாத ஒரு கூட்டமாக மாறிவிட்டோம் என்றுதான் தோன்றுகின்றது.

விசுகு

1983இல் வெளியில் வந்தார்

நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை. தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று வாழ்ந்தார்

..............

இப்படியே வைத்துக்கொள்வோம். இதனால் நாட்டுக்கோ போராளிகளுக்கோ போராட்டத்துக்கோ

எந்த இழப்புமில்லை.

83 இல் அர்ஜுன் வெளிநாட்டில் இருந்து இயக்கம் ஒன்றில் இணைய இந்தியா போகின்றார்.

போனவர் புலிகளை எப்படி அழிப்பது என்பதற்கான பயிற்சியை மட்டுமே எடுத்து வெளிநாடு வந்தார்.

இலங்கை அரசு புலிகளுடன் பேசப்போகிறோம் என்று சொல்லும்போதெல்லாம் முதலில் வெளிக்கிடுமே சிங்கள அதிதீவிரவாதம் அதைவிட ஆயிரம் மடங்கு அதிகமாய் ஆயிரம் மடங்கு வேகமாய் புலிகளுக்கு எதிராக உழைத்தவர் இவர். உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் இவரும் இவர் ஆதரிக்கும் கூட்டமும் எழுதிய பேசிய கக்கிய கவுட்டுக்கொட்டிய கோடிரிக்கொம்புத்தனமான அத்தனையையும் நாம் அறிவோம்.

அவர் சாதாரண தமிழராக வாழ்ந்திருந்தால் தற்போதும் வாழ்ந்தால் எவருக்கும் எந்த சிக்கலுமில்லை.

செய்பவர்களைக்கை காட்டணுமாக இருந்தால் அதற்கு அவர்மீதான விமர்சனமும் வரும். அதற்கு அவர் பதில் சொல்லணும்.

தமிழ் மக்களின் விடியலை 25 - 30 வருடங்களாக பல வழிகளிலும் வீச்சுடன் முன்னெடுத்த புலிகளின் அத்தியாயம் முள்ளிவாய்க்காலில் துக்ககரமாக முடிந்துவிட்டது

இதில் அரைவாசியை இவர்களுக்கு பதில் சொல்வதிலும் இவர் பேபாட்ட ஓட்டைகளை ஒட்டுவதிலுமே போனது என்பது தான் தோற்றுப்போனதன் அடித்தளம்.

காசை வாங்கினீர்களா? ரிசிட்கொடுகொடுத்தீர்களா? என்ன செய்யப்பபோகின்ரீர்கள் என்று சொன்னாலே காணும்.

ரொம்ப நல்ல வசனம்

அது எடுபடணும். எமது ஆசையும் அதுதான்.

சரி

ஒரு கேள்வி வருமே

அப்படி ரிசீட் கொடுத்தபோது இவர் கொடுத்தாரா???

அப்போதும் இல்லை இப்போதும இல்லை என்றால் ........???

மற்றும்படி தாலிக்கொடியைக்கழட்டிக்கொடுப்பது அதிலும் தலைவர்களே கொடுப்பது நல்லதாக தெரியவில்லை.

அது மக்களிடமிருந்து வரவேண்டும். வந்தது வரும்.

அது காலவேளைகளையும் தலைவர்களையும் பொறுத்து மக்கள் எடுக்கும் தீர்மானங்கள் ஆகும்.

அது வரலாறுகளில் உள்ளது. வரலாறுகளை வழி நடாத்தியும் உள்ளது.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இருந்து கொடுப்பவன் எல்லாம் தான் இவ்வளவு கொடுத்தனான்,இப்படி உதவி செய்தனான் என எழுத வெளிக் கிட்டால் ஒரு யாழ் காணாது...நான் நாடு கட‌ந்த அர‌சின் எதிரி இல்லை சொல்லப் போனால் அதைப் பற்றி கணக்கெடுப்பதே இல்லை அதைப் பற்றி மட்டும் இல்லை புலம் பெயர் அமைப்புகள் ஒன்றையுமே நான் கணக்கெடுப்பதில்லை எல்லோருக்கும் புலி இல்லை என்றவுட‌ன் துளிர் விட்டுப் போச்சு...இதையே ஊரில் இருக்கும் ஒரு அம்மா செய்திருந்தால் அதில் ஒரு அர்த்தம் இருந்திருக்கும்

<p>

இதே களத்தில் எனது மகனின் இல்லை மகளின் பிறந்தநாளை எளிமையாகி கொண்டாடி, 'நேசக்கரம்' ஊடாக பல நல்லுறவுகள் உதவிகளை செய்கிறோம், அதையும் அநேகமானோர் பாராட்டுகிறோம்.

அதுவும் உசுப்பேற்றும் அணுகுமுறை என்று சொல்லலாம், தவறில்லை.

உதவி செய்வதில் தவறில்லை அதை அப்பட்டமாக பகிர‌ங்கப்படுத்தி பீத்திக்கிறது தான் தப்பு...யாழில் நேச‌க்கர‌ மூலம் ஒருவர் உதவி செய்தால் அதை சாந்தி அக்கா வந்து கணக்கு காட்டும் போது இன்னார்,இன்ன உதவி செய்தார் என எழுதுவதில் தப்பில்லை ஆனால் அதையே நான் வந்து இவ்வளவு கொடுத்தனான் என எழுதுவது தான் தப்பு....உதவி செய்ய விருப்பம் உள்ளோர்,மனம் உள்ளோர் தாங்களாகவே வந்து செய்வார்கள் மற்றவர்கள் சொல்லி செய்ய மாட்டார்கள் என்பது என் கருத்து
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் தான் !!

நான் மட்டும் விடுவேனா???? :lol: நானும் தான். :D

Link to comment
Share on other sites

ஒருவன் என்ன இன்று செய்கிறான் என்பதை வைத்தே நாளை அவனின் இடம் நிர்ணயிக்கப்படும்.

374206_10151072111865008_856330007_22062575_958931168_n.jpg

நாடு கடந்த உறுப்பினர் பொன்.பாலராஜன்

Link to comment
Share on other sites

யாரும் ஆயுத போராட்டத்தையோ இல்லை ஜனநாயாக ரீதியான போராட்டத்தையோ இலகுவானது என சொல்லவில்லை.

மீண்டும் தலைவர் வருவார் இல்லை ஆயுதப்போராட்டம் வெடிக்கும் என்றால் - அதற்கும் நக்கல், ஏளனம். சரி, சர்வதேச அரசியல் ஊடாக எமது நியாயங்களை வென்றெடுப்போம் என்றால் - அதற்கும் நக்கல், குற்றச்சாட்டுக்கள். இவர்களை நம்பி என்ன செய்யப்போகிறீர்கள் என கேள்விகள்.

அப்ப என்ன தான் செய்யவேண்டும்?, எப்படி செய்யவேண்டும்? என்றால், மௌனம்.

Good for nothing!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகூதாவுக்கு ஒரு பச்சை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்றவிசாரணையின் அடுத்த கட்டத்துக்கான நகர்வுவுகளுக்காக

கூட்டம் போடுகிறார்கள்

தொலைபேசியில் ஆராய்கிறார்கள்

திட்டமிடுகிறார்கள்

என்றால் கடதாசி விமானத்திலும் கடதாசியில் அடித்த பணத்திலுமா இதுவெல்லாம் நடக்கு

அதை தொடர்ந்து ஒருவரே செய்யமுடியுமா?

எத்தனை தரம் தான் அவர் தாங்குவார்?

வந்திட்டினம் நானும் குத்தினனான் என்றபடி..............

இப்படியே குத்திக்கிட்டு இருங்கோ

நாங்களும் வந்து குத்திட்டு சிரித்து போறம் அவைக்கு

ஒருத்தனும் வரப்போறதில்லை இனி எம்மைக்காப்பாற்ற

எவனும் பிறக்கப்போவதில்லை பிரபாகரனாய்...................

Link to comment
Share on other sites

இதே களத்தில் எனது மகனின் இல்லை மகளின் பிறந்தநாளை எளிமையாகி கொண்டாடி, 'நேசக்கரம்' ஊடாக பல நல்லுறவுகள் உதவிகளை செய்கிறோம், அதையும் அநேகமானோர் பாராட்டுகிறோம்.

அதுவும் உசுப்பேற்றும் அணுகுமுறை என்று சொல்லலாம், தவறில்லை.

நேசக்கரத்திற்கும் தாலியெல்லாம் கழட்டிகுடுத்திருக்கிறாங்களா?? . அவர்களும் தாலி சங்கிலி.காப்பு. அறுணாக்கொடி எல்லாம் வாங்கி வைச்சிட்டு பம்மிக் கொண்டு இருக்கினமா?? தெரியாமல் போச்சுதே.அகூதா நீங்கள் எத்தனை பவுண் சங்கிலியை அவையளிட்டை இழந்தனீங்கள்.

அப்பிடியே அர்ஜீனுக்கும் ஒரு பச்சை

Link to comment
Share on other sites

நீங்கள் முழுமையாக செய்தியை / திரியை வாசிக்கவில்லை என எண்ணுகிறேன்.

நடந்தது - நாடுகடந்த அரசின் அமர்வில் இறுதி நாளன்று தேவைகள் முன்வைக்கப்பட்டு அதற்குரிய நிதி உதவி கேட்கப்பட்டது. அப்பொழுது அங்கிருந்த வயோதிப தாயார் தன்னிடம் இருந்த தாலிக்கொடியை கழற்றி கொடுத்துள்ளார்.

நேசக்கரத்திற்கும் தாலியெல்லாம் கழட்டிகுடுத்திருக்கிறாங்களா?? . அவர்களும் தாலி சங்கிலி.காப்பு. அறுணாக்கொடி எல்லாம் வாங்கி வைச்சிட்டு பம்மிக் கொண்டு இருக்கினமா?? தெரியாமல் போச்சுதே.அகூதா நீங்கள் எத்தனை பவுண் சங்கிலியை அவையளிட்டை இழந்தனீங்கள்.

அவரிடம் இருந்த சொத்தை அவர் அந்த இடத்தில் தன்னால் முடிந்த அதியுயர் அன்பளிப்பை செய்துள்ளார். அது 'செண்டிமென்டலாக' இருக்கலாம். பாட்டிக்கு அதற்கு மேலே உதவி செய்ய பணம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் மனம் உண்டு. அதற்காகவே பலரும் பாராட்டியுள்ளனர்.

அகூதா நீங்கள் எத்தனை பவுண் சங்கிலியை அவையளிட்டை இழந்தனீங்கள்

பகிரங்கமாக கேட்டுள்ளீர்கள் என்பதால் கூறிவிடுகிறேன். ஒரு சதமும் கொடுப்பதில்லை, சும்மா கதை மட்டும் தான். ஒருத்தருக்கும் தயவு செய்து சொல்லிவிட வேண்டாம்!

Link to comment
Share on other sites

இங்கு இருந்து கொடுப்பவன் எல்லாம் தான் இவ்வளவு கொடுத்தனான்,இப்படி உதவி செய்தனான் என எழுத வெளிக் கிட்டால் ஒரு யாழ் காணாது...நான் நாடு கட‌ந்த அர‌சின் எதிரி இல்லை சொல்லப் போனால் அதைப் பற்றி கணக்கெடுப்பதே இல்லை அதைப் பற்றி மட்டும் இல்லை புலம் பெயர் அமைப்புகள் ஒன்றையுமே நான் கணக்கெடுப்பதில்லை எல்லோருக்கும் புலி இல்லை என்றவுட‌ன் துளிர் விட்டுப் போச்சு...இதையே ஊரில் இருக்கும் ஒரு அம்மா செய்திருந்தால் அதில் ஒரு அர்த்தம் இருந்திருக்கும்

<p>உதவி செய்வதில் தவறில்லை அதை அப்பட்டமாக பகிர‌ங்கப்படுத்தி பீத்திக்கிறது தான் தப்பு...யாழில் நேச‌க்கர‌ மூலம் ஒருவர் உதவி செய்தால் அதை சாந்தி அக்கா வந்து கணக்கு காட்டும் போது இன்னார்,இன்ன உதவி செய்தார் என எழுதுவதில் தப்பில்லை ஆனால் அதையே நான் வந்து இவ்வளவு கொடுத்தனான் என எழுதுவது தான் தப்பு....உதவி செய்ய விருப்பம் உள்ளோர்,மனம் உள்ளோர் தாங்களாகவே வந்து செய்வார்கள் மற்றவர்கள் சொல்லி செய்ய மாட்டார்கள் என்பது என் கருத்து

வேலையால் வந்து சாப்பிடாமல் நாலு மணிக்கு நாடு கடந்த அரசின் கூட்டத்திற்கு ஓடினால் கோவிலில் ஒரு குருவியையும் காணோம் யாழில் வந்து கொச்சை தமிழில் எழுதுபவர் குத்துவிளக்கை துடைச்சு கொண்டு நிற்கின்றார்.வந்தனான் நிற்பம் என்று பார்த்தால் ஒருவழியாக ஆறுமணியளவில் தொடங்கி வரவேற்புரை,டான்ஸ்,தலைவர் உரை என்று வீடியோ.லோகன் கணபதி தமிங்கில உரை.எனக்கோ பெரும் பசி.கோவிலில் போய் ஏதும் புக்கை தின்பமோ என யோசிக்க அடுத்த பேச்சாளார் என்று ஒரு இந்திய தமிழ் பெங்களூர் விரிவுரையாளர் அறிமுகமானார்..ஏதோ நுயுமன் என்ற ஞபகம்.தமிழ் விதவைகளின் கணக்கு துல்லியமாக சொல்லி (எண்பதினாயிரமாம்) ஒவ்வொரு நாளும் சிங்கள ஆமிக்காரன் போய் கதவை தட்டுகின்றானாம்.சீமான் திறம் போல இருந்தது.(பாபு வீட்டில நல்ல சாப்பாடு போல).

இனியும் இருந்தால் ஏதும் வாயை விட்டு தர்ம அடி வாங்குவதை விட ஓடிவந்து விட்டேன்.

வந்து யாழை பார்த்தால் ரதியின் பதிவு 'இவர்களையெல்லாம் நான் கணக்கில எடுக்கின்றதில்லை"என்று இருக்கு.இவ்வளவு தெளிவு எனக்கு இருந்திருந்தால் எப்பவோ நான் மொட்கேஜை கட்டி முடித்திருப்பேன்.

Link to comment
Share on other sites

யாரும் ஆயுத போராட்டத்தையோ இல்லை ஜனநாயாக ரீதியான போராட்டத்தையோ இலகுவானது என சொல்லவில்லை.

மீண்டும் தலைவர் வருவார் இல்லை ஆயுதப்போராட்டம் வெடிக்கும் என்றால் - அதற்கும் நக்கல், ஏளனம். சரி, சர்வதேச அரசியல் ஊடாக எமது நியாயங்களை வென்றெடுப்போம் என்றால் - அதற்கும் நக்கல், குற்றச்சாட்டுக்கள். இவர்களை நம்பி என்ன செய்யப்போகிறீர்கள் என கேள்விகள்.

அப்ப என்ன தான் செய்யவேண்டும்?, எப்படி செய்யவேண்டும்? என்றால், மௌனம்.

Good for nothing!

பிரத்தியேகமாக பாசறையில் பயிற்சி எடுத்து வந்த ஒருத்தர் தான் இப்படி எல்லாம் எழுதுகிறார் என்பது சொல்லாமல் புரியும்.அதாவது மண்டையை கழுவி அனுப்பி இருக்கிறாய்ங்க. :D :D

Link to comment
Share on other sites

யாரும் ஆயுத போராட்டத்தையோ இல்லை ஜனநாயாக ரீதியான போராட்டத்தையோ இலகுவானது என சொல்லவில்லை.

மீண்டும் தலைவர் வருவார் இல்லை ஆயுதப்போராட்டம் வெடிக்கும் என்றால் - அதற்கும் நக்கல், ஏளனம். சரி, சர்வதேச அரசியல் ஊடாக எமது நியாயங்களை வென்றெடுப்போம் என்றால் - அதற்கும் நக்கல், குற்றச்சாட்டுக்கள். இவர்களை நம்பி என்ன செய்யப்போகிறீர்கள் என கேள்விகள்.

அப்ப என்ன தான் செய்யவேண்டும்?, எப்படி செய்யவேண்டும்? என்றால், மௌனம்.

Good for nothing!

அவரவர் விரும்பியவற்றை அவர்கள் செய்யட்டும்,செய்யப்படும் செயல்கள் ஒரு சிலரை மாத்திரம் திருப்தி படுத்தமுனையும் செயல்கள் போல் இருந்தால் விமர்சனங்கள் வரத்தான் செய்யும்.நீரே மனம் தொட்டு சொல்லும் நாடுகடந்த தமிழிழ அரசு எத்தனை வீதம் பேரை பிரதிநிதிப்படுத்துது,எவ்வளவு பேர்கள் உருத்திரகுமாரை தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

எதோ புலம் பெயர்ந்த நாட்டில் இருக்கும் ஒரு பழைய மாணவர் சங்கம் ,ஊர்சங்கம் மாதிரி எங்களால் முடிந்ததை செய்கின்றோம் என்றால் ஏற்றுக்கொள்கின்றோம், அதைவிட்டு விட்டு பிரதம மந்திரி, அந்த மந்திரி,இந்த மந்திரி என்று அவரவர்க்கு பேருக்கு பதவி கொடுத்தால் காணுமா?

தொடங்கிய அமைப்பே ஒரு வருடத்திற்குள் இரண்டாக போய் விட்டது,அதைபற்றி ஒரு தெளிவான விளக்கம் இன்னமும் இல்லை.அதைவிட ஊரை சுற்றிய கள்ளவர்களை எல்லாம் உள்வாங்கி வைத்திருக்கின்றீர்கள்.என்ன நியாயத்தின் அடிப்படையில் உங்கள் பின்னால் வருவது?

இன்று சரவணபவனின் பெட்டி சீ.ரீ ஆர்.இல் கேட்டேன்.வவுனியா,அனுராதபுரம்,மகசீன் இந்த மூன்று சிறைகளிலும் இருப்பவர்கள் தாங்கொணா கஷ்டங்களை அனுபவிப்பதாகவும்,அங்கு பல பெண்களும் இருப்பதாகவும் முடிந்தால் புலம் பெயர்ந்தவர்களே ஏதாவது செய்யுங்கள் என்றார்.

இங்கு இருக்கும் அமைப்புக்கள் எல்லாரும் எல்லாத்தையும் செய்யாமல் ஆளுக்கொரு வேலைத்திட்டத்தில் இறங்கினால் யார் உண்மையில் சரியாக செயற்படுகின்றார்கள் என அறியமுடியும்.கடைசி ஒன்றிரண்டு வேலைத் திட்டங்களாவது உருப்படியாக முடியும்.

முதலில் நாடு கடந்த அரசை ஒன்றை உருப்படியாக தொடங்க சொல்லுங்கள் பலர் பின்னால் வருவார்கள்.

Link to comment
Share on other sites

அர்ஜுன், உமக்கு முதல் பச்சை போட்டது நான்தான்! ... தெரியும் உம் கண்ணீர் எல்லாம், ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத நிலை கணக்காகத்தான் என்று! ... ஆனால் ஓநாய்களையும் அழுவதற்கு இடம் கொடுத்து விட்டார்கள் ... அதுக்குத்தான் பச்சை!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரவர் விரும்பியவற்றை அவர்கள் செய்யட்டும்,செய்யப்படும் செயல்கள் ஒரு சிலரை மாத்திரம் திருப்தி படுத்தமுனையும் செயல்கள் போல் இருந்தால் விமர்சனங்கள் வரத்தான் செய்யும்.நீரே மனம் தொட்டு சொல்லும் நாடுகடந்த தமிழிழ அரசு எத்தனை வீதம் பேரை பிரதிநிதிப்படுத்துது,எவ்வளவு பேர்கள் உருத்திரகுமாரை தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

எதோ புலம் பெயர்ந்த நாட்டில் இருக்கும் ஒரு பழைய மாணவர் சங்கம் ,ஊர்சங்கம் மாதிரி எங்களால் முடிந்ததை செய்கின்றோம் என்றால் ஏற்றுக்கொள்கின்றோம், அதைவிட்டு விட்டு பிரதம மந்திரி, அந்த மந்திரி,இந்த மந்திரி என்று அவரவர்க்கு பேருக்கு பதவி கொடுத்தால் காணுமா?

தொடங்கிய அமைப்பே ஒரு வருடத்திற்குள் இரண்டாக போய் விட்டது,அதைபற்றி ஒரு தெளிவான விளக்கம் இன்னமும் இல்லை.அதைவிட ஊரை சுற்றிய கள்ளவர்களை எல்லாம் உள்வாங்கி வைத்திருக்கின்றீர்கள்.என்ன நியாயத்தின் அடிப்படையில் உங்கள் பின்னால் வருவது?

இன்று சரவணபவனின் பெட்டி சீ.ரீ ஆர்.இல் கேட்டேன்.வவுனியா,அனுராதபுரம்,மகசீன் இந்த மூன்று சிறைகளிலும் இருப்பவர்கள் தாங்கொணா கஷ்டங்களை அனுபவிப்பதாகவும்,அங்கு பல பெண்களும் இருப்பதாகவும் முடிந்தால் புலம் பெயர்ந்தவர்களே ஏதாவது செய்யுங்கள் என்றார்.

இங்கு இருக்கும் அமைப்புக்கள் எல்லாரும் எல்லாத்தையும் செய்யாமல் ஆளுக்கொரு வேலைத்திட்டத்தில் இறங்கினால் யார் உண்மையில் சரியாக செயற்படுகின்றார்கள் என அறியமுடியும்.கடைசி ஒன்றிரண்டு வேலைத் திட்டங்களாவது உருப்படியாக முடியும்.

முதலில் நாடு கடந்த அரசை ஒன்றை உருப்படியாக தொடங்க சொல்லுங்கள் பலர் பின்னால் வருவார்கள்.

சொல்லுங்கள்???

நாடு கடந்த அரசு தமிழருக்கு விடிவை தேடி கொடுத்தால் அதில் பாதி அகூதாவிட்கு கொடுப்பதாக ஏதும் சாத்திய பாடு உள்ளதா?

ஒழுங்காய் செயுமட்டும் காந்திருந்துவிட்டு தான் பின்னல் போய் ஓட்டவேண்டுமா?

ஒரு வேளை அதையும் அதிகாரவர்க்கமும் உலக சண்டியர்களும் இல்லாது ஒழித்தால்................ எனக்கு அப்பவே தெரியும் என்று கக்கிவிட வாய்ப்பிருக்கும்.

எல்லா கதவும் திறந்துதான் உள்ளது.................. விரும்பியவர்கள் உள்நுழையலாம்.

உண்மையானவர்கள் பின்னிட்பதனாலேயே கள்வர்களுக்கு அது வைப்பாக போகிறது. அதன்

பின்பு விட்ட பிழைகளை ஆராய்கிறோம் என்ற பெயரில் எடுக்க போகும் வாந்திகளும் எந்த புல்லையும் புடுங்க போவதில்லை.

சிறையிலே இருக்கும் கைதிகள்?

இதில் நாடு கடந்த அரசு நேரிடியாக தலை இட்டால் முடிவு என்னதாய் இருக்கும் என்று தெரியாதவர்களுக்கு அதை சொல்லியும் புரிய வைக்க முடியாது.

தவிர காசு போனால் வெளியிலே விடுவோம் எனும் நிலையை அல்லது பிடியை அரச இராணுவம் ஏன் வைத்திருக்கிறது? இது பால் குடிகளுக்கே தெரிந்திருக்க கூடியது.

முள்ளில் சேலை விழுந்துவிட்டால் ................. பொறுமையான நகர்வுகளே சேலையை முள்ளின் பிடியில் இருந்து மீட்கும்.

தமிழரை இந்த நிலையில் அரசு வைத்திருப்பதே புலம்பெயர் தமிழரின் பணத்தில் அரசாங்க கடனை அடைக்க................... அதற்காக எம்மால் அதை தடுக்கவும் முடியாது. மெல்லவும் முடியாத விழுங்கவும் முடியாத இந்த நிலையை கடப்பது என்றால்.............. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்ய ஏதும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகடந்த தமிழீழம் பெருமையடைகிறது (முகமூடி கிழிபடுது)

நாடு கடந்த தமிழீழத்துக்கு ஆள்தேடும் அவலம்.

மா.ஜெயக்குமார்.

a_Kunaseelan.jpgஇத்தால் சகல புலம் பெயர் தமிழ் பேசும் மக்களுக்கும் நாம் தரும் செய்தி யாதெனில், முன்னாள் ஈபிடிபி கட்சி ஆயுட்கால உறுப்பினரும், பின்னாளில், ஈபிடிபி கட்சியில் இருந்து பிரிந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான இராமேஸ்வரன் சகோதரர்களின் அணியுடன் தன்னை செயலாளராக இணைத்து கொண்டும், யாழ் வேம்படி அலுவலகத்தில் இருந்து கொண்டு புலியெதிர்ப்பு, ஈபிடிபி எதிர்ப்பு நடவடிக்கைகளில் பூரணமாக இறங்கியவருமான குணசீலன் வன்னியசிங்கம் என்கின்ற சிவா நாடுகடந்த தமிழீழம், வெளிப்பிராந்தியம் ( லண்டன் – பேர்மிங்ஹாம் ) எம்பியாக, பிரதமர் உருத்திர குமாரனால் நேற்று பிற்பகல் நிகழ்ந்த சுப வேளையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை புலம்(ன்) பெயர் அதிமேதாவிகளுக்கு இத்தால் அறியத்தருகின்றோம்.

தமது ஆட்படை பற்றியும், தமது செல்வாக்கு பற்றியும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும், புலம் பெயர் பரப்பெங்கும் பொங்கு புகழ் பாடிவரும் இந்த கூட்டம், இன்று அட்லீஸ் ஒரு எம் பி பதவிக்கு ஆள் இல்லாமல், ஈபிடிபி உறுப்பினராகவும், பின்னர் ஈபிடிபி மாற்றுக் கட்சி உறுப்பினராகவும், முழு நேர புலி யெதிர்ப்பு உணர்வாளராகவும், செயற்பாட்டாளராகவுமிருந்த குணசீலன் வன்னியசிங்கம் என்கின்றவரை நாடுகடந்த தமிழீழ எம்பியாக தெரிவு செய்துள்ளனர். இவர் ஈபிடிபியில் இருக்கும் போது, ஈபிடிபியின் சகல வழங்களையும் பயன் படுத்தி, புலம் பெயர் தேசத்தில் தன்னையும், தனது குடும்பத்தையும் வளம் படுத்திக் கொண்டவர்.

1990 முதல் 1996 வரை தீவுப் பகுதியில் புலிகளுக்கெதிராக நடந்த அனைத்து ராணுவ அட்டூழியங்களுக்கும் பொறுப்பானவர் இவர் என்பதும், இவர் செய்த அனைத்து ராணுவ அட்டூழியங்களுக்கும் வக்காலத்து வாங்கப் போய்த்தான் இன்று, இராமேஸ்வரன். முகவரியற்றுப் போய் இருக்கின்றார். ஆனால் முரட்டுத்தனம் உள்ள இவருக்கு தமிழீழ அரசு முகவரி வழங்கி மீண்டும் ஒரு தரம் அந்த மாவீரர்களின் முகத்தில் கரியை பூசிக் கொள்கின்றது. இவ்வாறான செயற்பாட்டாளர்களை அருகில் இணைத்து வைத்துக்கொண்டவர்களை நம்பியா தாய்க்குலம் நாடுகடந்த தமிழீழத்துக்கு தாலிக்கொடிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது.

30/7/1996 இல் இவர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக நவமணி பத்திரிகையில் பேட்டி அளித்ததுடன், அதே டக்ளஸ் தேவானந்தா கடந்த வருடம் இங்கிலாந்து வந்த போது அவருடன் இணைந்து வேலை செய்வதாக வாக்குறுதியும் அளித்திருந்தார். அது மட்டுமல்லாமல் டக்ளஸ் தேவானந்தாவின் தற்போதைய இங்கிலாந்து பிரதிநிதிகளுடன் இன்றும் நேரடி தொடர்பில் இருப்பதை, இங்கிலாந்தில் தற்போது வசிக்கும் நெப்போலியனை கேட்டால் தெரியும்.

தமிழா உனக்கேன் இந்த சாபக்கேடு. இந்த உலகம் பல துன்பங்களை அனுபவிப்பது கெட்டவர்களால் அல்ல. அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நல்லவர்களால்தான். வாழ்க நாடுகடந்த தமிழீழத்தின் பொதுப்பணி.

படம்: நாடு கடந்த தமிழீழத்திற்காக தாலி வழங்கும் நிகழ்வொன்றில் வி.உருத்திரகுமாருடன் குணசீலன் வன்னியசிங்கம் (நடுவில் நிற்பவ

http://aaivuu.wordpress.com/

Link to comment
Share on other sites

நாப்பது லட்சம் சனத்துக்கு முப்பத்தஞ்சு இயக்கம் என்றளவில் பெரும்பாலான சனங்கள் ஏதொ ஒரு இயக்கம் சம்மந்தப்பட்டும் சம்மந்தப்பட்டவரின் உறவு வட்டத்தில் சம்மந்தப்பட்டும் இருப்பதற்கு நிறைய வாய்ப்பிருக்கின்றது. இது தவிர கருணாவின் பிரதேசவாதம் சார்ந்தவர்கள் மதம் சார்ந்தவர்கள் என்னும் நூறுவித கருத்துநிலை சார்ந்தவர்கள் ஊடுருவவும் நிறைய சந்தர்ப்பம் இருக்கின்றது. அது போக கேபி காஸ்ரோ நெடியவன் பிறகு இப்ப புதிதாக வினாயகம் மயூரன் என்று ஏகப்பட்ட பிரிவுகள் வருகின்றது.

ஆகவே இவற்றை எல்லாம் தவத்தி ஒரு அமைப்பை உருவாக்கினால் ஒரு நூறு நூற்றியம்பது பேர் தேறுவினம். அவர்களுக்கு எங்காவது ஒரு நிலப்பகுதியை வாங்கி புலிக்கொடியை குத்தி அரசை நிறுவ வேண்டியதுதான். நாடும் கிடைத்துவிடும் சிங்களவர்களுடனும் மல்லுக்கட்டத்தேவையில்லை.

Link to comment
Share on other sites

இந்த நிகழ்வு 1991ம் ஆண்டை கண் முன் நிறுத்தியது.புஸ்பவனம் குஸ்புசாமி பாட பெரிய சாக்குபைகளில் நகைகளை சேர்த்தார்கள்.அப்போதும் தாலிக்கொடி தெரியவில்லை தனி ஈழம் தான் தெரிந்தது.இப்போதும் அதுதான் தெரிகிறது.

அது 1991ஆம் ஆண்டல்ல. 1998ஆம் ஆண்டு. சீ.என்.இல் மாவீரர் நாள் நிழ்வின்போது, 'அள்ளிக் கொடுங்கையா அள்ளிக் கொடுங்கையா' என மக்களுக்குள் பாடிக் கொண்டு வந்து கொண்டிருந்தபோது ஒரு அம்மா தன் தாலிக் கொடியைக் கழட்டிக் கொடுத்தார்.

நாடுகடந்த தமிழீழம் பெருமையடைகிறது (முகமூடி கிழிபடுது)

நாடு கடந்த தமிழீழத்துக்கு ஆள்தேடும் அவலம்.

மா.ஜெயக்குமார்.

a_Kunaseelan.jpgஇத்தால் சகல புலம் பெயர் தமிழ் பேசும் மக்களுக்கும் நாம் தரும் செய்தி யாதெனில், முன்னாள் ஈபிடிபி கட்சி ஆயுட்கால உறுப்பினரும், பின்னாளில், ஈபிடிபி கட்சியில் இருந்து பிரிந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான இராமேஸ்வரன் சகோதரர்களின் அணியுடன் தன்னை செயலாளராக இணைத்து கொண்டும், யாழ் வேம்படி அலுவலகத்தில் இருந்து கொண்டு புலியெதிர்ப்பு, ஈபிடிபி எதிர்ப்பு நடவடிக்கைகளில் பூரணமாக இறங்கியவருமான குணசீலன் வன்னியசிங்கம் என்கின்ற சிவா நாடுகடந்த தமிழீழம், வெளிப்பிராந்தியம் ( லண்டன் – பேர்மிங்ஹாம் ) எம்பியாக, பிரதமர் உருத்திர குமாரனால் நேற்று பிற்பகல் நிகழ்ந்த சுப வேளையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை புலம்(ன்) பெயர் அதிமேதாவிகளுக்கு இத்தால் அறியத்தருகின்றோம்.

தமது ஆட்படை பற்றியும், தமது செல்வாக்கு பற்றியும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும், புலம் பெயர் பரப்பெங்கும் பொங்கு புகழ் பாடிவரும் இந்த கூட்டம், இன்று அட்லீஸ் ஒரு எம் பி பதவிக்கு ஆள் இல்லாமல், ஈபிடிபி உறுப்பினராகவும், பின்னர் ஈபிடிபி மாற்றுக் கட்சி உறுப்பினராகவும், முழு நேர புலி யெதிர்ப்பு உணர்வாளராகவும், செயற்பாட்டாளராகவுமிருந்த குணசீலன் வன்னியசிங்கம் என்கின்றவரை நாடுகடந்த தமிழீழ எம்பியாக தெரிவு செய்துள்ளனர். இவர் ஈபிடிபியில் இருக்கும் போது, ஈபிடிபியின் சகல வழங்களையும் பயன் படுத்தி, புலம் பெயர் தேசத்தில் தன்னையும், தனது குடும்பத்தையும் வளம் படுத்திக் கொண்டவர்.

1990 முதல் 1996 வரை தீவுப் பகுதியில் புலிகளுக்கெதிராக நடந்த அனைத்து ராணுவ அட்டூழியங்களுக்கும் பொறுப்பானவர் இவர் என்பதும், இவர் செய்த அனைத்து ராணுவ அட்டூழியங்களுக்கும் வக்காலத்து வாங்கப் போய்த்தான் இன்று, இராமேஸ்வரன். முகவரியற்றுப் போய் இருக்கின்றார். ஆனால் முரட்டுத்தனம் உள்ள இவருக்கு தமிழீழ அரசு முகவரி வழங்கி மீண்டும் ஒரு தரம் அந்த மாவீரர்களின் முகத்தில் கரியை பூசிக் கொள்கின்றது. இவ்வாறான செயற்பாட்டாளர்களை அருகில் இணைத்து வைத்துக்கொண்டவர்களை நம்பியா தாய்க்குலம் நாடுகடந்த தமிழீழத்துக்கு தாலிக்கொடிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது.

30/7/1996 இல் இவர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக நவமணி பத்திரிகையில் பேட்டி அளித்ததுடன், அதே டக்ளஸ் தேவானந்தா கடந்த வருடம் இங்கிலாந்து வந்த போது அவருடன் இணைந்து வேலை செய்வதாக வாக்குறுதியும் அளித்திருந்தார். அது மட்டுமல்லாமல் டக்ளஸ் தேவானந்தாவின் தற்போதைய இங்கிலாந்து பிரதிநிதிகளுடன் இன்றும் நேரடி தொடர்பில் இருப்பதை, இங்கிலாந்தில் தற்போது வசிக்கும் நெப்போலியனை கேட்டால் தெரியும்.

தமிழா உனக்கேன் இந்த சாபக்கேடு. இந்த உலகம் பல துன்பங்களை அனுபவிப்பது கெட்டவர்களால் அல்ல. அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நல்லவர்களால்தான். வாழ்க நாடுகடந்த தமிழீழத்தின் பொதுப்பணி.

படம்: நாடு கடந்த தமிழீழத்திற்காக தாலி வழங்கும் நிகழ்வொன்றில் வி.உருத்திரகுமாருடன் குணசீலன் வன்னியசிங்கம் (நடுவில் நிற்பவ

http://aaivuu.wordpress.com/

நீங்கள் இவருக்கு வாக்களித்துத் தெரிவு செய்ததனால்தான் நாடு கடந்த அரசாங்கமும் அவரைத் தெரிவு செய்யவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது. இவருக்கு வாக்களித்த மக்களை நீங்கள் முதலே தடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காதே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பங்களிப்பு என்று ஊரில் கேட்டு வரும் போது 30 வருடமாய் தமிழனை தலைநிமிர்த்தி வாழவைத்த தெய்வங்களின் மனைவிமார் கட்டியிருந்தது வெறும் மஞ்சள் கயிறு தாலி இங்கு பங்களிப்பு கேட்டு வருபவர்களின் மனைவிமார்களின் நகைகளை வித்தால் sri lankaவை வாங்கலாம்.படங்களை போட்டால் yarl server சூடு தாங்காது புகை விடும்.

Link to comment
Share on other sites

அப்படியே மருதங்கேணிக்கும் ஒரு பச்சை. இங்கு கருத்தெழுதியவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசிற்குத் தெரியப்படுத்தி, அவர்கள் உதாசீனப் படுத்திய பிறகு எழுதியிருந்தால் உங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், நீங்களும் செய்ய மாட்டீர்கள். செய்ய முனைபவர்களையும் ஆயிரம் குறை கூறுவீர்கள். உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் இதனை உரிய முறையில் உரிய வழியில் அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். யாழில்கூட அவ்வரசிலிருந்து ஒருவர் பதிந்திருக்கிறார். குறைந்த பட்சம், அவருக்குத் தனிமடலிலாவது தெரிவியுங்கள்.....

Link to comment
Share on other sites

பங்களிப்பு என்று ஊரில் கேட்டு வரும் போது 30 வருடமாய் தமிழனை தலைநிமிர்த்தி வாழவைத்த தெய்வங்களின் மனைவிமார் கட்டியிருந்தது வெறும் மஞ்சள் கயிறு தாலி இங்கு பங்களிப்பு கேட்டு வருபவர்களின் மனைவிமார்களின் நகைகளை வித்தால் sri lankaவை வாங்கலாம்.படங்களை போட்டால் yarl server சூடு தாங்காது புகை விடும்.

தனிப்பட்ட ரீதியில் ஒருசிலர் நீங்கள் கூறியது போல நடக்கலாம். ஆனால், எல்லோரையும் இவ்வாறு ஒரே போர்வையால் போர்த்துவது சரியல்ல.

இப்படியான கருத்துக்களால் பல நேர்மையானவர்கள் கூட பின்னடிப்பது கண்கூடு.

தமிழச்சி கூறுவது போல நாம், எமது அரசு, எமது ஜனநாயகம் - எனவே நாம் நேரடியாக தொடர்புகொண்டு பிழை விடுபவர்களை ஆதாரத்துடன் சர்ப்பிக்கவேண்டும். ஏனெனில் இது ' கத்தியோடு சேர்த்து புத்தியையும் பாவிக்கவேண்டிய காலம்', நீங்கள் கூறுவது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.