Jump to content

நான் அவனில்லை...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் அவனில்லை...

(நெடுகச் சீரியஸாய் வாசிச்சும் எழுதியும் அலுத்துப்போச்சு...அதுதான் சும்மா பம்பலுக்கு எழுதினது... :D)

இருட்டடி எண்டால் என்னெண்டு உங்கள் எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும்.இருட்டுக்க ஒளிச்சு நிண்டு ஆரிலை கோபமோ அவருக்கு,அடிக்கிறவன் ஆரெண்டு யோசிக்கிறதுக்கு ரைம் குடுக்காமல் அடிச்சிட்டு அடிக்கிறவன் எஸ்க்கேப் ஆகிறதுதான் இருட்டடி.இதில அடிக்கிறவன் யாரெண்டும் அடிவாங்குகிறவன் யாரெண்டும் பாத்துக்கொண்டு நிக்கிறவனுக்கு விளங்காது.ஒருதடைவை ஊரில நானும் உந்த இருட்டடியில இருந்து மயிரிழையில தப்பினனான்.அது சம்பவமல்ல...தரித்திரம்..சா இல்லை..சரித்திரம்... :D  அதைத்தான் நான் இப்ப உங்களுக்குச் சொல்லப்போகிறன்.

சம்பவம் நடந்த அண்டு நல்ல அமாவாசை இருட்டு...நானும் என்ர நண்பனும் இன்னும் கொஞ்சப் பொடியளோட கோயிலடியில இருந்து அரட்டை அடிச்சு முடிஞ்சு வெளிக்கிட நேரம் இரவு 11 ஆச்சு.இண்டைக்கு வீட்டை போனா திட்டு விழும் எங்கை இவ்வளவு நேரமும் போனனி எண்டு.இன்னும் கொஞ்ச நேரம் பிந்திப் போனா வீட்டில எல்லாரும் நித்திரை ஆகிவிடுவினம்...பூனை மாதிரி சத்தப்படாமல் உள்ளட வேண்டியதுதான்...விடிய எழும்பிப் பாக்கிறவைக்கு நான் எப்ப வந்தன் எப்பிடி வந்தன் எண்டு தெரியாது.வீட்டை போய்ச் சாப்பிட்டா சட்டிபானை தட்டுப்படுற சத்தத்தில எல்லாரும் நித்திரையாலை எழும்பிவிடுவார்கள்...பசிவேறு வயித்தைக் கிள்ளுது...ரவுனுக்க இருக்கிற கொத்துக்கடைக்குப் போவமெடா எண்டு நண்பணிடம் சொல்லிப்போட்டு நான் மோட்டார்பைக்கில ஏறி உட்க்காந்திட்டன்.நண்பண்தான் றைவிங்க்(என்ன காறா றைவிங்க் பண்ண எண்டு கேட்க்காதீர்கள்...எங்களுக்கு அந்த நேரம் கார்,பஸ்,ரெயின்,ஏறோப்பிளேன் எல்லாம் மோட்டார்பைக்தான்)ரவுன் கொத்துக்கடையில ஆளுக்கொரு கொத்துரொட்டியை முழுங்கிவிட்டு ஏப்பம் விட்டவாறு வந்துகொண்டிருக்கிறம்...நேரம் அரைச்சாமம் ஆகிவிட்டது.ஊருக்குள்ளை வந்ததும் மச்சான் கெட்லைட்டை நிப்பாட்டெடா ஆரும் பாத்திட்டு காலைமை அப்பரிட்டப் போட்டுக்குடுக்கப்போறாங்கள் எண்டு அவனை அலேட்டாக்கினதும் லைற்றை நிப்பாட்டிட்டு சிக்னல் லைற்றின்ர வெளிச்சத்தக் கொண்டு ஒரு குத்துமதிப்பில அவன் ஓடிக்கொண்டிருக்கிறான்...

முறிகண்டித்துரை வீட்டை நெருங்குகிறம்..."மவனே நீ இண்டைக்குச் செத்தாயடா...வே** மவனே என்ர மகள் கேக்குதாடா உனக்கு" முறிகண்டித்துரை வீட்டிலிருந்து ஒரு உருவம் கத்தியவறு எங்களை நோக்கி வாறது இருட்டுக்கை தெரியுது...கையில ஒரு கொட்டன் சிக்னல் லைற்றில மின்னிமின்னித் தெரியுது... அந்த உருவத்துக்குப் பின்னாலை ஒரு கூட்டமே வருகுது...எல்லாரும் தயாராய் நிண்டிருக்கிறாங்கள் போல...எனக்கு இப்ப என்னோட கூடவந்தவன்,மோட்டார்பைக்,காலில் போட்டிருந்த செருப்பு எதுவுமே ஞாபகமில்லை...எப்படி ஓடிக்கொண்டிருந்த மோட்டார்பைக்கை விட்டு இறங்கினன் எண்டு கூடத்தெரியவில்லை..."அண்ணை நானில்லை,அண்ணை நானில்லை" எண்டு கத்திக்கொண்டு இரவு ஆரோ கேற்றைக்கொழுவ மறந்துபோய் விட்டிருந்த வீடொன்றுக்கை உள்ளட்டு மண்கும்பி ஒண்டுக்குப்பின்னாலை விழுந்து படுத்திட்டன்..படுத்துக் கிடந்து வானத்தைப் பார்த்தபடி யோசிச்சுக்கொண்டு இருக்கிறன்...எதுக்குத் துரத்துறாங்கள் எண்டு எனக்குப் பிடிபடுகுதே இல்லை...எனக்குத் தெரிஞ்சு எந்த வம்பு தும்புக்கும் நானும் என்ர நண்பனும் கிட்டடியிலை போனதில்லை...(அப்பிடியெண்டால் முன்னம் போனனியளோ எண்டு கேக்காதேங்கோ..முன்னமும் போனதில்லை :D )

என்னைத் துரத்திவந்தவன் பெரிய சத்தமாய் தூசனங்களால் அர்ச்சனை செய்தபடி வேலிக்கரை எல்லாம் டோச் அடிச்சு என்னைத் தேடுறான்...ரோச் வெளிச்சம் எனக்கு மேலை விழாதபடி மண்கும்பியைச் சுத்திச்சுத்தி குரோலிலை மூவ் பண்ணிக் கவர் எடுத்துக்கொண்டிருக்கிறன்.இந்த அமளிதுமளியிலை நான் ஒளிச்சிருந்த மண்கும்பி வீட்டுக்காறங்களும் எழும்பி கேற்றடிக்கு வந்திட்டாங்கள்...மெதுவாகக் கறட்டி ஓணாண் மாதிரி தலையை நிமிர்த்திப் பாக்கிறன்...நான் ஒளிச்சிருக்கிறது சின்ராசண்ணை வீடு...சின்ராசண்ணைக்கு அஞ்சு பெட்டையள்...ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு மாதிரி வடிவு...எனக்கு அஞ்சிலையும் ஒரு கண் இருந்தது...அவளவையைப் பாத்தவுடன ஆரைச் செலக்ற்பண்ணி லவ் பண்ணுவம் எண்டு நான் குழம்புறதுண்டு.. :icon_mrgreen: (அவளவை உன்னை லவ்பண்ண ஓமெண்டவளவையோ எண்டு நீங்கள் கேக்குறது எனக்கு விளங்குது...ஒரு மாங்காய் எண்டாத்தான் எறிஞ்சு விழுத்துறது கஸ்ரம்...இங்க அஞ்சு மாங்காய் கொத்தாய் இருக்கு...ஒரு கல்லை எறிவம் ஏதாவது ஒண்டு விழும்தான எண்ட நப்பாசைதான் :D )பெரிய மன்மதக் குஞ்சுபோல அவளவையை லுக்கு விடுறனான்...இப்ப எலிக்குஞ்சு மாதிரி அவளவை வீட்டு மண்கும்பிக்குப் பின்னால ஒளிச்சிருக்கிறன்..எனக்கு அவமானமாக இருந்தது...என்னைத்துரத்தி வந்தவன்மேல் ஆத்திரமாகவும் இருந்தது...எப்படி அவளவையின்ர கண்ணில படாமல் போறது...?அதே நேரம் அங்கை ஒருத்தன் ஏன் எதுக்கெண்டு தெரியாமல் டோச் அடிச்சு என்னைத்தேடிக்கொண்டிருக்கிறான் படுபாவி...அவன் கண்ணிலும் படாமல் போகவேணும்...

யோசிச்சுக்கொண்டிருக்க காலடியில் ஏதோ வழுவழுப்பா உழக்குப்படுற மாதிரி இருந்திச்சு...தலையைத் திருப்பிப் பாத்தா ஒரு அஞ்சு இல்லா ஆறடியில் பெரிய பாம்பொண்டு..நான் எங்கை நிக்கிறன் எண்டதையும் மறந்துபோய் வழமையாய் வீட்டை கத்திற மாதிரி "அய்யோ பாம்புபாம்பு" எண்டு கத்திவிட்டன்..பிறகென்ன...அஞ்சு பெட்டையளும் தகப்பன்காறனோட சேர்ந்து என்னைச் சுத்தி வளைச்சிட்டாளவை...லைற்றடிச்சுப் பாத்தா அது சாரைப் பாம்பு...அமாவாசை இருட்டுக்கை தவளை தேடி வந்திருக்கு...அடச்சனியனே உன்னைப்பாத்தா நான் கத்தினனான்...அநியாயமாப் பிடிபட்டுட்டனே...எனக்கு அவமானமும் அதேநேரம் சின்ராசண்ணையைப் பாக்கப் பயமாயும் இருந்துது...அவமானத்தைப் பாக்காமல் நடந்ததைச் சொல்லி சின்ராசண்ணையிட்டைச் சரண்டராயிட்டன்...அவளவையும் பயப்படாதையுங்கோ நாங்கள் இருக்கிறம் எண்டு என்னைச் சுத்தி நிண்டுகொண்டாளவை...அந்தப் பிரச்சினையிலும் எனக்கு அப்ப அவளவையோட இருட்டுக்கை நிக்கிறது கிழுகிழுப்பா இருந்திச்சு... :icon_mrgreen: கெட்டதிலும் ஒரு நல்லது நடந்திருக்கெண்டு சந்தோசமாயிருந்திச்சு..

என்னைத் துரத்தி வந்தவன் தூசணத்திலயும் என்ர "நான் அவனில்லை" எண்ட ஒப்பாரியிலையும் குரைக்கத் தொடங்கியிருந்த ஊர் நாயின்ர சத்தமெல்லாம் இப்பத்தான் அடங்கிப்போயிருந்தது..எனக்கு அப்பதான் என்கூட வந்த என்ர நண்பனின்ரையும் மோட்டார்பைக்கின்ரையும் ஞாபகம் வந்திச்சு...முறிகண்டித்துரை வீட்டுப்பக்கம் காது குடுத்துக் கேக்கிறன்...சனங்கள் சுத்தி நிண்டு கதைக்கிறது கேக்குது...எனக்கு என்னநடந்ததெண்டு அறியவேணும் எண்டு ரென்சனாக்கிடக்கு..தெம்பாக் கதைச்சுப்போட்டுப் போன சின்ராசண்ணையோ றோட்டுக்கு இறங்கிறார் இல்லை...மனிசன் பயத்தில தன்ர வீட்டுக் கேற்றோட நிண்டு டோச்சை சுத்திச் சுத்தி அடிச்சுப்பாக்குது...கொஞ்ச நேரத்தில ஆரோ ஒருத்தன் என்ர பேரை ஈனஸ்வரத்தில முனகியபடி றோட்டால வாறான்..ஆரெண்டு பாப்பம் எண்டு கேற்றடிக்கு வந்து சின்ராசண்ணைக்குப் பின்னாலை ஒளிஞ்சு நிண்டு பாத்தா என்னோட வந்த என்ர நண்பண் ஒரு கையால மோட்டார்பைக்கை உருட்டியபடி மற்றக் கையில என்ர ஒரு சோடி செருப்பையும் தூக்கிக் கொண்டு என்னை வேலியளுக்க தேடினபடி வந்துகொண்டிருந்தான்...ஆள் ஒரு சேதாரமும் இல்லாமல் முழுசா வந்திருந்தான்.எனக்கு அவனைத் தனியா விட்டிட்டு ஓடிவந்திட்டனே எண்டு கவலையாய் இருந்தது..ஒருமாதிரி அவனைச் சமாளிச்சுப் போட்டு என்ன மச்சான் நடந்தது எண்டு கேக்கத்தான் விளங்கிச்சு..வில்லங்கமான நேரத்தில வில்லங்கமான இடத்துக்கு கெட்லைட்டும் போடாமல் வந்து நாங்கள் வில்லங்கமா அகப்பட்டிருந்திருக்கிறம் எண்டு..

நடந்தது இதுதான்...முறிகண்டித்துரைக்கு ஒருமகள் இருக்கிறாள்...ஒரே ஒருத்திதான்..வேறயாரும் இல்லை...பழைய படங்களில வாற நதியா(இப்ப புதுப்படங்களிலும் வாறா போல) மாதிரிக் களையாய் இருப்பாள்...அவளை ஆரோ ஒரு பெடியன் லவ்வி இருக்கிறான்...அது தெரிஞ்சு ரென்சனான முறிகண்டித்துரை மகளுக்கு அவசரம் அவசரமாக லண்டனில சொந்தக்காறப் பெடியனுக்குப் பேசி முற்றாக்கியிருக்கிறார்...அடுத்த நாள் கலியாணம்..இதை அறிஞ்ச அந்த லவ்வி சினிமாப் படங்களில வாற கீரோ மாதிரி ஆக்களைச் சேத்துக்கொண்டு பெட்டையைத்தூக்க அண்டைக்குப் பகல் வந்திருக்கிறான்...வந்தவங்கள் ஒரு காரிலை இல்லை ஆட்டோவிலை வந்திருக்கலாம்...அதை விட்டிட்டு எல்லாரும் மோட்டார்பைக்கில வந்து துலைச்சிருக்கிறாங்கள்..முறிகண்டித்துரை வீட்டு றோட்டாலை சுத்திச்சுத்தி வந்து நோட்டம் விட்டிருக்கிறாங்கள்...முறிகண்டித்துரை பெட்டையை வீட்டுக்கை வைச்சுப் பூட்டிப்போட்டு வெளியில ஒரு கோடாலியோட காவலிருந்திருக்கு...எவனாவது உள்ள வந்தா தறிக்கிறதெண்டு...பகல் பெட்டையைத் தூக்கேலாமல்ப் போக நாளைக்கு விடியிறதுக்குள்ளை பெட்டையைத் தூக்கிறதாச் சவால் விட்டிட்டுப்போயிருக்கிறாங்கள் வந்தவங்கள்...பயந்துபோன முறிகண்டித்துரை தன்ர இனசனங்கள் எல்லாத்தையும் கூப்பிட்டு தடிதண்டுகளோட காவலிருந்திருக்கு...அவங்கள் வாறதுக்கு முன்னம் கெட்லைட் இல்லாமல் நடுச்சாமத்திலைநாங்கள் வந்திருக்கிறம்...மிச்சக்கதை உங்களுக்குத் தெரியும்தான...

முறிகண்டித்துரை மாதிரி இல்லாமல் முறிகண்டித்துரையின்ர இனசனம் தெளிவா இருந்தபடியால்தான் என்ர நண்பண் தப்பியிருக்கிறான்...பின்னால இருந்து அவசரப்பட்டு நான் இறங்கி ஓட பெரும் ஆத்திரத்தில இருந்த முறிகண்டித்துரை நினைச்சிருக்கு நான் தான் லவ் பண்ணுற பெடியன் எண்டு..இருட்டு வேறு ஆளைஆள்த்தெரியா அமாவாசை இருட்டு.. அதுதான் அந்தாள் ஆள்த்தெரியாமல் என்னைத்துரத்தியிருக்கு...முறிகண்டித்துரை என்னைத்துரத்திக்கொண்டு ஓடிவர என்ர நண்பனை முறிகண்டித்துரையின்ர இனசனம் சுத்திவளைச்சிருக்கு..நல்லவேளை அவங்கள் இவன்ரை முகத்துக்கு டோச் அடிச்சுப் பாத்திருக்கிறாங்கள்...பாத்தா ஊர்ப்பொடியன்...அதுதான் அவன் தப்பின கதை..இல்லாவிட்டால் அடிக்கடி படங்களிலை துணியாலமூடி அடிவாங்குகிற வடிவேலு காமடிபோல ஆகியிருக்கும் என் நண்பன் நிலை.. :o

நண்பன் சொல்லி முடிக்கிறான்...எனக்கு என்னைச் சுத்தி நிக்கிற அஞ்சு பெட்டையள் மட்டும்தான் கண்ணுக்குத்தெரியுறாளவை..இப்ப எனக்கு ரோசம் பொத்துக்கிட்டு வருகிது...வேலியிலை தடி ஒண்டை முறிச்செடுத்துக்கொண்டு என்னை விடுங்கோ உவனை ஒரு கை பாக்கிறன் றோட்டாலை போறவாறவங்களோட உவனுக்கென்ன சொறிச்சேட்டை எண்டு அடம்பிடிக்கிறன்...ஆனால் மனதுக்குள்ள ஆரேனும் மறிக்கவேணும் எண்டு நேந்துகொண்டிருக்கிறன்....நினைச்ச மாதிரி சின்ராசண்ணையின்ர பெட்டையள் என்னை மறிச்சிட்டாளவை...அந்த சமபவத்திற்க்குப் பிறகு வெக்கத்திலை நான் சின்ராசண்ணை வீட்டு றோட்டுப்பக்கம் தலைகாட்டுறதில்லை...ஏலுமானவரை அவளவை அஞ்சுபேற்றை கண்ணிலும் படாமல் ஒளிச்சுத்திரிஞ்சன்..சபதம் விட்டிட்டுப் போனவங்கள் கடைசிவரை வரவும் இல்லை பெட்டையைத்தூக்கவும் இல்லை...அநியாயமாய் நாங்கள்தான் இடையிலை அகப்பட்டு அல்லோலகல்லோலப்பட்டது... :( முறிகண்டித்துரை அடுத்த நாள் சொன்னமாதிரி மகளுக்கு கலியாணவீடு நடத்திவைச்சு இப்ப நிம்மதியா இருக்கு..அதுக்குப் பிறகு முறிகண்டித்துரைமேல இருந்த கடுப்பில, அந்த வயதில் எங்களுக்கிருந்த இருந்த ரத்தச் சூட்டில நானும் நணபனும் முறிகண்டித்துரைக்கு இருட்டுக்கை மண்டையை உடைக்கிறதெண்டு கன நாள் தேடித் திரிஞ்சனாங்கள்...ஆனால் முறிகண்டித்துரைக்கு விசயம் தெரிஞ்சு ஆள் இரவில வெளியில வாறதில்லை...பிறகு காலப்போக்கில கோபம் எல்லாம் ஆறிப்போக அநதச் சம்பவத்தையும் மறந்து போனம்... :D(அதுசரி அந்த அஞ்சு பெட்டையள்ளை ஏதாவது பிறகு அகப்பட்டதா எண்டுதான கேக்குறியள்..?அதுதான் இல்லை..அவளவையள் லண்டன்,கனடா,அவுஸ்த்திறேலியா எண்டு ஆளுக்கொரு நாடாப்பாத்துக் கலியாணம் கட்டிச் செற்றிலாகிட்டாளவை...நானும் விக்கிரமாதித்தன் மாதிரிச் சளைக்காமல் வேற ஏதேனும் மாமரம் அகப்படுமோ எண்டு தேடித்திரியுறன் கல்லெறிய... :D )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ் நன்றாக இருக்கு, ரசிச்சு வாசிக்க கூடியதாக இருந்திச்சு, சம்பவத்தை கண் முன்னால் நடக்கிற மாதிரி எழுதியுள்ளீர்கள், பச்சை இல்லை நாளைதான் குத்தனும், வாழ்த்துகள்,

இதைவிட மோசமா நடத்திருக்கு எனக்கு :lol::D

Link to comment
Share on other sites

நான் அவனில்லை...

(நெடுகச் சீரியஸாய் வாசிச்சும் எழுதியும் அலுத்துப்போச்சு...அதுதான் சும்மா பம்பலுக்கு எழுதினது... :D)

...

என்னைத் துரத்திவந்தவன் பெரிய சத்தமாய் தூசனங்களால் அர்ச்சனை செய்தபடி வேலிக்கரை எல்லாம் டோச் அடிச்சு என்னைத் தேடுறான்...ரோச் வெளிச்சம் எனக்கு மேலை விழாதபடி மண்கும்பியைச் சுத்திச்சுத்தி குரோலிலை மூவ் பண்ணிக் கவர் எடுத்துக்கொண்டிருக்கிறன்.இந்த அமளிதுமளியிலை நான் ஒளிச்சிருந்த மண்கும்பி வீட்டுக்காறங்களும் எழும்பி கேற்றடிக்கு வந்திட்டாங்கள்...மெதுவாகக் கறட்டி ஓணாண் மாதிரி தலையை நிமிர்த்திப் பாக்கிறன்...நான் ஒளிச்சிருக்கிறது சின்ராசண்ணை வீடு...சின்ராசண்ணைக்கு அஞ்சு பெட்டையள்...ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு மாதிரி வடிவு...எனக்கு அஞ்சிலையும் ஒரு கண் இருந்தது...அவளவையைப் பாத்தவுடன ஆரைச் செலக்ற்பண்ணி லவ் பண்ணுவம் எண்டு நான் குழம்புறதுண்டு.. :icon_mrgreen: (அவளவை உன்னை லவ்பண்ண ஓமெண்டவளவையோ எண்டு நீங்கள் கேக்குறது எனக்கு விளங்குது...ஒரு மாங்காய் எண்டாத்தான் எறிஞ்சு விழுத்துறது கஸ்ரம்...இங்க அஞ்சு மாங்காய் கொத்தாய் இருக்கு...ஒரு கல்லை எறிவம் ஏதாவது ஒண்டு விழும்தான எண்ட நப்பாசைதான் :D )பெரிய மன்மதக் குஞ்சுபோல அவளவையை லுக்கு விடுறனான்...இப்ப எலிக்குஞ்சு மாதிரி அவளவை வீட்டு மண்கும்பிக்குப் பின்னால ஒளிச்சிருக்கிறன்..எனக்கு அவமானமாக இருந்தது...என்னைத்துரத்தி வந்தவன்மேல் ஆத்திரமாகவும் இருந்தது...எப்படி அவளவையின்ர கண்ணில படாமல் போறது...?அதே நேரம் அங்கை ஒருத்தன் ஏன் எதுக்கெண்டு தெரியாமல் டோச் அடிச்சு என்னைத்தேடிக்கொண்டிருக்கிறான் படுபாவி...அவன் கண்ணிலும் படாமல் போகவேணும்...

...

:lol: :lol: :lol::D மனம்விட்டுச் சிரித்தேன், பகிர்விற்கு நன்றி...

Link to comment
Share on other sites

:lol: :lol: :lol:

முதல் பச்சை என்னுடையது..! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி...நன்றி..உங்கள் பச்சைப் பொற்கிளிகளுக்கும் பாராட்டுக்களுக்கும் யாழ்கள மன்னர்களே... :):D

Link to comment
Share on other sites

நான் அவனில்லை...

(நெடுகச் சீரியஸாய் வாசிச்சும் எழுதியும் அலுத்துப்போச்சு...அதுதான் சும்மா பம்பலுக்கு எழுதினது... )

இருட்டடி எண்டால் என்னெண்டு உங்கள் எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும்.இருட்டுக்க ஒளிச்சு நிண்டு ஆரிலை கோபமோ அவருக்கு,அடிக்கிறவன் ஆரெண்டு யோசிக்கிறதுக்கு ரைம் குடுக்காமல் அடிச்சிட்டு அடிக்கிறவன் எஸ்க்கேப் ஆகிறதுதான் இருட்டடி.இதில அடிக்கிறவன் யாரெண்டும் அடிவாங்குகிறவன் யாரெண்டும் பாத்துக்கொண்டு நிக்கிறவனுக்கு விளங்காது.ஒருதடைவை ஊரில நானும் உந்த இருட்டடியில இருந்து மயிரிழையில தப்பினனான்.அது சம்பவமல்ல...தரித்திரம்..சா இல்லை..சரித்திரம்... அதைத்தான் நான் இப்ப உங்களுக்குச் சொல்லப்போகிறன்.

சம்பவம் நடந்த அண்டு நல்ல அமாவாசை இருட்டு...நானும் என்ர நண்பனும் இன்னும் கொஞ்சப் பொடியளோட கோயிலடியில இருந்து அரட்டை அடிச்சு முடிஞ்சு வெளிக்கிட நேரம் இரவு 11 ஆச்சு.இண்டைக்கு வீட்டை போனா திட்டு விழும் எங்கை இவ்வளவு நேரமும் போனனி எண்டு.இன்னும் கொஞ்ச நேரம் பிந்திப் போனா வீட்டில எல்லாரும் நித்திரை ஆகிவிடுவினம்...பூனை மாதிரி சத்தப்படாமல் உள்ளட வேண்டியதுதான்...விடிய எழும்பிப் பாக்கிறவைக்கு நான் எப்ப வந்தன் எப்பிடி வந்தன் எண்டு தெரியாது.வீட்டை போய்ச் சாப்பிட்டா சட்டிபானை தட்டுப்படுற சத்தத்தில எல்லாரும் நித்திரையாலை எழும்பிவிடுவார்கள்...பசிவேறு வயித்தைக் கிள்ளுது...ரவுனுக்க இருக்கிற கொத்துக்கடைக்குப் போவமெடா எண்டு நண்பணிடம் சொல்லிப்போட்டு நான் மோட்டார்பைக்கில ஏறி உட்க்காந்திட்டன்.நண்பண்தான் றைவிங்க்(என்ன காறா றைவிங்க் பண்ண எண்டு கேட்க்காதீர்கள்...எங்களுக்கு அந்த நேரம் கார்,பஸ்,ரெயின்,ஏறோப்பிளேன் எல்லாம் மோட்டார்பைக்தான்)ரவுன் கொத்துக்கடையில ஆளுக்கொரு கொத்துரொட்டியை முழுங்கிவிட்டு ஏப்பம் விட்டவாறு வந்துகொண்டிருக்கிறம்...நேரம் அரைச்சாமம் ஆகிவிட்டது.ஊருக்குள்ளை வந்ததும் மச்சான் கெட்லைட்டை நிப்பாட்டெடா ஆரும் பாத்திட்டு காலைமை அப்பரிட்டப் போட்டுக்குடுக்கப்போறாங்கள் எண்டு அவனை அலேட்டாக்கினதும் லைற்றை நிப்பாட்டிட்டு சிக்னல் லைற்றின்ர வெளிச்சத்தக் கொண்டு ஒரு குத்துமதிப்பில அவன் ஓடிக்கொண்டிருக்கிறான்...

முறிகண்டித்துரை வீட்டை நெருங்குகிறம்..."மவனே நீ இண்டைக்குச் செத்தாயடா...வே** மவனே என்ர மகள் கேக்குதாடா உனக்கு" முறிகண்டித்துரை வீட்டிலிருந்து ஒரு உருவம் கத்தியவறு எங்களை நோக்கி வாறது இருட்டுக்கை தெரியுது...கையில ஒரு கொட்டன் சிக்னல் லைற்றில மின்னிமின்னித் தெரியுது... அந்த உருவத்துக்குப் பின்னாலை ஒரு கூட்டமே வருகுது...எல்லாரும் தயாராய் நிண்டிருக்கிறாங்கள் போல...எனக்கு இப்ப என்னோட கூடவந்தவன்,மோட்டார்பைக்,காலில் போட்டிருந்த செருப்பு எதுவுமே ஞாபகமில்லை...எப்படி ஓடிக்கொண்டிருந்த மோட்டார்பைக்கை விட்டு இறங்கினன் எண்டு கூடத்தெரியவில்லை..."அண்ணை நானில்லை,அண்ணை நானில்லை" எண்டு கத்திக்கொண்டு இரவு ஆரோ கேற்றைக்கொழுவ மறந்துபோய் விட்டிருந்த வீடொன்றுக்கை உள்ளட்டு மண்கும்பி ஒண்டுக்குப்பின்னாலை விழுந்து படுத்திட்டன்..படுத்துக் கிடந்து வானத்தைப் பார்த்தபடி யோசிச்சுக்கொண்டு இருக்கிறன்...எதுக்குத் துரத்துறாங்கள் எண்டு எனக்குப் பிடிபடுகுதே இல்லை...எனக்குத் தெரிஞ்சு எந்த வம்பு தும்புக்கும் நானும் என்ர நண்பனும் கிட்டடியிலை போனதில்லை...(அப்பிடியெண்டால் முன்னம் போனனியளோ எண்டு கேக்காதேங்கோ..முன்னமும் போனதில்லை )

என்னைத் துரத்திவந்தவன் பெரிய சத்தமாய் தூசனங்களால் அர்ச்சனை செய்தபடி வேலிக்கரை எல்லாம் டோச் அடிச்சு என்னைத் தேடுறான்...ரோச் வெளிச்சம் எனக்கு மேலை விழாதபடி மண்கும்பியைச் சுத்திச்சுத்தி குரோலிலை மூவ் பண்ணிக் கவர் எடுத்துக்கொண்டிருக்கிறன்.இந்த அமளிதுமளியிலை நான் ஒளிச்சிருந்த மண்கும்பி வீட்டுக்காறங்களும் எழும்பி கேற்றடிக்கு வந்திட்டாங்கள்...மெதுவாகக் கறட்டி ஓணாண் மாதிரி தலையை நிமிர்த்திப் பாக்கிறன்...நான் ஒளிச்சிருக்கிறது சின்ராசண்ணை வீடு...சின்ராசண்ணைக்கு அஞ்சு பெட்டையள்...ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு மாதிரி வடிவு...எனக்கு அஞ்சிலையும் ஒரு கண் இருந்தது...அவளவையைப் பாத்தவுடன ஆரைச் செலக்ற்பண்ணி லவ் பண்ணுவம் எண்டு நான் குழம்புறதுண்டு.. (அவளவை உன்னை லவ்பண்ண ஓமெண்டவளவையோ எண்டு நீங்கள் கேக்குறது எனக்கு விளங்குது...ஒரு மாங்காய் எண்டாத்தான் எறிஞ்சு விழுத்துறது கஸ்ரம்...இங்க அஞ்சு மாங்காய் கொத்தாய் இருக்கு...ஒரு கல்லை எறிவம் ஏதாவது ஒண்டு விழும்தான எண்ட நப்பாசைதான் )பெரிய மன்மதக் குஞ்சுபோல அவளவையை லுக்கு விடுறனான்...இப்ப எலிக்குஞ்சு மாதிரி அவளவை வீட்டு மண்கும்பிக்குப் பின்னால ஒளிச்சிருக்கிறன்..எனக்கு அவமானமாக இருந்தது...என்னைத்துரத்தி வந்தவன்மேல் ஆத்திரமாகவும் இருந்தது...எப்படி அவளவையின்ர கண்ணில படாமல் போறது...?அதே நேரம் அங்கை ஒருத்தன் ஏன் எதுக்கெண்டு தெரியாமல் டோச் அடிச்சு என்னைத்தேடிக்கொண்டிருக்கிறான் படுபாவி...அவன் கண்ணிலும் படாமல் போகவேணும்...

யோசிச்சுக்கொண்டிருக்க காலடியில் ஏதோ வழுவழுப்பா உழக்குப்படுற மாதிரி இருந்திச்சு...தலையைத் திருப்பிப் பாத்தா ஒரு அஞ்சு இல்லா ஆறடியில் பெரிய பாம்பொண்டு..நான் எங்கை நிக்கிறன் எண்டதையும் மறந்துபோய் வழமையாய் வீட்டை கத்திற மாதிரி "அய்யோ பாம்புபாம்பு" எண்டு கத்திவிட்டன்..பிறகென்ன...அஞ்சு பெட்டையளும் தகப்பன்காறனோட சேர்ந்து என்னைச் சுத்தி வளைச்சிட்டாளவை...லைற்றடிச்சுப் பாத்தா அது சாரைப் பாம்பு...அமாவாசை இருட்டுக்கை தவளை தேடி வந்திருக்கு...அடச்சனியனே உன்னைப்பாத்தா நான் கத்தினனான்...அநியாயமாப் பிடிபட்டுட்டனே...எனக்கு அவமானமும் அதேநேரம் சின்ராசண்ணையைப் பாக்கப் பயமாயும் இருந்துது...அவமானத்தைப் பாக்காமல் நடந்ததைச் சொல்லி சின்ராசண்ணையிட்டைச் சரண்டராயிட்டன்...அவளவையும் பயப்படாதையுங்கோ நாங்கள் இருக்கிறம் எண்டு என்னைச் சுத்தி நிண்டுகொண்டாளவை...அந்தப் பிரச்சினையிலும் எனக்கு அப்ப அவளவையோட இருட்டுக்கை நிக்கிறது கிழுகிழுப்பா இருந்திச்சு... கெட்டதிலும் ஒரு நல்லது நடந்திருக்கெண்டு சந்தோசமாயிருந்திச்சு..

என்னைத் துரத்தி வந்தவன் தூசணத்திலயும் என்ர "நான் அவனில்லை" எண்ட ஒப்பாரியிலையும் குரைக்கத் தொடங்கியிருந்த ஊர் நாயின்ர சத்தமெல்லாம் இப்பத்தான் அடங்கிப்போயிருந்தது..எனக்கு அப்பதான் என்கூட வந்த என்ர நண்பனின்ரையும் மோட்டார்பைக்கின்ரையும் ஞாபகம் வந்திச்சு...முறிகண்டித்துரை வீட்டுப்பக்கம் காது குடுத்துக் கேக்கிறன்...சனங்கள் சுத்தி நிண்டு கதைக்கிறது கேக்குது...எனக்கு என்னநடந்ததெண்டு அறியவேணும் எண்டு ரென்சனாக்கிடக்கு..தெம்பாக் கதைச்சுப்போட்டுப் போன சின்ராசண்ணையோ றோட்டுக்கு இறங்கிறார் இல்லை...மனிசன் பயத்தில தன்ர வீட்டுக் கேற்றோட நிண்டு டோச்சை சுத்திச் சுத்தி அடிச்சுப்பாக்குது...கொஞ்ச நேரத்தில ஆரோ ஒருத்தன் என்ர பேரை ஈனஸ்வரத்தில முனகியபடி றோட்டால வாறான்..ஆரெண்டு பாப்பம் எண்டு கேற்றடிக்கு வந்து சின்ராசண்ணைக்குப் பின்னாலை ஒளிஞ்சு நிண்டு பாத்தா என்னோட வந்த என்ர நண்பண் ஒரு கையால மோட்டார்பைக்கை உருட்டியபடி மற்றக் கையில என்ர ஒரு சோடி செருப்பையும் தூக்கிக் கொண்டு என்னை வேலியளுக்க தேடினபடி வந்துகொண்டிருந்தான்...ஆள் ஒரு சேதாரமும் இல்லாமல் முழுசா வந்திருந்தான்.எனக்கு அவனைத் தனியா விட்டிட்டு ஓடிவந்திட்டனே எண்டு கவலையாய் இருந்தது..ஒருமாதிரி அவனைச் சமாளிச்சுப் போட்டு என்ன மச்சான் நடந்தது எண்டு கேக்கத்தான் விளங்கிச்சு..வில்லங்கமான நேரத்தில வில்லங்கமான இடத்துக்கு கெட்லைட்டும் போடாமல் வந்து நாங்கள் வில்லங்கமா அகப்பட்டிருந்திருக்கிறம் எண்டு..

நடந்தது இதுதான்...முறிகண்டித்துரைக்கு ஒருமகள் இருக்கிறாள்...ஒரே ஒருத்திதான்..வேறயாரும் இல்லை...பழைய படங்களில வாற நதியா(இப்ப புதுப்படங்களிலும் வாறா போல) மாதிரிக் களையாய் இருப்பாள்...அவளை ஆரோ ஒரு பெடியன் லவ்வி இருக்கிறான்...அது தெரிஞ்சு ரென்சனான முறிகண்டித்துரை மகளுக்கு அவசரம் அவசரமாக லண்டனில சொந்தக்காறப் பெடியனுக்குப் பேசி முற்றாக்கியிருக்கிறார்...அடுத்த நாள் கலியாணம்..இதை அறிஞ்ச அந்த லவ்வி சினிமாப் படங்களில வாற கீரோ மாதிரி ஆக்களைச் சேத்துக்கொண்டு பெட்டையைத்தூக்க அண்டைக்குப் பகல் வந்திருக்கிறான்...வந்தவங்கள் ஒரு காரிலை இல்லை ஆட்டோவிலை வந்திருக்கலாம்...அதை விட்டிட்டு எல்லாரும் மோட்டார்பைக்கில வந்து துலைச்சிருக்கிறாங்கள்..முறிகண்டித்துரை வீட்டு றோட்டாலை சுத்திச்சுத்தி வந்து நோட்டம் விட்டிருக்கிறாங்கள்...முறிகண்டித்துரை பெட்டையை வீட்டுக்கை வைச்சுப் பூட்டிப்போட்டு வெளியில ஒரு கோடாலியோட காவலிருந்திருக்கு...எவனாவது உள்ள வந்தா தறிக்கிறதெண்டு...பகல் பெட்டையைத் தூக்கேலாமல்ப் போக நாளைக்கு விடியிறதுக்குள்ளை பெட்டையைத் தூக்கிறதாச் சவால் விட்டிட்டுப்போயிருக்கிறாங்கள் வந்தவங்கள்...பயந்துபோன முறிகண்டித்துரை தன்ர இனசனங்கள் எல்லாத்தையும் கூப்பிட்டு தடிதண்டுகளோட காவலிருந்திருக்கு...அவங்கள் வாறதுக்கு முன்னம் கெட்லைட் இல்லாமல் நடுச்சாமத்திலைநாங்கள் வந்திருக்கிறம்...மிச்சக்கதை உங்களுக்குத் தெரியும்தான...

முறிகண்டித்துரை மாதிரி இல்லாமல் முறிகண்டித்துரையின்ர இனசனம் தெளிவா இருந்தபடியால்தான் என்ர நண்பண் தப்பியிருக்கிறான்...பின்னால இருந்து அவசரப்பட்டு நான் இறங்கி ஓட பெரும் ஆத்திரத்தில இருந்த முறிகண்டித்துரை நினைச்சிருக்கு நான் தான் லவ் பண்ணுற பெடியன் எண்டு..இருட்டு வேறு ஆளைஆள்த்தெரியா அமாவாசை இருட்டு.. அதுதான் அந்தாள் ஆள்த்தெரியாமல் என்னைத்துரத்தியிருக்கு...முறிகண்டித்துரை என்னைத்துரத்திக்கொண்டு ஓடிவர என்ர நண்பனை முறிகண்டித்துரையின்ர இனசனம் சுத்திவளைச்சிருக்கு..நல்லவேளை அவங்கள் இவன்ரை முகத்துக்கு டோச் அடிச்சுப் பாத்திருக்கிறாங்கள்...பாத்தா ஊர்ப்பொடியன்...அதுதான் அவன் தப்பின கதை..இல்லாவிட்டால் அடிக்கடி படங்களிலை துணியாலமூடி அடிவாங்குகிற வடிவேலு காமடிபோல ஆகியிருக்கும் என் நண்பன் நிலை..

நண்பன் சொல்லி முடிக்கிறான்...எனக்கு என்னைச் சுத்தி நிக்கிற அஞ்சு பெட்டையள் மட்டும்தான் கண்ணுக்குத்தெரியுறாளவை..இப்ப எனக்கு ரோசம் பொத்துக்கிட்டு வருகிது...வேலியிலை தடி ஒண்டை முறிச்செடுத்துக்கொண்டு என்னை விடுங்கோ உவனை ஒரு கை பாக்கிறன் றோட்டாலை போறவாறவங்களோட உவனுக்கென்ன சொறிச்சேட்டை எண்டு அடம்பிடிக்கிறன்...ஆனால் மனதுக்குள்ள ஆரேனும் மறிக்கவேணும் எண்டு நேந்துகொண்டிருக்கிறன்....நினைச்ச மாதிரி சின்ராசண்ணையின்ர பெட்டையள் என்னை மறிச்சிட்டாளவை...அந்த சமபவத்திற்க்குப் பிறகு வெக்கத்திலை நான் சின்ராசண்ணை வீட்டு றோட்டுப்பக்கம் தலைகாட்டுறதில்லை...ஏலுமானவரை அவளவை அஞ்சுபேற்றை கண்ணிலும் படாமல் ஒளிச்சுத்திரிஞ்சன்..சபதம் விட்டிட்டுப் போனவங்கள் கடைசிவரை வரவும் இல்லை பெட்டையைத்தூக்கவும் இல்லை...அநியாயமாய் நாங்கள்தான் இடையிலை அகப்பட்டு அல்லோலகல்லோலப்பட்டது... முறிகண்டித்துரை அடுத்த நாள் சொன்னமாதிரி மகளுக்கு கலியாணவீடு நடத்திவைச்சு இப்ப நிம்மதியா இருக்கு..அதுக்குப் பிறகு முறிகண்டித்துரைமேல இருந்த கடுப்பில, அந்த வயதில் எங்களுக்கிருந்த இருந்த ரத்தச் சூட்டில நானும் நணபனும் முறிகண்டித்துரைக்கு இருட்டுக்கை மண்டையை உடைக்கிறதெண்டு கன நாள் தேடித் திரிஞ்சனாங்கள்...ஆனால் முறிகண்டித்துரைக்கு விசயம் தெரிஞ்சு ஆள் இரவில வெளியில வாறதில்லை...பிறகு காலப்போக்கில கோபம் எல்லாம் ஆறிப்போக அநதச் சம்பவத்தையும் மறந்து போனம்... (அதுசரி அந்த அஞ்சு பெட்டையள்ளை ஏதாவது பிறகு அகப்பட்டதா எண்டுதான கேக்குறியள்..?அதுதான் இல்லை..அவளவையள் லண்டன்,கனடா,அவுஸ்த்திறேலியா எண்டு ஆளுக்கொரு நாடாப்பாத்துக் கலியாணம் கட்டிச் செற்றிலாகிட்டாளவை...நானும் விக்கிரமாதித்தன் மாதிரிச் சளைக்காமல் வேற ஏதேனும் மாமரம் அகப்படுமோ எண்டு தேடித்திரியுறன் கல்லெறிய... )

உங்கள் பன்முகப்பட்ட எழுத்து ஆழுமைக்கு இது ஒரு உரைகல் . அதாவது , உங்களால் நகைச் (சு) சுவைக்கும் படியும் எழுதமுடியும் என்பதை எங்களுக்குக் காட்டியுள்ளீர்கள் . உங்கள் எழுத்துக்கள் மேலும் வீரியம் பெற மனமார்ந்த வாழ்துக்கள் சுபேஸ் :) :) :) :) 3.

Link to comment
Share on other sites

ஐந்துக்கும் கண்ணை விட்டதால் தான் ஒண்டும் கிடைக்கவில்லை.துரோணரிடம் வில் வித்தை கற்கவில்லை போலிருக்கு .

நல்ல கதை .தொடருங்கள்.

நண்பரொருவர் பெண்பார்க்கும் புரோக்கரிடம் சீதனம் ,படிப்பு பற்றி அக்கறையில்ல பிள்ளை வடிவாக இருந்த காணும் என்று பெண் பார்க்க சொன்னவர் .

புறோக்கர் சொன்னார் "உங்களை மாதிரி பிள்ளையும் கொஞ்சம் அப்படி இப்படி பார்க்கும் தானே என்று "

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுபாஸ் நல்ல கலகலப்பான எழுத்து பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

நல்லாருக்கு.

ஒன்று பிழைத்தாலும் மற்றதாவது அம்பிடும் என்று பிளான் போட்டு, கடைசியில் ஒன்றுமே கிடைக்காதவர்கள் பலர்.

இதெல்லாம் வாழ்க்கையில் ஜகஜம்தானே. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்பவும் மனதை நெகிழப்பண்ணும் விதத்தில் எழுதிக்கொண்டிருந்த சுபேஸ் கலகலப்பாக எழுதி கலாய்த்துள்ளதால், சாத்திரிக்குக் கலக்கம் பிடித்தாலும் பிடிக்கும்!

நானும் ஒரு இருட்டடி பற்றிய கதை ஒன்றைக் எழுதிக் குறையில் வைத்திருக்கின்றேன்.. ஆனால் அது அடிவாங்கியதைப் பற்றியதல்ல!

Link to comment
Share on other sites

சுபேஸ்............ சபாஷ்! இதுவெல்லோ...... கலகலப்பு! அருமையான கதை ...! ரசித்தேன்... சிரித்தேன்! இதைமாதிரி ஒரு சம்பவம் .. என் வாழ்விலும் நடந்தது. ஆனால்... ஒரு காதல் கடிதம் வாங்கிறதுக்கு எடுத்த றிஸ்க் அது. இப்ப நினைச்சாலும் சிரிப்பு வரும்.அதை ஞாபகப் படுத்தியது தங்கள் கதை. :)

அது சரி..... கொஞ்சம் முன்னமே பிரான்ஸ் வந்திருந்தால், அஞ்சில ஒண்டாவது பிரான்ஸ்சில இருந்திருக்கும்! :lol: :wub:

பாராட்டுக்கள் சுபேஸ்! 4

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான நகைச்சுவை பதிவாக எழுதியுள்ளீர்கள் பாராட்டுகள் அத்தோடு யாழ் களத்தில் உள்ள சில பேருக்கு இருட்டடி கொடுக்க எனக்கு விருப்பம் அதை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி

Link to comment
Share on other sites

பாராட்டுக்கள் சுபேஸ் . ^_^ .கிருபன் சொன்னது போலை எனக்கு கொஞ்சம் கலக்கமாத்தான் இருக்கு :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் உடையார்,குட்டி,இசைக்கலைஞன்,சுவி,கோமகன்,அர்ஜுன்,சகாறா அக்கா,தப்பிலி,கிருபன்,கவிதை,ரதி,சாத்த்ரி அண்ணை வாசிச்சு சிரிச்சதிற்க்கு... :D

,

இதைவிட மோசமா நடத்திருக்கு எனக்கு :lol::D

ஓ... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol: :lol: :lol::D மனம்விட்டுச் சிரித்தேன், பகிர்விற்கு நன்றி...

மனம் விட்டுச் சிரித்தால் நோய்நொடியின்றி நீண்டகாலம் வாழலாம்...சிரிப்பு மனிதர்களின் மனங்களில் படிந்திருக்கும் சோகம்களை துடைத்துவிட்டு பளபளக்கும் வெள்ளிப்பாத்திரம் போல் மனதை தூய்மையாக வைத்திருக்க உதவுகிறது...

:lol: :lol: :lol:

முதல் பச்சை என்னுடையது..! :wub:

நன்றி சிரிப்பு மன்னா.. :D

இரண்டாவது ஹி ... ஹி !

உப்பிடி மொட்டையாய்ச் சொன்னா என்னமாதிரி..? நான் சாக் ஆயிட்டன்...சின்ராசண்ணையின்ர அஞ்சில ரண்டாவதாக்கும் எண்டு... :lol:

உங்கள் பன்முகப்பட்ட எழுத்து ஆழுமைக்கு இது ஒரு உரைகல் . அதாவது , உங்களால் நகைச் (சு) சுவைக்கும் படியும் எழுதமுடியும் என்பதை எங்களுக்குக் காட்டியுள்ளீர்கள் . உங்கள் எழுத்துக்கள் மேலும் வீரியம் பெற மனமார்ந்த வாழ்துக்கள் சுபேஸ் 3.

நன்றி கோமகன் அண்ணா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பரொருவர் பெண்பார்க்கும் புரோக்கரிடம் சீதனம் ,படிப்பு பற்றி அக்கறையில்ல பிள்ளை வடிவாக இருந்த காணும் என்று பெண் பார்க்க சொன்னவர் .

புறோக்கர் சொன்னார் "உங்களை மாதிரி பிள்ளையும் கொஞ்சம் அப்படி இப்படி பார்க்கும் தானே என்று "

அண்ணை என்னைய வைச்சுக் காமடி கீமடி ஏதும் பண்ணலைத்தான...?... :lol:

சுபாஸ் நல்ல கலகலப்பான எழுத்து பாராட்டுக்கள்

நன்றி அக்கா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் ஊர் கோவில் திருவிழாக்களில் இப்படி

அடிக்கடி இருட்டடி நடக்கும். :lol: :lol:

வாழ்த்துகள் சுபேஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று பிழைத்தாலும் மற்றதாவது அம்பிடும் என்று பிளான் போட்டு, கடைசியில் ஒன்றுமே கிடைக்காதவர்கள் பலர்.

இதெல்லாம் வாழ்க்கையில் ஜகஜம்தானே. :D

அண்ணா! இந்தக் கடைசி வரி உங்கட நெஞ்சுக்குள்ள இருந்து வருகுது போலக்கிடக்கு...... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்பவும் மனதை நெகிழப்பண்ணும் விதத்தில் எழுதிக்கொண்டிருந்த சுபேஸ் கலகலப்பாக எழுதி கலாய்த்துள்ளதால், சாத்திரிக்குக் கலக்கம் பிடித்தாலும் பிடிக்கும்!

நானும் ஒரு இருட்டடி பற்றிய கதை ஒன்றைக் எழுதிக் குறையில் வைத்திருக்கின்றேன்.. ஆனால் அது அடிவாங்கியதைப் பற்றியதல்ல!

நன்றி கிருபன் அண்ணா! சாத்திரியார் உதுக்கெல்லாம் பயப்பிடுற ஆள்க் கிடையாது எண்டு நினைக்கிறன்...சாத்திரியார் எழுதுற மாதிரி எழுதுறதெண்டால் இஞ்ச பரிஸில நான் கவச வாகனத்திலதான் திரிய வேணும்... :o:lol:

சுபேஸ்............ சபாஷ்! இதுவெல்லோ...... கலகலப்பு! அருமையான கதை ...! ரசித்தேன்... சிரித்தேன்! இதைமாதிரி ஒரு சம்பவம் .. என் வாழ்விலும் நடந்தது. ஆனால்... ஒரு காதல் கடிதம் வாங்கிறதுக்கு எடுத்த றிஸ்க் அது. இப்ப நினைச்சாலும் சிரிப்பு வரும்.அதை ஞாபகப் படுத்தியது தங்கள் கதை. :)

அது சரி..... கொஞ்சம் முன்னமே பிரான்ஸ் வந்திருந்தால், அஞ்சில ஒண்டாவது பிரான்ஸ்சில இருந்திருக்கும்! :lol: :wub:

பாராட்டுக்கள் சுபேஸ்! 4

நன்றி நண்பா...

அட விடுங்க கவிதை...நான் இப்ப ஊரைச்சுத்தும் காத்து... :icon_idea:

யாழ் களத்தில் உள்ள சில பேருக்கு இருட்டடி கொடுக்க எனக்கு விருப்பம் அதை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி

உங்கட லிஸ்ற்றுக்க நான் இல்லைத்தான...? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் சுபேஸ் . ^_^ .கிருபன் சொன்னது போலை எனக்கு கொஞ்சம் கலக்கமாத்தான் இருக்கு :lol: :lol:

நன்றி சிறி அண்ணை...

பொய் சொன்னா நாளைக்கு பீஸா போடுறவன் வரமாட்டான் கடைக்கு...பிறகு நீங்கள்தான் தடியைப் பிடிச்சுக்கொண்டு ஒவனுக்க வேகவேணும்... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் சுபேஸ் . ^_^ .கிருபன் சொன்னது போலை எனக்கு கொஞ்சம் கலக்கமாத்தான் இருக்கு :lol: :lol:

சாத்ஸ் நான் வாசித்த உடனேயே நினைத்தேன் சாத்திரியின் தலையில் இடி விழுந்து விட்டது என்று அதை வெளிக்காட்டி ஏன் சாத்திரியின் நிம்மதியைக் கெடுப்பான் என்று இருந்து விட்டேன்.. இந்த கிருமி உண்மையிலேயே உங்களைக் கலவரப்படுத்திவிட்டார்தான் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் ஊர் கோவில் திருவிழாக்களில் இப்படி

அடிக்கடி இருட்டடி நடக்கும். :lol: :lol:

வாழ்த்துகள் சுபேஸ்

நன்றி வாத்தியார்...

அப்ப உங்கட ஊரிலையும் நிறைய முறிகண்டித்துரையள் இருக்கினம்போல... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு கதையோட்டம், சுபேஸ்! நன்றாக இருக்கின்றது!

அதென்ன அந்த வயதுக்குரிய இரத்தச் சூடு?

இரத்தம் எப்பவுமே ஒரு சூடு தான், என்று விஞ்ஞானம் சொல்லுது!!! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை சும்மா அந்த மாதிரி கலக்குது ...வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.