Jump to content

தனது தாலிக்கொடியை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்காக அன்பளிப்புச் செய்த தமிழ்த்தாய்


Recommended Posts

ரதி, வீட்டிலை இருந்து கழட்டிக் கொடுத்தால்... ஆர் சாட்சி?

நாலு பேருக்கு, முன்னாலை... நடு மண்டபத்திலை கழட்டிக் கொடுத்தால் தானே... நாலு பேர் சாட்சியாக இருப்பார்கள்.

நாளைக்கு... இந்த தாலிப் பணம் எதுக்கு செலவழிக்கப் பட்டது என்ற, கேள்வி வரும் என்று...தாலியைப் பெற்றுக் கொண்டவர்களும் தகுந்த கவனமாக இருப்பார்கள்

தாயை கொல்லும் பஞ்சத்தை தடுக்க முயற்சி எடார்

வாய் திறந்து சும்மா கிளியே.......

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தாயை கொல்லும் பஞ்சத்தை தடுக்க முயற்சி எடார்

வாய் திறந்து சும்மா கிளியே.......

உண்மைகளை திருக்குறள்போல் இப்படி இரண்டு வரியில் எழுதுவது..............

வள்ளுவனுக்கும் உங்களுக்கும் மட்டுமே சாத்தியமானது.

Link to comment
Share on other sites

எனக்கு பட்டதையும் ,பட்டுத் தெளிந்தவற்றையும் தான் எனக்கு எழுதமுடியும்.தாலிக்கொடி சென்டிமென்ட் எல்லாம் ரொம்ப ஓவர்.காசை வாங்கினீர்களா? ரிசிட்கொடுகொடுத்தீர்களா? என்ன செய்யப்பபோகின்ரீர்கள் என்று சொன்னாலே காணும்.சீன் காட்டுவது நல்லதிக்கில்லை என்பது என் அபிப்பிராயம்.இங்கு இருப்பவர்கள் பலர் புலம் பெயர் புலியிலும் இருந்தவர்கள்.உவர் பொன்.பாலராஜனிடம் சேர்த்த காசுகள் பற்றி கதைக்க வாங்கியவர்களிடம் போய் கேளுங்கள் என்று பதில் சொன்னவர்.

இதுவரை வன்னியில் முகாம்களில் இருப்பவர்களுக்கு என்ன செய்தார்கள்.தமிழ் தேசியகூட்டமைப்புடன்அல்லது நாட்டில் உள்ள மக்களுடனான தொடர்புகள் எது பற்றியும் மூச்சு இல்லை.

தலைவரை பற்றிய கேள்விக்கே பதில் சொல்ல வக்கில்லாத ஒருவர் தமிழர்களுக்கு விடுதலை எடுத்து தரப்போகின்றார்.நீங்களும் தாலிக்கொடியை கழட்டிக்கொடுங்கள்.

கோவிலிலும்,குளத்திலும்,காண்டத்திலும்,சாத்திரத்திலும் காசை கொண்டுபோய் கொட்டுவது பொல தான் எனக்கு உதுவும்.உங்களை நான் தடுக்கவில்லை எனக்கு சிரிப்பாக இருக்கு.

மேற்குலக நாடுகளின் பாராளுமன்ற பிரதிநிதிகள் போன்று இவரும் மக்கள் முன்னால் நின்று தெரிவுசெய்யப்பட்டவர். அப்பொழுதும் இவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அதையும் மீறு இவருக்கு இருந்த மக்கள் ஆதரவு காரணமாக தெரிவு செய்யப்பட்டவர்.

அவர் சொன்னார் - இவர் சொன்னார் என்ற குற்றங்கள் ஆதாரத்துடன் முன்வைக்கப்படல்வேண்டும். இல்லை இந்த குற்றச்சாட்டு அகற்றப்படல் வேண்டும், இந்த கருத்தும் அகற்றப்படல் வேண்டும்.

Link to comment
Share on other sites

தெரியாமல் தான் கேட்கிறேன் தாலியை கழட்டி கொடுக்கும் அளவிற்கு என்ன பிரச்சனை?...அன்று ஒருவரும் காசு கொண்டு போகவில்லையா?...இப்படி உசுப்பேற்றி காசு,நகைகள் பறிக்கும் வேலைகள் இன்னும் மக்களிடம் எடுபடுதா என்ன?

இதே களத்தில் எனது மகனின் இல்லை மகளின் பிறந்தநாளை எளிமையாகி கொண்டாடி, 'நேசக்கரம்' ஊடாக பல நல்லுறவுகள் உதவிகளை செய்கிறோம், அதையும் அநேகமானோர் பாராட்டுகிறோம்.

அதுவும் உசுப்பேற்றும் அணுகுமுறை என்று சொல்லலாம், தவறில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

83 இல் அர்ஜுன் வெளிநாட்டில் இருந்து இயக்கம் ஒன்றில் இணைய இந்தியா போகின்றார். விசுகு அண்ணா அதே காலத்தில் பிரான்ஸ் வருகின்றார்.. அப்படியானால் தகுதி என்பது புலிகளின் ஆதரவாளர் என்பது மட்டுமா? தமிழ் மக்களின் விடியலின் மீதான நம்பிக்கை தகுதியாக இருக்காதா?

தமிழ் மக்களின் விடியலை 25 - 30 வருடங்களாக பல வழிகளிலும் வீச்சுடன் முன்னெடுத்த புலிகளின் அத்தியாயம் முள்ளிவாய்க்காலில் துக்ககரமாக முடிந்துவிட்டது. எனினும் தமிழ் மக்களின் விடியலின் தேவை முன்னரை விட அதிமுக்கியமாக இருக்கின்றது.

தமிழ் மக்களின் மிகமுக்கியமான விடயங்களில் அக்கறை காட்டாமல், ஒப்பு சாப்புக்கு அதைச் செய்கின்றோம், இதைச் செய்கின்றோம் என்று சொல்லிக் கொண்டு தமக்குள் கூறுபட்டு அதிகாரத்திற்காகவும் பதவிக்காகவும் குடுமிபிடிச் சண்டைகளும், குழிபறிப்புக்களையும் மேற்கொள்வோரினது மீதான நம்பகத்தன்மை அறவே ஒழிந்துவிட்டது.

ஆனால் இந்த அவமானகரமான அமைப்புக்களை இன்னமும் நம்பி தமிழ் மக்கள் விடியலைக் காணலாம் என்று இங்கு வரும் கருத்துக்களைப் பார்க்கும்போது வரலாறுகளில் இருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ள விரும்பாத ஒரு கூட்டமாக மாறிவிட்டோம் என்றுதான் தோன்றுகின்றது.

விசுகு

1983இல் வெளியில் வந்தார்

நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை. தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று வாழ்ந்தார்

..............

இப்படியே வைத்துக்கொள்வோம். இதனால் நாட்டுக்கோ போராளிகளுக்கோ போராட்டத்துக்கோ

எந்த இழப்புமில்லை.

83 இல் அர்ஜுன் வெளிநாட்டில் இருந்து இயக்கம் ஒன்றில் இணைய இந்தியா போகின்றார்.

போனவர் புலிகளை எப்படி அழிப்பது என்பதற்கான பயிற்சியை மட்டுமே எடுத்து வெளிநாடு வந்தார்.

இலங்கை அரசு புலிகளுடன் பேசப்போகிறோம் என்று சொல்லும்போதெல்லாம் முதலில் வெளிக்கிடுமே சிங்கள அதிதீவிரவாதம் அதைவிட ஆயிரம் மடங்கு அதிகமாய் ஆயிரம் மடங்கு வேகமாய் புலிகளுக்கு எதிராக உழைத்தவர் இவர். உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் இவரும் இவர் ஆதரிக்கும் கூட்டமும் எழுதிய பேசிய கக்கிய கவுட்டுக்கொட்டிய கோடிரிக்கொம்புத்தனமான அத்தனையையும் நாம் அறிவோம்.

அவர் சாதாரண தமிழராக வாழ்ந்திருந்தால் தற்போதும் வாழ்ந்தால் எவருக்கும் எந்த சிக்கலுமில்லை.

செய்பவர்களைக்கை காட்டணுமாக இருந்தால் அதற்கு அவர்மீதான விமர்சனமும் வரும். அதற்கு அவர் பதில் சொல்லணும்.

தமிழ் மக்களின் விடியலை 25 - 30 வருடங்களாக பல வழிகளிலும் வீச்சுடன் முன்னெடுத்த புலிகளின் அத்தியாயம் முள்ளிவாய்க்காலில் துக்ககரமாக முடிந்துவிட்டது

இதில் அரைவாசியை இவர்களுக்கு பதில் சொல்வதிலும் இவர் பேபாட்ட ஓட்டைகளை ஒட்டுவதிலுமே போனது என்பது தான் தோற்றுப்போனதன் அடித்தளம்.

காசை வாங்கினீர்களா? ரிசிட்கொடுகொடுத்தீர்களா? என்ன செய்யப்பபோகின்ரீர்கள் என்று சொன்னாலே காணும்.

ரொம்ப நல்ல வசனம்

அது எடுபடணும். எமது ஆசையும் அதுதான்.

சரி

ஒரு கேள்வி வருமே

அப்படி ரிசீட் கொடுத்தபோது இவர் கொடுத்தாரா???

அப்போதும் இல்லை இப்போதும இல்லை என்றால் ........???

மற்றும்படி தாலிக்கொடியைக்கழட்டிக்கொடுப்பது அதிலும் தலைவர்களே கொடுப்பது நல்லதாக தெரியவில்லை.

அது மக்களிடமிருந்து வரவேண்டும். வந்தது வரும்.

அது காலவேளைகளையும் தலைவர்களையும் பொறுத்து மக்கள் எடுக்கும் தீர்மானங்கள் ஆகும்.

அது வரலாறுகளில் உள்ளது. வரலாறுகளை வழி நடாத்தியும் உள்ளது.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இருந்து கொடுப்பவன் எல்லாம் தான் இவ்வளவு கொடுத்தனான்,இப்படி உதவி செய்தனான் என எழுத வெளிக் கிட்டால் ஒரு யாழ் காணாது...நான் நாடு கட‌ந்த அர‌சின் எதிரி இல்லை சொல்லப் போனால் அதைப் பற்றி கணக்கெடுப்பதே இல்லை அதைப் பற்றி மட்டும் இல்லை புலம் பெயர் அமைப்புகள் ஒன்றையுமே நான் கணக்கெடுப்பதில்லை எல்லோருக்கும் புலி இல்லை என்றவுட‌ன் துளிர் விட்டுப் போச்சு...இதையே ஊரில் இருக்கும் ஒரு அம்மா செய்திருந்தால் அதில் ஒரு அர்த்தம் இருந்திருக்கும்

<p>

இதே களத்தில் எனது மகனின் இல்லை மகளின் பிறந்தநாளை எளிமையாகி கொண்டாடி, 'நேசக்கரம்' ஊடாக பல நல்லுறவுகள் உதவிகளை செய்கிறோம், அதையும் அநேகமானோர் பாராட்டுகிறோம்.

அதுவும் உசுப்பேற்றும் அணுகுமுறை என்று சொல்லலாம், தவறில்லை.

உதவி செய்வதில் தவறில்லை அதை அப்பட்டமாக பகிர‌ங்கப்படுத்தி பீத்திக்கிறது தான் தப்பு...யாழில் நேச‌க்கர‌ மூலம் ஒருவர் உதவி செய்தால் அதை சாந்தி அக்கா வந்து கணக்கு காட்டும் போது இன்னார்,இன்ன உதவி செய்தார் என எழுதுவதில் தப்பில்லை ஆனால் அதையே நான் வந்து இவ்வளவு கொடுத்தனான் என எழுதுவது தான் தப்பு....உதவி செய்ய விருப்பம் உள்ளோர்,மனம் உள்ளோர் தாங்களாகவே வந்து செய்வார்கள் மற்றவர்கள் சொல்லி செய்ய மாட்டார்கள் என்பது என் கருத்து
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் தான் !!

நான் மட்டும் விடுவேனா???? :lol: நானும் தான். :D

Link to comment
Share on other sites

ஒருவன் என்ன இன்று செய்கிறான் என்பதை வைத்தே நாளை அவனின் இடம் நிர்ணயிக்கப்படும்.

374206_10151072111865008_856330007_22062575_958931168_n.jpg

நாடு கடந்த உறுப்பினர் பொன்.பாலராஜன்

Link to comment
Share on other sites

யாரும் ஆயுத போராட்டத்தையோ இல்லை ஜனநாயாக ரீதியான போராட்டத்தையோ இலகுவானது என சொல்லவில்லை.

மீண்டும் தலைவர் வருவார் இல்லை ஆயுதப்போராட்டம் வெடிக்கும் என்றால் - அதற்கும் நக்கல், ஏளனம். சரி, சர்வதேச அரசியல் ஊடாக எமது நியாயங்களை வென்றெடுப்போம் என்றால் - அதற்கும் நக்கல், குற்றச்சாட்டுக்கள். இவர்களை நம்பி என்ன செய்யப்போகிறீர்கள் என கேள்விகள்.

அப்ப என்ன தான் செய்யவேண்டும்?, எப்படி செய்யவேண்டும்? என்றால், மௌனம்.

Good for nothing!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகூதாவுக்கு ஒரு பச்சை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்றவிசாரணையின் அடுத்த கட்டத்துக்கான நகர்வுவுகளுக்காக

கூட்டம் போடுகிறார்கள்

தொலைபேசியில் ஆராய்கிறார்கள்

திட்டமிடுகிறார்கள்

என்றால் கடதாசி விமானத்திலும் கடதாசியில் அடித்த பணத்திலுமா இதுவெல்லாம் நடக்கு

அதை தொடர்ந்து ஒருவரே செய்யமுடியுமா?

எத்தனை தரம் தான் அவர் தாங்குவார்?

வந்திட்டினம் நானும் குத்தினனான் என்றபடி..............

இப்படியே குத்திக்கிட்டு இருங்கோ

நாங்களும் வந்து குத்திட்டு சிரித்து போறம் அவைக்கு

ஒருத்தனும் வரப்போறதில்லை இனி எம்மைக்காப்பாற்ற

எவனும் பிறக்கப்போவதில்லை பிரபாகரனாய்...................

Link to comment
Share on other sites

இதே களத்தில் எனது மகனின் இல்லை மகளின் பிறந்தநாளை எளிமையாகி கொண்டாடி, 'நேசக்கரம்' ஊடாக பல நல்லுறவுகள் உதவிகளை செய்கிறோம், அதையும் அநேகமானோர் பாராட்டுகிறோம்.

அதுவும் உசுப்பேற்றும் அணுகுமுறை என்று சொல்லலாம், தவறில்லை.

நேசக்கரத்திற்கும் தாலியெல்லாம் கழட்டிகுடுத்திருக்கிறாங்களா?? . அவர்களும் தாலி சங்கிலி.காப்பு. அறுணாக்கொடி எல்லாம் வாங்கி வைச்சிட்டு பம்மிக் கொண்டு இருக்கினமா?? தெரியாமல் போச்சுதே.அகூதா நீங்கள் எத்தனை பவுண் சங்கிலியை அவையளிட்டை இழந்தனீங்கள்.

அப்பிடியே அர்ஜீனுக்கும் ஒரு பச்சை

Link to comment
Share on other sites

நீங்கள் முழுமையாக செய்தியை / திரியை வாசிக்கவில்லை என எண்ணுகிறேன்.

நடந்தது - நாடுகடந்த அரசின் அமர்வில் இறுதி நாளன்று தேவைகள் முன்வைக்கப்பட்டு அதற்குரிய நிதி உதவி கேட்கப்பட்டது. அப்பொழுது அங்கிருந்த வயோதிப தாயார் தன்னிடம் இருந்த தாலிக்கொடியை கழற்றி கொடுத்துள்ளார்.

நேசக்கரத்திற்கும் தாலியெல்லாம் கழட்டிகுடுத்திருக்கிறாங்களா?? . அவர்களும் தாலி சங்கிலி.காப்பு. அறுணாக்கொடி எல்லாம் வாங்கி வைச்சிட்டு பம்மிக் கொண்டு இருக்கினமா?? தெரியாமல் போச்சுதே.அகூதா நீங்கள் எத்தனை பவுண் சங்கிலியை அவையளிட்டை இழந்தனீங்கள்.

அவரிடம் இருந்த சொத்தை அவர் அந்த இடத்தில் தன்னால் முடிந்த அதியுயர் அன்பளிப்பை செய்துள்ளார். அது 'செண்டிமென்டலாக' இருக்கலாம். பாட்டிக்கு அதற்கு மேலே உதவி செய்ய பணம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் மனம் உண்டு. அதற்காகவே பலரும் பாராட்டியுள்ளனர்.

அகூதா நீங்கள் எத்தனை பவுண் சங்கிலியை அவையளிட்டை இழந்தனீங்கள்

பகிரங்கமாக கேட்டுள்ளீர்கள் என்பதால் கூறிவிடுகிறேன். ஒரு சதமும் கொடுப்பதில்லை, சும்மா கதை மட்டும் தான். ஒருத்தருக்கும் தயவு செய்து சொல்லிவிட வேண்டாம்!

Link to comment
Share on other sites

இங்கு இருந்து கொடுப்பவன் எல்லாம் தான் இவ்வளவு கொடுத்தனான்,இப்படி உதவி செய்தனான் என எழுத வெளிக் கிட்டால் ஒரு யாழ் காணாது...நான் நாடு கட‌ந்த அர‌சின் எதிரி இல்லை சொல்லப் போனால் அதைப் பற்றி கணக்கெடுப்பதே இல்லை அதைப் பற்றி மட்டும் இல்லை புலம் பெயர் அமைப்புகள் ஒன்றையுமே நான் கணக்கெடுப்பதில்லை எல்லோருக்கும் புலி இல்லை என்றவுட‌ன் துளிர் விட்டுப் போச்சு...இதையே ஊரில் இருக்கும் ஒரு அம்மா செய்திருந்தால் அதில் ஒரு அர்த்தம் இருந்திருக்கும்

<p>உதவி செய்வதில் தவறில்லை அதை அப்பட்டமாக பகிர‌ங்கப்படுத்தி பீத்திக்கிறது தான் தப்பு...யாழில் நேச‌க்கர‌ மூலம் ஒருவர் உதவி செய்தால் அதை சாந்தி அக்கா வந்து கணக்கு காட்டும் போது இன்னார்,இன்ன உதவி செய்தார் என எழுதுவதில் தப்பில்லை ஆனால் அதையே நான் வந்து இவ்வளவு கொடுத்தனான் என எழுதுவது தான் தப்பு....உதவி செய்ய விருப்பம் உள்ளோர்,மனம் உள்ளோர் தாங்களாகவே வந்து செய்வார்கள் மற்றவர்கள் சொல்லி செய்ய மாட்டார்கள் என்பது என் கருத்து

வேலையால் வந்து சாப்பிடாமல் நாலு மணிக்கு நாடு கடந்த அரசின் கூட்டத்திற்கு ஓடினால் கோவிலில் ஒரு குருவியையும் காணோம் யாழில் வந்து கொச்சை தமிழில் எழுதுபவர் குத்துவிளக்கை துடைச்சு கொண்டு நிற்கின்றார்.வந்தனான் நிற்பம் என்று பார்த்தால் ஒருவழியாக ஆறுமணியளவில் தொடங்கி வரவேற்புரை,டான்ஸ்,தலைவர் உரை என்று வீடியோ.லோகன் கணபதி தமிங்கில உரை.எனக்கோ பெரும் பசி.கோவிலில் போய் ஏதும் புக்கை தின்பமோ என யோசிக்க அடுத்த பேச்சாளார் என்று ஒரு இந்திய தமிழ் பெங்களூர் விரிவுரையாளர் அறிமுகமானார்..ஏதோ நுயுமன் என்ற ஞபகம்.தமிழ் விதவைகளின் கணக்கு துல்லியமாக சொல்லி (எண்பதினாயிரமாம்) ஒவ்வொரு நாளும் சிங்கள ஆமிக்காரன் போய் கதவை தட்டுகின்றானாம்.சீமான் திறம் போல இருந்தது.(பாபு வீட்டில நல்ல சாப்பாடு போல).

இனியும் இருந்தால் ஏதும் வாயை விட்டு தர்ம அடி வாங்குவதை விட ஓடிவந்து விட்டேன்.

வந்து யாழை பார்த்தால் ரதியின் பதிவு 'இவர்களையெல்லாம் நான் கணக்கில எடுக்கின்றதில்லை"என்று இருக்கு.இவ்வளவு தெளிவு எனக்கு இருந்திருந்தால் எப்பவோ நான் மொட்கேஜை கட்டி முடித்திருப்பேன்.

Link to comment
Share on other sites

யாரும் ஆயுத போராட்டத்தையோ இல்லை ஜனநாயாக ரீதியான போராட்டத்தையோ இலகுவானது என சொல்லவில்லை.

மீண்டும் தலைவர் வருவார் இல்லை ஆயுதப்போராட்டம் வெடிக்கும் என்றால் - அதற்கும் நக்கல், ஏளனம். சரி, சர்வதேச அரசியல் ஊடாக எமது நியாயங்களை வென்றெடுப்போம் என்றால் - அதற்கும் நக்கல், குற்றச்சாட்டுக்கள். இவர்களை நம்பி என்ன செய்யப்போகிறீர்கள் என கேள்விகள்.

அப்ப என்ன தான் செய்யவேண்டும்?, எப்படி செய்யவேண்டும்? என்றால், மௌனம்.

Good for nothing!

பிரத்தியேகமாக பாசறையில் பயிற்சி எடுத்து வந்த ஒருத்தர் தான் இப்படி எல்லாம் எழுதுகிறார் என்பது சொல்லாமல் புரியும்.அதாவது மண்டையை கழுவி அனுப்பி இருக்கிறாய்ங்க. :D :D

Link to comment
Share on other sites

யாரும் ஆயுத போராட்டத்தையோ இல்லை ஜனநாயாக ரீதியான போராட்டத்தையோ இலகுவானது என சொல்லவில்லை.

மீண்டும் தலைவர் வருவார் இல்லை ஆயுதப்போராட்டம் வெடிக்கும் என்றால் - அதற்கும் நக்கல், ஏளனம். சரி, சர்வதேச அரசியல் ஊடாக எமது நியாயங்களை வென்றெடுப்போம் என்றால் - அதற்கும் நக்கல், குற்றச்சாட்டுக்கள். இவர்களை நம்பி என்ன செய்யப்போகிறீர்கள் என கேள்விகள்.

அப்ப என்ன தான் செய்யவேண்டும்?, எப்படி செய்யவேண்டும்? என்றால், மௌனம்.

Good for nothing!

அவரவர் விரும்பியவற்றை அவர்கள் செய்யட்டும்,செய்யப்படும் செயல்கள் ஒரு சிலரை மாத்திரம் திருப்தி படுத்தமுனையும் செயல்கள் போல் இருந்தால் விமர்சனங்கள் வரத்தான் செய்யும்.நீரே மனம் தொட்டு சொல்லும் நாடுகடந்த தமிழிழ அரசு எத்தனை வீதம் பேரை பிரதிநிதிப்படுத்துது,எவ்வளவு பேர்கள் உருத்திரகுமாரை தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

எதோ புலம் பெயர்ந்த நாட்டில் இருக்கும் ஒரு பழைய மாணவர் சங்கம் ,ஊர்சங்கம் மாதிரி எங்களால் முடிந்ததை செய்கின்றோம் என்றால் ஏற்றுக்கொள்கின்றோம், அதைவிட்டு விட்டு பிரதம மந்திரி, அந்த மந்திரி,இந்த மந்திரி என்று அவரவர்க்கு பேருக்கு பதவி கொடுத்தால் காணுமா?

தொடங்கிய அமைப்பே ஒரு வருடத்திற்குள் இரண்டாக போய் விட்டது,அதைபற்றி ஒரு தெளிவான விளக்கம் இன்னமும் இல்லை.அதைவிட ஊரை சுற்றிய கள்ளவர்களை எல்லாம் உள்வாங்கி வைத்திருக்கின்றீர்கள்.என்ன நியாயத்தின் அடிப்படையில் உங்கள் பின்னால் வருவது?

இன்று சரவணபவனின் பெட்டி சீ.ரீ ஆர்.இல் கேட்டேன்.வவுனியா,அனுராதபுரம்,மகசீன் இந்த மூன்று சிறைகளிலும் இருப்பவர்கள் தாங்கொணா கஷ்டங்களை அனுபவிப்பதாகவும்,அங்கு பல பெண்களும் இருப்பதாகவும் முடிந்தால் புலம் பெயர்ந்தவர்களே ஏதாவது செய்யுங்கள் என்றார்.

இங்கு இருக்கும் அமைப்புக்கள் எல்லாரும் எல்லாத்தையும் செய்யாமல் ஆளுக்கொரு வேலைத்திட்டத்தில் இறங்கினால் யார் உண்மையில் சரியாக செயற்படுகின்றார்கள் என அறியமுடியும்.கடைசி ஒன்றிரண்டு வேலைத் திட்டங்களாவது உருப்படியாக முடியும்.

முதலில் நாடு கடந்த அரசை ஒன்றை உருப்படியாக தொடங்க சொல்லுங்கள் பலர் பின்னால் வருவார்கள்.

Link to comment
Share on other sites

அர்ஜுன், உமக்கு முதல் பச்சை போட்டது நான்தான்! ... தெரியும் உம் கண்ணீர் எல்லாம், ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத நிலை கணக்காகத்தான் என்று! ... ஆனால் ஓநாய்களையும் அழுவதற்கு இடம் கொடுத்து விட்டார்கள் ... அதுக்குத்தான் பச்சை!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரவர் விரும்பியவற்றை அவர்கள் செய்யட்டும்,செய்யப்படும் செயல்கள் ஒரு சிலரை மாத்திரம் திருப்தி படுத்தமுனையும் செயல்கள் போல் இருந்தால் விமர்சனங்கள் வரத்தான் செய்யும்.நீரே மனம் தொட்டு சொல்லும் நாடுகடந்த தமிழிழ அரசு எத்தனை வீதம் பேரை பிரதிநிதிப்படுத்துது,எவ்வளவு பேர்கள் உருத்திரகுமாரை தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

எதோ புலம் பெயர்ந்த நாட்டில் இருக்கும் ஒரு பழைய மாணவர் சங்கம் ,ஊர்சங்கம் மாதிரி எங்களால் முடிந்ததை செய்கின்றோம் என்றால் ஏற்றுக்கொள்கின்றோம், அதைவிட்டு விட்டு பிரதம மந்திரி, அந்த மந்திரி,இந்த மந்திரி என்று அவரவர்க்கு பேருக்கு பதவி கொடுத்தால் காணுமா?

தொடங்கிய அமைப்பே ஒரு வருடத்திற்குள் இரண்டாக போய் விட்டது,அதைபற்றி ஒரு தெளிவான விளக்கம் இன்னமும் இல்லை.அதைவிட ஊரை சுற்றிய கள்ளவர்களை எல்லாம் உள்வாங்கி வைத்திருக்கின்றீர்கள்.என்ன நியாயத்தின் அடிப்படையில் உங்கள் பின்னால் வருவது?

இன்று சரவணபவனின் பெட்டி சீ.ரீ ஆர்.இல் கேட்டேன்.வவுனியா,அனுராதபுரம்,மகசீன் இந்த மூன்று சிறைகளிலும் இருப்பவர்கள் தாங்கொணா கஷ்டங்களை அனுபவிப்பதாகவும்,அங்கு பல பெண்களும் இருப்பதாகவும் முடிந்தால் புலம் பெயர்ந்தவர்களே ஏதாவது செய்யுங்கள் என்றார்.

இங்கு இருக்கும் அமைப்புக்கள் எல்லாரும் எல்லாத்தையும் செய்யாமல் ஆளுக்கொரு வேலைத்திட்டத்தில் இறங்கினால் யார் உண்மையில் சரியாக செயற்படுகின்றார்கள் என அறியமுடியும்.கடைசி ஒன்றிரண்டு வேலைத் திட்டங்களாவது உருப்படியாக முடியும்.

முதலில் நாடு கடந்த அரசை ஒன்றை உருப்படியாக தொடங்க சொல்லுங்கள் பலர் பின்னால் வருவார்கள்.

சொல்லுங்கள்???

நாடு கடந்த அரசு தமிழருக்கு விடிவை தேடி கொடுத்தால் அதில் பாதி அகூதாவிட்கு கொடுப்பதாக ஏதும் சாத்திய பாடு உள்ளதா?

ஒழுங்காய் செயுமட்டும் காந்திருந்துவிட்டு தான் பின்னல் போய் ஓட்டவேண்டுமா?

ஒரு வேளை அதையும் அதிகாரவர்க்கமும் உலக சண்டியர்களும் இல்லாது ஒழித்தால்................ எனக்கு அப்பவே தெரியும் என்று கக்கிவிட வாய்ப்பிருக்கும்.

எல்லா கதவும் திறந்துதான் உள்ளது.................. விரும்பியவர்கள் உள்நுழையலாம்.

உண்மையானவர்கள் பின்னிட்பதனாலேயே கள்வர்களுக்கு அது வைப்பாக போகிறது. அதன்

பின்பு விட்ட பிழைகளை ஆராய்கிறோம் என்ற பெயரில் எடுக்க போகும் வாந்திகளும் எந்த புல்லையும் புடுங்க போவதில்லை.

சிறையிலே இருக்கும் கைதிகள்?

இதில் நாடு கடந்த அரசு நேரிடியாக தலை இட்டால் முடிவு என்னதாய் இருக்கும் என்று தெரியாதவர்களுக்கு அதை சொல்லியும் புரிய வைக்க முடியாது.

தவிர காசு போனால் வெளியிலே விடுவோம் எனும் நிலையை அல்லது பிடியை அரச இராணுவம் ஏன் வைத்திருக்கிறது? இது பால் குடிகளுக்கே தெரிந்திருக்க கூடியது.

முள்ளில் சேலை விழுந்துவிட்டால் ................. பொறுமையான நகர்வுகளே சேலையை முள்ளின் பிடியில் இருந்து மீட்கும்.

தமிழரை இந்த நிலையில் அரசு வைத்திருப்பதே புலம்பெயர் தமிழரின் பணத்தில் அரசாங்க கடனை அடைக்க................... அதற்காக எம்மால் அதை தடுக்கவும் முடியாது. மெல்லவும் முடியாத விழுங்கவும் முடியாத இந்த நிலையை கடப்பது என்றால்.............. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்ய ஏதும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகடந்த தமிழீழம் பெருமையடைகிறது (முகமூடி கிழிபடுது)

நாடு கடந்த தமிழீழத்துக்கு ஆள்தேடும் அவலம்.

மா.ஜெயக்குமார்.

a_Kunaseelan.jpgஇத்தால் சகல புலம் பெயர் தமிழ் பேசும் மக்களுக்கும் நாம் தரும் செய்தி யாதெனில், முன்னாள் ஈபிடிபி கட்சி ஆயுட்கால உறுப்பினரும், பின்னாளில், ஈபிடிபி கட்சியில் இருந்து பிரிந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான இராமேஸ்வரன் சகோதரர்களின் அணியுடன் தன்னை செயலாளராக இணைத்து கொண்டும், யாழ் வேம்படி அலுவலகத்தில் இருந்து கொண்டு புலியெதிர்ப்பு, ஈபிடிபி எதிர்ப்பு நடவடிக்கைகளில் பூரணமாக இறங்கியவருமான குணசீலன் வன்னியசிங்கம் என்கின்ற சிவா நாடுகடந்த தமிழீழம், வெளிப்பிராந்தியம் ( லண்டன் – பேர்மிங்ஹாம் ) எம்பியாக, பிரதமர் உருத்திர குமாரனால் நேற்று பிற்பகல் நிகழ்ந்த சுப வேளையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை புலம்(ன்) பெயர் அதிமேதாவிகளுக்கு இத்தால் அறியத்தருகின்றோம்.

தமது ஆட்படை பற்றியும், தமது செல்வாக்கு பற்றியும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும், புலம் பெயர் பரப்பெங்கும் பொங்கு புகழ் பாடிவரும் இந்த கூட்டம், இன்று அட்லீஸ் ஒரு எம் பி பதவிக்கு ஆள் இல்லாமல், ஈபிடிபி உறுப்பினராகவும், பின்னர் ஈபிடிபி மாற்றுக் கட்சி உறுப்பினராகவும், முழு நேர புலி யெதிர்ப்பு உணர்வாளராகவும், செயற்பாட்டாளராகவுமிருந்த குணசீலன் வன்னியசிங்கம் என்கின்றவரை நாடுகடந்த தமிழீழ எம்பியாக தெரிவு செய்துள்ளனர். இவர் ஈபிடிபியில் இருக்கும் போது, ஈபிடிபியின் சகல வழங்களையும் பயன் படுத்தி, புலம் பெயர் தேசத்தில் தன்னையும், தனது குடும்பத்தையும் வளம் படுத்திக் கொண்டவர்.

1990 முதல் 1996 வரை தீவுப் பகுதியில் புலிகளுக்கெதிராக நடந்த அனைத்து ராணுவ அட்டூழியங்களுக்கும் பொறுப்பானவர் இவர் என்பதும், இவர் செய்த அனைத்து ராணுவ அட்டூழியங்களுக்கும் வக்காலத்து வாங்கப் போய்த்தான் இன்று, இராமேஸ்வரன். முகவரியற்றுப் போய் இருக்கின்றார். ஆனால் முரட்டுத்தனம் உள்ள இவருக்கு தமிழீழ அரசு முகவரி வழங்கி மீண்டும் ஒரு தரம் அந்த மாவீரர்களின் முகத்தில் கரியை பூசிக் கொள்கின்றது. இவ்வாறான செயற்பாட்டாளர்களை அருகில் இணைத்து வைத்துக்கொண்டவர்களை நம்பியா தாய்க்குலம் நாடுகடந்த தமிழீழத்துக்கு தாலிக்கொடிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது.

30/7/1996 இல் இவர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக நவமணி பத்திரிகையில் பேட்டி அளித்ததுடன், அதே டக்ளஸ் தேவானந்தா கடந்த வருடம் இங்கிலாந்து வந்த போது அவருடன் இணைந்து வேலை செய்வதாக வாக்குறுதியும் அளித்திருந்தார். அது மட்டுமல்லாமல் டக்ளஸ் தேவானந்தாவின் தற்போதைய இங்கிலாந்து பிரதிநிதிகளுடன் இன்றும் நேரடி தொடர்பில் இருப்பதை, இங்கிலாந்தில் தற்போது வசிக்கும் நெப்போலியனை கேட்டால் தெரியும்.

தமிழா உனக்கேன் இந்த சாபக்கேடு. இந்த உலகம் பல துன்பங்களை அனுபவிப்பது கெட்டவர்களால் அல்ல. அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நல்லவர்களால்தான். வாழ்க நாடுகடந்த தமிழீழத்தின் பொதுப்பணி.

படம்: நாடு கடந்த தமிழீழத்திற்காக தாலி வழங்கும் நிகழ்வொன்றில் வி.உருத்திரகுமாருடன் குணசீலன் வன்னியசிங்கம் (நடுவில் நிற்பவ

http://aaivuu.wordpress.com/

Link to comment
Share on other sites

நாப்பது லட்சம் சனத்துக்கு முப்பத்தஞ்சு இயக்கம் என்றளவில் பெரும்பாலான சனங்கள் ஏதொ ஒரு இயக்கம் சம்மந்தப்பட்டும் சம்மந்தப்பட்டவரின் உறவு வட்டத்தில் சம்மந்தப்பட்டும் இருப்பதற்கு நிறைய வாய்ப்பிருக்கின்றது. இது தவிர கருணாவின் பிரதேசவாதம் சார்ந்தவர்கள் மதம் சார்ந்தவர்கள் என்னும் நூறுவித கருத்துநிலை சார்ந்தவர்கள் ஊடுருவவும் நிறைய சந்தர்ப்பம் இருக்கின்றது. அது போக கேபி காஸ்ரோ நெடியவன் பிறகு இப்ப புதிதாக வினாயகம் மயூரன் என்று ஏகப்பட்ட பிரிவுகள் வருகின்றது.

ஆகவே இவற்றை எல்லாம் தவத்தி ஒரு அமைப்பை உருவாக்கினால் ஒரு நூறு நூற்றியம்பது பேர் தேறுவினம். அவர்களுக்கு எங்காவது ஒரு நிலப்பகுதியை வாங்கி புலிக்கொடியை குத்தி அரசை நிறுவ வேண்டியதுதான். நாடும் கிடைத்துவிடும் சிங்களவர்களுடனும் மல்லுக்கட்டத்தேவையில்லை.

Link to comment
Share on other sites

இந்த நிகழ்வு 1991ம் ஆண்டை கண் முன் நிறுத்தியது.புஸ்பவனம் குஸ்புசாமி பாட பெரிய சாக்குபைகளில் நகைகளை சேர்த்தார்கள்.அப்போதும் தாலிக்கொடி தெரியவில்லை தனி ஈழம் தான் தெரிந்தது.இப்போதும் அதுதான் தெரிகிறது.

அது 1991ஆம் ஆண்டல்ல. 1998ஆம் ஆண்டு. சீ.என்.இல் மாவீரர் நாள் நிழ்வின்போது, 'அள்ளிக் கொடுங்கையா அள்ளிக் கொடுங்கையா' என மக்களுக்குள் பாடிக் கொண்டு வந்து கொண்டிருந்தபோது ஒரு அம்மா தன் தாலிக் கொடியைக் கழட்டிக் கொடுத்தார்.

நாடுகடந்த தமிழீழம் பெருமையடைகிறது (முகமூடி கிழிபடுது)

நாடு கடந்த தமிழீழத்துக்கு ஆள்தேடும் அவலம்.

மா.ஜெயக்குமார்.

a_Kunaseelan.jpgஇத்தால் சகல புலம் பெயர் தமிழ் பேசும் மக்களுக்கும் நாம் தரும் செய்தி யாதெனில், முன்னாள் ஈபிடிபி கட்சி ஆயுட்கால உறுப்பினரும், பின்னாளில், ஈபிடிபி கட்சியில் இருந்து பிரிந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான இராமேஸ்வரன் சகோதரர்களின் அணியுடன் தன்னை செயலாளராக இணைத்து கொண்டும், யாழ் வேம்படி அலுவலகத்தில் இருந்து கொண்டு புலியெதிர்ப்பு, ஈபிடிபி எதிர்ப்பு நடவடிக்கைகளில் பூரணமாக இறங்கியவருமான குணசீலன் வன்னியசிங்கம் என்கின்ற சிவா நாடுகடந்த தமிழீழம், வெளிப்பிராந்தியம் ( லண்டன் – பேர்மிங்ஹாம் ) எம்பியாக, பிரதமர் உருத்திர குமாரனால் நேற்று பிற்பகல் நிகழ்ந்த சுப வேளையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை புலம்(ன்) பெயர் அதிமேதாவிகளுக்கு இத்தால் அறியத்தருகின்றோம்.

தமது ஆட்படை பற்றியும், தமது செல்வாக்கு பற்றியும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும், புலம் பெயர் பரப்பெங்கும் பொங்கு புகழ் பாடிவரும் இந்த கூட்டம், இன்று அட்லீஸ் ஒரு எம் பி பதவிக்கு ஆள் இல்லாமல், ஈபிடிபி உறுப்பினராகவும், பின்னர் ஈபிடிபி மாற்றுக் கட்சி உறுப்பினராகவும், முழு நேர புலி யெதிர்ப்பு உணர்வாளராகவும், செயற்பாட்டாளராகவுமிருந்த குணசீலன் வன்னியசிங்கம் என்கின்றவரை நாடுகடந்த தமிழீழ எம்பியாக தெரிவு செய்துள்ளனர். இவர் ஈபிடிபியில் இருக்கும் போது, ஈபிடிபியின் சகல வழங்களையும் பயன் படுத்தி, புலம் பெயர் தேசத்தில் தன்னையும், தனது குடும்பத்தையும் வளம் படுத்திக் கொண்டவர்.

1990 முதல் 1996 வரை தீவுப் பகுதியில் புலிகளுக்கெதிராக நடந்த அனைத்து ராணுவ அட்டூழியங்களுக்கும் பொறுப்பானவர் இவர் என்பதும், இவர் செய்த அனைத்து ராணுவ அட்டூழியங்களுக்கும் வக்காலத்து வாங்கப் போய்த்தான் இன்று, இராமேஸ்வரன். முகவரியற்றுப் போய் இருக்கின்றார். ஆனால் முரட்டுத்தனம் உள்ள இவருக்கு தமிழீழ அரசு முகவரி வழங்கி மீண்டும் ஒரு தரம் அந்த மாவீரர்களின் முகத்தில் கரியை பூசிக் கொள்கின்றது. இவ்வாறான செயற்பாட்டாளர்களை அருகில் இணைத்து வைத்துக்கொண்டவர்களை நம்பியா தாய்க்குலம் நாடுகடந்த தமிழீழத்துக்கு தாலிக்கொடிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது.

30/7/1996 இல் இவர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக நவமணி பத்திரிகையில் பேட்டி அளித்ததுடன், அதே டக்ளஸ் தேவானந்தா கடந்த வருடம் இங்கிலாந்து வந்த போது அவருடன் இணைந்து வேலை செய்வதாக வாக்குறுதியும் அளித்திருந்தார். அது மட்டுமல்லாமல் டக்ளஸ் தேவானந்தாவின் தற்போதைய இங்கிலாந்து பிரதிநிதிகளுடன் இன்றும் நேரடி தொடர்பில் இருப்பதை, இங்கிலாந்தில் தற்போது வசிக்கும் நெப்போலியனை கேட்டால் தெரியும்.

தமிழா உனக்கேன் இந்த சாபக்கேடு. இந்த உலகம் பல துன்பங்களை அனுபவிப்பது கெட்டவர்களால் அல்ல. அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நல்லவர்களால்தான். வாழ்க நாடுகடந்த தமிழீழத்தின் பொதுப்பணி.

படம்: நாடு கடந்த தமிழீழத்திற்காக தாலி வழங்கும் நிகழ்வொன்றில் வி.உருத்திரகுமாருடன் குணசீலன் வன்னியசிங்கம் (நடுவில் நிற்பவ

http://aaivuu.wordpress.com/

நீங்கள் இவருக்கு வாக்களித்துத் தெரிவு செய்ததனால்தான் நாடு கடந்த அரசாங்கமும் அவரைத் தெரிவு செய்யவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது. இவருக்கு வாக்களித்த மக்களை நீங்கள் முதலே தடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காதே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பங்களிப்பு என்று ஊரில் கேட்டு வரும் போது 30 வருடமாய் தமிழனை தலைநிமிர்த்தி வாழவைத்த தெய்வங்களின் மனைவிமார் கட்டியிருந்தது வெறும் மஞ்சள் கயிறு தாலி இங்கு பங்களிப்பு கேட்டு வருபவர்களின் மனைவிமார்களின் நகைகளை வித்தால் sri lankaவை வாங்கலாம்.படங்களை போட்டால் yarl server சூடு தாங்காது புகை விடும்.

Link to comment
Share on other sites

அப்படியே மருதங்கேணிக்கும் ஒரு பச்சை. இங்கு கருத்தெழுதியவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசிற்குத் தெரியப்படுத்தி, அவர்கள் உதாசீனப் படுத்திய பிறகு எழுதியிருந்தால் உங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், நீங்களும் செய்ய மாட்டீர்கள். செய்ய முனைபவர்களையும் ஆயிரம் குறை கூறுவீர்கள். உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் இதனை உரிய முறையில் உரிய வழியில் அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். யாழில்கூட அவ்வரசிலிருந்து ஒருவர் பதிந்திருக்கிறார். குறைந்த பட்சம், அவருக்குத் தனிமடலிலாவது தெரிவியுங்கள்.....

Link to comment
Share on other sites

பங்களிப்பு என்று ஊரில் கேட்டு வரும் போது 30 வருடமாய் தமிழனை தலைநிமிர்த்தி வாழவைத்த தெய்வங்களின் மனைவிமார் கட்டியிருந்தது வெறும் மஞ்சள் கயிறு தாலி இங்கு பங்களிப்பு கேட்டு வருபவர்களின் மனைவிமார்களின் நகைகளை வித்தால் sri lankaவை வாங்கலாம்.படங்களை போட்டால் yarl server சூடு தாங்காது புகை விடும்.

தனிப்பட்ட ரீதியில் ஒருசிலர் நீங்கள் கூறியது போல நடக்கலாம். ஆனால், எல்லோரையும் இவ்வாறு ஒரே போர்வையால் போர்த்துவது சரியல்ல.

இப்படியான கருத்துக்களால் பல நேர்மையானவர்கள் கூட பின்னடிப்பது கண்கூடு.

தமிழச்சி கூறுவது போல நாம், எமது அரசு, எமது ஜனநாயகம் - எனவே நாம் நேரடியாக தொடர்புகொண்டு பிழை விடுபவர்களை ஆதாரத்துடன் சர்ப்பிக்கவேண்டும். ஏனெனில் இது ' கத்தியோடு சேர்த்து புத்தியையும் பாவிக்கவேண்டிய காலம்', நீங்கள் கூறுவது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.